Friday, February 11, 2022
நரலீலைகள் - சொம்புத்தண்ணீர் தொடர்ச்சி (12)
மறைக்கப்படும் இந்தியாவின் வீழ்ச்சி பட்ஜெட் 2022 சொல்லும் சாட்சி
தொண்ணூற்று நான்கு சதவீத இந்தியர்களின் வாழ்க்கையை மீள முடியா சிக்கலுக்குள் தள்ளி விட்டு ஆளும் மோடி அரசு வாய் ஜாலங்களில் அரசை நடத்தி வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
கத்தரி முற்றினால் கடைத்தெருவுக்கு வந்தே தீரும் என்பதைப் போல இப்போதெல்லாம் பிரதமர் மோடி பேசி வரும் பேச்சுக்கள் அவரின் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டி வருகின்றன.
உதாரணத்துக்கு ஒன்று:
உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பிஜேபி ஆட்சியில் இல்லை என்றால் கோவிட் ஊசியை மறைத்து, மக்களிடம் கொள்ளை அடித்திருப்பார்கள் காங்கிரஸ்ஸார் என்கிறார். ஊசிக்கு காசு கொடுங்கன்னு ஆர்டர் போட்டதும், உச்சகாவிமன்றம் மன்னிக்கவும் உச்சநீதிமன்றம் இலவசமாய் ஊசி கொடுக்கணும் என்ற உத்தரவு போட்டதும், மெய் வாய் பொத்தி இலவசமாய் ஊசி வழங்கியதை வசதியாக மறந்து போனார். என்ன பேசுவது என்று தெரியாமல் பிரச்சாரத்தில் எதையாவது பேசிக் கொண்டிருக்கிறார்.
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு மக்களிடம் வெறும் வாயால் வடை சுட்டுக் கொண்டிருக்க முடியும்? இனி இயலாது என்று எல்லோருக்கும் தெரிந்து போனது கண்டு உச்சிக்குடுமி வகையறாக்கள் பல வித கலவர வேலைகளைச் செய்ய மக்களைத் தூண்டி விடுகின்றன.
படத்தில் உள்ள கேள்வியை நிர்மலா சீத்தாராமனிடம் கேளுங்கள். கேட்ட உடனே பதில் வருமா? அதெப்படி வரும். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். பலவித ஜால்சாப்புகளை அவிழ்த்து விடுவார்.
சம்பளம் வாங்குபவர்கள் வரி மட்டுமே கட்ட வேண்டும். வரி வாங்கும் மோடி அரசு ஒன்றையும் செய்யாது. செய்யவும் மாட்டார்கள். ஏழைகளை உருவாக்குவதை விட மோடி அரசுக்கு வேறு என்ன கொள்கை இருக்க முடியும்?
2022 பட்ஜெட் பற்றிப் பார்க்கலாம்.
2022ன் மொத்த பட்ஜெட் 39.44 லட்சம் கோடி
இதில் 135 லட்சம் கோடி கடன் - 31.03.2022 வரை
அடுத்த ஆண்டில் 152 லட்சம் கோடி கடன் உயர்ந்திருக்குமாம்.
பற்றாக்குறை எவ்வளவு தெரியுமா? 16.61 லட்சம் கோடி.
பற்றாக்குறை பட்ஜெட்டில் இராணுவத்துக்கு பட்ஜெட் தொகையில் 5.21 லட்சம் கோடி ஒதுக்கி இருக்கிறார்கள் மோடி அரசு.
பட்ஜெட்டில் சுமார் 35 சதவீதம் கடன் வாங்கி சமாளிக்கிறார் நிர்மலா சீத்தாராமன். அதுமட்டுமல்ல வாங்கும் கடனுக்கு பட்ஜெட்டில் சுமார் 20 சதவீதம் வட்டி கட்ட செலவழிக்கின்றார்கள்.
ஆனால் பாருங்கள் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஆகிய போன் நிறுவனங்கள் அரசுக்கு கட்ட வேண்டிய சுமார் 3 லட்சம் கோடி வரியை 15 வருடங்களுக்குள் கட்டலாம் என்று அரசு அனுமதி அளிக்கிறது. கார்பொரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்திருக்கிறது.
மாதச் சம்பளம் வாங்கி ஒழுங்காக வரி கட்டுபவர்களுக்கு தண்டனை தருகிறார்கள். ஆனால் வரி பாக்கி வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு காலத்தில் சலுகை கொடுக்கிறார்கள். அந்த வரிப்பாக்கிக்கு வரி போடவும் இல்லை.
மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 40 ஆயிரம் கோடி குறைத்திருக்கின்றார்கள்.
ஆனால் பாருங்கள் நாடு வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது என்கிறார் பிரதமர் மோடி. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்று வாய்சவாடல் விட்ட பிரதமர் மோடி உரத்துறைக்கு 40 கோடி குறைத்து விட்டார்.
வ.நாகப்பன் என்ற பொருளாதார நிபுணர் விகடனில் சம்பளதாரர்களுக்கு வரிச்சலுகை கொடுக்க முடியாது என்கிறார். இவரையெல்லாம் பொருளாதார நிபுணர் என்கிறார்கள். 2014ம் 2022ம் ஒன்றா என்ற கேள்விக்கு என்ன பதில் தருவாரோ?
வழக்கம் போல மோடி அரசை வார்த்தைகளால் நக்கி விடுவார் போல.
கவின்கேர் சி.கே. ரங்கநாதன் இது நீண்டகால அடிப்படையிலான பட்ஜெட் என்று சொரிகிறார்.
வருடம் தோறும் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்றாரே பிரதமர் மோடி அதைப் போலவா?
பசிக்கும் போது சோறு கொடுக்கணுமா இல்லை அடுத்த ஆண்டு பசியாற்றிக் கொள்ளலாம் என்று சொல்லணுமா சி.கே.ரங்கநாதன் அவர்களே? உங்களை எல்லாம் புத்திசாலிகள் என்று ஒரு கூட்டம் நம்பிக் கொண்டிருப்பது வேடிக்கை.
சாதாரண மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பது ஒன்று தான் பொருளாதார மீட்சிக்கு வழி. வாங்கும் சக்தி அதிகரித்தால் ஜி.டி.பி உயரும் என்பது தெரியும். ஆனாலும் செய்யமாட்டார்கள்.
ஏனென்றால் ஏழைகளாக்கி அவர்களைப் பஞ்சைபராரி ஆக்கி விட்டால் கல்வி கற்பதில் இருந்து விலக்கி விரட்டி விடலாம். அதிகாரப் போட்டிக்கு சூத்திரர்கள் வரமாட்டார்கள் அல்லவா? பசியோடு வைத்திருந்தால் மக்கள் பசிக்கு வேலை செய்வார்கள் அல்லவா?
இதுதான் சாநக்கிய திட்டம். குரூரத்தின் கொள்கை. அதைத்தான் மோடி அரசு இந்தியர்களுக்குச் செய்து வருகிறது.
இந்த பட்ஜெட் என்ன சொல்கிறது என்பதின் ஒரு சோற்றுப் பருக்கைப் பதத்தினை இங்கே எழுதி விட்டேன்.
புரிந்தவர்கள் புத்திசாலிகள். புரியாதவர்கள் என்றைக்கும் உச்சிக்குடுமிகளின் அடிமை என்பதில் மாற்றுக் கருத்தியல் இல்லை என்பது உண்மை.
Sunday, February 6, 2022
நரலீலைகள் - சொம்புத் தண்ணீர் (18+) (11)
37வது சற்குரு வெள்ளிங்கிரி சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்
Friday, February 4, 2022
நரலீலைகள் - மோஸடி மன்னராட்சி - அரசியல் தத்துவம் (10)
Wednesday, December 29, 2021
சிதம்பரநாதனின் பொய்யும் புரட்டும் - தினமணிக்கு கண்டனம்
இன்றைய (29.12.2021) தினமணியில் ’ ஜனநாயக ஆலயம் பலிபீடம் ஆககூடாது’ என்ற தலைப்பில் பெ.சிதம்பரநாதன் என்பவர் கட்டுரை வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல தினமணியும் தனது உள் குத்து அரசியல் வேலையை அறமற்ற செயலை தொடர்ந்து செய்து வருகிறது.
என்ன எழுதி இருக்கிறார் அக்கட்டுரையில் பார்க்கலாம்.
- ஆளும் பாஜகாவால் நாடாளுமன்றத்தில் எந்த சட்டத்தையும் சுமூகமாக சட்டமாக்கவில்லையாம்.
- பிஜேபி கட்சி ஏற்கனவே நிறைவேற்றிய மூன்று விவசாய சட்டங்களை நீக்க கூட முடியாமல் எதிர்கட்சிகள் பிரச்சினை செய்தததாம்.
- பெண்ணின் திருமண வயது 21 என்ற சட்டத்தினை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்து விட்டார்களாம்.
- பிளாஸ்டிக் தடை செய்ய மசோதா கொண்டு வர வேண்டுமாம். அதை எம்.பிக்கள் நிராகரிக்க முடியாதாம்.
- தேனியில் அமையவுள்ள நியுட்ரினோ ஆய்வகத்தினை அமைத்திடும் போது மலையைக் குடையும் போது வைகை அணை தகர்ந்து விடும் என்று அரசியல்வாதிகள் பீதியைக் கிளப்பி விட்டார்களாம்.
- கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தின் போது அத்துமீறிய 12 எம்பிக்களை கலந்து கொள்ள விடாமல் வெளியேற்றியது சரிதானாம். அதை பொது மீடியாக்களில் வெளியிட வேண்டுமாம். எதிர்கட்சி என்பதாலேயே எல்லா மசோதாக்களையும் எதிர்த்து எம்.பிக்கள் மகிழ்கின்றார்களாம்.
- புதிய கல்விக் கொள்கையில் மூன்று மொழி படிக்கலாமாம். பாலிடெக்னிக் கல்வியை தமிழிலேயே கற்பிக்கலாமாம். எதுவும் பிரச்சினை இல்லையாம்.
- நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் ஒரு நாள் முன்பே முடிவடைந்து விட்டதால் வெட்கப்பட வேண்டுமாம்.
- நாடாளுமன்றம் நடக்க ஒரு மணி நேரத்திற்கு 1.5 கோடி செலவாகிறதாம்.
இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது என்ன தோன்றுகிறது?
எதிர்கட்சிகளால் தான் பிரச்சினை, அவர்கள் தான் நாட்டை சீரழிக்கின்றார்கள் என்பது போல ஒரு தோற்றத்தினை உருவாக்குகிறது. எதிர்கட்சி எம்.பிக்களை ஒரு எழுத்தாளர் இப்படி நயவஞ்சகமான முறையில் உண்மைக்குப் புறம்பான வகையில் பொய்யையும், புரட்டையும் கூறி அவமானப்படுத்தி இருக்கிறார்.
67 சதவீதம் பிஜேபிக்கு ஓட்டுப் போடாத மக்களின் பிரதிநிதிகளை இவர் சுயநலவாதிகள் என்பது போல எழுதி மக்களையும் கிண்டல் செய்திருக்கிறார். மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார். தினமணியும் ஒத்து ஊதி கட்டுரையினை வெளியிட்டு இருக்கிறது. இதுதான் உள் அரசியல். மக்களை மூளைச்சலவை செய்யும் பொய்களை அவிழ்த்து விடும் அக்கிரமம்.
நாடாளுமன்றத்தில் விவாதமே இல்லாமல் பிஜேபி அரசு உடனுக்குடன் சட்டமியற்றி வருகிறது என்பதை பலரும் பல பத்திரிக்கைகளில் எழுதி இருக்கிறார்கள். மூன்று விவசாய சட்டங்களை பத்தே நாட்களுக்குள் எந்த வித விவாதமும் இன்றி நிறைவேற்றிய பிஜேபி அரசின் அக்கிரமத்தினால் 700 விவசாயிகள் இறந்தார்கள்.
இந்த வார கல்கியில் ‘ஏனிந்த அவசரம்?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது.
வாக்காளர் அடையாள அட்டையையும், ஆதார் கார்டையும் இணைக்க வேண்டிய மசோதா அவசர அவசரமாக குரல் ஓட்டெடுப்பில் சட்டமாக்கி இருக்கிறது பிஜேபி. ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் இரண்டு அடையாள அட்டையை இணைக்கும் போது பெயர்கள் மேட்சிங்க் ஆகவில்லை என்பதால் 55 லட்சம் பேருக்கு ஓட்டுரிமை பறிக்கப்பட்டது.
வருமான வரி அட்டையில் எனது தகப்பனார் பெயர் மாணிக்கதேவர் என்று இருக்கிறது. ஆதாரில் மாணிக்கம் என்று இருக்கிறது. ரேஷன் கார்டில் மாணிக்கதேவர் என்று இருக்கிறது. அந்தக் காலத்தில் ஜாதியை பெயருடன் இணைத்துதான் ஆவணங்கள் வழங்கப்பட்டன. எனது தகப்பனார் சொத்துக்களின் ஆவணங்களில் மாணிக்கதேவர் என்றுதான் இருக்கிறது. இப்படியான ஒரு பெயர் குழப்பச் சூழல் இருக்கும் போது இரண்டு அடையாள அட்டைகளையும் இணைக்கும் இந்த சட்ட மசோதாவை எந்த வித விவாதமும் இன்றி பிஜேபி அரசு சட்டமாக்கி இருக்கிறது அக்கிரமமான செயல் அல்லவா?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதும் என்பதற்கிணங்க மூன்று விவசாய சட்டங்களை சட்டமாக்கிய நிகழ்வு ஒன்றே போதும் என்று மக்களுக்கு நன்கு தெரியும். இந்த எழுத்தாளர் பொய்யையும் புரட்டையும் எழுதி விவசாய மக்களை அவமானப்படுத்தி இருப்பதை அறியலாம்.
நாடாளுமன்றத்திற்கும் ஆலயத்துக்கும் வேறுபாடு உண்டு. ஆலயம் என்பது வழிபாடு செய்யும் இடம். நாடாளுமன்றம் வழிபாட்டுக்கு உரியது அல்ல. 110 கோடி பல்வேறு கலச்சார மக்களின் சார்பாக, அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் விவாத மன்றம். நாட்டை ஆளும் சட்டங்களை உருவாக்கிடும் கோவிலுக்கும் மேலான ஒரு இடம் அது. கோவில்கள் கலாச்சாரத்தின் அடையாளம். நாடாளுமன்றம் இந்தியாவின் உயிர். ஆலயத்துக்கும் நாடாளுமன்றத்துக்கு வேறுபாடு தெரியாத அறிவிலியா இந்த ஆசிரியர் என்று தோன்றுகிறது.
நிச்சயம் இவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அதுவல்ல அவரின் பிரச்சினை. பொய்யைக் கட்டவிழ்த்து விடுவது. மக்களை நம்வ வைக்க ஆலயத்தினை கூட இழுத்துக் கொள்கிறார் இவர். 33 சதவீதம் ஓட்டுப் பெற்ற பிஜேபிக்கு ஒத்து ஊதுவது மட்டுமே இவரின் எண்ணம்.
தினமணியில் எழுதிய கட்டுரையின் ஆசிரியர் சிதம்பரநாதன், ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசிரியர். இவருக்கு வேலையே பொய்களையும் புரட்டுகளையும் எழுதி வருவதுதான். இவர் வயதுக்கு ஏற்ற நற்சிந்தனை, எது அறம் என்று தெளியும் பக்குவம் வந்திருக்க வேண்டும். ஆனால் இவரின் மனதுக்குள் வன்மம் மட்டுமே இருப்பதை இக்கட்டுரை வெளிச்சம் போட்டிருக்கிறது.
தமிழர்களுக்கு எதிரான, அறத்துக்கு எதிரான இவ்வகை ஆட்கள் அடையாளம் காணப்பட்டு உதாசீனப்படுத்தல் அவசியம் என்பதால் இப்பதிவினை எழுதுகிறேன்.
Wednesday, December 15, 2021
துரோகத்தின் நிழலில் டி.ஆர் - மாநாடு திரைப்படம் நடந்தது என்ன?
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
அறத்துப்பாலில் 37வது குறள். திருவள்ளுவப் பெருந்தகையாளர் திருக்குறளில் அறன் வலியுறுத்தல் என்ற தலைப்பில் பத்துக் குறள்கள் எழுதி இருக்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால் பல்லக்கில் உட்கார்ந்திருப்பவர் அற வழி நடப்பவர் என்றும் பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்கள் அறவழி மாறியவர்கள் ஆவர் என்பதாகும்.
எந்த இடர் வறினும் அறவழியாளர்கள் இறைவனால் எப்போதும் கைவிடப்படார். ஆனால் அறமற்றவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தாலும் அப்பாவம் பல்லக்கைப் போல அவர்களால் சுமக்கப்படும்.
சினிமா அறம் சார் தொழில் இல்லை என்றார் என் சினிமா நண்பர் ஒருவர். ஏனென்றால் கருப்பு பணம் புழங்கும் சினிமாவில் வெறும் வெள்ளைச் சீட்டுக்களில் எழுதப்படும் கணக்குகள் தான் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சாட்சியமாகும், இதுதான் சினிமா கணக்கு என்றார். சினிமா இப்படித்தான் இயங்குகிறது என்றார் தொடர்ச்சியாக.
டி.ராஜேந்தர் அவர்கள் தன் திரை உலக வாழ்க்கையை துரோகத்தின் வழியாகத்தான் ஆரம்பித்தார். 1980களில் வெளியான அவரின் படைப்பான ஒரு தலை ராகம் இன்றும் துரோகத்தின் சாட்சியாகத்தான் நிற்கிறது. ஒருவனின் குழந்தைக்கு இன்னொருவனின் இனிஷியல் என்பதன் வலியை ஏற்கனவே அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.
கிட்டத்தட்ட 20 படங்கள் இயக்கி நடித்திருக்கும் அஷ்டாவதானி இயக்குனர் அவர். அந்தக் காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே டஃப் கொடுத்த படங்களை தந்தவர். எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூவரிடமும் அரசியல் பழகியவர். எம்.எல்.ஏவாக இருந்தவர். சிறுசேமிப்புத்துறை இயக்குனராக இருந்தவர்.
இவை எல்லாவற்றையும் விட பெண்களைத் தொட்டு நடிக்காத ஒரே ஒரு சினிமாக்காரர். எந்த வித கிசு கிசுவிலும் பேசப்படாதவர்.
நல்லவர்களுக்கு உலகம் துரோகத்தினை வழங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அவர் தான் நம்பும் இறைவனிடம் எல்லாவற்றையும் விட்டு விடுகிறார்கள். டி.ஆர் நம்புகின்ற இறைவனும், அவர் நம்பும் அறமும் தான் சுமார் 41 வருடங்களாக இன்றைக்கும் அவரை சினிமாவில் வைத்திருக்கிறது.
மாநாடு திரைப்பட வெளியீட்டின் போது என்ன நடந்தது?
தகப்பனும் தாயும் அன்றிரவு தூங்கவே இல்லை.
மாநாடு திரைப்படத்தின் நெகட்டிவ் மற்றும் சாட்டிலைட் உரிமையை பிரபல சினிமா ஃபைனான்சியர் உத்தம் சந்த் வைத்திருந்தார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியினை அறிவித்திருந்தார். திடீரென்று திரைப்படத்தின் வெளியீட்டு தேதியினைத் தள்ளி வைப்பதாக டிவீட்டினார்.
ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றனர். அண்ணாத்தே திரைப்படத்தின் போது மாநாடு திரைப்படத்தை வெளியிட விடாமல் சதி நடக்கிறது என டி.ஆர் அவர்களும் உஷா அவர்களும் பேட்டி கொடுத்தார்கள்.
அண்ணாத்தே காரணமாக படத்தின் வெளியீட்டு தள்ளி வைக்கப்பட்டு, மீண்டும் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும், தொடர்ந்து தள்ளி வைப்பு அறிவிப்பினை தயாரிப்பாளர் வெளியிட்டுருப்பது கண்டு சிம்பு, டி.ஆர் மற்றும் உஷா அவர்களுக்கும் மட்டுமல்ல ரசிகர்களுக்கும், படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கும் அதிர்ச்சியை உருவாக்கியது.
படம் மறு நாள் வெளியிடப்பட வேண்டும். அன்றைக்கு விடிகாலையில் டி.ஆர் அவர்களும், உஷா அவர்களும் ஃபைனான்சியர் உத்தம் சந்த் வீட்டில் அமர்ந்திருக்கின்றனர்.
திரு.உத்தம் சந்த் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஐந்து கோடி ரூபாய் தொகை இன்னும் செட்டில் ஆகவில்லை. ஆகவே உத்தம் சந்த் கியூப் நிறுவனத்திற்கு தடையின்மைச் சான்று அளிக்கவில்லை.
சாட்டிலைட் விற்பனை தொகையாக ஐந்து கோடி ரூபாயை ஒதுக்கி இருந்திருக்கிறார்கள்.
ஓடிடி வெளியீடு வேறு, சாட்டிலைட் உரிமை வேறு என்பதால் இரண்டுக்கும் வெளியீட்டு தேதியில் பிரச்சினை வந்து விட்டது. படம் வெளியிட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு படத்தை டிவியில் வெளியிடுவதாக இருந்தால் தான் விலைக்கு வாங்குவேன் என்கிறார்கள் சாட்டிலைட்கார்கள். ஆனால் ஓடிடி விற்பனையின் போது 100 நாட்களுக்கு பிறகே தான் சாட்டிலைட்டில் படம் வெளியிடப்படல் வேண்டுமென்ற ஒப்பந்தமிட்டிருக்கிறார்கள். ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனம் விடிகாலையில் தொடர்பு எல்லைக்கு அப்பாலே இருக்கிறது.
வினியோகஸ்தர்கள் படம் வெளியானால் தான் தயாரிப்பாளருக்குப் பணம் கொடுப்பார்கள்.
இப்படியான ஒரு இக்கட்டான சூழல். ஃபைனான்சியர் வீட்டில் இருவரும் அமர்ந்திருக்கிறார்கள்.
படம் வெளியாகவில்லை என்றவுடன் தியேட்டர்களில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள்.
பைனான்சியருக்கு ஐந்து கோடி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் தான் படம் தியேட்டரில் வெளியாகும். படம் வெற்றி அடையவில்லை என்றால் உங்களால் எனக்கு எவ்வாறு பணம் தர முடியும் என்று கேட்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியிடம் பதில் இல்லை.
ஐந்து கோடிக்கு கியாரண்டி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் படத்திற்கான என்.ஓ.சி தருகிறேன் என்று உத்தம் சந்த் அவர்கள் சொல்ல, அந்த இக்கட்டான சூழலில் டி.ஆர் ஐந்து கோடி ரூபாய்க்குப் பொறுப்பேற்று கையெழுத்துப் போட்டு கொடுத்த பின்னால் தான் எட்டு மணி காட்சி வெளியாகி இருக்கிறது.
அந்த ஒப்பந்தத்தில் நாங்கள் சேட்டிலைட் உரிமையை விற்ற பின்பு கிடைக்கும் தொகை குறைவாக இருப்பின் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொண்டு அந்தக் குறைவுத் தொகையை தந்து விடுவதாக டி.ஆர். ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்குச் சாட்சியாக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியும், திரு.சவுந்திரபாண்டியன் (தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்) கையொப்பம் செய்திருக்கின்றனர்.
ஆக சாட்டிலைட் உரிமை விற்பனை டி.ஆர் அவர்களின் அனுமதியின் பேரில் நடந்திருக்க வேண்டும். ஏனென்றால் சாட்டிலைட் விற்பனை தொகை எவ்வளவு என தெரிந்து கொள்ளும் உரிமை அவருக்கு அந்த அக்ரிமெண்டின் படி வந்து விட்டது.
டி.ஆர் அவர்கள் கேரண்டி கையெழுத்துப் போட்ட உடன் தான் படம் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாக காரணம் டி.ஆர் என்பது உண்மை.
இதற்கிடையில் மாநாடு தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. தெலுங்கு சினிமா டப்பிங் ரைட்ஸ் விலை பேசப்பட்டு அதை வாங்கிய தயாரிப்பு நிறுவனமும், சிம்புவும் இணைந்து படத்தின் புரமோஷனுக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயைச் செலவழிக்கின்றனர்.
திடீரென்று சுரேஷ்காமாட்சி அவர்கள் தெலுங்கு டப்பிங் உரிமையை ரத்துச் செய்து விட்டு, ரீமேக் ரைட்ஸ்க்கு விலை பேச ஆரம்பிக்கிறார்.
அதற்குள் படம் ஹிட் ஆனவுடன் ஒரு பிரபல சாட்டிலைட் சுமார் அதிக விலைக்கு டிவி உரிமையை விலை பேசுகிறது.
டி.ஆர் தனக்குத் தெரியாமலே நடந்த துரோகத்தினை ஏற்றுக் கொள்ள இயலாமல் வழக்குத் தொடுக்கிறார்.
அவர் வழக்குத் தொடுத்தது சரியா? இல்லையா? என்பதுதான் கேள்வி.
ஐந்து கோடி பணத்திற்கான உறுதி கிடைத்தவுடன் தான் படம் வெளியானது. ஹிட்டானது. ஆக படம் வெளியாக டி.ஆர் அவர்கள் ஏற்றுக் கொண்ட ஐந்து கோடி மட்டுமே காரணம் என்பது தெளிவு.
படம் ஹிட் ஆனதால் சாட்டிலைட் அதிக விலைக்கு விற்பனை ஆனது. ஒரு வேளை ஹிட் ஆகவில்லை என்றால் ஐந்து கோடியை டி.ஆர். கொடுக்க வேண்டும்.
பட வெளியீட்டுக்கு பொறுப்பேற்றவரான டி.ஆரிடம் எதுவும் சொல்லாமல் தன்னிச்சையாக சாட்டிலைட் உரிமையை விற்பனை செய்து விட்டு அது என் உரிமை என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி.
நஷ்டம் வந்தால் அது உமக்கு, லாபம் வந்தால் அது எனக்கு என்கிறார் சுரேஷ்காமாட்சி.
இதுதான் சினிமா கணக்காம்.
தெலுங்கு டப்பிங் படம் வெளியாகி விட்டால் சிம்புவுக்கு மார்க்கெட் உச்சமாகி விடும் என்பதால், டப்பிங்க் உரிமையைக் கொடுத்து விட்டு, புரமோஷன் செலவு செய்த பின்னாலே எதன் காரணமாகவோ அதைக் கேன்ஷல் செய்து விட்டு, ரீமேக் அதாவது இதே கதையை வேறு ஹீரோவை வைத்து ரீமேக் ஷூட் செய்ய விலை பேசுகிறார் சுரேஷ்காமாட்சி.
பட வெளியீட்டுக்குப் பொறுப்பேற்றவருக்குத் தெரியாமலே சேட்டிலைட் விற்பனை செய்து விட்டு, தெலுங்கு டப்பிங்க் பட வெளியீட்டினையும் ரத்துச் செய்து விட்டு அறம் பேசுகிறார் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி அவர்கள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் வழக்கம் போல வெள்ளுடை மனதோடு அவர் சங்கத்தைச் சேர்ந்த சுரேஷ்காமாட்சிக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறார். அன்றைக்கு இப்போது அறிக்கை விடும் இயக்குனர் இமயம் பாரதிராஜா கேரண்டிக் கையொப்பம் போட்டுக் கொடுக்கவில்லை.
தயாரிப்பாளர் லாபம் அடைய வேண்டுமென்பதில் சந்தேகமில்லை. ஆனால் டி.ஆரின் கியாரண்டியைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்று விட்டு, அது என் பிசினஸ் என்றும், அதற்கும் உங்களுக்கும் தொடர்பில்லை என்றும் பேசுவது எங்கணம் அறமாகும்?
வங்கிகளில் கடன் வாங்குபவர்களின் கடன் செலுத்தப்படவில்லை எனில் அவர்களின் சொத்துக்கள் மட்டுமல்ல கேரண்டி கையொப்பம் போட்டவர்களின் சொத்தும் சேர்ந்து ஏலத்துக்கு வரும்.
லாபம் வந்தால் அது என்னோடு, நஷ்டம் வந்தால் அதில் உனக்கும் பங்குண்டு என்பது தர்மமா? அறமா?
குறைந்தபட்சம் ஏதாவது ஒரு நன்மையை தயாரிப்பாளர் செய்திருத்தல் அவசியமல்லவா? ஆனால் அவர் செய்யவில்லை.
டி.ஆர் இப்படியான தொடர் துரோகங்களால் துவண்டு விடப்போவதில்லை.
டி.ஆர் அவர்கள் போட்ட வழக்கு வெற்றி அடையுமா? அடையாதா? என்ற கேள்விக்கு இங்கு பதில் தேடவில்லை. நியாயம் எதுவோ தர்மம் எதுவோ அதை இங்கு எழுதி இருக்கிறேன்.
அறமற்ற செயல்களைச் செய்பவர்களும், துணை போகும் நபர்களும் தான் அதர்மத்தை பல்லக்கு தூக்குபவன் போல சுமக்க வேண்டும்.
Monday, December 13, 2021
டிரஸ்ட் கம்பெனி பணப்பரிமாற்றம் மோசடிகள் - விரிவான விளக்கம்
Tuesday, December 7, 2021
பொய் பிரச்சாரம் தமிழர்கள் ஜாக்கிரதை
துரோகிகள் எப்போதும் இருப்பார்கள். அவர்கள் கோட்சேக்களாக நம்முடன் பயணிப்பவர்கள். கோட்சேக்கள் போல அவர்கள் நல் மனிதர்களைக் கொல்வார்கள். கூடவே இருந்து கொண்டு கொலையும் செய்யும் படுபாதகர்கள்.
கொடுமையிலும் கொடுமையான ஒரு செயல் துரோகம். துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. உங்களில் பல பேருக்கு துரோக அனுபவம் நிச்சயம் இருக்கும். அரசாங்கங்களும், பெரிய பிசினஸ் சாம்ராஜ்ஜியங்களும் துரோகிகளால் தான் அழிக்கப்பட்டன. வரலாறு சொல்கிறது.
முதலில் எனது பிளாக்கை படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது என்னவென்றால், தத்துவ ஞானி லாவோ ட்சு ( LAO TZU ) சொன்னதைத்தான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
அவர் சொன்னதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் ஆடு, மாடுகள் போலத்தான் உங்கள் வாழ்க்கையும் என்பதை அறிந்து கொள்க.
இதோ லாவோ சொன்னது படமாக.
ஆம், சோஷியல் மீடியாக்கள் மூலம் நாம் மூளைச் சலவை செய்யப்படுகிறோம். நாம் நம்மை அறியாமலே பிறரின் எண்ணங்களுக்குள் கட்டுப்பட்டு விடுகிறோம். உண்மை எது? பொய் எது என்று அறியமுடியாமல் ஒரு வித கட்டுப்பாட்டு உணர்ச்சிக்குள் மூழ்கி விடுகிறோம்.
நயவஞ்சகத்தின் மொத்த உருவமான நரிகள் நம்மை அவர்களின் பொருளாதார உயர்வுக்கும், பதவி மோகத்துக்கும் நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நாம் பிறரின் அடிமையா இல்லையா என்பதை நாம் தான், நமக்குள்ளே அறிந்து தெளிதல் அவசியம்.
இல்லையெனில் இலக்கிய உலகில் பிறரை ஏமாற்றி உழைப்பை உறிஞ்சும் கேடுகெட்ட ஒரு ஈனனிடம் ஒரு சிறு கூட்டம் அடிமைப்பட்டு அடிமைகளாக கிடப்பது போல கிடக்க நேரிடும்.
தி.ஜ இவர்களைப் போன்ற வாசகர் வட்டங்களை உருவாக்கவில்லை. அவரின் படைப்பு மட்டுமே இன்றும் பேசப்படுகிறது. பசப்புகளையும், பாலியல் எழுத்துக்களயும் எழுதும் இவர்களைப் போன்றவர்கள் சமூகத்தின் கேடு. நான் யாரைச் சுட்டிக்காட்டுகிறேன் என்று உங்களுக்குப் புரியும்.
பல சினிமா ஹீரோக்கள் தங்கள் படங்களை வெற்றி பெற வைக்க ஒரு சில ஆட்களை வைத்து புரோமோக்களை செயற்கையாக உருவாக்கி பலனடைவார்கள். தனக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதாகவும், அப்படி ரசிகராக இருந்தால் சமூகத்தில் ஒரு அந்தஸ்து கிடைக்கும் என்பது போல, பொய் தோற்றத்தினை உருவாக்கி தன் சம்பளத்தை உயர்த்திக் கொள்வார்கள்.
இது போன்ற மாயா வித்தைகளைப் புரிந்து கொள்ளும் தன்மை காலத்தின் போக்கில் ஒவ்வொருவருக்கும் வந்து விடும்.
அப்போது நாம் நம் நேரத்தையும், பொருளையும் இழந்திருப்போம். எல்லாம் நம் கையை விட்டுப் போயிருக்கும்.
இப்பதிவில் இது போன்ற ஆட்களின் நயவஞ்சகத்தினை உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நான் எழுதி இருப்பது உண்மைதானா என ஆராய்ந்து பார்த்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக நம்புங்கள். நீங்கள் பிறரின் எண்ணங்களுக்கு கட்டுப்பட்டீர்கள் என்றால் நீங்கள் அவர்களின் சிறைவாசிகள் ஆவீர்கள்.
உடனே குடும்பம், நண்பர்கள், கடமை என்று நினைக்காதீர்கள். அது வாழ்வியல் கடமை. அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் ஆகியோருக்காக வாழ்வது என்பதுதான் வாழ்வியல் அறம். அது வேறு, இங்கு நான் எழுதி இருப்பது என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது.
மாமனார் ஒரு யுடியூப் வீடியோவை அனுப்பி வைத்தார். லோட்டஸ் சானலில் ஒருவர் திமுக கோவையில் 3200 ஏக்கரை விவசாயிகளிடமிருந்து பறிப்பதாகவும், விவசாயிகளை திமுக அழிப்பதாக கதறிக் கொண்டிருந்தார். அவர் ஒரு அம்பி என்பது தான் விசேடம்.
ஏன் அலறிப் புலம்பி பொய்களை உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று பார்க்கலாம்.
அடியேன் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன் 20 வருடமாக. லீகல் அட்வசைராக பல பெரும் நிறுவனங்களுக்கு பணியும் செய்து வருகிறேன். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நிறுவனம் கோவையில் சினிமா ஸ்டூடியோ அமைக்க இடம் வாங்கித் தருமாறு என்னிடம் கேட்டிருந்தார்கள்.
அப்போது அன்னூர் தாலுக்காவில் உள்ள பொகலூர், அக்கரை செங்கம்பள்ளி, குப்பனூர், ஓதிமலை, வடக்கலூர் கிராமங்களிலும், மேட்டுப்பாளையம் தாலுக்காவில் இலுப்ப நத்தம், பெள்ளபாளையம் கிராமங்களிலும் இடம் தேடினேன். சுமார் 150 ஏக்கருக்கும் மேல் அந்தப் பகுதில் இண்டஸ்டரியல் நோக்கத்துக்காக அடிசனல் இண்டஸ்டரியல் பார்க் தமிழ்நாடு பிரைவேட் லிமிடெட் நிலம் இருக்கிறது.
சுமார் 2000 ஏக்கருக்கும் மேல் ஒரு சில தனியார்கள் நிலங்களை வாங்கி வைத்திருந்தார்கள். அவர்களிடமிருந்து விபரங்களைப் பெற்று விலை பேசி தொடர்புடைய நிறுவனத்திற்கு அளித்திருந்தேன். அவர்கள் நேரடியாக அப்போதைய அரசிடம் திரைப்பட நகருக்கு அனுமதி கேட்க, அரசு மறுத்து விட்டது. அதன் பிறகு அந்த நிறுவனம் அந்த திட்டத்தினைக் கைவிட்டது.
தற்போது அரசு அறிவித்த இந்த திட்டம் உள்ள இடம் இப்போதும் தனியார் வசம் உள்ளது. அந்த இடத்தில் தான் தமிழக அரசு இண்டஸ்ட்ரியல் பார்க்கை கொண்டு வர அறிவித்திருக்கிறது. ஏற்கனவே தனியார் நிறுவனங்கள் வாங்கி வைத்திருக்கும் இருக்கும் இடம் அது. விவசாயிகளிடமிருந்து தனியார் நிறுவனங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தினை கிரையம் பெற்று வைத்திருக்கின்றார்கள். அவர்களிடமிருந்து தான் அரசு நிலத்தினை கிரையம் பெற்று இந்த திட்டத்தினைக் கொண்டு வர உள்ளார்கள். அவ்வாறு வந்தால் கோவை பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டால் என்ன ஆகும்? மக்கள் நலன் அடைவார்கள்.
இந்தத் திட்டத்தினால் மக்களுக்கு நன்மை கிடைத்து விட்டால் பிஜேபிக்கு பிடிக்குமா? பிடிக்காது அல்லவா? டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியை கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்.
அம்பியும் ஆடு புகழ் அண்ணாமலையும் ஏதோ தமிழக அரசு இப்போதுதான் நிலத்தினை கையகப்படுத்த இருப்பதாக பொய்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
கொடிசியா கோவில்பாளையம் பகுதியில் டிபன்ஸ் காரிடாருக்காக இண்டஸ்ட்ரியல் நிலம் வாங்கி, அனுமதி பெற்ற போது அந்த இடம் கொடுத்தவர்கள் விவசாயிகள் இல்லையா? நிதியமைச்சர் வந்து ஓப்பன் செய்து வைத்தாரே அப்போது இந்த அம்பி எங்கே போனார்? இப்போது கதறுகின்றார், நடிக்கின்றார், ஊளையிடுகின்றார்.
இண்டஸ்ட்ரியல் பார்க்கினால் பல கோடி வருமானமும், வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று பெருமை பேசிய போது, அந்தப் பகுதிக்கு நிலம் கொடுத்தவர்கள் விவசாயிகள் என்பது மறந்து போனதா இவர்களுக்கு?
இவர்கள் செய்தால் அது நல்லது, அதுவே இன்னொரு கட்சிக்காரர் செய்தால் அது விரோதம், குற்றம் என்பார்கள். இவர்கள் தான் மக்களுக்கு நன்மை செய்யப் போகின்றார்களாம்.
இதுவரை செய்தது என்ன என பார்த்தால் ஆட்சிக்கு வந்து இது நாள் வரை கோடிக்கணக்கானவர்கள் வேலை இழந்தது மட்டும் அல்ல லட்சக் கணக்கான நிறுவனங்கள் அழிந்தும் போயின.
ஒட்டு மொத்தம் இந்தியாவில் 9 சதவீதம் வேலை இழப்பு என்று பத்திரிக்கைச் செய்திகள் புள்ளி விபரங்களை அடுக்குகின்றன.
அதாவது பரவாயில்லை. மீத்தேன் வாயு கிணறுகளுக்கு நெடுவாசலில் என் நிலத்தையும் ஆட்டய போடப்பார்த்ததே பிஜேபி அரசு அப்போது அவர்களுக்குத் தெரியாதா எங்கள் பகுதி நிலமெல்லாம் விவசாயம் நடக்கிறது என?
சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுத்தார்களே அப்போது தெரியாதா அது விவசாய நிலம் என்று.
அணைப்பாதுகாப்பு சட்டம் 2021 நிறைவேற்றி இருக்கிறதே பிஜேபி. எந்த ஒரு கட்சியின் கோரிக்கையை கூட ஏற்காமல் அச்செயலைச் செய்து உள்ளதே. அச்சட்டத்தின் காரணமாக மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகளை ஒன்றிய அரசு கைப்பற்றி மேலாண்மை செய்யவிருக்கிறதே அது எவ்வளவு பெரிய அக்கிரமம்?
கல்வியை மாநிலங்களின் அதிகாரத்தில் இருந்து நீக்கி தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வருடம் தோறும் 20 மாணவர்களை கொலை செய்து வருகிறதே ஒன்றிய அரசு அது எவருக்கும் தெரியவில்லையா?
48,000 கோடி ரூபாயை வரி செலுத்துவர்கள் தண்டமாக கட்ட வேண்டும். ஏன் தெரியுமா? இந்தியன் ஏர்லைன்ஸ் கடன் அது? டாட்டாவுக்கு 18,000 கோடிக்கு அதை விற்று விட்டார்கள். ஆனால் கடன் தொகையினை நாம் கட்ட வேண்டும்.
மிஸ்டர் பிரதமர் மோடியா சம்பாதித்து 48,000 கோடி கடனைக் கட்டப்போகிறார்? 48,000 கோடி நஷ்டக் கணக்கு நம் தலையில். அதையும் நாம் தான் அழுது தொலைக்கனும்.
இப்போது அணைப்பாதுகாப்புச் சட்டம் 2021 மூலம் தமிழகத்தை சுடுகாடாக்கி இன்னொரு பீகார், உத்திரப்பிரதேசம் போல மாற்றணும் என்ற நோக்கில் ஒரு அம்பிக்கூட்டமும் அவர்களின் அல்லக்கைகள் முழு மூச்சாக வேலை செய்து வருகின்றார்கள்.
இதோ இன்றைய தினமணியில் வெளியான ஒரு கட்டுரை. படித்துப் பாருங்கள். எப்படியெல்லாம் சுற்றிச் சுற்றி தமிழ் நாட்டினைக் குறி வைத்து அழிக்க முயல்கிறார்கள் இவர்கள் என்று.
இவர்கள் எல்லோரும் எப்படியானவர்கள் என்றால் இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்ட போது, பிரிட்டானிய அரசிடம் வேலை செய்து தன் சொந்த உறவினர்களைக் காட்டிக் கொடுத்த அக்கிரமக்காரர்கள் போன்றவர்கள். இவர்கள் தான் சமூகத்தின் கேடு. ஆனால் இவர்கள் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள் பயிர்களுக்குள் இருக்கும் களைகள் போல.
இந்தியா டுடே திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் இந்தியாவில் நம்பர் 1 தமிழகம் என செய்தி வெளியிடுகிறது. அம்பிகளும், அல்லைக்கைகளும் தூங்காமல் அலறிப் புலம்புகின்றனர்.
ஆடு புகழ் அண்ணாமலை பொய்யாகப் பேசித் திரிகின்றார். மக்களுக்கு நன்மை செய்யும் ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசுகிறாரா என்றால் இதுவரை இல்லை.
பிஜேபி அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறார்கள். அவர்களே விலை உயர்வுக்குப் போராட்டமும் நடத்துகிறார்கள். துக்ளக் ஆட்சியில் இவர்கள் நடத்தும் நயவஞ்சக நாடகங்களை அறிந்து மக்கள் தெளிவு பெறுதல் வேண்டும்.
கோவில்களை நாம் எப்போது தமிழர்கள் கைக்கு மீட்கின்றோமோ அன்றிலிருந்து தமிழ் நாட்டுக்கு அமோக வளர்ச்சி உண்டாகும் என்பதை எவரும் மறந்து விடாதீர்கள். பணம் கொட்டும் ஹோட்டல்களை தமிழர்கள் நடத்துகின்றார்கள். கோவில்களும் நம் கட்டுக்குள் நாமே நேரடியாக அர்ச்சனை செய்யும் நாட்கள் வரத்தான் போகின்றது. அதற்காகத்தான் அலறுகின்றார்கள்.
எவரினை மன்னித்தாலும் இந்த அல்லக்கைகளையும், துரோகிகளையும் எப்போதும் மன்னித்து விடவே கூடாது. ஏனென்றால் அதற்கு அவர்கள் தகுதியே இல்லாதவர்கள். இவர்களை மறக்கவும் கூடாது.
இனி இந்தியா டுடே செய்தி : Thanks to India Today Magazine.
Wednesday, November 24, 2021
நிலம் (91) - பவர் பத்திரத்தினை ரத்துச் செய்ய பவர் எழுதி வாங்கியவர் தேவையில்லை
சமீப காலமாக பவர் பத்திரங்கள் அதாவது பொது அதிகார ஆவணத்தின் பதிவுகள், ரத்துக்கள் போன்றவற்றில் பல்வேறு குழப்பமான செய்திகள் வலம் வந்தன. பல சார் பதிவாளர்கள் பவர் பத்திரத்தினை ரத்துச் செய்ய பவர் எழுதி வாங்கியவரும் வர வேண்டுமென்று சொல்லி ரத்துப் பத்திரத்தினை பதிய மறுத்தார்கள்.
பொது அதிகாரம் எழுதி வாங்கினால், எழுதி வாங்கியவர் சொத்தின் உரிமையாளர் அல்ல. அதாவது முகவர் என்பவர் சொத்தின் உரிமையாளர் அல்ல.
எழுதிக் கொடுத்தவர் தான் சொத்தின் உரிமையாளர். பொது அதிகார முகவர் சொத்தினை விற்றால் அரசு வழிகாட்டி மதிப்பு தொகை சொத்தின் உரிமையாளருக்கு வங்கியில் வரவு வைத்தால் மட்டுமே அந்தச் சொத்தினை கிரையம் பெற்றவருக்குச் செல்லும்.
பொது அதிகார முகவர் என்பவர் எந்த வித பிரதி பிரயோஜனும் இன்றி ஒரு ஏஜெண்டாக சொத்தின் உரிமையாளருக்கு பணி செய்பவர் மட்டுமே என்பதை எக்காலத்திலும் மறந்து விடாதீர்கள்.
பொது அதிகார ஆவணத்தின் மூலம் சொத்துப் பரிமாற்றம் நடந்தால் சொத்துக்கான விற்பனைத் தொகையினை சொத்தின் உரிமையாளர் பெற்றுக் கொண்டார் என்பதற்காக அத்தாட்சி மிகவும் அவசியம் என்பதையும் மறந்து விடாதீர்கள்.
சார் பதிவாளர்கள், முகவர் இல்லாமல் பொது அதிகார ரத்துப் பத்திரத்தினைப் பதிவு செய்ய முடியாது என்று சொன்னதற்கான பதிவுத்துறை கீழே இருக்கும் சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது.
எனவே பொது அதிகாரத்தை ரத்துச் செய்ய சொத்தின் உரிமையாளர் நேரடியாக மேற் கொள்ளலாம். இவ்வாறு பொது அதிகாரம் ரத்துச் செய்யப்பட்டு உள்ளது என்பதை பொது அதிகார முகவருக்குப் பதிவுத் தபாலில் செய்தி அனுப்பி அதன் நகலை ரத்துப் பத்திரத்துடன் இணைத்து வைத்துக் கொள்க.
மேலும் பொது அதிகார முகவரால் ஏதேனும் பதிவு செய்யப்படாத ஆவணங்களோ இல்லை வேறேதேனும் ஆவணங்களோ ஏற்படுத்தப்பட்டிருந்தால் அது பற்றிய கவலை வேண்டாம். சமீப சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி சொத்துரிமை மாற்றத்திற்கான எந்த வித பதிவு செய்யப்படாத ஆவணத்தையும் ஏற்றுக் கொள்ளகூடாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறது.
வில்லங்கச் சான்றிதழில் பொது அதிகார முகவரால் எழுதிக் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் இருப்பின் அதற்கு முழு பொறுப்பும் சொத்தின் உரிமையாளரையே சேரும். எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று சொல்ல முடியாது.
வெளி நாட்டில் வசித்து வரும் இந்தியர்கள் பொது அதிகார ரத்துப் பத்திரத்தினை அந்த நாட்டின் தூதரக அதிகாரி முன்பு எழுதி சான்றொப்பம் பெற்று, தன் கையொப்பம் இட்டு, அதனை அந்த நாட்டில் இருக்கும் நோட்டரி பப்ளிக் அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று அதனை பதிவுத் தபாலில் பதிவுத்துறைக்கு அனுப்பி ரத்துப் பத்திரத்திரனைப் பதிவு செய்ய வேண்டும்.
இதோ பதிவுத்துறையின் சுற்றறிக்கை.