குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Thursday, March 13, 2025

பொருளாதாரத்தில் முன்னேற ஆங்கிலம் அவசியம் ஏன்?

மும்மொழிக் கல்விக் கொள்கை என்பது தமிழ் நாட்டுக்கோ அல்லது வேறு எந்த மாநிலத்துக்கோ தேவையே இல்லை. இந்தியா மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் மும்மொழி தேவையில்லை என்பதறகான ஒரே பதில். இந்தியாவில் முதன் முதலாக ஒரிசா மா நிலம் மொழியின் காரணமாக பல போராட்டங்கள், உயிரிழப்பின் பிறகு உருவாக்கப்பட்ட முதல் மாநிலமாகும். 

வேறு பேச்சே இல்லை. மும்மொழிக் கொள்கை இந்தியை கொல்லைப் புற வழி திணிப்புக்கு வழி. ஆகையால் தேசியக் கல்விக் கொள்கை நிராகரிப்படல் அவசியம்.

அடுத்து ஆங்கிலம் வெளி நாட்டு மொழி, அதை ஏன் கற்க வேண்டுமென்பார்கள். அது தேசபக்தி இல்லை என்பார்கள். ஆங்கிலம் உலகளாவிய தொடர்பு மொழி. ஆங்கிலம் கற்றதால் தான் சுந்தர் பிச்சை கூகிள் தலைவராக இருக்கிறார் என்பது வரலாறு. 

இந்தியாவில் அதிக வருவாய் பெறுவதற்கான திறவுகோல் ஆங்கில மொழியே. இன்றைய உலகப் பொருளாதாரத்தில், ஆங்கிலத்தில் கல்வி கற்றவருக்கு ஹிந்தியுடன் ஒப்பிடும்போது அதிக வருவாயில் வேலை கிடைத்து, வருமானம் அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தொழிலாளர் பொருளாதாரதில், இந்தியத் தொழிலாளர்கள் மணிக்கு தோராயமாக 1.50 அமெரிக்க டாலர் சம்பாதிக்கின்றார்கள். அதே நேரத்தில் மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் உள்ள அவர்களின் சக தொழிலாளர்கள் முறையே 2.50 மற்றும் 15 அமெரிக்க டாலர்கள் சம்பாதிக்கிறார்கள்.

ஐடி, நிதி, சுகாதாரம் மற்றும் வணிக ஆலோசனை போன்ற அதிக ஊதியம் வழங்கும் தொழில்கள் ஆங்கிலம் பேசும் வல்லுநர்களை விரும்புகின்றன, இது சிறந்த வேலைகளைப் பெறுவதில் அவர்களுக்கு முன்னுரிமையை அளிக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்கள், தொலைதூர வேலை மற்றும் சர்வதேச வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்தை நம்பியுள்ளன, இது ஹிந்தி மட்டுமே பேசும் நபர்களை விட கணிசமாக அதிகம் சம்பாதிக்கும் திறனை தனிநபர்களுக்கு வழங்குகிறது. மேலும், ஆங்கிலத்தில் திறமையான வணிக உரிமையாளர்கள் உலக சந்தைகளில் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்யலாம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கலாம் மற்றும் அவர்களின் வருவாயை அதிகரிக்கலாம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது உலக வர்த்தகம் மற்றும் வெளி நாட்டு முதலீட்டுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது, அங்கு ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆங்கிலத்திறன் என்பது ஒட்டுமொத்தம் இந்தியா மட்டுமல்ல தனி நபர்களின் நிதி வளர்ச்சிக்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். வேலைச் சந்தையில் வெற்றிபெற விரும்பும் எவருக்கும் ஒரு அத்தியாவசிய திறனாக ஆங்கில மொழி பேசுவது அவசியம். 

நிர்மலா சீதாராமன் பெரியாரைப் பற்றி கிண்டலடித்திருக்கிறார். அவர் தமிழ் நாட்டில் பிறந்ததால் தான் ஆங்கிலம் கற்று, இன்று ஒன்றிய அமைச்சரவையில் கொல்லைப் புற வழியாக அமைச்சராக இருக்கிறார். இவரை எந்த இந்திய மக்களும் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை அவர் மறந்து போனார்.

தர்மேந்திர பிரதான் கல்விக்கு நிதி தர முடியாது என்று சொல்வது அவருக்கு அழிவைத்தான் தருமே ஒழிய ஏற்றத்தை தராது. இவரைப் போன்ற பலரை தமிழ் நாடு பார்த்திருக்கிறது. தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, அது தர்மேந்திர பிரதான் அவர்கள் நம்பாத கடவுள். கடவுளை நம்பி இருந்தால், கடவுள் மீது நம்பிக்கை இருந்திருந்தால், தான் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்கான பலனைத் தரும் என்று அவருக்குப் புரிந்திருக்கும். ஆனால் அவர் கடவுள் மறுப்பாளர் போல, அதிகார வெறியில் நாடாளுமன்றத்தில் தமிழர்களை அவமதித்திருக்கிறார்.

தமிழ்க்கடவுளும், தமிழ் அன்னையும் அவருக்கான படிப்பினையைத் தந்தே தீரும் என நம்புகிறேன்.

தமிழைப் பற்றியும், தமிழர்கள் பற்றியும் அவதூறாகப் பேசும், அரசியல் நாகரீகம் இன்றி, தமிழருக்கு துரோகம் செய்த எத்தனையோ கோடானு கோடி ஆட்கள் கால வெள்ளத்தில் வேரும் வேறடி மண்ணும் இல்லாமல் அழிந்து போனார்கள். ஆனால் தமிழ் இன்றைக்கும் உலகை ஆண்டு கொண்டிருக்கிறது.

அவர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தமிழுக்கும், தமிழருக்கும் பதவி வெறியினால், பேராசையினால் செய்யும் ஒவ்வொரு துரோகச் செயலுக்கான பலனை நீங்கள் அனுபவிக்கமாட்ட்டீர்கள். நீங்கள் எதற்கான பதவி வெறி கொண்டு, பேசுகிறீர்களோ, எதற்காக உழைக்கிறீர்களோ அது இல்லாமல் போகும். 

தமிழ் மீதும், தமிழர் மீதும் அனாவசியமாக கை வைப்பதோ அல்லது பேசுவதோ அழிவைத்தான் தரும் என்று வரலாறு காட்டிக் கொண்டிருக்கிறது.



ஒவ்வொரு தமிழனின் கடமை என்ன?

சினிமா பார்ப்பது, அதை கொண்டாடுவது. அதி நிச்சயமாக சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்தே ஆக வேண்டும். கொசுறாக சூப்பர் ஸ்டாரின் *பயங்கரமான* ரசிகராக இருத்தல் வேண்டும். அதைப் பலரிடமும் சொல்ல வேண்டும்.

சினிமா பாடல்கள் கேட்பது - ஒரே இசையமைப்பாளரான, அதிமேதாவியான, இளையராஜாவின் இசை இல்லையென்றால் நாமெல்லாம் அழிந்தே போயிருப்போம் என்று சொல்லியே ஆக வேண்டியது கட்டாயம். கடமையும் கூட.

ஒவ்வொருவரும் தீபாவளி, பொங்கல் நாட்களில் அவசியம் சூப்பர் ஸ்டாரோ அல்லது உலக நாயகனோ அல்லது சூப்பர் ஸ்டாரின் மருமகன் நடிக்கும் படமோ, அல்லது உலகமகா இயக்குனர்கள் என யூடியூப் தோறும் கருத்துக்களைத் தெரிவிக்கும் கருத்துக் கற்பழிப்பாளர்களின் பேச்சின்படி அந்த இயக்குனர்கள் இயக்கும் ஹீரோக்களின் படங்களைப் பார்த்தே ஆக வேண்டும். தமிழ் நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரின் முதற்கடமை இது. படத்தைப் பார்த்ததும் சான்சே இல்லை, அடிபோலி, அசத்திட்டாரு என மட்டுமே சொல்ல வேண்டும். 

சினிமாவில் காட்டப்பட்டும் ஸ்டைல்படி முடிவெட்டிக் கொள்ள வேண்டும், சிகரெட்டை சுண்டி விட வேண்டும். அதே ஸ்டைலை செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் தமிழனே இல்லை என்று அவசியம் பிறரிடம் சொல்ல வேண்டும்.

கோவில்களில் பூசாரி பார்ப்பனரிடம் விபூதிக்கும், குங்குமத்துக்கும் அடித்துக் கொள்ள வேண்டும். அவசியமான ஒன்று நான் ஏன் கோவிலுக்குள் வந்து பூசை செய்யக்கூடாது எனக் கேள்வி கேட்கக் கூடாது.

யூடியூப்பில் ஹோட்டல் ரிவியூவ் பார்க்க வேண்டும். அந்தந்த ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டே ஆக வேண்டும். ஒரு ஸ்டில் எடுத்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டே தீர வேண்டும். ஒரு சில லைக்குகள் அவசியம் கிடைத்திட வேண்டும்.

இப்படி இன்னும் பல.... அதுகள் என்னவென்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.


Friday, March 7, 2025

India’s linguistic heritage faces extinction Tamil Nadu leads battle for linguistic rights

மீடியா இந்தியா குரூப் மூலம்  INDIA&YOU, BIZ@INDIA, INDIA OUTBOUND, INDES, DESTINO LA INDIA மற்றும் INDIEN FUR SIE ஆகிய பத்திரிக்கைகள் வெளியாகின்றன. இந்த பத்திரிக்கையில் இருந்து மசரட் நபி என்பவர் தற்போது தமிழ் நாட்டில் நடந்து வரும் இந்தி ஆதிக்கத்துக்கு எதிரான எனது கருத்தைக் கேட்டிருந்தார்.

அது இந்த இணைப்பில் வெளியாகி இருக்கிறது. படித்துப் பாருங்கள்.

https://mediaindia.eu/society/indias-linguistic-heritage-faces-extinction/



மாநில மொழிகளை அழித்து விட்டு ஒரே நாடு, ஒரே மொழிக் கொள்கையை திணிக்க முயலும் பிஜேபி அரசின் கொள்கைக்கு மறுப்பும், எதிர்ப்பும் தெரிவித்தே ஆக வேண்டும். தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய் மொழி மீதும் பற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் - தங்கள் எதிர்ப்பினை ஜனநாயக ரீதியில் அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது கடமை. ஆகவே எனது கருத்தை மேலே கண்ட இணைப்பில் ஆதாரங்களுடன் தெரிவித்திருக்கிறேன். படித்துப் பார்க்கவும்.

வளமுடன் வாழ்க..

07.03.2025

Tuesday, December 7, 2021

பொய் பிரச்சாரம் தமிழர்கள் ஜாக்கிரதை

துரோகிகள் எப்போதும் இருப்பார்கள். அவர்கள் கோட்சேக்களாக நம்முடன் பயணிப்பவர்கள். கோட்சேக்கள் போல அவர்கள் நல் மனிதர்களைக் கொல்வார்கள். கூடவே இருந்து கொண்டு கொலையும் செய்யும் படுபாதகர்கள். 

கொடுமையிலும் கொடுமையான ஒரு செயல் துரோகம். துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. உங்களில் பல பேருக்கு துரோக அனுபவம் நிச்சயம் இருக்கும். அரசாங்கங்களும், பெரிய பிசினஸ் சாம்ராஜ்ஜியங்களும் துரோகிகளால் தான் அழிக்கப்பட்டன. வரலாறு சொல்கிறது. 

முதலில் எனது பிளாக்கை படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது என்னவென்றால், தத்துவ ஞானி லாவோ ட்சு ( LAO TZU ) சொன்னதைத்தான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 

அவர் சொன்னதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் ஆடு, மாடுகள் போலத்தான் உங்கள் வாழ்க்கையும் என்பதை அறிந்து கொள்க.

இதோ லாவோ சொன்னது படமாக.


ஆம், சோஷியல் மீடியாக்கள் மூலம் நாம் மூளைச் சலவை செய்யப்படுகிறோம். நாம் நம்மை அறியாமலே பிறரின் எண்ணங்களுக்குள் கட்டுப்பட்டு விடுகிறோம். உண்மை எது? பொய் எது என்று அறியமுடியாமல் ஒரு வித கட்டுப்பாட்டு உணர்ச்சிக்குள் மூழ்கி விடுகிறோம்.

நயவஞ்சகத்தின் மொத்த உருவமான நரிகள் நம்மை அவர்களின் பொருளாதார உயர்வுக்கும், பதவி மோகத்துக்கும் நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நாம் பிறரின் அடிமையா இல்லையா என்பதை நாம் தான், நமக்குள்ளே அறிந்து தெளிதல் அவசியம். 

இல்லையெனில் இலக்கிய உலகில் பிறரை ஏமாற்றி உழைப்பை உறிஞ்சும் கேடுகெட்ட ஒரு ஈனனிடம் ஒரு சிறு கூட்டம் அடிமைப்பட்டு அடிமைகளாக கிடப்பது போல கிடக்க நேரிடும். 

தி.ஜ இவர்களைப் போன்ற வாசகர் வட்டங்களை உருவாக்கவில்லை. அவரின் படைப்பு மட்டுமே இன்றும் பேசப்படுகிறது. பசப்புகளையும், பாலியல் எழுத்துக்களயும் எழுதும் இவர்களைப் போன்றவர்கள் சமூகத்தின் கேடு. நான் யாரைச் சுட்டிக்காட்டுகிறேன் என்று உங்களுக்குப் புரியும்.

பல சினிமா ஹீரோக்கள் தங்கள் படங்களை வெற்றி பெற வைக்க ஒரு சில ஆட்களை வைத்து புரோமோக்களை செயற்கையாக உருவாக்கி பலனடைவார்கள். தனக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதாகவும், அப்படி ரசிகராக இருந்தால் சமூகத்தில் ஒரு அந்தஸ்து கிடைக்கும் என்பது போல, பொய் தோற்றத்தினை உருவாக்கி தன் சம்பளத்தை உயர்த்திக் கொள்வார்கள்.

இது போன்ற மாயா வித்தைகளைப் புரிந்து கொள்ளும் தன்மை காலத்தின் போக்கில் ஒவ்வொருவருக்கும் வந்து விடும். 

அப்போது நாம் நம் நேரத்தையும், பொருளையும் இழந்திருப்போம். எல்லாம் நம் கையை விட்டுப் போயிருக்கும்.

இப்பதிவில் இது போன்ற ஆட்களின் நயவஞ்சகத்தினை உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நான் எழுதி இருப்பது உண்மைதானா என ஆராய்ந்து பார்த்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள். 

ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக நம்புங்கள். நீங்கள் பிறரின் எண்ணங்களுக்கு கட்டுப்பட்டீர்கள் என்றால் நீங்கள் அவர்களின் சிறைவாசிகள் ஆவீர்கள். 

உடனே குடும்பம், நண்பர்கள், கடமை என்று நினைக்காதீர்கள். அது வாழ்வியல் கடமை. அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் ஆகியோருக்காக வாழ்வது என்பதுதான் வாழ்வியல் அறம். அது வேறு, இங்கு நான் எழுதி இருப்பது என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது.

மாமனார் ஒரு யுடியூப் வீடியோவை அனுப்பி வைத்தார். லோட்டஸ் சானலில் ஒருவர் திமுக கோவையில் 3200 ஏக்கரை விவசாயிகளிடமிருந்து பறிப்பதாகவும், விவசாயிகளை திமுக அழிப்பதாக கதறிக் கொண்டிருந்தார். அவர் ஒரு அம்பி என்பது தான் விசேடம். 

ஏன் அலறிப் புலம்பி பொய்களை உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று பார்க்கலாம்.

அடியேன் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன் 20 வருடமாக. லீகல் அட்வசைராக பல பெரும் நிறுவனங்களுக்கு பணியும் செய்து வருகிறேன். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நிறுவனம் கோவையில் சினிமா ஸ்டூடியோ அமைக்க இடம் வாங்கித் தருமாறு என்னிடம் கேட்டிருந்தார்கள்.

அப்போது அன்னூர் தாலுக்காவில் உள்ள பொகலூர், அக்கரை செங்கம்பள்ளி,  குப்பனூர், ஓதிமலை, வடக்கலூர் கிராமங்களிலும், மேட்டுப்பாளையம் தாலுக்காவில் இலுப்ப நத்தம், பெள்ளபாளையம் கிராமங்களிலும் இடம் தேடினேன். சுமார் 150 ஏக்கருக்கும் மேல் அந்தப் பகுதில் இண்டஸ்டரியல் நோக்கத்துக்காக அடிசனல் இண்டஸ்டரியல் பார்க் தமிழ்நாடு பிரைவேட் லிமிடெட் நிலம் இருக்கிறது. 

சுமார் 2000 ஏக்கருக்கும் மேல் ஒரு சில தனியார்கள் நிலங்களை வாங்கி வைத்திருந்தார்கள். அவர்களிடமிருந்து விபரங்களைப் பெற்று விலை பேசி தொடர்புடைய நிறுவனத்திற்கு அளித்திருந்தேன். அவர்கள் நேரடியாக அப்போதைய அரசிடம் திரைப்பட நகருக்கு அனுமதி கேட்க, அரசு மறுத்து விட்டது. அதன் பிறகு அந்த நிறுவனம் அந்த திட்டத்தினைக் கைவிட்டது. 

தற்போது அரசு அறிவித்த இந்த திட்டம் உள்ள இடம் இப்போதும் தனியார் வசம் உள்ளது. அந்த இடத்தில் தான் தமிழக அரசு இண்டஸ்ட்ரியல் பார்க்கை கொண்டு வர அறிவித்திருக்கிறது. ஏற்கனவே தனியார் நிறுவனங்கள் வாங்கி வைத்திருக்கும் இருக்கும் இடம் அது. விவசாயிகளிடமிருந்து தனியார் நிறுவனங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தினை கிரையம் பெற்று வைத்திருக்கின்றார்கள். அவர்களிடமிருந்து தான் அரசு நிலத்தினை கிரையம் பெற்று இந்த திட்டத்தினைக் கொண்டு வர உள்ளார்கள். அவ்வாறு வந்தால் கோவை பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டால் என்ன ஆகும்? மக்கள் நலன் அடைவார்கள். 

இந்தத் திட்டத்தினால் மக்களுக்கு நன்மை கிடைத்து விட்டால் பிஜேபிக்கு பிடிக்குமா? பிடிக்காது அல்லவா? டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியை கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்.

District administration to acquire 3,800 acres for industrial park | Coimbatore News - Times of India (indiatimes.com)

அம்பியும் ஆடு புகழ் அண்ணாமலையும் ஏதோ தமிழக அரசு இப்போதுதான் நிலத்தினை கையகப்படுத்த இருப்பதாக பொய்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

கொடிசியா கோவில்பாளையம் பகுதியில் டிபன்ஸ் காரிடாருக்காக இண்டஸ்ட்ரியல் நிலம் வாங்கி, அனுமதி பெற்ற போது அந்த இடம் கொடுத்தவர்கள் விவசாயிகள் இல்லையா? நிதியமைச்சர் வந்து ஓப்பன் செய்து வைத்தாரே அப்போது இந்த அம்பி எங்கே போனார்? இப்போது கதறுகின்றார், நடிக்கின்றார், ஊளையிடுகின்றார். 

இண்டஸ்ட்ரியல் பார்க்கினால் பல கோடி வருமானமும், வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று பெருமை பேசிய போது, அந்தப் பகுதிக்கு நிலம் கொடுத்தவர்கள் விவசாயிகள் என்பது மறந்து போனதா இவர்களுக்கு? 

இவர்கள் செய்தால் அது நல்லது, அதுவே இன்னொரு கட்சிக்காரர் செய்தால் அது விரோதம், குற்றம் என்பார்கள். இவர்கள் தான் மக்களுக்கு நன்மை செய்யப் போகின்றார்களாம். 

இதுவரை செய்தது என்ன என பார்த்தால் ஆட்சிக்கு வந்து இது நாள் வரை கோடிக்கணக்கானவர்கள் வேலை இழந்தது மட்டும் அல்ல லட்சக் கணக்கான நிறுவனங்கள் அழிந்தும் போயின.

ஒட்டு மொத்தம் இந்தியாவில் 9 சதவீதம் வேலை இழப்பு என்று பத்திரிக்கைச் செய்திகள் புள்ளி விபரங்களை அடுக்குகின்றன. 

அதாவது பரவாயில்லை. மீத்தேன் வாயு கிணறுகளுக்கு நெடுவாசலில் என் நிலத்தையும் ஆட்டய போடப்பார்த்ததே பிஜேபி அரசு அப்போது அவர்களுக்குத் தெரியாதா எங்கள் பகுதி நிலமெல்லாம் விவசாயம் நடக்கிறது என?

சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுத்தார்களே அப்போது தெரியாதா அது விவசாய நிலம் என்று.

அணைப்பாதுகாப்பு சட்டம் 2021 நிறைவேற்றி இருக்கிறதே பிஜேபி. எந்த ஒரு கட்சியின் கோரிக்கையை கூட ஏற்காமல் அச்செயலைச் செய்து உள்ளதே. அச்சட்டத்தின் காரணமாக மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகளை ஒன்றிய அரசு கைப்பற்றி மேலாண்மை செய்யவிருக்கிறதே அது எவ்வளவு பெரிய அக்கிரமம்? 

கல்வியை மாநிலங்களின் அதிகாரத்தில் இருந்து நீக்கி தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வருடம் தோறும் 20 மாணவர்களை கொலை செய்து வருகிறதே ஒன்றிய அரசு அது எவருக்கும் தெரியவில்லையா?

48,000 கோடி ரூபாயை வரி செலுத்துவர்கள் தண்டமாக கட்ட வேண்டும். ஏன் தெரியுமா? இந்தியன் ஏர்லைன்ஸ் கடன் அது? டாட்டாவுக்கு 18,000 கோடிக்கு அதை விற்று விட்டார்கள். ஆனால் கடன் தொகையினை நாம் கட்ட வேண்டும். 

மிஸ்டர் பிரதமர் மோடியா சம்பாதித்து 48,000 கோடி கடனைக் கட்டப்போகிறார்? 48,000 கோடி நஷ்டக் கணக்கு நம் தலையில். அதையும் நாம் தான் அழுது தொலைக்கனும்.

இப்போது அணைப்பாதுகாப்புச் சட்டம் 2021 மூலம் தமிழகத்தை சுடுகாடாக்கி இன்னொரு பீகார், உத்திரப்பிரதேசம் போல மாற்றணும் என்ற நோக்கில் ஒரு அம்பிக்கூட்டமும் அவர்களின் அல்லக்கைகள் முழு மூச்சாக வேலை செய்து வருகின்றார்கள். 

இதோ இன்றைய தினமணியில் வெளியான ஒரு கட்டுரை. படித்துப் பாருங்கள். எப்படியெல்லாம் சுற்றிச் சுற்றி தமிழ் நாட்டினைக் குறி வைத்து அழிக்க முயல்கிறார்கள் இவர்கள் என்று.

இவர்கள் எல்லோரும் எப்படியானவர்கள் என்றால் இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்ட போது, பிரிட்டானிய அரசிடம் வேலை செய்து தன் சொந்த உறவினர்களைக் காட்டிக் கொடுத்த அக்கிரமக்காரர்கள் போன்றவர்கள். இவர்கள் தான் சமூகத்தின் கேடு. ஆனால் இவர்கள் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள் பயிர்களுக்குள் இருக்கும் களைகள் போல.

இந்தியா டுடே திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் இந்தியாவில் நம்பர் 1 தமிழகம் என செய்தி வெளியிடுகிறது. அம்பிகளும், அல்லைக்கைகளும் தூங்காமல் அலறிப் புலம்புகின்றனர்.

ஆடு புகழ் அண்ணாமலை பொய்யாகப் பேசித் திரிகின்றார். மக்களுக்கு நன்மை செய்யும் ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசுகிறாரா என்றால் இதுவரை இல்லை.

பிஜேபி அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறார்கள். அவர்களே விலை உயர்வுக்குப் போராட்டமும் நடத்துகிறார்கள். துக்ளக் ஆட்சியில் இவர்கள் நடத்தும் நயவஞ்சக நாடகங்களை அறிந்து மக்கள் தெளிவு பெறுதல் வேண்டும்.

கோவில்களை நாம் எப்போது தமிழர்கள் கைக்கு மீட்கின்றோமோ அன்றிலிருந்து தமிழ் நாட்டுக்கு அமோக வளர்ச்சி உண்டாகும் என்பதை எவரும் மறந்து விடாதீர்கள். பணம் கொட்டும் ஹோட்டல்களை தமிழர்கள் நடத்துகின்றார்கள். கோவில்களும் நம் கட்டுக்குள் நாமே நேரடியாக அர்ச்சனை செய்யும் நாட்கள் வரத்தான் போகின்றது. அதற்காகத்தான் அலறுகின்றார்கள். 

எவரினை மன்னித்தாலும் இந்த அல்லக்கைகளையும், துரோகிகளையும் எப்போதும் மன்னித்து விடவே கூடாது. ஏனென்றால் அதற்கு அவர்கள் தகுதியே இல்லாதவர்கள். இவர்களை மறக்கவும் கூடாது.

இனி இந்தியா டுடே செய்தி :  Thanks to India Today Magazine.


தமிழர்கள் தமிழ் நாட்டினை நம் சந்ததியினருக்கு வளமுடம் கொடுத்துச் செல்ல வேண்டும். எப்படி யூதர்கள் ஹிட்லர் அவர்களை அழித்த போதும், தம் கலாச்சாரத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வழி செய்து இப்போது தங்களுக்கு என ஒரு தனிநாட்டினை உருவாக்கி ஆண்டு வருகிறார்களோ அவர்களைப் போல தமிழர்களும் ஜாதி இன வேறுபாடுகளை மறந்து ஒன்று படல் அவசியம். 

நாம் மட்டும் வளராமல் இந்தியாவை தமிழர்கள் ஆள வேண்டும். மீண்டும் ஒரு காமராஜர் வர வேண்டுமென்பதை நினைவில் கொள்க. 

தர்மம், அறம் பற்றி பாடம் எடுத்தவர்கள் நாம் என்பது மறந்து விடல் ஆகாது. தமிழ் தான் நம் மதம். தமிழ் தான் நம் ஜாதி. 

வாழ்க தமிழ், வாழ்க தமிழர்.

* * *