குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, March 28, 2023

நிலம் (107) - நத்தம் நிலங்கள் அரசுக்கு சொந்தமில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நத்தம் நிலத்தினை அரசு உரிமை கொண்டாட முடியாது. அரசு என்றால் அரசு அமைப்புகள் எல்லாவற்றையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கார்ப்பொரேஷன் ஆகியவை எந்த நிலையிலும் நத்தம் நிலத்தில் வசிப்பவர்களை வெளியேறக்கோரி உத்தரவு இட முடியாது.

ஆனால் சமீப காலமாக, ஊராட்சி தலைவர்கள் பலர் முறைகேடாக, லஞ்சம் வாங்கும் வி.ஏ.ஓக்கள் மூலம் தொடர்பில்லாதவர்களின் பெயர்களில் பட்டாக்கள் வாங்கி விடுகிறார்கள் என்றும் படிக்காத பாமரர்களை, நத்தம் புறம்போக்கு என்றுச் சொல்லி, நிலத்திலிருந்து வெளியேற்றி வருகிறார்கள் என்றும் பலர் எனக்கு அழைக்கும் போது தெரிந்து கொண்டேன். பல வி.ஏ.ஓக்கள் நத்தம் நில பட்டாக்களில் பல்வேறு முறைகேடுகளைச் செய்கிறார்கள் என்றும் தெரிந்தது. 

இது பற்றிய ஏதேனும் உதவி தேவைப்பட்டால், என்னை அணுகலாம். ஆலோசனை கட்டணம் உண்டு. 

நத்தம் நிலப்பிரச்சினை வந்தால் கவலைப்பட வேண்டாம். 

சென்னை உயர் நீதிமன்றம், நத்தம் நிலமெடுப்பிற்காக நில உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் வழங்கிய உத்தரவை ரத்துச் செய்தது. காரணம் நிலமெடுப்பின் போது கூட, அந்த நிலம் நத்தமாக இருக்கும் போது, அரசால் ஒன்றும் செய்யவே முடியாது.

வழக்கைப் பற்றிப் பார்க்கலாம்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக பூந்தமல்லியில் 456 சதுரமீட்டர் நிலத்தை எடுக்க முடிவு செய்து, ஆதிதிராவிடர் நத்தம் வகையைச் சேர்ந்த அந்த நிலத்தை காலி செய்யும்படி, அங்கு வீடு கட்டி வசித்து வந்த சாக்ரடீஸ் உள்பட ஐந்து பேருக்கு தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்தார். தாசில்தாரின் இந்த உத்தரவை எதிர்த்து ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஆதி திராவிடர் நத்தம் நிலம் என்பது அரசுக்கு சொந்தமான நிலமல்ல. அங்கு வசிக்கும் மனுதாரர்களை காலி செய்யக்கூறி, தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருப்பினும் பொது பயன்பாட்டுக்கு நிலம் தேவைப்படுவதால் உரிய இழப்பீடு வழங்கும்பட்சத்தில் நிலத்தை வழங்க தயாராக இருக்கிறோம்" என்று வாதாடினார்.

தமிழக அரசு மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், "அந்த நிலம் ஆதிதிராவிடர் நத்தம் நிலமாக இருந்தாலும், மனுதாரர்களுக்கு பட்டா ஏதும் வழங்கவில்லை என்றும் நத்தம் நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருக்க மட்டுமே முடியும். ஆனால் இவர்கள் கடைகள் கட்டி மாதம் 70 ஆயிரம் ரூபாய் வாடகை பெற்று நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துகிறார்கள் என்றும் எனவே, நிலத்தில் இருந்து மனுதாரர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் நத்தம் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும். நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது" என்றும் வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜா மற்றும் பரதசக்ரவர்த்தி ஆகியோர், ஆதிதிராவிடர் நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அங்கு வசித்தவர்களை, ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் வெளியேற்ற முடியாது எனக் கூறி, நிலத்தை காலி செய்யும்படி தாசில்தாரர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக வழங்க தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளதால், உரிய இழப்பீட்டை வழங்கி நிலத்தை அரசும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் பெற்றுக் கொள்ளலாம். உரிய சட்ட விதிகளை பின்பற்றி, நிலத்தை கையகப்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு 14.03.2023 அன்று வழங்கப்பட்டது. வழக்கு எண் : W.P.31688 of 2022 and W.M.P.Nos.31131 & 31132 of 2022.



ஆகவே நத்தம் நிலங்கள் குறித்து அரசோ அல்லது அரசு அமைப்புகளோ எந்த உத்தரவும் இடமுடியாது என்று அறிந்து கொள்க.

லீகல் டிரேசிங்க், சர்வே மற்றும் கோர்ட் வழக்குகளில் வெற்றி பெற ஆலோசனை பெற அழைக்கவும். மிகச் சரியான தீர்வு வழங்கப்படும்.

Friday, March 24, 2023

நாய் - மனிதன் - கடவுள்

நாய்கள் தங்களது வயிற்றுக்கு ஒவ்வாத உணவை உண்டு விட்டால், அருகம்புல்லையோ அல்லது ஏதோ ஒரு புல்லையோ தின்று, செரிமானத்தைச் சரி செய்து கொள்ளும். இதற்காக நாய் எந்த நீட் தேர்வும் எழுதவும் இல்லை. மெடிக்கல் கல்லூரியிலும் படிக்கவில்லை. 

அதற்கு அந்த அறிவு எப்படி வந்தது? ஐந்தறிவு பிராணியான நாய்க்கு, உடல் நோய் கண்டால், நோய்க்கு உகந்த மருந்தினைக் கண்டுபிடித்து உண்ணும் அறிவு எங்கிருந்து வந்தது? 

என்றாவது யோசித்தீர்களா? இதற்கு விடை என்ன தெரியுமா?

நாய்கள் இயற்கையுடன் இருக்கின்றன. அவை இயற்கையுடன் வாழ்கின்றன. வெள்ளிங்கிரி சுவாமி ஆஸ்ரமத்தில் பப்பி என்றொரு பெண் நாய் இருந்தது. அதற்கு ஏதாவது கொடுத்தால், அதை எடுத்துக் கொண்டு போய், பள்ளம் தோண்டி மண்ணைப் போட்டு மூடி வைத்து விட்டு வரும். நான் நேரில் கண்டது. பசிக்கும் போது, அங்கு வந்து படுத்துக் கொண்டு, எடுத்துச் சாப்பிடும். இந்த அறிவு அதற்கு எங்கணம் வந்தது?

அவைகள் இயற்கையுடன் வாழ்கின்றன.

ஆனால் மனிதனுக்கு நோய் வந்தால் அலோபதி, ஹோமியோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், அக்குபஞ்சர், வர்மம் போன்று பல வகையான மருத்துவத்தை எடுக்கிறான். நாயை விட ஆறறிவு கொண்ட மனிதனுக்கு ஏன் இந்த அறிவு இல்லை. நோய் தீர ஏன் பிறரை நாடுகிறான்?  அவனுக்கே அவன் உடம்பு தனியாகிப் போனது ஏன்? எப்போதேனும் யோசித்திருக்கின்றீகளா?

இதற்கொரு விடை காணலாம்.

முதலில் மதம் என்றால் மதம் தான் என்பதை அறியுங்கள். எனக்கு பல சாமியார்களுடன் சிறு வயதிலிருந்து பழகும் நாட்கள் இருந்தன. அவர்கள் மூலம் நான் கண்டது, கேட்டது, அறிந்தது எல்லாம் - கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதுதான். அதைத்தான் திருமூலரும் சொல்லி இருக்கிறார். 

மனிதனே கடவுள் என்பது தான் என் நினைப்பு. 

என்னில் இருப்பதுதான் உங்களிடமும் இருக்கிறது. நீங்கள் யாரோ நானும் அதே. உங்களையும் என்னையும் பிரிப்பது நம் அறிவு. 

உடலுக்கு வலி தெரியாது. மனதுக்குத்தான் வலி தெரியும் அல்லவா?

மதம் என்றால் மதம் தான். மதப்புராணத்தையெல்லாம் தூக்கி ஓரமாக வைத்து விடுங்கள். ஒரு சில விஷயங்களைப் புரிந்து கொள்வதற்காக பைபிளை எடுத்துக் கொள்வோம்.


பைபிளில் சொல்லப்பட்டபடி, ஆதாமை ஏவாள் தோட்டத்திலிருக்கும் ஆப்பிளை எடுத்து உண்ணச் சொல்வாள். ஆதாம் ஆப்பிளை உண்ட பிறகு - இருவரும் நிர்வாணமாக இருப்பதை அறிந்து ஆடை உடுத்த ஆரம்பித்தனர். அதாவது இருவருக்கும் அறிவு வந்து விட்டது என்று படித்திருக்கிறோம்.

அதேதான்..

இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தேன். ஆம், மனிதன் இயற்கையிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டுவிட்டான். அது எப்படி, எப்போது நிகழ்ந்தது என்று இன்றும் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். சரியான, துல்லியமான தகவல்கள் இன்னும் கிடைத்தபாடில்லை. 

கடவுள் யாரையும் படைப்பதும் இல்லை, கணக்கு வழக்கு பார்ப்பதும் இல்லை, வரவு செலவு கணக்குகள், பாவம் புண்ணியம் போன்றவைகள் எதையும் பார்ப்பதில்லை. 

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர் கையில் இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு வாழத்தான் தெரியவில்லை. ஒன்று எதிர்காலத்தில் வாழ்கிறான். இல்லையெனில் இறந்தகாலத்தில் வாழ்கிறான் என்கிறார்கள் அறிவாளர்கள்.

மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பினைத் துண்டித்ததில் பெரும் பங்கு வகிப்பது மனிதனின் அறிவு. அதை மனம் என்கிறார்கள். 

இதை மீண்டும் அடைவது எப்படி? அதைக் கண்டுபிடித்து விட்டால் இன்று நம்மிடையே வாழும் ஸ்ரீராம், ஜோதி சுவாமி போல மாறலாம்.

அவர் பெயர் ஸ்ரீராம். ஆந்திராவில் வசிக்கிறார் என்று நினைவு. இவரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை நடிகர் ராஜேஷ் யூடியூப் சேனலில் பார்த்தேன். அவர் காலத்தின் முன்பும் பின்பும் சென்று வருவதை ஒருவர் பகிர்ந்து கொண்டார். 

அதாவது அவர் தன் நண்பரிடம் ஒரு கவரைக் கொடுத்து, ஒரு வாரம் சென்ற பிறகு பிரித்துப் பார்க்கும் படி சொல்லி இருக்கிறார். அவ்வாறு பிரித்துப் பார்த்த போது, கடந்த வாரத்தில் நண்பருக்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அந்தக் கவருக்குள் இருந்த காகிதத்தில் எழுதி இருந்ததாம். இது உண்மை என்றால் எதிர்காலத்துக்குள் சென்று வந்திருக்கிறார் ஸ்ரீராம் என்று புரிந்து கொள்ளலாம்.

ஜோதி சுவாமி பல முறை விடிகாலையில் பேசும் போது, தூக்கத்தின் போது அவர் கேட்ட ஒலிகள், அசைவுகள், ஆட்கள் மீண்டும் தென்படுகிறார்கள் ஆண்டவனே என்று சொல்லி இருக்கிறார். எதிர்காலத்துக்கும் இறந்தகாலத்துக்கும் சென்று வருகிறார் என்று இப்போது புரிகிறது.

ஒரு தடவை சுவாமியும் நானும் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது, தேய்த்துக் குளிக்க ஏதாவது கிடைத்தால் பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த போது, புத்தம் புது பீர்க்கங்காய் குடலைக் கொடுத்தார். தேய்த்து விட்டு செடியோரம் வீசிய போது கண் முன்னாலே மறைந்து போனது கண்டு மண்டை காய்ந்தேன். அப்போதெல்லாம் உணர்ந்து கொள்ளும் தெளிவு எனக்கு வரவில்லை.

இதே போல ஸ்ரீராம் அவர்களும் போட்டோவில் இருந்து எலுமிச்சை பழத்தை எடுத்ததாகப் பேட்டியில் சொன்னார்கள். இது எப்படி சாத்தியமானது என்ற ரகசியம் தெரிந்து விடின் மனிதர்கள் எவரும் துன்பத்தில் உழன்று கிடக்கமாட்டார்கள்.

இயற்கையினுடனான தொடர்பினை மனிதன் இணைத்துக் கொள்வதற்கான வழி கிடைத்து விட்டால் எல்லாம் சுகமே.

இது பற்றி யோசித்துப் பாருங்கள். 

அவ்வளவுதான்.

Wednesday, March 15, 2023

பேராசியர்களுக்கு தகுதி குறைப்பு - யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷனின் அக்கிரமம்

இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வி என இந்தியா மாநிலங்களின் சுயாட்சிக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கும் இந்திய ஒன்றிய அரசின் கீழ் இயங்கும்  யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷனின் சேர்மன் மமிடாலா ஜகதீஷ் குமார் - ராவ்  ஒரு  நயவஞ்சகமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 

ஜகதீஷ் குமார் மீது 2017ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு கல்லூரியில் பணி செய்து வந்த சைத்ய பிரபா தாஸ் என்ற தலித் அசோசியட் புரபசரை, புரபசராக தகுதி உயர்த்த முடியாது என்றக் குற்றச்சாட்டு இருக்கிறது. ஜகதீஷ் குமார் ராவ் கம்யூனிட்டியைச் சேர்ந்தவர் என்றும், அவர் சாதி பார்த்துதான் தகுதி உயர்வு வழங்குகிறார் என்று கேரவன் மேகசின் கட்டுரை எழுதி இருக்கிறது. 

படிக்க மாணவர்களுக்கு பல நுழைவுத் தேர்வுகளை நடத்தி, அவர்களின் கனவுகளுக்கும், வாழ்விற்கும் வாய்க்கரிசி போட்டுக் கொண்டிருக்கிறது இந்திய ஒன்றிய அரசு பல ஆண்டுகளாக என்று எல்லோருக்கும் தெரியும். 

ஏழை மாணவர்கள் கல்வி கற்று, உயர் பதவிகளை அடைந்து விடக்கூடாது என்ற கொள்கைக்காக, கீழ்சாதி என்று காலம் காலமாக சொல்லிக் கொண்டிருக்கும் நாதாரிகளின் மனம் மகிழும் வண்ணம், ஏழைகளான இந்திய மக்களின் புதல்வர்களின் கல்வியை தடுப்பதற்காக, நரித்தனமாக நுழைவுத் தேர்வுகளை தகுதி என உருவாக்கி வைத்திருக்கிறது ஒன்றிய அரசு. 

பல மொழி, பல வகையான நிலப்பரப்புகள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒன்றிய மாநிலங்களின் கல்வியில் தலையிட்டு மாணவர்கள் பலரைக் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அனிதா ஒரு எடுத்துக்காட்டு.

கல்லூரியில் புரபஸராக தகுதி உயர்ந்த முன்பு இருந்த பி.ஹெச்.டி படிப்பு என்ற தகுதி தேவையில்லை என்கிறார் ஜகதீஷ் குமார் சேர்மன். 

மாஸ்டர் டிகிரி படித்தாலே போதும், புரபஸர். பி.ஹெச்.டி எல்லாம் தேவையில்லையாம்.

மாணவர்கள் படிக்க நுழைவுத் தேர்வு தகுதி எனில் கல்லூரி புரபசர்களுக்கு தகுதி தேவையில்லையா? 



Thursday, February 2, 2023

கவிஞர் முத்துலிங்கத்திற்கு கடுமையான கண்டனம் - தினமணி கட்டுரை

தமிழ் நாட்டு அரசின் அந்த நாள் அரசவைக் கவிஞர், இந்த நாளில் எவரும் அறியா கவிஞரான முத்துலிங்கம் 02.02.2023 தினமணியில் ’மொழிப்போர் தியாக வரலாறு’ என்ற கட்டுரையை எழுதி இருக்கிறார்.

கவிஞர்களுக்கு இப்போது புகழும் இல்லை, பெரிய கவிஞர்கள் என்ற பட்டமும் கிடைப்பதில்லை. ஏனென்றால் முன் காலத்தில் சமுதாய, அரசியல், வாழ்வியல் சீரழிவுகளை கூர்மையான வார்த்தைகளால் கவிதை நடையில் எழுதவென்றே ஒரு கூட்டம் இருந்தது. கவியரங்கங்கள் கூட நடத்தப்பட்டு, அவர்களுக்கு மரியாதையும், பொன்னாடையும், புகழாடையும் வழங்கப்பட்டன.

சினிமாக்களில் பாடல்கள் எழுதினார்கள். நல்ல சம்பாத்தியமும் கிடைத்தன. மக்களிடையே புகழும் கிடைத்தன. அதெல்லாம் ஒரு காலம்.

இப்போது வலிகளை, இன்பங்களை, துயரங்களை, சீர்கேடுகளை, அக்கிரமங்களை படித்த ஒவ்வொருவரும் எழுதி விடுகிறார்கள். அதாவது கவிஞர்களானார்கள் மக்கள். தனிப்பட்ட முறையில் இனி கவிஞர்கள் என்று சொல்ல முடியாது. 

அந்த வகையில் நாதியற்றுப் போன கவிஞர் முத்துலிங்கம், எதுக்காகவோ ஆசைப்பட்டு, அல்லது சொரிந்து விடுவதற்காகவும், தன் இருப்பை யாருக்கோ தெரிவிக்க வேண்டியும் பொய்களை அவிழ்த்து விட்டு, அதுவும் பார்ப்பனியர் சாதி வெறி பிடித்தலையும் தினமணியில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ் இல்லையாம். ஆங்கிலம் தான் இருக்கிறதாம். கவிஞர் கவிதைக்கு வேண்டுமானால் பொய் புனையலாம். இப்போது, அதுவும் தற்போதைய தமிழ் நாட்டு மக்களிடம் போகிற போக்கில் தமிழே தமிழ் நாட்டில் இல்லை என்பது போன்ற ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்.

பரிதாபத்துக்குரியவரானார் கவிஞர் முத்துலிங்கம். தமிழ் நாட்டில் மாணவர்கள் தமிழில் தான் படிக்கிறார்கள். ராஜாஜி மாணவர்களை ஹிந்தியில் படிக்க கட்டாயச் சட்டம் கொண்டு வந்தார். அதை எதிர்த்துதான் மொழிப்போர் நடத்தப்பட்டது. 

மொழி வழி மாநிலங்கள் பிரித்த போது, அதன்படி ஆட்சி நடத்தப்படுகிற போது, எதற்காகத் தமிழர்களின் பிள்ளைகள் ஹிந்தியில் பாடம் படிக்க வேண்டும் என கவிஞர் சொல்லுவாரா? 

தமிழ் நாடு அரசு தமிழில் தான் சட்டங்கள் வெளியிடுகிறது. ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க ஆங்கிலத்தில் சட்டங்கள் வெளியாகின்றன. ஒன்றிய அரசுப் பணியிலிருந்து மா நிலப் பணிக்கு வரும் அதிகாரிகளுக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அரசு சட்டங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதால், ஒன்றிய அரசின் இணைப்பு மொழியான ஆங்கிலத்திலும் சட்டங்கள் வெளியிடப்படுகின்றன.

தமிழில் படித்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வசதியாக மறந்து போனார் முத்துலிங்கம்.

நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழைக் கொண்டு வர முயற்சி செய்தபடியே தான் இருக்கிறார்கள். ஆனால் ஒன்றிய அரசு தமிழை வளரவே விடக்கூடாது என்பதற்காக அனுமதி தரவில்லை. இது ஏதும் தெரியாத தற்குறி இல்லை கவிஞர். ஆனாலும் பொய்யாக எழுதுகிறார்.

தமிழ் நாட்டில் மாணவர்கள் தமிழில் படிக்கிறார்கள். ஆங்கிலமும் படிக்கிறார்கள். ஆங்கிலம் படித்த காரணத்தால் உலகெங்கும் பணி செய்கிறார்கள். பல நிறுவனங்களின் தலைவர்களாக இருக்கிறார்கள். ஹிந்தி படித்து விட்டு, தமிழ் நாட்டுக்கு வேலைக்கு வரவில்லை.

சுமார் 80 வயதான நிலையில் செய்நன்றி மறந்து போய் இப்படியான பொய்களை பொது வெளியில் அவிழ்த்துக் கொட்டுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று தமிழன் என்ற வகையில் அவரைக் கேட்டுக் கொள்கிறேன். 

இந்தக் கட்டுரையின் இறுதியில் கவிஞர் முத்துலிங்கம் தெரிவித்திருக்கும் கருத்துக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி வன்மம் கொண்டு தமிழர்கள் மீதும் தமிழின் மீதும் சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. காலம் விரைவில் பதில் சொல்லும். 

கவிஞர் முத்துலிங்கம் எழுதிய - மொழிப்போர் தியாக வரலாறு கட்டுரை. இக்கட்டுரையின் இறுதி பத்தி கீழே. எவ்வளவு வன்மம் பாருங்கள் இவருக்கு?


நன்றி : தினமணி


Tuesday, January 31, 2023

ரஜினிகாந்த் பெயரைச் சொன்னால் குற்றம் - ரஜினியின் அறிக்கை

ரஜினிகாந்த் - பெயர் வைத்தது பாலச்சந்தர். சிகரெட் ஸ்டைலை படத்தில் பயன்படுத்தியது அவரே. ரஜினியின் ஒவ்வொரு ஸ்டலையும் யாரோ ஒரு இயக்குனர் உருவாக்கினார். அவருக்கான வசனத்தையும் யாரோ எழுதினர். எல்லாவற்றிலும் பலன் பெற்றது ஒரே ஒரு ஆள் - ரஜினிகாந்த். இறைவன் அவருக்கு கொடுத்திருக்கும் வரம் என்கிறார்கள். அது அப்படித்தான்  இருக்க வேண்டும். இறைவனின் செயலின் காரணத்தை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

பார்ப்பான் ரங்கராஜ்பாண்டே (கோவிலில் பூசாரி வேலை செய்து வந்தவர்களுக்கு பாண்டே என்று பெயர் வைப்பார்களாம்) இது பற்றி ஆராய வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் குடும்பம் நான்கு தலைமுறையாக நாயனம் வாசித்த்தால் தான் முதலமைச்சராக இருக்கிறார் என தர்மத்தின் பாதையைக் கண்டுபிடித்த புத்திசாலி ரஜினியையும் ஆராய வேண்டும். அதே போல பிரதமர் மோடி எப்படி பிரதமர் ஆனார் என்று கண்டுபிடித்தால் பிபிசிக்கு பதில் அளிக்கலாம். ஆகவே பார்ப்பான் ரங்கராஜ் பான்டே பூசாரி அது பற்றியும் ஆராய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ரஜினிக்காந்துக்காக ஒரு வக்கீல் பப்ளிக் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். கீழே இருக்கிறது பார்த்துக் கொள்ளுங்கள். 

ரஜினியின் ஃபேன் என்றுச் சொல்ல - இனி ரஜினிக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்க. ஒரு டிவி நிகழ்ச்சியில் வருகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது கமர்ஷியல் நிகழ்ச்சி அல்லவா? அந்த நிகழ்ச்சியில் நீங்கள் யார் ரசிகர் என்று கேள்வி கேட்கப்பட்டால் ரஜினிகாந்த் என்றுச் சொல்லக்கூடாது. ஏனென்றால் அப்படிச் சொன்னால் அது சட்டப்படி தவறு. அந்த நிகழ்ச்சி பணம் சம்பாதிக்கும் அல்லவா? கமர்ஷியல் நோக்கில் தன் பெயரைப் பயன்படுத்த ரஜினி காந்த் அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்கிறது அவர் வெளியிட்ட அறிக்கை.

ஆகவே நீங்கள் ரஜினி ரசிகர் என்று கூடச் சொல்லக்கூடாது. ரஜினி காந்த் அவர்கள் தன் ரசிகர்களுக்கு செய்யும் தொடர் நன்மைகளில் இதுவும் ஒன்று என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்.

”என்னங்க ரஜினி இப்படியெல்லாம் செய்கிறார்? அவருக்கு உருவமும், வாழ்க்கையும் அளித்த தமிழர்கள் - சம்பாதிக்கவே கூடாதா? இப்படியும் ஒரு தற்குறி இருப்பாரா என்றெல்லாம் சொல்லி வருத்தப்பட்டார் ஒருவர். 

”கிராமப்புற மேடை நடிகர்கள், பாடகர்கள் இனி என்ன செய்வார்கள்?” என்று கேட்டார்.

சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேறொருவருக்கு மாற்ற வேண்டியதுதான். சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிக்கு மட்டுமே குத்தகைக்கு எவரும் கொடுக்கவில்லை. ஆகவே இனி எவரையாவது சூப்பர் ஸ்டார் என்றுச் சொல்லிக் கொள்ளுங்கள். வக்கீல் கேஸ் போட்டால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றுச் சொல்லி வைத்தேன். சமாதானம் ஆகவில்லை அப்படியும் அவர்.

செய்நன்றி அற்றவர் என்று எவரும் ரஜினிகாந்த் அவர்களைச் சொல்லி விடக்கூடாது. அவர் மிகவும் நல்லவர். வல்லவர், திறமைசாலி மற்றும் மாபெரும் தியாகி. 

ஆகவே அவரின் அடுத்தடுத்த படங்களையும் பிரமோட் செய்யுங்கள். ஆனால் ஒன்று ரஜினிகாந்த் என்று பெயரை எங்கும் பயன்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாய் இருங்கள். 

டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும், யூடிப்பிலும் பணம் சம்பாதிக்கிறீர்கள் அல்லவா? இனி ரஜினிகாந்த பெயரை மேற்கண்டவற்றில் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது, இந்த அறிக்கையின் படி சட்டப்படி தவறு. ஆகவே வம்பு, வழக்கு என்று சிக்கிக் கொள்ள வேண்டாம்.



ரஜினிகாந்த் எவ்ளோ பெரிய தியாகி என்பதைச் சொல்லும் அவர் கடிதம் கீழே இருக்கிறது. படித்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. 

தன் ரசிகர் மன்றத்தின் மூலமாக எத்தனை போராட்டங்களை நடத்தி இருக்கிறார் அவர்? தமிழக மக்களுக்காக தமிழகமெங்கும் நடைபயணங்களை நடத்தி இருக்கிறாரா? குற்றம் எங்கு நடந்தாலும் ரசிகர் மன்றம் போராட்டம் செய்திருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் கேட்டு விடக்கூடாது. 

தமிழ்நாடே அவர் எப்போது முதலமைச்சர் ஆவார் என்று காத்துக் கிடந்தது. ஆனாலும் அவர் தனக்கு முதலமைச்சர் பதவியே வேண்டாமென்று உதறி தள்ளி தானொரு ஆன்மீகவாதி என்று நிரூபித்து விட்டார். அவரின் ஆன்மீகம் உண்மையானது.

போலி ஆன்மீகம் அல்ல என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். போலி ஆன்மீகம் என்றவுடன் ராசய்யா (அவரில்லை - இவர் வேற) நினைவுக்கு வந்து விடக்கூடாது உங்களுக்கு. அப்படியெல்லாம் நீங்கள் நினைத்தால் அது  தேச விரோதம். 

கீழே இருக்கும் கடிதம் மூலம் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த தானைத்தலைவர் ரஜினிகாந்த் என்பதை மறந்து விடாதீர்கள். ஆகவே மறந்தும் செய்து விடாத காரியம் என்னவென்றால் எங்கும் ரஜினிகாந்த் பெயரை உச்சரித்து விடக்கூடாது என்பதே. 



THANKS TO RAJINIKANTH TWITTER AND SRITHAR PILLAR TWITTER. 

தமிழக மக்களுக்கு ரஜினிகாந்த் அவர்களின் அறிக்கை சென்று சேர வேண்டுமென்ற காரணத்தால் கடிதம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்த் விரும்பினால் நீக்கி விடுகிறேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, January 29, 2023

நெடுவாசல் வேலு வாத்தியார்

நெடுவாசல் சாந்தி அக்கா தீடீரென காலமாகி விட்டார். மறுநாள் துக்கம் விசாரிக்கச் சென்றிருந்த போது, வேலு வாத்தியாரின் மறைவு கேட்டு வீட்டுக்குச் சென்ற போது அவர் எழுதிய நெடுவாசல் கிராம வரலாறு புத்தகத்தை அவரின் மனையாள் என்னிடம் கொடுத்தார். புத்தகத்தைப் புரட்டிய போது எனக்குள் ஆச்சரியம்.

ஆசிரியர் வேலு

எத்தனையோ மனிதர்கள் பிறந்து, வாழ்ந்து, மறைந்து போகின்றனர். தான் வாழ்ந்த ஊரின் வரலாற்றை எழுதியவர்கள் மிகச் சிலரே. நெடுவாசல் கிராமத்தின் தோற்றத்திலிருந்து ஊரின் பழக்கங்கள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்திருக்கும் அப்புத்தகம் வரலாறானது அவரைப் போலவே. 

1976ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை ஆசிரியராகவும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 1974ம் ஆண்டிலிருந்து அவர் திராவிட கழக உறுப்பினர். பகுதறிவாளர் கழக மாவட்ட புரவலராக இருந்திருக்கிறார். 1977ம் ஆண்டிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்திருக்கிறார். 1991ம் ஆண்டிலிருந்து புலால் உணவை நீக்கி வடலூர் இராமலிங்க அடிகளாரின் சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தவர்.

அதுமட்டுமல்ல தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத் தலைவராக இருந்திருக்கிறார்.  மேதகு மொரார்ஜி தேசாய், மேதகு ராஜீவ் காந்தி, மாண்புமிகு புரந்தரேஸ்வரி அம்மையார் ஆகியோர் கலந்து கொண்ட ஆசிரியர் கூட்டணி மா நாடுகளில் முக்கியப் பங்கெடுத்தவர் வேலு ஆசிரியர். இத்தகைய பெருமை கொண்டவருக்கு இன்று பேராவூரனியில் நினைவேந்தல் விழா நடக்கிறது. 

பதினொரு நாட்டார் அகமுடையார் உறவின் முறை கிராமங்களில் இப்படி ஒருவர் வாழ்ந்திருக்கிறார் என்பது அதிசயமே. 

ஆவணம் கிராமத்தில் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட கவி ஈஸ்வரர் வேலாயதனார் என்பவர் வாழ்ந்து காலமானார்.

திருவாசகத்துக்கு இணை சொல்லும் வகையில் ஆவணம் கிராமத்தில் கவியீஸ்வரர் வேலாயுதனார் என்ற வேலாயுத தேவர் திருச்சிற்றம்பலம் சிவபெருமான் மீதும், ஆவணத்தில் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் மீதும் கொண்ட பக்தியினால் பல்வேறு பாடல்களை எழுதினார். அவரின் கையெழுத்து நீட்சியெழுத்தாக இருப்பதால் அச்சுக்கோர்ப்பவருக்குப் புரியாது. ஆகையால் அவரின் எழுத்தை அழகாக படியெடுத்து எழுதிக் கொடுப்பது என் வாடிக்கை.

ஆவணம் அரசு துவக்கப்பள்ளியின் பின்னாலே இருந்த புளியமரத்தடியில் அமர்ந்து கொண்டு, மாலை நேரங்களில் பிரதி எடுத்து எழுதிக் கொடுப்பேன். அவர் காலமாவதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பு, என்னிடம் தன் இறப்பைத் தெரிவித்தார். அந்தளவுக்கு சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவர், இறைவனாகவே வாழ்ந்தவர்.  வேலு ஆசிரியர் அவர்களும், வேலாயுதனார் இருவரும் சுத்த சன்மார்கத்திலே ஈடுபாடு கொண்டவர்கள்.

பெரிய மனிதர்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போவார்கள். அதைப் போல நெடுவாசலில் வாத்தியார் என்ற சொல்லுக்கு இலக்கணம் மாறாமல் வாழ்ந்த வேலு ஆசிரியர் காலமாகி இருக்கிறார்.

இன்று அவரின் புகைப்படத் திறப்பு விழா பேராவூரணியில் நடக்க இருக்கிறது. எனது ஊருக்குப் பெருமை சேர்த்த வேலு ஆசிரியரின் புகழ் என்றென்றும் நிலைத்து நின்று, நெடுவாசலுக்குப் பெருமை சேர்க்கும். 

வேலு ஆசிரியர் எழுதிய புத்தகத்தைப் படிக்க விரும்புவர்கள் கீழே இருக்கும் முகவரியில் தொடர்பு கொள்ளவும். தமிழ்மணி பதிப்பகம், நெடுவாசல் கிராமம், ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம், அஞ்சலக எண் : 622304, போன் : 86086 36044


அவரை வணங்கி மகிழ்கிறேன்.

இன்று 29.01.2023ம் தேதி பேராவூரணியில் நடக்க இருக்கும் புகைப்படத் திறப்பு விழா அழைப்பிதழ் கீழே.




Friday, January 27, 2023

புரட்சிக்கவியின் புரட்சிப்பாடல்

பாரதிதாசன் அன்று எழுதியது. படித்துப் பாருங்கள்.  உண்மை என்றும் உறங்குவதில்லை. அது காட்டிடைப் பொந்தில் வைத்த தீ போல பற்றிப் பரவும். நயவஞ்சகச் செயலாளர்களும், மிச்சம் கிடைக்கும் கறிக்கு எச்சில் வடித்து நிற்கும் துரோகிகளும், தூய தீயில் கருகி காணாமல் போவர் என்பது நடந்தே தீரும் என்று தர்மம் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது.

சமீபகாலமாக மனதுக்குள் சந்தோஷம். தர்மம் நின்று கொல்லும் என்று நடக்கும் காட்சிகள் சொல்கின்றன. 

இடையில் கொஞ்சம் வருத்தமே. தர்மமா? அது இருக்கிறதா என்ற சந்தேகம் வந்தது. இப்போது இல்லை. 

இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு நயவஞ்சக, செய்நன்றி அற்ற நரிக்கூட்டம் விரட்டி அடிக்கப்படும் நாள் தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை வந்து விட்டது. உலகெங்கும் நடக்கும் செயல்களில் தாம் மட்டும் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளும் மன்னிப்புக் கூட்டாத்தாரின் மன்னிப்பு என்ற வார்த்தையும் நயவஞ்சக அர்த்தமே என்று உலகோர் புரிந்து கொண்டனர்.

கடவுளும் இருக்கிறார். அறமும் தர்மமும் இருக்கிறது. 

இனி புரட்சிகவி - இடையில் கொஞ்சம் கொஞ்சம் எடிட்டிங்க் செய்திருக்கிறேன் படிக்க சுவாரசியமாக இருக்கும் என.

இனி புரட்சிக்கவி உங்களிடையே ....!


"பேரன்பு கொண்டவரே, பெரியோ ரேஎன்

பெற்றதாய் மாரே,நல் இளஞ்சிங் கங்காள்!


நீரோடை நிலங்கிழிக்க நெடும ரங்கள்

நிறைந்துபெருங் காடாக்கப் பெருவி லங்கு

நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்

நெடுங்குன்றில் பிலஞ்சேரப் பாம்புக் கூட்டம்

போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்

புதுக்கியவர் யார்?அழகு நகருண் டாக்கி!


சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு

தேக்கிய நல்வாய்க் காலும்வகைப் படுத்தி

நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்

நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?


கற்பிளந்து, மலைபிளந்து, கனிகள் வெட்டிக்

கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?


பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்

போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?


அக்கால உலகிருட்டைத் தலைகீ ழாக்கி

அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்

இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்

இருட்டுக்கு முன்னேற்றம் ஆவ தன்றிப்

புக்கபயன் உண்டாமோ? பொழுது தோறும்

புனலுக்கும், அனலுக்கும், சேற்றினுக்கும்,

கக்கும்விஷப் பாம்பினுக்கும், பிலத்தி னுக்கும்,

கடும்பசிக்கும், இடையறா நோய்க ளுக்கும்,

பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும்

பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச்

சலியாத வருவாயும் உடைய தாகத்

தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம்

எலியாக, முயலாக, இருக்கின் றார்கள்


ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்

புலிவேஷம் போடுகின்றான்! பொதுமக்கட்குப்

புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா?


ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்

உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்”

Tuesday, January 24, 2023

சூரைக்காற்றாய் டி.ராஜேந்தர் எனும் அஷ்டாவதானி

தன்னம்பிக்கையின் முகவரி, சினிமா உலகில் புடம் போட்ட தூய தங்கம், உண்மை பேசும் உற்சாகவாதி என பல தளங்களில் தடம் பதித்த பெருமை மிகு தமிழர் டி.ராஜேந்தர் அவர்கள்.

சுய ஒழுங்கும், சுய கட்டுப்பாடும் மிக்க மிகச் சிறந்த மனிதர். கை நீட்டி அவரை எவராலும் குற்றம் சுமத்தி விட முடியாது. சினிமா எனும் சகலலோப சல்லாபச் சந்தையின் விளைந்த தூய முத்துப் போன்ற தூய்மையான மனிதர்.

அவரின் படங்களும், பாடல்களும் இன்றைக்கும் அழிக்கவியலா காவியங்களாய் மிளிருபவை. காலத்துக்கு ஏற்ப தன்னை வெளிப்படுத்தும் அப்டேட் ஆண்ட்ராய்டு வெர்சன் போல டி.ஆர் தன்னை வெளிப்படுத்திய தருணம் 2023 ஆண்டில் நிகழ்ந்திருக்கிறது.

கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாய் தவமிருந்த காற்று கடந்த ஜனவரி 20ம் தேதியன்று சூரைக்காற்றாய் இசை உலகை சுழன்று அடித்தது. மீண்டும் இந்தியா முழுவதும் தன் படைப்பால் கவனம் பெற்ற அஷ்டாவதானி என நிருப்பித்திருக்கிறார்

முருகப் பெருமானின் அருளாலே, மீண்டும் டி.ஆர் இந்தியாவைத் திரும்ப பார்க்க வைத்திருக்கிறார்.

முருகன் மீது அவர் கொண்ட பக்தியை நானறிவேன். 

என்னுடன் பேசும் போது, சட்டென்று முருகன் மீது பாட்டெடுத்து, பாட ஆரம்பிப்பார். கேட்கும் எனக்கோ நெக்குருகி விடும் மனது.

முருகன் மீது அவர் கொண்ட பக்தியின் பாவம் பாடலாக பரவி, கேட்போர் மனதை உலுக்கிக, உருக்கி விடும். இசை உலகின் மறைபொருளாய் இருந்தார். அவரின் குரலுக்கு தமிழ் நாடே ஆடியதை நாமெல்லாம் கண்டோம். இசை மேடையெங்கும் ஒலித்தது அவரின் பாடல்கள். கேட்போர் நரம்புகளைச் சுண்டி இழுத்தன அவைகள்.

அவற்றை எல்லாம் வென்று சரித்திரம் படைத்தது அவரின் வந்தே வந்தே மாதரம். இந்திய தாய்க்கு அவர் செலுத்திய வணக்கம் இது.

“வந்தே வந்தே மாதரம்” பாட்டு கேட்கையில் அது சுனாமி போல மனதுக்குள் சுழலும். 

பாட்டைக் கேட்க கேட்க உங்கள் மனதுக்குள்ளும் அது நிகழும்.

இனிய நண்பர் டி.ஆர் அவர்கள், விரைவில் சினிமாவில் புதுக்களத்தில் புதிய தொரு கோணத்தில் தன் படைப்பினை ரசிகர்களுக்கு விருந்து வைக்கப் போகிறார் என்ற செய்தியை அவர் பேட்டியில் கண்ட போது எல்லையில்லா மகிழ்ச்சி உண்டானது.

அவர் நலமுடனும் வளமுடனும் வாழ எம் குருவிடம் பிரார்த்திக்கிறேன்.


வந்தே வந்தே மாதரம் - தமிழ்


வந்தே வந்தே மாதரம் - இந்தி


பேட்டிகள்





Thursday, January 19, 2023

விதி எப்படி வேலை செய்யும் தெரியுமா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய சர்ச்சைகள் மனிதர்கள் இருக்கும் வரை இருந்து கொண்டே இருக்கும். அதைப் பற்றி இப்போது பார்க்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரை கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் கதை தான். யானையைக் குருடர்கள் தடவிப் பார்த்து விவரித்த கதையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் விதி அல்லது தர்மம் அதன் பலன்கள் பற்றிய சம்பவங்கள் பலதும் என்னை வசீகரிப்படுத்திக் கொண்டிருப்பவை. அப்படி என்னை வசீகரித்த ஒரு சில சம்பவங்கள் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

ராமர் கோவில் கட்ட ரதயாத்திரை தொடங்கிய அத்வானிக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை. ஏன்?  ராமர் கைவிட்டு விட்டாரா? 

முஸ்லிம்களின் மசூதியை இடித்ததற்கு காரணமாய் இருந்தவர் அத்வானி. கொடுமை என்னவென்றால் அத்வானியின் உறவினர் முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். 

ஆகமம், நியமம் என்று மூச்சுக்கு மூச்சு இந்து, பார்ப்பனியம் பேசும் சுப்ரமணிய சாமியின் மகளின் கணவர் பெயர் நசீம் ஹைதர். இது தான் தர்மத்தின் பலன்.

2011ல் காங்கிரசைத் தோற்கடிக்க, பாஜகவின் மறைமுக  பகடையாகப் பயன்பட்டவர் அண்ணா ஹசாரே. விதி என்னவென்றால் டெல்லியில் எந்தக் கட்சித் தொடர்பு இல்லாத அரவிந்த் கேஜரிவால் முதலமைச்சர். பஞ்சாபிலும் அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. 

ஆளுநரை வைத்துக் கொண்டு இரண்டு மா நிலங்களிலும், அரசியல் சட்டத்துக்குப் புறம்பான வேலை செய்ய தூண்டிக் கொண்டிருக்கிறது பிஜேபியும் மோடி அரசும். பிரதமர் மோடியின் கண்ணுக்குள் கத்தியை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால்.

எந்த ஆயுதம் எடுக்கிறார்களோ அதே ஆயுதத்தால் பலன். 

செய்யும் செயலுக்கு ஒப்பான பின் விளைவுகள் நிச்சயம் உண்டு என்று அரசியலில் மட்டுமல்ல பிசினஸிலும் உண்டு. அதை பிறிதொரு நேரத்தில் எழுதுகிறேன்.

இதை விட மற்றொரு ஆகச் சிறந்த உதாரணம் என்ன தெரியுமா?

ஐ.டி ஊழியர்களின் அலப்பறை. இவர்களால் நிலத்தின் விலை உயர்ந்தது. வீட்டு வாடகை உயர்ந்தது. நான் சம்பாதிக்கிறேன், எனக்கு தேவைப்படுகிறது, வாடகை அதிகம் கொடுக்கிறேன். உனக்கு எதுக்கு எரியுது? என்று கேட்டார்கள். ஏழைகள் இவர்களின் அட்டகாசத்தால், திமிறினால் சம்பாதிக்கும் பணத்தில் 50 சதவீதம் வாடகைக்குச் செலவழிக்க நேரிட்டது. இன்னும் குறைந்த பாடில்லை.

நான் சம்பாதிக்கிறேன், நிலம் வாங்கிப் போடுகிறேன். எனக்குத் தேவை, அதிக விலை கொடுக்கிறேன் என்று எகத்தாளம் பேசினார்கள். அதிக விலைக்கு வாங்கிய சைட்டுகளை வாங்க ஆளில்லை இப்போது.

நான் சம்பாதிக்கிறேன், தென்னை தோப்பு வாங்குகிறேன். எனக்குத் தேவை, ஆகையால் அதிக விலை கொடுக்கிறேன், உங்களுக்கு என்ன? என்று லொள்ளுப் பேசினார்கள். அதிக விலைக்கு வாங்கிய தென்னைத் தோப்புகளை விற்கவும் முடியாமல், மெயிண்டெனன்ஸ் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் யாரோ ஒருவருக்கு மாதம் தோறும் தண்டம் அழுதுக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

கொரானா வந்தது. ஐ.டி ஊழியர்களின் வாயில் வெள்ளத்தை ஊற்றி நிரப்பியது. வீடுகள் ஏலம், கார்கள் ஏலம், கடனாளி, லே ஆஃப், அரைச் சம்பளம், ஆட்குறைப்புகள் என ஐ.டி செக்டார் ஊழியர்களின் நிலை ஆப்பசைத்த குரங்கானது. மாட்டிக் கொண்டார்கள்.

இன்னும் இருக்கிறது சம்பவங்கள்.

விரைவில் பார்க்கலாம்.

Wednesday, January 18, 2023

தனியார் டிரஸ்டுகள் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் வராது

செய்தியை மட்டும் படித்துக் கொள்ளுங்கள். தனியார் டிரஸ்டுகளின் வருமான வரி, செலவு, வரி விலக்கு விபரங்கள் இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது. 

Income Tax Act 1961 - Section 138 Amendment

Amendment of section 138.

28. In section 138 of the Income-tax Act, for sub-section (1), the following sub-section shall be substituted, namely:—

"(1) (a) The Board or any other Income-tax authority specified by it by a general or special order in this behalf may furnish or cause to be furnished to—

(i) any officer, authority or body performing any functions under any law relating to the imposition of any tax, duty or cess, or to dealings in foreign exchange as defined in section 2 (d) of the Foreign Exchange Regulation Act, 1947 (7 of 1947.); or

(ii) such officer, authority or body performing functions under any other law as the Central Government may, if in its opinion it is necessary so to do in the public interest, specify by notification in the Official Gazette in this behalf, any such information relating to any assessee in respect of any assessment made under this Act or the Indian Income-tax Act 1922 (11 of 1922) as may. in the opinion of the Board or other Income-tax authority, be necessary for the purpose of enabling the officer, authority or body to perform his or its functions under that law.

(b) Where a person makes an application to the Commissioner in the prescribed form for any information relating to any assessee in respect of any assessment made under this Act or the Indian Income-tax Act. 1922 (11 of 1922). on or after the 1st day of April, 1960, the Commissioner may, if he is satisfied that it is in the public interest so to do, furnish or cause to be furnished the information asked for in respect of that assessment only and his decision in this behalf shall be final and shall not be called in question in any court of law.".

[Finance (No. 2) Act, 1967]

செய்தி கீழே!


இந்தச் செய்திக்கும் கீழே இருக்கும் செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

 நன்றி : தினமணி