குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பாரதிதாச. Show all posts
Showing posts with label பாரதிதாச. Show all posts

Friday, January 27, 2023

புரட்சிக்கவியின் புரட்சிப்பாடல்

பாரதிதாசன் அன்று எழுதியது. படித்துப் பாருங்கள்.  உண்மை என்றும் உறங்குவதில்லை. அது காட்டிடைப் பொந்தில் வைத்த தீ போல பற்றிப் பரவும். நயவஞ்சகச் செயலாளர்களும், மிச்சம் கிடைக்கும் கறிக்கு எச்சில் வடித்து நிற்கும் துரோகிகளும், தூய தீயில் கருகி காணாமல் போவர் என்பது நடந்தே தீரும் என்று தர்மம் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது.

சமீபகாலமாக மனதுக்குள் சந்தோஷம். தர்மம் நின்று கொல்லும் என்று நடக்கும் காட்சிகள் சொல்கின்றன. 

இடையில் கொஞ்சம் வருத்தமே. தர்மமா? அது இருக்கிறதா என்ற சந்தேகம் வந்தது. இப்போது இல்லை. 

இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு நயவஞ்சக, செய்நன்றி அற்ற நரிக்கூட்டம் விரட்டி அடிக்கப்படும் நாள் தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை வந்து விட்டது. உலகெங்கும் நடக்கும் செயல்களில் தாம் மட்டும் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளும் மன்னிப்புக் கூட்டாத்தாரின் மன்னிப்பு என்ற வார்த்தையும் நயவஞ்சக அர்த்தமே என்று உலகோர் புரிந்து கொண்டனர்.

கடவுளும் இருக்கிறார். அறமும் தர்மமும் இருக்கிறது. 

இனி புரட்சிகவி - இடையில் கொஞ்சம் கொஞ்சம் எடிட்டிங்க் செய்திருக்கிறேன் படிக்க சுவாரசியமாக இருக்கும் என.

இனி புரட்சிக்கவி உங்களிடையே ....!


"பேரன்பு கொண்டவரே, பெரியோ ரேஎன்

பெற்றதாய் மாரே,நல் இளஞ்சிங் கங்காள்!


நீரோடை நிலங்கிழிக்க நெடும ரங்கள்

நிறைந்துபெருங் காடாக்கப் பெருவி லங்கு

நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்

நெடுங்குன்றில் பிலஞ்சேரப் பாம்புக் கூட்டம்

போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்

புதுக்கியவர் யார்?அழகு நகருண் டாக்கி!


சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு

தேக்கிய நல்வாய்க் காலும்வகைப் படுத்தி

நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்

நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?


கற்பிளந்து, மலைபிளந்து, கனிகள் வெட்டிக்

கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?


பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்

போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?


அக்கால உலகிருட்டைத் தலைகீ ழாக்கி

அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்

இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்

இருட்டுக்கு முன்னேற்றம் ஆவ தன்றிப்

புக்கபயன் உண்டாமோ? பொழுது தோறும்

புனலுக்கும், அனலுக்கும், சேற்றினுக்கும்,

கக்கும்விஷப் பாம்பினுக்கும், பிலத்தி னுக்கும்,

கடும்பசிக்கும், இடையறா நோய்க ளுக்கும்,

பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும்

பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச்

சலியாத வருவாயும் உடைய தாகத்

தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம்

எலியாக, முயலாக, இருக்கின் றார்கள்


ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்

புலிவேஷம் போடுகின்றான்! பொதுமக்கட்குப்

புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா?


ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்

உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்”