குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, January 24, 2023

சூரைக்காற்றாய் டி.ராஜேந்தர் எனும் அஷ்டாவதானி

தன்னம்பிக்கையின் முகவரி, சினிமா உலகில் புடம் போட்ட தூய தங்கம், உண்மை பேசும் உற்சாகவாதி என பல தளங்களில் தடம் பதித்த பெருமை மிகு தமிழர் டி.ராஜேந்தர் அவர்கள்.

சுய ஒழுங்கும், சுய கட்டுப்பாடும் மிக்க மிகச் சிறந்த மனிதர். கை நீட்டி அவரை எவராலும் குற்றம் சுமத்தி விட முடியாது. சினிமா எனும் சகலலோப சல்லாபச் சந்தையின் விளைந்த தூய முத்துப் போன்ற தூய்மையான மனிதர்.

அவரின் படங்களும், பாடல்களும் இன்றைக்கும் அழிக்கவியலா காவியங்களாய் மிளிருபவை. காலத்துக்கு ஏற்ப தன்னை வெளிப்படுத்தும் அப்டேட் ஆண்ட்ராய்டு வெர்சன் போல டி.ஆர் தன்னை வெளிப்படுத்திய தருணம் 2023 ஆண்டில் நிகழ்ந்திருக்கிறது.

கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாய் தவமிருந்த காற்று கடந்த ஜனவரி 20ம் தேதியன்று சூரைக்காற்றாய் இசை உலகை சுழன்று அடித்தது. மீண்டும் இந்தியா முழுவதும் தன் படைப்பால் கவனம் பெற்ற அஷ்டாவதானி என நிருப்பித்திருக்கிறார்

முருகப் பெருமானின் அருளாலே, மீண்டும் டி.ஆர் இந்தியாவைத் திரும்ப பார்க்க வைத்திருக்கிறார்.

முருகன் மீது அவர் கொண்ட பக்தியை நானறிவேன். 

என்னுடன் பேசும் போது, சட்டென்று முருகன் மீது பாட்டெடுத்து, பாட ஆரம்பிப்பார். கேட்கும் எனக்கோ நெக்குருகி விடும் மனது.

முருகன் மீது அவர் கொண்ட பக்தியின் பாவம் பாடலாக பரவி, கேட்போர் மனதை உலுக்கிக, உருக்கி விடும். இசை உலகின் மறைபொருளாய் இருந்தார். அவரின் குரலுக்கு தமிழ் நாடே ஆடியதை நாமெல்லாம் கண்டோம். இசை மேடையெங்கும் ஒலித்தது அவரின் பாடல்கள். கேட்போர் நரம்புகளைச் சுண்டி இழுத்தன அவைகள்.

அவற்றை எல்லாம் வென்று சரித்திரம் படைத்தது அவரின் வந்தே வந்தே மாதரம். இந்திய தாய்க்கு அவர் செலுத்திய வணக்கம் இது.

“வந்தே வந்தே மாதரம்” பாட்டு கேட்கையில் அது சுனாமி போல மனதுக்குள் சுழலும். 

பாட்டைக் கேட்க கேட்க உங்கள் மனதுக்குள்ளும் அது நிகழும்.

இனிய நண்பர் டி.ஆர் அவர்கள், விரைவில் சினிமாவில் புதுக்களத்தில் புதிய தொரு கோணத்தில் தன் படைப்பினை ரசிகர்களுக்கு விருந்து வைக்கப் போகிறார் என்ற செய்தியை அவர் பேட்டியில் கண்ட போது எல்லையில்லா மகிழ்ச்சி உண்டானது.

அவர் நலமுடனும் வளமுடனும் வாழ எம் குருவிடம் பிரார்த்திக்கிறேன்.


வந்தே வந்தே மாதரம் - தமிழ்


வந்தே வந்தே மாதரம் - இந்தி


பேட்டிகள்





0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.