குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, January 19, 2023

விதி எப்படி வேலை செய்யும் தெரியுமா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய சர்ச்சைகள் மனிதர்கள் இருக்கும் வரை இருந்து கொண்டே இருக்கும். அதைப் பற்றி இப்போது பார்க்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரை கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் கதை தான். யானையைக் குருடர்கள் தடவிப் பார்த்து விவரித்த கதையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் விதி அல்லது தர்மம் அதன் பலன்கள் பற்றிய சம்பவங்கள் பலதும் என்னை வசீகரிப்படுத்திக் கொண்டிருப்பவை. அப்படி என்னை வசீகரித்த ஒரு சில சம்பவங்கள் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

ராமர் கோவில் கட்ட ரதயாத்திரை தொடங்கிய அத்வானிக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை. ஏன்?  ராமர் கைவிட்டு விட்டாரா? 

முஸ்லிம்களின் மசூதியை இடித்ததற்கு காரணமாய் இருந்தவர் அத்வானி. கொடுமை என்னவென்றால் அத்வானியின் உறவினர் முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். 

ஆகமம், நியமம் என்று மூச்சுக்கு மூச்சு இந்து, பார்ப்பனியம் பேசும் சுப்ரமணிய சாமியின் மகளின் கணவர் பெயர் நசீம் ஹைதர். இது தான் தர்மத்தின் பலன்.

2011ல் காங்கிரசைத் தோற்கடிக்க, பாஜகவின் மறைமுக  பகடையாகப் பயன்பட்டவர் அண்ணா ஹசாரே. விதி என்னவென்றால் டெல்லியில் எந்தக் கட்சித் தொடர்பு இல்லாத அரவிந்த் கேஜரிவால் முதலமைச்சர். பஞ்சாபிலும் அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. 

ஆளுநரை வைத்துக் கொண்டு இரண்டு மா நிலங்களிலும், அரசியல் சட்டத்துக்குப் புறம்பான வேலை செய்ய தூண்டிக் கொண்டிருக்கிறது பிஜேபியும் மோடி அரசும். பிரதமர் மோடியின் கண்ணுக்குள் கத்தியை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால்.

எந்த ஆயுதம் எடுக்கிறார்களோ அதே ஆயுதத்தால் பலன். 

செய்யும் செயலுக்கு ஒப்பான பின் விளைவுகள் நிச்சயம் உண்டு என்று அரசியலில் மட்டுமல்ல பிசினஸிலும் உண்டு. அதை பிறிதொரு நேரத்தில் எழுதுகிறேன்.

இதை விட மற்றொரு ஆகச் சிறந்த உதாரணம் என்ன தெரியுமா?

ஐ.டி ஊழியர்களின் அலப்பறை. இவர்களால் நிலத்தின் விலை உயர்ந்தது. வீட்டு வாடகை உயர்ந்தது. நான் சம்பாதிக்கிறேன், எனக்கு தேவைப்படுகிறது, வாடகை அதிகம் கொடுக்கிறேன். உனக்கு எதுக்கு எரியுது? என்று கேட்டார்கள். ஏழைகள் இவர்களின் அட்டகாசத்தால், திமிறினால் சம்பாதிக்கும் பணத்தில் 50 சதவீதம் வாடகைக்குச் செலவழிக்க நேரிட்டது. இன்னும் குறைந்த பாடில்லை.

நான் சம்பாதிக்கிறேன், நிலம் வாங்கிப் போடுகிறேன். எனக்குத் தேவை, அதிக விலை கொடுக்கிறேன் என்று எகத்தாளம் பேசினார்கள். அதிக விலைக்கு வாங்கிய சைட்டுகளை வாங்க ஆளில்லை இப்போது.

நான் சம்பாதிக்கிறேன், தென்னை தோப்பு வாங்குகிறேன். எனக்குத் தேவை, ஆகையால் அதிக விலை கொடுக்கிறேன், உங்களுக்கு என்ன? என்று லொள்ளுப் பேசினார்கள். அதிக விலைக்கு வாங்கிய தென்னைத் தோப்புகளை விற்கவும் முடியாமல், மெயிண்டெனன்ஸ் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் யாரோ ஒருவருக்கு மாதம் தோறும் தண்டம் அழுதுக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

கொரானா வந்தது. ஐ.டி ஊழியர்களின் வாயில் வெள்ளத்தை ஊற்றி நிரப்பியது. வீடுகள் ஏலம், கார்கள் ஏலம், கடனாளி, லே ஆஃப், அரைச் சம்பளம், ஆட்குறைப்புகள் என ஐ.டி செக்டார் ஊழியர்களின் நிலை ஆப்பசைத்த குரங்கானது. மாட்டிக் கொண்டார்கள்.

இன்னும் இருக்கிறது சம்பவங்கள்.

விரைவில் பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.