குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, January 30, 2011

யுத்தம் செய் திரைப்படமும் சாரு (நிவேதிதாவும்)



சென்னையில் இருந்து வந்த நண்பருடன் வெளியில் சென்று விட்டு, வீட்டுக்குள் நுழைந்த போது நிவேதிதா அழுது கொண்டிருந்தார். என்னவென்று விசாரித்த போது, ஏதோ ஒரு குறும்புக்காக அம்மா பேசி விட்டார் என்பதால் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் நிவேதிதா. வழக்கம் போல மனைவிக்கு சில அர்ச்சனைகளை டீசண்டாக தூவினேன். கூட நண்பரும் அல்லவா இருக்கிறார்? சிறிது நேரம் கழித்து நிவேதிதா சாக்லேட் பாரை எடுத்துக் கொண்டு வர நான் மனைவியைப் பார்த்தேன். எனக்கு ஒன்றும் தெரியாது என்று சமையல் அறைக்குள் சென்று விட்டார் மனைவி.

நண்பர் சென்றதும், சாக்லேட் ஏன் கொடுத்தாய் என்று கேட்க, “ நான் அழுகையை நிறுத்தனும் என்றால் சாக்லேட் சாப்பிட்டாத்தான் அதுவா நிற்கும்” என்று நிவேதிதா சொன்னதாகவும், பேசிக் கொண்டிருப்பதால் அவளால் கவனம் சிதறி விடும் என்பதாலும் சாக்லேட்டைக் கொடுத்ததாகவும் சொன்னார் மனைவி.

இன்று காலையில், யுத்தம் செய் திரைப்படப்பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பின்னால் ஆடிக் கொண்டிருந்த நிவேதிதாவைத்தான் நீங்கள் கீழே இருக்கும் இணைப்பில் பார்க்கின்றீர்கள்.

சாரு நிவேதிதா நடித்த காட்சியை மிஷ்கின் பாடலில் இருந்து நீக்கி விட்டார் என்று கேள்விப்பட்டேன். அதைக் கேட்டு வருத்தத்தில் இருக்கும் சாருவின் ரசிகப் பெருமக்களுக்கு இருக்கட்டுமே என்று இவ்வீடியோவை அளிக்கிறேன்.

Monday, January 24, 2011

புது வீடு கட்டும் முன்பு கவனிக்க வேண்டியவை

மனிதர்கள் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமான வீடுகளைப் பற்றி நாம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து வருகிறோம். ஒரு மொபைல் போன் வாங்கும் போது, அதன் செயல்பாடுகள் என்ன? விலை சரியா, வாரண்டி இருக்கா என்றெல்லாம் யோசித்து வாங்கும் நாம், நமக்கான அடையாளமாய், நம் வாழ்வோடு கூடவே வரும் தோழனாய் இருக்கும் வீடுகளைப் பற்றி அறிந்து கொள்ள சோம்பல் படுகிறோம். பலபேருக்கு இவ்விஷயங்கள் தெரியாது. 

வீடு வாங்க வேண்டுமென்றால் வாஸ்துகாரரை அழைத்து பீஸ் கட்டினால் போதும் என்ற நிலைக்கு மக்கள் இருக்கின்றார்கள்.முழுவதும் தெரிய வேண்டாம், ஆனால் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா அதற்குதான் இத்தொடரை எழுதுகிறேன்.

இனி, புது வீடு கட்ட நிலம் வாங்க முனையும் போது, அந்த நிலம் வீடு கட்ட தகுதி உடையதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

நிலத்தில் உயிர் நிலம், உயிரற்ற நிலம் என்று இருக்கின்றன. உயிர் நிலத்தில் மனித குலத்திற்கு நன்மை தரக்கூடிய செடிகள் முளைத்திருக்கும். உயிரற்ற நிலத்தில் புல், பூண்டு கூட முளைத்திருக்காது. மேடு, பள்ளம், பிளவுகள் இருக்கும். உயிர் நிலத்தில் வீடுகட்டினால் நல்ல வாழ்க்கை வாழலாம். உயிரற்ற நிலத்தில் வீடுகள் கட்டக்கூடாது என்று மனையடி சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.



நிலத்தினை மற்றொரு முறையிலும் சோதிக்கலாம். மையத்தில் ஒரு கை நீளம், அகலம், ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி எடுத்து, மீண்டும் மூடினால், பள்ளம் நிறைந்து, மேலும் மண் முகடு தட்டினால் அது நல்ல நிலம் என்றும் அறியலாம்.பள்ளத்தை மூடக்கூடிய அளவிற்கு மண் இல்லை என்றால் அது மோசமான நிலம் என்று தெரிந்து கொள்ளவும்.

அதே பள்ளத்தில் தண்ணீரை நிரப்பி வைத்து, பின்னர் பார்த்தால் தண்ணீர் ஊற்றிய அளவிலேயே இருந்தால் மிக நல்ல நிலமென்றும், குறைவாக இருந்தால் நடுத்தரமான நிலமென்றும், உலர்ந்து போய் இருந்தால் தகுதியற்ற நிலமென்றும் தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக கவனிக்க வேண்டியது தண்ணீர் சத்து இருக்க வேண்டியது அவசியம்.

- கோவை எம் தங்கவேல்

Friday, January 21, 2011

கோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்

ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் கோவையில் வெகு விரைவில் மிகவும் குறைந்த விலையில் வீட்டு மனைகளை விற்பனை செய்யவிருக்கிறது. ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை அவ்வீட்டு மனைகளின் விலைகள் இருக்கும். எதிர்கால வாழ்க்கையினை செம்மையாக, நிம்மதியாக வாழ விரும்புவோர்கள் அனைவருக்கும் தனது சம்பாத்தியத்தினை ஏதாவதொரு நல்ல சொத்தில் முதலீடு செய்தல் நல்லது. அவ்வாறு நிலத்தில் முதலீடு செய்ய விரும்புவோர்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும்.

ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை தங்களின் மூச்சாக கருதி வருகிறது. விரைவில் வீட்டு மனைகளைப் பற்றிய விபரங்களை வெளியிடுகிறோம். மனைகள் தேவைப்படுவோர் முன்பதிவு செய்து கொள்ளவும்.

தமிழ் நாட்டிலே வளர்ந்து வரும் நகரமான கோவையில் தற்போது வாங்கிப் போடும் ஒவ்வொரு செண்ட் நிலமும் நாளை கோடிக்கணக்கில் வளரும் தன்மை கொண்டது என்பதை மறந்து விடாதீர்கள்.

- கோவை எம் தங்கவேல்
ஃபார்ச்சூன் பிரிக்ஸ் 
http://www.fortunebricks.net

Thursday, January 20, 2011

வீடு பற்றிய தொடர் - 5ம் பகுதி

இறுதியாக, வடமேற்குத் திசையில் அமைந்திருக்கும் வீடுகள் வழங்கக்கூடிய பலன்களைப் பார்க்கலாம்.  இந்த திசைக்கு உரிய கடவுள் “வாயு பகவான்”. இவர் அதீத வலிமை கொண்டவர் என்பதால் இவ்வீட்டில் வசிப்பவர்களும் நல்ல மன உறுதி படைத்தவர்களாகவும், சீர்திருத்தவாதிகளாகவும், சிந்தனாவாதிகளாகவும், எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடியவர்களாகவும், கடவுளின் பால் மிக்க பக்தி கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். ஆனால் இந்த திசையில் வீசக்கூடிய காற்றில் கசப்பு சுவை இருப்பதால், மெலிந்த தேகம் கொண்டவர்கள் வசிக்க ஏதுவானதல்ல என்கிறார்கள்.

ஒரு மனிதனுக்கு வீடு என்பது அவனின் முகவரியாய் இருக்கிறது. அவனின் சம்பாத்தியங்கள், நிம்மதி, குடும்பத்தின் வளர்ச்சி, வாரிசுகளின் பெருக்கம் போன்றவற்றிற்கும் வீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கியமாக மனிதனின் நல்லது கெட்டது அனைத்துக்கும் இவ்வீடுகளே பெரும் பங்காற்றி வருகின்றன.வீடு இல்லாதவரை பிச்சைக்காரன் என்று தான் அழைக்க முடியும். அவன் எவ்வளவு புகழ் பெற்றிருந்தாலும், புத்திசாலியாய் இருந்தாலும் கூட அவனுக்கென்று ஒரு வீடு இல்லையென்றால் அவன் ஒரு நாடோடி வாழ்க்கையைத்தான் வாழ வேண்டும். வாடகை வீட்டில் குடியிருப்போர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து ஒரு வீட்டினைக் கட்டிக் கொள்ளவோ அல்லது விலைக்கு வாங்கவோ முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு வீடு இல்லாத நபர்களுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் மிகச் சிறந்த சேவையைச் செய்து வருகிறது. ஒவ்வொருவரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் சம்பாத்தியத்திற்கு ஏற்றவாறு மிகச் சிறந்த வீடுகளை, மிகக் குறைந்த வட்டியில் விற்பனை செய்கிறோம். விரைவில் வெறும் 25 லட்ச ரூபாய்க்கு, 24 நான்கு தனித் தனியான வீடுகளை 1000 சதுர அடி பரப்பளவில், இரண்டரை செண்ட் நிலத்தில், இரண்டு பெட்ரூம்கள் கொண்டதாக அமைக்க விருக்கிறோம். கோவையின் பிரதான இடமான ஒண்டிப்புதூரில் இந்த வீடுகள் அமையவிருக்கின்றன. இதற்கு வங்கிக் கடனுதவியும் பெற்றுத் தருகிறோம். வாடகை செலுத்துவது போல, வங்கிக் கடனைச் செலுத்தினால் போதுமானது. வாடகை கொடுத்தால் போல வீடு உங்களுக்கு சொந்தமானதாகி விடும். 

வாசகர்கள் தொடர்ந்து எங்களது நிறுவன தளத்தினையும், எனது இந்த பிளாக்கினையும் படித்து வாருங்கள். அல்லது இமெயில் சப்ஸ்கிரிப்ஷன் செய்து வைத்து விடுங்கள். விபரங்களை விரைவில் அப்லோட் செய்கிறோம்.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்ச்சூன் நிறுவனங்கள்

Tuesday, January 18, 2011

வீடு பற்றிய தொடர் - 4

இன்றைக்கு தென்கிழக்குத் திசையில் அமைந்த வீடுகள் மற்றும் தென் மேற்குத் திசையில் அமைந்த வீடுகள் பற்றியும் பார்க்கலாம்.

தென்கிழக்குத் திசையில் வீடு அமைவது உசிதமல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தென் கிழக்குத் திசையில் உஷ்ணம் அதிகமிருக்கும். இத்திசைக்கு உரியவர் அக்னி பகவான். அக்னியினால் வாழ்வும் உண்டு, வீழ்ச்சியும் உண்டு என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அக்னி உணவு சமைக்கவும் உதவும், அதே வீட்டை எரிக்கவும் செய்யும். இந்த வீடுகளில் வசிப்பவர்கள் மிகுந்த பிடிவாத குணமுடையவர்களாய் இருப்பார்கள். கடின உழைப்பு இருந்தாலும் ஏழ்மை இருக்கும். இந்த வீடு பலர் கை மாறும். வயிறு, சிறு நீரகம் சம்பந்தமான நோய்களுக்கு இவ்வீடுகளில் வசிப்பவர்கள் உட்படுவார்கள். ஆகவே தென் கிழக்குத் திசை வீடுகள் வசிக்க உகந்தது அல்ல என்பதைக் கவனத்தில் கொள்க.

அடுத்து,  தென் மேற்குத் திசையின் கடவுளாய் இருப்பவர் நிருதி என்பவர் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இவர் அரக்க குணம் கொண்டவராய் இருக்கிறார் என்றும், இவரின் குணமாக செருக்கு, தாழ்ந்த குணம், பிடிவாதம் மற்றும் அகம்பாவம் கொண்டவராய் இருப்பதாகவும் சொல்லி இருக்கின்றார்கள். இவ்வீடுகளில் வசிப்பவர்களுக்கும் மேற்பட்ட குணங்களும் இருக்குமென்றும், நோய்களுக்கு ஆட்படுவர் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இவ்வீடுகளில் வசிப்பவர்கள் தலைவர்களாய் மாற துடிப்பார்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள்.

மொத்தத்தில் மேற்கண்ட திசைகளில் இருக்கும் வீடுகள் மனிதர்கள் வசிக்க உகந்ததல்ல என்பது முன்னோர்களின் கருத்து.

- கோவை எம் தங்கவேல்

Friday, January 14, 2011

வீடு பற்றிய தொடர் - 3 (அனைவருக்குமானது)

வடக்குத் திசையில் தலைவாயில் கொண்ட வீடுகள் பற்றிப் பார்ப்போம். வடக்குத் திசைக்கு அதிபதியானவர் குபேரன். இவனின் தேகம் பலவீனமானது. ஆகையால் உள்ளமும் சாந்தமானது. ஆனால் செல்வத்தில் பெரியவன். வியாபாரம் செய்வதில் இவனுக்கு நிகர் எவருமில்லை. திசைக்கு அதிபதியைப் பற்றிப் பார்த்தோம். இனி இந்த வீட்டில் வசிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்று பார்க்கலாம். 

மிகவும் பண ஆசை பிடித்தவர்களாய் இருப்பார்கள். வடக்கு காற்றில் ஈரமும், பிசுபிசுப்பும் இருப்பதால் சளிக்காய்ச்சல் நோயால் அவதிப்படுவார்கள். இவர்கள் வீட்டில் மருந்துகள் இருந்து கொண்டே இருக்கும். இவ்வீட்டிலுள்ளவர்கள் பிறருக்கு தீங்கு செய்ய விரும்பமாட்டார்கள்.

வடகிழக்கு திசைக்கு ஈசானிய மூலை என்றுச் சொல்லுவார்கள். இந்தத் திசைக்கு அதிபதி ஈசுவரன். இத்திசையில் வசிப்பவர்களுக்கு அதிர்ஷடம் அடிக்கும் பாக்கியம் உண்டு. மிகவும் கோபமானவர்களாகவும், எவரையும் எளிதில் நம்பாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் ஆன்மீக வழியில் ஈடுபடுவார்கள். கல்வியில் சிறந்தவராய் இருப்பார்கள். கண் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்படுவார்கள்.

இனி ஃபார்ச்சூன் பிரிக்சின் மிக முக்கியமான சர்வீஸ் ஒன்றினைப் பார்க்கலாம். வெளி நாடுகளில் வசிக்கும் பலருக்கு இந்தியாவில் வீடோ அல்லது வேறு சொத்துக்களோ இருக்கும். இச்சொத்துக்களை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால் எவராவது அத்துமீறி சொத்தினை ஆக்கிரமித்து விடுவர். ஆக்கிரமிப்பினை அகற்ற பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும். காலமும், பணமும் விரயமாவதுடன், பெரும் வேதனையையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

இம்மாதிரி சொத்துக்களை ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் தங்களது நேரடிப்பார்வையில் கொண்டு வந்து அதை மெயிண்டெய்ன் செய்து வருகிறது. தற்போது கோவையிலும், திருப்பூரிலும் மட்டும் இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது. சேவையின் முக்கியமான சில அம்சங்களைக் கீழே பார்க்கலாம்.

1) வீடு என்றால் வாடகைக்கு விட்டு மாதா மாதம் பணம் வசூல் செய்து, சொத்தின் உரிமையாளரின் வங்கி கணக்கில் செலுத்தி அதன் ரசீதை ஆன்லைனில் அப்டே ட் செய்கிறோம்.


2) அட்வான்ஸ் தொகை முழுவதையும் அவ்வாறே செய்கிறோம்


3) வீட்டுக்கு பெயிண்ட் மற்றும் இதர மராமத்து வேலை, தோட்ட வேலை போன்றவற்றையும் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களை வைத்து செய்கிறோம்.


4) பிற வகைச் சொத்துக்களையும் விவசாய பூமியென்றால் அதை வேலியிட்டு, தகுந்த பயிர் செய்ய குத்தகைதாரரை ஒப்பந்தம் செய்து, அதன் பலனையும் வருடம் தோறும் உரிமையாளருக்கு பெற்றுத் தருகிறோம்.


5) வெறும் இடமென்றால் வேலியிட்டு அதை பாதுகாப்பாய் வைத்திருக்கிறோம்.


6) வரி மற்றும் இதர கட்டணங்களையும் செலுத்தி அதை ஆன்லைனிலே உரிமையாளர் மட்டும் பார்க்கும் படியும் செய்கிறோம்.


7) மேலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் சர்வீஸ்களையும் வழங்கி வருகிறோம். 

இதனை ப்ராபர்ட்டி மெயிண்டனன்ஸ் என்று நாங்கள் அழைக்கிறோம். இது பற்றிய இதர விபரங்களை எங்களது நிறுவன இணையதளத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேற்படிச் சேவைக்கு வருடம் தோறும் ஒரு சிறிய கட்டணத்தை சர்வீஸ் சார்ஜாக வசூல் செய்கிறோம். மேலே பட்டியலிடப்பட்ட சர்வீஸ் தவிர வேறு எந்த சர்வீஸ் என்றாலும், நிறுவன விதிகளுக்கு உட்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். மேலும் விபரங்கள் அறிய எங்களைத் தொடர்பு கொள்ளவும்.


கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்ச்சூன் நிறுவனங்கள்
தொடர்புக்கு : +91 422 4275976

Thursday, January 13, 2011

வீடு பற்றிய ஒரு தொடர் - 2 (அனைவருக்குமான அத்தியாவச தொடர்)

இனி வீடுகளின் வாசல்கள் பற்றிய பலன்களைக் காணலாம். 

கிழக்கு தலைவாசல் :

கிழக்கு திசையிலிருந்து வரும் காற்று, மழை, வெப்பம் போன்றவை உடலுக்கு நன்மை தரக்கூடியது. இத்திசைக்கு உரியவர் இந்திரன் என்றுச் சொல்லுவார்கள். இவர் தேவர்களுக்கு அரசர். இவர் அதிக செல்வமும், கல்வி, தொழில், அமைதி போன்றவற்றை அளிப்பவர் என்றுச் சொல்லுவார்கள். சுகபோகமான, சந்தோஷமான வாழ்க்கை வாழ நல்ல பலன்களைத் தர வல்லது இந்த கிழக்குத் திசையில் தலைவாசல் கொண்ட வீடுகள். அதிகமான சுப பலன்களைத் தரக்கூடிய வலிமை வாய்ந்த கிழக்குத் திசை வீடுகள் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.

மேற்கு தலைவாசல :

மழைக்கு அதிபதியான வருண பகவானின் திசை என்றும், மனித குலத்தை மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும் தேவையான மழை பொழிபவர் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.  மேற்குத் திசையில் தலைவாசல் வைத்திருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் விவசாயத்தில் செழிப்பார்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள்.  மேலும் நல்ல திடமான மனது, தன்மானம், ஆழ்ந்த சிந்தனை, ஆராய்ச்சி போன்றவற்றில் ஆர்வமுடையவர்களாய் இருப்பார்கள். அது மட்டுமின்றி மேற்கு திசையிலிருந்து வீசும் காற்று வெப்பமுடையதாய் இருக்கும். சூடு அதிகமானால், உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் உருவாகும். இவ்வகை வீடுகளில் வசிப்போய் சூடு சம்பந்தமான நோய்களுக்கு ஆட்படுவார்கள் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

நாளை மற்ற வாசல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ஊட்டியில் உள்ள சொத்துக்களை வாங்க விரும்புவோர் கவனத்திற்கு

ஊட்டியில் மிக நல்ல பங்களாக்களும், டீ எஸ்டேட்டுகளும்,நல்ல வருமானம் தரும் காட்டேஜ்ஜுகள், ஹோட்டல்களும் விற்பனைக்கு எங்களிடம் கிளையண்டுகள் கொடுத்திருக்கின்றார்கள். 

எந்த சொத்திலும் எந்த விதமான வில்லங்கங்களும் கிடையாது. மார்கெட்டு விலைக்கு ஏற்ப மிக நல்ல விலையுடன், உடனடிக் கிரயத்திற்கு தயாராய் இருக்கின்றன. இச்சொத்தை பார்வையிட விரும்புவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் அதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து தர ஆர்வமாயிருக்கின்றோம்.

10 ஏக்கரிலிருந்து 3000 ஏக்கர் வரையிலான டீ எஸ்டேட்டுகள், மிக நல்ல வருமானம் தரக்கூடிய ஹோட்டல்கள், காட்டேஜ்ஜுகள் இருக்கின்றன. தனி பங்களாக்களும் எங்களிடம் இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்க.

மேற்படிச் சொத்துக்களை பார்வையிட விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களுடன், தங்களுக்குத் தேவையான அல்லது விரும்பக்கூடிய சொத்துக்கள் பற்றிய விபரங்களை கீழே இருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். போன் மூலமும் தொடர்பு கொள்ளவும்.

இமெயில் : info@fortunebricks.net அல்லது info@fortuneenterprise.in அல்லது covaimthangavel@gmail.com

தொலைபேசி எண் : + 91 422 4275976 

மிக்க அன்புடன்
கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்சூன் பிரிக்ஸ் /  ஃபார்சூச் எண்டர்பிரசைசஸ் / ஃபெமொ மாடலிங் கம்பெனி

எங்களது நிறுவன இணையதளங்கள்
===================================



Wednesday, January 12, 2011

வீடு பற்றிய ஒரு தொடர் - 1

ஒவ்வொருவருக்கும் வீடு என்பதுதான் தாயின் கருவறைக்கு அடுத்த அறை. எத்தனையோ இன்னல்கள், துன்பங்களில் சிக்கி வீடு வருபவர்கள் நிம்மதியாய் தூங்கி துன்பங்களை மறந்து மறு நாள் காலை புத்துணர்ச்சியாய் எழுந்து கொள்ள, தாயின் மடிபோல் விளங்கும் இடம் தான் வீடு. வீட்டினை கோயில் என்று சொல்ல வேண்டும். இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று வீடு. இந்த வீடு தான் மனிதனின் அனைத்துக்குமான இடம். ஒருவன் வாழ்வாங்கு வாழ இந்த வீடு தான் அடையாளம். இத்தகைய பெருமை வாய்ந்த இடத்தைப் பெற்றிருக்கும் வீட்டினைப் பற்றி இனி நாம் கொஞ்சம் கொஞ்சமாய் பார்க்கலாம். நாம் வசிக்கும் வீடு எப்படிப்பட்டது ஓரளவு தெரிந்து கொள்ள வேண்டியது அனைவரின் கடமை. 

முதலில் வீட்டு மனையின் வடிவம் எப்படி இருக்க வேண்டுமென்பதைப் பார்க்கலாம்.

வீட்டு மனை சதுரமாகவோ அல்லது செவ்வகமாக இருந்தால் அது வீடு கட்ட தகுந்த நிலம் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட மனையில் வீடு கட்டினால் செல்வம் பெருகும் என்றும் சொல்லி இருக்கின்றார்கள். அடுத்து, அகலமான பக்கங்கள் சம அளவிலும், நீளப்பக்கங்கள் உள்ளடங்கி இருந்தாலும் அதுவும் சிறந்த மனைதான். அதுவுமன்று அகலமான பக்கங்கள் அகன்றிருந்தால் கூட பரவாயில்லை என்றும் சொல்லி இருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கும் மனைகளைத் தவிர வேறு வடிவம் கொண்ட மனைகளில் வீடு கட்டுவது அவ்வளவு நல்ல பலனைத் தராது என்றுச் சொல்கின்றார்கள்.

இன்றைக்கு மனையின் வடிவம் எவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்பதைப் பார்த்தோம். நாளை வீட்டு வாசல்களைப் பற்றிப் பார்ப்போம்.

சரி, எங்களது ஃபார்சூன் பிரிக்ஸ் ( FORTUNE BRICKS) நிறுவனமும் மற்றொரு பில்டர் நிறுவனமும் இணைந்து கோவையில் இருக்கும் ஒண்டிப்புதூரில் 2.50 செண்ட்டில் மனையும், அதில் 1000 சதுர அடிக்கு இரண்டு பெட்ரூம், ஹால், கிச்சன், போர்டிகோ வைத்து 24 நான்கு தனித்தனி வீடுகளைக் கட்ட இருக்கிறோம். இதன் விலையாக ரூபாய் 25 லட்ச ரூபாய் நிர்ணயித்து இருக்கிறோம். ஒண்டிப்புதூர் திருச்சி சாலையில் நெசவாளர் காலனி அருகில் தான் மேற்படி வீடுகள் அமைய இருக்கின்றன. விரைவில் வீட்டின் வரைபடம் மற்றும் இதர விபரங்களை வலையேற்றுவோம். வீடு வேண்டுவோர் முன்பதிவு செய்து கொள்ளவும். எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 0422 4275976

- கோவை எம் தங்கவேல்
எக்ஸிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம்
www.fortunebricks.net

Tuesday, January 11, 2011

கோவை ஹோப் காலேஜ் சாலையில்....

காலையில் கையின் மேற்புறம் காயமாகி விட்டது. அதன் மீது மருந்து தடவி இருந்தேன். ஒரே வலி. ரத்தமும், மருந்தும் காய்ந்து போய் இருந்தது.

எனது வண்டியில் இருக்கும் சைலென்சர் வெயிட் அதிகமாதலால் அடிக்கடி கழண்டு விடும். அதற்கொரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் அல்லாடிய போது, எனது நண்பர் பிஎஸ் ஆரின் அறிவுறுத்தலின் படி, மாலையில் ஹோப் காலேஜ் மெக்கானிக்கிடம் சென்றேன்.

அவர் ஒவ்வொரு பாகமாய் கழட்டி எடுத்து, கிட்டத்தட்ட அரைமணி நேரமாய் உட்கார்ந்து ஏதேதோ கணக்குகளைப் போட்டு, ஒரு வழியாய் ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கி வந்து, சைலென்சரைப் பொறுத்தினார்.

நான் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது சாலை வழியே சென்று கொண்டிருந்த ஒரு பெரியவர் என் அருகில் வந்தார். என் முகத்தினைப் பார்த்தார். கையைப் பிடித்து ”காயமாயிடுச்சா?” என்றார். நான் ஆம் என்பது போல தலையை ஆட்டினேன். காயத்தைச் சுற்றி விரல்களால் தடவி விட்டார். “காயம் சீக்கிரம் ஆறிடும்” என்றார். ”எல்லாம் சரியாகி விடும்” என்றார் தொடர்ந்து. நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”மட்டன், சிக்கன் சாப்பிடாதீர்கள்” என்றார்.

நான் இவை இரண்டுமே சாப்பிடுவதே இல்லை. சிரித்தார் சென்று விட்டார்.

”யார் அவர்?” என்று கேட்டார் மெக்கானிக். 

“தெரியவில்லை” என்றேன் குழப்பமாய்.

யார் அவர்? ஏன் என் அருகில் வந்தார். ஏன் அப்படி நடந்து கொண்டார்? ஒன்றுமே தெரியவில்லை.



Monday, January 10, 2011

கோவையில் சொத்து வாங்கப் போகின்றீர்களா?

எங்களது நிறுவனம் “ ஃபார்ச்சூன் பிரிக்ஸ்” ஒரு பதிவு செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம். கடந்த இரண்டு வருடங்களாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நிலையில் மிகக் குறைந்த விலையில் மனைகளையும், வீடுகளையும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு வாங்கிக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. கோவையில் சொத்துக்களை வாங்கவும், விற்கவும் நாங்கள் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு உதவி வருகிறோம்.

சொத்துக்களை விற்க விரும்புவரிடம் அவரின் எதிர்பார்ப்பு என்ன, மார்கெட் நிலவரம் என்ன என்பது பற்றியெல்லாம் பேசி முடிவெடுத்து, சொத்துக்களின் வில்லங்கள், கடன்கள் போன்றவைகளையெல்லாம் சேகரித்து, எங்களின் நிறுவன வக்கீல் மூலம் அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து அதன் பிறகே எங்களது வாடிக்கையாளர்களிடம் சொத்து விபரங்களைச் சமர்பிக்கின்றோம்.

சிலர் கூடுதல் விலை வைத்து, சொத்துக்களை வாங்குபவர்களிடம் விற்று விடுவார்கள். ஆனால் ஃபார்சூன் பிரிக்ஸ் இதில் மிகக் கவனமாய் இருக்கிறது. எங்களின் பலமே ‘நேர்மையான, நம்பிக்கையான' விற்பனை மட்டுமே. சொத்து வாங்குபவர்களுக்கு மார்க்கெட்டை நிலவரத்துக்கு ஏற்ற நல்ல விலையும், விற்பவருக்கு மார்கெட்டை ஒட்டிய விலையையும் பெற்றுத்தருகிறோம்.

எங்களிடம் சொத்துக்கள் வாங்க விரும்புவர்களின் தேவைகளை முழுமையாகக் கேட்டறிந்து அதற்கேற்ப சில ஆலோசனைகளை வழங்கி, அதன்பிறகே வாடிக்கையாளர்களுக்கு சொத்துக்களை காட்ட முற்படுகிறோம். 

ஒவ்வொரு முறையும் வில்லங்கங்கள், மற்ற பிற வேலைகளுக்கு அலையாமல் அத்தனை வேலைகளையும் நாங்களே செய்து கொடுத்து விடுகிறோம். சொத்து விற்பவருக்கும், வாங்குபவருக்கும் தேவையான அத்தனை உதவிகளையும் செய்து நல்ல முறையில் விற்பனையில் உதவி வருவதால் பல இடங்களில் இருந்து புதிய வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இவை அனைத்துக்கும் மிகக் குறைந்த கட்டணம் மற்றுமே பெற்றுக் கொள்கிறோம். 

சொத்துக்கள் விற்க விரும்புவோரும், வாங்க விரும்புவோரும் எங்களை தொடர்பு கொள்ளலாம். 

Phone : + 91 422 4275976

வெளி நாடுகளில் வசிப்பவர்களின் சொத்துக்களை நிர்வகித்து, வாடகை வசூல், வரி கட்டுதல் போன்றவற்றிலும் நாங்கள் மிகச் சிறந்த சேவையினை வழங்கி வருகிறோம். இது பற்றிய விபரங்களை அறிய எங்களின் இணைய தளத்தினை பார்க்கவும்

மேலும் சொத்துக்களை விற்கவோ அல்லது வாங்கவோ விரும்புவர்கள் எங்களது நிறுவனம் நடத்தும் இலவச இணைய தளத்தில் உறுப்பினராகி பதிவு செய்தால் நேரடியாக வாடிக்கையாளர்கள் கிடைக்கவும் உதவுகிறோம்.

எங்களது இணையதள முகவரி : http://www.fortunebricks.net

* * *




Friday, January 7, 2011

கோயமுத்தூரில் கீரைக்கட்டு பத்து ரூபாய்


நம்பவே முடியவில்லை. சரியாக 30 நாட்களுக்கு முன்பு வரை, கோவையிலிருக்கும் சிங்கா நல்லூர் உழவர் சந்தையில் ஒரு கட்டு கீரை ரூபாய் 4.00 என்று விற்பனை ஆனது. இன்று காலையில் ஒரு கட்டு ரூபாய் 10 என்று விற்றார்கள். யார் இந்த விற்பனையாளர்கள் என்று பார்த்தால், ஒருவர் கூட விவசாயிகள் கிடையாது. விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட 'உழவர் சந்தை' இன்றைக்கு வியாபாரிகள் சந்தையாக மாறிப் போய் விட்டது. நேரடியாக விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலைக்கு மொத்தமாக கீரைக்கட்டுகளை வாங்கி அடுத்த அரைமணி நேரத்தில் மிக அதிக விலைக்கு விற்கின்றார்கள் இந்த வியாபாரிகள். இவர்களுக்கு அன்றாடம் கிடைக்கக் கூடிய லாபம் ஒன்று மட்டுமே குறிக்கோள். இவ்வகை வியாபாரிகளை ‘கோயமுத்துர் சிங்கா நல்லூர் உழவர் சந்தை'யின் அதிகாரிகள் உள்ளே நடமாட விட்டு, அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்று விடுகின்றார்கள். 

ஒரு முறை, நான் நேரில் கண்டது உண்மைச் சம்பவத்தை இவ்விடத்தில் சொல்ல விரும்புகிறேன்.ஒரு அதிகாரி, வெங்காய வியாபாரியிடம் ‘காளான்' இருக்கிறதா என்று கேட்டார். அனைத்துக் காளான்களும் விற்று விட்ட நிலையில், அந்த வியாபாரி அந்த அதிகாரியிடம் சொன்னது “சார் ஐந்து நிமிடத்தில் தருவித்து தருகிறேன்” என்றார். சொன்னபடியே இரண்டு பாக்கெட் காளானை இலவசமாய் வழங்கினார் அந்த வியாபாரி. அதிகாரியும் கெத்துக் குறையாமல் வாங்கிச் சென்றார். 

இதே போன்று, போர்டில் இருக்கும் விலை ஒன்றாகவும், விற்கும் விலை ஒன்றாகவும் சிலர் விற்பனையாளர்கள் விற்பதை கம்ப்ளெயிண்ட் செய்தால் அப்போதைக்கு காமாச் சோமாவென்று சொல்லி சரி செய்கிறார்கள். ஆனால் அதே வியாபாரி தொடர்ந்து கடை போட்டுக் கொண்டிருப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், விலைவாசியைக் கட்டுப்படுத்த தவறினால் ஆளும் அரசுக்கு மக்களிடம் மிகப் பெரும் வெறுப்பு உண்டாகி விடும். அரசு கொண்டு வரும் திட்டங்களை சரியாக அமல்படுத்தாமல், அலட்சியப் போக்கில் செயல்பட்டு வரும் இவ்வகை அதிகாரிகளை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. மக்களால் அரசு அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்க இயலாமல், தமிழக அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருவதை நாம் பல சம்பவங்கள் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அரசு அலுவலர்கள் மட்டுமல்ல சமூகம் என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் கோவையில் 'அல்பேனியா' பள்ளியில் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், பெற்றோர்கள் கோபமடைந்து சாலை மறியல் செய்தார்கள். இவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததாக ‘சன் செய்திகள்' வெளியானது. குற்றம் செய்தவனை விட, குற்றம் செய்யத்தூண்டியவர்கள் மீது நடவடிக்கை ஒன்றினையும் எடுக்காத காவல்துறையினரின் 'சட்டம் ஒழுங்கு' பற்றி என்ன சொல்லமுடியும்? பள்ளியின் நிர்வாகியை அல்லவா கைது செய்திருக்க வேண்டும் காவல்துறை. காவல்துறையினரின் சில செயல்பாடுகள் மக்கள் விரோதமாய் சென்று விடுகின்றன. மக்கள் இல்லையென்றால் நாம் இல்லை என்பதை காவல்துறையினர் உணர வேண்டும்.

கீரைக்கட்டு 10 ரூபாய் என்றால் வருங்காலத்தை நினைக்கையில் நிலைமை என்னாகுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

தமிழக அரசு உழவர் சந்தைகளில் நடக்கும் 'கோல்மால்களை' சரி செய்ய, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களைச் சரிவரச் செயல்படுத்தாத அதிகாரிகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் தயங்கக்கூடாது என்பது பெரும்பாலான மக்களின் எண்ணம்.

Wednesday, January 5, 2011

கிணறுகள்

வீட்டிற்குப் பின்புறம் வடமேற்கு மூலையில் கிணறு இருக்கும். பத்தடியில் நீர் நிறைந்திருக்கும். மழைக்காலங்களிலோ தண்ணீர் ததும்பி வழியும். விடிகாலை ஐந்து மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு, வாளியை கிணற்றுக்குள் விட்டு, தண்ணீரை இறைத்து இறைத்து அருகில் இருக்கும் மண் பொக்கையில் நிரப்பி வைப்பேன்.


நான்கு படப்பைக் கற்கள் அருகருகே பாவி இருக்கும். அதன் மீது அமர்ந்து தான் குளிப்பேன். குளிக்கும் தண்ணீர் வாய்க்கால் மூலம் காசா லட்டு மாமரத்தின் அடியில் பாயும்.எனக்குப் பிடித்த சோப்பு மைசூர் ஜாஸ்மின். மல்லிகை மணம் வீசும். வெது வெதுப்பான கிணற்று நீரில் குளித்தால், உடம்பும், மனதும் எல்லையில்லா ஆனந்தத்தில் மிதக்கும். 


குளித்து முடித்து விட்டு, துவைத்து காய வைத்திருக்கும் உடைகளை அணிந்து கொண்டு வீட்டுக்கு வருவேன்.

எனது பால்ய காலத்தில் பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் கிணற்று நீரைத்தான் நான் அதிகம் பயன்படுத்தி வந்தேன்.

ஒரு முறை கிணற்றுக்குள் பாம்பு விழுந்து விட்டது. அதை எடுக்க வீட்டு வேலைக்காரர் போஸால் முடியவில்லை. பாம்பு பிடிக்கும் மாரிமுத்துவை அழைத்து வந்தார் தாத்தா. தட்டுக்கூடையில் வைக்கோலைப் பரப்பி நான்கு புறமும் கயிற்றினைக் கட்டி, தாம்புக் கயிறு மூலம் கிணற்றுக்குள் விட பாம்பு வசதியாய் கூடையில் வந்து விட்டது. மேலே கொண்டு வந்து, அதற்கு மேலோக பிராப்தி கொடுத்தார்கள்.

அதன்பிறகு, கிணற்றடிக்குச் செல்லுகையில் பாம்பு நினைவு வந்து விடும். கொஞ்ச நாள் தான். பயம் தெளிந்து விடும்.

கிணற்றுக்கு வடக்கே நானும் எனது மச்சானும் இணைந்து தோட்டம் ஒன்றினை உருவாக்கினோம். தினந்தோறும் தோட்டச்செடிகளுக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுவோம். தக்காளிச் செடியில் தக்காளி காய்த்து பழுத்து வருகையில் மனதுக்குள் அப்படி ஒரு சந்தோசம் கிளம்பும். அக்காவிடம் கொண்டு வந்து கொடுக்க, அவர் சமையலுக்குப் பயன்படுத்துவார். மீன் குழம்பில் மிதக்கும் அந்த தக்காளியை ஆவலோடு எடுத்து சாப்பிடுவேன். இம்மாதிரியான சந்தோஷங்களை அளித்த அந்தக்கால வாழ்க்கையை இன்று என குழந்தைகளுக்கு என்னால் அளிக்க முடியவில்லையே என்ற நீங்காத வருத்தம் என்னை விட்டு நீங்கவில்லை. கிராமங்களில் இன்றைக்கெல்லாம் கிணறுகள் மறைந்து போய், ஆழ்துளைக்கிணறுகள் வந்து விட்டன.  சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, எங்காவது கிணறுகள் தென்படுகின்றனவா என்று தேடிப்பார்த்தேன். பார்க்க முடியவில்லை. என் பிள்ளைகளுக்கு கிணறுகள் என்றால் என்ன என்பதைக் காட்டக் கூட முடியவில்லை. 

இன்றைய காலத்தில் பைப்பில் கொட்டும் நீரை, மக்கில் அள்ளி தலையில் கொட்டிக் கொண்டு வருகையில், கிணற்று நீரும் அதன் வெது வெதுப்பான தன்மையும் மனதோடு வந்து செல்வதை மறக்க முடியவில்லை. தாயின் கதகதப்பை அந்தக் கிணற்று நீர் தந்ததை எப்படித்தான் மறப்பது.

* * *