குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, September 12, 2022

நிலம் (101) - நில விற்பனையில் அதிரடிக்கும் புதுவித மோசடி

நிலம் தொடரின் 101 வது பகுதி எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நான் எழுதிய பதிவுகள் பலருக்கும் பயன்பட்டிருக்கும் என நம்புகிறேன். எனது 20 ஆண்டு கால அனுபவத்தில் சொல்கிறேன், தற்போது நேர்மை என்றால் என்ன விலை என்று கேட்கின்றார்கள். 

நேரமும், சூழலும் அமைந்தால் ஒருவரை அழித்துதான் ஆக வேண்டுமென்றால், மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு (அப்படி ஒன்று இருக்கிறதா?) மனம் கூசாமல் அழிக்கும் செயலைச் செய்கிறார்கள்.

இன்ஸ்டண்ட் பணம், மாயாஜாலமாக வந்து விடாதா என்று பரபரக்கின்றார்கள். 

பணம் தகுதி உடையவர்களிடம் வந்து சேரும். அந்தத் தகுதியை எப்படி வளர்த்துக் கொள்வது என்று எவருக்கும் தெரியவில்லை? இந்த உலகம் அதைச் சொல்லித் தருவதும் இல்லை.

உடனே ஐ.டி, இஞ்சினியர், டாக்டர், படிப்பு என்று ஆரம்பிக்காதீர்கள். படிப்பு என்பது ஒரு தகுதி. அவ்வளவுதான். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. 

அனுபவம் என்பது வேறு, படிப்பு என்பது வேறு. இரண்டுக்கும் தலைகீழ் வேறுபாடு இருக்கிறது. படிப்பறிவு பட்டறிவாக மாற வேண்டும். 

வேலைக்குச் செல்வது, செக்குமாடு போல குரலுக்கு அடிபணிந்து வேலை செய்வது என்பது பாதுகாப்பான வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். அதுவல்ல வாழ்க்கை என்பது ரிட்டயர்ட் ஆன பிறகு தான், தான் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது எனத் தோன்றும்.

கார், வீடு, பணம் எல்லாம் இருக்கும். ஆனால் வாழ்க்கை ஓடிப்போயிருக்கும். கண் முன்னால் நோயும், மரணமும் நின்று கொண்டிருக்கும். 

வேதாந்தம் பேசாதே, மாதச் சம்பளம் தான் பாதுகாப்பான வாழ்க்கை என நினைப்பவர்களுக்கு நான் சொல்வது புரியாது. 

விசித்திரமான வாழ்க்கையில் நாம் எவரும் நம் வாழ்க்கையை வாழவே இல்லை என்பது சாபக்கேடு. அதை உணர்ந்து கொள்ளவே முடியாத அறிவுதான் நாகரீகம் என்பது அதை விடக் கொடுமை.

இனி அதிரடிக்கும் புதுவித மோசடி என்னவென்று பார்க்கலாம்.

சென்னையில் இருக்கும் ஒரு வாடிக்கையாளார் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு விலை பேசி, அட்வான்ஸ் கொடுத்து விட்டு, பேப்பர்களை வாங்கி என்னிடம் லீகலுக்குக் கொடுத்தார். நானும் லீகலுக்குத் தேவையான ஆவணங்களைப் பெற்று, ஆவணங்கள் ஆய்வு வேலையைச் செய்து கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் நில உரிமையாளார் அட்வான்ஸ் கொஞ்சம் அதிகமாக கேட்டதால் அதற்குரிய ஆவணங்களைத் தயார் செய்து, நில உரிமையாளரிடம் கையொப்பம் பெறச் சென்றேன். 

அவர் நான் கொடுத்த பேப்பரில், என்ன எழுதி இருக்கிறது என்றுப் படித்துப் பார்க்காமல் கையொப்பம் இட்டார்.  உள்ளே அலாரம் அடித்தது. ஏதோ சரியில்லையே எனத் தோன்றியது.

வாடிக்கையாளருக்கும் அவருக்கும் நல்ல உறவு இருக்கலாம். எதையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டாமென்று நினைத்தேன்.

அடுத்த ஒரு மாதத்தில் கிரையப்பத்திரம் தயார் செய்து விட்டு, வாடிக்கையாளருக்கு அழைத்தால் கிரையம் நடக்கவில்லை என்றார். 

காரணமென்ன என விசாரித்தால், நில உரிமையாளரின் அம்மா, நிலத்தை விற்க வேண்டாமென்றுச் சொல்லி விட்டதால், அட்வான்ஸ் பணத்தை திரும்பத் தருவதாகச் சொல்லி விட்டார் என்று வருத்தத்தோடு சொன்னார். அம்மா சூசைடு செய்து கொள்வதாக மிரட்டுவதாகவும் திரைக்கதை எழுதி இருக்கிறார் நில உரிமையாளர்.

ஆனால் அது காரணம் அல்ல என்று எனக்குத் தெரிந்து விட்டது.

அந்த நில உரிமையாளரின் மொத்தச் சொத்து வரலாறும் என்னிடம் இருந்தது. அதில் ஒரு சொத்து வங்கியில் அடமானக்கடனில் இருந்தது. வங்கியில் நண்பர் மூலமாக விசாரித்தேன். வங்கி மேனேஜர் நில உரிமையாளரை பாராட்டி மகிழ்ந்தார். ஏலம் போக இருந்த சொத்தினை மீட்டு விட்டார் இந்தப் பணத்தை வைத்து. அடுத்தக் கடன் வேறொரு வங்கியில் வைத்து வாங்கிய பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து விடுவார். 

வட்டி இல்லாக் காசு ஆறு மாதத்திற்கு. கொஞ்ச நஞ்ச தொகையில்லை சுமார் இருபது லட்சம். அத்தனையும் அக்கவுண்டில் வாங்கினார். அந்த அக்கவுண்டில் இருந்து  லோன் அக்கவுண்டுக்கு பணம் கட்டி சொத்தினை மீட்டு விட்டார்.

இப்படித்தான் இப்போது பெரும்பாலும் நடக்கிறது. இனி நடையாய் நடந்து  அப்பணத்தை வாங்க வேண்டும். கோர்ட்டில் வழக்குத் தொடுத்தால் என்ன ஆகும் என நீங்களே புரிந்து கொள்ளுங்கள். மொத்தப் பணமும் வருவதற்குள் எல்லாம் செலவாகி இருக்கும். மன உளைச்சல் வேறு.

இப்படி ஒரு பகீர் திட்டத்தை இந்தியாவெங்கும் பலரும் செயல்படுத்தி வருவதாக பல நண்பர்கள் சொல்லக் கேட்டேன்.

சொத்தினை விலை பேசி அட்வான்ஸ் தொகை கொடுத்து விட்டு, வீடு வந்து சேர்வதற்குள், வேறொரு புரோக்கர் ஒரு ஆளைச் செட் செய்து, அதிக விலைக்கு கேட்பார்கள். அதை நம்பும் நில உரிமையாளர் விலையை அதிகம் சொல்வார். இல்லையென்றால் அட்வான்ஸைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்பார். 

ஒரு புரோக்கர் சம்பாதித்து விடக்கூடாதே என்று இன்னொரு புரோக்கர் இந்த தகிடுதத்தைச் செய்வார். இப்படித்தான் பெரும்பாலான நிலங்கள் விற்பனை ஆகாமல் கிடக்கின்றன.

கடன் இருக்கா, சொத்தினை விற்பனை செய்கிறேன் எனப் புரோக்கர்களிடம் சொல்ல வேண்டியது. எவனாவது ஏமாந்தால் அவனிடமிருந்து தொகையைப் பெற்று கடனைக் கட்டி விட்டு, ஒரு சிலர் கம்பி நீட்டி விடுவார்கள். இதில் ஊர் பிரசிடெண்ட், கவுன்சிலர், மாவட்டம், ஒன்றியம், கிளை, வட்டம், யெம்ம்ல்லே, மினிஸ் என்று எவராவது உள்ளே வந்து விட்டால் அதோகதிதான்.

இப்போதெல்லாம் நிலம் வாங்க வரும் ஆள் எப்படி என கணித்து விடுவார்கள். அவர்களுக்கு ஏற்ப ஸ்கெட்ச் தயாராகி விடும். இதுவெல்லாம் அறியாமல் விட்டில் பூச்சிகளாய் விடுவர் ஒரு சிலர்.  இன்னும் ஊட்டியில் நாற்பது இலட்சத்தை அட்வான்ஸாக கொடுத்தவருக்கு கிரையமும் ஆகவில்லை, பணமும் கிடைக்கவில்லை, நிலத்தின் உரிமையாளரையும் அவர் கண்டுபிடிக்க முடியவில்லை. நடையாய் நடக்கிறார். முன்பே இது பற்றி ஒரு பதிவில் எழுதி இருந்தேன்.

இந்தபதிவினை விழிப்புணர்வுக்காக எழுதி இருக்கிறேன். எவரையும் குறை சொல்லவோ அல்லது குற்றம் சாட்டவோ எழுதவில்லை. என் அனுபவத்தில் நான் கண்ட உண்மையைப் பதிவு செய்திருக்கிறேன். 

சமீபத்தில் கிரைய ஒப்பந்தம் எழுதி பதிவு செய்து கொடுத்தவர் ஒருவர், நான் அதை எழுதிக் கொடுக்கவே இல்லை என வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். எப்படியெல்லாம் பிழைக்கிறார்கள் பாருங்கள். பணம் கொடுத்த ஆளுக்குத் தூக்கம் வருமா? நினைத்துப் பாருங்கள். இனி வழக்கு, புகார் என்று போனால் எத்தனை வருடமோ? இதில் மற்றுமொரு பிரச்சினை - ரொக்கமாகக் கொடுத்த தொகை என்னவாகும்?

நாமம் தான்.

இனி கவனமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். 

யாரைத்தான் நம்புவதோ? எப்படித்தான் நிலம் வாங்குவதோ? என்று தோன்றும். சின்ன விஷயம் தான். மிகச் சரியாகச் செய்ய வேண்டும். அது என்ன? அது என் தொழில்? அதை எப்படி பொதுவில் சொல்ல முடியும்?

வாழ்க வளமுடன்...!

எனது “கொஞ்ச நேரம் பேசலாமா?” புத்தகம் டிஜிட்டல் வடிவில் அமேசானில் விற்பனைக்கு இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம். நிச்சம் அந்தப் புத்தகம் உங்களுடன், உங்கள் மனதுடன் பேசும் என நம்புகிறேன். 

புத்தகத்தின் விலை ரூ.120/-

படத்தினைக் கிளிக் செய்தால் அமேசான் லிங்க் கிடைக்கும்.

Saturday, September 10, 2022

ஸ்டாலினிசம் (3) - உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே

1920 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் முதல் மேயர் சர்.பி.டி.தியாகராசர் வெற்றி பெற்றார். அந்த காலத்தில் நீதிகட்சி ஆட்சியிலிருந்தது. 1920 ஆம் ஆண்டுகளில் தான் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்க் மதிய உணவு அளிக்கப்பட்டது. 

அப்போதைய காலத்தில் அரசாங்கப் பள்ளிக் கூடங்களுக்கு தலையில் குடுமியுடனும், பஞ்சகச்சத்துடன் பள்ளிக்கு மிடுக்காகச் சென்று கொண்டிருந்த பிராமணப் பையன்களுடன், பிராமணர்களால் ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களும் பள்ளிக்குச் சென்றனர். இதைக்கண்டு பொறுக்காத ஆட்சியில் அப்போது இருந்த பிராமணர்களும், பிராமண பத்திரிக்கைகளும் அரசில் நிதி இல்லை என்றும், இன்னும் பல்வேறு காரணங்களைச் சொல்லும் 01-04-1925 ஆம் ஆண்டு இந்த மதிய உணவுதிட்டம் நிறுத்தப்பட்டது. 

பிராமணர்களின் நய வஞ்சகத்தால் மதிய உணவுத்திட்டம் நிறுத்தப்பட்டவுடன் பள்ளிக்கு ஒடுக்கப்பட்ட மாணவர்களின் வருகை குறைந்தது. 

கல்வி கற்க இப்போது ஒன்றிய பிராமணிய ஜாதி கட்சி கொண்டு வரும் நுழைவுத் தேர்வுகள் இத்தகைய தடைகளே! பிரதமருக்கும், மந்திரிகளுக்கும் நுழைவுத் தேர்வு இல்லை. 

ஆனால் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மட்டும் நுழைவுத் தேர்வு. 

ஏன்? ஏன்? 

ஒரே காரணம் பிராமணீயம். அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பிராமணிய அதிகாரிகளும், பி.ஜே.பி மட்டுமே.

அதன் பிறகு பல்வேறு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தது நீதிக்கட்சி.

அவருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற கல்வி வள்ளல், எளிய மனிதர் காமராஜர் அரசு, கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது. தமிழர்களுக்கு கல்வியே உயர்வினைத் தரும் என்று காமராஜர் நம்பினார். 

பஞ்சமும், பட்டினியுமாய் இருந்த இந்தியாவில் கல்வி கற்க வா என்றால் பசியா? கல்வியா என்று பார்க்கும் போது பசியே முன்னிலையில் நிற்கும். மதியம் சோறு போடுகிறோம், பிள்ளைகளைப் படிக்க அனுப்புங்கள் என்று தமிழக மக்களைக் கேட்டார். 

கல்விச்சாலையில் அறிவுப் பசியுடன், வயிற்றுப்பசியும் தீர்க்கப்பட்டது. தொடர்ந்து வந்த திராவிட கட்சியின் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவு சத்துள்ளதாக மாற்றப்பட்டது. கலைஞர் ஆட்சியில் இன்னும் கூடுதலாக மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்பட்டது.

இந்தியாவில் சத்துக்குறைபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது புள்ளி விபரம். ஆனால் தமிழ் நாடு அதற்கு முன்பே கர்ப்பிணிகளுக்கு சத்துணவு வழங்க ஆரம்பித்து விட்டது. பள்ளியில் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. 

கொரானாவினால் சுமார் 40 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டதையும், ஒன்றிய அரசின் வரிக்கொள்ளையினாலும், ஒருவர் மட்டுமே உலகப் பணக்காரராய் இருக்க வேண்டுமென்பதற்காக பணிபுரியும் அரசினாலும் மக்கள் படும் துயரங்களைப் பட்டியலிட முடியாது.

பார்ப்பனிய ஜாதி கட்சியின் வரிப்பிடுங்கல் சட்டத்தினால், மக்களிடமிருந்து கட்டாயப்படுத்திப் பிடுங்கப்படும் பணத்தினாலும், உணவுப் பொருள்களின் விலை உயர்வினாலும், வேலை இன்றி தவிப்பதாலும் அவர்கள் வாங்கும் உணவுப் பொருட்கள் அளவு குறைந்திருப்பதை திரு.ஸ்டாலின் அவர்கள் உணர்ந்துள்ளார்கள். 

ஒன்றிய அரசு மக்களை வறியவர்களாக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருவது மட்டுமின்றி இலவசமே வழங்கக் கூடாது என்கிறது. 

பார்ப்பனிய ஜாதிக் கட்சி உறுப்பினரை வைத்து, இலவசம் எந்த மாநில அரசும் இலவசம் வழங்கக் கூடாது என உத்தரவிடக்கோரி,  உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

மக்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, வரி செலுத்த மட்டுமே மக்கள் என்கிறது ஒன்றிய அரசு. அரசு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது என்கிறது.

ஒன்றிய அரசினால் ஏழையாக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள், தற்போது அரசுப் பள்ளிகளில் படிப்பதற்கு வருகின்றார்கள். இந்த நிலையில் சதியால் ஏழைகளாக்கப்பட்ட இந்திய மக்களால் தங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்தான உணவினை எங்கனம் வழங்க முடியும் என்று மக்களின் வலியை உணர்ந்தவர் முதல்வர் ஸ்டாலின்.

மக்களை நேசிக்கும் ஒரு தலைவரால் தான், அவர்களுக்கு உள்ள சிரமம் பற்றி அறியமுடியும். 

கடந்த பத்து ஆண்டுகளாக, தமிழர்களின் கஜானாவைக் கொள்ளை அடித்த நயவஞ்சக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஐந்து லட்சம் கோடி கடனையும் கருதாது, மக்கள் நலனே முக்கியம் என்ற மனிதாபிமானத்தில் உருவாக்கப்பட்டது தான் காலைச் சிற்றுண்டி உணவு திட்டம்.

விழித்தது முதல் சுறுசுறுப்பாக குழந்தைகள் இயங்குவதற்கான சக்தி காலை உணவிலிருந்து கிடைக்கிறது. ஆரோக்கியத்துக்கான புரதச்சத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கும் வைட்டமினும் தாதுப்பொருட்களும் நார்ச்சத்தும் உணவிலிருந்து கிடைக்க வேண்டும். உணவிலிருந்து பெறக்கூடிய சத்துக்களில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, ‘போலேட்’, ‘பி12’ மிக முக்கியமானவை. இரும்புச்சத்து மற்றும் ‘போலேட்’ உடலுக்கான ரத்த உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் ஏ கண் பார்வைக்கு உகந்தது என்கிறது உணவு ஆராய்ச்சி.

இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டசத்து நிலை பற்றி எடுக்கப்பட்ட ஆய்வில் தமிழ்நாட்டில் 5 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளில் 10% வரை ரத்தசோகையும், வைட்டமின் ஏ பற்றாக்குறையும், 41% பேர் ‘போலேட்’ பற்றாக்குறையும், 7% பேர் ‘பி 12’ பற்றாக்குறையும் உடையவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். 

தற்சமயம் ஆரம்பப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு 450 கலோரியும் 12 கிராம் புரதமும் கொடுக்கப்படுகிறது.  வாரத்தில் ஐந்து நாட்கள் சனி, ஞாயிறு தவிர உணவு வழங்கப்படுகிறது. முதல் ஐந்து நாட்கள் வெஜிடபிள் பிரியாணி, கருப்புக் கொண்டைக்கடலை புலாவ், தக்காளி சாதம், சாதம் காய்கறிகளுடன் கூடிய சாம்பார், கறிவேப்பிலை சாதம் வழங்கப்படுகிறது. அடுத்த ஐந்து நாட்கள் சாம்பார் சாதம், சோயாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ‘மீல் மேக்கர்’ சேர்க்கப்பட்ட சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் வழங்கப்படுகிறது. எல்லா நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது.

இது போதாதென்று முதல்வர் நினைக்கிறார். இளம் சிறார்களுக்கு ஊட்டச்சத்து காலையிலேயே கொடுத்தல் அவசியம் என்று தகப்பன் நிலையிலிருந்து சிந்திக்கிறார். சட்டமன்றத்தில் 08.05.2022 அன்று காலை உணவுத் திட்டத்தினை அறிவிக்கிறார்.

அவரின் கடமை இதுவென நினைக்கிறார். திமுகவின் கொள்கையில் கடமை முதலில்.

தமிழகத்தில் மாநில அரசின் முழுமையான நிதியைக் கொண்டு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

1,545 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ரூ.33.56 கோடி ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5 ஆயிரத்து 941 மாணவ, மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. 

தமிழகத்தில் 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37 ஆயிரத்து 740 மாணவ, மாணவிகளுக்கும், 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17 ஆயிரத்து 427 மாணவ, மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. 

காலைச் சிற்றுண்டியாக அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, வெண் பொங்கல், ரவா பொங்கல் போன்ற உணவு வகைகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாறி மாறி வழங்கப்படவுள்ளன. 

வாரத்தில் குறைந்தது 2 நாள்கள் உள்ளூா் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி தயாா் செய்யப்பட்டு வழங்கப்படும்.

அதுமட்டுமல்ல,  நுண்சத்துப் பற்றாக்குறையை ஈடுகட்டவும், மாணவர்களுக்குக் காய்கறி வளர்ப்பதற்குப் பயிற்சி அளிக்கவும், 10,000 பள்ளி வளாகங்களில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்கான திட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார். 

இதன்படி மதிய உணவு வழங்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் காய்கறித் தோட்டம் அமைப்பதற்காக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாணாக்கர்களுக்கு காய்கறிகள் வளர்க்கும் பயிற்சியும், அத்துடன் ஊட்டச்சத்துக்கு தேவையான உணவை ஒவ்வொரு பள்ளியும் உற்பத்திச் செய்து கொள்ளும் தன்னிறைவு உணவு உற்பத்தி செய்யும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி உள்ளார்.

இதுவரை எந்த அரசும் செய்யாத, எதிர்கால இந்தியாவிற்கு ஒப்பற்ற மக்களை ஒப்படைக்கும் கடமையாக இந்தக் காலைச் சிற்றுண்டி உணவு முதலிடம் வகிக்கும்.

தமிழர்களின் குழந்தைகளுக்கு எல்லாமும் கிடைத்து நிறைவு வாழ்க்கை வாழ வேண்டுமென்பது ஸ்டாலினிசம்.

ஸ்டாலினிசம் தமிழர்களின் உயர்வுக்கானது. ஸ்டாலின் எனும் ஒப்பற்ற தலைவரின் மனிதாபிமானத்தின், அற உணர்வின் வெளிப்பாடே ஸ்டாலினிசம்.

காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், மதுரையில் வரும் 15-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி வைக்கவுள்ளாா்

ஸ்டாலினிசத்தின் ஒப்பற்ற திட்டமே சிறார்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம்.

திருக்குரானில் ஹிஜாப் - உச்ச நீதிமன்றத்துக்கு மத விடயங்களில் தலையிட அனுமதி உண்டா? ஓர் பார்வை

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனும் ஆகிய இறைவனை வணங்கி இந்த பதிவைத் தொடங்குகிறேன்.

ஆதம் முதலாய் உலகிற்கு அருளப்பட்ட இறைத்தூதர்களின் வழியாக இறைவன், இறைத்தூதர்கள் வழியே மனிதர்களின் வாழ்க்கை ஒழுங்கு நெறிக்கு பல அறிவுரைகளை வழங்கி வந்து இருக்கிறார்.

அந்த வகையில் கி.பி.570 ஆண்டுகளில் முஹம்மது என்று அழைக்கப்படும் ஸல் நபிகள் நாயகத்தின் வழியாக, இறைவனால் வழங்கப்பட்ட ஒப்பற்ற ஒரு மார்க்கத்தின் விளக்கம் தான் திருக்குரான்.

திருக்குரான் நபிகள் வழியாக உலகிற்கு வழங்கப்படும் முன்பு, மக்களின் வாழ்க்கையை படியுங்கள் அன்பர்களே!

உயிரை நடுங்கச் செய்யும் பழக்க வழக்கங்களை வாழ்க்கையாக மக்கள் வாழ்ந்து வந்தனர். விலங்குகளை விட கொடிய, கொடூரமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். 

  • கடவுளை நிர்வாணமாக வழிபட்டனர்.
  • பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதியதுடன் பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
  • குடம் குடமாக மதுபானங்கள் அருந்தினார்கள்.
  • காமக் களியாட்டத்தில் மூழ்கித் திளைத்தனர்.
  • பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள்.
  • தந்தை இறந்து விட்டால் தந்தையின் மனைவியை மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வசாதாரணமாக இருந்தது.
  • சாதி வேற்றுமையும் தலை விரித்தாடியது.
  • ஒரு குலம் மட்டுமே உயர்ந்த குலம் எனவும் மற்றவர்கள் அற்பமானவர்கள் என்றார்கள்.
  • அரபுமொழி பேசுவோர் மட்டுமே மனிதர்கள் என்றும், மற்றமொழி பேசுவோர் அஜமிகள் (கால்நடைகள்) என்றும் கூறும் அளவுக்கு அவர்களிடம் மொழிவெறியில் மயங்கிக் கிடந்தனர்.
  • மனித உயிர்களைக் கொன்று குவிப்பது மிகச் சிறிய குற்றமாகக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. அற்பமான சண்டைகளுக்காகக் கூட கொலை செய்வார்கள்.
  • தமது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் கொலையாளியைப் பழி வாங்காமல் விடமாட்டார்கள். அவரைத் தம்மால் பழி வாங்க முடியாவிட்டால் தமது வாரிசுகளுக்கு வலியுறுத்திச் செல்வார்கள். பத்து தலைமுறைக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவனைக் கொன்று கணக்குத் தீர்ப்பார்கள்.

கி.பி.570 வருடங்களில் மக்கள் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. இதைக் கண்ட ஸல் - நபிகள் அவர்கள் ஹிரா குகைக்குள் சென்று தனிமையில் இருக்க ஆரம்பித்தார். அந்த நாட்களில் அவர் இறைவனின் தூதராக அறிவுறுத்தப்பட்டு, அவர் மூலம் திருக்குரான் மக்களுக்கு அருளப்பட்டது.

தற்போது உலகில் பெரும்பான்மையான மக்களால் வாழப்படும் மார்க்கமாக இஸ்லாம்  திகழ திருக்குரானின் வசனங்களே ஆதாரமாய் உள்ளது.

சமீபத்தில் கர்நாடகா உயர் நீதிமன்றம், இஸ்லாமிய பெண்கள் பள்ளிகளுக்கு வரும் போது ஹிஜாப் அணியக் கூடாது எனத் தடை விதித்தது.  ஏனென்றால் கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உபகிளையான பிராமணிய ஜாதிய கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் இந்தப் பிரச்சினை உருவாக்கப்பட்டது. 

இப்போது உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதி கொண்ட அமர்வில் இந்தத் தடை பற்றிய விசாரணை நடக்கிறது. விசாரணையின் போது நீதிபதிகள் சொல்லியதாக பல கருத்துகள் பத்திரிக்கைகளில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

வக்கீல் பாட்ஷா என்பவர் குஜாராத் சீக்கிய மதத்தினர் தலைப்பாகை அணிவது போலத்தான், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிகின்றனர் என்று வாதிடும் போது, அதுவும் இதுவும் ஒன்றல்ல என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. சீக்கியர் மதம் வேறு, இஸ்லாம் மதம் வேறு. சீக்கிய ஆண்கள் தலைப்பாகை அணிவதும், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதும் ஒன்றல்லவாம்.

Thanks to : Times of India.

ஹிஜாப் பற்றிய தீர்ப்பு எப்படி இருக்கும் என்று யோசிக்க வைத்து விட்டது நீதிபதிகளின் கருத்துகள். மை லார்டுகள், கேள்வி கேட்க முடியுமா?   

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் மட்டுமே கருவறைக்குள் அர்ச்சனை செய்ய வேண்டும், அது ஆகமம் என்றொரு தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி இருப்பதை நினைவில் கொள்க. மத நம்பிக்கைகளில் அரசு தலையிடக்கூடாது என்றும் கூடுதல் அறிவுறுத்தலும் இருக்கிறது.

சாதிய வன்முறையினை ஊக்குவிக்கும் ஆகமங்கள் உயர்ந்தது என்ற பார்வையில் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள். இறைவன் முன்னால் மனிதர்களில் வேறுபாடு இருக்க முடியுமா? 

இறைவன் மனிதர்களுக்குள் வேறுபாடு வைத்தா படைத்திருக்கிறான்? இல்லையே? 

தீண்டாமை குற்றம் என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். அந்தச் சட்டம் கோவிலின் கருவறைக்குள் செல்லாத ஒன்றா? எழுபது ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறது தமிழகம்.

சாதி வெறியர்களிடமிருந்து இன்னும் நடராஜர் கோவிலை மீட்க முடியாமல் உலகிற்கே மறை சொன்ன தமிழர் இனம் கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நீதிமன்றங்களும், நீதிபதிகளும் கட்சி மற்றும் மதச்சார்பு கொண்டிருப்பது சமீப காலங்களில் அதிகரித்து உள்ளது என்கிறது செய்திகள்.

மத விவகாரங்களில் தலையிட அரசுக்கு அனுமதி இல்லையெனில் நீதிமன்றத்துக்கு எந்தச் சட்டத்தின் படி அரசியல் சட்டமைப்பு அதிகாரம் கொடுத்திருக்கிறது என்றும் தெரியவில்லை. 

சிதம்பரம் நடராஜர் கோவிலும் ஆகமும், மதமும் ஒன்றெனில் இஸ்லாம் மதமும், ஹிஜாப்பும் வேறா? 

இஸ்லாம் மத விவகாரத்தில் தலையிட அரசுக்கோ அல்லது  நீதிமன்றத்துக்கோ அனுமதி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

சிதம்பரம் நடராஜர் கோவிலும் மதம் தொடர்பானதே அல்லவா? ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு விதமான விதிகள் உள்ளனவா என்றும் தெரியவில்லை.

எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. திருக்குரானில் ஹிஜாப் பற்றி ஏதும் இறை வசனங்கள் உண்டா?  கேள்விக்கு விடை தேடினேன். 

திருக்குரானில் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் அருளப்பட்ட இறை வசனங்கள் 114 அத்தியாயங்களில் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் 24வது அத்தியாயத்தில் அந் நூர் (அந்த ஒளி) என்ற பகுதியில் 31வது வசனமாக ஹிஜாப் பற்றி இப்படித் தெரிவித்திருக்கிறார் அல்லாஹ்.

24:31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

ஆகையால் திருக்குரானில் அல்லாஹ்வினால் அருளப்பட்ட வசனங்களில் பெண்கள் முக்காடுகளை அணிந்து கொள்ள அறிவுறுத்தி இருப்பதைப் பார்க்கலாம்.

அரசாங்கத்தில்  மதச்சார்பு உடையவர்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இறைவனின் அருளுரையில், வஞ்சக எண்ணத்துடன், மத அத்துமீறல்களை நிகழ்த்துவதென்பது வாடிக்கையாக இருப்பது வேதனை. 

நீதியும், நீதிமன்றங்களும் தெய்வத்தின் இருப்பிடமாகக் கருதப்படுபவை. அந்த அமைப்பில் மதச்சார்புடையவர்கள் தன் சுயநலத்துக்காகவும், எதிர்கால எம்.பி.பதவிகளுக்காகவும் இறைவனால் உலகிற்கு அருளப்பட்டவைகளை விசாரணை செய்கிறார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

கடவுள் எப்போதும் இருப்பவர். அவரால் படைக்கப்பட்டவர்களின் காலமும் நேரமும் அவனின் கைகளில் உள்ளது. 

நீதிபதிகளை மக்கள் இறைவனின் பிரதிநிதியாகப் பார்க்கின்றார்கள்.  தங்களின் பொறுப்பு எதுவோ அதை உணர்ந்தவர்கள் தன் உயரத்தை அறிவர்.  தன் உயரம் அறிந்தவர்கள் தன் எல்லையை அறிவர். அறியாதவர்களும் அவர்களின் வாரிசுகளும் தர்மத்தின் முன்னால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். 

தங்களை மன்னர்களாக கருதிக் கொள்வர்களுக்கும் ஒரு நாள் இறைவன் தேதி குறித்திருப்பான் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.

எதை விதைக்கின்றார்களோ அதை அறுவடை செய்தே தீர வேண்டியவர்கள் மனிதர்கள். அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனும் மனிதர்களின் செயல்களுக்கு தகுந்த தீர்ப்பினை நாடிடுவான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

இறுதியாக அல்லாஹ்வின் இறை வசனத்தோடு இப்பதிவினை முடிக்கிறேன்.

24:64. கவனத்தில் கொள்க! வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. எதில் நீங்கள் இருக்கிறீர்களோ அதை அவன் அறிவான். அவனிடம் அவர்கள் கொண்டு செல்லப்படும் நாளில் அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

எல்லாப் புகழுக்கும் உரியவர் அல்லாஹ் ஒருவரே!

வாழ்க வளமுடன் - ஒன்றே குலம், ஒருவனே தேவன்!

Friday, September 9, 2022

பெண்களும் - சாதி வெறியர்களும் - இஸ்லாம் மார்க்கமும்


(பெண்கள் படிக்க வேண்டிய அவசியமான புத்தகம் இது)

மனுஸ்மிருதியில் மனு என்ற மகான் பெண்களும், அவர்களைக் கையாளும் விதம் பற்றி எழுதி இருக்கிறார். பார்ப்பனிய இனம் தான் உயர் சாதி என்றுத் தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறது. 

மனுவின் தர்மத்தைப் பற்றிக் கீழே படியுங்கள். இந்த உயர் சாதி என்று உளறிக் கொண்டிருக்கும், இவர்களைத் தான் ஆகமம எனச் சொல்லி கோவில் கருவறைக்குள் பூசை செய்கிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியது. மனிதாபிமானம் அற்ற விதிகள் ஆகமம். மனிதனுக்குள் உயர்வு தாழ்வு உண்டாக்கும் விதிகள் தான் உயர்ந்ததாம்.

எவனோ ஒரு பரதேசி எழுதிய விதிகளை மெய் வாய் பொத்தி கேட்க தமிழர்கள் என்ன கேனயர்களா?

இன்னும் எத்தனை நாள் தான் ஏமாறுவீர்கள் இளிச்சவாய் தமிழர்களே...! வெட்கமில்லையா? மானமில்லையா? நெஞ்சுக்குள் ஈட்டி நுழைந்ததை வீரமெனக் கருதிய தமிழன் செத்துப் போனானா? இப்படியா ஒரு பிழைப்பு பிழைப்பது?

நம் சொத்துக்களைப் பிறரை அனுபவிக்க விட்டு வேடிக்கைப் பார்ப்பதா?விழுந்து கும்பிடுவதா? இதுவா வாழ்க்கை? இதுவா ஆன்மீகம்? கொடுமை.

உயர் சாதியில் பிறந்த மனு பெண்களைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார் எனப் படியுங்கள்.

மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்"25

மனு 2.214 இல், ''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்"25

மனு 2.215 இல், ''தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"25

மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்" என்கிறார்,

மனு 9.15 இல், ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்"

மனு 9.16 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்"25 என்கிறது, இந்து மதம். அதாவது பெண் ஆணின் அடிமை என்கின்றது. ஆண் அடித்தாலும், கொன்றாலும் எதிர்த்துப் போராடக் கூடாது என்கின்றது.

மனு 9.17 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீயநடத்தை ஆகியவை"

மனு 9.2 இல், ''இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்;. உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்."

மனு 9.3 இல், ''குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்."

மனு 9.5 இல், ''எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும் பெண்களிடம் தீயக் குணங்கள் தோன்றி வளர்வதைத் தடுத்தல் வேண்டும், பாதுகாக்காவிட்டால் இரு குடும்பத்திற்கும் துயரத்தை வருவிப்பார்கள்;" என்கிறது, இந்து தர்மம்.

மேலும் மனு 4.147 இல், ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது"

மனு 11.45 இல், ''கணவனும் மனைவியும் ஒன்றெனக் கூறப்படுவதன் பொருள் திருமணத்திற்குப் பின் மணமுறிவு, பிரிவு என்பதே கிடையாது."

மனு 9.46 இல், ''விற்றுவிட்டாலும், கைவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபட முடியாது."

மனு 5.149 இல், ''தந்தையிடமிருந்தோ, கணவனிடமிருந்தோ, மகன்களிடமிருந்தோ ஒரு பெண் பிரிந்தால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள். விவாகரத்து உரிமை கிடையாது"

மனு 8.415 இல், ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்" ( நன்றி : பதிவுத் தொகுப்புகள்)

மேலும் மனு எழுதிய பெண்கள் பற்றி மிக மோசமான விதிகளைப் படிக்க கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்குங்கள்.


போதுமா? இன்னும் இருக்கிறது எழுத நான் என் அம்மாவின் கருவறையில் இருந்தவன். அவளிடமிருந்து உயிர் பெற்று வாழ்ந்தவன். எவன் பெண்களைப் பற்றி இழிவாகவும், விதிகள் அதுகள் என்று பேசினாலும் அவனொரு மன நோயாளி. ஒரு மன நோயாளி எழுதியதைத் தான் இந்து தர்மம் என்றுச் சொல்லித் திரிகிறது ஒரு கூட்டம். 

* * *

இஸ்லாம் என்பது மதமல்ல. அது ஒரு மார்க்கம். ஊருக்குச் செல்லும் போது பஸ் எந்த மார்க்கமாகப் போகிறது என்று கேட்பார்கள். அது போல ஒன்றே கடவுள் என்று சொல்லும் உன்னதமான ஆன்மீக பாதை இஸ்லாம். நபிகள் நாயகம் இஸ்லாத்தின் முதல் மனிதர். நபிகள் பெருமானார் எப்போதும் தன்னை முன்னிலைப் படுத்தியதே இல்லை. அவர் கடவுளின் மகிமையைப் பற்றி மட்டுமே பேசினார்.

இஸ்லாம் மார்க்கத்தில் கடவுள் மட்டுமே. பூசாரி இல்லை, குருமார்கள் இல்லை. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் புரோக்கர்கள் இல்லை. சடங்குகள் இல்லை, சாதி இல்லை, சம்பிரதாயங்கள் இல்லை. கீழ், மேல், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று எந்த ஒரு வேறுபாடும் இல்லை. அதனால் தான் இஸ்லாம் உலகமெங்கும் பரவுகிறது.

இஸ்லாத்தில் கொலை செய்தவனுக்குத் தண்டனை கொலையே. ஆனால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தான் கொலையாளியை மன்னித்து, பகர் பெற்றுக் கொண்டால் மன்னிப்பு உண்டு என்கிறது.

இதுதான் மார்க்கத்துக்கும் சாதி வெறிக்கும் உள்ள வித்தியாசம்.

* * * 
தமிழர்கள் உலகிற்கு இஸ்லாம் மார்க்கம் சொல்வதை முன்பே அறிவித்தவர்கள்.

’ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று எழுதியது தமிழன் தான். உலகில் மனிதன் தோன்றிய பிறகு மனிதன் பேசிய மொழி தமிழ் தான் என்கிறது வரலாற்று ஆராய்ச்சி நூல்கள்.

உலகிற்கே முன்னுதாரனமாய் விளங்கிய தமிழர்களின் நாகரீகமும், அறிவும், செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டது மட்டுமல்ல, மடைமாற்றியது யாரென்று இனியும் உங்களுக்குச் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

தமிழர்களின் கோவில்களில் தமிழர்கள் பூசை செய்ய வேண்டும். அந்த நாளே தமிழர்கள் வீறு கொண்ட நாளாக இருக்கும். 

நாம் வீட்டைக் கட்டி விட்டு, வேறொவனுக்கு அனுபவிக்க கொடுப்பதா ஆகமம்? நியமம்? தர்மம்?

வாழ்க வளமுடன்...!

Thursday, September 8, 2022

தமிழர்களின் சதிராட்டம் பிராமணர்களின் பரதநாட்டியமானதன் நயவஞ்சக வரலாறு (1)

சதியால் சதிராட்டம் எப்படி பரத நாட்டியமாக மாற்றப்பட்டது என பார்க்கலாம். தமிழர்களின் நாட்டியக்கலையை வந்தேறி பார்ப்பனர்கள் தங்களின் சொத்தாக மாற்றி வெற்றி கண்ட அவலம் இது. சூடு, சுரணையற்ற தமிழர்களின் நிலையை எடுத்துக் காட்டும் வரலாற்று உண்மை இது. 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை செய்த சண்முக ஷர்மா ஜெயபிரகாஷ் என்பவர் (கவனிக்க ஷர்மா என்பது பிராமண இனத்தின் ஒரு பெயர்) நவரசம் - நடனத்தின் அழகிய அனுபவம் என்ற கட்டுரையினை இலங்கையிலிருந்து வெளி வரும் கலைக்கேசரி என்ற பத்திரிக்கையில் எழுதி இருந்தார். அதில் வரும் ஒரு பத்தி கீழே.


மேற்கண்ட பத்தியில், இந்திய சாஸ்திரீய நடனங்கள் பரத நாட்டியம், கதகளி, மோகினியாட்டம், கதக், குச்சுப்புடி போன்ற நடனங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

சோழ மன்னன் ராஜராஜ சோழன் ஆண்ட போது, அரசவையில் நடன மகளிர் ஆடிய நாட்டியத்தின் பெயர் சதிராட்டம். 

அதை ஏன் இந்த ஷர்மா குறிப்பிடவில்லை?  என்ன காரணம் தெரியுமா?

டி.ராஜேந்தர் அவர்களின் மனைவி உஷா அவர்களின் சகோதரி சுவர்ணமுகி. எலும்பே இல்லாத பெண்மணி என்று ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களால் பாராட்டப்பட்டவர். சதிராட்டத்தில் நூறு கர்ணங்கள் உண்டு. அந்த நூறு கர்ணங்களையும் ஆடியவர் சுவர்ணமுகி. இவரின் தந்தை தான் இவருக்கு குரு. தந்தை பெயர் நினைவில் இல்லை.

சுவர்ணமுகியைக் கவுரவிக்க முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், சுவர்ணமுகியை அரசு நர்த்தகி என்ற பட்டம் கொடுத்து சதிராட்டத்தை அங்கீகரித்தார்.

சுவர்ணமுகி ஆடிய தமிழர் நடனத்தின் பெயர்.”சதிராட்டம்”. அதிலொன்று பாம்பு, மயில் நடனம். இவ்வாறு பிரபலமாக இருந்த சதிராட்டத்தை ஒரு பெண்மணி பிராமணர்களின் சொத்து என்பது போல மாற்றினார்.

அந்தக் காலத்தில் படிக்க வாய்ப்புக் கிடைத்த ஒரே காரணத்தால் படிப்பறிவு பெற்ற பார்ப்பனர்கள், தமிழர்களின் வரலாற்றை தமிழை வைத்தே மாற்றி எழுதினர்.

தமிழர்களின் வாழ்வியலை, ஒவ்வொருவரும் திட்டமிட்டு மறைத்து எழுதினர். எந்த வகையிலும் தமிழர் பூமியில் தொடர்பு இல்லாதவர்கள் தங்களை, தமிழர்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டிய ஆதாரங்களை நூல் வடிவில் கொண்டு வந்தனர். 

அந்தக் கால பட்டயங்களில் அக்ரஹாரம் என்பது அவர்கள் பகுதியாக இருந்தது. அதில் அவர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்து கொண்டு வேதம், மந்திரம் போன்ற அடாத செயல்களைச் செய்து வந்தனர். காலப் போக்கில் தமிழர்களை ஊருக்கு ஒதுக்குப் புறமாய் மாற்றி விட்டனர்.

சரி, சதிராட்டம் என்கிறாயே, உன்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்பீர்கள். 

இலங்கையில் இருந்து வெளிவரும் கலைக்கேசரி ஜனவரி 2020 பத்திரிக்கையில் கார்த்திகா கணேசர் என்ற நாட்டியப் பெண்மணி எழுதிய கட்டுரையினை கீழே படியுங்கள். இக்கட்டுரையில் கூட சதிராட்டம் என்பதை வசதியாக மறைத்து எழுதி இருக்கின்றார் கார்த்திகா கணேசர். அவருக்குத் தெரிந்திருக்கும் ஆனாலும் அவர் எழுதவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை.

தமிழகத்திலிருந்து வெளி நாடுகள் சென்ற நாட்டிய பெண்களைப் பற்றிப் படியுங்கள்.  நன்றி : கலாக்கேசரி இதழ் மற்றும் நாட்டிய கலா நிதி கார்த்திகா கணேசர்.








தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட பிறகு அரசுகள் சதிராட்டத்தைப் பாதுகாக்கவில்லை என்பதோடு கடந்து விடுகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. 

ருக்மணி தேவி அருண்டேல் என்பவரால் தொடங்கி வைக்கப்பட்ட சதியின் தொடர்ச்சியாக சதிராட்டம் அழிக்கப்பட்டது.  

தமிழனின் அற்புதமான நடனத்தை அழித்து, அதை தமிழர்களின் பூமியிலேயே வேறொரு பெயரில் மாற்றி, அதற்கொரு கலாசேத்ரத்தை உருவாக்கி, இன்னும் அகங்காரத்தோடு பரத நாட்டியம் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

முட்டாள் தமிழர்களும், மூளைகெட்ட இன துரோகிகளும் தன்னை நானொரு கன்னெடிகா என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் எட்டப்பன்களும் இருக்கும் தமிழ் நாட்டின் சாபக்கேடு இதுதான்.

எழுபது ஆண்டுகாலமாக ஒரு கோவிலுக்குள் சென்று இறைவனைப் பிரார்த்தனை செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் வீரத்தை என்ன சொல்லி மெச்ச? மானம் கெட்டுப் போனவர்களாய் தமிழர்கள் கிடப்பதை எண்ணி வேதனை தான் விஞ்சுகிறது.

விரைவில் தொடரும் 

லலித மன்றம் நாடக காட்சிகள் - காட்சி இரண்டு

லலித மன்றத்தில் கர்ப்பினியைக் கூட்டாகக் கற்பழித்துக் கொலை செய்த  வழக்கு விசாரணை தொடங்கியது.

சாமி கேட்டர் ”வக்கீல்கள் யாரப்பா?”

இருவர் வந்து நின்றனர்.

”உங்களில் யார் வஸ்துவணிவர்? ”

அதில் ஒருவர் முன்னால் வந்தார்.

”அவருக்கு இருக்கை கொடுங்கள்”

இருக்கை கொடுக்கப்பட்டது.

”நீங்கள்?”

”நான் காலில் இருந்து பிறந்தவன்”

“சரி, கைகட்டி பத்தடி தூரத்தில் நிற்க”

“வஸ்துவணிபரே! உங்கள் வாதத்தைத் தொடங்கலாம்”

”என் வாதத்தை துவங்குவதற்கு முன்பு, நம்ஸ்கார்ம். மை லார்டு, நான் ஏன் நம்ஸ்காரம் என்று துவங்கினேன் என்றால் இது கடவுள் மொழி என்பதால். நானும் உங்களைக் கடவுளாகத்தான் பார்க்கிறேன்”

சாமி புன்னகைத்துக் கொண்டார். தலையை ஆட்டி ஆட்டி ஆமோதித்தார். வக்கீல் மீண்டும் வாதத்தைத் தொடங்கினார்.

”எனது கட்சிக்காரர்கள் இந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்றுச் சொல்ல முடியாது. ஏனென்றால் குற்றம் செய்தவர்களை விட குற்றச்செயலைச் செய்ய ஊக்குவிக்குபவர்களுக்கு தான் அதிக தண்டனை என்று, ...... எழுதிய (இந்த இடத்தில் சட்டமியற்றவரின் பெயருக்குப் பதிலாக நாக்கை வெளியில் நீட்டி விட்டு தொடர்கிறார் வக்கீல்) சட்டத்தில் இருக்கிறது. 

இந்தக் குற்றம் செய்யக் காரணமாய் இருந்தது ஒரு துணி. ஆம் லார்டு, அது ஒரு கருப்புத் துணி. சாலையில் சென்று கொண்டிருக்கிற போது, அங்கு ஒரு துணியால் ஒரு வஸ்து மூடப்பட்டு இருக்கிறதென்றால், மனிதர்களுக்கு இயற்கையாகவே அது என்னவென்று பார்க்கத் தோன்றுவது இயல்பு அல்லவா? 

அதைப் போலத்தான் எம் கட்சிக்காரர்கள் பதினோரு பேரும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் கருப்பு துணி அணிந்த உருவம் வந்து கொண்டிருந்தது. அது பேயாக இருக்குமோ என்ற பயத்தில் என் கட்சிக்காரர்கள், எதிரில் வந்தவரை விசாரித்தனர். அப்போது அவர்களுக்குத் தெரிந்தது அது ஒரு பெண் என்று.

அதுமட்டுமல்ல மை லார்டு. அந்தப் பெண்ணின் வயிறு பெருத்து இருந்தது. அது ஏதோ மதக் கலவரத்திற்காக, வயிற்றில் கட்டப்பட்ட வெடிகுண்டாக இருக்குமோ என்ற நினைப்பில் அது என்னவென்று பார்க்கத்தான், என் கட்சிக்காரர்கள் முயன்றனர். 

தேசத்தின் மீது கொண்ட பக்தியினால் அவர்கள் அக்காரியத்தைச் செய்தனர் என்பதை மை லார்டு குறித்துக் கொள்ள வேண்டும்.”

அப்போது ஆலரமத்தினடியில் காற்றுப் பலமாக வீசியது.

சாமிக்கு கண்ணில் தூசி பட்டு விட்டதால், வழக்கு அடுத்த வாரம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணை அடுத்த வாரம் தொடரும்.

இந்தச் செய்தி உங்களுக்காக.


நன்றி : மணி கண்ட்ரோல்.காம்

சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி என்பவர் மக்கள் தொகை பெருக்கம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும், மக்கள் தொகையினக் கட்டுப்படுத்துதல் அவசியம் என்றும் வழக்குத் தொடுத்திருக்கிறார்.

குடும்பக்கட்டுப்பாட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. இரண்டுக்கு மேல் வேண்டாமென்று பிரச்சாரமும் நடந்தது. அதெல்லாம் ஒரு காலம். இப்போது பிள்ளையே பிறப்பதில்லை. அதற்கும் ஹாஸ்பிட்டல்கள் வந்து விட்டன. ஒன்றை பெற்று வளர்ப்பதற்குள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர் மக்கள்.

இப்படியான சூழல் இருக்கும் போது இந்த ஜிதேந்திரனாந்த் வழக்கு என்ன விளைவினை ஏற்படுத்தும் என்றும் தெரியவில்லை. சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பு கொடுக்கும் என்பதும் தெரியவில்லை. 

இந்த வழக்கை கவனத்தில் வாசகர்கள் குறித்துக் கொள்ளவும்.

ஸ்டாலினிசம் (2) - நான் முதல்வன்


ஆட்சிக்குப் பொறுப்பேற்றதும் அவர் தன்னை மக்களுக்கான ஊழியர் என அடையாளப்படுத்திக் கொண்டார். மக்களுக்கு சேவை செய்யும் ஊழியன் நான் என்று பெருமைப்பட்டார்.

அவர் தன் அமைச்சரவையை அரசியலுக்கு அப்பாற்பட்டு, தகுதியானவர்களுடன் உருவாக்கினார். ஒவ்வொரு அமைச்சர்களையும் மதியூகிகளாக தேர்ந்தெடுத்தார்.

தன் புதிய அரசியல் பயணத்தை, தமிழக மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் இருக்க வேண்டுமென்ற உன்னத நோக்கில் தொடங்கினார்.

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் எனப் பேசுகிறார். 

கண்ணிய அரசியல். 

என் கடன் பணி செய்து கிடப்பதே என்று செயலால் காட்டுகிறார்.

கல்வி கரையில, கற்பவர் நாற் சில. கரையிலாக் கல்வியை எல்லோருக்கும் கிடைத்திட ஆவலாய் பணி செய்கிறார். 

மாணவர்களிடையே, உங்கள் தகப்பன் இடத்தில் இருந்து சொல்கிறேன், “நன்றாய் படியுங்கள்” என்று கேட்கிறார்.

நான் முதல்வன் என்பது அனைவருக்குமானது. 

ஒவ்வொருவரும் முதல்வன், எல்லாவற்றிலும் என்று மாணவர்களிடையே மன ஊக்கத்தை ஊக்குவிக்கிறார்.

கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்றதை பொய்யாக்க முனைகிறார். 

நானிருக்கிறேன் நீங்கள் கல்வி கற்க, கற்க பிச்சை எதற்கு என்று கேட்கிறார்.

தமிழர்களின் பிள்ளைகள் கல்வியில் முதல்வனாக வேண்டுமெனத் திட்டமிடுகிறார். 

அதற்கு சான்று, “ நான் முதல்வன்” திட்டம்.

உயர்கல்வி ஒவ்வொரு தமிழர்களின் பிள்ளைகளுக்கும் கிடைத்திட வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

இதோ அதற்கான முன்னோட்டமாக தமிழக அரசின் இணையதளம்.

https://naanmudhalvan.tnschools.gov.in/home

இதோ இப்படித் தொடங்குகிறது இணையதளத்தின் ஆரம்பம்.

”9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்குவதே இந்த இணைய முகப்பின் நோக்கமாகும். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் இங்கு கிடைக்கும்.

நான் முதல்வன் இணைய முகப்பில் 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் வாயிலாக பெறக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் அடங்கும். நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித் தொகைகளின் தகவல்களும் இந்த இணைய முகப்பில் உள்ளன. “

தகவல்களின் சுரங்கமாக கொட்டிக் கிடக்கிறது இந்த இணையத்தில். மாணாக்கர்கள் தங்களின் ஐ.டி வழியாக உள் நுழைந்து தேவையான தகவல்களைப் பெற்றுப் பயனடைதல் அவசியம். பலர் இத்தகவல்களை வைத்து சம்பாதிக்கிறார்கள். ஏழைகளால் இயலாதே. அவர்களுக்காக துல்லியமான தகவல்களுடன் இந்த இணையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நம் முதல்வர் மாணவர்களை முதல்வர்களாக்க உருவாக்கிய திட்டமிது. தமிழர்களின் குழந்தைகள் முதல்வன் என்ற தகுதியை அடைவதே, நம் முதல்வருக்கு மாணவர்கள் செலுத்தும் நன்றி.

ஸ்டாலின்ஷத்தின் இரண்டாம் பகுதி நான் முதல்வன்.



ஊழலை ஒழிப்போம் - எப்படி என விளக்கம்

கிழட்டு நரி இந்தியர்களை ஏமாற்றி லோக்பால் வேண்டுமென்று உண்ணாவிரதம் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சகம் தூங்கியதால் 70 ஆண்டுகால சதியின் வேரை கண்டு பிடிக்கவில்லை. இந்தியர்கள் கிழட்டு நரியின் நயவஞ்சக வலையில் சிக்கினார்கள். இன்று மீளாத் துயரில் ஆழ்ந்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றார்கள். நம்பிக்கைத் துரோகம் செய்த நரி, ஊருக்குப் போய் உட்கார்ந்து கொண்டது. 

இந்திய ஒன்றியங்களின் பிரதமர், ஊழலை ஒழிப்போம் என்கிறார். 

எப்படி?

இதோ இப்படி தான். செய்தியைப் படித்துப் பாருங்கள். புல்லரிக்கும்.

ஊருக்கே தெரியுமாம் விபச்சாரி யார் என? ஆனால்..... !

அம்புட்டுதான்..

நன்றி : தினமணி (08.09.2022)




Wednesday, September 7, 2022

ஸ்டாலினிசம் (1) - புதுமைப்பெண் - தமிழர்களின் தந்தை


துரோகி எட்டப்பனின் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, ஆட்சிக்கு ஏன் இவர் வரவில்லை என்று பலரும் பேசிக் கொண்டிருந்தார்கள். எங்கு நோக்கினும் ஊழல் மயம். தமிழக மக்கள் துன்பப்பட்டு, துயரப்பட்டு கட்டிய வரிப்பணத்தை ஸ்ட்ரா போட்டு, வித விதமான கமிஷன் வழியாக உறிஞ்சினார்கள் எட்டப்பன்களும் அவனுடைய கூட்டாளிகளும்.

கலைஞர் இருந்திருந்தால், ஊழல்வாதி ஜெ மறைவுக்கு பின்பு தமிழக அரசியல் தலைகீழாக மாறி இருக்கும் என்று வாய் இருக்கு, யூடியூப் இருக்கு, டிவிட்டர் இருக்கு, ஃபேஸ்புக் இருக்குவென பலரும் ஆலோசனைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தனர். 

ஆனால் எனக்கோ அவர் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கமாட்டார் எனத் தோன்றியது. 

அவர் அப்படித்தான் இருந்தார். கண்ணியம்.

பூணூல் பத்திரிக்கைகள், பத்திரிக்கை விபச்சாரகர்கள் தேர்தலின் முதன் நாளில் கூட பத்திரிக்கைகளில் இதுவரை எவரும் வெளியிடாத வகையில் நூதனமாக அவர் மீது தாக்குதல் தொடுத்தனர். 

அவ்வளவு வன்மம் அவர் மீது. இருப்பினும் அவர் கட்டுப்பாட்டுடன் இருந்தார்.

அவர் திராவிட இனத்தின் வளர்ச்சிக்காக புதிய அத்தியாயத்தை உருவாக்கி விட்டால், சாதி, மத, வெறி பிடித்த மிருகங்களின் நயவஞ்சக எண்ணங்கள் தவிடு பொடியாகிடுமே என்ற கோப வெறியில் பல முனையிகளிலிருந்தும் தாக்குதல்களை  அவர் மீது தொடுத்ததை உலகமே கண்டது.

மனிதனாக வாழவே தகுதியில்லாத துரோகி எட்டப்பன், அவரை இழித்தும் பழித்தும் பேசினான். அழுதான், அரற்றினான், புரண்டான், ஊழலில் ஊறிய பெருச்சாளி, நாற்றம் பிடித்த நயவஞ்சகனான அவனால் இன்று தமிழர் குழந்தைகள் இன்று மருத்துவம் படிக்க முடியாமல் வழி இன்றி தடுமாறி நிற்கச் செய்த சுய நலப்பேயன், இனத்துரோகி எப்படியெல்லாமோ சதிகளைச் செய்து பார்த்தான். துரோகம் எப்போதும் அழியும், நம்பியவரையும் அழிக்கும்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் அவர் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தார்.  அவரின் கடமை.

எனக்கு அறத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர் ஜெயிப்பார் என நம்பினேன். ஜெயித்தார்.

அவர் துரோகிகளால், துரோகத்தால் வளர்க்கப்பட்டவர். கலைஞருக்கு பிள்ளையாகப் பிறந்தினாலே அவர் பெற்றது வலிகள் மட்டுமே. 

ஆனால் அவர் அவராகவே இருந்தார். 

ஆட்சிக்கு வந்தார். 

தூற்றியவர்கள் துயருற்று விம்மினார்கள். துன்பத்தினால் உளறினார்கள். இட்டுக்கட்டி ஏசினார்கள். இன்றும் செய்கிறார்கள்.

பாப்பனிய ஜன கட்சி நடத்தும் ஒன்றிய அரசின் மூலமாக நரித்தனத்தை இன்றும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். 

தினமும் அவர் மீதும், தமிழக மக்கள் மீதும் எந்தெந்த வகையினில் எல்லாம் தாக்குதல்களை நிகழ்த்த முடியுமோ அவ்வகையிலிலெல்லாம் தாக்குகின்றார்கள். 

வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகின்றார்கள். 

தமிழர்களுக்கு நன்மை கிடைத்து விடக்கூடாது என்பதில் ஒன்றிய அரசு மிக கவனமாக இருக்கிறது. ஏழைகள் இருக்கும் பகுதியாக, சாதி வெறி பிடித்தவர்களாக, மதவெறி பிடித்தவர்களாக மக்களை மாற்ற ஒரு தற்குறியை வைத்து முயன்று கொண்டிருக்கிறார்.

திராவிடத்தால் படித்தவர்கள், பலனடைந்த தமிழர்கள், சுயநலத்திற்காக, பேராசையினால் தமிழர் இன துரோகிகள் ஆனார்கள். இவர்களை வைத்து அரசியல் என்கிற போர்வையில் மதவெறி, சாதி வெறியை பாப்பனிய ஜன கட்சி மத அரசியலை முன்னெடுக்கின்றார்கள்.

போலிச் செய்திகளைப் பேசுகின்றார்கள். பொய்யை உண்மை என்கிறார்கள். இத்தனை அக்கிரமங்களைச் செய்து வந்தாலும் அவர் இன்னும் அவர்கள் மீது கண்ணியம் காட்டுகிறார். 

துரோகிகளாலும், துரோகத்தினாலும் வளர்ந்தவருக்கு இதெல்லாம் சாதாரணம்.

அவர், 06.09.2022ம் தேதியன்று ஒரு சிறப்பான நிகழ்வினை நிகழ்த்தினார்.  தமிழர்களின் தந்தையாக உயர்ந்தார்.  புதுமைப் பெண் திட்டம் - அவரின் கனவு. 

அக்கனவு நனவாகும், பெண்கள் 100 சதவீதம் கல்வி பெறுவார்கள். தமிழர்கள் வாழ்க்கை மேலும் மேலும் உயரும். ஏழைப் பெண் பிள்ளைகள் படித்தால் சமூகம் அவர்கள் வழியாக மேன்மை அடையும் என்ற உன்னத நோக்கினை அவர் உணர்ந்துள்ளார். 

கல்வி மட்டுமே தமிழர்கள் உயர வகை செய்யும் என்று அவர் நினைக்கிறார். பெண்களுக்கு இலவசப் பயணம், கல்விக்கு உதவி என அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிடக் கடமை.

அவர் கடமையைச் செய்கிறார்

கண்ணியமாக நடந்து கொள்கிறார்.

கட்டுப்பாடுடன் கட்சியினையும் தமிழர்களையும் வளர்க்கிறார்.

கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்பது ஸ்டாலினிசம்.

ஸ்டாலினிசம் தமிழர்களுக்கானது, அது திராவிட நாட்டின் மேன்மைக்கானது.

அவரின் ஒவ்வொரு நகர்வும் தமிழர்களுக்கானது என்பதே ஸ்டாலினிசம்.


லலிதமன்ற நாடகக் காட்சிகள் - காட்சி ஒன்று

லலித மன்றம் என்று அழைக்கக் கூடிய, ஆலமரத்தினடியில் சாமிகள் உட்கார்ந்திருந்தனர். இடுப்பில், தொடையில், காலில் பிறந்தவர்கள் மெய் வாய் பொத்தி நின்று கொண்டிருந்தனர். ஆகமத்தில் விதிகள் இல்லாத காரணத்தால், அவர்களுக்கு உட்கார சபையில் அனுமதி இல்லை. எல்லாம் வேதத்தில் சொல்லப்பட்டவை. சாமிகள் யாரும் அதற்கு காரணமில்லை. வேதமே காரணம். 

குற்ற விபரம் : கர்ப்பினியைக் கூட்டாகக் கற்பழித்துக் கொலை செய்ததாகக் குற்றம்

விசாரணை விரைவில்...!

வாசகர்களுக்கு இன்றையச் செய்தி. நன்றி தினமணி



மேற்கண்ட செய்தியில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், விவசாயிகள் போராட்டத்தில் தானாகவே ஸ்டார்ட் ஆகி, வேகமாக வந்த கார் விவசாயிகள் மீது மோதியதாக இரண்டாம் பத்தியில் செய்தி இருக்கிறது. கார் இடித்ததால் வன்முறை உண்டானது என்பது கூடுதல் செய்தி. காரினால் தான் வன்முறை என்று தவறாக நினைத்து விடக்கூடாது.