குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, June 25, 2018

தமிழகத்தின் எதிர்கால முதலமைச்சர் யார்?

இன்றைய தமிழகத்தின் நிலைமை பற்றி ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் ஒரு விதமான பதற்றத்தினை உருவாக்குகிறது. அம்மா இறந்த பிறகு நடந்த களேபரங்களின் காரணமாக தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள் என்று இணையதளங்களும், யூடியூப் வீடியோக்களும், செய்திசானல்களும் நொடிக்கொருதரம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். 

எது உண்மை என்று அறிய முடியவில்லை. ஆனால் இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஒரு விதமான எரிச்சல் இருப்பதை பலரும் சொல்கின்றார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவு மற்றும் அதைத் தொடர்ந்து மத்திய அரசால் தமிழகத்தில் கொண்டு வரப்படும் பல்வேறு திட்டங்களின் எதிர்ப்பு, அதற்கு மெய், வாய் பொத்தி சலாம் போடும் அரசு இது என பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. 

தமிழக அரசின் கல்வித்துறையில் நடக்கும் பல்வேறு நல்ல விஷயங்கள் இந்த களேபரங்களால் மறைந்து விடுகின்றன. அமைச்சர் செங்கோட்டையன் அவர்களால் கல்வித்துறையில் கொண்டு வரப்படும் திட்டங்கள் மெச்சத் தகுந்தவையாக இருக்கின்றன. முதலமைச்சர் எடப்பாடியின் கைகள் கட்டப்படாமல் இருந்தால் நல்ல ஆட்சியினைக் கொடுத்திருப்பார் என்கிறார்கள் பலரும். எந்த முதலமைச்சருக்கும் இல்லாத பல குடைச்சல்களைச் சமாளித்து ஆட்சி நடத்துவது என்பது சாதாரணம் இல்லை. 

சேலம் எட்டு வழிச்சாலைகான அவசியத்தையும், அதனால் விளையக் கூடிய பலன்களையும் அரசு வெளிப்படையாக அறிவித்திருக்கலாம். வாய்ச் சொல்லாக இல்லாமல் பத்திரிக்கை வாயிலாக மக்களிடம் தொடர்பு கொண்டிருக்கலாம். அதிகாரத்தினை அளித்த மக்களிடம் அதிகாரத்தைக் காட்டுவது எதிர்காலத்தில் ஓட்டுக் கேட்டு வீடு தோறும் செல்லும் போது வார்த்தைகளில் விவரிக்க இயலாத எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடலாம். 

விவசாய நிலங்களை அழித்துதான் சாலை அமைக்க வேண்டுமென்பது கொடுமை. உண்ண உணவு தரும் பூமியை அழிப்பது அன்னையை அழிப்பதற்குச் சமம். 

காலம் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் என்பார்கள். ஆனால் இப்போதைய காலம் எதையும் மறக்கடிக்க வைக்காது. டெக்னாலஜியின் காலம் அழியாப்பதிவுகளை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கிறது.

* * * 

கடந்த வாரம் சாமியைப் பார்க்கச் சென்றிருந்தேன்.  அடியேன் ஓஷோவைப் படிப்பவன்.  கடவுள் என்பதைப் பற்றிய பல்வேறு கேள்விகள் எனக்குண்டு. திருமூலரின் நீயே கடவுள் என்பதைப் பற்றியும் பல விதமான குழப்பங்கள் எனக்குண்டு. இன்னும் முடிவுக்கு வர இயலாத ஒரு விஷயமாக கடவுள் இருக்கிறார்.  இதற்கிடையில் ரஜினியின் அரசியல் மற்றும் காலா படம் எனக்கு ஏதோ சொன்னது.

இந்தியாவெங்கும் பிரபலமான, மக்களின் அன்பைப் பெற்ற ஒரு நடிகர் ரஜினியின் வாழ்க்கையில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் எனக்கு பெரும் குழப்பத்தினை உண்டாக்கியது. 

தூத்துக்குடி (ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது) சம்பவத்திற்காக ரஜினி செல்வது; அங்கு யாரோ ஒருவர் ’நீங்க யாரு?’ எனக் கேட்டது; அதன் பலனாக ரஜினியின் கோப பேட்டி வெளியானது; அதன் பிறகு ரஜினியின் மீது மக்களுக்கு உண்டான கோபம்;  காலா திரைப்படம் வெளியிடப்பட்டது; பிறகு ரஜினிக்கு மக்கள் நலனுக்கு எதிரானவர் என மாறியது ஆகிய நிகழ்வுகள் கடவுள் இருக்கின்றார் போல என எண்ண வைத்தது. தூத்துக்குடி சம்பவம் மட்டும் நடக்காமலிருந்தால் காலா திரைப்படத்தின் மூலம் ரஜினியின் அரசியல் பிரவேஷம் பெரிய புரட்சியினை உருவாக்கி இருக்கும். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக ஏதோ ஒரு வலையில் ரஜினி சிக்கியதை மேற்கண்ட சம்பவம் சொல்லியது.

”கடவுள் இருக்கின்றாரா? சாமி” என மேற்கண்ட விஷயத்தைச் சொல்லிக் கேட்டேன்.

”ஏதோ ஒரு சக்தி - அதைத்தான் கடவுள் என்கிறோம் - இருக்கு ஆண்டவனே” என்றார்.

”சாமி, ரஜினி முதலமைச்சர் ஆவாரா? பிஜேபி கமல்ஹாசன், சீமான், ஸ்டாலின், டிடிவி இவர்களில் யார் முதலமைச்சராக வருவர்?” 

“ரஜினி அரசியலுக்கு வருவார் அவ்வளவுதான் ஆண்டவனே. புதியவர்கள் தான் தமிழகத்தின் ஆட்சிக்கு வருவார்கள். எல்லாக் கட்சியிலும் இருக்கும் நல்லவர்கள் திடீரென ஒன்றாவார்கள். இவனைத்தான் தேடினோம் என்பது போல மக்களும் வாக்களித்து அவர்களை உட்கார வைத்து விடுவார்கள். இது அடுத்து வரக்கூடிய தேர்தலில் நடக்கும் வாய்ப்புகள் அதிகம். இல்லையெனில் அதற்கடுத்த தேர்தலில் அவர்கள் தான் வருவார்கள். அடுத்த இருபத்தைந்தாண்டுகளுக்கு அவர் ஒருவரே முதலமைச்சராய் இருப்பார்” என்றார்.

இப்படியும் நடக்குமா? என்று என்னால் யோசிக்க முடியவில்லை. ஏனெனில் அம்மா மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட போது சாமியிடம் கேட்டேன். அவர் ஒரே வார்த்தையில் ’ஆத்மா சாந்தியடையட்டும்’ என்றார்.
“என்னங்க சாமி? இப்படிச் சொல்லீட்டீங்க?” என்றேன்.

“அதான் சொல்லீட்டேனே ஆண்டவனே, ஆத்மா சாந்தியடையட்டும்” என்றார் மீண்டும்.

அதேதான் நடந்தது. இதை முன்பே எழுதி இருக்கலாம். ஆனால் அது நன்றாக இருந்திருக்காது. ஆனால் இப்போது எதிர்காலத்தில் வரக்கூடிய நிகழ்வுகள் பற்றி பேசிக் கொண்டிருந்த போது எழுதவா என்று அவரிடம் அனுமதி கேட்டுத்தான் எழுதுகிறேன்.

நடந்தால் நமக்கு வேறென்ன வேண்டும்? எனது குருவின் வார்த்தை என்றும் தோற்றதில்லை என்பதால் எனக்கு எந்த வித உணர்வும் இல்லை. அது நடந்தே தீரும் என்றே நினைக்கிறேன்.

விஷயம் இத்துடன் முடியவில்லை.

“சாமி, ஊழல் செய்து கோடி கோடியாய் குவிக்கின்றார்களே அவர்களின் எதிர்கால கதி என்னவாகும்?”

“நாலாயிரம் பேரிடம் இருப்பதைப் பிடிப்பதை விட நான்கு பேரிடம் இருப்பதை எளிதில் பிடித்து விடலாம் அல்லவா? அதைப் போல எளிதில் எல்லா சொத்தையும் மீட்டு விடுவார்கள். கவலையே வேண்டாம்” என்றார்.

நடக்க வேண்டும். நடந்தால் நன்றாக இருக்கும்.

* * *

”ஏங்க ! எழுந்திரீங்க....! “ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.

எதிரே மனையாள்.

“காய்கறியெல்லாம் வெட்டித்தாங்க, சமைக்கணும்” 

“ஏய் லூசு, இப்பத்தான் பிக்பாஸு ஐஸ்வர்யா தத்தாவின் உதட்டினை இழுத்து....!”

”என்னது????”

“ஒன்னுமில்லை, கனவு”

”அதானே பாத்தேன்....! சீக்கிரமா வாங்க, சமைக்க நேரமாயிடுச்சு” என்றார்.

கையில் கத்தியுடன் காய்கறிகளை இரக்கமே இல்லாமல், அதாவது விதி அதற்குரிய காலம் வந்தவுடன் மனிதர்களை எழும்பவே விடாமல் வைத்து கணக்குத் தீர்க்குமே, அதைப் போல வெட்டித்தள்ளினேன். கடுகு வெடித்து வெங்காயம் வதங்கும் வாசனை மூக்கினை எட்டியது. 

* * *

Monday, June 18, 2018

பிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட்

பிக்பாஸ் 2 - நேற்று ஆரம்பித்திருக்கிறார்கள். என் மகளின் பிரியமான புரோகிராம். 12 வயசு குழந்தைக்கு இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்ன சுவாரசியத்தைத் தந்து விடும் என்று புரியவில்லை. பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென ஷோபாவிலிருந்து எழுந்தார். வரும் நாட்களில் இசைப்பள்ளியின் ஆண்டு விழாவின்போது பாடுவதற்காக 'போகும் பாதை தூரமில்லை’ என்ற பாடலை சாதகம் செய்ய ஆரம்பித்து விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது.

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் பணத்தொப்பை வந்து விட்டது. முறுக்கிய மீசை வைப்பவர் எல்லாம் பாரதி ஆகிடமுடியாது என்று அவரைப் பார்த்ததும் எனக்குள் தோன்றியது.

பாரதி! பாரதிதான். ஆனால் எனக்குள் ஒரு உறுத்தலுண்டு. கமல் கட்சியின் பொலிட்பீரோவில் எனக்கு அறிமுகமான மென்னுணர்வு கொண்ட பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும் ஒருவர் என்று கேள்விப்பட்டேன். கமலின் நுண்ணிய அரசியலின் தன்மை பற்றி அவர் புரிந்து கொண்டுள்ளாரா? எனத் தெரியவில்லை. 

கமலின் மிக நுண்ணிய ஜாதி அரசியல் சாட்சியாகப் பதிவாகி இருக்கிறது அதன் பங்கேற்பாளர்களைப் பார்த்ததும். அவருக்கும் பிக்பாஸுக்கும் தொடர்பில்லை என்றெல்லாம் ஸ்கிரிப்ட் இருக்கிறது என்பார் அவர். வெளுத்ததெல்லாம் பால் எனக்கருதும் இயல்புடையோருக்கு கமல் சொல்வது ஒவ்வொன்றும் உண்மையாகத் தெரியும். ஆனால் எல்லோருக்கும் அப்படி இருக்க இயலாது அல்லவா?

சமீபகாலமாக உளவியல் தாக்குதல்களை நிகழ்த்தும் அரசியல் தீவிரவாதத்துக்கும் நிகரான ஒரு மனத்தாக்குதலை நிகழ்த்தப்போகும் பிக்பாஸ் ஸ்கிரிப்ட் உண்மையில் விதிக்கும் நிகரானது. அந்த ஸ்கிரிப்டின் விளைவுகள் சமூகத்தில் உருவாக்கபோகும் உளவியல் நிகழ்வுகளை, போராட்டங்களை, ஆத்திரங்களை, மகிழ்ச்சிகளை உன்னித்துப் பார்த்தால் இந்த நிகழ்ச்சியின் உள் அரசியல் விளங்கி விடும்.

பிக்பாஸ் மனமயக்கும், அசத்தும் ஒரு திரைக்கதை. இயக்குபவர் கமல்.

பதினாறு ஆட்களை வைத்துக் கொண்டு ஒரு சமூகத்தின் போக்கினை எளிதாக அவதானித்து விடலாம் என்கிற போக்கு மனிதத்துக்கு அழகல்ல. யார் எப்படிச் சிந்திக்க வேண்டும், எதைப் பற்றி யோசிக்க வேண்டுமென யாரோ ஒருவர் முடிவு செய்கிறார் என்றால் அந்த நிகழ்ச்சி ஒப்பற்ற ஒன்றாக இருக்கலாம்.ஆனால் அதன் துணையுடம் சமூகத்தின் பாதையை வழி மாற்றலாம் என்கிறபோது அதன் தீவிரவாதத்தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

யாரால் தனக்கு வாழ்க்கையும், வளமும் கிடைத்து சுகபோக வாழ்க்கையை வாழ்கிறோமோ அவர்களுக்கு தீமை செய்திடும் ஒரு நிகழ்ச்சியை செய் நன்றித்தனம் இன்றி ஒருவர் செய்கிறார் என்றார் அவர்களை நாம் என்ன சொல்லி அழைப்பது? மிருகங்களுக்கு கூட நன்றி உணர்ச்சி இருக்கும். ஆனால் மனிதர்களுக்கு? அதுவும் சினிமாக்காரர்களுக்கு????

Tuesday, June 5, 2018

விக்கி ரூடோஸ் சூப்பர் சிங்கர்

எனது நண்பரும் உறவினருமான பெரியசாமி கவுண்டரின் தோட்டத்திற்கு கவுண்டர் அம்மணி ருசியாக சமைக்கும் அரிசி பருப்புச் சாதத்துக்காகவும், கவுண்டர் எனக்காக காரமும் புளிப்பும் சரி சமமாகக் கலந்து வைக்கும் எண்ணை மின்னும் கருவேப்பிலை ரசத்தினை ருசிக்கவும் அடிக்கடிச் செல்வதுண்டு. கவுண்டர் ஒரு பொமேரேனியன் வளர்த்து வந்தார். கூண்டுக்குள் இருக்கும் அது. முகத்தில் கருப்பும், வெள்ளையுமாய் என்னை முதன் முதலாகப் பார்த்த போது கர்ண கடூரமாக ’நீ! யார்?” என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தது.

அடுத்த முறை சென்ற போது விக்கிக்கு பிஸ்கெட் வாங்கிக் கொண்டு போனேன். முறைத்துக் கொண்டே சாப்பிட்டான். வீட்டுக்கு கிளம்பிய போது மீண்டும் கர்ண கடூரமாக போகக்கூடாது என்று கத்த ஆரம்பித்தான். சிரித்துக் கொண்டே வந்து விட்டேன். அந்தப் பக்கம் செல்லும் போது பிஸ்கெட்டோடு தான் செல்வேன். அவனுக்கு பிஸ்கெட் கொடுத்து விட்டு விரலை கம்பிக்குள் நீட்டினால் கழுத்தை கம்பியோடு வைத்து நிற்பான். ஒற்றை விரலால் அவனை தடவிக் கொடுப்பேன். 

என் நண்பர் என்னென்னவோ செய்து பார்த்தார். அவரை அவனுக்குப் பிடிக்கவே இல்லை. அதுமட்டுமல்ல எனது மனையாளையும் அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது. பிஸ்கெட் போடுவார்கள், என்னென்னவோ சமாதானம் செய்வார்கள். அருகில் சென்றால் கடிக்க உறுமுவான். நண்பர் மட்டுமே என்னை சரிப்படுத்துவார், மனையாள் அடிக்கடி காரத்தை அதிகப்படுத்துவார் அதற்காகவோ என்னவோ அவர்கள் இருவரையும் விக்கிக்கு பிடிக்காது போல.

ஒரு நாள் என்னுடன் கூடவே ஓடி வந்து விட்டான். எனக்குத் தெரியாது. நீண்ட நேரமாக நான் சென்ற வழியில் நின்று கொண்டிருந்தானாம். கவுண்டர் போனில் சொன்னார். கேட்ட எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. 

(விக்கி)

என் உணர்வோடு உணர்வாக மாறினான் விக்கி. சாப்பிடும் போது அவனுக்குக் கொடுக்காமல் சாப்பிட மனது தடை போடும். அவனின் கண்கள் என்னைப் பார்ப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அவன் சாப்பிட்டால்தான் மனது நிம்மதியாகும். அது ஒரு உயிர். ஐந்தறிவு கொண்ட அவனின் அளவற்ற அன்பினை எதனால் அளவிட முடியும் சொல்லுங்கள் பார்ப்போம்?

நேற்று பெரியசாமிக்கவுண்டர் வந்திருந்தார் என்னைப் பார்க்க. 

”எப்படி இருக்கான்?” எனக் கேட்டேன். 

”விக்கிச் செத்துப் போயிட்டானுங்க சார்!” என்றார். தெரு நாய்கள் சேர்ந்து கழுத்தில் கடித்துக் குதறி விட்டனவாம். காயங்களோடு கூண்டுக்குள் வந்து படுத்து கொஞ்சம் தண்ணீர் குடித்தானாம். மயங்கிப் போனானாம். டாக்டரிடம் கொண்டு சென்றாராம். இறந்து விட்டானாம்.

இரண்டு நாட்களாக மனம் பாரமாய் கிடக்கிறது. சாப்பிடக்கூட முடியவில்லை. என்ன செய்வது எனப் புரியவும் இல்லை. 

‘அடேய் விக்கிப்பயலே! எனது நண்பன் ஜஹாங்கீர் ஆலம் மேல் உலகத்தில் தான் இருக்கான். அவனும் நானும் சேர்ந்து மகிழ்வோடு புகைக்க சிகரெட்டோடு பூமியில் என் காலம் முடிந்த பிறகு வருவேன். அத்துடன் உனக்குப் பிடித்த பிஸ்கெட்டோடு அங்கே உன்னைப் பார்க்கிறேன். உனது அழகான கழுத்தில் உனக்குப் பிடித்தமாதிரி என் விரல்களால் அலைந்து விடுகிறேன். உன் அன்பான வெது வெதுப்பான கழுத்தின் சூடு என் விரலில் பரவட்டும். எனக்காக காத்துக் கொண்டிரு’

நிற்க.

(என் இனிய ரூடோஸ்)

கடந்த வாரத்தில் ஒரு நாள் விடிகாலையில் ரூடோஸ் கத்திக் கொண்டிருந்தாள். காருக்கு அடியில் ஒரு குட்டி படுத்திருந்தது. அது அவளின் ராஜ்ஜியம். நாங்கள் அவளின் அன்பிற்கு அடிமைகள். அவளின் ராஜ்ஜியத்துக்குள் எவருக்கும் அனுமதி இல்லை. அந்தக் குட்டியினை ரித்திக்கும், நிவேதிதாவும் எடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட ரூடோஸ் கடுப்பில் எகிறிக் குதித்துக் கொண்டிருந்தாள். தரையெங்கும் குரைத்ததன் எச்சில்கள். கண்கள் அகல குரைத்தாள். என்னால் அவள் படும் வேதனையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தக் குட்டியை எங்கோ கொண்டு போய் விட்டு விட்டு வந்தான் ரித்திக். வந்தவன் சும்மா இருக்காமல், ‘அப்பா! அதை விட்டு விட்டு வந்ததும் ஓடி வந்து காலடியில் நின்று கத்தியதுப்பா?’ என்றான். 

அன்று முழுவதும் ரூடோஸ் சாப்பிடவில்லை. மாலையில் அவளை அருகில் வர வைத்து தடவிக் கொடுத்து சமாதானம் சொன்ன பிறகுதான் சாப்பிட்டாள். அவளின் முகம் வாடிக் கிடந்தால் உள்ளத்தில் சோகம் படர்கிறது. அவளின் வாழ்வு பதினைந்து வருடம் இருக்கலாம். தொழில் ரீதியான பயணங்களும், எனக்கான ஓய்வும் அவளோடு நான் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டே வருகிறது..இனி வரும் இந்த நேரக்குறைவு காலகட்டம் என் முன்னால் வந்து நின்று என்னை அடிக்கடி சோகத்தின் பிடியில் தள்ளுகிறது. அவளின் மீது எல்லையில்லா அன்பு கொப்பளிக்கிறது. 

நிற்க

சனி, ஞாயிறுகளில் விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பசங்களோடு பார்ப்பதுண்டு. மனையாளுக்கு ராஜியை ரொம்பவும் பிடிக்கும். எனக்கு அவரின் குரல் பிடிக்காது. செந்திலின் குரல் கவனிக்க வைக்கும் அளவுக்கு காந்தமுள்ளது. அதையெல்லாம் காட்டிக் கொள்ளமாட்டேன். திடீரென ஒரு சனி அன்று ”ஏங்க, இந்த நிகழ்ச்சியில் யார் பாடுவது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?” என்று கேட்டார் மனையாள். அன்று சனிக்கிழமை என்பதை மறந்து போனேன். விதி வலியது என்பார்களே அது அடிக்கடி என் வாயில் வந்து விழும்.

வழக்கம் போல, “ஸ்வேதா மோகன்” என்றேன். 


”அதானே, என்ன அதிசயமா இருக்கேன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்.  அதான் காரணமா?” என்று சொல்லியபடி அடுக்களைக்குள் சென்றார். அன்றைக்கு சட்டினியில் காரம் அதிகமாயிருந்தது. 

சனி தன் வேலையைக் காட்டி விட்டான். சனிக்கிழமை அதுவுமாக சூனியம் வைத்துக் கொண்டேனே ?????????? 

Saturday, June 2, 2018

சம்பளமில்லா வேலைக்காரர்கள்

காலம் மாறிக் கொண்டிருக்கிறது. முன் காலத்தில் உள்ள எதார்த்தமான மனிதர்களை இனிக் காண இயலாது. எங்கும் பணம், எதிலும் பணம், பகட்டு இருந்தால் தான் சக மனிதனை மதிக்கின்றார்கள். திருடனிடம் இருக்கும் பணத்திற்குத்தான் சமூகத்தில் மரியாதை. அவன் திருடன் என்பது அல்ல பிரச்சினை. பணம் யாரிடம் இருக்கிறது? அவனை மதி, அவன் உயர்ந்தவன் என்கிறது சமூகம். அதை மதிக்கும்படியான மூளைச் சலைவகளை வீட்டுக்குள் இருக்கும் டிவி சைத்தானும், தினசரி சைத்தான்களும் செய்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொருவருக்கும் தர்மம், நியாயங்கள் இருக்கின்றன. நீ வாழ பிறரைக் கெடு என்கிறது அரசியல். பதவியில் அமர என்ன வேண்டுமானாலும் செய் என்கிறது அரசாங்கம். இங்கு மக்கள், அவர்களுக்கான துன்பங்கள், துயரங்கள் பிரச்சினையே இல்லை. பணம் தான் எல்லாவற்றுக்குமான பிரச்சினையாக, மூலமாக, ஆணி வேராக இருக்கிறது. பணமிருந்தால் போதும் கொலை செய்து விட்டு சட்டத்தின் எந்த பிடிக்குள்ளும் சிக்காது சிங்காரமாக வாழலாம். மூட்டை மூட்டையாகப் பணம் கொடுத்தால் வளையாத எதுவும் வளைந்து நின்று சல்யூட் அடிக்கும். அது சட்டமானாலும் சரி, அரசானாலும் சரி, மக்களானாலும் சரி. ஓட்டுப் போட வைக்கவும் பணம் தான் தேவை. பணம் கொடுக்கின்றார்களா அவன் திருடனே ஆனாலும் சரி, வெற்றி பெற வைக்கும் மக்களின் மனோபாவம் மாறி விட்டது. 5 ரூபாயில் ஆரம்பித்த ஓட்டுக்குப் பணம் இப்போது பத்தாயிரமாக உயர்ந்துள்ளது. இனி வரும் காலங்களில் ஓட்டுக்கு லட்சம் கொடுப்பார்கள். 

தரமற்ற காண்ட்ராக்ட் வேலைகள், மக்கள் பணத்தை உறிஞ்சும் கார்ப்பொரேட் நிறுவனங்கள், லஞ்சம் பெறுவதே லட்சியம் என வாழும் அரசியல்வாதிகளும், அரசாங்க அலுவலர்களும் என மொத்த இந்தியாவும் லஞ்சத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. 

வளர்ந்து வரும் அறிவியல் துணைகொண்டு மக்கள் என்ன சிந்திக்க வேண்டும், எப்படிச் சிந்திக்க வேண்டும், எதைப் பற்றிப் பேச வேண்டும், எந்தப் பொருளை வாங்க வேண்டும் என்பதெல்லாம் தீர்மானிக்கப்படுகின்றன. மக்களை குழுக்களாக, ஜாதிகளாக, அமைப்புகளாக, பிரச்சினைகளோடு போராடுபவர்களாக அரசியல் சக்திகள் பிரித்து வைத்திருக்கின்றன. தேர்தல் வரும் போது அவர்கள் ஒன்று கூடி பதவிக்கு வந்து விடுவார்கள். 

மனித வளத்தை எப்படி காசாக்குவது என்பதைப் பற்றிய சிந்தனைகளும், மனித மனத்தை தன் நோக்கி எப்படித் திருப்பிப் பயன் அடைவது என்பதற்காக முயற்சிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. யாரை ஜெயிக்க வைக்க வேண்டுமென கார்பொரேட் மூளைகள் சிந்தித்து கோடிகள் பெற்றுக் கொண்டு மக்களின் மனத்தில் ஊடுறுவுகின்றார்கள். மக்களும் ஆட்டு மந்தைகள் போல சிந்திக்கும் திறனன்றி ஏற்றுக் கொள்கிறார்கள். 

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

சாமியார்களும், அரசியல்வாதிகளும் எதிர்காலத்தில் வரக்கூடிய பலாபலன்களைக் காரணம் காட்டி அடிமை வம்சங்களை உருவாக்கி சம்பளம் தராத பணியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இருக்க இடமும், சாப்பாடும் கொடுத்தால் ஆன்மீகம் என்ற போர்வையில் அமைதி என்கிற தத்துவத்திற்காக சாமியாருக்காக உழைக்கின்றார்கள் ஒரு கூட்டம். 

கோவில் என்கிற பெயரில், பக்தி என்கிற தத்துவத்தில் உழைக்கும் பணத்தை சுரண்டுகிறது இன்னொரு கூட்டம். 

பதவி என்கிற மயக்கத்தில் மாமா வேலை கூடச் செய்ய அரசியல் எனும் பொதுத்தத்துவதிற்காக காசில்லா வேலைக்காரக் கும்பல்களை உருவாக்கி உறிஞ்சிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது அரசியல்கூட்டம். 

பதவியும், அதிகாரமும், கொழுத்த பணமும் எனக்கும், என் குடும்பத்திற்கும், என் நண்பர்களுக்கு மட்டுமே. வேலை செய்யவும், கோஷம் போடவும், வீசும் காசினைக் கவ்விக் கொள்ளும் நாயாகவும் இருக்க மட்டுமே உனக்கு தகுதி எனச் சொல்லி கும்மாளம்மடித்துக் கொண்டிருக்கிறது அரசியல்கூட்டம்.

சட்டங்கள் இருக்கின்றன என்று மக்களை நம்ப வைக்க அவ்வப்போது ஊழல் எனப் பிடிப்பார்கள். ஒரு சிலருக்கு தண்டனை கிடைத்து விட்டது என காட்டுவார்கள். கொழுத்த ஊழல்வாதிகள் சட்டத்தாலும் எவராலும் கண்டு கொள்ளாமலே ஓய்வு பெறுவார்கள். 

தர்மம், நியாயம், நீதி எனப் பேசுபவர்கள் இவை எதையும் கடை பிடிப்பது இல்லை. தனி மனிதனுக்கு ஒரு நியாயம், நிறுவனங்களுக்கு ஒரு நியாயம் என்று பத்திரிக்கைகள் சொல்லும். அது தான் உண்மை என்று ஒரு கூட்டம் நம்பும். அதைப் பற்றி ஒரு கூட்டம் பேசும், எழுதும், கத்தும், திட்டும்.  நீதி பிறழ்வதும், கொள்கை மாறுவதும் அரசியல் சாணக்கியத்தனம் என்பார்கள். தனி மனிதனுக்கு எனில் கடவுள் தண்டிப்பார் என்பார்கள். இப்படியெல்லாம் எதைப் பற்றியும் நேர் வழி சிந்திக்க விடமாட்டார்கள். இப்படியெல்லாம் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது இப்போது மட்டும் நடப்பது அல்ல. மனிதர்கள் சிந்திக்க ஆரம்பித்த காலத்திலிருந்து நடந்து கொண்டிருக்கும் அக்கப்போர்கள் இவைகள்.

காலம் போன நேரத்தில் உடம்பு ஒத்துழைக்காக நேரத்தில் எல்லாவற்றையும் அசை போட்டு அழுது கொண்டிருக்கும் கூட்டத்தார் பெருகி இருக்கின்றார்கள். அறுபது வயதா ஓடிப்போ என மேலுலகம் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள் மருத்துவத்துறையினரும், அரசும்.

யாரைப் பற்றிப் பேச வேண்டும், எவரைப் பற்றி எழுத வேண்டுமென ஃபேஸ்புக், டிவிட்டர்கள் முதலாளிகள் முடிவு செய்கின்றார்கள். எந்த வித பணமும் இன்றி, செலவும் இன்றி நாமெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறோம். பேசிக் கொண்டிருக்கிறோம் யாருக்காகவோ. நமக்காக நாம் எதுவும் செய்து கொள்ளாமல் பிறருக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அடிமைகள் நாம்.

சம்பளமே இல்லாமல் பிறர் உயரவும், வாழவும் இணையத்தில் காசைக் கரியாக்கி உழைப்பினைக் கொடுத்து அழிந்து கொண்டிருக்கிறோம் நாமெல்லாம். 

சிந்திக்க வேண்டுகிறேன். நமக்கான வாழ்க்கையை நாம் வாழ இப்படியான வேலைகளை, அலப்பறைகளை ஒதுக்கி விட்டு வாழ்வோம் வாருங்கள் !!







Wednesday, February 28, 2018

ஒரு ஆண் பதினாறு பெண்கள்

”ஏண்டி, நீ மட்டும் அவனைத் தான் கல்யாணம் கட்டிக்குவேன்னு சொல்லி, அதுவும் உங்கப்பனும், ஆத்தாளும் உன்னைக் கூட்டி விட்டு, டிவியில போய் அவனுக்கிட்டே வழிஞ்சியே அதைப் பத்தியெல்லாம் நான் கேட்டேனா? பலபேரு பார்ப்பாங்கன்னு தெரிஞ்சும் சினிமாக்காரனைத் தான் கட்டிக்கனும்னு ஒத்தக்கால்ல நின்னு பார்த்தாய். அவன் அழகா கழட்டி விட்டுட்டான். அவன் உன்னை சும்மா விட்டிருப்பான்னு நான் நம்பணுமா? நான் அப்படித்தாண்டி எவ கூட வேணுன்னாலும் சுத்துவேன், அதையெல்லாம் நீ கேக்கக் கூடாது. நான் உன்னைக் கேக்கலைல்ல, உனக்கு அந்த அருகதையெல்லாம் கிடையாதுடி நாயே!”

இப்படி ஒரு பேச்சினை வரும் காலத்தில் ஆர்யாவிடம் ஈசிக் கொண்டும், இழைந்து கொண்டும், காமம் கொப்பளிக்கப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த பதினாறு பெண்களில் யாராவது ஒருவரோ அல்லது பலரோ அவர்களது எதிர்காலக் கணவர்களிடமிருந்து கேட்க நேரிடலாம்.

அதுமட்டுமல்ல, ஆர்யா திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணைத்தவிர மீதமுள்ள பெண்கள் வேறு யாரோ ஒரு ஆணைத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்கிற போது, அவர்களுக்குப் பிறக்கக் கூடிய பிள்ளைகள் எதிர்காலத்தில் தன் தாயைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று அந்தப் பெண்களைப் பெற்றவர்களுக்கு தெரிந்திருக்காதா? இது எவ்வளவு பெரிய அவமானத்தையும், அனர்த்தங்களையும் உருவாக்கும்?

அந்தப் பதினாறு பெண்களும் இளம் பருவத்தில் இருக்கின்றார்கள். சொல்லிக் கேட்க கூடிய நிலையில் அவர்கள் நிச்சயம் இருக்கமாட்டார்கள். ஆனால் அனுபவசாலிகள் இருப்பார்களே அவர்களாவது சொல்லிப் புரிய வைத்திருக்கக் கூடாதா? 

இந்த நிகழ்ச்சிக்கு காம்பியர் செய்யும் சங்கீதா, தன் மகளை இப்படி அனுப்பி வைப்பாரா? இல்லை ஆர்யா தன் தங்கையையோ அல்லது அக்காவையோ, சினிமாக்காரனைக் கட்டிக்க டெஸ்ட்டில் கலந்து கொள்ள அனுப்பி வைப்பாரா? என்று அவர்கள் தான் சமூகத்திற்குச் சொல்ல வேண்டும்.

இருமணம் இணையும் நிகழ்ச்சி திருமணம். தாரம் என்பவள் தாய்க்கு நிகரனாவள். அவள் ஆலமரம். அவள் அச்சாணி. அவளின்றி உலகம் இயங்காது. அப்பேர்ப்பட்ட பெண்ணை ஆர்யா அவமானப்படுத்துகிறார். பெண்களைக் கேவலப்படுத்துகிறார். ஏழாயிரம் பேரில் பதினாறு பெண்களைத் தேர்ந்தெடுத்தார்களாம். என்ன ஒரு அவமானமான நிகழ்ச்சி இது.  பெண்களை வரிசையாக நிறுத்தி அவர்களிடம் பேசிப்பழகி அதன் பிறகு அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வாராம் ஆர்யா. இதே போல யாரோ ஒரு பெண் செய்தால் ஏற்றுக்கொள்ளுமா இந்தச் சமூகம்?

இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பிரகாஷ் இது கலாச்சார மீறலான நிகழ்ச்சி இல்லை என விகடனில் பேட்டி கொடுத்துள்ளார். இயக்குனர் பிரகாஷ் தன்னை வளர்த்த சமூகத்திற்கு, தன் கலாச்சாரத்திற்கு செய்யும் நன்றிக்கடனா இது? காலம் மாற மாற கலாச்சாரமும் தன்னை சீர்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டவை தான். ஆனால் சமூகத்தின் அடிப்படையான ஒருவனுக்கு ஒருத்தி, ஒழுக்கம், சுயகட்டுப்பாடு ஆகியவைகள் மீது பிரகாஷ் மாதிரியானவர்கள் கலை என்கிற பெயரில், நிகழ்ச்சி என்கிற பெயரில் செய்யும் தாக்குதல்கள் எதிர்கால சந்ததியினருக்கு, அவர்களின் மனதுக்குள் மிகப் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தி அழிவுக்கு தள்ளி விடுமே அதைப் பற்றி அவர்கள் கொஞ்சமாவது சிந்தித்தார்களா?

ஆர்யா தனக்குப் பிடிக்காத பெண்களை எலிமினேட் செய்வார் அல்லவா? சினிமாக்காரனுக்கே உன்னைப் பிடிக்கலைன்னா வேறு எவண்டி ஒன்னைக் கட்டிக்குவான்னு சமூகத்தில் பேசுவார்களே அப்போது என்ன செய்யப்போகின்றார்கள் இவர்கள்?

தன் படத்தைக் காசு கொடுத்துப் பார்க்கும் சமூகத்திற்கு ஆர்யா செய்யும் நன்றிக்கடன் இதுதானா? செய் நன்றி மறந்து தன் சுகமே பெரிது, தன் நலத்திற்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் அழித்து ஒழிப்பேன் என்று வாழும் இவர்களைப் போன்றவர்களின் வாழ்க்கை அவ்வளவு சுகமாக இருந்திடாது. ஆர்யா பெண்களின் மீது நடத்தும் பாலியல் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். நான்காவது பாகத்தில் ஒவ்வொரு பெண்களும் ஆட்டம் போடுகிறார். எவ்வளவு அசிங்கம் இது. எந்த ஒரு ஆண்மகனும் செய்யக்கூடாத அடாத செயலைச் செய்யும் ஆர்யாவுக்கு நல்ல மனது ஒன்று இருக்கிறதா என்று புரியவில்லை. கொஞ்சம் கூட சங்கடமே இல்லாமல் ஒவ்வொரு பெண்ணுடனும் அமர்ந்து கொண்டு பேசுகிறார். கட்டிப் பிடிக்கிறார். டான்ஸ் ஆடுகிறார். இது அக்மார்க் பாலியல் அத்துமீறலே. சட்டப்படி நடக்கக் கூடிய பாலியல் அத்துமீறல் இது. ஏனென்றால் அந்தப் பெண்கள் 18 வயதைத் தாண்டி இருப்பார்கள்.

இந்த உலகம் பல்வேறு வரலாற்றுப் பதிவுகளை தன்னகத்தே வைத்திருக்கிறது. பெண்களின் விஷயத்தில் எவனொருவன் ஆட்டம் போடுகின்றானோ அவன் நிம்மதியாக வாழ்ந்து செத்த வரலாறு இல்லவே இல்லை. தேடினாலும் கிடைக்காது. 

அந்தப் பதினைந்து பெண்களின் மனது படும்பாடு, அவர்களின் எதிர்கால வாழ்க்கை, சமூகத்தின் எதிர்காலம் இவைகளைக் கருத்தில் கொண்டு ஆர்யா இந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். தன் ஒருவனின் நலனுக்காக சமூகத்தின் கலாச்சாரத்தின் மீது ஆர்யா நடத்தும் தாக்குதல் அவருக்கு நல்ல விளைவுகளைத் தந்து விடாது. 

இந்தியாவின் சமூகக்கோட்பாடுகளின் மீதும், கலாச்சாரத்திலும் தாக்குதல்களை நிகழ்த்தும் இந்த நிகழ்ச்சியை எந்தக் கட்சியும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. ஆபாசம் தெறிக்கும் இந்த நிகழ்ச்சி தடை செய்யபடல் அவசியம். தொடர்ந்து ஒளிபரப்புவது பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கி விடும். சமூகச் சிந்தனையாளர்கள், கலாச்சாரகாவலர்கள் முன்னெடுக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் இது.

உண்மையில் தன் பெண் குழந்தையின் மீது அதீதப்பாசம் உள்ள எந்த ஒரு பெற்றோரும் செய்யவே கூடாத செயல் தான் இது.

யாரும் இங்கே தனித்தனியாக வாழ முடியாது. சமூகத்தின் இடையே தான் வாழ வேண்டும்.

ஏற்கனவே ஐபிஎஃப்பில் எனது ஆட்சேபனையைப் பதிவு செய்திருக்கிறேன். இன்னும் ஒரு பதிலும் இல்லை. 

நானும் ஒரு பெண்ணுக்குத் தகப்பன் என்கிற முறையில் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு அக்கிரமமான நிகழ்ச்சி இது. எனது கடுமையான எதிர்ப்பினை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

ஆர்யா இந்த நிகழ்ச்சியை நிறுத்தவில்லை எனில் காலம் அதற்கான விளைவை அவருக்கு அளிக்கும். 

Thursday, January 4, 2018

பெண்களை நம்பினால் நம்புங்கள்

பாரதியின் ”பீரங்கி சிப்பாய்” படித்ததும் எனக்குள் எழுந்திருந்த தேசிய கவியின் பிம்பம் ஆட்டம் காண ஆரம்பித்தது. முறுக்கிய மீசைக்குள்ளும் முண்டாசுக்குள்ளும் ஈரும் பேனும் இருந்திருக்குமோ என சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. காலச்சுவடு பத்திரிக்கையில் பல பின் குறிப்புகளுடன் வெளியான அந்தக்கட்டுரை எனக்குத் தலைவலியை உண்டாக்கியது. சரியான எரிச்சல். இதோ கீழே இருக்கும் இணைப்பில் இருக்கும் அந்தக் கட்டுரையைப் படித்து விடுங்கள்.

http://tamil.thehindu.com/opinion/article19659327.ece

இதில் வாஸந்தி வேறு. ”தைரியம்னா என்னான்னா பயம் இல்லாம நடிக்கிறதுன்னு” ஏதோ ஒரு படத்தில் கேட்டேன். 

அம்மா இருக்கிறவரை வாயையும், பேனாவையும், சூ....யும் மூடிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் அவர் இறந்ததும் வீறு கொண்டு அம்மா பற்றிய புத்தகங்களை வெளியிடுகின்றார்கள். அந்தப் புத்தகத்தின் தலைப்பு மறந்து விட்டது. அறிமுக உரையில் ”எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டம்” என்ற வரியோடு முடிந்திருக்கிறது. என்ன ஒரு வன்மம்? அம்மாவை விமர்சிக்கின்றேன் பேர்வழி என தன் வன்மத்தை வழித்து எழுதியிருக்கிறார் போல. அம்மா உயிரோடா இருக்கிறார்கள்? அதையெல்லாம் மறுக்க? பாவம். அவரால் எனக்கொன்றும் ஆகவில்லை. ஆனால் மனசுன்னு ஒன்னு இருக்கே? வாஸந்தியின் மீது எரிச்சல் தான் மண்டியது. எழுத எவ்வளவோ இருக்கிறது. வாழ்க்கையில் தனக்கென வாழாமல் வாழ்ந்து மறைந்த பெண்மையைப் பற்றி எழுத எப்படித்தான் மனசு வருகிறதோ தெரியவில்லை.

இந்த எரிச்சலில் யூடியூப்பை தோண்டிக் கொண்டிருந்தேன். ரஜினி அலப்பறை வீடியோக்கள் வரிசை கட்டி நின்றன. ஒரு எழவும் தெரியாமல் என்னத்துக்கு அரசியலுக்கு வருகிறேன் என்று அலப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. ஆளாளுக்கு வச்சு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். படையப்பாவில் ரம்யா கிருஷ்ணனை ஜெயித்தது மாதிரி ஜெயித்து விடலாம் என்று நினைத்திருப்பார் போல. குஷ்பூவோ அல்லது ஷ்ரேயாவோ நாளை தமிழகத்தின் துணை முதல்வராகி பின்னர் நயன்தாரா முதலமைச்சராகி விடுவார் என நம்புவோமாக. நம்புங்கள் நயன்தாரா முதலமைச்சர் கேண்டிடேட் என்றால் அடியேன் பிரச்சாரம் செய்வேன். என் கலாச்சாரம் அப்படி இருக்கிறது.

அரசியல் பெண்களின் உடலின் மீது கட்டமைக்கப்படுகிறது. ரஜினி தன் படங்களில் அழகிய ஹீரோயின்களை தடவி படம் பார்க்கும் தன் ரசிகர்களின் சா....... உசுப்பி விடுகிறார். ரஜினி மட்டும் நடித்தால் ஒரு தெரு (வேண்டாம் நாய் என்றால் நன்றி இருக்கும்) சினிமா பார்க்கப் போகாது. தேர்தல் பிரச்சாரத்துக்கு கூட்டம் சேர்க்க நடிகைகளை இறக்குவார் என நம்புவோம். நடிகைகளின் தொப்பூல்களைப் பார்த்து, அதே மூடில் போய் எச்சில் ஒழுக ஓட்டுப் போடுவோமாக. 

நாம் தடவினால் என்ன ரஜினி தடவினால் என்ன? எல்லாம் ஒன்று தானே என மனசு சமாதானம் சொல்லும். கிக்கு தடவலில் அல்லவா இருக்கிறது. சிவாஜியில் ஒரு பாடலில் ஷ்ரேயாவின் கவட்டியை விரித்துக் காண்பிப்பார் பாருங்கள் அந்த ஒரு காட்சிக்காக நூறு தடவை அந்தப் பாட்டைப் பார்த்திருப்பேன். எம்.ஜி.ஆர் ஹீரோயின்களைத் தடவி பிசைந்த போது பார்த்து ரசித்து ரசித்து ஓட்டாய் குத்துக்குத்துன்னு குத்திய வரலாறு நமக்கு இருக்கிறது அல்லவா? 

சரி! போகட்டும் சொந்தக் கதைகள். அதை எழுதினால் ரொம்பவும் செக்ஸியாகப் போய் விடும். சாருவாக இருந்தால் ஹமீது புக்குப் போடுவார். 1000 புக்குகள் விற்கும். அந்த லாபத்தில் நானும் 1000 ரூபாய் ஜெட்டி போடுவேன். அதுக்கெல்லாம் கொடுப்பினை வேண்டும். நமக்கெல்லாம் ஏது? இப்படி ஏதாவது எழுதி சொரிந்து கொண்டால்தான் உண்டு. 

அடச்சே, எங்கேயோ போய் விட்டேன்.

எனக்குப் பிடித்த ஒரு பாடலை அவ்வப்போது கேட்பதுண்டு. எரிச்சலோ கோபமோ வந்தால் சினிமா பாடல்களுக்குள் மூழ்கி விடுவேன். அப்படி என் மனதில் நீங்காத இடம் பிடித்த பாடல் இது. மோகனும் மஜா ராதாவும் நடித்திருப்பார்கள். மோகன் நூறு கோடி ரூபாய் சம்பளம் பெற்ற மாதிரி நடித்திருப்பார். மஜா ராதா ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி இருப்பார் இடுப்பை. 

இதோ அந்தப் பாடல் கீழே. முதலில் உள்ள பாடலைப் பார்த்து விட்டு கீழே இருக்கும் அடுத்தப் பாடலைப் பாருங்கள். 

மஜா ராதாவும் மோஹனும் நடித்த பாடல் இது.


உய்யலா ஜம்பாலா எனும் தெலுங்குப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியோடு மிக்சிங் ஆன பாடலில் நடித்தவர் அவிகா கவுர் மற்றும் ராஜ் தருன். இந்தப் பாடலையும் பார்த்து விடுங்கள். (இந்த அம்மணி இப்போது செம குண்டு கத்திரிக்காய் போல இருக்கிறார்)


இந்தப் படத்தில் பாலைக் குடித்தவர் நிலையினை நினைத்து எனக்குள் பச்சாதாபமே எழுந்து விட்டது. அந்தப் பையன் என்ன செய்தான்? பாவம் அல்லவா? 

ஆகவே பெண்களை நம்பினால் நம்புங்கள்! அது அவரவர் விருப்பம்.

Tuesday, January 2, 2018

ரஜினிக்கு காலம் தரப்போவது முட்களா? பூக்களா?

குழந்தைகள் இரண்டும் லீவில் இருக்கின்றார்கள். 5 மணிக்கு எழுந்து எழுந்து குளித்து முடித்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் செல்வதற்கு நேரம் மிகச் சரியாக இருக்கும். பரபரப்பான அந்த நாட்களில் இருந்து இருவருக்கும் கொஞ்சம் விடுதலை. 

இந்த வருடம் கோவையில் குளிர் மிக அதிகம்.  வீட்டுக்குள் இருந்து வெளியில் வந்தால்  உடல் சில்லிட்டுப் போகிறது. சுற்றிலும் தென்னை மரங்களும், வேப்பமரமும் இருந்தாலும் கதகதப்பு இல்லை. ரூடோஸ் எப்படி குளிரைத் தாங்குகிறது என்று தெரியவில்லை. சமீபத்தில் ஊருக்குச் சென்ற போது ரூடோஸை ஆஸ்ரமத்தில் விட்டுச் சென்றோம். வீட்டுக்கு வந்தவுடன் ரூடோஸ் குரைத்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்காமல் ஏதோ இழந்தது போல இருந்தது. டென்சனில் உடனே ஆஸ்ரமத்திற்குச் சென்று அழைத்து வந்து விட்டோம். ”ரித்திக்கிட்டே தான்பா பாசமா இருக்கு. அவன் வந்தா அவனுடன் ஈச ஆரம்பித்து விடுகிறாள் ரூடோஸ்” என்று நிவேதிதா குறைபட்டுக் கொள்வாள். ரூடோஸ் பெயரைப் போலவே முரட்டுத்தனமானவள். வாயைத் திறந்தால் பார்ப்பவருக்கு குலை நடுங்கி விடும். குரைக்கும் போது முடிகள் சிலிர்த்து சிங்கம் போல சீறுவாள். என் மீது வந்து மோதினால் நான் அம்பேல். மல்லாக்க விழுந்து விடுவேன். ஆகையால் அருகில் விடுவது இல்லை. காலையில் தலையில் கொஞ்சம் தடவிக் கொடுப்பதோடு சரி. தலையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு தடவிக் கொடு என்று தலையை அசைத்துக் கொண்டிருப்பாள் ரூடோஸ். 

கடந்த வெள்ளியன்று அம்பாள் சினிபார்க்குக்கு “வேலைக்காரன்” படம் பார்க்க மனைவியுடன் இருவரும் சென்றிருந்தனர். எனக்கு சிவகார்த்திகேயனின் லூசுத்தனமான பேச்சு பிடிக்காது. ஆகவே வர இயலாது என்றுச் சொல்லி மறுத்து விட்டேன். வீட்டுக்குள் நுழையும் போதே, “ஏங்க, நல்ல டிவிடிக்கடை இருக்கான்னு தேடனும்ங்க” என்றுச் சொல்லிக் கொண்டே வந்தார் மனையாள். பசங்க,”அப்பா, லைட்டைப் போடுங்கடா, வீட்டுக்கு போறோம்னு, தியேட்டரில் கத்துறாங்கப்பா, சரியான மொக்கைப்படம்பா, நல்லவேளைக்கு நீங்க வரவில்லை, அம்மா, நெட்டில் பாத்துக்கலாம்மா இனிமேல், காசு தான் வேஸ்டா போச்சு” என்றார்கள் இருவரும் கோரசாக. நான் ஏற்கனவே ப்ளூசட்டை விமர்சனம் பார்த்து விட்டேன் என்பது மூவருக்கும் தெரியாது. பசங்க இனி சினிமாப்பக்கம் எட்டிப்பார்க்க மாட்டார்கள். நமக்கு அதுதானே வேண்டும்.

சிவகார்த்திகேயனுக்கு மிக்க நன்றி !

ப்ளூசட்டை என்றவுடன் மாமா டிவி புரோகிராம் நினைவுக்கு வந்து விட்டது. காமெடி பண்ணுகிறேன் பேர்வழி என்று தாங்களே தங்களைக் கைதட்டிக் கொண்டு சிரித்துக் கொள்ளும் லூசுப்பயல்கள் செய்யும் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸில் ப்ளூசட்டை போலவே காமெடி பண்ணினான் ஒருவன். எரிச்சலில் அவன் மண்டையை உடைக்கலாமா என்று கூட தோன்றியது. இவனுங்க காமெடியும், நக்கலும் சகிக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் தங்களைப் பெற்ற அம்மாவையும் பிறரோடு சேர்த்து வைத்துப் பேசி காமெடி பண்ணுவான்கள் கிறுக்கன்கள். 

அடுத்த வாரம் ஐபிஎஃப்பில் கம்ப்ளைண்டு செய்ய வேண்டும். அழிச்சாட்டியத்துக்கு ஆப்பு அடிக்கணும். நாடகத்துக்கு எல்லாம் சென்ஸார் இருப்பது போல டிவி நாடகங்களுக்கு சென்சார் வைக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதிக்கு இது பற்றி விபரமாக எழுதிப் போட்டால் அவர் ஏதாவது ஆவண செய்வார் என்று நினைக்கிறேன். 

ஈரோடு மகேஸ் என்றொரு திமிர் பிடித்த ஒருவரை நான் இது நாள் வரை பார்க்கவில்லை. ஆனானப்பட்ட டிடி இப்போது மாமா டிவியில் இல்லை. இவனெல்லாம் சும்மா பச்சா? என்னா பேச்சு பேசுறான் தெரியுமா இவன்? அகங்காரமும், ஆணவமும் நிரம்பிய ஒருவன் இருக்கிறான் என்றால் இவனைத்தான் சொல்ல வேண்டும். மகேஷ் பிறரை மதிக்கக் கற்றுக் கொள். இல்லையென்றால் காலம் உன்னை அடக்கி விடும்.

நேற்று குருநாதரிடம் ஆசீர்வாதம் வாங்க வெள்ளிங்கிரி சென்றிருந்தேன். கடந்த வாரம் பசங்க இருவரும் ஆசிரமத்தில் மூன்று நாட்கள் தங்கி இருந்தனர். லீவு விட்டால் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்து விடுவது வழக்கம். யானையை மிக அருகில் பார்த்ததாகச் சொன்னார்கள். எனக்குத்தான் திக்கென்றது. பூண்டி கோவிலில் கூட்டம் அள்ளியது.  கோவில்கள் தோறும் மக்கள் பெருக்கம். 

ஜோதி ஸ்வாமியிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன். ”சாமி அந்தக் காலத்தில் தினம் தோறும் தர்மம் போடுங்க என்ற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் யாரையும் அப்படிப் பார்க்க முடியவில்லை” என்றேன்.

”வீடுகளில் இருந்து தர்மம் நீங்கிப் போய் விட்டது. தர்மம் இப்போது அதர்மமாக மாறிப் போனது. தர்மத்தை வாங்க இன்று யாருமில்லாது போயினர்” என்றார் ஸ்வாமி.

தர்மம் அதர்மமாக மாறியதன் காரணமாகவோ என்னவோ, இப்போதெல்லாம் மொத்தம் மொத்தமாக மனிதர்கள் இயற்கையால் கொல்லப்படுகின்றார்கள். ஏழை என்று பார்ப்பதும் இல்லை பணக்காரன் என்றும் பார்ப்பதும் இல்லை. கொத்துக் கொத்தாக அழிவுகள் ஏற்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் தமிழர்கள் அதிகம் இயற்கையால் அழிக்கப்படுகின்றனர். இதெல்லாம் அதர்மம் அதிகரிக்கும் போது பாரத்தைக் குறைப்பதற்காக தர்மம் செய்யும் வேலை என்றார் ஸ்வாமி.

ரஜினி காலக்கெடு வைத்த போதே தெரிந்திருக்கும். அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்லப்போகிறார் என்று. ஆனால் ரஜினிக்குத் தெரியாத ஒன்று உள்ளது. தன் படத்தையே ஜெயிக்க வைக்க முடியாத ரஜினி, தமிழக அரசியலில் எப்படி ஜெயிப்பார்? என்பது தெரியவில்லை. ரஜினி ரசிகர்கள் பலரும் பல கட்சிகளுக்கு வாக்களித்திருப்பார்கள். மாறிப்போன அரசியல் களத்தில் ரஜினிக்கு வாய்ப்பு இருப்பதாக நினைக்கவே முடியவில்லை. பிஜேபியின் மிஸ்டுகால் போலத்தான் ரஜினியின் இணையதளமும், ஆப்பும் இருக்கும் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. கமல் பாவம். ரஜினி வழக்கம் போல முந்திக் கொண்டார். கமலுக்கு இப்போது டிவிட்டர் பக்கம் வேலை இருக்காது என நினைக்கிறேன்.





அறுபது வயதில் கிட்னி கெட்டுப்போய் நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்க தன் ரசிகனின் கையைக் கூட குலுக்க முடியாத நிலையில் ரஜினிக்கு இந்த வேலை தேவையா என்று தோன்றுகிறது. கிட்னி பத்திரமாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆருக்கு அதுதான் பிரச்சினையானது. ஆறிலிருந்து அறுபது வரை ரஜினியும், புவனா ஒரு கேள்விக்குறி ரஜினியையும் மறக்க முடியாது. அவரின் உண்மையான நடிப்பில் மிளிர்ந்த அந்த வேடங்களுக்கு சமமாக அரசியல் வேடம் எடுபடாது என்றே தோன்றுகிறது.

மானிட உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ஆன்மீகம். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. ஆன்மீகத்தின் பெயராலிந்த உலக மாந்தர்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இல்லாத ஆன்மீகத்தைப் பற்றிய புரிதல்  இல்லாதவர்களால் உலக மாந்தர்களின் வாழ்க்கைக்கு என்ன செய்து விட இயலும். உண்மை என்னவென்று புரிந்து கொள்ள முடியாதவர்களால் பிறருக்கு எப்படி நன்மை செய்ய முடியும். ஒரு சாதாரண அரசியல்வாதியை விட மிக ஆபத்தானவர்கள் ஆன்மீக அரசியல்வாதிகள்.

அதிமுக, திமுக பரவாயில்லை என்கிற அளவுக்கு ஆன்மீக தொடர்பான கட்சிகளின் செயல்பாடுகளை நாம் இப்போது பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த நிலையில் ரஜினியின் ஆன்மீகம் ஒட்டிய அரசியல் பிரவேசம் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா? என்கிற கேள்வி எழும்புகிற போது தற்போது நடந்து வரும் செயல்கள் கண் முன்னாலே தோன்றி மறைகின்றன.

இருப்பினும் காலத்தின் கையில் இருக்கும் அவரின் நூல்கண்டு என்ன ஆகும் என பொறுத்திருந்து பார்ப்போம். 

தமிழகத்தினை வழி நடத்தும் தர்மத்தின் பாதையில் முட்களும் இருக்கும். பூக்களும் இருக்கும். ரஜினிக்கு முட்களா இல்லை பூக்களா என்று காலம் பதில் சொல்லும்.


Sunday, August 27, 2017

நன் மனைவி கிடைப்பதரிது

கடந்த வாரம் என்று நினைவு. விஜய் டிவியின் நீயா நானாவில் திருமணத்திற்கு பெண் தேடும் ஆண்களின் பிரச்சினைகள் பற்றி  கோபி நாத் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆண்களுக்கு பெண்கள் போடும் மிக முக்கியமான கண்டிஷன்கள் தனி வீடு இருக்க வேண்டும், நல்ல வேலையில் இருக்க வேண்டும், அக்கா தங்கைகள் இருக்கக் கூடாது, கடன் இருக்கக் கூடாது, கடன் வாங்கிக் கட்டுபவராகவும் இருக்கக் கூடாது என்பவை. ஒரு சிலர் அமெரிக்காவில் செட்டில் ஆவது வரவேற்கப்படுகிறது. இதெல்லாம் இருந்தால் தான் செலக்‌ஷன் செய்வார்கள். அதன் பிறகு இன்னபிற கண்டிஷன்கள் போடப்படலாம். அது அந்தந்தக் குடும்பத்தைப் பொறுத்தது. 

அந்த விவாதத்தில் பேசிய பெண்களில் ஒருவர் கூட நல்லியல்பு கொண்ட குடும்பத்திலிருந்து ஆண்மகன் இருந்தால் என் மகளைக் கட்டிக் கொடுப்பேன் என்று சொல்லவே இல்லை. கண் இமை முடியை மழித்துக் கொள்வது போல நல்லியல்புகளை மழித்துக் கொண்டு விட்டார்கள் போலும். பணம், பொருள் இருந்தால் தான் ஆண்மகன் என்கிறார்கள். அவனுக்குத்தான் பெண் கொடுப்போம் என்கிறார்கள் பெண்களைப் பெற்றவர்கள்.

சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம்
இல்லாளே வந்த விருந்தோம்பிச் - செல்வத்
திடரின்றி ஏமாந் திருந்தாரே நாளும்
கடலுள் துலாம்பண்ணி னார். ( பழமொழி நானூறு - 321 )

கணவனின் முகக் குறிப்பறிந்து  கணவன் நினைத்த காரியத்தை அறிந்து கொள்ளும் மனையாளும், வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்று உபசரித்து அனுப்பும் மனையாளும், செல்வத்துடன் வாழும் மனையாளைக் கொண்டவனே என்றைக்கும் நீங்காத இன்பமுடையவர்கள். இனி வருங்காலத்தில் இப்படி ஒரு நன் மனைவியை எவராலும் அடையவே முடியாது போலும் என்று நினைக்க வைத்தது அன்றைய நீயா நானாவில் பேசிய பெண்களும், பெண்களின் தாயார்களும், தந்தைகளும் பேசிய பேச்சுக்கள்.

பெண் என்பவளுக்கு எது முக்கியம் என்பதை ஒரு பழம் பாடல் விளக்குகிறது.

நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை - பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்
வித்தின்றிச் சம்பிரதம் இல்.  (பழமொழி நானூறு - 327)

இந்தப் பாடலின் விளக்கம்: அறுசுவை உணவின்றி உடலுக்கு உயிர் இல்லை. பணமின்றி காரியங்களைச் செய்ய முடியாது. வித்து இன்றி விளைச்சலும் இருக்க முடியாது. அது போல பெண்களுக்கு நாணம் என்பது முக்கியம். இப்போதையப் பெண்களுக்கு நாணம் என்பது என்னவென்று தெரியுமா என்று தெரியவில்லை.

இத்தகைய நறுங்குணங்கள் கொண்ட பெண்மையைப் பார்ப்பது இனிமேல் அரிதிலும் அரிதாகி விடும் போல. 

அதுவாவது பரவாயில்லை. அந்தக் காலத்தில் சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்வார்கள். ஆனால் இன்றைக்கோ ஒரு குழந்தைக்கே படாதபாடு பட வேண்டி இருக்கிறது. குழந்தைபெற ஹாஸ்பிட்டல் இருந்தாலே போதும், தாம்பத்யம் வேண்டியதில்லை என்கிறது ஒரு விளம்பரம். ஆண் இல்லாமல் குழந்தைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள். 


ஏரோப்ளேன் ஓட்ட ஆரம்பித்த பெண்கள் இனி ஆண்கள் இல்லாமல் குழந்தைகளையும் பெற்றுக் கொள்வார்கள். ஆண்களின் பாடு இனி திண்டாட்டம் தான் போலும். பெண்கள் ஆண் குழந்தைகளே வேண்டாமென்று முடிவெடுத்தால் மேலும் சிக்கலாகி விடும் போல. என்னவோ நடக்கின்றது. அது நல்லதாக இல்லை என்பது மட்டும் புரிகிறது.

Monday, August 21, 2017

கமல்ஹாசன் தமிழகத்தின் முதலமைச்சராகலாம்

எனக்கொரு பிரச்சினை இருக்கிறது. சொல் பொறுக்க மாட்டேன். மனதளவில் யாரைப் பார்த்தும் பொறாமையோ அல்லது எரிச்சலோ, கெடு எண்ணமோ எந்தக் காலத்திலும் நினைத்ததும் இல்லை, நினைக்கப்போவதும் இல்லை. இது எனது இயல்பு. இந்த இயல்பின் காரணமாக பல பேரின் அக்கிரமங்களைக் காணும் போது எரிச்சலும், ஆற்றாமையும் ஏற்பட்டு மனது வெம்பி விடும் எனக்கு. கமல்ஹாசனின் மஹாநதி படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். விமர்சனம் படித்தேன். அன்றைக்கு மனதுக்குள் வலித்த வலியில் அப்படத்தை நான் இதுவரை பார்க்கவே இல்லை. அதே போல விக்ரம் நடித்த காசி படத்தைப் பார்க்கச் சென்று பாதியில் எழுந்து வந்து விட்டேன். அந்தளவுக்கு துரோகமும், அக்கிரமங்களும் நிகழும் பட்சத்தில் அதைக் காட்சியாக்க் கூட காண என் மனது விரும்பாது. மன உளைச்சல் அதிகமாகி விடும். சமீபத்தில் அதை நான் பிக்பாஸ் பார்த்த போது அனுபவித்தேன். 

எவிக்சனில் குறைவான ஓட்டுப் பெற்றவரை ஒப்புக்குச் சப்பாணிக் காரணத்தைச் சொல்லிக் காப்பாற்றினார்கள். அன்றைக்கு நடத்தப்பட்ட இந்த அறம் மீறிய செயலால் எனக்கு மனது ஒரு மாதிரியாகப் போய் விட்டது. அதை கமல் நியாயப்படுத்தினார் வெகு சாதுரியமாக. கமல்ஹாசனின் பிக்பாஸ் அறம் அவர் மீதான அவ நம்பிக்கையின்மையை உருவாக்கியது. நான் அவர் மீது அவ நம்பிக்கை அடைவதால் அவருக்கு ஒன்றும் இழப்பு இல்லை. நான் யாரென்றே அவருக்குத் தெரியாது. தெரிந்து கொள்வதால் எனக்கோ இல்லை அவருக்கோ ஒரு பயனும் இல்லை என்பது வேறு விஷயம். எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று வெற்று ஜம்பமாகப் பேசிக் கொள்வதில் இருக்கும் அபத்தத்தை உணர்ந்திருக்கிறேன். பொருளை முன் வைத்து உலகம் இயங்க ஆரம்பித்ததிலிருந்து யாரும் யாருக்கும் எதையும் இலவசமாகவோ அல்லது தானமாகவோ செய்து விட மாட்டார்கள். பிரதி பிரயோஜனம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. கொடுத்தால் தான் உறவு என்பார்கள். ஒரு சில விதிவிலக்குகளை உடனே முன்னிறுத்தி விடக்கூடாது. 

நேற்றைய நிகழ்ச்சியில் கமல் காயத்ரியிடம், நீங்களும் நானும் ஒரே ஜாதி என்பதால் உங்களிடம் கனிவுடன் நடந்து கொள்கிறேன் நான் என்றுச் சொல்கிறார்கள் என்றார். எனது பிளாக்கில் “அவா” எனக் குறிப்பிட்டிருந்தேன். அதை ஸ்ரீபிரியா அவர்களுக்கு டிவீட்டிருந்தேன். அது உண்மையில்லை என்பதற்கு உரிய காரணங்களை அவர் தான் சொல்ல வேண்டும். பிக்பாஸ் போட்டியாளர்களைப் போல உண்மையை மறைத்து நழுவி விடமுடியாது. 

ஜூலி என்கிற பெண் என்ன பாவம் செய்தாள்? அவளுக்கு மட்டும் படம் போட்டு சுருக்கென்று ஊசி தைப்பது போல கேள்வி கேட்டாரே? காயத்ரிக்கு மட்டும் படமும் போடாமல், தானும் கேள்வி கேட்காமல் நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தவர்களைக் கேள்வி கேட்க வைத்து ஏன் நழுவினார்?மோதிரைக் கை அவர்கள் என்று கை காட்டி கழுவுற தண்ணியில நழுவும் மீன் போல் நழுவினார். இந்தச் சாமர்த்தியமும், சாணக்கியத்தனமும் ’அவா’ விற்குத்தான் வருமே ஒழிய பிறருக்கு வரவே வராது. 

ஜூலிக்கு படம் போட்டு விளக்கம் கேட்ட கமல்,  காயத்திரிக்குப் படம் போட்டுக் காட்டவில்லை என்பதற்கான ஒரு மிகச் சரியான காரணத்தை சொல்ல முடியுமா? இந்தக் கனிவு ஏன் இதர போட்டியாளர்களிடம் காட்டவில்லை என்று சொல்வாரா? 

தமிழன் என்றொரு வார்த்தையை அவர் நிகழ்ச்சியின் முடிவில் சொன்னார். உலக நாயகன் என்றொரு அடைமொழியைக் கொடுத்தார்களே அப்போது நான் உலக நாயகத் தமிழன் என்று சொல்ல மறந்து விட்டாரா? திடீர் தமிழ்ப்பாசமும் பற்றும் கமல்ஹாசனின் அடுத்த கட்ட நகர்வினைக் காட்டுகிறதா?

பிக்பாஸில் இருப்போர்களிடம் கேள்விகள் கேட்டார்கள். ஒருவர் கூட உண்மையைப் பேசவே இல்லை. வையாபுரி மட்டும் ஆமாம் நான் பாட்டுப் பாடினேன், தவறுதான் என்று சுஜாவிடம் மன்னிப்புக் கேட்டார். கூட்டாகச் சேர்ந்து கொண்டு ஒருவரை ஏமாற்றுவது, ஃபன்னிக்காகத்தான் செய்தோம், அது மனதை ஹர்ட் செய்து விட்டால் மன்னித்து விடுங்கள் என்று கொலை செய்து விட்டு செத்துப் போனவரிடம் மன்னிப்புக் கேட்பது போல பிந்து மாதவி சுஜாவிடம் கேட்டார். 

டிவி பார்ப்பவர்கள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கு ஒருவரும் உண்மையானப் பதிலைச் சொல்லவே இல்லை. காயத்ரி உண்மையைப் பேசவே இல்லை. ஹாட்ஸ்டாரில் அந்தப் பகுதி உள்ளது. மீண்டும் பாருங்கள். போலியாக நடித்தே பழக்கமானவர்களுக்கு உண்மை பேசுவது என்றால் மறந்து போய் விட்டது என்றே நினைக்கிறேன். அந்த விஷயத்தைக் கூட அவர் கேட்கவில்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோரும் சினிமாக்காரர்கள் அல்லவா?

சினிமா ஹீரோக்களை உண்மையான ஹீரோக்கள் என்று நம்பி நம்பியே தன் சுய கவுரவம், இனம், மொழி, செல்வம், கலை, கலாச்சாரம் அனைத்தையும் இழந்து நிற்கும் எம் தமிழர்களை ஆள்வதற்கு அத்தனை தகுதியும் கமலிடம் இருக்கிறது என்று உள்ளம் சொல்கிறது. இந்தச் சாமர்த்தியமும், பிறரை தான் சொல்வது சரிதான் என்று நம்ப வைக்கும் சாணக்கியத்தனமும் கமல்ஹாசனுக்கு உள்ளது. ஆகவே அவர் தமிழகத்தினை ஆள சரியான ஆள் என்றே நினைக்கிறேன். ஏமாறுவது என்பது தமிழர்களின் இரத்தத்தில் ஊறிய விஷயம். தமிழர்களின் மரபணுவில் சினிமாக்காரர்கள் தான் நம்மை ஆள வேண்டும் என்று பதிவாகி விட்டது. மரபணுவை இனி மாற்றவெல்லாம் முடியாது. ஆகவே கமல்ஹாசன் தமிழகத்தின் சி.எம் ஆக வரலாம். மறக்காமல் காயத்ரியை உள்ளாட்சித்துறை அமைச்சராக்கி விடுங்கள். அது ரொம்பவும் முக்கியம்.

Tuesday, August 15, 2017

அறத்தின் கோடு - கமலின் தர்மம் - பிக்பாஸ்

கடந்த வாரம் பிக்பாஸில் காயத்ரியை எளிமையான கேள்வி கேட்டு அவர் எலிமினேசனில் இருந்து காப்பாற்றபடுகிறார் என்று அறிவித்தார்கள். உலகமே பார்க்கும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பங்கெடுக்க வைக்கும் அற்புதமான நிகழ்ச்சி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பார்வையாளர்களையும் பங்கேற்க வைத்து தர்ம நியாயத்தை வளர்க்கும் அற்புதமான நிகழ்ச்சி அது என்றும் நம்பிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் தினமும் காலையில் நெட்டில் ஓட்டும் போட்டுக் கொண்டிருந்தேன். 

ஆனால் அவை அனைத்தையும் யாரோ ஒருவருக்காக பல கோடி மக்களின் முகத்தில் கரியைப் பூசிய விஜய் டிவியும், அதற்கு ஒத்து ஊதிய கமலையும் நினைத்தாலே அறத்தின் சீற்றம் பெருமூச்சாய் எழுகிறது. எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனம் தான் முன்னே நின்றது. எவ்வளவு பைத்தியக்காரர்களாக நாம் இருக்கிறோம் என்பதற்கு கமலும், விஜய் டிவியும் சேர்ந்து நமக்கு உணர்த்தின. அவர்கள் தாங்கள் விரும்பியதை நாம் விரும்பியதாக எவ்வளவு சாதுரியமாக மாற்றுகின்ற மாயாஜாலத்தில் நமக்குள் இருக்கும் அறத்தினை, தர்மத்தினை அழிக்க முனைந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

பதினைந்து பேரில் அகங்காரம், ஆணவம், சிண்டு முடிதல், புறம் பேசுதல், புரணி பேசுதல், ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டி பிறரை அசிங்கப்படுத்துதல் என அத்தனை அயோக்கியத்தனத்தினையும் செய்து வரும் ஒருவரை உலகமே வெளியேற்று என்றது. ஆனால் அதை மறுத்து ஓட்டளித்தவர்களின் அறத்தின் மீது உமிழ்ந்து, உங்கள் அறம் ஒன்றும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது எனச் சொல்லிக் காப்பாற்றுகின்றார்கள். கமல் அதற்கு ஸ்ரீபிரியாவை வைத்து சாதுரியமாக காய் நகர்த்தியதைக் கண்டதும் நாமெல்லாம் கேனயர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை அறிய முடிந்தது. யூடியூப்பில் கமெண்ட் போட்டு ஆத்திரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறோம். வேறு என்ன செய்ய முடியும்? ஒருவராலும் ஒரு ’ஹேரையும்’ புடுங்க முடியாது. அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதைச் செய்வார்கள். அதை நாமெல்லாம் வேடிக்கை தான் பார்க்க முடியும்.

இது ஒன்றும் நமக்கு பெரிய விஷயம் இல்லைதான். ஏற்கனவே நம்பி நம்பி ஓட்டுப் போட்டு செருப்படி வாங்கிக் கொண்டிருப்பவர்கள் தான் நாம். இருந்தாலும் சினிமாவில் அறத்தைப் பற்றிப் பேசி வரும் கமல் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையை, அவ்வாறு நினைக்காதீர்கள், நானும் இப்படித்தான் என்று உடைத்தார். என்னால் எதுவும் செய்ய முடியாது என்றார் அவர். 

பின்னர் ஏன் தமிழக அரசியல் பற்றி கமெண்டுகளை எழுதிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவ்வாறு எழுதுவதற்கு தனக்கு தகுதி இருப்பதாக அவர் நினைக்கிறார் என்பது புரிந்தாலும் கமலுக்கு தமிழக அரசியல் பற்றிய அறச்சீற்றம் எழுவது போல விஜய் டிவியைப் பார்த்து, அதில் பங்களித்தவர்களுக்கும் இருக்கும் அல்லவா? அதை அவர்கள் எளிதாக புறம் தள்ளி ஒதுக்கி விட்டார்கள். மீண்டும் ஒரு நம்பிக்கைத் துரோகம். அதற்கு துணை போனவர் கமல்ஹாசன். தமிழக அரசியலுக்கு வாருங்கள் கமல். உங்களை வச்சு செய்வார்கள் நம் மக்கள் என்று நினைக்கிறேன். 

தவறு செய்தால் அது தவறுதான். அதற்கு எந்த வித சப்பைக்கட்டு கட்டினாலும் தவறு நியாயமாகி விடுமா கமல் அவர்களே? கம்பெனி ரூல், சுவாரசியம் ஆகிய இன்னபிற காரணங்களை அடுக்கினாலும் தவறு செய்தீர்கள், உங்களை நம்பி நியாயமாக இருந்தவர்களை ஏமாற்றி இருக்கின்றீர்கள் என்பதுதானே உண்மை.

தர்மம், நியாயம், நல்லவர்கள் இவர்களைப் பற்றிப் பேச இனி விஜய் டிவிக்கு என்ன அருகதை இருக்க முடியும்? கமல்ஹாசனுக்கும் அந்த கோடு இல்லை என்பதும் உண்மைதானே?

கமல்ஹாசனுக்கும் விஜய் டிவிக்கும் ஒரு திருக்குறளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
உயற்பால தோரும் பழி.

ஒருவனுக்குச் செய்யும் நன்மை இதுகாறும் கமல் காத்து வந்த அறத்தினை அழித்து விட்டது. நீயா நானா? நடத்தும் விஜய் டிவியின் அறக்கோடும் அழிந்து போனது.

கமல்ஹாசனுக்கு மட்டும் கீழே இருக்கும் திருக்குறள் சமர்ப்பணம்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது.

இங்கு பயன் தூக்கார் என்பது தமிழக மக்கள் என்று அர்த்தம் கொள்க. அவர்களுக்கு கமல் செய்தது என்ன? என்று அவரே நினைத்துப் பார்த்துக் கொள்ளட்டும்.

இருப்பினும் கமலின் தர்மம் மறுத்துப்பேசும் சாதுர்யமும், பிக் பாஸிடம் காயை நகர்த்தும் “அவா” புத்தித்தந்திரமும், காயத்ரியின் மீது கொண்டுள்ள ”அவா” பாசத்தின் காரணமும் அசத்தல் தான்.

Tuesday, July 18, 2017

பிக்பாஸ் கமலின் நியாயம்

காயத்ரி ரகுராம் - கன்ஃபெக்சன் அறையில் எனக்கு சாக்லேட் மில்க் பவுடர் வேண்டுமென்று கேட்ட போது மருத்துவரிடம் செக்கிங்க் செய்த பிறகு கால்சியம் சரியாக இல்லை என்றால் தரப்படும் என்று சொல்லப்படுகிறது. பிறகு மருத்துவரிடம் ஆலோசித்தால் காயத்ரியின் கால்சியம் லெவல் சீராக இருப்பதாகவும் ஆனாலும் இந்த வாரத்தின் குடும்பத்தின் தலைவராக இருப்பதால் அவர் கேட்டதைக் கொடுப்பதாகவும் குரல் ஒலிக்கிறது. வெளியில் வந்த காயத்ரி எனக்கு கால்சியம் லெவல் குறைவாக இருக்கிறது என்றுச் சொல்லி விட்டு, அதனால் பிக்பாஸ் எனக்கு சாக்லேட் மில்க் பவுடர் பாக்கெட் தந்தார் என்கிறார்.

அவர் ஒரு பெண். பெண்கள் எப்போதும் சுய நலமாகத்தான் யோசிப்பார்கள். அதுவும் காயத்ரியின் தந்தை பிரபல நடன ஆசிரியர். தலைக்குள் கொஞ்சம் மமதை ஏறி விடும். இது எல்லோருக்கும் ஏற்படுவதுதான். அதில் தவறில்லை. தன்னை பிறரிடமிருந்து தனிப்படுத்திக் காட்டிக் கொள்வதற்காகவும், பிறர் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவும் காயத்ரி ரகுராம் சாக்லேட் மில்க் பவுடர் கேட்டார். அதைக் கொடுத்தார்கள். அதற்கொரு காரணத்தையும் சொல்லி விட்டார். தன் படுக்கையின் அருகே வெகுபாதுகாப்பாக வைத்துக் கொண்டு அவர் மட்டும் பயன்படுத்தி வருகிறார். இதில் எதுவுமே தவறில்லை.

ஆனால் கமல் செய்த விஷயம் தான் மனதை உறுத்துகிறது. கமல்ஹாசன் கலைத்தாகத்தைப் பற்றி பல செய்திகள் படித்திருக்கிறோம். ஒருவர் ஒரு துறையில் பிரபலமாக இருப்பது என்பது பெரிய விஷயம் இல்லை. தொழில் பக்தியின் காரணமாக மிளிர்வது என்பது சகஜம். தியாகராஜ பாகவதருக்கு மிஞ்சியா கமல் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்? ஆனானப்பட்ட அவரே தன் இறுதியில் என்ன ஆனார் என்பது வரலாறு. 

கோடிக்கணக்கான பேர் டிவி நிகழ்ச்சியைப் பார்க்கின்றார்களே அதில் தீர்ப்புச் சொல்லக்கூடிய இடத்தில் நாம் இருக்கின்றோமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற உறுத்தல் கொஞ்சம் கூடவா இல்லாமல் போகும்?

காயத்ரி ரகுராம் பொய் சொன்ன விசயத்தை அப்பட்டமாக மறைத்தாரே அது என்ன விதமான செயல் என்று தான் எனக்குப் புரியவில்லை. கால்சியம் சீராக இருக்கிறது என்றால் காயத்ரிக்குத் தெரியாதா? அவர் என்ன சின்னப்பாப்பாவா? சீர் என்றால் என்ன என்று சினேகனைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டாராம். அட ஙொய்யாலே, அப்போ இருப்பினும் நீங்க தலைவராக இருப்பதால் தருகிறோம் என்று அந்தக் குரல் சொன்னதே அதை ஏன் இவர் மறந்தார்? அல்லது மறைத்தார் என்று கமலுக்கு மட்டுமே வெளிச்சம்.

ஒரு டான்ஸ் மாஸ்டருக்கு சீராக இருக்கிறது என்றால் என்னவென்று தெரியாதாம்? காயத்ரிக்கு வாயில் கை வைத்தால் கடிக்கவே தெரியாது என்கிறார். அதையும் கமல் ஏற்றுக் கொள்கிறார். உங்க நியாயம் எனக்குப் பிடித்திருக்கிறது மிஸ்டர் கமல்! 

புரொகிராம் முடிந்தவுடன் காயத்ரி அந்த சாக்லேட் மில்க் பவுடரை எடுத்துக் கொடுத்து விடுகிறார். அவருக்கு வேண்டாமாம். அதையும் காட்டினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது என்றால் அது மிகையில்லை. உலகம் அப்படித்தான் இருக்கும். எல்லாமே சரியாக இருந்தால் மனித வாழ்க்கை என்ற ஒன்று இருக்கவே இருக்காது. மக்களிடம் பிரச்சினை இருந்தால் தான் அரசு இருக்கும். பிரச்சினையே இல்லை என்றால் அரசு எதற்கு? ராணுவம் எதற்கு? நாடு எதற்கு? ஒன்றும் தேவையில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தாமதமாகத் தெரியும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் எடிட் செய்யப்பட்டு உடனுக்குடன் தெரிந்து விடுகிறது என்பது போல நம்ப வைக்கப்படுகிறது.

காயத்ரி பொய் சொன்னதில் தவறில்லை. ஆனால் கமல்ஹாசன் அதை சாதுர்யமாக மறைத்தாரே அதுதான் எதற்கு என்று புரியவில்லை. 

Saturday, May 13, 2017

பாகுபலி 2 - 360ல் ஓர் அலசல்

பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் திரைப்படத்தினை விமர்சனம் செய்பவர்களை பல்வேறு கொடூர வார்த்தைகளால் யாரால் புகழப்படுகின்றார்களோ அவர்களை நன்றி கெட்டு வைது கொண்டு இருக்கின்றார்கள். திரைவிமர்சனம் செய்பவர்களின் எதிர்மறையான விமர்சனங்களைப் படித்து விட்டு பலரும் படம் பார்க்க வர மாட்டார்கள் என்று அவர்கள் நினைப்பதால் திட்டுகின்றார்கள். ஏன் எதிர்மறையான விமர்சனங்கள் வருகின்றன? என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. காக்காய்க்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதால் அவர்கள் இப்படி நிலைகுலைந்து விடுகிறார்கள். இருந்தாலும் உண்மை என்று ஒன்று உண்டல்லவா?

ஹோட்டலில் சாப்பிடப் போகின்றவர்கள் உணவு எப்படி இருக்கிறது, ருசி எப்படி இருக்கிறது, தரம் எப்படி இருக்கிறது என்று பலரிடமும் பகிர்ந்து கொள்வார்கள். உணவு நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்பார்கள். நன்றாக இல்லையென்றால் நன்றாக இல்லை என்பார்கள். ஆனால் அதற்காக ஹோட்டல்காரர்கள் உணவு நன்றாக இல்லை என்பவர்களை நீயென்ன சமையல் படித்திருக்கின்றாயா? எந்த ஹோட்டலில் வேலை செய்தாய் என்றா கேட்கின்றார்கள்? இல்லையே! ஒரு உணவின் ருசியை சாப்பிட்டுப் பார்த்தால் சொல்லி விடலாம். அதற்காக சமையல் கலைஞனாக இருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? விமர்சனங்களை மூன்று நாட்கள் கழித்து எழுதுங்கள் என்கிறார்கள் சினிமாக்காரர்கள். ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஒரு ஹோட்டலில் சாப்பிடச் செல்கிறான் ஒருவன். அவனுக்கு வாந்தி பேதி எடுத்து மருத்துவமனையில் கிடக்கின்றான். அவன் அந்த ஹோட்டலில் சாப்பிட்டதால் தான் வாந்தி பேதி வந்தது என்று சொன்னால் என்ன தப்பு? அவ்வாறு பிறரிடம் சொன்னால் தானே பலரும் தப்பித்துக் கொள்வார்கள். அவ்வாறு உடனே சொல்லாமல் மூன்று நாட்கள் கழித்துச் சொல்லலாமா? இது தவறில்லையா? 

திரைப்படத்தைப் பார்த்ததும் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்று படிக்காதவன் கூட சொல்லி விடுவான். ஒரு நாவல் படிக்கிறோம் என்றால் அதை எழுதத் தெரிந்தவனோ அல்லது முன்பே எழுத்தாளனாக இருப்பவனோ தான் விமர்சிக்க வேண்டுமென்றால் அதெல்லாம் நடக்கக் கூடிய ஒன்றா? சினிமாக்காரர்கள் பொதுவில் பேசும் போது நான்கும் சிந்தித்துப் பார்த்து பேச வேண்டும்.

சிந்திக்கும் அளவுக்கு சினிமாக்காரர்கள் ஒன்றும் பெரிய புத்திசாலிகள் இல்லை எனலாம். அவர்களில் மிகச் சிறந்த ஆளுமைகளும் இல்லை. தங்களின் புகழ் மாயையில் ஒரு விஷயத்தை மறந்து விடுகின்றார்கள். நாங்கள் தான் தமிழ் நாட்டை ஆள்கிறோம் என்பதாக அவர்களுக்கு எப்போதும் ஒரு மமதை உண்டு. இதை விட முட்டாள் தனமான சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்பதற்கு காரணம் உண்டு.

எம்.ஜி.ஆரை வைத்து, கலைஞரை வைத்து, ஜெவை வைத்து, விஜயகாந்தை வைத்து சம்பாதிக்க நினைப்பவர்களின்  மேற்கண்டவர்களை உசுப்பேத்தியே அரசியலுக்கு வர வைத்து அரசியலுக்குள் நுழைத்து விடுகின்றார்கள். மேற்கண்ட தலைவர்களால் பிரயோஜனம் இல்லையென்றால் அடுத்த கட்சிக்குத் தாவி விடுவார்கள். அவர்களுக்குத் தேவை அரசியல், அதிகாரம், பணம். அதற்குத் தேவை சினிமாக்காரர்களின் புகழ். தலைவர்கள் தான் அனைத்துப் பழிச்சுமைகளையும் ஏற்பார்கள். அவர்களை அரசியலுக்குள் இழுத்தவர்கள் எதிரிகளாகி விடுவார்கள். சினிமாக்காரர்கள் தன் புகழால் விளையும் எதிர்காலப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ரஜினியால் பணமும் புகழும் அதிகாரமும் கிடைக்க வேண்டும் என விரும்புவர்களுக்குத்தான் ரஜினி தேவை என்பதை அவர் புரிந்து வைத்திருக்கின்றாரா என்று தெரியவில்லை.

ஒரு சினிமாக்காரர் விமர்சனம் செய்பவர்கள் எந்த இன்ஸ்டிடியூட்டில் படித்தார்கள்? சினிமா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் விமர்சனம் செய்கின்றார்கள் என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தார்.  பொது வெளியில் திரைப்படத்தினை மக்கள் பார்ப்பதற்காக வெளியிடுகிறார்கள். படம் எப்படி இருக்கிறது என்றுச் சொல்லக் கூடாது என்கிறார்கள். இது என்ன சட்டமோ? அவர்களுக்கான நியாயமோ? தெரியவில்லை.

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா என்னைப் பொறுத்தவரை ஒரு சில தனியார் கூட்டத்தால் நிர்வகிக்கப்படும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை மதிக்காக அமைப்பு. அவர்களுக்கு எந்த வித சட்டமும், விதியும் இல்லை. ஆட்சிக்கு வரும் எந்த அரசும் கண்டு கொள்வதில்லை என்பதும் அதற்குப் பல்வேறு காரணிகள் காரணமாய் இருக்கின்றன என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சினிமாவின் புகழ் மற்றும் இதர இன்பங்களையும் முன்னிட்டு அரசு தொடர்புடையவர்கள் சினிமாவைக் கண்டு கொள்வதே இல்லை என்பதுதான் உண்மையாக இருக்கக் கூடும். 

அடுத்து ஒரு முக்கியமான உளவியல் பிரச்சினை பற்றிப் பார்த்து விட்டு பாகுபலிக்குள் செல்லலாம்.

ஒரு காரில் பார்த்தேன், ”மை டாட் ஈஸ் மை ஹீரோ” - என் தந்தை என் ஹீரோ என்று ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. உலகெங்கும் இருக்கும் பிரச்சினையே இதுதான். அடிமைத்தனத்தினை இப்படித்தான் சொல்வார்கள். என் தந்தை என் ஹீரோ என்பது அடிமைத்தனம். ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்கள், தனிப்பட்ட பண்பு நலன்கள் கொண்டவர்கள். ஆனால் அதை எவரும் புரிந்து கொள்வதில்லை. எப்போது என் தந்தை என் ஹீரோ என்று ஒரு சமூகம் சொல்ல ஆரம்பித்ததோ அன்று ஆரம்பித்தது இந்த ஹீரோயிசம் பிரச்சினை. தலைவரிலிருந்து சினிமா ஹீரோ வரை எல்லாவற்றிலும் ஹீரோயிசத்தில் மாட்டிக் கொள்கின்றார்கள். ஹீரோயிசத்தின் முடிவு என் தலைவர் என்ற அடிமை மனப்பான்மை. ஹீரோ இல்லாமல் எதுவுமே இல்லை என்ற ஒரு மாயையைக் கட்டமைத்து விட்டார்கள். தலைமை, தலைவர், மேலதிகாரி, தந்தை, தாய் என்று எல்லாவற்றிலும் ஹீரோயிசத்தினைக் கொண்டு வந்து திணித்து விட்டார்கள். நாவல் எழுதினால் கூட ஹீரோ, ஹீரோயின் வேண்டும்.

இங்கு யாரும் யாருக்கும் தலைவரும் இல்லை, எவரும் எவருக்கும் தொண்டனும் இல்லை என்பதை மனது புரிந்து கொள்ள மறுக்கிறது. ஆதர்ஷ ஹீரோ அது எதுவானாலும் சரி இங்கிருப்பவர்களுக்கு வேண்டும். அவர் வழி தான் இவர் நடப்பார். அடிமைத்தனத்தில் சுகம் கண்டவர்களுக்கு அதன் அபாயகரமான வழிகாட்டுதலின் அர்த்தம் புரிவதில்லை. அன்புக்கு அடிமையாக இருப்பதும், கடமைக்கு கட்டுப்பட்டு நடப்பதும் வேறு. இது வேறு. இந்த ஆதர்ச ஹீரோயிசம் தான் மனிதனைப் படுகுழிக்குள் தள்ளி புதைத்து விடுகிறது.

இங்கு ஹீரோ, ஹீரோயின் என்று எவரும் இல்லை. இயற்கைதான் ஹீரோ. வாழ்க்கை தான் ஹீரோயின். இயற்கையோடு இயைந்து வாழ்வதுதான் வாழ்க்கை. நம் முன்னே இருப்பது நம் வாழ்க்கை மட்டும் தான். பிறப்பு எப்படி நம் கையில் இல்லையோ அது போல இறப்பும் நம் கையில் இல்லை. ஆனால் வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் பெரும்பாலும் நாம் வாழ்வதே இல்லை. ஆப்பிள் நிறுவன ஸ்டீவ் ஹாக்கின் இறுதிப் பேச்சு என்றொரு மெசேஜ் வாட்சப்பில் வந்து கொண்டிருக்கிறது. படித்துப் பார்த்தீர்கள் என்றால் கொஞ்சமேனும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்னவென்று புரியும்.

அடுத்து மற்றொரு கேனத்தனமான விஷயத்தைப் பற்றியும் பார்த்து விட வேண்டும். விசுவாசம் என்பது அடிமைத்தனத்தின் உச்சகட்டம். சுத்தப் பைத்தியக்காரத்தினத்தின் மற்றொரு வார்த்தை என்னவென்றால் அதன் பெயர் விசுவாசம். ஒருவன் தவறே செய்தால் கூட அதைச் சுட்டிக்காட்டக் கூட அனுமதி மறுக்கும் விசுவாசம் என்கிற வார்த்தை சுத்தப் வேறொரு முட்டாள்தனத்தின் வேறு வார்த்தை..

கதைக்கு வந்து விடுவோம்.

பாகுபலி முதல் பாகத்தின் கதை - கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதாக முடிந்து விட்டது.

உலகே இந்தக் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துதான் காத்துக்கிடக்கிறது என்றார் திவ்யதர்ஷினி. சிலம்பாயி பேத்திக்கு பேசக் கத்துக் கொடுக்கணுமா? டிடியின் சின்னப்பத்தாவோ பெரியப்பத்தாவோ எனக்குச் சரியாக நினைவில் இல்லை. அது ஜாக்கெட் போடாது. சிறு வயதில் அழுது அடம் பிடித்து பால்குடிக்க சண்டை போட்டேன் என்பதால் என்னைப் பார்த்தாலே அதற்கு கொஞ்சம் திகில் ஆகி விடும். அது பெயர் தான் சிலம்பாயி. சிலம்பாயி பேச்சு ஆவணத்தில் பிரபலம். டிடி அச்சு அசல் சிலம்பாயி. மரபணு தோற்காது அல்லவா? டிடியின் அப்பா நீலகண்டன் இறப்பதற்கு முன்பு வீட்டுக்கு வந்திருந்த போது டிடியைப் பற்றிச் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தார். அருமை பெருமைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தக் கதை ஒரு பக்கம் இருக்கட்டும்.

டிடி எல்லோரையும் கட்டிக் கட்டிப் பிடித்து கமல் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். பேசாமல் டிடிக்கு டாக்டர் பட்டம் கொடுத்து விடலாம். விஜய் டிவி அதற்கான வேலையைச் செய்ய வேண்டும். எது எதுக்கோ எவன் எவனுக்கோ விழா எடுக்கிறது விஜய் டிவி. டிடியினால் பிழைத்துக் கொண்டிருக்கும் விஜய் டிவி தன் தொகுப்பாளினிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்து அதை விழாவாக எடுக்கும் என நம்பலாம்.

இரண்டாம் பாகம் பாகுபலியை கோவை மணீஷ் தியேட்டரில் அம்மு, ரித்திக்கின் தொல்லை தாங்காமல் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இத்தனைக்கும் நெட்டில் இருக்கிறது, தேடிப் பிடித்து டவுன் லோடு செய்து பாருங்களேன் என்றால் ’போப்பா’ என்று ஒரு வார்த்தையில் மறுத்து விட்டார்கள்.

சாண்டில்யன், கல்கி ஆகியோரின் வரலாற்றுப் புதினங்களைப் படித்ததினால் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று ஓரளவு யூகித்து இருந்தேன். அந்தளவுக்கு ராஜமெளலி மீது கவனம் இருந்தது. இரண்டாம் பாகத்தின் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். எழுத வேண்டியதில்லை.

பாகுபலியின் அறிமுகம் ஹீரோயிசத்தின் வெளிப்பாடு. பல நூறு பேர் சேர்ந்து இழுக்கும் தேரை ஒற்றை ஆளாக இழுத்து வந்து யானை மீது மோத விடுகிறார். மதம் பிடித்த யானை அடங்கிப் போகிறது. என்ன ஒரு ஹீரோயிசம்? ரஜினி 100 பேரை அடிக்கிறார் அதை விடவா என்று நீங்கள் சிரிப்பது புரிகிறது. அதுமட்டுமல்ல ஹீரோவிடம் இருக்கும் கருணை வேறு எவருக்கும் இல்லாத ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. குச்சிக் கால்கள் கொண்ட மன்னன். கருப்புச் சுவடு படிந்த உதடுகள். நடிக்கவே தெரியாத வெற்று வரட்டு முகம். இவர் தான் ஹீரோ. தியேட்டரில் விசிலடிச்சான் குஞ்சுகள் வாயில் விரலை வைத்து விசிலடிக்கின்றார்கள். இதன் காரணம் நம் சமூகம் கட்டமைத்திருக்கும் ஹீரோயிசம்.

தமிழர்கள் எடுத்த அந்தக் கால மன்னர் படங்களை இயக்குனர் பார்த்திருந்தால் இவரை ஹீரோவாக போட்டிருக்க மாட்டார். ஹீரோவுக்கு 25 கோடி என்றும் இயக்குனருக்கு 100 கோடியும் சம்பளமாகக் கொடுத்திருக்கின்றார்கள் என்று இண்டஸ்ட்ரீயில் பேசிக் கொள்கின்றார்கள். உத்தமர்கள் அலுவலகம் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சுமார் 35 கோடி வரியாக இந்தியாவுக்கு கிடைக்குமே?

எம்.ஜி.ஆர் என்ற ஹீரோயிசத்தின் காரணமாக நாம் தமிழ் நாட்டையே ஆளக் கொடுத்திருக்கிறோம். இது தான் ஹீரோயிசத்தினை நம்பியதன் விளைவு. ஹீரோ நன்றாக இருக்க வேண்டும். அதற்கு காமெடியன்களும், இதர அல்லைக்கை நடிகர்களும் ஹீரோவுக்கு உதவ வேண்டும். இதைத்தான் காலம் காலமாக சினிமா சொல்லிக் கொடுத்துக் கொண்டே வருகிறது. மற்றவர்கள் எல்லாம் வாழவே வேண்டாம். ஹீரோ மட்டும் வாழ்ந்தால் போதும். அவர் நூறு அல்ல லட்சம் பேரை வாழ வைப்பார் என ஒவ்வொரு படத்திலும் ஹீரோயிசத்துக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எம்.ஜி.ஆர் தமிழகத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுமதி கொடுத்து விட்டு எத்தனை பேரை பிச்சைக்காரனாக்கி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
\
பாகுபலி கதையில் ராஜிய பரிபாலனத்திற்கு பட்டாபிஷேகம் செய்யும் முன்பு ராஜிய யாத்திரை சென்று விட்டு வா என்கிறார் சகிக்கவே முடியாத முகமும், பாவனையும் கொண்ட ராஜமாதா ரம்யா கிருஷ்ணன். அரியணையில் குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்று கிரைண்டர் குரலில் கத்துகிறார். முதல் பாகத்தில் காலகேயனை வென்றவர் தான் மகிழ்மதியின் மன்னன் என்பதால் பாகுபலி காலகேயனை அடித்து துவைத்துக் கொண்டிருக்கும் போது முதுகிற்குப் பின்னால் இருந்து கொல்கிறான் பல்வாள்தேவன். அதையெல்லாம் விட்டு விட்டார்கள். மன்னனின் கடமை தம் குடிமக்களைக் காப்பது என்பதால், போரின் போது குடிமக்களைக் காப்பாற்றி எதிரியை துவம்சம் செய்த பாகுபலியே மன்னன் என்று அறிவித்து விட்டார் ராஜாமாதா. தொடர்ந்து ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்கிறார்.

ராஜமாதா தன் மகனுக்கு வாக்கு கொடுத்தாராம். அதுவும் எப்படி? ஓவியத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பார், அப்பெண்ணை தன் மகன் விரும்புகிறாராம், அவரையே மணமுடித்து வைப்பதாக வாக்குக் கொடுப்பாராம். அந்தப் பெண் சபையில் நான் பாகுபலியைத்தான் விரும்புகிறேன் என்கிறாள். ஆனால் நான் கொடுத்த வாக்கு என்னாவது? ராஜமாதா உடனே உனக்கு பெண் வேண்டுமா? இல்லை ராஜ்ஜியம் வேண்டுமா? என பாகுபலியிடம் கேட்கிறார். பாகுபலி நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன் என்று ராஜ்ஜியத்தை மறுக்கிறார். பல்வாள் தேவனை மன்னனாக்கி, பாகுபலியை படைத்தளபதி ஆக்குகிறார். தொடர்ந்து ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்கிறார் ராஜமாதா. இதற்கு முன்புச் சொன்ன சாசனம் என்ன ஆச்சு என்று அவருக்குத் தெரியுமா? இல்லை கதை எழுதிய ராஜமெளலியின் அப்பாவுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. சுத்த நான்சென்ஸ்.

இதுவாவது பரவாயில்லை. மன்னனைக் கொல்ல வந்தார்களாம், இதற்குக் காரணம் பாகுபலி என்கிறார்களாம். உடனே மொட்டையன் சத்தியாராஜை அழைத்துப் பாகுபலியைக் கொல்லச் சொல்கிறார் ராஜாமாதா. ராஜமாதா விசாரிக்க மாட்டார், பிறர் சொல்வதை மட்டுமே கேட்பார் என்று கேனத்தனமான கதை. புல்லரிச்சு புல்லரிச்சு சொரிய ஆரம்பித்து விட்டேன். ராமமெளலியின் கதையை எந்த வார்த்தையால் சொல்லிப் பாராட்டுவது என்றே புரியவில்லை. தன் மகன் பல்வாள் தேவனின் சூழ்ச்சி தெரிந்ததும் தேவசேனாவின் பிள்ளையை மன்னாக்குகிறார். ஆற்றில் விழுந்து ஒற்றைக் கையில் பிள்ளையை தண்ணீருக்கு மேலே பிடித்தபடி இறந்தும் போகிறார். தன் மகன் விட்ட அம்பு முதுகில் தைக்க உயிர் போகிறது ராஜமாதாவுக்கு. பிள்ளை பெரிய ஆளாகி மகிழ்மதியை மீட்கிறார். சிறை வைத்திருந்த அன்னையின் சபதத்தை நிறைவேற்றுகிறார்.

பாகுபலியும், தேவசேனாவும் ஒரே கையில் மூன்று அம்புகளை வில்லில் வைத்து விடுவார்கள் அல்லவா அது ஒரு கார்ட்டூன் புகைப்படத்தில் வந்தது. அதை அப்படியே சுட்டு விட்டார் இயக்குனர்.

பாகுபலியும், பல்வாளும் பூணூல் போட்டிருக்கிறார்கள். கழற்றி வைத்து சண்டையிடுகின்றார்கள். பூணூல் எந்தளவுக்கு முக்கியமாக இருக்கிறது என்பதையும், பூணூலின் மகத்துவத்தையும் அறிந்தவராக இயக்குனர் இருந்திருக்கிறார் என்பது இந்தப் படத்தின் ராஜதந்திரம்.

1000 கோடி கலெக்ஷன் என்கிறார்கள். அந்த ஆயிரம் கோடி எப்படி எவ்வாறு வந்தது என்று கணக்குக் கேட்டுப் பாருங்கள்? ஒருவர் பதில் சொல்ல மாட்டார். 1000 கோடி வரவு என்றால் என்ன அர்த்தமென்பது சினிமா தயாரிப்பாளர்களுக்கு நன்கு தெரியும், இவர்களுக்கு நன்கு தெரியும் என்பது இந்தியாவின் உத்தமர்கள் அலுவலகமும் அறியும்.

கோவை மணீஷ் தியேட்டரின் டிக்கெட்டில் சீரியல் நம்பர் மட்டுமே இருந்தது. மற்றபடி டிக்கெட்டின் விலை இல்லை, தேதி இல்லை. வேறு எதுவுமே இல்லை. மோடி அவர்கள் கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்றார். வெறும் டோக்கனைக் கொடுத்து லட்சக்கணக்கில் காசு வசூலிக்கும் தியேட்டர்களை கண்டு கொள்ளவே இல்லை. அரசியல், சினிமா இரண்டும் கூட்டுக்களவாணித்தனத்தின் குறியீடு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினைக் கேலிக்கூத்தாக்கும் சினிமா அமைப்பினை கண்டு கொள்ளாமல் களவாணித்தனத்தினை அரசு செய்து வருகிறது.

இரண்டரை லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால் சாமானியனிடம் வரி கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தும் உத்தமர்கள் அலுவலகம் பைசாவுக்கு பெயராத சிறு பேப்பரைக் கொடுத்து வசூல் செய்யும் சினிமாக்காரர்களை ஏன் கண்டுகொள்வதில்லை என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? ரொக்கமாக கையில் காசு வைத்திருந்தால் அபராதம் போடுவோம் என்றார்களே அந்த உத்தரவுகள் எல்லாம் சினிமா தியேட்டர்களுக்குக் கிடையாதா?

சுத்த கொங்குத் தமிழனான சத்தியராஜை கட்டப்பாவின் கேரக்டரை வைத்து நன்றாக செய்திருக்கிறார் இயக்குனர். போதாத குறைக்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார் சத்தியராஜ். திரைப்படத்தில் நீ நாய் தான் என்று அடிக்கடிச் சொல்கிறார்கள். கட்டப்பா அதற்கொரு பஞ்ச் டயலாக் அடிக்கிறார். நான் நாய் தான், மோப்பம் பிடித்தேன் என்று. விசுவாசத்தின் பெயர் அடிமை. அடிமைத்தனத்தின் பெயர் அயோக்கியத்தனம். தர்மத்தினை விசுவாசத்தின் பெயரால் அழிப்பது அயோக்கியத்தனம்.

இந்திய அரசியல் தலைவர்களிடம் இல்லாத அரிய விஷயம் விசுவாசம். விசுவாசம் இருந்தால் சாகும் வரை தொண்டன்வாகவே மட்டுமே இருக்க முடியும். எப்போதும் தலைவராக இருக்க முடியாது. பன்னீர் செல்வம் அவர்கள் விசுவாமாக இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

ஹீரோயின் செலக்சனில் முற்றிலுமாகத் தோற்று இருக்கிறார் ராஜமெளலி. முதல் பாகத்தில் ஹீரோயினாக இருக்க கொஞ்சம் கூட தகுதி இல்லாத  உடல் மட்டும் சிவந்த கலரில் இருக்கும் தமன்னாவை என்ன சிந்தனையில் தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. இரண்டாம் பாகத்தில் தேவசேனாவாக வரும் அனுஷ்காவிடம் இளவரசித்தன்மைக்கான எந்த உடல் மொழியும் இல்லை. இளவரசியின் உடல் தகுதி என்று ஒன்று உண்டு. உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் இதே சினிமாவில் ருத்ரம்மா தேவி என்றொரு படம் வந்தது, அப்படத்தில் ராணாவும் அனுஷ்காவும் ஒரு பாடலில் வருவார்கள். அந்தப் பாடலில் ஒரு சிற்பம் வருமல்லவா அதன் உடல் மொழியைப் பாருங்கள். அதற்குப் பெயர் பெண். சிவப்புத் தோல் எல்லாம் ஹீரோயின் என்றால். இயக்குனருக்கு தமன்னாவும், அனுஷ்காவும் போதும் போல. இயக்குனர் இன்னும் காம்ப்ளானில் இருக்கிறார். இவர் எப்போது காஃபி குடிப்பாரோ தெரியவில்லை. இன்னும் வளரணும் சாரே!

சினிமா கிராபிக்ஸ் சுத்த மட்டம். இதை விட அருமையான கிராபிக்ஸ் எல்லாம் பார்த்திருக்கிறோம். பனைமரத்தினை வளைத்து உயர எம்பி அரண்மனைக்குள் நுழைந்து சண்டை இடுகின்றார்களாம். ஒரு ராஜாவை அவ்வளவு எளிதில் அண்டக்கூட முடியாது. அந்தளவுக்கு அரண் வைத்திருப்பார்கள். ஆனால் இப்படத்திலோ போர் என்கிற போர்வையில் காமெடி செய்து கொண்டிருக்கின்றார்கள். கதையில் காமெடி, வசனத்தில் காமெடி, படமாக்கியதில் சொதப்பல் என்று அத்தனையும் சொதப்பி வியாபாரத்தில் மட்டும் வெற்றி அடைந்த ராஜமெளலிக்குப் பெயர் சினிமா வியாபாரி.

அவர் இயக்குனர் அல்ல. கலைஞனும் அல்ல. சட்டத்திற்கும் புறம்பான வழியில் பணம் சம்பாதிக்கு ஒத்துழைக்கும் எவரும் என்னைப் பொறுத்தவரை ..... எழுத விரும்பவில்லை. இதோ புகைப்படத்தில் சாட்சி இருக்கிறது. சாமானியனைக் கட்டுப்படுத்தும் அரசாங்கம் சினிமா என்கிற ஒரு சிறு கூட்டத்தினைக் கட்டுப்படுத்தவில்லை என்பதற்கான சாட்சி  இது.



பாகுபலி திரைப்படத்தினைக் கொண்டாடி மகிழும் பல்வேறு உள்ளங்களுக்கு இந்தப் பதிவு வித்தியாசமானதாக இருக்கலாம். இது தான் உண்மை என்பது உங்கள் உள்ளங்களுக்குத் தெரிந்திருக்கும். உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்துப் பாருங்கள். நம்மைச் சுற்றி நடக்கும் நாடகங்களை. அதனால் நாம் என்னென்ன இழந்திருக்கிறோம் என்பதை. நம் வாழ்க்கையை நாம் வாழ இந்தச் சமூகம் விடுவதே இல்லை. ஒவ்வொரு விஷயத்திற்கு முன்னுதாரணங்களைக் காட்டி பிறர் வழி நடக்க வைக்கும் கொடூரமான சிந்தனையில் சிக்கி இருக்கிறோம் என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். பாதைகள் பல இருக்கலாம். அவைகள் தூரத்தைக் கடந்துச் செல்லத்தானே உதவ வேண்டுமே ஒழிய அதே பாதை தான் வாழ்க்கையாக இருக்கக் கூடாது. பாலம் என்பதும் பாதை என்பதும் கடக்கத்தானே ஒழிய வசிப்பதற்கு இல்லை. நாம் இன்னும் சாலையில் தான் வாழ்கிறோம். அந்தச் சாலையிலிருந்து நாம் வெளியில் வர வேண்டும்.

பாகுபலி போன்ற படங்கள் நம்மிடம் இருக்கும் பணத்தைப் பறித்துக் கொள்கின்றன. நம்மையும் கீழ்மைச் சிந்தனைகளில் சிக்க வைத்து விடுகின்றன. புரியும் தன்மை கொண்டவர்களுக்கு எளிதில் புரிந்து விடும். ஆனால் வெள்ளை மனம் கொண்டவர்களின் கதையை என்னவென்றுச் சொல்வது. பாகுபலி ஆந்திராவின் முதலமைச்சரானால் இதன் அர்த்தம் உங்களுக்குப் புரியலாம். அல்லது புரியாமல் கூடப் போகலாம். நாம் நாமாக இருக்க இது போன்ற மூளை மழுங்கச் செய்யும் படைப்புகளை நிராகரிக்க வேண்டுமென்பது எனது ஆவல்.

நான் இந்தப் பதிவில் எழுதி இருக்கும் விஷயங்கள் பல குழப்பங்களைத் தரலாம். உங்களுக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கலாம். அனைத்துக்குமான பதிலை நீங்களே உங்களுக்குள் தேடிக்கொள்ளுங்கள்.

Tuesday, January 24, 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் வெளிவந்த சுயநலமிகள்

23.01.2017 அன்று தமிழ்நாட்டு உண்மையான தமிழர்கள் ஒவ்வொருவரின் நினைவிலும் மாணவர்களும், இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டு விடுவனரோ என்ற பதைபதைப்பும், மனவருத்தமும், சுய பச்சாதாபமும் ஏற்பட்டு இரத்தக் கொதிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. அடிக்கடி டிவி பார்ப்பதும், வாட்ஸ் சப்பில் மெசேஜ்களைப் படிப்பதும், சென்னைக்கு போன் செய்வதுமாக  இருந்தனர். மாலை வரை மனப்போராட்டம் நீடித்துக் கொண்டே இருந்தது.

நான் முன்பே நடிகர்களால் ஜல்லிக்கட்டு போராட்டம் பாதிப்படையுமா? என்று. எழுதி இருந்தேன். அதைத்தான் செய்திருக்கின்றார்கள். 22ம் தேதி ஆதி பேசியதிலிருந்து ஆட்டம் ஆரம்பித்து விட்டது என்று தெரிந்து கொள்ள முடிந்தது. 23.01.2017 அன்று இரவு ’நேர்பட பேசு’ நிகழ்ச்சியில் பேசிய ஒரு இளைஞர் அவர்கள் எவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்று விவரித்தார். 

23.01.2017 நேர்படப்பேசு நிகழ்ச்சி பாகம் 1



23.01.2017 நேர்படப்பேசு நிகழ்ச்சி பாகம் 2

களத்தில் இருந்தவர்களை இந்த சினிமாகாரர்கள் உள்ளே நுழைந்து பேசக்கூட விடாமல் தடுத்த நிகழ்வையும் இவர்கள் தான் இந்தக் கலவரத்துக்கு காரணமாக இருந்தனர் என்றும் விவரித்தார். தெரிந்து செய்கின்றார்கள் தெரியாமல் செய்கின்றார்கள் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. எந்தக் காலத்திலும் சினிமாக்காரர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்ததே இல்லை என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். 

இது சினிமா இல்லை. வாழ்க்கை. நிதர்சனம். எதார்த்த உலகின் போராட்டக்களத்துக்குள் ஆயிரமாயிரம் இளம் குருதிகளின் நாளங்களில் புரண்டோடும் உணர்ச்சி அலைகளை சரியாக வழி நடத்திடாவிடில் இப்படித்தான் கண்டவர்கள் எல்லாம் நுழைந்து சீரழித்து விடுவார்கள். மதியம் போல பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த லாரன்ஸ் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் பாதியில் காணாமல் போனார். ஆதி மீடியாவில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசியதைப் பார்த்த அனைவருக்கும் தெரியும் அவர் எப்பேர்பட்ட ஆள் என்று. 

ஒவ்வொரு மீடியாவும் தவறான புரிதல் வரும்படியான செய்திகளைத்தான் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த மீடியாவுக்கும் பொறுப்பு இருந்ததாகத் தெரியவில்லை. பரபரப்பாக்கிக் கொண்டே இருந்தனர். அவர்களுக்கு அதுதான் தேவை. போராட்டக்களம் சந்தோஷமாகச் சென்று விட்டால் மீடியாக்காரர்களுக்கு என்ன வேலை? அவர்கள் எதிர்பார்த்தது நடந்தது. அதை வைத்து இன்னும் கொஞ்சம் காலம் பரபரப்பாகவும், விவாதக்களங்களையும் முன்னெடுப்பார்கள். 

களத்தில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் ஒவ்வொருவரின் தந்தைகள், தாய்கள், உறவினர்கள் என்று அனைவரும் போராட வந்த நிகழ்வு சாதாரணமாக நடந்த நிகழ்வு அல்ல. எதேச்சதிகாரத்துக்கும், அதிகார மையங்களுக்கும், ஊழல் அரசு அதிகாரிகளுக்கும் விடப்பட்ட எச்சரிக்கை. போதும் உங்கள் ஆட்டம் இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கட்டியம் கூறிய போராட்டம். இதன் காரணமாக பலரின் தூக்கம் போயிருக்கும். இந்தப் போராட்டத்தின் முடிவினை இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கின்றார்கள்.

காவல்துறையினர் கூட்டமாக இருந்தவர்களை இழுத்த போது அவர்கள் ஜனகனமன என தேசிய கீதம் பாடினார்கள். சிலர் வந்தேமாதரம் வந்தே மாதரம் என்று முழங்கினார்கள். பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரின் நெஞ்சமும் துடித்தன. காவல்துறை செய்த செயல் நெஞ்சத்தைப் பதற வைப்பது போல இருந்தது. காவல்துறையினரில் அம்மா, அப்பாக்களும் இருக்கின்றனர். தன் பையன் அழுதாலே துடிக்கும் மனசு அவர்களுக்கும் உண்டு. ஆனால் அவர்களால் ஒன்றும் செய்திருக்கமுடியாது. அவர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆளும் அதிகாரத்திற்கு அவர்கள் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் மனிதாபிமானத்தோடு இருக்கவே முடியாது. நேர்படப்பேசு நிகழ்ச்சியில் பேசிய முன்னால் காவல்துறை அதிகாரி கருணா நிதி அவர்கள் ’மேலிடத்தின் உத்தரவுப்படிதான் காவல்துறை நடந்து கொள்ளும்’ என்று நிகழ்ச்சியின் முடிவில் போட்டுடைத்தார். 


(மேலே இருக்கும் பட்டியலில் வீடுகளில் வளர்க்கப்பட்ட காளைகளைச் சேர்த்திருக்கவே கூடாது. காடுகளில் இருக்கும் விலங்குகளும் வீட்டில் வளர்க்கப்படும் காளைகளும் ஒன்றா? பட்டியலில் சேர்த்திருக்கின்றார் காங்கிரஸ் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். ஏன்???)

11.07.2011ம் தேதியன்று மத்திய அமைச்சகமான சுற்றுச்சூழல் துறை ஒரு நோட்டிபிகேசனை வெளியிட்டுள்ளது. அதில் காட்சிப்படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியலில் காடுகளில் வசிக்கும் சிங்கம், புலி, கரடி, கருஞ்சிறுத்தை, குரங்குகள் பட்டியலோடு காளைகளையும் சேர்த்திருக்கின்றார்கள். இந்தியாவெங்கும் இருக்கும் உழவர்கள் வீடுகளில் ஒவ்வொருவரின் வாழ்வாதாரமாக இருக்கும் காளைகளை ஏன் அந்த லிஸ்டில் சேர்த்தார்கள். திடீரென காளைகளைச் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? 

2009-2011 வரை ஜெய்ராம் ரமேஷ், 2011 - 2013 வரை தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், 2013-2014 வரை வீரப்ப மொய்லி ஆகிய காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களாக இருந்தனர். ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் அமைச்சராக இருந்த போதுதான் காளைகள் அந்த லிஸ்டில் சேர்க்கபட்டது. ஏன் சேர்த்தார் என்பதற்கு காரணத்தை எவரும் கேட்கவில்லை. உச்ச நீதிமன்றம் இந்தக் கேள்வியைக் கேட்டதா என்றும் தெரியவில்லை. அந்த அமைச்சரவையில் திமுகவைச் சேர்ந்த முக. அழகிரி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். ஜி.கே வாசன் மற்றும் காரைக்குடி ப.சிதம்பரம் ஆகியோரும் அமைச்சரவையில் இருந்தனர். அவர்களுக்கு தெரிந்திருக்காதா இந்த பட்டியல் விவரம். அவர்கள் ஏதும் செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என்பதற்கு காரணத்தை அவர்கள் தான் நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். அன்று அமைதியாக இருந்து விட்டு இன்று கருத்துச் சொல்கின்றார்கள். போராட்டம் செய்கின்றார்கள். சுப்ரீம் கோர்ட்டில் இந்த ஒரு பாயிண்டை வைத்து பீட்டா ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்குகிறது. சுப்ரீம் கோர்ட் சட்டத்தின் படி தான் தீர்ப்பு வழங்கும் என்று எல்லோரும் சொல்கின்றார்கள். நம்புகின்றார்கள். அதைத்தான் சுப்ரீம் கோர்ட்டும் சொல்லியது.

அரசியல் என்பது இதுதான். பிரச்சினை சரி செய்யப்படவே கூடாது. சரி செய்வது போல காட்டணும் ஆனாலும் சரி செய்யக்கூடாது. இப்படி ஒவ்வொரு மக்கள் பிரச்சினையையும் சரி செய்து விட்டால் அரசியல் செய்ய முடியாது. நீரு பூத்து நெருப்பாகவே ஒவ்வொரு பிரச்சினையும் இருந்தால் தான் அடுத்தடுத்து ஆட்சி மாற்றம் வர இந்தப் பிரச்சினைகள் உதவி செய்யும். 

இன்றைக்கு கட்சிக்குத் தலைவர்களாக இருக்கும் ஒவ்வொருவரிடமும் கேட்டுப்பாருங்கள். உங்கள் கட்சியின் இப்போதைய கொள்கை என்னவென்று. எல்லோரும் திருதிருவென முழிக்க ஆரம்பித்து விடுவார்கள். இனி தமிழ் பேசி பயனில்லை. திராவிடம் பேசிப்பயனில்லை. ஜாதிமதம் பேசிப்பயனில்லை. தன் கட்சியின் கொள்கையாக எதைச் சொல்வார்கள்? கேட்டுப்பாருங்கள் தெரியும் அரசியல் என்றால் என்னவென்று.

மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்குப் போட்டவர் தமிழர். அன்று விழித்திருக்க வேண்டிய அரசு மவுனம் சாதித்தது. ஏனோ தானோவென ஜல்லிக்கட்டுப் பிரச்சினையைக் கையாண்டார்கள். விளைவு இந்தப் போராட்டம்.

தமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முயன்ற இளைஞர் பட்டாளத்துக்கு முன் அனுபவம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. கட்டுக்கோப்பாக போராட்டத்தை நடத்தத் தெரிந்தவர்களுக்கு அரசியல் தெரியாது. அதுவும் இங்குள்ள அனைவருக்கும் தெரியும். 

காலம் காலமாக நடந்து வரும் போக்குதான் இது. அஹிம்சா போராட்டத்தின் வெற்றி பலியாகும் உயிர்களின் மீதுதான் கிடைக்கும். மஹாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தில் மாண்டவர்களின் மீதுதான் இந்தியா தன் சுதந்திரத்தைப் பெற்றது. நேற்று மாலையில் ஓய்வு பெற்ற நீதிபதி என்ன சட்டம் போடப்பட்டிருக்கிறது என்று கொடுத்த விளக்கத்தை முன்பே கொடுத்திருக்கலாம். கொடுக்கவில்லை. ஏனென்றால் இந்த இளைஞர் போராட்டம் இப்படி சுமூகமாக முடிந்து விடக்கூடாது. அவ்வாறு நடந்து விட்டால் யாருக்கு எந்த பிரயோஜனமும் இல்லாது போய் இருக்கும். இந்த நிகழ்வினால் பலர் ஆளும் கட்சியின் மீது கோபமும், சிலர் எதிர்கட்சிகளின் மீது கோபமும் கொண்டனர். இதைதான் அரசியல் எதிர்பார்க்கும். நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு பலன் கிடைத்திடுவது தான் அரசியல்.

நான் பிறக்கும் முன்பே நடந்த சுதந்திரப்போராட்டத்தை என்னால் காண முடியவில்லை. மெரினா கடற்கரையில் அந்தப் போராட்டத்தை இளைஞர்கள் கண் முன்னால் கொண்டு வந்து காட்டினர். காவல்துறையினர் அவர்களை முரட்டுத்தனமாக இழுக்கின்றனர். தூக்கி வீசுகின்றனர். போராடிய மாணவர்கள் ”ஜனகனமன” பாடினார்கள். ”வந்தே மாதரம்” என்று முழங்கினார்கள். அஹிம்சையாக உட்கார்ந்து போராடினார்கள். அவர்கள் ஹிம்சிக்கப்பட்டனர். அஹிம்சைக்கு எதிர் ஹிம்சைதானே. ஜனநாயகத்துக்கு எதிர் அரசியல்தானே. இந்தப் போராட்டத்தை வெகு எளிமையாக முடித்திருக்கலாம். ஆனால் அரசியல் அப்படி முடிக்க விடாது. அதைத்தான் இந்த தமிழர் சமுதாயம் நேற்றுக் கண்டது.



குறிப்பு: இன்றைய இளைஞர் பட்டாளம் அவசியம் படிக்க வேண்டிய அரசியல் பகடி நூல் ஒன்று உண்டு. போராட்டக்களத்தில் போராடியவர்கள் சோ எழுதிய சர்க்கார் புகுந்த வீடு என்ற அரசியல் நாவலை அவசியம் படியுங்கள். இந்த நூல் எப்படி அரசியல் செய்வது என்று சொல்லிக் கொடுக்கும். நிதர்சன அரசியல் என்றால் என்னவென்று உங்களுக்கு பாடமெடுக்கும். மறந்து விடாதீர்கள்.

எனக்கும் அல்லையன்ஸ் பப்ளிகேசனுக்கும் மறைந்த சோவுக்கும் எந்த வித வியாபாரத் தொடர்பும் இல்லை என்று இவ்விடத்தில் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.


Thursday, January 19, 2017

நடிகர்களால் ஜல்லிக்கட்டு போராட்டம் பாதிப்படையுமா?

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மாணவர்கள் இந்தாண்டு போராட்டத்தை முன்னெடுத்தெடுக்கிறார்கள். மிக்க மகிழ்வைத் தரும் நிகழ்வு இது. ஈழப் போராட்டத்தைப் பிசுபிசுக்க வைத்தது போலவும், மதுவிலக்குப் போராட்டத்தைக் கலகலக்க வைத்தது போலவும் இந்தப் போராட்டம் ஆகி விடக்கூடாது என்பதில் போராட்டக்காரர்கள் வெகு ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம். 

மீடியாக்களின் கவனம் இப்போது மாணவர்களின் மீது உள்ளது. ஆனால் அந்தக் கவனம் திசை மாறி திசை திரும்பி விடுமோ என்ற எண்ணத் தோன்றுகிறது. காரணம் சினிமா நடிகர்கள். நடிகர்கள் சங்கத்தில் இப்போது ஆக்டிவாக இருக்கும் சில நூறு நடிகர்கள் சேர்ந்து கொண்டு ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடத்த ஆரம்பித்தால் மீடியாக்கள் இந்த நடிகர்களின் போராட்டத்தை லைவ் ரிலேவாகவும், செய்திகளாகவும் வெளியிடுவார்கள். மாணவர்களின் போராட்டம் மீடியா மத்தியில் கவனம் இன்றிப் போய்விடும் சாத்தியங்கள் அதிகமிருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

தார்மீக ரீதியாக மீடியாக்கள் சில நடிகர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளக்கூடாது. மாணவர்கள் போராட ஆரம்பித்த பிறகு தான் நடிகர்கள் தங்கள் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். தங்களைப் பார்க்க மாணவர்கள் கூடுவார்கள் என்ற கணக்குப் போட்டு இருக்கலாம். அதனால் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரும் ஆதாயமெடுக்க நினைத்திருக்கலாம். 

தமிழகத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் சிறுபான்மையினராக இருக்கும் சினிமாக்காரர்கள், நாங்களும் போராடுகிறோம் என போராட்டத்தின் வீரியத்தை வீழ்ச்சியுறச் செய்வதும், போராட்டக்களத்தின் பலனை தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்வதையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பணம் சம்பாதிக்கட்டும் அது அவர்களின் உரிமை.  நாங்களும் தமிழர்கள் தான் என்று சொல்வார்கள். எங்களுக்கும் போராட உரிமை உள்ளது என்பார்கல். யார் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் உண்மையான போராட்டத்தை தன் பக்கம் திருப்பி விடும்போக்கினைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 


(இதோ இந்த ஏறுதழும் வீரனைப் போல ஒரு காளையை தழுவ முடியுமா சினிமா நடிகர்களால்? நடிப்பதில் மட்டுமே வீரம் காட்டும் வீரர்கள் நடிகர்கள்)

சினிமா என்கிற மாயமோகத்தை வைத்து அறுவடை செய்யும் ஜெகஜ்ஜாலக் கில்லாடிகளின் சுய நலப்பாச்சாவைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை ஏமாந்தது போதும். நடிகர்களுக்காக நாட்டை கொடுத்த நிகழ்வுகள் இனி வேண்டாம். நடிகர்கள் நடித்து விட்டு பணம் சம்பாதிக்கட்டும் அதுவல்ல பிரச்சினை. சினிமாவைப் பார்த்து ரசிக்கலாம். விமர்சிக்கலாம். பிடிக்கவில்லை என்றால் நிராகரிக்கலாம். அது ஒரு பொழுது போக்கு மட்டுமே.

இப்போது சினிமா நடிகர்கள் தங்கள் படத்தைப் பார்க்க வரும் இளைஞர் கூட்டத்தினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதைத்தான் அவர்கள் இந்த நேரத்தில் செய்ய வேண்டும். சினிமா என்ற லேபிள் போராட்டம் இந்த நேரத்தில் தேவையில்லாத ஒன்று. மாணவர்களின் போராட்டத்தினை பிசுபிசுத்திட வைத்திடுமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

மீடியாக்கள் சினிமாக்காரர்களுக்கு வெளிச்சமிடுவதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து தமிழனின் பாரம்பரியம் அழிக்கப்பட்டு விடாமல் பாதுகாத்திடல் வேண்டும். ஒவ்வொரு தமிழனாலும் தான் மீடியாக்கள் அசுர வளர்ச்சி அடைகின்றன என்பதை மறந்து விடக்கூடாது.

சாலையில் இறங்கிப் போராடும் தங்களின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு பெற்றோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். போராட்ட மாணவர்களுக்கு உணவும் உதவியும் வழங்க வேண்டும். ஒவ்வொரு தமிழனும் குடும்பம் குடும்பமாக ஆதரவினை அளித்துக் கொண்டே இருக்க வேண்டும். இறுதி ஆண்டுப் பரிட்சைகள் வரக்கூடும். அதிலும் கவனம் வைத்தல் அவசியம்.

சினிமாவாலும் அரசியலாலும் பீடிக்கப்பட்டு சீரழிந்து தமிழர் சமூகம் கிடக்கிறது. உலகிற்கே உயர்வான நாகரீக வாழ்க்கை வாழ்ந்து வந்த தமிழர் சமுதாயம் தலை நிமிரட்டும். சீறிவரும் காளைகளென எக்காளமிட்டு ஜல்லிக்கட்டு நடத்த போராட்டத்தை முன்னெடுங்கள். ஆரம்பம் இதுதான். 

தமிழர் நாடு எனும் தமிழ் நாடு தனது பாரம்பரியத்தை மீட்டெடுத்து தன் சந்ததியினருக்கு வாழையடி வாழையாக கொடுத்து மேன்மையுற வாழ வேண்டும்