குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பிக்பாஸ். Show all posts
Showing posts with label பிக்பாஸ். Show all posts

Friday, August 2, 2019

நரலீலைகள் - நாய் காதல் (5)


உங்களுக்கு நரலீலைகளின் 3 மற்றும் 4 வது பகுதிகள் ஏதாவது புரிந்ததா? ஏதோ காதல் பித்து ஏற்பட்டு இந்த நாவல் ஆசிரியன் எழுதி இருக்கிறான் என நினைத்திருப்பீர்கள். ஆமாம் நீங்கள் நல்லவர்கள். அப்படித்தான் நினைப்பீர்கள். ஆனால் இந்த நாவலாசிரியன் இருக்கின்றானே அவனுக்குள் குறுக்கு வெட்டு பகுதி ஒன்று உண்டு.

இந்த அஸாஸில் யார் தெரியுமா? திருக்குர் ஆனை நாவலாசிரியனுக்கு அவ்வப்போது வாசித்துக் காட்டி அர்த்தம் சொல்லி கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் மூலம் தெரிய வந்த ஆள் தான் அஸாஸில் அலீம் எனச் சொல்லக்கூடிய சைத்தான்.

கடவுளின் மகிமை தெரிய வேண்டுமெனில் சைத்தான் இருக்க வேண்டும். ஹீரோவின் மகிமை தெரிய வேண்டுமெனில் வில்லன் இருக்க வேண்டும். இப்போது புரிகிறதா உங்களுக்கு?

அஸாஸில் என்பவர் சைத்தான். இந்த உலகம் சைத்தானால் தானே ஆளப்பட்டு வருகிறது. உலகம் மட்டுமா உங்களின் ஒவ்வொருவரின் உள்ளத்துக்குள் உறங்கிக் கிடப்பவனும் அவன் தானே?

இல்லையென்றா நீங்கள் மறுக்கப்போகின்றீர்கள்? அஸாஸில் இந்தப் பூவுலகின் ஒவ்வொரு துகளிலும் இருக்கின்றான். அவன் ஆடும் ஆட்டத்தின் பகடைக்காய் தான் இந்த பூமி. மனிதர்களின் நாடி, நரம்புகளில், இரத்தத்தின் துளிகளில், விடும் மூச்சில் அவன் நீக்கமற நிறைந்து கிடக்கிறான். உங்களது காதலில், காமத்தில், பாசத்தில், பற்றில் எல்லாம் அவனே இருக்கிறான்.

உங்களை ஆளும் அஸாஸில் தான் உங்களுக்கு கடவுள். ஆனால் நீங்கள் எவரையோ தேடி ஓடிக் கொண்டிருக்கின்றீர்களே? அவர் நம்மைக் காப்பாற்றுவார் என்று கோவில் கோவிலாய், மசூதியாய், சர்ச்சுக்காய் ஓடிக் கொண்டிருக்கின்றீர்களே? ஓடி என்ன பயன்?

உங்களுக்குள் இருக்கும் அஸாஸிலை நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்? உங்களுக்குள் உறைந்து கிடக்கும் அவனை எவ்விதம் நீங்கள் விரட்டி அடிக்கப்போகின்றீர்கள்? முடியுமா உங்களால்?

* * *

”மாயா....! உனக்கு அறிவிருக்கிறதா? நாவலின் ரகசியங்களை வெளிப்படுத்தினால் சுவாரசியமே இருக்காதே? ஏனடா? நீயே உன் நாவலைக் கெடுக்கிறாய்? வேண்டாம் மாயா....! நீ அமைதியாக இருந்து கொள். நாவலின் கட்டமைப்பை சீர் குலைக்காதே. இல்லையென்றால் உன்னை ராஜீயாய சபாவில் கொண்டு போய் விட்டு விடுவேன். ஜாக்கிரதை..” - கோவை எம் தங்கவேல்

* * *

”அண்ணேய், அண்ணேய்....! ”

”என்னடா? சநி....”

“பிக்பாஸில் பார்த்தியாண்ணேய். இந்த கவின் பய பன்றதை?”

“நானெங்கடா அதைப் பார்த்தேன். ஒரு வேளை பாத்ரூமிக்குள் பண்ணி இருப்பானோ என்னவோ தெரியவில்லையேடா சநி”

“அண்ணேய், இது என்னா காதல்னே... சாக்ஸி சொல்றா என் ஃபீலிங்க்ஸ், என் ஃபீலிங்க்ஸ் ஹர்ட் பண்றான் கவின்ங்கறாளே??? அப்படின்னா என்னாண்ணேய்?”

”அதுவாடா, சொல்கிறேன் கேளு...!”

”நாய்க்காதல் என்றால் என்னவென்று தெரியுமா உனக்கு? நாய்கள் ஆறு மாதத்துக்கு ஒரு தடவை குட்டி போடும் தன்மை கொண்டவை. பெண் நாய் குட்டி போட தயாரானவுடன் ஆண் நாய்கள் சுற்ற ஆரம்பிக்கும். அந்த நாய்களில் ஏதோ ஒரு நாயை பெண் நாய் தன்னை அண்ட விடும். பின்னர் அந்தக் காதல் முடிந்து விடும்.”


”புரிஞ்சுடுச்சுண்ணேய்....!”

”சேரனுக்கு லாஸ்லியா மீதுதான் மகள் பாசம் பொங்கும். எந்த தகப்பன்? தன் மகளை கன்னத்தைத் தடவி, கட்டிப் பிடித்துக் கொண்டலைகிறான்? கலாச்சாரம் பற்றி வாய் கிழிய பேசும் சேரனுக்கு மீராவை மகள் எனப் பாவிக்கத் தெரியாதா? கருப்பாய், சற்றே அழகற்றவளாய் தெரியும் மீராவை மகளாகப் பாவிக்காத சேரனுக்கு கொழுக் மொழுக் லாஸ்லியா மகளாகத்தான் தான் தெரிவாள். இதெல்லாம் இந்த நாவலில் வருகின்றானே அஸாஸில் செய்கிற அக்கிரமம். சேரன் மனதுக்குள் காமப் பித்தேறி அந்தப் பெண்ணைத் தடவிக்கிட்டு திரிகிறான்”



“அய்யோ... ???”

“அட, ஆமாடா சநி, மீராவை இடுப்பைப் பிடித்து தள்ளி விடுகிறான் இந்தச் சேரன். அந்தப் பெண் ஆற்றாமையால் அவனின் முதுகில் அடிக்கிறாள். அவள் அவன் செய்தது சரியில்லை என்று தான் சொன்னாள். ஆனால் இவன் என்னடா? செய்தான்? அழுது ஆர்ப்பாட்டம் செய்தான். இவனுக்கு மட்டும் தான் மகள்கள் இருக்கின்றாளா??? அப்போ மீரா யாரடா? அவளும் யாரோ ஒரு தகப்பனின் மகள் தானே? இவன் மகள்களுக்கு மட்டும் தான் கல்யாணம் ஆகணுமா? அயோக்கியப்பயல்....!”

“அட, ஆமாண்ணேய், கமல் கூட சேரனை நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பாராட்டினாரே??”

“ஒரு அயோக்கியனுக்கு இன்னொரு அயோக்கியன் தானடா குடை பிடிப்பான். இது தான் உலக வழக்கம் சநி...”

“அண்ணேய், இந்தப் பயல்கள், வாயற்ற பெண்ணை அல்லவா பலி கடாவாக்குகின்றார்கள். சரவணன் பஸ்ஸில் இடித்தேன் என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்க வைக்கின்றார்கள் இந்த நல்லவர்கள். கமல் படத்தில் நடிக்கும் போது, நடிகைக்கே தெரியாமல் உதட்டைக் கடித்து உறிஞ்சினானே, அப்போதெல்லாம் இந்த நல்லவர்கள் எங்கே போனார்கள்?”

“அடேய் சநி, இந்த நாவலாசிரியன் கடுப்பாகி விடுவான் இப்படியெல்லாம் பேசினால். நானோ நாவல், நீயோ நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம். நாவலின் ரகசியத்தைச் சொல்லி விட்டேன் என்று கடுப்பில் வேறு இருக்கிறான்”

“ஆமாண்ணேய், இந்த ஆளைப் பார்த்தால் பாவமாத்தான் இருக்கு”

* * *

”அன்பர்களே, மல்டிபிள் டிஸ்ஆர்டர் ஏற்பட்டு விட்டது உனக்கு” என்கிறாள் கோதை. இந்த நாவலைப் படித்து விட்டு, அவளுக்கு இது நாவலாய் தெரியவில்லையாம். ராஜம் கிருஷ்ணன், கல்கி போன்று எழுது என்கிறாள். அவர்களைப் போல எழுத நானொன்றும் அவர்களின் பிரதி அல்லவே. 

மனதற்ற நிலைக்குப் போக போராடிக் கொண்டிருக்கும் எளியவன் நான். எனக்கு சத்தங்களற்ற அந்த உலகின் அற்புதத்தில் ஒரு நொடி ஊடுறுவி வெளியேற ஆசை. 

இறைவனின் குரலில் கரைந்து கொண்டிருக்கும் ஆனந்தத்தில் திளைத்திருக்கும் என்னை பிறரைப் போல நாவல் எழுது என்று கேட்டுக் கொள்ளும் கோதைக்கு ஒன்றைச் சொல்கிறேன்.

நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும்
இடையே உள்ள திரை
அவர்களை விலக்கி வைக்கிறது
நீயிந்த திரையை நீக்கிட
விரும்பவில்லையா? நான்
தெய்வீகப் பேரொளியில்
என் உள்ளொளியைச் 
சேர்க்க வேண்டும் அல்லவா? - ரூமி

கோதை, உனக்குப் புரிகிறதா? எல்லைகளற்ற இந்தப் பிரபஞ்சத்தின் தூசிகளில் இருந்து மாற்று வடிவாய் உன் முன்னே, கணவனாய் உருவெடுத்து இருக்கும் உனது நான், விரும்புவது எனது நாவலின் வழியே உருகியோடும் அன்பினை மட்டுமே.  அன்பின் வழி கடவுள் தன்மையை அடைவது மட்டுமே எனது ஆவல் அன்பே....!

நானே உன் இதயம் - அந்த 
உணர்ச்சி மையத்தை நீ
உனக்குள் தேடாதே! அது
என்னிடம் உள்ளது
என்னில் இருந்து வேறாக 
உன்னை எண்ணி விடாதே! அப்போது
உன்னை நீ அறிய மாட்டாய்
நீ துன்பத்தாலும், வேதனையாலும்
நிரம்பியிருப்பவள்....!
வா..! என்னில் ஒரு பகுதியன்றோ நீ.....!
என் விலகப்பார்க்கிறாய் முழுமையில் இருந்து?
என்னை இருகப்பற்றிக் கொள்,
என்னை மகிமைப்படுத்திக் கொள்...! - ரூமி


* * *
02/08/2019

Thursday, June 28, 2018

நான் தமிழ்ப்பெண்

எம் தமிழ்ப்பெண்கள் சிறு குழந்தையாக இருக்கும் போது, இடுப்பில் வெற்றிலை போன்று தங்கத்தில் செய்து அணிந்திருப்பார்கள். பருவ வயதுப் பெண்கள் தாவணி உடுத்தி மஞ்சள் பூசி இருப்பார்கள். வீட்டு வேலையின் போது கணுக்கால் தெரியும் படி பாவாடையை இடுப்பில் செருகி இருப்பார்கள். கெண்டைக்கால் கூடத் தெரியாது. புதிய ஆண்கள் வீட்டுக்கு வரும் போது கண்கள் மட்டுமே வெளியில் தெரியும்படி நின்று கொண்டு பேசுவார்கள். பெண்களின் முகங்கள் தேஜஸ்சில் ஜொலிக்கும். திருமணமான பெண்கள் மெட்டி ஒலிக்க உடம்பு அதிரா வண்ணம் காற்றில் மிதந்து வருவார்கள். இப்படித்தான் நான் என் சிறுவயதில் கண்டு, பழகிய பெண்களைப் பார்த்திருக்கிறேன். என் சகோதரிகளும், அம்மாவும், உறவுப் பெண்களும் இப்படித்தான் இருந்தார்கள். இன்றைக்கும் இருக்கின்றார்கள். 

உடல் அதிர ஓடியோ அல்லது நடந்தோ கூட நான் பார்த்தது இல்லை. இது தமிழ்ப் பெண்களின் அடையாளம் என நான் அறிந்திருந்தேன். எம் தமிழ்பெண்களை இளையராஜா என்கிற ஓவியக்கலைஞர் அழகாக பட்டை தீட்டி இருந்தார். அந்தப் புகைப்படங்கள் கீழே !


(ஓவியம் : இளையராஜா - நன்றி)

பத்து நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் லைவ் நாடகமான ”பிக் பாஸ்” நிகழ்ச்சியை வீட்டில் பார்க்கின்றார்கள். நேற்று தூக்கம் வரவில்லை என்பதற்காக நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். மும்தாஜை வைத்து டெம்ப்ட் ஏற்ற ஏற்பாடு செய்திருப்பதைக் கண்டு கொண்டேன். அவருடன் மமதிசாரி என்றொரு (இது யாரென்று தெரியவில்லை) பெண்ணைப் பார்த்தேன். 

பிக் பாஸ் பணிப்பெண்ணாக இருக்க வேண்டும் எனக் கொடுத்த டாஸ்க்கில் இவர் ”தான் தன் கணவனைத் தவிர வேறு எவரையும் தொட மாட்டேன் என்றும், நான் தமிழ்ப்பெண்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அதாவது பணிப்பெண்ணாக ஆண்களுக்கு சேவை செய்ய மாட்டாராம். அவர் தமிழ்ப் பெண்ணாம். இத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. 

ஒரு சில பெண்கள் பெண் சுதந்திரப் பைத்தியம் பிடித்து நாறிப்போவார்கள். அதில் இவர் ஒருவர் என்று நினைத்துக் கொள்ளலாம். மும்தாஜ் மற்றும் மமதியினால் தான் ஷாப்பிங்க் செய்யும் டாஸ்க்கில் தோற்றுப் போய் பணிப்பெண் தண்டனையை,  பெண்கள் அனைவரும் டாஸ்காகச் செய்ய வேண்டி இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஸ்கிரிப்ட் படி நடிக்கிறார்கள். பிக் பாஸ் இந்த ஸ்கிரிப்டில் இருக்கும் பிழையினைக் கவனிக்காமல் விட்டு விட்டார்.

கடந்த பிக் பாஸ் சீசனில் நடித்த ஜூலியைக் கூட ஒரு வகையாக சகித்துக் கொள்ளலாம் போல. ஆனால் இந்த மமதிசாரியின் சேட்டைகள் பெண்கள் மீது வெறுப்பினை உண்டாக்கும் அளவுக்கு எரிச்சலின் உச்சத்தில் தள்ளுகிறது. மும்தாஜுடன் அவரின் கேணங்கிச் சேட்டைகளைச் சகித்துக் கொள்ளவே முடியாது. அவ்வளவு ஒரு கேவலமான நடிப்புச் சேட்டை. பேச்சு அதற்கும் மேல். நான் தமிழ்ப்பெண் என்பதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. மாலையில் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியில் மமதி சாரி காலையில் சொன்ன நான் தமிழ்ப்பெண் என்ற வார்த்தை மாலையில் அவர் தன்னை எப்படி வெளிப்படுத்தினார் என்பதைக் கீழே இருக்கும் புகைப்படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.



(புகைப்பட உதவி : பிக்பாஸ் - விஜய் டிவி - ஹாட்ஸ்டார்)

இணையத்தில் இவரைப் பற்றித் தேடினேன் பிராமின் பொண்ணாம். டிவியில் எல்லாம் வந்திருக்கிறதாம் என்று எழுதி இருந்தார்கள். நான் கண்ட பிராமின் பெண்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்களாக இருந்தார்கள். இன்றைக்கும் இருக்கின்றார்கள்.

மமதிசாரி சொன்ன தமிழ்பெண் என்பவர் எம் தமிழ்ச்சமூகத்தைக் கேவலப்படுத்தும் சொல். தமிழ்பெண் என்பவள் இளையராஜா வரைந்த ஓவியம் போலத்தான் இருப்பார் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்கால சமூகம் தமிழ்பெண் என்றால் இவரைப்போல இருப்பார்களோ என்று தவறுதலான முடிவுக்கு வந்து விடக்கூடாது என்பதால் ஒரு ஒப்பீட்டுக்காக இப்பதிவினை எழுதுகிறேன்.

எனக்கு குடும்ப அமைப்பு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் மீது மிகுந்த மதிப்பு உண்டு. ஏனென்றால் இவைகள் தான் இதுகாறும் மனித சமூகத்தின் மேன்மைக்கு பாதுகாவலனாய் இருக்கின்றன. ஆங்காங்கே நடக்கும் ஒரு சில தவறுதலான விஷயங்களால் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் மீதான நம்பிக்கை குறைவான விமர்சனங்கள் வரலாம். அது பெரும்பான்மையாக இருக்க முடியாது என்பது எனது எண்ணம்.

மமதி சாரி நவீனக்கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்தமாக தன்னை தமிழ்பெண் என்றுச் சொல்லிக் கொண்டு அதன் அடையாளங்களை அழிக்க முற்படுவது சரியல்ல. அவர் தான் பேசும் சொல்லுக்கு இருக்கும் அர்த்தத்தை உணர்ந்து பேச வேண்டும். 

Monday, August 21, 2017

கமல்ஹாசன் தமிழகத்தின் முதலமைச்சராகலாம்

எனக்கொரு பிரச்சினை இருக்கிறது. சொல் பொறுக்க மாட்டேன். மனதளவில் யாரைப் பார்த்தும் பொறாமையோ அல்லது எரிச்சலோ, கெடு எண்ணமோ எந்தக் காலத்திலும் நினைத்ததும் இல்லை, நினைக்கப்போவதும் இல்லை. இது எனது இயல்பு. இந்த இயல்பின் காரணமாக பல பேரின் அக்கிரமங்களைக் காணும் போது எரிச்சலும், ஆற்றாமையும் ஏற்பட்டு மனது வெம்பி விடும் எனக்கு. கமல்ஹாசனின் மஹாநதி படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். விமர்சனம் படித்தேன். அன்றைக்கு மனதுக்குள் வலித்த வலியில் அப்படத்தை நான் இதுவரை பார்க்கவே இல்லை. அதே போல விக்ரம் நடித்த காசி படத்தைப் பார்க்கச் சென்று பாதியில் எழுந்து வந்து விட்டேன். அந்தளவுக்கு துரோகமும், அக்கிரமங்களும் நிகழும் பட்சத்தில் அதைக் காட்சியாக்க் கூட காண என் மனது விரும்பாது. மன உளைச்சல் அதிகமாகி விடும். சமீபத்தில் அதை நான் பிக்பாஸ் பார்த்த போது அனுபவித்தேன். 

எவிக்சனில் குறைவான ஓட்டுப் பெற்றவரை ஒப்புக்குச் சப்பாணிக் காரணத்தைச் சொல்லிக் காப்பாற்றினார்கள். அன்றைக்கு நடத்தப்பட்ட இந்த அறம் மீறிய செயலால் எனக்கு மனது ஒரு மாதிரியாகப் போய் விட்டது. அதை கமல் நியாயப்படுத்தினார் வெகு சாதுரியமாக. கமல்ஹாசனின் பிக்பாஸ் அறம் அவர் மீதான அவ நம்பிக்கையின்மையை உருவாக்கியது. நான் அவர் மீது அவ நம்பிக்கை அடைவதால் அவருக்கு ஒன்றும் இழப்பு இல்லை. நான் யாரென்றே அவருக்குத் தெரியாது. தெரிந்து கொள்வதால் எனக்கோ இல்லை அவருக்கோ ஒரு பயனும் இல்லை என்பது வேறு விஷயம். எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று வெற்று ஜம்பமாகப் பேசிக் கொள்வதில் இருக்கும் அபத்தத்தை உணர்ந்திருக்கிறேன். பொருளை முன் வைத்து உலகம் இயங்க ஆரம்பித்ததிலிருந்து யாரும் யாருக்கும் எதையும் இலவசமாகவோ அல்லது தானமாகவோ செய்து விட மாட்டார்கள். பிரதி பிரயோஜனம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. கொடுத்தால் தான் உறவு என்பார்கள். ஒரு சில விதிவிலக்குகளை உடனே முன்னிறுத்தி விடக்கூடாது. 

நேற்றைய நிகழ்ச்சியில் கமல் காயத்ரியிடம், நீங்களும் நானும் ஒரே ஜாதி என்பதால் உங்களிடம் கனிவுடன் நடந்து கொள்கிறேன் நான் என்றுச் சொல்கிறார்கள் என்றார். எனது பிளாக்கில் “அவா” எனக் குறிப்பிட்டிருந்தேன். அதை ஸ்ரீபிரியா அவர்களுக்கு டிவீட்டிருந்தேன். அது உண்மையில்லை என்பதற்கு உரிய காரணங்களை அவர் தான் சொல்ல வேண்டும். பிக்பாஸ் போட்டியாளர்களைப் போல உண்மையை மறைத்து நழுவி விடமுடியாது. 

ஜூலி என்கிற பெண் என்ன பாவம் செய்தாள்? அவளுக்கு மட்டும் படம் போட்டு சுருக்கென்று ஊசி தைப்பது போல கேள்வி கேட்டாரே? காயத்ரிக்கு மட்டும் படமும் போடாமல், தானும் கேள்வி கேட்காமல் நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தவர்களைக் கேள்வி கேட்க வைத்து ஏன் நழுவினார்?மோதிரைக் கை அவர்கள் என்று கை காட்டி கழுவுற தண்ணியில நழுவும் மீன் போல் நழுவினார். இந்தச் சாமர்த்தியமும், சாணக்கியத்தனமும் ’அவா’ விற்குத்தான் வருமே ஒழிய பிறருக்கு வரவே வராது. 

ஜூலிக்கு படம் போட்டு விளக்கம் கேட்ட கமல்,  காயத்திரிக்குப் படம் போட்டுக் காட்டவில்லை என்பதற்கான ஒரு மிகச் சரியான காரணத்தை சொல்ல முடியுமா? இந்தக் கனிவு ஏன் இதர போட்டியாளர்களிடம் காட்டவில்லை என்று சொல்வாரா? 

தமிழன் என்றொரு வார்த்தையை அவர் நிகழ்ச்சியின் முடிவில் சொன்னார். உலக நாயகன் என்றொரு அடைமொழியைக் கொடுத்தார்களே அப்போது நான் உலக நாயகத் தமிழன் என்று சொல்ல மறந்து விட்டாரா? திடீர் தமிழ்ப்பாசமும் பற்றும் கமல்ஹாசனின் அடுத்த கட்ட நகர்வினைக் காட்டுகிறதா?

பிக்பாஸில் இருப்போர்களிடம் கேள்விகள் கேட்டார்கள். ஒருவர் கூட உண்மையைப் பேசவே இல்லை. வையாபுரி மட்டும் ஆமாம் நான் பாட்டுப் பாடினேன், தவறுதான் என்று சுஜாவிடம் மன்னிப்புக் கேட்டார். கூட்டாகச் சேர்ந்து கொண்டு ஒருவரை ஏமாற்றுவது, ஃபன்னிக்காகத்தான் செய்தோம், அது மனதை ஹர்ட் செய்து விட்டால் மன்னித்து விடுங்கள் என்று கொலை செய்து விட்டு செத்துப் போனவரிடம் மன்னிப்புக் கேட்பது போல பிந்து மாதவி சுஜாவிடம் கேட்டார். 

டிவி பார்ப்பவர்கள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கு ஒருவரும் உண்மையானப் பதிலைச் சொல்லவே இல்லை. காயத்ரி உண்மையைப் பேசவே இல்லை. ஹாட்ஸ்டாரில் அந்தப் பகுதி உள்ளது. மீண்டும் பாருங்கள். போலியாக நடித்தே பழக்கமானவர்களுக்கு உண்மை பேசுவது என்றால் மறந்து போய் விட்டது என்றே நினைக்கிறேன். அந்த விஷயத்தைக் கூட அவர் கேட்கவில்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோரும் சினிமாக்காரர்கள் அல்லவா?

சினிமா ஹீரோக்களை உண்மையான ஹீரோக்கள் என்று நம்பி நம்பியே தன் சுய கவுரவம், இனம், மொழி, செல்வம், கலை, கலாச்சாரம் அனைத்தையும் இழந்து நிற்கும் எம் தமிழர்களை ஆள்வதற்கு அத்தனை தகுதியும் கமலிடம் இருக்கிறது என்று உள்ளம் சொல்கிறது. இந்தச் சாமர்த்தியமும், பிறரை தான் சொல்வது சரிதான் என்று நம்ப வைக்கும் சாணக்கியத்தனமும் கமல்ஹாசனுக்கு உள்ளது. ஆகவே அவர் தமிழகத்தினை ஆள சரியான ஆள் என்றே நினைக்கிறேன். ஏமாறுவது என்பது தமிழர்களின் இரத்தத்தில் ஊறிய விஷயம். தமிழர்களின் மரபணுவில் சினிமாக்காரர்கள் தான் நம்மை ஆள வேண்டும் என்று பதிவாகி விட்டது. மரபணுவை இனி மாற்றவெல்லாம் முடியாது. ஆகவே கமல்ஹாசன் தமிழகத்தின் சி.எம் ஆக வரலாம். மறக்காமல் காயத்ரியை உள்ளாட்சித்துறை அமைச்சராக்கி விடுங்கள். அது ரொம்பவும் முக்கியம்.

Tuesday, August 15, 2017

அறத்தின் கோடு - கமலின் தர்மம் - பிக்பாஸ்

கடந்த வாரம் பிக்பாஸில் காயத்ரியை எளிமையான கேள்வி கேட்டு அவர் எலிமினேசனில் இருந்து காப்பாற்றபடுகிறார் என்று அறிவித்தார்கள். உலகமே பார்க்கும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பங்கெடுக்க வைக்கும் அற்புதமான நிகழ்ச்சி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பார்வையாளர்களையும் பங்கேற்க வைத்து தர்ம நியாயத்தை வளர்க்கும் அற்புதமான நிகழ்ச்சி அது என்றும் நம்பிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் தினமும் காலையில் நெட்டில் ஓட்டும் போட்டுக் கொண்டிருந்தேன். 

ஆனால் அவை அனைத்தையும் யாரோ ஒருவருக்காக பல கோடி மக்களின் முகத்தில் கரியைப் பூசிய விஜய் டிவியும், அதற்கு ஒத்து ஊதிய கமலையும் நினைத்தாலே அறத்தின் சீற்றம் பெருமூச்சாய் எழுகிறது. எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனம் தான் முன்னே நின்றது. எவ்வளவு பைத்தியக்காரர்களாக நாம் இருக்கிறோம் என்பதற்கு கமலும், விஜய் டிவியும் சேர்ந்து நமக்கு உணர்த்தின. அவர்கள் தாங்கள் விரும்பியதை நாம் விரும்பியதாக எவ்வளவு சாதுரியமாக மாற்றுகின்ற மாயாஜாலத்தில் நமக்குள் இருக்கும் அறத்தினை, தர்மத்தினை அழிக்க முனைந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

பதினைந்து பேரில் அகங்காரம், ஆணவம், சிண்டு முடிதல், புறம் பேசுதல், புரணி பேசுதல், ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டி பிறரை அசிங்கப்படுத்துதல் என அத்தனை அயோக்கியத்தனத்தினையும் செய்து வரும் ஒருவரை உலகமே வெளியேற்று என்றது. ஆனால் அதை மறுத்து ஓட்டளித்தவர்களின் அறத்தின் மீது உமிழ்ந்து, உங்கள் அறம் ஒன்றும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது எனச் சொல்லிக் காப்பாற்றுகின்றார்கள். கமல் அதற்கு ஸ்ரீபிரியாவை வைத்து சாதுரியமாக காய் நகர்த்தியதைக் கண்டதும் நாமெல்லாம் கேனயர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை அறிய முடிந்தது. யூடியூப்பில் கமெண்ட் போட்டு ஆத்திரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறோம். வேறு என்ன செய்ய முடியும்? ஒருவராலும் ஒரு ’ஹேரையும்’ புடுங்க முடியாது. அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதைச் செய்வார்கள். அதை நாமெல்லாம் வேடிக்கை தான் பார்க்க முடியும்.

இது ஒன்றும் நமக்கு பெரிய விஷயம் இல்லைதான். ஏற்கனவே நம்பி நம்பி ஓட்டுப் போட்டு செருப்படி வாங்கிக் கொண்டிருப்பவர்கள் தான் நாம். இருந்தாலும் சினிமாவில் அறத்தைப் பற்றிப் பேசி வரும் கமல் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையை, அவ்வாறு நினைக்காதீர்கள், நானும் இப்படித்தான் என்று உடைத்தார். என்னால் எதுவும் செய்ய முடியாது என்றார் அவர். 

பின்னர் ஏன் தமிழக அரசியல் பற்றி கமெண்டுகளை எழுதிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவ்வாறு எழுதுவதற்கு தனக்கு தகுதி இருப்பதாக அவர் நினைக்கிறார் என்பது புரிந்தாலும் கமலுக்கு தமிழக அரசியல் பற்றிய அறச்சீற்றம் எழுவது போல விஜய் டிவியைப் பார்த்து, அதில் பங்களித்தவர்களுக்கும் இருக்கும் அல்லவா? அதை அவர்கள் எளிதாக புறம் தள்ளி ஒதுக்கி விட்டார்கள். மீண்டும் ஒரு நம்பிக்கைத் துரோகம். அதற்கு துணை போனவர் கமல்ஹாசன். தமிழக அரசியலுக்கு வாருங்கள் கமல். உங்களை வச்சு செய்வார்கள் நம் மக்கள் என்று நினைக்கிறேன். 

தவறு செய்தால் அது தவறுதான். அதற்கு எந்த வித சப்பைக்கட்டு கட்டினாலும் தவறு நியாயமாகி விடுமா கமல் அவர்களே? கம்பெனி ரூல், சுவாரசியம் ஆகிய இன்னபிற காரணங்களை அடுக்கினாலும் தவறு செய்தீர்கள், உங்களை நம்பி நியாயமாக இருந்தவர்களை ஏமாற்றி இருக்கின்றீர்கள் என்பதுதானே உண்மை.

தர்மம், நியாயம், நல்லவர்கள் இவர்களைப் பற்றிப் பேச இனி விஜய் டிவிக்கு என்ன அருகதை இருக்க முடியும்? கமல்ஹாசனுக்கும் அந்த கோடு இல்லை என்பதும் உண்மைதானே?

கமல்ஹாசனுக்கும் விஜய் டிவிக்கும் ஒரு திருக்குறளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
உயற்பால தோரும் பழி.

ஒருவனுக்குச் செய்யும் நன்மை இதுகாறும் கமல் காத்து வந்த அறத்தினை அழித்து விட்டது. நீயா நானா? நடத்தும் விஜய் டிவியின் அறக்கோடும் அழிந்து போனது.

கமல்ஹாசனுக்கு மட்டும் கீழே இருக்கும் திருக்குறள் சமர்ப்பணம்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது.

இங்கு பயன் தூக்கார் என்பது தமிழக மக்கள் என்று அர்த்தம் கொள்க. அவர்களுக்கு கமல் செய்தது என்ன? என்று அவரே நினைத்துப் பார்த்துக் கொள்ளட்டும்.

இருப்பினும் கமலின் தர்மம் மறுத்துப்பேசும் சாதுர்யமும், பிக் பாஸிடம் காயை நகர்த்தும் “அவா” புத்தித்தந்திரமும், காயத்ரியின் மீது கொண்டுள்ள ”அவா” பாசத்தின் காரணமும் அசத்தல் தான்.

Wednesday, August 2, 2017

சாண்டியின் ஏழு குட்டிகளும் கொஞ்சம் ஓவியாவும்

குழந்தைகளும் நானும் பிக் பாஸ் பார்த்து வருகிறோம். இருவரும் அதிர்கிறார்கள். அப்பா இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா? என்று கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். பையன் மாணவர் துணைத் தலைவனாக வேறு இருப்பதால் பிக் பாஸ் மூலம் சக மனிதர்களை புரிந்து கொள்ள முயல்கிறான். மனிதர்கள் இப்படித்தான் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் புதிய உலகைக் காணும் குழந்தைகளுக்கு பேரதிர்ச்சியாகத்தான் இருக்கின்றது. சகமனிதர்களின் உள் ரகசியங்கள் இப்படித்தான் இருக்கும் என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன். ஆகவே எவராவது உன்னைத் தவறாகப் பார்த்தால், பேசினால், துன்பமிழைத்தால் எளிதில் கடந்து விடுங்கள் என்று புரிய வைக்கிறேன். ஓவியா அதற்கு உதவுகிறார். மிக்க நன்றி ஓவியா! 

காயத்ரி என்று கேரக்டரைப் போல என் வாழ் நாளில் ஒரு பெண்ணை இதுவரை நான் சந்தித்ததே இல்லை. கொடூரத்தின் சாயல்.  தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கியவர்களைக் கழுத்தை அறுப்பார்கள். அதைக்கூட எளிதாகக் கடந்து விடலாம் போல. இப்படியெல்லாம் பெண்கள் இருப்பார்களா என்றொரு கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. தமிழகமே அதிர்ந்து போய் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இந்தப் பெண் எலிமினேஷனுக்கு வரவே இல்லை. அதுதான் அந்தப் பெண்ணின் நரித்தனம்.

விகடனில் வெளியான ஒரு பத்தி கீழே !

ஓவியாவை எப்படியெல்லாம் துரத்தலாம்” என்று காயத்ரி தூங்காமலேயே யோசித்துக் கொண்டிருந்தாரோ என்னமோ, திருப்பள்ளியெழுச்சி பாடல் ஒலிப்பதற்கு முன்பே எழுந்து விட்டார். காலைக்கடன்களில் ஒன்றான புறம் பேசுதலை அப்போதே துவங்கி விட்டார். கூட பிந்துமாதவி.

‘பரணி வெளியேற்றத்தின் போது ஏன் எவருமே தடுக்கவில்லை. வெளியே வந்து குரலாவது தந்திருக்கலாமே?’ என்பது பிந்து மாதவியின் கேள்வி. இது அவருடைய கேள்வி மட்டுமல்ல, பிக் பாஸ் பார்வையாளர்களின் அனைவரின் மனதிலும் இன்னமும்கூட நெருடிக் கொண்டேயிருக்கிற கேள்வி.  

“அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமே?’ என்று பிந்துமாதவி கவலையோடு கேட்டபோது ‘என்ன கால் உடைஞ்சிருக்கும். அவ்வளவுதானே’ என்றார் காயத்ரி. ஒரு நாளின் தொடக்கத்தைக் கூட இத்தனை வன்மத்துடனும் மனிதத்தனம் துளிகூட இல்லாமலும் ஆரம்பிக்க முடியும் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ‘நீங்கள்தானே தலைவர், தடுத்திருக்கலாமே’ என்கிற லாஜிக்கான கேள்வியைப் பிந்து மறுபடியும் கேட்க, அப்போதும் திமிராக ‘அவர் என்ன பேபியா?’ என்றார் காயத்ரி. ‘காயூ பேபி’ என்று மற்றவர்கள் அழைக்கும் போது உச்சி குளிர சிரிக்கும் காயத்ரி, பரணியை ‘பேபியா’ என்கிறார். 

ஓவியா கார்ப்பெட்டை இழுத்ததால் ‘ஜூலிக்கு ஏதாவது ஆகியிருக்கும்’ என்கிற போலிப்பதட்டத்துடன் பஞ்சாயத்து வைக்கிற காயத்ரி, பரணியின் நிலைமையை ரத்தம் x தக்காளி சட்னி என்று அலட்சியமாக அணுகுவது அராஜகமானது. 

திருடர்களின் கூட்டத்தில் புகுந்த உளவாளி போலவே தள்ளியிருந்து நாசூக்காக விசாரணை செய்கிறார் பிந்துமாதவி. இதுவரையான காட்சிகளை அவர் ‘வெளியில்’ இருந்து பார்த்தது காரணமாக இருக்கலாம். 

பரணி முதலிலேயே தப்பித்துவிட்ட பிறகு அந்த வீட்டில் உளைச்சலையும் தனிமையையும் மற்றவர்களின் ஒதுக்குதலையும் அதிகமாக எதிர்கொண்டவர் ஓவியா மட்டுமே. நமக்குக் காணக்கிடைத்த காட்சிகளிலேயே அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டு கோபம் வந்தது. மிகக் குறிப்பாக அவரைத் தூங்க விடாமல் பெண்களின் படுக்கையறையில் காயத்ரி. நமீதா கும்பல் இணைந்து செய்த அடாவடித்தனம். இதுவே இப்படியென்றால் நமக்குக் காட்டப்படாத காட்சிகளில் இன்னமும் என்னவெல்லாம் அவருக்கு அவமானங்கள் தரப்பட்டிருக்கும்? ‘நீ ஒரு ஹேரும் கேட்க மாட்டே’ என்று காயத்ரி குரூரமாகக் கூறுவதைக் கூட ஒரு புன்னகையுடன் கடந்தவர் ஓவியா. ( நன்றி விகடன்)

ஓவியா நல்ல பெண்...! இப்படி ஒரு பெண்ணைப் பார்ப்பது இன்று வெகு அரிதாக இருக்கிறது. ஆச்சரியம்தான்.

இந்த விஷயத்தைக் கடந்து விடலாம்.

பக்கத்து வீட்டில் இந்தியாவின் மிகப் பிரபலமான ஒருவரின் சகலை கெஸ்டாக தங்கி இருந்தார். அவர் சாண்டி என்கிற பெண் நாயை வளர்த்து வந்தார். வீட்டு ஓனரும் அவரும் நண்பராகையாலும், வீட்டு ஓனரும் சேர்ந்து சேண்டியை வளர்த்தனர். அந்த கெஸ்ட் ரூடோஸைப் பார்த்து ஹாய் சொன்னால் சாண்டி அழ ஆரம்பித்து விடும். என்னிடம் சொல்லிச் சொல்லி மாய்வார். அவர் வேலை முடிந்ததும் ஊருக்குச் சென்று விட்டார். வீட்டு ஓனர் வீட்டைப் பூட்டி விட்டு, சாண்டியை வெளியில் விட்டு விட்டுச் சென்று விட்டார். சாண்டி நிறைமாசமாக இருந்திருக்கும் போல. எனக்குத் தெரியாது. காலையில் பார்த்தால் வீட்டு வாசலில் இருக்கும் தென்னை மரத்தடியில் ஏழு குட்டிகளோடு படுத்து பால் கொடுத்துக் கொண்டிருக்கிறது சாண்டி. ஒரு குட்டி வேறு பக்கம் கிடக்க அதை எடுத்து அதன் அருகில் போட்டால் விர்ரென்று சீறியது. அன்று முழுவதும் படுத்தே கிடந்தது. அதற்கு உணவு கொடுத்து, தண்ணீர் வைத்தோம். அழகான கண்கள் திறக்காத ஏழு குட்டிகள். அவைகளுக்கு சண்டி, மண்டி, டியூஸ்டி, வென்னிஸ்டி, தர்ஸ்டி, பிரைடி, சாட்டி என்று பெயர் வைக்கலாம் என பேசிக் கொண்டிருந்தோம்.

சாண்டி இரண்டு நாட்களாக படுத்தே கிடந்தது. ஒரு பிரச்சினையும் இல்லை. நேற்றைக்குப் பிரச்சினை ஆரம்பித்தது. அதற்கு உடம்பில் தெம்பு ஏறியவுடன் அந்தப் பக்கம் யாராவது வந்தால் துரத்த ஆரம்பித்தது.

வீட்டில் வளரும் நான்கு மாத ரூடோஸ் சாண்டியைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தது. அதற்கு சாண்டியைப் பிடிக்கவில்லை. இருப்பினும் சகித்துக் கொண்டது. ரூடோஸ் அடிக்கடி சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தது. சமாதானப்படுத்த வேண்டி இருந்தது. நேற்று காலையில் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்த சாண்டி ரூடோஸ்ஸைக் கழுத்தில் கடித்து விட்டது. மருத்துவரிடம் காட்டி சிகிச்சை முடித்து வீட்டுக் கூட்டி வந்தார் மனையாள். நானும் வீட்டுக்குச் சென்று விட்டேன். ரித்திக் வந்ததும் சாண்டியின் நிலை என்ன ஆகப்போகிறதோ என்ற பதட்டம் ஏற்பட ஆரம்பித்தது. வாசலில் ரூடோஸைக் கட்டி வைத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தேன். சாண்டி நைசாக ரூடோஸைக் கடிப்பதற்கு முயன்று கொண்டே இருந்தது. வீட்டுக்கு தபால் கொண்டு வந்த தபால்காரர் சாண்டியின் அதிர்ச்சித்தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடினார். கேஸ் கொண்டு வந்தவர் அலறிக் கொண்டோடினார். சாண்டி தன் குட்டிகளைக் காப்பதற்காக வீராவேசம் கொண்டு வீரத்தாயாக மாறியது.

மழை பெய்வது போல வானம் இடித்துக் கொண்டிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்தால் சாண்டி தன் குட்டிகளுடன் ரூடோஸ் இடத்துக்கு வந்து விட்டால் ரூடோஸின் நிலை என்னவோ என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தேன். சரியாக பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். அவரிடம் விபரம் சொன்னால் எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை, இந்த வீடே என் வீடு இல்லை என்றுச் சொல்லி நழுவ ஆரம்பித்தார். எனக்கு வந்த டென்சனுக்கு கத்த ஆரம்பித்தேன். அதற்குள் பையன் வந்து விட்டான். ரூடோஸை சாண்டி கடித்து விட்டது என்றதும் தடியைத் தூக்கிக் கொண்டு நிற்கிறான். அவனைச் சமாளித்து இந்தப் பிரச்சினையில் இருந்து எப்படித்தான் வெளிவருவது என்று டென்சன் ஏறிக் கொண்டிருந்தது.

(சாண்டியும் அதன் ஏழு குட்டிகளும்)

வீட்டுக்காரரை கோபமாக எகிறியவுடன் ஒரு வழியாக சாண்டியை நெருங்கி கம்பி போட்டுக் கட்டினார். அவர் தொட்டால் சிவனேன்னு நிற்கிறது. நாங்கள் அருகில் சென்றால் உர்ர்ர்ர் என்கிறது. அவர் எங்கோ பேசி, அவரின் நண்பரின் தோட்ட வீட்டுக்கு குட்டிகளையும், சாண்டியையும் கொண்டு சென்றார். தோட்ட வீட்டில் விட்டு விட்டு திரும்பவும் வீட்டிற்கு வந்தார். அவருடன் நான் பேசவே இல்லை. சாண்டியைக் கட்டிப் போட்டு வளர்த்து அதற்கு உணவிட்டு விட்டு, குட்டி போட்டதும் அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்கிறார் அவர். அதுமட்டுமாவது பரவாயில்லை. அந்த வீடே என் வீடு இல்லை, நான் கெஸ்ட் என்றார். அதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்த வீடு இதுவரைக்கும் அவர் பெயரில் கிரையம் ஆகி உள்ளது. (யார் கிட்டே?)

ஹிந்தி வகுப்பு முடிந்து வந்ததும் ரித்திக்கும், நிவேதிதாவும் ரூடோசுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சேண்டியும், அதன் குட்டியும் வெயிலில் துயரப்படக்கூடாது என்பதற்காக அடியேனால் பின்னப்பட்ட தென்ன ஓலைத் தட்டி சும்மா கிடந்தது. குட்டிகளுக்குப் பால் கொடுத்து விட்டு யாராவது வருகிறார்களா? என்று பார்த்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் சேண்டியின் நினைவு என்னைப் பாடாய்ப்படுத்த ஆரம்பித்தது. இரவில் கனவில் சேன்டி ஒரு குட்டியைக் கவ்விக் கொண்டு வீடு தேடி வருவது போல இருந்தது. தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்து கொண்டேன். விடிகாலையில் தென்னைமரத்தடியில் சேண்டி தன் காலால் சமன் செய்து வைத்த இடம் வெறுமையாக இருந்தது. எனக்குள் ஆற்றாமையும், எரிச்சலும் மண்டியது.

”சாண்டி உன் இயல்பு அது. ஆனால் அது பிறருக்கு கொடுமையாக இருக்கிறதே? நானென்ன செய்ய? என்னை மன்னித்து விடு தாயே!” என்று மனதுக்குள் புலம்ப ஆரம்பித்தேன். இதில் நானென்ன செய்வது? கையாலாகத்தனத்தின் வேதனை தான் மனசெல்லாம் நிரம்பி இருக்கிறது.

Tuesday, July 18, 2017

பிக்பாஸ் கமலின் நியாயம்

காயத்ரி ரகுராம் - கன்ஃபெக்சன் அறையில் எனக்கு சாக்லேட் மில்க் பவுடர் வேண்டுமென்று கேட்ட போது மருத்துவரிடம் செக்கிங்க் செய்த பிறகு கால்சியம் சரியாக இல்லை என்றால் தரப்படும் என்று சொல்லப்படுகிறது. பிறகு மருத்துவரிடம் ஆலோசித்தால் காயத்ரியின் கால்சியம் லெவல் சீராக இருப்பதாகவும் ஆனாலும் இந்த வாரத்தின் குடும்பத்தின் தலைவராக இருப்பதால் அவர் கேட்டதைக் கொடுப்பதாகவும் குரல் ஒலிக்கிறது. வெளியில் வந்த காயத்ரி எனக்கு கால்சியம் லெவல் குறைவாக இருக்கிறது என்றுச் சொல்லி விட்டு, அதனால் பிக்பாஸ் எனக்கு சாக்லேட் மில்க் பவுடர் பாக்கெட் தந்தார் என்கிறார்.

அவர் ஒரு பெண். பெண்கள் எப்போதும் சுய நலமாகத்தான் யோசிப்பார்கள். அதுவும் காயத்ரியின் தந்தை பிரபல நடன ஆசிரியர். தலைக்குள் கொஞ்சம் மமதை ஏறி விடும். இது எல்லோருக்கும் ஏற்படுவதுதான். அதில் தவறில்லை. தன்னை பிறரிடமிருந்து தனிப்படுத்திக் காட்டிக் கொள்வதற்காகவும், பிறர் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவும் காயத்ரி ரகுராம் சாக்லேட் மில்க் பவுடர் கேட்டார். அதைக் கொடுத்தார்கள். அதற்கொரு காரணத்தையும் சொல்லி விட்டார். தன் படுக்கையின் அருகே வெகுபாதுகாப்பாக வைத்துக் கொண்டு அவர் மட்டும் பயன்படுத்தி வருகிறார். இதில் எதுவுமே தவறில்லை.

ஆனால் கமல் செய்த விஷயம் தான் மனதை உறுத்துகிறது. கமல்ஹாசன் கலைத்தாகத்தைப் பற்றி பல செய்திகள் படித்திருக்கிறோம். ஒருவர் ஒரு துறையில் பிரபலமாக இருப்பது என்பது பெரிய விஷயம் இல்லை. தொழில் பக்தியின் காரணமாக மிளிர்வது என்பது சகஜம். தியாகராஜ பாகவதருக்கு மிஞ்சியா கமல் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்? ஆனானப்பட்ட அவரே தன் இறுதியில் என்ன ஆனார் என்பது வரலாறு. 

கோடிக்கணக்கான பேர் டிவி நிகழ்ச்சியைப் பார்க்கின்றார்களே அதில் தீர்ப்புச் சொல்லக்கூடிய இடத்தில் நாம் இருக்கின்றோமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற உறுத்தல் கொஞ்சம் கூடவா இல்லாமல் போகும்?

காயத்ரி ரகுராம் பொய் சொன்ன விசயத்தை அப்பட்டமாக மறைத்தாரே அது என்ன விதமான செயல் என்று தான் எனக்குப் புரியவில்லை. கால்சியம் சீராக இருக்கிறது என்றால் காயத்ரிக்குத் தெரியாதா? அவர் என்ன சின்னப்பாப்பாவா? சீர் என்றால் என்ன என்று சினேகனைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டாராம். அட ஙொய்யாலே, அப்போ இருப்பினும் நீங்க தலைவராக இருப்பதால் தருகிறோம் என்று அந்தக் குரல் சொன்னதே அதை ஏன் இவர் மறந்தார்? அல்லது மறைத்தார் என்று கமலுக்கு மட்டுமே வெளிச்சம்.

ஒரு டான்ஸ் மாஸ்டருக்கு சீராக இருக்கிறது என்றால் என்னவென்று தெரியாதாம்? காயத்ரிக்கு வாயில் கை வைத்தால் கடிக்கவே தெரியாது என்கிறார். அதையும் கமல் ஏற்றுக் கொள்கிறார். உங்க நியாயம் எனக்குப் பிடித்திருக்கிறது மிஸ்டர் கமல்! 

புரொகிராம் முடிந்தவுடன் காயத்ரி அந்த சாக்லேட் மில்க் பவுடரை எடுத்துக் கொடுத்து விடுகிறார். அவருக்கு வேண்டாமாம். அதையும் காட்டினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது என்றால் அது மிகையில்லை. உலகம் அப்படித்தான் இருக்கும். எல்லாமே சரியாக இருந்தால் மனித வாழ்க்கை என்ற ஒன்று இருக்கவே இருக்காது. மக்களிடம் பிரச்சினை இருந்தால் தான் அரசு இருக்கும். பிரச்சினையே இல்லை என்றால் அரசு எதற்கு? ராணுவம் எதற்கு? நாடு எதற்கு? ஒன்றும் தேவையில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தாமதமாகத் தெரியும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் எடிட் செய்யப்பட்டு உடனுக்குடன் தெரிந்து விடுகிறது என்பது போல நம்ப வைக்கப்படுகிறது.

காயத்ரி பொய் சொன்னதில் தவறில்லை. ஆனால் கமல்ஹாசன் அதை சாதுர்யமாக மறைத்தாரே அதுதான் எதற்கு என்று புரியவில்லை.