குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, July 18, 2017

பிக்பாஸ் கமலின் நியாயம்

காயத்ரி ரகுராம் - கன்ஃபெக்சன் அறையில் எனக்கு சாக்லேட் மில்க் பவுடர் வேண்டுமென்று கேட்ட போது மருத்துவரிடம் செக்கிங்க் செய்த பிறகு கால்சியம் சரியாக இல்லை என்றால் தரப்படும் என்று சொல்லப்படுகிறது. பிறகு மருத்துவரிடம் ஆலோசித்தால் காயத்ரியின் கால்சியம் லெவல் சீராக இருப்பதாகவும் ஆனாலும் இந்த வாரத்தின் குடும்பத்தின் தலைவராக இருப்பதால் அவர் கேட்டதைக் கொடுப்பதாகவும் குரல் ஒலிக்கிறது. வெளியில் வந்த காயத்ரி எனக்கு கால்சியம் லெவல் குறைவாக இருக்கிறது என்றுச் சொல்லி விட்டு, அதனால் பிக்பாஸ் எனக்கு சாக்லேட் மில்க் பவுடர் பாக்கெட் தந்தார் என்கிறார்.

அவர் ஒரு பெண். பெண்கள் எப்போதும் சுய நலமாகத்தான் யோசிப்பார்கள். அதுவும் காயத்ரியின் தந்தை பிரபல நடன ஆசிரியர். தலைக்குள் கொஞ்சம் மமதை ஏறி விடும். இது எல்லோருக்கும் ஏற்படுவதுதான். அதில் தவறில்லை. தன்னை பிறரிடமிருந்து தனிப்படுத்திக் காட்டிக் கொள்வதற்காகவும், பிறர் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவும் காயத்ரி ரகுராம் சாக்லேட் மில்க் பவுடர் கேட்டார். அதைக் கொடுத்தார்கள். அதற்கொரு காரணத்தையும் சொல்லி விட்டார். தன் படுக்கையின் அருகே வெகுபாதுகாப்பாக வைத்துக் கொண்டு அவர் மட்டும் பயன்படுத்தி வருகிறார். இதில் எதுவுமே தவறில்லை.

ஆனால் கமல் செய்த விஷயம் தான் மனதை உறுத்துகிறது. கமல்ஹாசன் கலைத்தாகத்தைப் பற்றி பல செய்திகள் படித்திருக்கிறோம். ஒருவர் ஒரு துறையில் பிரபலமாக இருப்பது என்பது பெரிய விஷயம் இல்லை. தொழில் பக்தியின் காரணமாக மிளிர்வது என்பது சகஜம். தியாகராஜ பாகவதருக்கு மிஞ்சியா கமல் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்? ஆனானப்பட்ட அவரே தன் இறுதியில் என்ன ஆனார் என்பது வரலாறு. 

கோடிக்கணக்கான பேர் டிவி நிகழ்ச்சியைப் பார்க்கின்றார்களே அதில் தீர்ப்புச் சொல்லக்கூடிய இடத்தில் நாம் இருக்கின்றோமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற உறுத்தல் கொஞ்சம் கூடவா இல்லாமல் போகும்?

காயத்ரி ரகுராம் பொய் சொன்ன விசயத்தை அப்பட்டமாக மறைத்தாரே அது என்ன விதமான செயல் என்று தான் எனக்குப் புரியவில்லை. கால்சியம் சீராக இருக்கிறது என்றால் காயத்ரிக்குத் தெரியாதா? அவர் என்ன சின்னப்பாப்பாவா? சீர் என்றால் என்ன என்று சினேகனைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டாராம். அட ஙொய்யாலே, அப்போ இருப்பினும் நீங்க தலைவராக இருப்பதால் தருகிறோம் என்று அந்தக் குரல் சொன்னதே அதை ஏன் இவர் மறந்தார்? அல்லது மறைத்தார் என்று கமலுக்கு மட்டுமே வெளிச்சம்.

ஒரு டான்ஸ் மாஸ்டருக்கு சீராக இருக்கிறது என்றால் என்னவென்று தெரியாதாம்? காயத்ரிக்கு வாயில் கை வைத்தால் கடிக்கவே தெரியாது என்கிறார். அதையும் கமல் ஏற்றுக் கொள்கிறார். உங்க நியாயம் எனக்குப் பிடித்திருக்கிறது மிஸ்டர் கமல்! 

புரொகிராம் முடிந்தவுடன் காயத்ரி அந்த சாக்லேட் மில்க் பவுடரை எடுத்துக் கொடுத்து விடுகிறார். அவருக்கு வேண்டாமாம். அதையும் காட்டினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது என்றால் அது மிகையில்லை. உலகம் அப்படித்தான் இருக்கும். எல்லாமே சரியாக இருந்தால் மனித வாழ்க்கை என்ற ஒன்று இருக்கவே இருக்காது. மக்களிடம் பிரச்சினை இருந்தால் தான் அரசு இருக்கும். பிரச்சினையே இல்லை என்றால் அரசு எதற்கு? ராணுவம் எதற்கு? நாடு எதற்கு? ஒன்றும் தேவையில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தாமதமாகத் தெரியும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் எடிட் செய்யப்பட்டு உடனுக்குடன் தெரிந்து விடுகிறது என்பது போல நம்ப வைக்கப்படுகிறது.

காயத்ரி பொய் சொன்னதில் தவறில்லை. ஆனால் கமல்ஹாசன் அதை சாதுர்யமாக மறைத்தாரே அதுதான் எதற்கு என்று புரியவில்லை. 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.