குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, July 7, 2017

இறைவனின் கண்ணீர்

மனிதனுக்கு பகுத்து அறியும் அறிவு இருப்பதினாலே அவன் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அனுபவத்தின் அறிவு கிடைக்கும் போது எல்லாமும் முடிந்து சமூகத்தில் இருந்து ஒதுங்கி விடுகிறான். பிறகு புலம்புகிறான். இறந்து போகின்றான்.

தற்சமயம் தமிழ் நாட்டில் (எவன் சொன்னான்னு தெரியவில்லை?) பிரபலமாக இருப்பது “பிக் பாஸ்” என்ற நிகழ்ச்சி என்கிறார்கள். யூடியூப்பில் பிக் பாஸும் சீமானும் டிரண்டில் இருக்கின்றார்கள். சீமானின் நாம் தமிழர் கட்சி படு வேகமாக வளர்கிறது என்றும் சொல்லிக் கொள்கின்றார்கள். பிக் பாஸில் ஜூலியான டிரண்ட் என்கிறார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு சில தடவைப் பார்த்திருக்கிறேன். காயத்ரி என்றொரு பெண்(?????). அந்தப் பெண்ணின் மூளைக்குள் இருப்பது ஒன்றே ஒன்றுதான் - ஈகோ. உடம்பு, மனசு முழுவதும் ஈகோ. இதனால் அவருக்குக் கிடைப்பது என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை. அந்த ஈகோவிற்காக அவர் வாழ்கிறார். அவரின் முழு மனித தன்மை அவரிடமிருந்து விலகி ஓடி விட்டது. அவர் எந்த நொடியும் எந்தப் பொழுதும் தனக்காக என்றொரு வாழ்க்கையை வாழவே இல்லை. 

கஞ்சா கருப்பு - கஞ்சா இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு போதைப் பொருள். அதை தன் பெயரோடு இணைத்துக் கொண்டவரிடம் மனிதத் தன்மை இருக்குமா என்று எதிர்பார்ப்பது வீண்.

சக்தி - இயக்குனர் வாசுவின் மகனாக இல்லை என்றால் ஒரு தெரு நாய் கூட இவரைத் திரும்பிப் பார்க்காது. அது ஒன்று தான் இவருக்கான தகுதி. ஆனாலும் மனசு முழுக்க அகங்காரம். தன் நிலை மறந்து வாழும் ஒரு ஜீவாத்மா.

ஓவியா, ரைசா, ஜூலி, பரணி, வையாபுரி, நமீதா, அனுயா, ஆர்த்தி, ஸ்ரீ, கணேஷ், சினேகன் (டயனமிக் திருமணப் புகழ்), ஆரார் - இவர்களைப் பற்றி நீங்களே நான் எப்படி அவதானித்துள்ளேன் என அவர்களையும் அவதானித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் யோசியுங்கள். உங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு நொடியும் நம்மிடமிருந்து போவது நம் வாழ் நாளும் இளமையும். ஆனால் அடைவது அனுபவம். குழந்தைப் பருவத்திலிருந்து இது நாள் வரையிலும் நம்மை வாழவே விடாமல் பலரின் சிந்தனைகளுக்காக, வழிகாட்டுதலுக்காக, பிறரின் மூளையை நம் மூளைக்குள் திணித்துக் கொண்டு அந்த வழியாகவே வாழ்ந்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம். உண்மையாக நமக்காக வாழ்ந்து வந்திருந்தால் கோபம், தாபம், எரிச்சல், பொறாமை இன்னும் என்னென்னவோ பிரச்சினைகள் எதுவும் இன்றி வாழ்ந்து வந்திருக்கலாம். ஆனால் சமூகத்தின் கட்டுப்பாடு என்ற பெயரில் தனி மனிதன் தன் இயல்பு மறைந்து, தன் நிலை மறந்து வேறு எவருக்காகவோ வாழ்ந்து வருகின்றான். யோசித்துப் பாருங்கள்.

திரு மூலர் அன்றே எழுதி வைத்துச் சென்றார். நீயே கடவுள் என்று. எவரும் நம்புவதும் இல்லை. அதைப்பற்றிச் சிந்திப்பதும் இல்லை. இங்கே இந்த வீடியோவைப் பாருங்கள். கடவுளின் கண்ணீர் என்ற ஒன்று உங்களுக்குத் தெரிய வரும். இந்த மனது உங்களிடம் இருக்கிறதா? அவ்வாறு இருந்தால் நீங்களும் கடவுளே!


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.