குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 29, 2011

யாரோ ஒரு பெண்ணின் தொலைபேசி அழைப்பிற்கான பதில்


(பிளாக் மேஜிக் என்றுச் சொல்லக்கூடிய மந்திரங்கள் எல்லாம் ஏமாற்று வேலை என்பதைப் பல அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்லி இருக்கின்றன. ஆனால் மனித குலம் இன்றும் ஏமாற்றுக்கலையான மந்திர, வசியங்களை நம்பிக் கொண்டிருப்பது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைப் பற்றிய சிறிய விளக்கம் தான் இது )

நேற்று மதியம் சென்னையில் இருந்து ஒரு பெண் போனில் தொடர்பு கொண்டாள். ”எனக்கொரு உதவி வேண்டும் சார், செய்வீர்களா” என்றார். அவரைப் பற்றிச் சொல்லும் படி கேட்டேன்.

இரண்டு வருடமாய் ஒருவரைக் காதலித்து வந்திருக்கிறார். அந்தக் காதலர் இவரைக் காதலித்துக் கொண்டே வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார். அதைத் தெரிந்துகொண்ட இப்பெண் காவல்துறை வரையும் சென்றிருக்கிறார். பலரிடமும் அவரின் காதலருடன் சேர உதவி செய்யும் படி கேட்க, எவரும் உதவி செய்ய மாட்டேன் என்கிறார்கள் என்றார். இன்னும் கொஞ்சம் விசாரிக்க, நான் எழுதிய மந்திரம், வசியம் என்பதை அவர் சொல்ல, அப்பெண் எங்கு வருகிறார் என்று புரிந்து கொண்டேன். 

வசியம் போட்டாவது அவரின் காதலரை வேறொரு பெண்ணிடமிருந்து பிரித்து, அவருடன் சேர்த்து வைக்க முயல்கிறார் அவர் என்பதை அறிந்து கொண்டேன். அடப்பாவமே என்று தோன்றியது.

நீங்கள் இன்னும் 40 வருடம் உயிரோடு இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்த 40 வருடத்தில் 10 வருடம் தூக்கத்திலும், இன்னும் 5 வருடங்கள் டிராவல், துணி, சமையல் இவற்றில் போய் விடும். மீதி இருக்கும் காலம் தான் உங்களுடையது. உங்களை விலக்கி வைத்திருப்பவர்களை நீங்கள் விலக்கி விடுங்கள்.

உங்களை வேண்டாமென்று நினைக்கும் ஒருவருடன் நீங்கள் எப்படி சந்தோஷமாய் வாழ முடியும்? சொல்லுங்கள் பார்ப்போம். 

சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது, ஓரமாய் இருவர் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே சென்றிருப்பீர்கள் அல்லவா, அதைப் போல உங்களுக்கு நடந்த சம்பவங்களை கடந்து போய் விடுங்கள். 

வீட்டின் சமையலறையில் வைத்திருக்கும் குப்பைத் தொட்டியை தினமும் கிளீன் செய்யவில்லை என்றால் எப்படி நாற்றமடிக்கும். அதே போல மனதில் கடந்து போன நிகழ்ச்சிகளின் குப்பையை வைத்திருந்தீர்கள் என்றால் நாற்றமடிக்கும் அல்லவா? வீசி எறியுங்கள்.

உங்கள் அம்மா, அப்பாவிடம் சொல்லி நல்ல பையனாகப் பார்த்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாய் வாழுங்கள்” என்றுச் சொல்லி கட் செய்தேன்.

மந்திரம் கால் மதி முக்கால் என்றுச் சொல்வார்கள். மந்திரத்தில் மாங்காய் வர வைக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். மந்திரம் என்பதெல்லாம் இக்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று. எனக்குத் தெரிந்த பல கிராமங்களில் மந்திரம் செய்வோர் “வசிய மருந்து” என்றுச் சொல்லி ஒரு வஸ்துவைக் கொடுப்பார்கள். அது வயிற்றுக்குள் சென்றால், சாப்பிட்டவன் கதி அதோகதியாகி விடும். யார் மருந்து போட்டார்களோ அவர்களுக்கு மதி மயங்கி, மருந்து போட்டவர்கள் சொல்வதை எல்லாம் செய்ய மாட்டார்கள் என்றுச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சகோதரியே, வாழும் காலம் கொஞ்சம் தான். உங்களைப் போன்ற பெண்கள் ஆக்கச் சக்திகள். உயிரைப் படைக்கும் பிரம்மாக்கள் நீங்கள். கடவுளுக்கு ஒப்பானவர்கள். நீங்கள் பலரை வாழ வைக்க வேண்டும். பழி வாங்க நினைக்கக் கூடாது. பெண் என்பவர் இல்லையென்றால் பூமியே இல்லை. மனிதர்களும் இல்லை. சில கேடுகெட்ட ஆண்கள் இருக்கத்தான் செய்வார்கள். தீயவர்கள் இல்லையென்றால் உலகமே இயங்காது சகோதரி. நல்லவர்களும் வேண்டும், தீயவர்களும் வேண்டும். அப்போது தான் உலகத்தின் சமன்பாடு சரியாகும் சகோதரி. நீங்கள் தவறான முடிவுக்குச் செல்ல வேண்டாம் சகோதரி.

தினமும் கடவுளை ஒரு முறையாவது நினைப்பேன். அப்போது அவரிடம் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன். என்றாவது ஒரு நாள் நீங்கள் என்னிடம் சந்தோஷமாய் வாழ்கிறேன் சார் என்றுச் சொல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

வாழ்க வளமுடன் சகோதரி !

பிரியங்களுடன், ஆசீர்வாதங்களுடன்,
சகோதரன் கோவை எம் தங்கவேல்

* * *

Sunday, September 25, 2011

நவீன அம்மாக்களும் பழமைவாத அம்மாக்களும்

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. அதைப் பற்றி உங்களிடம் சொல்லி ஆக வேண்டி இருக்கிறது.

உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவில் 23% சதவீதம் என்கிறது ரிப்போர்ட். 670,000 குழந்தைகள் பிறந்த ஆறு நாட்களுக்குள் இறந்து விடுகின்றனவாம்.16,47,000 ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் இறந்து விடுகின்றனவாம். முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இறப்பு விகிதம் குறைந்து விட்டாலும் ஏன் இன்னும் இப்படியான இறப்புக்கள் உண்டாகின்றன என்பதை யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை.

நேற்று, எப்போதும் பிறரைப் பேசவிடாமல், தானே பேசிக் கொண்டிருக்கும் மதிப்புமிக்க திருகோபி நாத் அவர்களின் நீயா நானா புரோகிராம் ஒன்றினை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. இந்தக் கால அம்மாக்கள், அந்தக்கால அம்மாக்கள் என்ற புரோகிராம் அது. இந்தக்கால அம்மாக்கள் எல்லோரும் டிரஸ் கோடினால் பார்வையாளனின் பார்வையை மாற்றிக் கொண்டிருந்தார்கள். நடிகைகள் எல்லாம் தோற்றுப் போவார்கள் போங்கள். அப்படி ஒரு மாடர்ன் டிரஸ் கோட். ஒரு ஆய்வு சொல்கிறது பெண்களின் கவர்ச்சி உடையால்தான் பெரும்பாலான செக்ஸ் சம்பந்தமான குற்றங்கள் நடக்கின்றன என்று. இதை வலியுறுத்துவது போல, இன்றைய வாரமலர் இது உங்களிடம் என்ற ப்குதியில் ஒரு தாய் தனது அனுபவத்தை எழுதி இருந்தார். கீழே இருக்கும் இணைப்பில் கிடைக்கும் அந்த அனுபவத்தை படிக்கலாம்.


இந்தக்கால அம்மாக்களின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் பத்தாம் பசலித்தனமாக இருந்தது. அதற்கு ஒரு உதாரணம் ஒரு அம்மா தன் மகள் அவள் பிரண்டு சாக்லேட் கொண்டு வருகிறாள் என்பதைச் சொல்லி அழுவதால், இவரும் மகளுக்கு சாக்லேட்ஸ் கொடுத்து அனுப்புகிறாராம். இதே ஐந்து வயதுக் குழந்தை ”ஃபக்” பண்ண வேண்டும், எனக்கொரு பையனை ஏற்பாடு செய்து கொடு என்று அழுதால் இந்த அம்மா செய்து கொடுப்பாரா? என்று தெரியவில்லை. இந்தக்கால அம்மாக்கள் அதைச் செய்தாலும் செய்வார்கள் போல.

பெண் என்பவள் பூமி போல என்பார் எனது சாமியார் நண்பர். அந்தப் பூமியில் விளையும் செடிகளான பிள்ளைகள் நலமோடு, வளமோடு இருக்க வேண்டுமெனில் அப்பூமி, நல்ல பூமியாக இருக்க வேண்டும். இந்தக்கால அம்மாகள் வரண்டு போன பாலை வனமாய் இருப்பதை, அந்த புரோகிராம் எனக்கு காட்டியது.

மனிதனுக்கு ஏன் நோய் வருகிறது என்று கேட்டுப்பாருங்கள். எவருமே உணவினைக் காரணம் சொல்லவே மாட்டார்கள். பல்வேறு காரணங்களைச் சொல்வார்கள். பிள்ளைகள் தூங்கும் போது இடுப்பில் டயப்பர் கட்டி விடுவதை இன்றைய ஃபேஷனாக இருக்கிறது. அது பல்வேறு வகையான தொற்று நோய்களை உருவாக்கும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 

இந்தக்கால அம்மாக்கள் காசுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தன் பிள்ளைகளின் மீது காட்டுவதே இல்லை. என் வீட்டின் அருகில் இருக்கும் பத்தாவது படிக்கும் பெண், மாலை நேரங்களில் இன்னும் மீசை கூட முளைக்காத பையனுடன் காதல் செய்து கொண்டிருக்கிறாள். அவனும் இவளும் கிசு கிசுவென்று அங்குமிங்கும் பார்த்தபடியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். முத்தமிடுகிறார்கள். இவளின் அம்மா காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்புகிறார். அப்பாவோ எதைப் பற்றியும் கண்டு கொள்வதில்லை. ஏன் இப்படியாகிறது சமூகம்? யார் இதற்கு காரணம்? என்ன பிரச்சினை?

குழந்தை பிறந்த ஆறு நாட்களுக்குள் இறக்கிறது என்றால், அதற்கு என்ன காரணம்? விஷ உணவினைத் தவிர, கேடு கெட்ட உணவுகளால் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? ஆனால் யாரும் அதைப் பற்றி கவலைப்படுவது இல்லை. உணவு பற்றிய அறிவே எவரிடத்திலும் இல்லை.

என் மகனுக்கு பிள்ளைப் பேறு பணிவிடை பார்த்தது என் அம்மா. மகனுக்கு ஒன்றரை வருடம் வரையில் எந்த நோயும் வந்ததே இல்லை. என் மகளுக்கு பிள்ளைப் பேறு பார்த்தது என் மாமியார். நான்கு மாதத்திலே டாக்டரிடம் செல்ல வேண்டி இருந்தது. இது பற்றிய ஒரு பதிவை முன்பே எழுதி இருக்கிறேன்.

என் அம்மா சீரக ரசமும், முருங்கைக்காய் குழம்பும், உணவுக்கட்டுப்பாடும் கொடுத்து வந்தார். ஆனால் மாமியாரோ குழந்தை பிறந்த இரண்டாவது நாளே சிக்கன் கொண்டு வந்து கொடுத்தார்.

எனது உறவுக்கார பெண்ணின் குழந்தை இறந்தே பிறந்தது? ஏன் தெரியுமா? அவளின் உணவுப் பழக்கம். காலையில் ஒரு செம்பு சுண்டக்காய்ச்சிய பால், இரவில் அதே போல. பத்து இட்லி அதற்குச் சட்னி, இடையிடையே பழங்கள், மட்டன், மீன், இறால், நண்டு என்று அவள் சாப்பிட்டதை கணக்கில் கொள்ளவே முடியாது. உப்பு நீர், பிரஷர், சுகர் என்று அனைத்தும் வர, மருத்துவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். ஆனால் அவள் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலையேபடவில்லை. அவளின் கணவனுக்கோ அதைப் பற்றிய எந்த ஒரு அறிவும் இல்லை. பிரசவமாகும் சமயத்தில் கூட சூட்டினைக் கிளப்பும் நண்டு வறுவலும், இரால் வறுவலும் சாப்பிட்டிருக்கிறாள். முடிவு குழந்தை இறந்து விட்டது.

அந்தக்கால அம்மாக்களின் கை வைத்தியப் பக்குவங்கள் இன்றைக்கு எந்தப் பெண்களிடம் கிடையவே கிடையாது. எதற்கெடுத்தாலும் “டாக்டர்” வேண்டும். குழந்தையைக் குளிப்பாட்டக் கூட நொச்சி இலை பயன்படுத்துவார்கள் அந்தக்காலத்தில். துளசிசாற்றினை வாரம் ஒரு முறை அம்மா, நான் கதறக் கதற மூக்கினைப் பிடித்துக் கொண்டு வாய்க்குள் ஊற்றுவார்கள். அப்பக்கோவைத் தழையின் சாறு, கற்றாழைச்சாறு என்று என் அம்மா, எனக்கு கொடுத்த தாவர உணவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. சாப்பிடுவது குறைவது போலத் தோன்றினால் “பிரண்டைத் துவையல்” வந்து விடும். நன்கு காய்ச்சியக்கூழில் பழைய சாதம், தயிர் கலந்து நன்கு கரைத்து தம்ளரில் ஊற்றித் தருவார்கள். தொட்டுக்கொள்ள கருவாட்டுக் குழம்பின் கத்தரியை தருவார்கள். மூன்று தம்ளரை முக்கி முக்கியாவது குடிக்க வேண்டும். ஆனால் அதற்கு அவசியமில்லாமல் கருவாட்டுக் குழம்பின் கத்தரிக்காய் நான்கு தம்ளர் வரை கொண்டு வந்து விடும்.

விதை நெல் முளை கட்டியதைக் கொண்டு வந்து அடுப்பில் வைத்து சூடாக்கி, அதை உரலில் போட்டு இடித்து அவலாக்கி, புடைத்து அத்துடன் தேங்காய் சேர்த்து தருவார்கள். உடம்பிற்கு ஏதாவது கெடுதி வருமா? சொல்லுங்கள் பார்ப்போம்?

எனக்கு கல்யாணமாகி குழந்தைப் பிறந்தவுடன் கூட, நான் குறைவாகச் சாப்பிடுகிறேன் என்று எங்கெங்கோ தேடி அலைந்து பிரண்டையை கொண்டு வந்து துவையல் செய்து கொடுத்தார்கள். ஒவ்வொரு நோய்க்கும் காய்கறிகள், இலைகள் இருக்கின்றன. சில பக்குவங்கள் இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் எந்த வித அறிவும் இன்றி இன்றைய கால அம்மாக்கள் இருப்பதால், தான் அறியாமலே தன் குழந்தைகளைக் கொல்லும் எமனாக மாறி வருகின்றார்கள். ஒரு கோக் குடித்தால் உடம்பு ஆயிரமாயிரம் சம்பட்டி அடிகளை வாங்குவதற்கும் மேலாக அவஸ்தைப் படுமாம். யார் கேட்கின்றார்கள். எங்குப் பார்த்தாலும் கோக் பாட்டில்களைக் கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய மக்கள்.

எனது தோழி ஒருத்தியின் மகள் எட்டு வயதில் பூப்படைந்தாள். அக்குழந்தையின் தினசரி உணவு “ பிராய்லர் சிக்கன்”. எத்தனையோ முறை அவ்வுணவு வேண்டாம் என்றுச் சொன்னேன். கேட்கவில்லை. இன்று அக்குழந்தை மனதுக்குள் குமைந்து குமைந்து அழுதுகொண்டிருக்கிறது.

கேடு கெட்ட நாகரீகம் மனிதனைக் கொல்கிறது. அதைத் தான் வாழ்வியல் அர்த்தமாக மீடியாக்கள் காட்டுகின்றன. அம்மாக்கள் தங்கள் குழந்தைகளைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்.

மாற வேண்டும் இந்த நிலை. மாற வேண்டியது பெண்களும் ஆண்களும்.

* * *




புத்தம் புதிய வீடுகள் இவை. இதே இடத்தில் நான்கு செண்டில் கூட வீடு ஒன்று இருக்கிறது. அது 32 லட்சம் விலையாகும். லோன் வசதியும் இருக்கிறது. டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கிளீன். வீடு வேண்டுவோர் விரைவில் புக்கிங் செய்து கொள்ளவும்.

* * *


Friday, September 23, 2011

சிக்க வைக்கும் சில தூண்டில்கள்


ஃபெமோ மாடலிங் கம்பெனியைச் சேர்ந்த மாடல் ஒருவருக்கு சினிமா ப்ராஜெக்ட் ஒன்றிற்காக டெல்லியில் இருந்து சென்னை வர, ஏர் இந்தியாவில் டிக்கெட் புக் செய்திருந்தேன். டிக்கெட்டில் எனது நம்பரைக் கொடுத்து வைத்திருந்தேன். 6.10க்கு கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா ஃப்ளைட் சரியாக 10.55க்குத்தான் கிளம்பியது. அதற்குள் சென்னையில் ரிசீவ் செய்ய சென்றிருந்தவர், போனில் அழைத்து சரியான ரகளை. ஏர் இந்தியா வழங்கும் சர்வீஸ் எத்தகையது என்று நேற்று எனக்குப் புரிந்தது.

திரும்ப மாடல் டெல்லிக்கு கிளம்ப டிக்கெட்டைக் கையில் கொடுத்து, செக்கின் செய்து விட்டு, நண்பரும் வீட்டிற்கு திரும்ப வந்து விட்டார்.

ஒரு வழியாக வேலை முடிந்து விட்டது என்று ஆசுவாசப் பட்ட அடுத்த சில நொடிகளுக்குள் அது எப்படி அத்தனை எளிதாக முடியும் என்பது போல, ஒரு போன் கால் வந்தது.

யாரென்று கேட்டேன். மாடல் பெயரைச் சொல்லி, அவர் எங்கே என்று கேட்டார். என்ன விஷயம் என்றேன். அவரின் பேக் ஒன்று மிஸ்ஸாகி எங்களிடம் இருக்கிறது. அதை அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றார். நண்பரை அழைத்தால் ஆள் போன் எடுக்கவே இல்லை. என்ன ரகளையடா இது என்று டென்ஷனாகி மாடலை அழைத்து, உனது பேக் ஏதாவது மிஸ்ஸாகி விட்டதா என்று கேட்டேன். இல்லையே என்றாள் அவள்.

”உன் பேக் ஏர்போர்ட் அத்தாரியிடம் இருக்கிறது என்று போன் வந்திருக்கிறது, உன் லக்கேஜை மிஸ் பண்ணி விட்டாயா? ”என்று கேட்டேன்.

”அதெல்லாம் ஒன்றுமில்லையே” என்றுச் சொன்னவள், ”அயாம் ஸ்கேர்டு” என்று கதற ஆரம்பித்தாள். எனக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது. மாடல் அமெரிக்கன் ஆங்கிலம் பேசுகிறாள். எனக்கோ நம்ம தமிழ் ஆங்கிலம் தான் புரியும். அவசரத்தில் அவள் பேசுவதைப் புரிந்து கொள்வது என்பது எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. 

அதன் பிறகு அழைத்திருந்த நம்பரை மீண்டும் தொடர்பு கொண்டு, என்ன பேக், நீங்கள் யார் என்று கேட்ட போது தான் அந்த ஆள் ஏதோ பிரச்சினைக்கு அடிப்போடுகிறான் என்றுத் தெரிந்தது. கேரி பேக்கில், சில கேரி பேக்குகள் இருக்கின்றனவாம்,  அதை அவளிடம் கொடுக்க வேண்டுமாம். ஆகையால் அவளின் தொடர்பு எண்ணைக் கொடு என்றான். எனக்கு விர்ரென்று கோபம் தலைக்கேறியது. அவன் டிக்கெட்டில் இருந்த நம்பரை எப்படிக் கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை. அவன் சென்னை ஏர்போர்ட்டைச் சேர்ந்தவன் தானா என்பதும் தெரியவில்லை.

”ஐ வில் செண்ட் மை கலீக் டுமாரோ டு கலெக்ட் பேக்” என்றுச் சொல்லிக் கட் செய்தேன். யார் அந்த ஆள்? எதற்காக போன் செய்தான் என்பதையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்தால் வேறு எந்த வேலையையும் பார்க்க முடியாது அல்லவா? ஆகையால் விட்டு விட்டேன். அதற்குள் மாடல் பல முறை எனக்கு அழைக்க, நான் அவளிடம் சொன்னேன்.

நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் அல்லவா, அதனால் உன்னுடன் பேச முயன்றிருப்பான் போல”. கேட்டதும் சிரி சிரியென்று சிரித்தாள் மாடல்.

டெல்லியில் இருந்து போன் வந்தது. “ ரீச்டு” என்ற குரலைக் கேட்டதும் தான் தூங்கவே சென்றேன்.

* * *

தமிழ் பேசத் தெரிந்த ஆண்கள், பெண்கள் எங்களது இணையதள முகவரியில் இலவசமாய் பதிவு செய்து கொள்ளவும். தமிழ் பட வாய்ப்புகளைப் பெற உதவுகிறோம். 

இணையதள முகவரி : http://www.femo.in

Sunday, September 18, 2011

ஒரு சிறுவனின் தமிழர்களுக்கான முதல் உண்ணாவிரதப் போராட்டம்



( மகன் ரித்திக் நந்தா)

மனித உரிமைகள் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பொழுது மகனும் வருகிறேன் என்றான். நாம் எதற்காகச் செல்கிறோம், ஏன் இன்றைக்கு உண்ணாவிரதம் இருக்கிறோம் என்ற விபரங்களைச் சொன்னேன். அமைதியாய் கேட்டுக் கொண்டான். தமிழ் நாடு ஹோட்டல் அருகில் இருந்த போராட்டப்பந்தலில் சென்று அமர்ந்தோம். அருகில் உட்கார்ந்து அமைதியாய் அங்கு நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். “அப்பா, நீ பேசுவாயா?” என்று அடிக்கடிக் கேட்டுக் கொண்டிருந்தான். பல கட்சிகளைச் சார்ந்தவர்களும் வந்து ஆதரவு தெரிவித்துப் பேசிச் சென்றனர். கூட்ட அமைப்பாளர் பேசியே தீர வேண்டுமென்றுச் சொல்லி விட்டார். இதுவரை மைக்கில் பேசியது இல்லை என்பதால் கொஞ்சம் பயமும், படபடப்பும் சேர்ந்து கொண்டது. மாலையில் பேச அழைத்தார்கள். கன்னிப் பேச்சினை ஆரம்பித்தேன்.

சுருக்கமாய் அதன் வடிவம் கீழே 

“உலகம் தீயவர்களால் நடத்தப்படுகிறது, நல்லவார்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் கொல்கிறார்கள், எப்படி பிரச்சினை ஆரம்பித்தது என்று யாரும் சொல்லவில்லை. 2100 ஆண்டுகளுக்கு முன்பே எல்லாளன் என்ற தமிழ் மன்னன் அனுராதாபுரத்தினை தலைமையாகக் கொண்டு ஆட்சி செய்திருக்கிறான் என்று வரலாறு சொல்கிறது. அதுமட்டுமல்ல கி.பி 10 - 11 நூற்றாண்டுகளில் சோழர் ஆட்சிதான் நடைபெற்று வந்திருக்கிறது. தமிழர்கள் இலங்கையில் சமபகுதிகளில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆவணங்கள் தானிது. தமிழர்களிடமிருந்து ஆட்சியைப் பிரிக்க வேண்டுமென்பதற்காக பிரிட்டிஷார் இலங்கைக்கு விடுதலை கொடுத்த போது, சிங்களவனிடம் கொடுத்துச் சென்றான். அதன்பிறகு பிரச்சினை ஏற்பட்டது. 1955ம் வருடம் களனி என்ற இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையில் இனி சிங்களம்தான் ஆட்சி மொழி என்ற தீர்மானத்தை நிறைவேற்ற, அன்றிலிருந்துதான் தமிழர்கள் போராட ஆரம்பித்தனர். வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்ரீ என்னும் எழுத்தை பதிக்க வேண்டுமென்ற உத்தரவினை எதிர்த்துப் போராடியவர்கள் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.நான்காம் உலகத் தமிழ் மாநாட்டின் பரிசளிப்பு விழாவின் போது, சிங்கள போலீஸார் மின்சாரக் கம்பிகளில் சுட்டு அறுந்து விழ வைத்து, ஒன்பது பேரைக் கொன்ற நிகழ்வுதான் அடுத்த ஆரம்பம். சிறு நிலப்பகுதியில் வாழும் சிங்களர்கள் உலகெங்கும் பெரும்பான்மை இனமாக வாழும் தமிழர்களை எந்த வித பயமின்றிக் கொல்கிறார்கள் என்றால் என்ன காரணம்? தமிழர்கள் ஜாதி, மதம், இனம், மொழி, பணம், பகட்டு, அகம்பாவம் போன்றவற்றினால் பிரிந்து கிடக்கின்றனர். மனிதாபிமானம், இரக்ககுணம் இன்றி வாழ்கின்றார்கள். அதனால்தான் சிறுபான்மை இனத்தவரான சிங்களவர்கள் பெரும்பான்மை இனத்தவரான தமிழர்களைக் கொன்று குவிக்கின்றார்கள். உடனடித் தேவை தமிழர்களிடம் ஒற்றுமை. அது இருந்தால் சிங்களவர்கள் காணாமல் போய் விடுவார்கள். அரசியலில் என்னென்னவோ நடந்து முடிந்தன. அதுவெல்லாம் நமக்குத் தேவையில்லை. இன்றைக்கு மாண்புமிகு அம்மா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றார்கள். அதை இந்திய அரசு செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று மனித உரிமைகள் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” 

மனிதப் பிறப்பு என்பது பிறருக்கு நன்மை செய்யத்தான் உருவாக்கப்பட்டது எனலாம். குழந்தையாக இருக்கும் போதும், வளர்ந்த பிறகும்,இளைஞனாக இருக்கும் போதும், குடும்பஸ்தனாக இருக்கும் போதும், வயதான போதும் எப்போதும் பிறரின் உதவியோடுதான் அவன் பிழைத்திருக்க வேண்டும் என்கிறது சமூக வாழ்வியல் முறை. தனி மரம் தோப்பாகாது என்பார்கள். அது மனிதனின் வாழ்க்கையில் முற்றிலும் உண்மையான ஒன்று.

அதை எனது மகனுக்கு உணர்த்த வேண்டிய முயற்சியில் ஆரம்பகட்ட அடி எடுத்து வைத்திருக்கிறேன். மாலையில் ”அப்பா பசிக்குது” என்றுச் சொல்ல,  மனசு கலங்கி விட்டது. அவனிடம் சில இலங்கைச் சிறார்களின் கதைகளைச் சொன்னேன். கேட்டுக் கொண்டிருந்தான்.பின்னர் பேசாமல் உட்கார்ந்து கொண்டான். கூட்டம் முடியும் வரை பசிக்குது என்றுச் சொல்லவே இல்லை. 

* * *

Friday, September 16, 2011

பற்பசையில் சிறந்தது எது?



2006இல் எடுக்கப்பட்ட ஒரு சர்வே இந்திய பற்பசை மார்கெட்டில் பற்பசை விற்பனை 2200 கோடி ரூபாய் என்று சொல்கிறது. இந்தியாவில் கோல்கேட் பிராண்ட் பற்பசை மார்கெட்டில் 50 சதவீத மார்க்கெட்டை தக்க வைத்திருக்கிறது என்று சர்வேக்கள் சொல்கின்றன.இவ்வளவு பெரிய மார்க்கெட்டா இருக்கிறது என்று மலைத்து விடாதீர்கள். 2020 ஆம் ஆண்டில் இந்திய நுகர்வோர் சந்தையின் மதிப்பு 820 பில்லியன் டாலர்ஸ் (820,000,000,000$) என்றுச் சொல்கின்றார்கள் மார்க்கெட்டிங்க் துறையினர். கோடீஸ்வர கம்பெனிகள் இந்தச் சந்தையை தன் பக்கம் திருப்பி விட பெரும் பிரயத்தனங்களைச் செய்து கொண்டிருக்கின்றன. உங்களுக்கு இப்போது தெரிந்திருக்குமே, ஏன் ரிலையன்ஸ் நிறுவனத்தார் நுகர்வோர் சந்தையில் நுழைந்த காரணம். இந்தியாவின் பேஸ்ட் மார்க்கெட்டில் இருக்கும் பிராண்டுகளைப் பார்க்கலாம்.

Top 5 Brands - Market Share (2006)

1. Colgate Dental Cream 34%
2. Close-Up 14%
3. Pepsodent Complete 10 11%
4. Colgate Cibaca Top 5.7%
5. Colgate Fresh Energy Gel 3%
6. Other Brands 32.3% (Anchor, Babool, Ajanta, etc)

( Thanks to Ragul )

இனி, இந்த பேஸ்ட்டுடனான எனது தொடர்பு சம்பந்தமாய் பார்க்கலாம்.


வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்துக் கிணற்றிலிருந்து வெதுவெதுப்பான நீரை தண்ணீர் பொக்கையில் நிரப்பி குளிக்கும் பரவச உணர்வுக்கு ஈடான ஒரு குளியலை எந்த ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலும் தராது. அவ்வாறான நாட்களில் எனது குளியல் இன்றைக்கு மறைந்தே போன மைசூர் ஜாஸ்மின் சோப்பின் மல்லிகை வாசத்துடன், குளோசப் பேஸ்டின் வாசத்துடன் ஒவ்வொரு நாளும் அற்புத அனுபவத்தை தரும். 

குளோசப் அறிமுகமான அன்றிலிருந்து சிகப்பு கலர் மீதான ஈர்ப்பின் காரணமாய் பயன்படுத்த ஆரம்பித்தேன். அது என்ன விதமான விளைவுகளை உருவாக்கும் என்பதெலலாம் எனக்கு தெரியாது. வியாபார உத்தியின் பிரகாசமான மார்க்கெட்டிங் வித்தையில் மனசு மயங்கிய நேரமிது. ஏனென்றால் அந்த நேரம் என் உடம்பில் சூடான இளம் ரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. அழகான பொருட்கள், ஆடம்பரமான அழகு சாதனங்களின் மீதான கவன ஈர்ப்புக்கால வயது அது.

பல வருடங்களாக குளோசப் பேஸ்ட் என்னுடன் பயணித்துக்கொண்டே வந்தது. ஒவ்வொரு நாட்களும் ரத்தக்கசிவுகள் பற்துலக்கும் போது வெளிப்படும். அதை ஒரு பெரிய பிரச்சினையாக கருதவில்லை. ஒரு முறை பற்கள் பிரச்சினைக்காக மருத்துவரை நாடிய போது அவரிடம் நல்ல டூத் பேஸ்ட் ஒன்றின் குணாம்சம் என்ன என்று கேட்டேன். பேஸ்ட் எண்ணெய் போல வழுவழுப்பாக இல்லாமல் இருக்க வேண்டும் என்றுச் சொன்னார். கோல்கேட் சிபாகா பேஸ்ட்டினை சிபாரிசு செய்தார். அன்றிலிருந்து சிபாகாவை உபயோகப்படுத்த ஆரம்பித்தேன். பல் துலக்கும் போது உருவான ரத்தக் கசிவு காணாமல் போய் விட்டது. குளோசப் பேஸ்ட் என் உடம்பிற்கு ஒத்து வரவில்லை. வாயில் புண்ணை உண்டாக்கி இருந்திருக்கிறது. அது பற்றிய பிரச்சினை நீண்ட நாட்களாய் தெரியாமலே இருந்திருக்கிறது.

இப்படியாக குளோசப் பேஸ்ட் என் வாழ்க்கைப் பாதையில் இருந்து விடை பெற்றுக் கொண்டது. இப்போதும் சில விளம்பரங்களைப் பார்க்கும் போது இளமைக்கால கிணற்றுக் குளியலும், குளோசப் பேஸ்ட்டும் நினைவிலாடும்.

பாவக்காய் மாதிரியான மாங்காயைப் பார்த்திருக்கின்றீர்களா? அது போல ஒரு மாமரம் எங்கள் வீட்டில் இருந்தது. அது கொல்லப்பட்ட கதை ஒன்றிருக்கிறது. அதை விரைவில் படிக்கலாம்.

* * *

Thursday, September 15, 2011

இலங்கைத் தமிழர்களுக்காக கோவையில் உண்ணாவிரதப் போராட்டம்


அகில உலக மனித உரிமைகள் கூட்டமைப்பு, அவர் ஹோப் பவுண்டேஷன், இளம்தளிர் மாதர் சங்கம் சார்பில் வரும் சனிக்கிழமை 17.09.2011 அன்று கோவையில் தமிழ் நாடு ஹோட்டல் முன்புறம் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. 

கோரிக்கைகள் :

தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தவும்,

ஐ. நா. சபையின் மூலம் இயங்கும் அகில உலக மனித உரிமைகள் ஆணையத்தின் வழியாக இலங்கை அரசின் மீது மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்,

இந்தியாவிலேயே குறிப்பாக தமிழகத்தில் செயல்படும் மனித உரிமைகள் அமைப்புகளை இலங்கைக்கு அனுப்பி மனித உரிமை மீறல் குற்றங்களை ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவும், பாதிப்பினை ஏற்படுத்தியவர்களுக்குத் தண்டனை வழங்கவும், இந்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.

தொடர்புக்கு : 98944 10651 / 93601 08948 / 93601 08952 / 99940 30939


* * *

Monday, September 12, 2011

உணவு பற்றிய கேள்விகள்


(பாப்பம்பட்டி பிரிவு தாண்டி கலைஞர் கல்லூரி அருகில், மெயின் சாலையில் இருந்து அரைக் கிலோ மீட்டர் தூரத்தில் தண்ணீர் வசதியுடன், லோன் வசதியுடன்,  1000 சதுர அடியில் தனி வீடு விற்பனைக்கு இருக்கிறது. தேவைப்படுவோர் உடனடியாக அணுகவும். புத்தம் புதிய வீடு இது. அழகான ஏரிக்கரையோரம், நல்ல காற்று வசதியுடன் அமைதி தழுவும் இடத்தில் இவ்வீடு இருக்கிறது. ஒரே விலை 20 லட்சம் மட்டுமே. ஃபார்ச்சூன் பிரிக்ஸ் சர்வீஸ் சார்ஜ் தனி )


(திராட்சைக் குலைகள் ரசாயன பூச்சிக்கொல்லி கலவையில் பதினான்கு வாரம் முக்கி எடுக்கப்படுகிறது - நம்மாழ்வார் )



(கொத்தவரங்காய்)

சில சகோதரர்கள் பிளாக்கைப் படித்து விட்டு கடந்த ஒரு மாதமாக உணவுப் பழக்கங்களைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இப்பதிவு.

உணவால்தான் உடல் நிலை சரியில்லாமல் போய்விடுகிறது என்பதை முதலில் உணர வேண்டும். உணவு சரியானால் உடல் சரியாகும். மனம் சரியாக அதற்கென்று பல முறைகள் இருக்கின்றன. அது பற்றித் தெரிந்து கொள்ள “அறிவே தெய்வம்” என்ற பிளாக்கினைப் படித்துப் பார்க்கவும்.

சாப்பிடும் உணவில் எது நன்மை தரும் எது இன்பம் தரும் என்பதை அறிந்து கொண்டால் நோய்த் துன்பங்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

பால் நமக்குத் தேவையற்ற உணவு என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு மாதம் தொடர்ந்து காலையில், மாலையில் ஒரு கப் டீயும், சாப்பிடும் போது தயிரும் சேர்த்து வந்தேன். கிட்டத்தட்ட 2 கிலோ எடை கூடி இருந்தது. ஒரு மாதம் பால் சேர்க்காமல் சாப்பிட்டேன். இரண்டு கிலோ குறைந்து இருந்தது. பால் வயிற்றுக்குள் சென்று புளித்து, பின் தயிராகி அதன் பிறகு செரிக்க வேண்டும். அதுமட்டுமல்ல சாதாரண பாலில் தானே அதிக ”நெய்” உருவாகிறது. உடம்பு சரியில்லாமல் இருப்போருக்கு பால் திரவ உணவு, தேவையான கலோரிகளைக் கொடுக்கவல்ல. ஆரோக்கிய உடம்பிற்கு எதற்குப் பால்?

புதிய தலைமுறை டிவியில் நேற்று நம்மாழ்வார் பேசிக் கொண்டிருந்தார். “திராட்சைப் பழங்கள்” ரசாயன பூச்சிக் கொல்லிகளால் பதினான்கு வாரம் பழக்குலைகள் முக்கி எடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றனவாம். கேட்ட எனக்கு கிர்ரென்று ஆகி விட்டது. ஆரோக்கிய வாழ்விற்கு முக்கியமான உணவு பழங்கள் என்றுச் சொல்வார்கள். இன்றைய காலத்தில் பழங்கள் ரசாயனக் கலவையால் உருவாக்கப்படுகிறது என்று கேட்டவுடன் மனிதன் வேறு என்னதான் சாப்பிடுவது என்று தெரியவில்லை. (புதிய தலைமுறை டிவி செய்தி வடிவாக்கம் எரிச்சலைத் தருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்க வேண்டும்)

சாப்பிடும் உணவு பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிந்தாலே ஆரோக்கிய வாழ்வுக்கு மிகவும் உதவிகரமாய் இருக்கும்.

சிலருக்கு கொத்தவரங்காய் பற்றித் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். கொத்தவரங்காய் கொழுப்பைக் குறைக்கும் சக்தி உடையது. பொறியலாகவோ, கூட்டு, உசிலியாக வாரம் ஒரு முறைச் சாப்பிட்டு வந்தால் உடம்பில் இருக்கும் கொழுப்புக் குறையும். 

சில பிளாக்கர்ஸ் மூலிகை, தாவர உணவுகளின் பயன்கள், அடங்கி இருக்கும் சத்துக்கள் பற்றி எழுதி இருக்கின்றார்கள். தேடிப்பிடித்து படித்துப் பாருங்கள். பல பிளாக்குகளை படித்துப் பார்த்து கடைசியில் ஒரு முடிவுக்கு வாருங்கள். ஆகா இந்த பிளாக்கில் எழுதி இருக்கிறதே என்பதற்காக நம்ப வேண்டியதில்லை. ஒவ்வொரு உடம்பும் வெவ்வேறானவை. எந்த உணவு உங்கள் உடம்புக்குத் தேவை, எது உங்களுக்கு ஒத்து வருகிறது என்பதை ஆராய்ந்து உண்ண வேண்டும். 

இந்த பிளாக்கைப் படித்து பாருங்கள். சில விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கலாம். டாக்டர் ஜி.சிவராமன் உடலுக்கு நன்மை தரும் அரிசி பற்றிய எழுதி இருக்கும் பதிவை கீழே இருக்கும் இணைப்பில் பார்க்கலாம்.
http://siddhavaithiyan.blogspot.com/2011/06/blog-post_23.html

* * *

Saturday, September 10, 2011

சமையல் செய்வது பெண்களுக்கு அவசியமா?


நானும் நண்பரும் சைட்டுக்குச் சென்று விட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, மனைவியை போனில் அழைத்து நண்பரும் சாப்பிட வருகிறார் என்று சொன்னேன். 

சாப்பிட்டுக் கொண்டிருந்த போது “சமையல் எப்படி அண்ணா இருக்கிறது?” என்று நண்பரிடம் கேட்டுக் கொண்டிருந்தார் மனைவி.

“ நன்றாக இருக்கிறதம்மா “ என்றுச் சொன்னவர் தொடர்ந்து சொல்லிய விஷயம் அற்புதம்.

ஒரு கணவனுக்கு மனைவியின் சமையல் நன்றாக இருக்க வேண்டுமே என்று எப்போது கவலை வரும் தெரியுமா? மகள் திருமணமாகிய பிறகு மாப்பிள்ளை மாமியார் வீட்டுக்கு வரும் போதுதான் மனைவி நன்றாகச் சமைக்க வேண்டுமே என்று கவலைப்படுவார்களாம். 

மாமியார் வீட்டுக்குச் செல்லும் மருமகன்கள் நன்றாகச் சாப்பிட விரும்புவார்களாம்.மனசுக்குப் பிடித்தச் சாப்பாடு மாமியார் வீட்டுச் சாப்பாடு என்றுச் சொல்லுவார்களாம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வேறு எங்கும் கிடைக்காத மரியாதை, அன்பு கலந்ந உபசரிப்பு மாமியார் வீட்டில் மட்டுமே கிடைக்குமாம். மருமகனுக்குப் பிடித்தவற்றை வாங்க மாமனார் செல்லுவதும், மச்சான்கள் செல்வதும், பார்த்துப் பார்த்து மாமியார் சமைப்பதும் என்று ஒரு குடும்பமே “மருமகனுக்காக” வேலை செய்யுமாம்.

மருமகனுக்கு பிடித்த உணவை அதிகம் சமைத்து ஸ்பெஷலாக எடுத்து வைத்து விடுவார்களாம். அதுவுமன்றி மருமகன் சாப்பிட்ட பிறகுதான் பிறர் சாப்பிடுவார்களாம்.  மாமியார் வீட்டில் கிடைக்கும் ஸ்பெஷல் மரியாதை, அன்பு கலந்த உணவுகள் என்று தாயாரின் கவனிப்பில் இருந்து வந்தவர்களுக்கு, இன்னொரு தாயாரின் அன்பான உணவினை உண்ணும் பாக்கியத்தினை மருமகன்கள் விரும்புவார்களாம்.

ஒரு மனைவி நன்றாகச் சமைக்கவில்லை என்பது இந்த இடத்தில் தான் பிரச்சினையாகும் என்றுச் சொன்னார் அவர். மருமகனுக்கு மாமியார் வீட்டுச் சாப்பாடு பிடிக்காமல் போனால் மாமியார் வீட்டின் மீதான பற்றுதல் குறையுமாம். மனைவி ஏதாவது தவறு செய்தால் கூட, மாமியாரின் வீட்டின் உபசரிப்பை சுட்டிக் காட்டி மனைவியை சீண்டுவார்களாம். இல்லையென்றால் என் அம்மா சமைப்பது போல சமைக்கத் தெரியுதா என்று பேச ஆரம்பித்தால் போச்சு. வினை ஆரம்பித்து விடும்.

ஒரு மனிதனுக்கு கோடி கோடியாய் பணத்தினைக் கொட்டிக் கொடுத்தால் போதாது என்றே சொல்வான். ஆனால் சாப்பாடு விஷயத்தில் அவனால் முடிந்த அளவுக்கு மேல் சாப்பிட முடியாது. போதும் என்றே சொல்லுவான். 

சமையல் என்பதில் எவ்வளவு அர்த்தங்கள் இருக்கின்றன என்பதைப் பாருங்கள். 

வாழ்க்கை வெகு சுவாரசியமானது அதை நேசிப்பவர்களுக்கு அல்லவா?

* * *

Thursday, September 8, 2011

சமச்சீர் கல்வியின் தரம் எப்படி இருக்கிறது?

கடந்த இரண்டு வருடங்களாக ஐ டிஸ்கவரி என்ற எக்சீட் கல்வி புத்தகங்களை குழந்தைகள் இருவரும் படித்து வந்தனர். அந்தப் புத்தகங்களையும் தற்போது குழந்தைகள் படித்து வரும் சமச்சீர் புத்தகங்களையும் ஆராய்ந்த போது “சமச்சீர்” புத்தகங்களின் தரம் தமிழகச் சூழலுக்கு ஏற்ப நன்றாக இருந்தது. 

அழகிய படங்கள், கதைகள், விளக்கங்கள், செய்முறை பயிற்சிகள், வீட்டில் செய்யப் பயிற்சிகள், ஆங்காங்கே குறிப்புகள் என்று அழகாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது சமச்சீர் கல்விப் புத்தகங்கள். ஒவ்வொரு வகுப்பு புத்தகத்தையும் இணையத்தில் இருந்து இறக்கிப் படித்துப் பார்த்தேன். அருமை.

ஆங்காங்கே சில தவறுகள் இருக்கின்றன என்றாலும் மொத்தமாய் பார்க்கையில் வெகு அருமையான வடிவில் தேவையானவற்றை மட்டும்   சேர்த்து தரமாய் வடிவமைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சமச்சீர்கல்வியை மெட்ரிக் பள்ளிகள் வேண்டாமென்றுச் சொல்வது நல்லதல்ல. டிரஸ்ட் ஆக்டை முன் வைத்து பள்ளி நடத்த அனுமதி வாங்கியவர்கள் செய்யும் வேலையும் அல்ல. வயதுக்கு ஏற்ப, குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பாடங்களாக வைத்திருக்கிறார்கள்.

நான் ஆசிரியராக இருந்த போது, மெட்ரிக் பள்ளிகளில் திடீர் திடீரென்று ஆசிரியர்கள் லீவு போட்டு விடுவார்கள். ஏனென்றால் ஆசிரியரின் சம்பளமே 800 ரூபாய் தான் இருக்கும். நம்புங்கள் இவ்வளவுதான் கொடுத்தார்கள். 3500 ரூபாய் சம்பளம் பிரின்ஸ்பல் வாங்குவார். எனக்கு 850 ரூபாய் சம்பளம். +1, +2 கணிப்பொறி வகுப்பினை எடுத்தேன். ஆசிரியர்கள் சிலர் சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நின்று விடுவார்கள். அப்படியான ஒரு காலத்தில் 6ம் வகுப்பிற்கு கெமிஸ்ட்ரி பாடம் எடுங்கள் என்றுச் சொல்லி விட்டார் பிரின்ஸ்பல்.

வேறு வழி இன்றி பாடமெடுத்தேன். கிட்டத்தட்ட 150 பக்கமுள்ள புத்தகம். ஒரே ஈக்குவேஷன்களும், செய்முறைகளுமாய் படிக்கவே தலை சுற்றியது. 6ம் வகுப்பு பையன் படிக்க 10 வகுப்பு பாடத்தினை வைத்திருந்தார்கள். எவனும் படிக்கவில்லை. ஏதாவது சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தால் தூங்க ஆரம்பித்து விடுவார்கள். ஒருவழியாய் ஒப்பேத்திக் கொண்டிருந்த சமயத்தில் யாரோ ஒரு ஆசிரியர் புதிதாய் வேலைக்குச் சேர, அவர் தலையில் கட்டி விட்டார் பிரின்ஸ்பல். இது தான் மெட்ரிக் பள்ளிகள் சிலவற்றின் தரம்.

மேட்டூரில் அழகிய வீடு விற்பனைக்கு 

சேலம் மேட்டூர் அருகில் அழகிய வீடு விலைக்கு வந்திருக்கிறது. விபரங்களை கீழே பார்க்கவும்.

The area is 2400 sq.ft
ground floor:1000 sq.ft mosaic flooring,Teak door,2bkh
First floor:1100 sq.ft.Tile flooring, 2bhk.hall 17/17
master bedroom:17/10
second bedroom:10/10
dining:10/10
three bathrooms.

இந்த வீட்டின் விலை, மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் என்னைத் தொடர்பு கொள்ளவும். 

Wednesday, September 7, 2011

தாய்க்கு ஒரு தாலாட்டும் - குடும்பமும்


பணம், பதவி, புகழ் போன்றவையே வாழ்க்கையில் சிறந்தவை என்று கருதும் சிவாஜிக்கு, இவையெல்லாம் எதுவும் உண்மையில்லை குணமும், அன்பும் தான் நிரந்தரமானது என்றுப் புரிய வைக்கும் மிகச் சிறந்த ஒரு படம் தான் தாய்க்கு ஒரு தாலாட்டு என்ற படம். இப்படத்தை எப்போது பார்க்க நேர்ந்தாலும் உடனே கவனத்தை ஈர்த்து விடும். சிவாஜியுடன் பத்மினி, பாண்டியராஜன் நடித்திருப்பர். பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கும்.

இப்படத்தில் பத்மினி இறந்தவுடன் கவனிப்பு இன்றி சிவாஜி சிரமப்படுவார். அதிகாரம் செய்ய ஆள் இருக்கும் போதுதான் அதிகாரம் செய்ய அர்த்தமிருக்கும் என்பார் சிவாஜி. 

ஆம், குடும்ப வாழ்வில் கணவன் இறந்தால் மனைவிக்கும், மனைவி இறந்தால் கணவனுக்கும் வாழ்வில் என்ன பிடிப்பு இருக்க முடியும்? யாரிடம் அதிகாரம் செய்ய முடியும்? யாரிடம் மனம் விட்டுப் பேச முடியும்?

கோயமுத்தூரில் இருக்கும் மிகப் பெரிய கோடீஸ்வரர், பிசினஸ்ஸை தன் பையனிடம் ஒப்படைத்து விட்டு அழகான ஹெஸ்ட் ஹவுசில் தன் மனைவியோடு தங்கி விட்டார். ஒரு முறை அவரைச் சந்தித்த போது மனைவியை அவர் “அம்மா” என்றழைத்தார். அவர் மனைவி இவரை “அப்பா” என்றழைத்தார்.

தாம்பத்தியத்தின் உச்சகட்ட நிலை இது. வாழ்வியலின் அத்தனை இன்பங்களும் கிடைக்ககூடிய தருணம் இது என்றார் அவர். இருவரின் பெரும்பாலான நேரமும் பிரார்த்தனையிலே கழிகிறது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதியான வாழ்க்கையை அவர்கள் வாழ்கின்றார்கள். 

இந்தியாவில் சினிமாக் கலாச்சார ஊடுறுவல் அதிகமான பின்பு, விவாகரத்துக்கள் பெருமளவில் நடக்கின்றன. பப்புகளிலோ, பார்க்கிலோ, பணத்தினாலோ அரங்கேறும் அசிங்கமான உறவுப் பாலங்கள் நாளடைவில் கோர்ட் படியேறி நிற்கின்றன.

வாழும் காலம் கொஞ்சம், அதற்குள் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள் என்று கேட்கின்றார்கள் இளைய தலைமுறையினர்.

சாலையில் காரில் சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். எதிரே வருபவன் கட்டுப்பாட்டுடன், நியதிப்படி வரவில்லை என்றால் ஒழுங்காகச் செல்லும் உங்கள் காரும் விபத்தில் சிக்கும் அல்லவா? அது போலத்தான் கட்டுப்பாடுகள் இல்லாத வாழ்க்கை விபத்தில் முடிந்து விடும் அல்லது பிரச்சினையில் சிக்கி விடும்.

தாய்க்கு ஒரு தாலாட்டுப் படத்தில் பத்மினி இறந்தவுடன் வரும் ஒரு பாடல் மனைவியின் அருமையைச் சொல்லும். அப்பாடலை நீங்களும் கேட்டு வையுங்கள். மனதுக்கு இதமாய் இருக்கும்.


தாம்பத்திய வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலும், நேசித்தலும், தியாகமும், அர்ப்பணிப்பும் அவசியம். சுய நலத்தோடு வாழ முற்பட்டால் விவாகரத்துகள் தான் நடக்கும். அது வாழ்க்கையை விவகாரமானதாக்கி விடும். 

காசே தான் கணவன் என்று நம்பிய மனைவி ஒருத்தி, பலரிடம் சிக்கி சின்னாபின்னமாகி, சிதைந்து போன கதையை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அதைப் பற்றி பிறிதொரு நாள் எழுதுகிறேன்.

* * *

பொறுப்பின்மையின் பிரச்சினைகள்

இன்று காலையில் வீட்டிற்கு எதிரே இருக்கும் மின்சார போஸ்ட்டில் லாரி ஒன்று இடிக்க நெருப்பு பொறிகள் பறந்து வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஃப்ரிட்ஜ், விளக்குகள் எல்லாம் டப் டப் என்றன. வெளியில் நின்றிருந்த பையன் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

18 அடி அகலமே இருக்கும் சாலையில் பெரிய லாரி ஒன்று சரக்குகளை ஏற்றிக் கொண்டு வருகிறது. அதுவும் தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார வயர்களை தெரிந்தே அறுத்துக் கொண்டு போகிறது அந்த லாரி. அதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் லாரி டிரைவர் வண்டி ஓட்டுகிறார். அருகிலிருந்த டிரான்ஸ்பார்மர் வெடிக்கிறது. வெடிச்சத்தம் கேட்டு பலரும் வந்து பார்க்கின்றனர். 

கடையின் மேனேஜர் எனக்கு ஒன்றும் தெரியாது என்கிறார். ஒரு மணி நேரம் பவர் கட். திரும்ப லைன் மேன் வந்து சரி செய்கிறார். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு லைன் விட்டு விட்டு வருகிறது. மீண்டும் மின்சாரம் கட் செய்யப்படுகிறது. மீண்டும் லைன் மேன் வந்து சரி செய்கிறார்.

தனிப்பட்ட ஒருவரால் கிட்டத்தட்ட 100 வீடுகளுக்கான கரண்ட் கட் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல்புகள் வெடிக்கின்றன. யாரிடம் கேட்பது? யாரிடம் கம்ப்ளெயிண்ட் சொல்வது? 

தமிழக மக்களிடம் ஒரு வித எதேச்சையதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. நான்கு பேர் ஒன்று சேர்ந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற போக்கு தெரிகிறது. சமீபகாலமாக கல்லூரிகளில் நடக்கும் கொலை, அடிதடி சம்பவங்களைப் பார்க்கும் போது ஏன் இப்படியான மன நிலை மாணவர்களுக்கு ஏற்படுகிறது என்று அனைவருக்கும் புரிகிறது.சமூகத்தின் பெரும் தாக்கத்தினை உருவாக்கும் சினிமாவில் வன்முறை வரைமுறை இன்றி காட்டப்படுவதை மாணவர்கள் தங்களுக்குள் ஈர்த்துக் கொள்கின்றனர். பெரும் ஹீரோக்கள் கொஞ்சம் கூட சமூகத்தின் பால் அக்கறையின்றி அம்மாதிரியான காட்சிகளில் நடிக்கின்றனர். இப்படியான படங்கள் விதைக்கும் விதையானது மக்களின் மனதில் ஒருவித ஹீரோயிசத்தை வளர்க்கிறது. மிகப் பெரும் சமுதாயச் சீர்கேடு இது. இது ஒன்று மட்டும் காரணமல்ல. இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

சமூகத்தில் உயர் பதவியில் இருப்பவர்களும், சமூகவாதிகளும் இப்பிரச்சினையை களைய முற்பட வேண்டும். கொஞ்ச நாட்கள் முன்பு வேலையாக வெளியில் சென்ற போது, பனிரெண்டு வயசுப் பையன் குவார்ட்டர் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச தூரம் தாண்டிச் செல்லுகையில் வயதான பெண்மணி ஒருவர் சாக்கடையின் அருகில் குவார்ட்டர் குடித்துக் கொண்டிருந்தார். தண்ணி போடுவது ஹீரோயிசத்தின் அடையாளமாய் மீடியாக்கள் உருவகப்படுத்தி வருகின்றன.

சமூகத்தின் மீதான பிரக்ஞை, எதிர்கால சந்ததியினர் மீதான அக்கறை எதுவும் இன்றைய நவ நாகரீக கால மனிதர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் இல்லாமல் போவது நல்லதல்ல. மாவட்டம் தோறும் அனாதை விடுதிகளும், முதியோர் விடுதிகளும் உருவாவதன் காரணம் சமூகத்தின் மீதான அக்கறை குறைவதால் தான்.

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது. நமக்குத் தேவையான வசதிகளைத் தர சட்டத்தின் ஆட்சியும், நிர்வாகமும் இருக்கிறது. அதையெல்லாம் மனிதர்கள் மீற நினைக்கின்றார்கள். அதன் பிரதிபலன் மிகக் கொடுமையாய் அல்லவா கிடைக்கும்? மீடியாவில் பிக் பி என்றழைத்த அமர்சிங் கடைசியில் கிட்னி பெயிலாகி பெரும் பிரச்சினையில் மாட்டி, ஜெயிலுக்குச் செல்கிறார். ஓய்வெடுக்க வேண்டிய வயதில், சிறைக்குச் செல்லும்படி “விதி” விளையாடுகிறது. செய்த வினை வாசல் கதவை தட்டியே தீரும் என்பதற்கு இன்றைய உதாரணத்திற்கு அமர்சிங்கைத் தவிர வேறு யாரைக் காட்ட முடியும்?

சமூகப் பிராணியான மனிதன் சமூகத்தின் பால் அக்கறையும், பிடிப்பும் வைத்திருக்க வேண்டும். அது அவசியம் கூட. 

* * *

Tuesday, September 6, 2011

தர்மம் வெல்லும்


மனிதர்களுக்குத் துன்பம் ஏன் வருகிறது? கடோபனிஷ விளக்கம் எழுதியிருந்த பதிவர் மிகச் சரியாக வார்த்தைகளை எழுதி இருந்தார். இன்பம், நன்மை இரண்டில் பெரும்பாலானோர் இன்பத்தை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர். நன்மையை விட்டு விடுகின்ற காரணத்தால் துன்பம் வருகிறது. இன்பம் என்பது மின்னல் போன்றது. தோன்றிய உடனே மறைந்து விடும். நன்மை என்பது உண்மை போன்றது. அது எப்போதுமே இன்பத்தை வாரி வழங்கக் கூடியது.

புரியும்படியாகச் சொல்ல வேண்டுமானால் நாக்கிற்கு டேஸ்ட்டியான உணவை உண்பது இன்பம் எனலாம். அதே உடலுக்கு நன்மை தரும் உணவு உண்பது நன்மை எனலாம். 

தர்மம் என்பது எங்கே இருக்கிறது என்று சில நேரம் எண்ண வைத்து விடும். ஆனால் அது என்றைக்கேனும் ஒரு நாள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். இதோ ரெட்டி பிரதர்ஸ் இன்றைக்கு ஜெயிலில் கிடக்கின்றார்கள். ஜெயில் என்பது பெரிய விஷயமல்ல என்று நினைக்கலாம். ஆனால் ரெட்டி பிரதர்ஸுக்கு ஜெயில் என்பது மிகப் பெரும் உயிர் வதை. ஏன் என்று கேட்கின்றீர்களா? இதோ விளக்கம்.

BANGALORE: From 7-star luxury to Chanchalguda prison in Hyderabad. From owning helicopters, lying in his indoor swimming pool and watching movies on an expansive 70mm screen close by, former minister and MLC G Janardhana Reddy lived like a king. 

You name it and he has it. Reddy, 44, constructed a three-storied complex next to his residence in Bellary meant only for his children to frolic around. Reddy's kids never go out for security reasons, while select children of the locality and those of his associates come and play in the complex. 

He's donated a diamond-studded crown worth over Rs 40 crore to Tirupati, and has another at his residence in Bellary. As one enters his house, the diamond-studded crown revolves on a sandalwood carving, illuminated by light. 

Reddy owns an apartment, Parijat, next to Taj West End, a 5-star hotel in Bangalore where he has a permanent room. A number of luxury cars line the Reddy homes, ranging from Bentleys and Mercs to the latest SUVs and Range Rovers. Holidaying in exotic locations around the world is his favourite pastime. 

During the mining boom a couple of years ago, the Reddy brothers would heli-hop between Bellary and Bangalore even for lunch or dinner. But things have not been the same for them over the past year and they are increasingly hitting the roads with their SUVs. Reddy had three helicopters but now owns only one. 

Reddy, who once owed debtors several crores of rupees in the late 1990s, a decade later admitted that he and his wife alone have assets worth over Rs 150 crore, thanks to his mining business. He's spent over Rs 30 lakh just to illuminate the hill adjoining his house in Bellary. 

His conference room, named Kuteera, is meant for political purposes, where a visitor is welcomed with huge portraits of former PM A B Vajpayee, senior leader L K Advani, opposition leader in Lok Sabha Sushma Swaraj and former CM B S Yeddyurappa. Reddy's house is like a fortress: a visitor has to pass three checkposts with scanners and bomb detectors, and gun-toting securitymen are common in his house. 

(Thanks : TOI)

உண்மைக்கு என்றைக்குமே வலிமை உண்டு. அதை அன்னா ஹசாரே தற்போது நிரூபித்தார். காந்தியின் ”சத்திய சோதனை” புத்தகத்தை படித்த போது, அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு என்று நினைத்தேன். ஆனால் அதே சத்தியமும், உண்மையும் இன்று காங்கிரஸ் அரசை கிடுகிடுக்க வைத்தன.

நேர்மையாக தொழில் செய்பவர்கள் எவராலும் குறுகிய காலத்தில் முன்னுக்கு வருவது என்பது நடக்கக் கூடிய ஒன்று அல்ல. கிடுகிடு வளர்ச்சி என்பது சட்டத்திற்குப் புறம்பாக வந்தால் இப்படிப்பட்ட சம்பவங்களையும் “சத்தியம்” நடத்தியே தீரும்.

ஏழு நட்சத்திர வாழ்க்கை நடத்தியவர்கள் என்றாலும் செய்த பலனை அனுபவித்தே ஆக வேண்டும். 

* * *

Monday, September 5, 2011

குழந்தைகளைக் கொல்லும் உணவுகள்


( இக்குழந்தைகளைப் போல பிறக்கப்போகும் உங்களின் குழந்தைகளுக்கு நீங்கள் நோயைப் பரிசளிக்க விரும்புவீர்களா? )


இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் கட்டுரை ஒன்றினைப் படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. நாகரீகம் என்ற பெயரில் மார்க்கெட்டுகளில் விற்றுக் கொண்டிருக்கும் உணவுகள் எந்தளவுக்கு மனிதர்களின் உடலில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதை உணர முடிந்தது. அதை மூலைக்கு மூலை இருக்கும் மருத்துவமனைகளே சாட்சியம் காட்டுகின்றன. 

அந்தக் கட்டுரையில் தவறான உணவுப் பழக்கங்களால் இந்தியர்களளுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகள் மெட்டபோலிக் சிண்ட்ரோம் என்றுச் சொல்லக்கூடிய இதய நோய்கள், வலி, சர்க்கரை வியாதி மற்றும் ஜெனடிக்ட் பிரச்சினைகளைப் பெறுவதாய் சொல்லி இருக்கின்றார்கள். 

ஒரு லட்சம் பிறந்த குழந்தைகளை ஆராய்ச்சி செய்த போது அதில் 1% குழந்தைகள் மேற்சொன்ன இன்பார்ன் மெட்டபோலிக் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்.

இந்திய மக்களை மீடியா மூலம் மூளைச் சலவை செய்து, இறக்குமதி செய்யப்பட்ட மேலை நாட்டு நாகரீக உணவுப் பொருட்களால், இந்தியாவின் எதிர்கால சந்ததியினர் நோயுள்ளவர்களாய் ஆக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில் இந்திய மருந்துச் சந்தையில் பெரிய பெரிய மருந்துக் கம்பெனிகளை வெளி நாட்டு பகாசுரக் கம்பெனிகள் விலைக்கு வாங்குகின்றன.

நாகரீகத்தின் பெயரால் இந்திய மக்கள் தங்கள் சந்தோஷத்தை மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினரையும் நோயில் தள்ளிக் கொண்டிருக்கும் அவலத்தை என்னவென்றுச் சொல்வது.

பர்கர், பீட்சா, குளிர் பானங்கள், பாக்கெட் உணவுப் பொருட்கள் போன்றவையெல்லாம் இந்திய மக்களுக்கு நோயைத் தந்து கொண்டிருக்கின்றன என்பதை மீண்டும் இந்திய மருத்துவத் துறை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்து வருகின்றார்கள்.

பெரும்பாலும் கணிணித் துறையில் இருப்போரே மேலை நாட்டு உணவுப் பொருட்களை அதிகம் வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். அவ்வுணவுகளால் ஜெனடிக்ட் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கின்றன என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆரோக்கியமான உணவுகள், பெரும்பாலும் சைவை உணவுப் பொருட்களே உடலுக்கு உகந்தது. இஷ்டத்திற்குச் சாப்பிடுவது, மனதுக்குள் தோன்றும் போதெல்லாம் சாப்பிடுவது, கொழுப்பு நிறைந்த பொருட்களைச் சாப்பிடுவது போன்ற தீய பழக்கங்கள் எதிர்காலத்தைச் சூனியமாக்கி விடும்.

இந்திய மக்களின் பாரம்பரிய உணவுப் பொருட்களைத் தவிர்த்தால் ஏற்படப் போகும் விளைவுகளை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

கோயமுத்தூரில் ஒரு தடவை நண்பருடன் காஃபி சாப்பிடச் சென்றிருந்த போது, கேஷியருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

”ஞாயிறுகளில் வீட்டில் யாரும் சமைப்பதே இல்லை போல சார்,  கூட்டம் அள்ளுது, எங்களால் சமாளிக்கவே முடியவில்லை” என்றார்.

சிங்காநல்லூரில் இருக்கும் சாந்தி ஹியர் ஹோட்டலில் உட்கார இடம் கிடைக்காமல் வரிசையில் நின்று கொண்டிருப்பதை அவ்வப்போது பார்ப்பது உண்டு.

குடும்பங்களின் சந்தோஷங்கள் இப்படியான ஹோட்டல்களில் நிறைவு பெறுவது வருங்கால சந்ததியினருக்கு நல்லதல்ல என்றுமட்டும் தான் சொல்லத் தோன்றுகிறது. வேறென்ன எழுத? 

* * *

Thursday, September 1, 2011

பிள்ளையார்



மனைவியோ நண்பனோ இருவரிடம் கூட சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது. அவ்வேளைகளில் நமக்கு உற்ற தோழனாக வருவது “கடவுள்”. மனதுக்குள் கிடந்து அழுத்தும் சில உணர்வுகளை வாய் விட்டுப் பேசியாக வேண்டும். அவ்வாறு பேசினால்தான் மன அழுத்தம் தீரும். இல்லையென்றால் “டாஸ்மாக்கு” போக நேரிடும். முன்னோர்கள் மனிதனுக்கு இது போன்ற ஒரு துணை தேவைதான் என்பதற்காகத்தான் கடவுளை உருவாக்கினோர்களோ என்று சில சமயம் நினைக்கத் தோன்றும். பிள்ளையார் கூட எனக்கும் அது போன்ற சில சமயங்களில் உதவிக்கு வருவார்.

சனிக்கிழமை தோறும் வாரா வாரம் திருமணம் ஆன நாளில் இருந்து மனைவியை உழவர் சந்தைக்கு அழைத்துச் சென்று காய்கறிகள் வாங்கி வந்து குளிரகத்தில் வைத்துக் கொள்வோம். அப்படியான நாட்களில் சிங்கா நல்லூர் உழவர் சந்தைக்கு அருகில் இருக்கும் பிள்ளையாரை அடிக்கடி பார்க்கும் சந்தர்ப்பம் வந்தது. மார்கழி மாதங்களில் பிள்ளையார் ஏக போகமாய் இருப்பாய். தோரணம் என்ன? பாட்டு என்ன? படையல்கள் என்ன? அபிஷேகங்கள் என்ன?  அந்தச் சூழலில் பிள்ளையாரைப் பார்ப்பதே மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்.

சாலையில் இருந்தபடியே அவருக்கு நடக்கும் அபிஷேகங்களை பார்ப்பது உண்டு. அப்படியான நாட்களில் அய்யர் ”பிரசாதம்” கொண்டு வந்து கொடுத்துச் செல்வார். நான்கு வாரங்கள் தொடர்ந்து பிள்ளையார் பிரசாதம் சாப்பிட்டு வந்தேன். மார்கழி முடிந்து விட்டது. அது தெரியாமல் வீட்டிலிருந்து கிளம்பும் போது மனைவியிடம் “இன்னிக்கு பிள்ளையார் எனக்காக பிரசாதம் வைத்திருப்பார்” என்று சொல்லிக் கொண்டே தூறல் விழுந்து கொண்டிருந்த அதிகாலையில் வண்டியை முறுக்கிக் கொண்டு உழவர் சந்தை நோக்கிப் பறந்தேன்.

”கோவில் பிரசாதத்திற்கு மட்டும் ஏன் பிரமாதமான டேஸ்ட் வருகிறது என்று புரியாத மர்மமாய் இருக்கிறதே” என்று நினைத்தபடியே சென்றேன்.

பிள்ளையாரைப் பார்த்தால் அம்போவென்று இருந்தார். மனைவியோ “என்னங்க உங்க பிள்ளையார் ஏமாத்திட்டார் போலிருக்கே?” என்றார். சரியான கடுப்பு. மார்கழி மாதம் முடிந்து விழாக்கள் முடிந்து போனதை அப்போதுதான் உணர்ந்தேன்.பிள்ளையாரை ஒரு முறை முறைத்தேன். ”இப்படியா ஏமாற்றுவாய்” என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே உழவர் சந்தைக்குச் சென்று காய்கள் வாங்கி திரும்பிக் கொண்டிருந்தோம்.

காமராஜர் சாலையில் இஎஸ்ஐ ஹாஸ்பிடல் தாண்டி வந்தால் சாலையோரப் பிள்ளையார் ஒருவர் வில்வ மரத்தடியில் உட்கார்ந்து அருள் பாலித்துக் கொண்டிருப்பார். அவருக்கும் எனக்குமான உறவு அவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்ததில்லை. அவரை வண்டியில் செல்லும் போது பார்ப்பதோடு சரி. 

இந்தப் பிள்ளையார் கோவிலின் முன்பு ஒரே கூட்டமாய் இருந்தது. வண்டியை மெதுவாக செலுத்தினேன். யாரோ ஒருவர் என்னிடம் வந்து கொழுக்கட்டை, பொங்கல், பழம் வைத்திருந்த தட்டை நீட்டி, ”சார் இந்தாங்க பிரசாதம்” என்றுச் சொல்லி நீட்டினார்.

ஜாடை காட்ட, பின்னால் உட்கார்ந்திருந்த மனைவி கையில் வாங்கிக் கொண்டார்.

பிள்ளையாரைப் பார்த்தேன். அவர் என்னிடத்தில் ஏதோ சொல்வது போன்று தோன்றியது. 

* * *