குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 15, 2011

இலங்கைத் தமிழர்களுக்காக கோவையில் உண்ணாவிரதப் போராட்டம்


அகில உலக மனித உரிமைகள் கூட்டமைப்பு, அவர் ஹோப் பவுண்டேஷன், இளம்தளிர் மாதர் சங்கம் சார்பில் வரும் சனிக்கிழமை 17.09.2011 அன்று கோவையில் தமிழ் நாடு ஹோட்டல் முன்புறம் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. 

கோரிக்கைகள் :

தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தவும்,

ஐ. நா. சபையின் மூலம் இயங்கும் அகில உலக மனித உரிமைகள் ஆணையத்தின் வழியாக இலங்கை அரசின் மீது மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்,

இந்தியாவிலேயே குறிப்பாக தமிழகத்தில் செயல்படும் மனித உரிமைகள் அமைப்புகளை இலங்கைக்கு அனுப்பி மனித உரிமை மீறல் குற்றங்களை ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவும், பாதிப்பினை ஏற்படுத்தியவர்களுக்குத் தண்டனை வழங்கவும், இந்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.

தொடர்புக்கு : 98944 10651 / 93601 08948 / 93601 08952 / 99940 30939


* * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.