குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நீதிமன்றம். Show all posts
Showing posts with label நீதிமன்றம். Show all posts

Saturday, May 2, 2026

நீதிக்கு கண்கள் உண்டு


சமீபத்தில் ஒரு நீதிபதி பேசுகையில், "இந்தியாவில் உள்ள சட்டக் கல்லூரிகளில் அர்த்தசாஸ்திரம், மனுஸ்மிருதி உள்ளிட்ட வேதங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இது அவரது தனிப்பட்ட கூற்றாக இருந்தாலும், பல்வேறு நாளிதழ்களில் இது தலைப்புச் செய்தியாக வெளியானபோது சில ஐயங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்தியா இதுநாள் வரை ஒரு சமூக, சமதர்ம, மதச்சார்பற்ற நாடு என்றே அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. வானளாவிய அதிகாரம், கேள்வி கேட்க அவ்வளவு எளிதில் முடியாத அதிகாரத்தின் பின்னால் இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என வரலாறு சொல்கிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 'மதச்சார்பற்ற அரசு' என்ற கொள்கையே இங்கு ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாக்கிறது. 


"எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்" என்ற சமதர்ம நோக்கோடு இந்தியாவை உருவாக்குவதற்காக, நம் தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து விடுதலை பெற்ற பின் பெரும்பாடுபட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பல இன்னல்களையும் துயரங்களையும் கடந்து உருவாக்கிய ஜனநாயக நாட்டில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


ஆனால், தற்போதைய சூழலில் நாட்டை மீண்டும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் போக்கு நிலவுகிறது. ஆளும் அரசின் கீழ் நிர்வாகத்தில் இருக்கும் சில அமைப்புகளும், குறிப்பிட்ட மதம் மற்றும் மொழிப் பற்றுடைய அதிகாரிகளும் இணைந்து இத்தகைய கருத்துருவாக்கங்களை உருவாக்கி வருகின்றனர். 


இது இந்தியாவை ஒரு மிகப்பெரிய அழிவை நோக்கித் தள்ளும் என்பதே உண்மை. இன்னும் கல்வி முழுமையாக கிடைத்திடாத நிலையில் இருக்கும் இந்தியாவின் பாமரர்களுக்கு - இது என்னவென்றே புரியாது. கல்வி கற்றவர்களுக்கே புரியாத பல உண்டு.


படித்தவர்கள் மத்தியில் இது குறித்த தெளிவும் விழிப்புணர்வும் மிக அவசியம். மதமும், மொழியும், இனமும் நம்மை நல்வழிப்படுத்தவே இருக்கின்றனவே தவிர, வன்முறைப் பாதைக்கோ அல்லது மற்றவர்களைத் துன்புறுத்துவதற்கோ அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். 


அதிகாரத்தில் இருப்பவர்கள் இத்தகைய கருத்துகளைப் பேசும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். ஆனால், இந்தியாவைப் பழைய சாதியக் கட்டுப்பாடுகளுக்குள் கொண்டு சென்று, மீண்டும் ஒரு சில ஆதிக்க சக்திகளின் கீழ் தள்ளுவதே இவர்களின் மறைமுக நோக்கமாக இருக்குமோ என்ற அச்சம் எழுகிறது. 


ஆங்கில ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுவிக்கிறோம் என நீதி தேவதையின் கண்களில் கட்டப்பட்டிருந்த கருப்புத் துணி நீக்கப்பட்டது. பார்வையில் ஏழை, பணக்காரன், சாதி, மதம் தெரியும் என்பதால் நீதிக்கு காதுகள் மட்டுமே என சிம்பாலிக்காக இருந்தது இப்போது பார்வையும் உண்டு என மாற்றப்பட்டது. கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி செய்தியைப் படித்துக் கொள்ளவும்.


https://www.ndtv.com/india-news/lady-of-justice-goddess-of-justice-with-new-justice-statue-in-supreme-court-a-law-is-not-blind-message-6803654


சமீபத்திய நீதிமன்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது அரசியல்வாதிகளைப் போல அப்சர்வேஷன்கள் என்ற நிலையில் பல கருத்துக்களை நீதிமன்றங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அக்கருத்துக்கள் வழக்காகி மீண்டும் தடையாணைகள் பெறப்படுகின்றன.


இந்த யதார்த்தத்தை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


Wednesday, January 18, 2023

வக்கீல் நீதிபதி நீதிமன்றம் என்பவை என்ன?

அன்பு நண்பர்களே!

ஜனநாயகத்தின் வேர்களில் ஒன்றான நீதிமன்றம் என்றால் என்ன என்பது பற்றி மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் சாட்சியத்துடன்.

நீதிமன்றங்கள் மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி நீதி வழங்குகிறது என்று நீங்கள் நம்பிக் கொண்டிருந்தீர்கள் என்றால் இந்தப் பதிவைத் தொடர்ந்து படிக்காதீர்கள். விலகிச் சென்று விடுங்கள். 

தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களால் பலர் முன்னேற்றமடைந்தார்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து படிக்காதீர்கள், விலகிக் சென்று விடுங்கள். 

தன்னம்பிக்கை புத்தகங்கள் எப்போதும் வெற்றியைத் தந்து விடாது நண்பர்களே.  புத்தகம் எழுதியவருக்கு வருமானம் மட்டுமே தரும். படிப்பவர்களுக்கு தோல்வி தான் மிஞ்சும். தன்னம்பிக்கையை விட இன்னொரு விஷயம், வெற்றி அடைய மிகவும் முக்கியமானது.

PERSEVERENCE

இதைப் பற்றி ஏதாவதொரு சூழலில் எழுதுகிறேன். வெற்றி என்பது பணத்தில் உள்ளது என்ற நம்பிக்கை உடையவர்களுக்கு PERSEVERANCE முக்கியம்.

அறத்தின் வழி நின்று உண்மை என்னவென்று எழுதும் போது, உண்மைகள் வெளியாகும். அது அதிர்ச்சியை உங்களுக்குத் தரும். 

மலையாளத்தில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. இப்பதிவு சினிமா மார்க்கெட்டிங்க் இல்லை. 

உண்மை. 

அந்தப் படத்தின் பெயர்,”முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ்”.

இது ஹாட்ஸ் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. அனைவரும் அவசியம் பாருங்கள். நீதிதுறையில் இது ஒரு சிறு துளி. படத்தை அவசியம் பாருங்கள். அதிர்வீர்கள் என்பது உண்மையிலும் உண்மை.

வக்கீல்களுக்கு ஆக்சிடெண்ட் வழக்குகளில் கொட்டும் பணமழை பற்றிய மிகத் தெளிவான விரிவுரை முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ். 

இரத்தத்தின் பணம். 



தொழில் தர்மம் என்பார்கள் வக்கீல்கள். நீதிபதிகளோ வாய் திறக்க மாட்டார்கள்.  நீதிமன்றங்களோ வழக்கம் போல சாட்சியாய் இருக்கும். அரசோ எனக்கென்ன என்பது போல இருக்கும். மக்களோ நெருப்பில் நெளியும் புழுக்கள் போல கிடப்பார்கள்.

அறம் - தர்மம் - நீதி இவைகளில் நம்பிக்கையற்றவர்களாக இருப்பின், நீங்கள் கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டுமெனில் நீதித்துறையில் கால்பதியுங்கள். பெரிய அகலமான பைப்பில் கொட்டும் நீரைப் போல உங்களின் கல்லாவுக்குள் அருவியென பணமழை கொட்டும் என்பதை  என்னால் உறுதியாக சொல்ல முடியும். பல துறைகள் இருக்கின்றன. தேவை கொஞ்சம் புத்திசாலித்தனமும், எப்படி என்கிற வழிமுறையும் தான்.

இந்தப் படத்தை பார்த்து முடிக்கும் போது, வக்கீல் - நீதிபதி - நீதிமன்றம் என்பவை என்ன என உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நம்புகிறேன். 

மறந்து விடாதீர்கள். முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் படத்தை அவசியம் பார்த்து விடுங்கள்.

Saturday, June 26, 2021

நிலம் (84) - மோசடிப்பத்திரங்கள் ரத்து செய்ய நீதிமன்றம் போக தேவையில்லை

அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த பிளாக்கில் 2008லிருந்து எழுதி வருகிறேன். எனக்குள் தோன்றிய எழுத்தார்வத்தால் தொடங்கிய பிளாக் இன்று 13வது வருடத்தினை தொட்டிருக்கிறது. இன்னும் எழுதி வருகிறேன்.

சென்ற காலங்களில் ஃபேஸ்புக், டிவிட்டருக்கும் முன்பு பிளாக்குகள் பெரும் புகழடைந்து இருந்தன. இன்றைக்கு ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் இதரவைகள் அனைத்திலும் ஹீரோ வில்லன் ரேஞ்சுக்கு சண்டைகள் போட்டுக் கொள்கிறார்கள். மன நோய் அதிகரித்து விட்டது. 

அரசியல் சார்பு நிலை எடுப்பவர்கள், அதற்காக டிவிட், பதிவுகள் போடுபவர்கள் பலனுக்காக சார்ந்திருப்பார்கள். அவர்களைப் புரிந்து கொள்ளாது அவர்களின் ஒவ்வொரு கமெண்டுக்கும் பதில் அளிப்பது என்பது  மன நோய் ஆகி விடும். ஒதுக்கி விட வேண்டும். அழுக்குப் பிடித்த மன நோய் முற்றிய நிலையில் பொருள், பதவி, அதிகாரம் ஆகிய நோய் பீடித்தவர்களின் பதிவுகளுக்கு பதில் தரவே கூடாது. 

ஆனால் பிளாக்குகள் அப்படி இல்லை. இவை எழுதுபவர்களிம் மனதின் சிலேட். பதில் போடுபவர்களை நாம் சரியாக கையாளலாம். கோபம் வராது, கொந்தளிப்பு வராது. ஃபேஸ்புக், டிவிட்டர்கள் சந்தைக்குள் நடந்து செல்வது போல. ஆனால் பிளாக் சந்தைக்குள் இருக்கும் கடை போல. அழககாக அடுக்கப்பட்ட பதிவுத் தொகுப்புகள் மூலம் நாம் நம் எழுத்தை எடை போடலாம். ஒவ்வொரு காலத்திலும் இருந்த மனவோட்டத்தை அறியலாம். ஆனால் மேற்கண்டவைகளால் அப்படியெல்லாம் பயனடைய இயலாது. சிக்கலான வடிவமைப்பு கொண்டவை. அவர்களின் வருமானத்திற்கான வடிவமைப்பு. பிளாக் ஆக சிறந்தது எல்லாவற்றிலும் என்பது எனது எண்ணம்.

அந்த வகையில் அடியேன் நிரம்பவும் விரும்புவது பிளாக் தான். ஆனால் தொழில் நிமித்தம் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இருக்கிறேன்.

இந்த பிளாக் ஆரம்பகாலத்தில் கிட்டத்தட்ட 60 நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் படிக்கப்பட்டது. தற்போதும் சுமார் 40 நாடுகளில் இருந்து வாசிக்கப்படுவதாக ஸ்டேட்டிஸ்டிக்ஸ் சொல்கிறது. நாம் எழுதுவது எவருக்காவது பயன்பட வேண்டுமென்பதில் எனக்கு நிரம்ப ஆர்வமுண்டு. 

அந்த வகையில் நிலம் தொடர் பலருக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

சரி

இப்போது தலைப்புக்கு வந்து விடலாம்.

25.06.2021ம் தேதியன்று தமிழ் திசை தினசரியில் வெளியான ஒரு செய்தி கீழே இருக்கிறது.


மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் இந்த தீர்ப்பின் மீது எனக்கு பல்வேறு கேள்விகள் எழுந்தன.

இந்திய பதிவுத்துறைச் சட்டம் 1908னை படித்துப் பார்த்தேன். இந்தச் சட்டத்தின் பதினோறாவது பகுதி, ஐந்தாம் பிரிவில் பதிவாளர்கள் மற்றும் பதிவுத்துறை தலைவரின் ஆளுகை அதிகாரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அதில் சூழலுக்கு ஏற்ப விதிகளை வகுக்கலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படி பதிவுத்துறை தலைவருக்கு அதிகாரம் இருக்கும் பட்சத்தில் மோசடிப் பத்திரம் தயார் செய்தவர்களையும், பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளரின் மீதான நடவடிக்கைகள் குற்ற நடவடிக்கைகள் மீது நீதிமன்றத்தின் மூலம் பரிகாரம் தேடப்படல் அவசியம்..

பத்திரத்தினை ரத்து செய்து, அதனை பதிவுத்துறையிலும், வருவாய்துறையிலும் பதிவு செய்தாலும் கூட அந்த மோசடி பத்திரத்தின் அசலை வைத்து ஏமாந்தவர்களிடம் கடனோ, காப்புறுதியோ பெறும் பட்சத்தில் அந்த மோசடிப்பத்திரத்தின் மூலம் தொடரும் குற்றச் செயல்களை எப்படி அனுமதிக்க இயலும்? ஆகவே அப்பத்திரத்தின் நிலை குறித்து ஆவணங்களில் குறிப்பிட்டாலும் கூட அது பறிமுதல் செய்யப்படல் அவசியமாகிறது.

உண்மையான உரிமையாளர் நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை என்றாலும் கூட, குற்றவாளிகளுக்கான தண்டனையை நீதிமன்றம் தான் வழங்க வேண்டும். அதுபற்றிய குறிப்புகளையும் நீதிமன்றம் வழங்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் வழக்குதாரர் கோரிய பரிகாரத்துக்கான பதிலாகத்தான் தீர்ப்பினைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

இனிமேல் மோசடி பத்திரத்தின் பதிவுகள் வருவாய் துறை ஆவணங்களிலும், பதிவுத்துறை ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆகவே சொத்தின் உண்மையான உரிமையாளர் நீதிமன்றம் செல்லத்தேவையில்லை என்பது ஒரு சிறந்த தீர்ப்பு என்பதில் ஐயமில்லை.

ஆனால் வருவாய் துறையினர் அவ்வாறான தீர்ப்புகளையோ மோசடி ஆவங்களையோ பதிவு செய்தல் என்பது அவ்வளவு எளிதானதா? இந்த கேப்பில் கிடா வெட்டி விடுகின்றார்கள்.

நீதிதுறை, பதிவுத்துறை, வருவாய் துறை மூன்றும் நேர் அடுக்கில் இணைக்கப்பட்டால் ஒழிய இதற்கு தீர்வே இல்லை.