குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நீதிபதிகள். Show all posts
Showing posts with label நீதிபதிகள். Show all posts

Wednesday, January 18, 2023

வக்கீல் நீதிபதி நீதிமன்றம் என்பவை என்ன?

அன்பு நண்பர்களே!

ஜனநாயகத்தின் வேர்களில் ஒன்றான நீதிமன்றம் என்றால் என்ன என்பது பற்றி மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் சாட்சியத்துடன்.

நீதிமன்றங்கள் மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி நீதி வழங்குகிறது என்று நீங்கள் நம்பிக் கொண்டிருந்தீர்கள் என்றால் இந்தப் பதிவைத் தொடர்ந்து படிக்காதீர்கள். விலகிச் சென்று விடுங்கள். 

தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களால் பலர் முன்னேற்றமடைந்தார்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து படிக்காதீர்கள், விலகிக் சென்று விடுங்கள். 

தன்னம்பிக்கை புத்தகங்கள் எப்போதும் வெற்றியைத் தந்து விடாது நண்பர்களே.  புத்தகம் எழுதியவருக்கு வருமானம் மட்டுமே தரும். படிப்பவர்களுக்கு தோல்வி தான் மிஞ்சும். தன்னம்பிக்கையை விட இன்னொரு விஷயம், வெற்றி அடைய மிகவும் முக்கியமானது.

PERSEVERENCE

இதைப் பற்றி ஏதாவதொரு சூழலில் எழுதுகிறேன். வெற்றி என்பது பணத்தில் உள்ளது என்ற நம்பிக்கை உடையவர்களுக்கு PERSEVERANCE முக்கியம்.

அறத்தின் வழி நின்று உண்மை என்னவென்று எழுதும் போது, உண்மைகள் வெளியாகும். அது அதிர்ச்சியை உங்களுக்குத் தரும். 

மலையாளத்தில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. இப்பதிவு சினிமா மார்க்கெட்டிங்க் இல்லை. 

உண்மை. 

அந்தப் படத்தின் பெயர்,”முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ்”.

இது ஹாட்ஸ் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. அனைவரும் அவசியம் பாருங்கள். நீதிதுறையில் இது ஒரு சிறு துளி. படத்தை அவசியம் பாருங்கள். அதிர்வீர்கள் என்பது உண்மையிலும் உண்மை.

வக்கீல்களுக்கு ஆக்சிடெண்ட் வழக்குகளில் கொட்டும் பணமழை பற்றிய மிகத் தெளிவான விரிவுரை முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ். 

இரத்தத்தின் பணம். 



தொழில் தர்மம் என்பார்கள் வக்கீல்கள். நீதிபதிகளோ வாய் திறக்க மாட்டார்கள்.  நீதிமன்றங்களோ வழக்கம் போல சாட்சியாய் இருக்கும். அரசோ எனக்கென்ன என்பது போல இருக்கும். மக்களோ நெருப்பில் நெளியும் புழுக்கள் போல கிடப்பார்கள்.

அறம் - தர்மம் - நீதி இவைகளில் நம்பிக்கையற்றவர்களாக இருப்பின், நீங்கள் கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டுமெனில் நீதித்துறையில் கால்பதியுங்கள். பெரிய அகலமான பைப்பில் கொட்டும் நீரைப் போல உங்களின் கல்லாவுக்குள் அருவியென பணமழை கொட்டும் என்பதை  என்னால் உறுதியாக சொல்ல முடியும். பல துறைகள் இருக்கின்றன. தேவை கொஞ்சம் புத்திசாலித்தனமும், எப்படி என்கிற வழிமுறையும் தான்.

இந்தப் படத்தை பார்த்து முடிக்கும் போது, வக்கீல் - நீதிபதி - நீதிமன்றம் என்பவை என்ன என உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நம்புகிறேன். 

மறந்து விடாதீர்கள். முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் படத்தை அவசியம் பார்த்து விடுங்கள்.

Monday, February 20, 2017

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம்

இந்திய அரசியலும், அரசும் அதன் இயங்கும் விதத்தையும் பற்றியும் எழுத ஆரம்பித்தால் வாழ்க்கையே வெறுத்துப் போய் விடும். அரசமைப்பியல் அந்தளவுக்கு கேடுகெட்டதாய் ஆகி விட்டது. இனி மாற்றம் வரும் என்பதெல்லாம் நடக்கும் என்று எவரும் நம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. இருப்பினும் மாற்றம் ஒன்றே மாறாதது என்றொரு இயற்கைச் செயல்பாடு இருக்கிறது என்பதால் ஓர் அணுவத்தளவும் நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது. ஆயாசமாக இருந்தாலும் அந்த நம்பிக்கை தரும் ஊக்கம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

இந்தியாவில் தென் தமிழகம் மட்டுமே மனிதர்கள் வாழக்கூடிய தட்ப வெப்ப நிலைகளுக்கு தகுந்ததாகும். தென் தமிழகத்தில் மட்டுமே ஆன்மீகம் தழைத்திருக்கிறது. உலகிற்கே உயர்வு வாழ்வு நெறி காட்டிய தமிழும், தமிழர்களும் கலை மோகம் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தின் அடி வேரினையே பிடுங்கி எறிந்து கொண்டிருக்கின்ற அவக்கேடு எந்த உலகத்திலும் உள்ள எந்த ஒரு இனத்திலும் நடக்காத ஒன்று. தமிழ், தமிழ் என்பார்கள். ஆனால் ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவார்கள். தமிழர்கள் பாரம்பரியம் என்பார்கள். ஆனால் வீட்டிலோ ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஜீன்ஸ் உடைகள், சல்வா துப்பட்டாக்களை உடுத்துவார்கள். மலையாளத்துக் காரர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். ஓணம் பண்டிகைகளில் பாருங்கள். 

ஆனால் தமிழர்களோ தமிழ் பண்டிகைகளின் போது என்ன உடுத்துவார்கள்? வேஷ்டி எங்கே போனது? சேலை எங்கே போனது? தாவணிகள் எங்கே சென்றன? தானும் கெட்டும் தன் இனத்தையும் கெடுத்துக் கொண்டு வாழும் ஒரு இனம் இந்த உலகில் இருக்கிறதென்றால் அது தமிழினம் மட்டுமே. இனி எந்தக் காலத்தில் தமிழர்கள் உருப்பட்டு உருப்படிக்கு வருவார்கள் என்பதெல்லாம் நடக்கக்கூடிய ஒன்றா? தன் இனத்துக்கு ஒரு அமைப்பினை உருவாக்கி தன் இனத்தையும் தன் மொழியையும் வளர்த்து வரும் பிராமணர் சங்கம் போல தமிழர்கள் தங்களையும் தங்கள் மொழியையும் வளர்த்திட வேண்டாமா? 

தமிழர்கள் எங்கே வளர்க்கின்றார்கள்??? குறுந்தாடிகளைத்தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மலைகள் இணையத்தில் வெளியான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம் கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன். படித்து வையுங்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்றுமுகம்


பதினைந்தாயிரம் பேர் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று தெரியாமலே யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து வெளிவந்த விஷக்காற்றினால் உயிரை விட்டனர். லட்சக்கணக்கான பேர் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டனர். மூளை வளர்ச்சி குன்றியும், கண் போயும், இன்னும் சொல்ல முடியாத நோய்களுக்கெல்லாம் ஆட்பட்டு இன்றும் நோயின் பிடியில் சிக்கி உயிரோடு வேதனைப்பட்டு வருகின்றனர். ஆலையின் அலட்சியத்தால் நடந்த இந்தச் சம்பவத்தின் முதல் குற்றவாளி ஆண்டர்சன். மற்ற குற்றவாளிகள் இந்த ஆலையின் நிர்வாகத்திலிருந்தவர்களும், டெக்னீஷியன்களும். இந்த வழக்கு முதல் குற்றவாளி இல்லாமலே நடந்து கொண்டிருந்தது.

இந்தியாவையே உலுக்கிய இந்தப் படுபயங்கர கொலைகளுக்கான தீர்ப்பு இருபத்து ஆறு ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட போது, இத்தீர்ப்பினைப் பற்றி வட மாநில மீடியாக்களில் சூடான விவாதங்கள் நடத்தப்பட்டன. தீர்ப்பு வெளியான அன்று ஆண்டர்சன் உயிரோடு இருந்தார். அவர் எங்கிருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று டிவிக்கள் கண்டுபிடித்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அவரை கைது செய்யக்கூட இந்திய அரசால் முடியவில்லை. இதே ஒரு சாதாரணன் என்றால் சட்டமும் சட்டத்தின் காவலர்களும் என்னவெல்லாம் செய்வார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.

இந்த தீர்ப்பை கூர்ந்து அவதானிக்கும் போது நெஞ்சை உலுக்கும் சில உண்மைகள் நிர்வாணமாக வெளிப்படுகின்றன. இந்த உண்மைகள் சாதாரண மக்களிடையே இந்தியா ஒரு ஜனநாயக நாடா என்ற கேள்விக்குறி எழுவதில் வியப்பேதும் இல்லை. ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்ற மாயையினால் ஆளும் அதிகார வர்க்கமும் அதற்கு துணையாக இருக்கும் கோடீஸ்வரர்களும் எவ்வாறெல்லாம் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள் அப்பட்டமாகத் தெரியும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் இந்தியப் பிரஜைகள் என்று சட்ட மேதை அம்பேத்கார் எழுதிச் சென்றார். ஒரு நீதிபதி நில மோசடியில் சிக்குகின்றார். அரசு புறம்போக்கு நிலத்தை தன் பதவியை வைத்து கபளீகரம் செய்கிறார். பொதுமக்களை அந்த நிலத்திற்குள் வர விடாமல் தடுக்கிறார். மீடியாக்களில் இந்த விஷயம் வெளிப்பட்ட பிறகு அரசு நடவடிக்கை எடுக்க ஆரம்பிக்கின்றது. விசாரணை செய்து அந்த நீதிபதி ஆக்கிரமிப்பு செய்துள்ள விஷயம் பற்றி அறிக்கை அளிக்கின்றது. ஆனால் சட்டத்தை அமுல் படுத்தி வரும் உச்ச நீதிமன்றம் சர்ச்சையில் சிக்கியவரை வேறு ஊருக்கு மாறுதல் செய்கிறது. சர்ச்சையில் சிக்கியவர் பணி நாள் முடிவடையும் வரை நீதிபதியாகத்தான் இருந்து ஓய்வு பெறுகிறார்.

அரசு நிலத்தை தன் அதிகாரத்தால் கபளீகரம் செய்யும் நீதிபதியைத் தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லையா? சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் இந்த நீதிபதி தண்டிக்கப்பட கூடியவர் என்றால் அது ஏன் இன்னும் செய்யப்படவில்லை? இந்திய நீதிபதிகள் தங்களைச் சட்டத்திற்கும் மேலானவர்களாக, கடவுளாக கருதிக் கொள்கிறார்கள் என்பதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதும் இதற்கு முன்பு நடந்த சில சம்பவங்கள் மூலமாக தெரிய வருகிறது. அதாவது நீதிபதிகள் விஷயத்தில் அவர்கள் கொலைக் குற்றமே செய்தாலும் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பது மற்றொரு உண்மை என்பதை இவ்விடத்தில் புரிந்து கொள்க.

1976ல் ஜஸ்டிஸ் கே. வீராச்சாமி மேல் சிபிஐயினால் பதிவு செய்யப்பட்ட கரப்ஷன் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய நீதிமன்ற வரலாற்றிலே 108 எம்பிக்கள் ஒன்று சேர்ந்து திரு ஜஸ்டிஸ். கே.வீராச்சாமியின் மருமகன் திரு ஜஸ்டிஸ் ராமசாமி மீது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக நடவடிக்கை எடுக்க கையெழுத்திட்ட சம்பவங்களையும் பத்திரிக்கைகள் வாயிலாக நாம் அறியலாம். இந்திய நீதிபதிகள் சில பேர் மீது இருக்கும் வழக்குகளை மெயில் டுடே என்ற பத்திரிக்கை 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 23ம்தேதி அன்று கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது. கட்டுரையினை இந்த இணைப்பில் படிக்கலாம்.
ஒரு நீதிபதி இரு நீதிபகள் என்று இல்லை. ஊழல் வழக்கிலும் மற்ற வழக்குகளிலும் எண்ணற்ற இந்திய நீதிபதிகள் சிக்கினார்கள். இது பற்றிய கட்டுரைகள் பல பல பத்திரிக்கைகளில் வெளி வந்தன. ஆனால் சட்டத்தினால் இவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஓய்வு பெற்று இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஓய்வூதியம் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது போன்ற குற்றச்செயல்களில் சாதாரணன் ஈடுபட்டால் அதே சட்டத்தின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஏன் முதலில் நீதிபதிகளைப் பற்றி எழுதுகிறேன் என்றால் சட்டங்களை அமுல் படுத்துவதும், சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதும் நீதி மன்றங்கள்தான். ஆனால் நீதிமன்றத்தின் தலைவர்களான நீதிபதிகளாலே சட்டங்கள் மீறப்படுவது என்பது சட்டத்திற்கே சட்டம் எதிரியாக இருப்பது போன்றது. ஜனநாயக நாடான இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்வதில் சிறு துளி உண்மை இருக்கிறதா என்றால் நம்புவது கடினம். அடுத்து மற்றொரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

அடுத்து யூனியன் கார்பைடு ஆலையின் அதிபர் ஆண்டர்சன், ஆலையின் அலட்சியத்தால் நடந்த விபத்திற்குப் பிறகு அரசு செலவிலே, அரசு விமானத்திலே, முதலமைச்சரின் ஆலோசனையின் படி, காவல்துறையினரின் பாதுகாப்போடு அவரது சொந்த நாட்டிற்கு எந்தவித இடையூறும் இன்றி அனுப்பி வைக்கப்படுகிறார். அவர் இந்தியாவில் இருந்தால் சட்ட ஒழுங்கு அமைதிக்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று காரணம் சொன்னார் அன்றைய மாநில முதலமைச்சர் திரு.அர்ஜூன் சிங். ஒருவரால் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டால் அவரைக் கைது செய்வார்கள் என்று படித்திருக்கிறோம். ஆனால் ஆண்டர்சன் விசயத்தில் நடந்த சம்பவம் அவரைப் பாதுகாக்க மட்டுமே என்பது தான் உண்மை. பதினைந்தாயிரம் இந்திய மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், கொலைக்குக் காரணமானவரை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதில் அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இருந்த முதலமைச்சர் துணிந்திருக்கிறார். இவரை நம்பி ஓட்டுப் போட்ட மக்களின் நம்பிக்கைக்கு இவர் செய்திருக்கும் துரோகம் என்னவிதமானது என்று யோசித்துப் பாருங்கள். அதுவும் ஒரு ஓட்டுக் கூட போடாத மாபெரும் கோடீஸ்வரனைப் பாதுகாக்க துணிந்த முதலமைச்சர் ஏழைகள் கொல்லப்பட்டது குறிந்து சிறு வருத்தமும் இன்றி செயல்பட்டதை எண்ணினால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மறு முகம் பற்றிய நிர்வாணமான உண்மையை தெரிந்து கொள்ளலாம்.

தீர்ப்பு வெளியிட்ட நாளன்று அமெரிக்காவில் வசதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வரும் ஆண்டர்சனை, நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை சிபிஐயினால் கைது செய்ய முடியவில்லை. அவர் இருக்கும் இடத்தையும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டது. அதன் பிறகு அவரை இந்தியா கொண்டு வர முயற்சிக்கப்படும் என்று சொல்கிறார்கள் ஆட்சியாளார்கள். ஆனால் சமீபத்தில் ஆண்டர்சன் இறந்தே போய் விட்டார். ஆண்டர்சனின் அலட்சிய நிர்வாகத்தால் கொல்லப்பட்டவர்கள் ஏழைகள். ஒன்றுமறியாத அப்பாவிகள். அவர்கள் செய்தது ஒன்றே ஒன்றுதான். இந்தியாவில் பிறந்ததுதான் அவர்கள் செய்த குற்றம். ஏழைகள் சொல் அம்பலம் ஏறாது என்ற பழமொழிக்கு ஏற்ப நீதிமன்றமும் 26 ஆண்டுகள் கழித்து வழங்கிய தீர்ப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையின்மையும், ஆளும் அதிகார வர்க்கத்தினரின் பாசம் எந்தப்பக்கமாக இருக்கிறது என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

பதினைந்தாயிரம் உயிரைப் பறிக்க காரணமாயிருந்தவர்களை, ஜாமீனில் செல்லக்கூடிய வகையில் தீர்ப்பு வழங்கி இருப்பது வழக்கையே இல்லாமல் ஆக்கும் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். இருபத்தைந்தாயிரம் ரூபாய் ஜாமீன் தொகை செலுத்தி குற்றவாளிகள் அனைவரும் விடுதலையாகி விட்டார்கள். இது தான் ஏழைகள் சம்பந்தப்பட்ட வழக்கின் நிலைமை.

மும்பையில் தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 150 பேர். சட்டம் இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொண்டது? வழக்கு விசாரணையை ஒரே வருடத்தில் முடித்து தீர்ப்பும் வழங்கி விட்டது. ஏனென்றால் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள். தாக்கப்பட்டது இந்தியக் கோடீஸ்வரரின் ஹோட்டல். அதனால் வழக்கு விரைந்து முடிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டு விடட்து. யூனியன் கார்பைடு ஆலையினால் கொல்லப்பட்டவர்கள் ஏழைகள். ஏழைகள் கொல்லப்பட்டதற்கு தீர்ப்பு 26 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கின் தீர்ப்போ நகைப்புக்கிடமான ஒன்றாகும்.

சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் இரண்டு வழக்குகளிலும் தீர்ப்பு வெளியிடப்பட்ட நாட்கள் ஏன் வேறுபட்டதாக இருக்க வேண்டும்? நீதிபதிகளை சட்டம் ஒன்றும் செய்யாது. பணக்காரர்களை சட்டம் ஒன்றும் செய்யாது. அரசியல்வாதிகளை சட்டம் ஒன்றும் செய்ய முடியாது. அதிகாரவர்க்கத்தினரை சட்டம் தீண்டிக்கூட பார்க்க முடியாது என்றால் பின்னர் ஏன் சட்டம் அனைவருக்கும் சமமானது என்று சொல்கின்றார்கள்? ஏழைகளைக் கட்டுப்படுத்தவும், ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கவும் தான் சட்டம். ஏழைகள் சட்டத்தை மீறக்கூடாது என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள். இப்போது சொல்லுங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமமானதா? சட்டத்திற்கு வேறு முகங்களும் இருக்கின்றன. மீண்டும் இங்கு ஒரு எழுத்தாளரின் எழுத்தை மேற்கோள் காட்டி பத்தியை முடிக்கிறேன். ”ஏழைகள் அதிகாரவர்க்கத்தினரின் இரக்கத்தின் பால் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்”.

Saturday, November 5, 2016

வழக்குமன்றங்கள் வழக்குகள் விவாதங்கள் உண்மை என்ன?

சாமானியனுக்கு கோர்ட்டுகள் தான் தர்மம் இருக்கும் இடம். ஒருவர் கூடவா நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்? என்று மக்கள் பேசிக் கொள்வார்கள். அந்தளவுக்கு கோர்ட்டுகளின் மீது நம்பிக்கை கொண்டுள்ள சாமானிய மக்களின் எண்ணம் நிறைவேறுகிறதா என்ற முடிவுக்கு வர முடியவில்லை. காரணம் அரசியல். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பதவிக்கு வரும் அரசியல் நீதி மன்றங்களைப் பந்தாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு நீதிபதி பிரதமர் முன்பே அழுதார். அதையும் நாம் தினசரிகளில் படித்தோம். ஆனால் என்ன நடந்தது? ஒன்றுமில்லை.

இந்தியாவில் கோர்ட்டுகளை நிர்வகிக்க தனி அமைப்பினை உருவாக்கினால் தான் நீதி நிலை நாட்டப்படும். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை கோர்ட்டுகள் ஒரு வரையறைக்குள் அழுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். நீதிபதிகள் முதலமைச்சரைச் சந்தித்தே ஆக வேண்டிய சூழல் உண்டாகத்தான் செய்யும். அது நீதி பரிபாலனத்துக்கு சரியாக வராது. தேர்தல் கமிஷன் போல தனி அமைப்பு நீதிமன்றங்களை நிர்வகிக்கவும், நீதிபதிகளை நியமிக்கவும், சம்பளம் கொடுக்கவும், செலவுகளைக் கவனிக்கவும், சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும் தேவை. அவ்வாறு அமைத்திடாவிடில் நீதிமன்றங்களின் குரல்வளை நெறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். அதிலும் முக்கியமாக தீர்ப்புகள் திருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகள் தொடர்கதையாக நடந்து கொண்டே இருக்கும். கீழ்கோர்ட்டில் தண்டனை மேல் கோர்ட்டில் விடுதலை என்றால் நீதிமன்றங்களின் மீது உள்ள நம்பிக்கை சிதைந்து போகும் அல்லவா? இதற்கொரு விடிவுகாலம் கிடைக்கக் கூடிய எல்லா சாத்தியங்களையும் அரசியல் அழித்துக் கொண்டே வருகிறது.

புதிய சிந்தனை கொண்ட தலைவர்களை தமிழகத்தில் இன்றைக்கு காண்பது அரிதாகி விட்டது. தமிழகத்தினைப் பொறுத்தவரை தமிழ் சமூக மேம்பாட்டுச் சிந்தனையும், செயலூக்கமும் கொண்டவர்களையும் புதிய சிந்தனாவாதிகளையும் பார்க்க முடிவதில்லை.

ஒவ்வொருவரும் இருக்கும் கட்சிகளுக்கு ஜால்ரா வீசுபவர்களாகவே இருக்கின்றார்கள். ஏதோ ஒரு கட்சியில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். தனி ஆவர்த்தனம் செய்ய முயன்றால் ஆக்டோபஸ் போல கட்சிகள் அவர்களை அழித்து விடுகின்றன. எவரையும் புத்தம் புதிய சிந்தனைகளோடு வெளி வர விடுவதில்லை.

பசி இருந்தால் தான் புதிய சிந்தனைகளும், ஆக்கங்களும், புதிய சிந்தனாவாதிகளும் வெளி வருவர். ஆனால் இங்கு எல்லாமே இலவசமானதாய் பசி கொஞ்சமேனும் ஆற்றப்படுகிறது. சோம்பேறிகள் நிறைந்து விட்டனர். அது ஒரு பக்கம் இருக்கட்டும். 

ஒரு வழக்குப் பற்றி சுவாரசியமான கதை ஒன்றினை ஓஷோவின் புத்தகத்தில் படித்தேன். படித்துப் பாருங்கள். செம ரகளையாக இருக்கும்.


இனி ஓஷோவின் பத்தி,

சட்டத்தொழில் உலகிலிருந்து மறைகிற போது 90 சதவீதம் சூழ்ச்சிகளும் அதனோடு சேர்ந்து மறைந்து விடும். சட்டம் தெரிந்தவர்களே அதிகமதிக குழப்பத்தை உண்டாக்குபவர்கள்.

என் துணை வேந்தர்களில் ஒருவர் மாபெரும் சட்ட வல்லுனர். உலகப் புகழ் பெற்ற சட்ட வல்லுனர். அவர் மீண்டும் மீண்டும் பின்வரும் சம்பவத்தைக் கூறுவது வழக்கம். ஒரு தடவை ஒரு இந்திய மகாராஜாவுக்காக தனி நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் வாதாடிக் கொண்டிருந்தார். அவர் ஒரு பெரிய குடிகாரர். முந்தின நாள் இரவு அவர் நிறையக் குடித்திருந்தார். அதன் மப்பு இன்னும் இருந்தது. எனவே அவர் தான் மகாராஜாவுக்கு சார்பாக வாதாடுகிறோமா எதிராக வாதாடுகிறோமா என்பதையே மறந்து விட்டார். எனவே ஒரு மணி நேரமாக மகாராஜாவுக்கு எதிராக அவர் பேசினார். மகாராஜாவுக்கு வேர்த்துக் கொட்டியது. அவரது உதவியாளர்கள் நடுங்கினார்கள். ”என்ன செய்து கொண்டிருக்கிறார் இவர்?”. தேநீர் இடைவேளை வந்தது. அவர்கள் அவரிடம் சொன்னார்கள், “என்ன காரியம் செய்து விட்டீர்கள்? நம் கட்சிக்காரரை ஒழித்துக் கட்டி விட்டீர்கள், இனி அவரை காப்பாற்ற வழியே இல்லை”

“என்ன நடந்து விட்டது?” என்றார் அவர்.

“நம் சொந்தக் கட்சிக்காரருக்கே எதிராக இவ்வளவு நேரமும் பேசிக் கொண்டிருந்தீர்கள்!”

“கவலையை விடுங்கள், இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது” என்றார்.

மறுபடியும் வழக்குமன்றம் தொடங்கியது. அவர் சொன்னார்,”கணம் கோர்ட்டார் அவர்களே, ஒரு மணி நேரமாக நான் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்ததற்கு நன்றி. ஏனென்றால் எதிர்கட்சியார் முன் வைக்க சாத்தியமான எல்லா வாதங்களையும் நான் தான் தந்து கொண்டிருந்தேன். இனி நான் என் கட்சிக்காரரின் தரப்பைச் சொல்வேன்”

பின் தன் வாதங்களையே அவர் மறுத்து அந்த வழக்கில் வென்றார்.

விஷயம் விளங்கி விட்டதா? வழக்காடு மன்றங்களில் வக்கீல்களாக இருந்தவர்களே நீதிபதிகளாக பதவியேற்கின்றார்கள் என்கிற போது மனதுக்குள் சிறிய அவநம்பிக்கை ஏற்பட்டு விடுவதை நாமெல்லாம் உணர்கிறோம். ஆனால் இருந்தும் என்ன பயன்? நம் சட்டம் அப்படி இருக்கிறது.

இந்திய மக்களின் மீது பற்றுக் கொண்ட, பதவிக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப்படாத எவனொருவன் தலைவனாக வருகின்றானோ அந்த நாளில் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் பல்வேறு அதிகார சட்டங்களை நீக்கி மக்களுக்கு நன்மை புரியும் சட்டங்கள் உருவாக்கப்படும் என்று நம்புவோம். இந்தியத்தாய் தன் குடும்பத்தினை நிர்வகிக்க தக்கப் புதல்வனை உருவாக்குவார் என்று நம்புகிறேன்.

நீதித்துறை பரிபாலன முறை மாற்றப்பட்டால் நாட்டில் ஊழலும் இருக்காது. அதிகார அத்துமீறலும் இருக்காது. அவரவர் அவரவர் வேலையைப் பார்ப்பார்கள். 

Thursday, September 22, 2016

சார் நீங்க இதைப் படித்தே ஆகணும்

நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. 

NEW DELHI: Judges do not need certificates from anybody, the Supreme Court on Tuesday said while rejecting a PIL seeking setting up of a "public body", independent of the executive and judiciary, to ensure fair appointment of judges in High Courts and the apex court.

"We don't need a certificate from anyone on earth," a bench comprising justices Arun K Mishra and U U Lalit said.The observation came when it was alleged that there has been nepotism in the appointment of judges in High Courts and the apex court.

The bench disagreed with the plea of National Lawyers' Campaign for Judicial Transparency and Reforms that a body independent of executive and judiciary to select Judges to the higher judiciary was needed, as those talented amongst a vast majority of lawyers were never considered by the collegium for selection as Judges.

"We are dismissing it. We see no merit in this petition ...Your ideas may be good or bad, we are not commenting. But what all you are asking cannot be done without quashing certain constitutional provisions," the bench said.

When advocates Mathew J Nedumpara and A C Philip, appearing for the lawyers' body, referred to the ongoing vetting by the Centre of the Memorandum of Procedure (MoP) to govern judges' appointments, the bench said "we will not comment on MoP. Can a proposed MoP be questioned? Let it be crystallised. Let it come out ...then we will see".

The bench said the setting up of such a body would amount to amending the Constitution which cannot be done by the apex court.

The lawyers' body has contended that an independent judge selection body was needed to end the alleged control of the "elite section" over judiciary.

The selection of kith and kin of serving and former judges and senior advocates as Judges in higher judiciary should and must stop, the lawyers' body said in its plea.

The PIL has alleged that the "common deserving lawyers" are usually not considered for appointment as judges in the higher judiciary and only those close to the judges of the Supreme Court and High Courts or politicians or big industrial houses got chosen.

செய்தி உதவி :

செய்தியைப் படித்து விட்டீர்களா? இனி கீழே இருக்கும் படத்தைக் கிளிக் செய்து படியுங்கள்.


கர்நாடகாவில் நேற்று காவிரி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை நிறைவேற்ற இயலாதவாறு சட்டசபைக் கூட்டத்தினைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பப் போகின்றார்கள் என்றொரு செய்தியை டிவி சானல்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. உச்ச நீதிமன்றம் இனி என்ன செய்யும்? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பார்ப்போம்!

இந்தக் கர்நாடகக்காரர்களின் போராட்டத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. காவிரி நீரினைப் பெறுவது மூன்று  மாநிலங்கள். கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகம். ஆனால் அடி விழுவது தமிழனுக்கு மட்டும். கேரளாக்காரர்களும், புதுச்சேரிக்காரர்களும் புண்ணியவான்களா? காலம் காலமாக இந்தப் பிரச்சினை தமிழர்களுக்கு எதிராக மட்டுமே கிளப்பப்படுகிறது. இது என்னவிதமான அரசியல் என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை.