குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label உச்ச நீதிமன்றம். Show all posts
Showing posts with label உச்ச நீதிமன்றம். Show all posts

Sunday, November 14, 2021

மக்களாட்சியை சர்வாதிகாரம் செய்கிறதா உச்சநீதிமன்றம்? - ஓர் பார்வை

காலச்சுவடு நவம்பர் 2021 இதழில் வெளியான தலையங்கமும், பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் எழுதிய மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளா? என்ற கட்டுரையும் எனக்குள் ஒரு சாமானியன் என்ற வகையில் பல்வேறு வகையான அதிர்ச்சியை உருவாக்கியது.

தலையங்கத்திலே சு மோட் என்ற லெட்டர் ஆஃப் ஸ்பிரிட் எனும் சட்டப்பிரிவின் துணை கொண்டு தானாகவே வழக்கு - விசாரணை செய்யும் சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் ஆசிரியர். 

சட்டம் இயற்றும் மன்றங்கள், அரசு நிர்வாகம், நீதிமன்றம் மூன்றும் தங்கள் எல்லைக்கோட்டுக்குள் நின்று கொண்டால் நல்லது என்கிறது தலையங்கம்.

லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய அரசின் அதாவது மோடியின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் அமைச்சரின் மகன் காரை ஏற்றிக் கொலைச் செய்த சம்பவம்

ஜார்கண்ட் மாநிலத்தில் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்த நீதிபதி மீது வேனை ஏற்றிக் கொன்ற சம்பவம்.

சாத்தான் குளத்திலே காவல்துறையினால் அடித்துக் கொள்ளப்பட்ட தந்தை, மகன் கொலைச் சம்பவம்.

நீட் தேர்வைக் குறித்து சூர்யா தெரிவித்த கருத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முனைந்த சம்பவம் என மேலே கண்ட நான்கு நிகழ்வுகளுக்கு உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணை செய்வது சரியா என்றொரு கேள்வியை தலையங்கம் முன் வைக்கிறது.

அரசு நிர்வாகம் செய்ய வேண்டிய வேலையினை நீதிமன்றம் செய்வது எந்த வகையில் சட்டத்துக்கு உட்பட்டது? என்றும் அசாதாரணமான சூழலில் உச்ச நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டிய சட்டத்தின் உட்பிரிவை வைத்துக் கொண்டு எப்போதும் சாதாரண ஒன்று போல தானாகவே முன் வந்த் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துவது சரியாக இருக்குமா என்றும் கேள்விகளை தலையங்கம் முன்வைக்கிறது.

அதே நேரத்தில் பிரசாந்த் பூஷன் நீதிபதிகளைக் குறித்து தெரிவித்த விமர்சனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து ஒரு ரூபாய் அபராதம் விதித்தது சரியா என்றும் கேட்கிறது.

ஜெ வழக்கிலே  நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பிற்காக அவருக்கு வழங்கப்பட்டது தான் என்ன? உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்த போது, தவறாக தீர்ப்பினைக் கொடுத்த நீதிபதி குமாரசாமியின் மீதான நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது எனில் நீதிமன்றம் சர்வாதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று ஒரு சாமானியன் நம்ப வேண்டிய சூழல் உருவாவதை தடுக்க முடியாது. 

இதே உச்ச நீதிமன்றத்தை நான்கு நீதிபதிகள் கடுமையாக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் விமர்சித்த போது ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்ற கேள்வி சாமானியன் மனதில் எழுகிறது. நீதிமன்றம் சர்வாதிகாரமாகச் செயல்படுகிறதா என்றும் கேட்கத் தோன்றுகிறது.

இதை நிரூபிக்கும் பொருட்டு பி.ஏ.கிருஷ்ணன் ஒரு சில கருத்துக்களை தன்  கட்டுரையில் முன் வைக்கிறார்.

கட்டுரையினை ஒவ்வொரு தமிழரும் அவசியம் படித்துப் பாருங்கள். நம்மைச் சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது? எப்படி நாம் அடிமையாக இருக்கிறோம் என்ற உண்மை முகத்தில் அறையும். அதுமட்டுமல்ல கோவிட் பேண்டமிக் போன்ற நிகழ்வுகளை அரசுகள் மக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதையும் காணலாம். 

ஏர்போர்ட்டுகளில் கோவிட் செக்கிங்க் செய்ய அடிக்கப்படும் கொள்ளை பற்றி ஒன்றிய அரசுக்குத் தெரியாதா? தெரிந்தும் ஏன் அமைதியாக இருக்கிறது? ஆளும் பாஜக அரசு சாமானியனுக்கு ஆட்சி செய்யவில்லை என்கிற எண்ணத்தினை நாள் தோறும் வலுப்படுத்தி வருகிறது.

கீழே இருக்கும் படத்தினை கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் தெரிய வேண்டுமென்ற அவசியம் கருதி காலச்சுவடு அனுமதிக்கும் என்ற நிலையில் இப்பகுதியினை இங்கு பதிக்கிறேன். நன்றி : காலச்சுவடு மற்றும் ஆசிரியர் இருவருக்கும்.




தெளிவாகப் படிக்க வேண்டுமெனில் சப்ஸ்கிரைப் செய்யுங்கள். அடியேன் செய்து வைத்து உள்ளேன். ஆன்லைனில் படிக்க 200 ரூபாய் என நினைக்கிறேன். காலச்சுவடு சமகால நிகழ்வுகளை அலசுகிறது. அனைவருக்குமான அற்புதமான இதழ் இது.


Friday, August 21, 2020

பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க வேண்டுமா? - அலசல்

அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பதிவினால் எனக்குச் சட்ட சிக்கல் வருமா என்று தெரியாது. ஆனாலும் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.

அறம் கொன்றார்க்கு அறமே கூற்றாகும் என்கிறது மூதுறை. நீதியையும், தர்மத்தையும் கொன்றார்க்கு, அதுவே எமனாக வரும் என்பது அர்த்தம்.

எனக்குத் தெரிந்து ஜெயலலிதாவை விட, சசிகலாவை விட உயர் அதிகாரத்தில் இந்தியாவில் எவரும் இருந்திருக்க முடியாது. ஆனானப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியாரையே தூக்கி ஜெயிலில் போட்டவர்கள்.

அப்பேர்பட்டவர்களுக்கு அறமே கூற்றாக இருந்து தர்மத்தை நிலை நாட்டியது. ஜெ சசி இருவரும் ஜெயிலுக்குப் போவார்கள் என்று எவராது நினைத்திருப்போமா? ஆனால் அறம் அதைச் செய்ய வைத்தது. 

இவர்களுக்கு வழங்கிய தண்டனையை ரத்துச் செய்த நீதிபதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரியவில்லை. இச்செயலை எவரும் நியாயப்படுத்த இயலுமா? தர்மத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

அறம் கொன்ற எந்த நீதிபதிக்கும் இதுதான் நடக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. எவரும் தப்ப முடியாது தர்மத்தின் தண்டனையிலிருந்து. 

அறம் கொன்ற ஒவ்வொருவரின் வேரும் வேரடி மண்ணும் முற்றிலுமாக துடைக்கப்படும் என்று சாத்திரங்களும், தர்மத்தைப் போதிப்பவர்களும் சொல்கிறார்கள்.

இராமருக்கு கோவில் அறவழியில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இராமன் என்றால் நீதி, அறம் என்று வாழ்ந்தவர் என புராணங்கள் சொல்கின்றன. அவருக்கு இப்படியான ஒரு நிலையில் கட்டப்படும் கோவில் பற்றி எதிர்கால சந்ததியினர் மிச்சம் சொச்சம் இல்லாமல் விமர்சிப்பார்கள்.

குறைந்த பட்சம் 30 வருட அனுபோக பாத்தியதை அல்லது கோவில் இருந்ததிற்கான சிறு சாட்சிகளையாவது நீதிமன்றம் கவனத்தில் கொண்டு, தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டுமென்று பலரும் கருத்துக்களைத் தெரிவித்து இருக்கின்றார்கள்.

நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்கு சட்டம் வளையுமானால் அது வளைந்து போன சட்டம் தான். வளைந்த சட்டத்தை ஸ்ரீராமரின் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருக்கும் இராம பாணங்கள் சரி செய்யும் என அறத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் நம்புகின்றார்கள்.

நீதிமன்றத் தீர்ப்பினை மதிக்காத எத்தனையோ சம்பவங்கள் இந்தியாவில் நடந்திருக்கின்றன. அதையெல்லாம் கவனத்தில் கொண்டு, தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்திருக்கலாம். 

காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை கர்நாடகா அப்பட்டமாக மீறியது. ஆனால் அப்போதெல்லாம் உச்ச நீதிமன்றம் அவமதிப்பாக கருதவில்லை. ஏனென்று தெரியவில்லை. தனி மனிதனுக்கும் அரசுக்கு வெவ்வேறு சட்டங்கள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை.

ஒரு சிலசூழலில் அறச் சீற்றம் எழுவதும், அதன் தொடர்ச்சியாக கோபத்தில் வார்த்தைகள் வருவதும் இயல்பு. இது ஒவ்வொருவருக்கும் வரும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேட்டியே கொடுத்த முதல் இந்திய வரலாறும் உண்டு. 

இந்திய அரசு - நீதிபதிபதிகள், தீர்ப்புகள் விஷயத்தில் சட்டத்திற்கு புறம்பான வகையில் தீர்ப்புக் கொடுக்கும் நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்படிக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் கீழ் நீதிமன்ற தீர்ப்புகள் தள்ளுபடி செய்யும் போது, அவ்வகையான தீர்ப்புகள் மீது விசாரனைகள் வேண்டும் என சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட எவரும் விரும்புவார்கள். ஒவ்வொரு கோர்ட்டுக்கும் ஒவ்வொரு சட்டம் இருக்க முடியாது அல்லவா?

எதேச்சதிகாரம் நீதிமன்ற விஷயத்தில் எடுபடக்கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு ஏழை இந்தியன் அரசுக்குச் செலுத்தும் வரியில் நீதிபதிகள் சம்பளம் பெறுகிறார்கள். அவர்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை ஏழை இந்தியன் அறிய விரும்புகிறான்.

இதோ கீழே ஒரு சில நீதிபதிகளின் வாழ்க்கை இருக்கிறது. 

பிரஷாந்த் பூசன் மன்னிப்பு கேட்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை நண்பர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

நன்றி : மெயில் டுடே பத்திரிக்கை. செப்டம்பர் 23, 2009ம் தேதியில் இப்பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி.









Thursday, September 22, 2016

சார் நீங்க இதைப் படித்தே ஆகணும்

நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. 

NEW DELHI: Judges do not need certificates from anybody, the Supreme Court on Tuesday said while rejecting a PIL seeking setting up of a "public body", independent of the executive and judiciary, to ensure fair appointment of judges in High Courts and the apex court.

"We don't need a certificate from anyone on earth," a bench comprising justices Arun K Mishra and U U Lalit said.The observation came when it was alleged that there has been nepotism in the appointment of judges in High Courts and the apex court.

The bench disagreed with the plea of National Lawyers' Campaign for Judicial Transparency and Reforms that a body independent of executive and judiciary to select Judges to the higher judiciary was needed, as those talented amongst a vast majority of lawyers were never considered by the collegium for selection as Judges.

"We are dismissing it. We see no merit in this petition ...Your ideas may be good or bad, we are not commenting. But what all you are asking cannot be done without quashing certain constitutional provisions," the bench said.

When advocates Mathew J Nedumpara and A C Philip, appearing for the lawyers' body, referred to the ongoing vetting by the Centre of the Memorandum of Procedure (MoP) to govern judges' appointments, the bench said "we will not comment on MoP. Can a proposed MoP be questioned? Let it be crystallised. Let it come out ...then we will see".

The bench said the setting up of such a body would amount to amending the Constitution which cannot be done by the apex court.

The lawyers' body has contended that an independent judge selection body was needed to end the alleged control of the "elite section" over judiciary.

The selection of kith and kin of serving and former judges and senior advocates as Judges in higher judiciary should and must stop, the lawyers' body said in its plea.

The PIL has alleged that the "common deserving lawyers" are usually not considered for appointment as judges in the higher judiciary and only those close to the judges of the Supreme Court and High Courts or politicians or big industrial houses got chosen.

செய்தி உதவி :

செய்தியைப் படித்து விட்டீர்களா? இனி கீழே இருக்கும் படத்தைக் கிளிக் செய்து படியுங்கள்.


கர்நாடகாவில் நேற்று காவிரி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை நிறைவேற்ற இயலாதவாறு சட்டசபைக் கூட்டத்தினைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பப் போகின்றார்கள் என்றொரு செய்தியை டிவி சானல்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. உச்ச நீதிமன்றம் இனி என்ன செய்யும்? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பார்ப்போம்!

இந்தக் கர்நாடகக்காரர்களின் போராட்டத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. காவிரி நீரினைப் பெறுவது மூன்று  மாநிலங்கள். கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகம். ஆனால் அடி விழுவது தமிழனுக்கு மட்டும். கேரளாக்காரர்களும், புதுச்சேரிக்காரர்களும் புண்ணியவான்களா? காலம் காலமாக இந்தப் பிரச்சினை தமிழர்களுக்கு எதிராக மட்டுமே கிளப்பப்படுகிறது. இது என்னவிதமான அரசியல் என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை.