குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, April 7, 2020

கொரானாவைக் கொல்லுமா சித்தரத்தை?

அந்தக் காலத்தில் மளிகைக் கடைகளில் சித்தரத்தை வேர் ஒரு துண்டை வாங்கி வாயில் அடக்கிக் கொள்வார்கள். கல்லூரியில் படிக்கும் போது அம்மா, எனக்கு மாசிக்காய் என்ற ஒரு உருண்டையான வஸ்துக்கள் நான்கைந்து வாங்கித் தருவார்கள். பஸ்ஸில் ஏற்றி விடும் போது வாய்க்குள் ஒரு வஸ்துவை அடக்கிக் கொள்வேன்.

ஹாஸ்டல் சென்று சேரும் போது முற்றிலுமாக எச்சிலில் ஊறி, வயிற்றுக்குள் சென்று சேரும். வயிற்றுப் புண், வாய்ப்புண் எல்லாம் போயே போய் விடும்.

தாத்தா சித்தரத்தை வேர் வாங்கித் தருவார். வாய்க்குள் வைத்திருந்து துப்பி விடுவேன்.

கொரானா நுரையீரலைத் தாக்கி, மூச்சு விட சிரமப்படுத்தி மரணிக்க வைத்து விடுகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

இதோ சித்தரத்தையின் மகத்துவம் என்னவென்று நெட்டில் வந்துள்ளதை கீழே தருகிறேன். படித்துப் பாருங்கள். சித்தரத்தைப் பொடி எனக்கு கிடைக்கவில்லை. உங்களுக்கு கிடைத்தால் விட்டு விடாதீர்கள்.



சித்தரத்தை (Alpinia officinarum) வேர் கிடைத்தால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஆஸ்துமா, சளி, காய்ச்சல் ஆகியவற்றுக்கு அரு மருந்து. இது கொரானாவை சரி செய்யுமா என்றெல்லாம் தெரியாது. ஆனாலும் சளிக்கும், நுரையீரலுக்கும் அது நல்லது செய்கிறது. 

நமது தேசத்திலிருந்து ஏற்றுமதியாகி, நமது நாட்டுக்கே திரும்பவும் மேலை மருந்துகளின் வழியே வரும் முக்கியமான மூலிகைகளில், ஒன்றுதான் சித்தரத்தை.

சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும்.

மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங் காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.

ஒரு காலத்தில் தென்னாடு எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இருமலின் தாக்கமும் இழுப்பும் குறைந்தது.

சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். இதன் நறுமணம் காரணமாக இதைப் பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு. ( நன்றி - உயிர் ஆன்லைன் இணையதளம்)

இதுபற்றிய மேலதிக விபரங்களை ஆயுர்வேத, சித்த மருத்துவர்கள் வியாபார நோக்கமின்றி ஆராய்ந்து சொன்னால் மக்களுக்கு நன்மை பயக்கும்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.