குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, January 11, 2012

சாருநிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாசமும் (18+)




( சார் இங்கேயெல்லாம் பார்க்காதீங்க சார் )

போன் செய்து பிளாக் பற்றிப் பாராட்டிய திரு சக்கரபாணிக்கு நன்றி.

சாரு நிவேதிதாவின் பத்தி ஒன்றினை வாசிக்க நேர்ந்தது. அப்பத்தி அவரின்  வாசகர் ஒருவரின் கடிதம். முதலில் அப்பத்தியைப் படித்து விடுங்கள். அப்போதுதான் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரியும்.


புத்தக திருவிழாவிற்கு சென்று 4000 ரூபாய்க்கு புத்தகம் வாங்கியதைப் பற்றி சிலாகித்து எழுதி இருந்தார் ராஜ ராஜேந்திரன். அப்பத்தியில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், மனிதருள் மாணிக்கம் பாஸ்கர் ராஜா என்ற விஷயம்தான்.  அப்பத்தியைப் படித்ததும், இப்பத்தி எழுதியே ஆக வேண்டுமென்ற திட்டம் மனதுக்குள் வந்து  விட்டது.

நான் சமீபத்தில் படித்த ஒரு புத்தகத்தின் கதையைப் பற்றி உங்களிடம் சொல்கிறேன்.

காலையில் ஒன்பது மணிக்கு பவர் கட். என்னெவென்று பார்த்தால் ஷட்டவுனாம். வேறு வழி இன்றி அருகில் இருந்த அரசு நூலகத்திற்குள் நுழைந்தேன்.

ஒரு புத்தகத்தை எடுத்து முன்னுரையைப் படிக்கலாமென்று பார்த்த போது, இலக்கிய சாதனையாளர்கள் என்று தலைப்பிட்டு நாவல் உலகின் பிதாமகன் இவர் என்று ஆரம்பித்திருந்தார்கள். தமிழில் வாசக பரம்பரையை உருவாக்க முனைந்தவர்கள் இவர்களில் ஒருவர் என்ற பதம் வேறு எழுதப்பட்டிருக்க, அடடே கடவுளாய் பார்த்து நம் கண்ணில் நல்ல ஒரு புத்தகத்தைக் காட்டி இருக்கின்றாரே என்று மகிழ்ந்தேன்.  அடுத்து தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் - சிட்டி, சிவபாத சுந்தரம் என்கிற புத்தகத்திலிருந்து எடுத்து போட்டிருந்த பத்தியையும் படித்து, எனது முடிவை மனதுக்குள் சிலாகித்து, எனக்குள்ளே தட்டிக் கொடுத்துக் கொண்டேன். மிக நல்ல புத்தகம் தான் இது அதுவுமின்றி தமிழ் நாவல் உலகின் பிரமாதமான எழுத்தாளர் என்றும் முடிவு கட்டிக் கொண்டு, நிரம்பச் சந்தோசத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்.

தலைக்கு மூன்று தலைகாணியை வைத்துக் கொண்டு, பெட்டில் மல்லாந்து படுத்துக் கொண்டு நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். கடைசியில் என்ன ஆனது தெரியுமா? நாவலை முடித்ததும் மனையாள் அலற ஆரம்பித்தாள்.

”பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வரும் நேரத்தில் ஏன் இப்படி” என்று திட்ட ஆரம்பித்தாள். நாவல் படித்த வேகத்தில் அவள் திட்டியது நினைவில் ஏராமல், கஜினி முகம்மதுவின் படையெடுப்பு ஒன்றே நினைவில் நின்றாடியது. எனக்கு கஜினியை நிரம்பப் பிடிக்கும். கொண்ட கொள்கையில் விடாது நின்று ஜெயித்தவன் அல்லவா அவன். சிறு வயதில் பள்ளியில் படித்த பாடங்களை இது போன்ற தருணத்தில் கூட கடைபிடிக்கவில்லை என்றால் படித்ததற்கும், சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் கடைமைக்கும் அழகில்லை பாருங்கள்.

ஆனால், நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்றுச் சொல்வார்களே அதை நான் அன்று அனுபவித்தேன். என் விஷயத்தில் தொடர்ந்து கடவுள் கெடுதலையே செய்து வருகின்றார் என்பதையும் நான் அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன்.

என்னத்தைச் சொல்ல போங்கள் !

ஏதேதோ சொல்லி சரிக்கட்டுவதற்குள் பையனும் பொண்ணும் காலிங்பெல்லை அடிக்க அடச்சே இன்னும் எட்டு மணி நேரம் மின்சாரத்தடை வேறா என்று எண்ணிக் கொண்டு விதியை நொந்து கொண்டேன்.

அத்துடன் விட்டாரா கடவுள், அன்று மாலையில் மிகச் சரியாக உறவினர்கள் மூவர் வீட்டுக்கு வந்து விட என் நிலைமைய நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். கடவுள் என் விஷயத்தில் ரொம்பவும் தான் இரக்கமற்று நடந்து கொள்கிறான் என்று உங்களுக்கு இப்போது தெரிந்திருக்குமே? இப்படி என்னப் புலம்ப வைத்த நாவல் எது? அதன் ஆசிரியர் யார்? அதன் கதை என்ன என்று உங்களுக்குத் தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்குமே.

அது என்ன நாவல், ஏன் இப்படி எனக்கு ஆனது என்று அந்த நாவலின் கதையை சுருக்கமாய் எழுதுகிறேன். படித்த உடன் உங்களுக்கு எனது நிலைமை ஏற்படவில்லை என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு ஞானியாகத்தான் இருக்க முடியும். அந்தக் கதை என்னவென்றால்....

திரு யுவகிருஷ்ணாவின் பத்தி ஒன்றரை நிமிடத்தில் படிப்பதாய் இருக்க வேண்டுமென்ற கருத்திற்காக மரியாதை கொடுத்து, நாவலின் கதையை நாளை எழுதுகிறேன்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

குறிப்பு : மேற்படி படம் நாவல் படித்த ஜோரில் போடப்பட்டது.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.