குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, August 31, 2011

பின்னூட்டம் தேவையா?


(மகள் நிவேதிதா தம்பி மகன் ஜெய குருதேவ் உடன்)

ஒருவரின் மனதுக்குள் தோன்றிய உணர்வானது, எழுத்தாய் கைகளின் வழியே பதிவாய் மாறுகிறது. பதிவர்களின் பதிவுகளை படிப்பது என்பது பலரின் நினைவுகளில் மிதப்பது போல. பலரின் உணர்வுகளை உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாய் பதிவுகள் இருக்கின்றன. அதில் நல்லது எது, கெட்டது எது என்பதை பகுத்தறிவதெல்லாம் படிக்கும் வாசகனின் மன நிலையைப் பொறுத்தது.

ஒவ்வொரு பதிவர்களும் காலத்திற்கேற்ப, அவ்வப்போது உருவாகும் மன நிலைக்கேற்ப, உணர்வுகளுக்கேற்றவாறு எழுதுவார்கள். சிலர் தவமாய் எழுதுவார்கள். சிலர் உண்மையை மட்டும் எழுதுவார்கள். சிலர் நகைச்சுவையாய் எழுதுவார்கள். சில கோபமாய் எழுதுவார்கள். சிலர் ஆற்றாமையால் எழுதுவார்கள். சில குஷி மூடில் எழுதுவார்கள். இது போன்ற எண்ணற்ற வகைகளில் பதிவுகள் வெளிவரும். ஒவ்வொரு பதிவுகளையும் படித்து விட முயல்வேன். 

வாசகனுக்கு படிப்பதில் இருக்கும் இன்பம் தான் முக்கியம் என்று கருதுகிறேன். பின்னூட்டம் போடுவதில் கவனம் செலுத்தினால், பல வகைப்பட்ட பிற பதிவர்களின் பதிவுகளை இருக்கக்கூடிய காலத்துக்குள் படிக்க இயலாமல் தவறவிட நேரிடும். படிக்கும் அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டம் போட ஆரம்பித்தால் காலம் ஓடிப் போய் விடும்.சில முக்கிய பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்தே ஆக வேண்டும். அது வேறு விஷயம். 

ஒரு சகோதரர் நீங்களும் பிறர் தளத்தில் பின்னூட்டம் போடுங்கள் என்று எழுதி இருந்தார். நான் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். கருத்துக்கள் சொல்வதில் நான் கவனம் செலுத்துவதில்லை. 

பின்னூட்டம் என்பது ஆரோக்கியமான வகையில் இருக்க வேண்டுமென்றும், அவசியமென்றால் மட்டுமே எழுத வேண்டுமென்றும் நினைப்பவன் நான். 

ஆகவே நான் படிக்கக்கூடிய ஆயிரக்கணக்கான பதிவர்களுக்கு இந்த நேரத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது “ நீங்கள் என்ன எழுதினாலும் படிக்கும் வாசகனாய் கோவை எம் தங்கவேல் என்ற ஒருவர் இருப்பார்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் உங்களின் உணர்வுகளை படித்துக் கொண்டிருப்பேன் எப்பொழுதும்.

எனக்குத் தேவையான அத்தனை தகவல்களையும் நான் பதிவர்களிடமிருந்தே பெறுகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

* * *

Monday, August 29, 2011

செய்நன்றி



திருமணத்திற்கு முன்பு தனியாக வசித்து வந்த போது மோகன் என்ற பையனை என்னுடன் தங்க வைத்து, பாலிடெக்னிக்கில் படிக்க வைத்துக் கொண்டிருந்தேன். காலையில் ஆறு மணிக்கு எழுந்து சமையல் முடித்து, குளித்து, சாப்பிட்டு விட்டு ஆஃபீஸுக்குச் செல்வேன். அவனும் என்னுடனே வந்து கல்லூரிக்குச் செல்வான். விசுவாசத்திற்கு பெயர் போனவன்.

ஜாதகத்தை நம்பலாமா இல்லையா என்பது ஒரு பக்கமிருந்தாலும் என் அனுபவத்தில் ஜாதகம் மாபெரும் புதிராய் இருக்கிறது. கல்யாணம் செய்ய பத்து நாட்கள் இருக்கும் முன்பே என் நண்பரின் உறவுக்காரரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். என்னுடைய ஜாதகத்தை பார்த்த அந்த உறவுக்காரர் ”இன்னும் சரியாக பத்து நாட்களில் நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ உங்களுக்கு திருமணம் நடந்து விடும்” என்றார். 

”அதெப்படி என் விருப்பமே இல்லாமல் திருமணம் நடக்கும், எனக்கு ஐடியாவே இல்லையே?” என்றேன்.

“அப்படி திருமணம் நடக்கவில்லை என்றால், அன்றோடு நான் ஜாதகம் சொல்வதையே நிறுத்துவேன்” என்றுச் சவால் விட்டார்.

சிரித்துக் கொண்டே வந்து விட்டேன். ஆனால் அவர் குறிப்பிட்ட அந்த பத்தாவது நாளில் எனக்கு திருமணம் நடந்தது. ஜாதகத்தில் அதையெல்லாம் கண்டு பிடிக்க முடியுமா என்று எனக்கு குழப்பமாக இருந்தது, இப்போதும் இருக்கிறது.

திருமணம் முடித்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தோம். என்னுடன் மோகனும், இவனின் நண்பனான டிரைவரும் மட்டும் தான் வந்தனர். மறு நாள் காலையில் வரும்படி காவல்துறையினர் கேட்டுக் கொள்ள மறு நாள் மீண்டும் காவல் நிலையத்துக்குச் சென்றால் அங்கு மனைவியின் உறவினர்கள் நான்கைந்து காரில் வந்திருந்தனர். ஒரே கூட்டம். 

நான் பயப்படவும் இல்லை, பதட்டப்படவும் இல்லை. அமைதியாய் காருக்குள் உட்கார்ந்திருந்தேன். 

என் நெருங்கிய உறவுக்காரர் என்னிடம் வந்து, ”அந்தப் பெண் அவரின் அம்மாவுடன் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி விட்டார், வாங்க கிளம்புவோம் , இனி இங்கிருந்தால் போலீஸ் நம்மை ஜெயிலுக்குள் தள்ளி விடும்”என்றார்

“அவள் அப்படியெல்லாம் போகமாட்டாள்” என்றுச் சொல்லி வர மறுத்தேன். பேசாமல் சென்று விட்டார். அவர் கவலை அவருக்கு. எங்கே எனக்குத் திருமணம் ஆகி விட்டால், அவருக்கு கிடைக்க வேண்டிய சொத்துப் போய் விடுமே என்று பயந்தார் போலிருக்கிறது. அது உண்மையாகப் போனது வேறு கதை.

அடுத்த நொடி காருக்குள் இருந்து இரண்டடி கத்தியுடன் மோகன் இறங்கினான். 

“சார் பத்து நிமிடம் அமைதியாய் இருங்கள். அனைவரையும் கொன்று விட்டு, மேடத்தைக் கூட்டி வருகிறேன்” என்று கிளம்பினான். கூடவே டிரைவர் பெரிய இரும்புத்தடியை எடுத்துக் கொண்டு இறங்கினான். பதறி தடுத்தேன்.

அதற்குள் ஒரு ஏட்டு எங்கள் அருகில் வந்து, “அப்பெண் அவர்களுடன் வர முடியாது என்று சொல்லி விட்டார், அமைதியாய் உட்கார்ந்திருந்திருங்கள்” என்றுச் சொல்லி விட்டுச் செல்ல, அதன் பிறகு தான் இருவரும் அமைதியானார்கள்.

சிறிது நேரம் சென்ற பிறகு அவரவர்களும் கலைந்து செல்ல, காவல் நிலையத்தில் எங்கள் திருமணம் பதிவு செய்யப்பட்டது. என் நெருங்கிய உறவினர் யாரும் வந்து வாழ்த்தவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. எனக்கு எல்லா உதவிகளையும் செய்து, ஏட்டாக இருந்து தற்போது ரிட்டயர்டில் இருக்கும் காவல்துறை அதிகாரி திரு செல்வம் அவர்களை தற்போது நினைவு கூறுவதில் பெருமை அடைகிறேன்.

கோவிலில் மாலையை மோகனை எடுத்துக் கொடுக்க சொன்னேன். என் கண்களைப் பார்த்துச் சிரித்தான். 

”கத்தி எங்கேடா?” என்றேன்.

வெட்கத்துடன் முகம் தாழ்த்தினான்.


* * *

மேலும் ஒரு சம்பவம் மோகனைப் பற்றி: 

திருமணம் முடித்து பட்டிக்காட்டில் இருவரும் தங்கி இருந்தோம். ஒவ்வொரு நாள் போவதும் பெரிய போராட்டமாய் இருந்தது. எங்களின் கஷ்டத்தைப் பார்த்த மோகன், கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த என்  வீட்டிற்கு போய் டூவீலரில் டிவியைத் தூக்கி கொண்டு வந்து கேபிள் கனெக்‌ஷனை கொடுத்து விட்டுச் சென்றான். இன்றைக்கு நினைத்தாலும் எனக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கும். இவனும், இவனது நண்பனும் சேர்ந்து இக்காரியத்தைச் செய்தனர். கையிலேயே டிவியைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறான். அப்படி வரும் போது அவனுக்கு என்ன வலி வலித்திருக்கும் என்று யோசித்தால் மனசு அப்படியே நெக்குறுகிப் போய் விடும். அவனது நினைவாய் இன்னும் அந்த டிவியை தூக்கிப் போடாமல் வைத்திருக்கிறேன்.

தலைப்புச் சரியாக இருக்கிறதா?

* * *

Wednesday, August 24, 2011

காதல் மறுப்போரைத் தூக்கில் போடுங்கள்

இந்தப் பதிவு காதல் நிறைவேறாமல் தற்கொலை செய்து கொண்ட அன்புள்ளங்கள் ஸ்ரீதேவிக்கும், கார்த்திகேயனுக்கும் சமர்ப்பணம்.

காதலிப்பது மரணிக்கவா? 

இல்லையில்லை. மரணத்திற்கே மரணத்தை தருவதற்காக காதலர்களே ! 

காதலர்களே காதலிக்கின்றீரா கலீல் ஜிப்ரானைப் படியுங்கள். காதல் என்றால் என்னவென்று தெரியும். 

அன்புக் காதலர்களே, இதோ கலீல் ஜிப்ரானின் அலைகளின் காதலைப் பற்றிய ஒரு கவிதையை உங்களுக்கு தருகிறேன். இப்பூவுலகில் மனிதர்கள் கடல் அலையைப் போல வந்து வந்துச் செல்கிறார்கள். வருவதும் போவதும் நிற்பதே இல்லை. காதலும் அதுபோலே !

அலையின் காதல் - கலீல் ஜிப்ரான்

வலிமையான கரையே என் காதலன்; 
நான் அவனது காதலி.

காதலால் கட்டுண்டவர்கள் நாங்கள். 
நிலவுதான் என்னை அவனிடமிருந்து இழுக்கிறது.

அவசரமாய் அவனை நோக்கி நான் செல்கிறேன்; 
சட்டென பிரிகிறேன்; 
பலமுறை சின்னச் சின்ன விடைபெறல்கள்.

நீலவானத்திற்கு அப்பாலிருந்து 
வெள்ளி நுரைகளை நான் சட்டென திருடி வந்து, 
அவனது பொன்மணல் மேல் பரப்பி வைக்கிறேன்.

ஒளிமயமாய் நாங்கள் கூடிக் கலக்கிறோம்.

நான் அவனது தாகத்தைத் தணிக்கிறேன்.
அவனது இதயத்திற்குள் செல்கிறேன்.

அவன் என் குரலை மென்மையாக்குகிறான்;
என் சினத்தை அடக்குகிறான்.

விடியற்காலையில் நான் அவன் காதில் 
காதலின் விதிகளை ஓதுகிறேன். 
அவன் ஆசையோடு என்னைத் தழுவிக் கொள்கிறான்.

ஏற்றவற்ற அலைகளின்போது 
நான் நம்பிக்கையின் பாடல் பாடுகிறேன். 
அவன் முகத்தின்மேல் இனிய முத்தங்கள் பதிக்கிறேன்.

எனக்கு பயம். எனக்கு வேகம்.

ஆனால் அவன் அமைதி; பொறுமை;சிந்தனை.

அவனது நிம்மதியின்மையை 
அவனது பரந்த மார்பு அமைதிப்படுத்துகின்றது.

அலையடிக்க நாங்கள் தொட்டுக் கொள்கிறோம். 
அலை பின்வாங்க நான் அவனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.

கடற்கன்னிகளைச் சுற்றி 
பல முறை நான் நடனமாடியிருக்கிறேன்.
அவர்கள் என் அடியாழத்திலிருந்து எழுந்து 
அலை நுனியில் நின்று விண்மீன் பார்ப்பார்கள்.

காதலர்கள் பலமுறை 
என்னிடம் வந்து முறையிடுவது வழக்கம். 
நான் அவர்கள் பெருமூச்சு விட உதவுவேன்.

பலமுறை நான் பாறைகளை 
சீண்டிவிட்டு பார்த்திருக்கிறேன்.
அவற்றை கிச்சுகிச்சு மூட்டியும் பார்த்திருக்கிறேன்.
அவை ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.

என்னில் மூழ்கிப் போகிற உயிர்களை
மென்மையாய் ஏந்தி கரை சேர்த்திருக்கிறேன்.

கரைக்காதலன் என் வலிமை 
எடுத்தது போல அவர்களுக்கு வலிமை தந்திருக்கிறான்.

பலமுறை நான் அடியாழத்திலிருந்து 
வைரமணிகளைத் திருடி வந்து என் காதலனுக்குப் பரிசளித்திருக்கிறேன். 
அவன் மெளனமாய் அவற்றை ஏற்றான். 
என்னை அவன் வரவேற்பான் என்று இன்னமும் தந்து கொண்டிருக்கிறேன்.

கனத்த இரவில் எல்லாம் உறங்க
நான் அமர்ந்து ஒரு்முறை பாடுகிறேன். 
ஒரு முறை பெருமூச்சு விடுகிறேன். 
நான் என்றும் விழித்திருக்கிறேன்.

அந்தோ! உறக்கமின்மை என்னை பலவீனப்படுத்திவிட்டது.
என்றாலும் நான் காதலியாயிற்றே? 
காதலின் உண்மை கனத்தது அல்லவா?

நான் களைத்துப் போனாலும் எனக்கு மரணமில்லை!

* * *

கவிதை கிடைத்த தளம் : http://tamil2000.blogspot.com/ ( நன்றி சாம்பசிவம் )

Tuesday, August 23, 2011

சோத்பீ கர்லோஸ் - சில நினைவுகள்

சரியாக நினைவில் பதியாத ஏதோ ஒரு நாளில் “தி ஈரோப்பியன் ரிச்செஸ்ட் பீபிள்” என்ற புரோகிராமை டிராவல்ஸ் அண்ட் லிவிங்கில் பார்த்துக் கொண்டிருந்தேன். கர்லோஸ் சோத்பீ இண்டர்னேஷனலின் டைரக்டர் பேசிக் கொண்டிருந்தார்.

ரியல் எஸ்டேட் பிசினஸ், ஐரோப்பாவிலேயே பெரும் கோடீஸ்வரர்களில் அவரும் ஒருவர் என்று தலைப்பு. மொட்டைத்தலை, இடுங்கிய கண்கள், எப்போதும் குறுகுறுப்பாய் பார்க்கும் பார்வை, கீச்சுக் குரல், கசங்கிய உடைகள் என்று பார்ப்பதற்கு “கோமாளியாய்” இருந்தார்.ஆனால் அவரைச் சுற்றிலும் இருந்த ஆட்கள் “பர்ஃபெக்ட் எஃபெக்டில்” இருந்தனர்.

எதைப் பற்றியும் கவலையே படாத மனநிலை. ஜாலியாய் பிசினஸ் என்று கலக்கினார். ஒரு பிசினஸ் முடித்ததும் அவர் சொன்னது “மை எர்னிங் ஈஸ் ஃபிப்டி தவுசண்ட் டாலர்ஸ்”. அதாவது 23 லட்ச ரூபாய்.

தட்ஸ் ஆல். திரும்பத் திரும்ப அதே புரோகிராம் ரிலே ஆனது. பார்த்துக் கொண்டிருந்தேன். அவருக்கு ஒரு மெயிலையும் தட்டி விட்டேன்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அவரிடமிருந்து ஒரு கொரியர் வந்தது. பிரித்தேன். படித்தேன். பிரமித்தேன். அவருடனான தொடர்பு சிலகாலம் இருந்தது.

ஃபார்ச்சூன் பிரிக்ஸ் விதை மனதில் ஊன்றிய நாள் அது. எங்கள் நிறுவனம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். மிகச் சரியான வழிகாட்டுதல்களுடன் அகலக்கால் வைக்காமல் மெதுவாக நடை போட்டுக்கொண்டிருக்கிறது ஃபார்ச்சூன் பிரிக்ஸ்.

வாடிக்கையாளர்களுக்கு முடிந்த வரையில் மிகச் சிறப்பான சர்வீஸ் கொடுத்து வருகிறோம். சிலர் தகவல்களை வாங்கிக் கொண்டு கமிஷன் கொடுக்க ”மறந்து” விடுவார்கள். ஆனால் நாங்கள் உழைப்பினை நம்புகிறோம். உழைத்த காசு வீடு வந்து சேரும் என்ற நம்பிக்கை எங்கள் நிறுவனத்திற்கு உண்டு. இன்று கிட்டத்தட்ட 3000 ரியல் எஸ்டேட் நண்பர்களின் உதவியுடன் வெற்றிப் படியில் ஏறிக் கொண்டிருக்கிறது ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம்.

சொத்து என்பது ஒவ்வொருவருக்குமான கனவு. அது சமூகத்தின் அடையாளம். அங்கீகாரம். அதை எங்களின் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியோடு பெற்றுக் கொடுக்க நாங்கள் விரும்புகிறோம். வீடு, சொத்து என்பவை மனிதனுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் தர வல்லது. முகவரி இல்லாதவர்களுக்கு முகவரி பெற ஃபார்ச்சூன் உதவுகிறது. வாடிக்கையாளர்களின் குடும்பத்தில் ஒருவராய் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் மாறிவிடுகிறது. அவர்கள் எந்தச் சொத்து வாங்கினாலும் எங்களிடம் கேட்காமல் வாங்குவதில்லை. எந்தச் சொத்தினை விற்றாலும் எங்களிடம் சொல்லாமல் விற்பதில்லை. அதுதான் எங்களின் பலம்.

இன்றைக்கு பில்டர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, எப்படி உங்களுக்கு இந்தக் கான்செப்ட் வந்தது என்று கேட்டார். கர்லோஸ் நினைவிலாடினார். ஃபார்ச்சூன் பிரிக்ஸ் அதிர்ஷ்டத்தை சொத்து வடிவில் உங்கள் வீடு தேடிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

பிரச்சினையே இல்லாத சொத்தோ, வீடோ வாங்க நீங்கள் அழைக்க வேண்டியது

96005 77755

* * *

Monday, August 22, 2011

பட்டா ஒரு முக்கிய ஆவணமா?


மிகப் பெரிய கோடீஸ்வரர் அவர். எல்லையில்லா பரம்பரையான சொத்துக்கள் குவிந்து கிடந்தன. யாருக்கும் எதற்கும் பணிந்து போக வேண்டிய அவசியம் இல்லாதவர். யாரோ ஒரு பேராசைப்பட்ட அரசு அலுவலர் ஒருவரால் அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் விற்பனை செய்ய இயலாமல் கிடந்தன அவர் எங்களிடம் வரும்வரை.

இந்தக் கோடீஸ்வரரின் சொத்துக்கு அருகில் அரசின் புறம்போக்கு நிலம் இருக்கிறது. சர்வேயர் வந்து நிலத்தை அளவு செய்து குறிப்பிடும் போது, கோடீஸ்வரரின் சொத்தினைப் பார்த்து ஆசைப்பட்டு, ”எனக்கு கொஞ்சம் காசு கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார். ”எதற்கு கொடுக்க வேண்டுமென்று ” கேட்டு முடியாதென்றுச் சொல்லி விட்டார் கோடீஸ்வரர். சர்வேயர் இவரின் நில சர்வே எண்களையும் சேர்த்து அரசுப் புறம்போக்கு நிலம் என்று அரசுக்கு அறிக்கை கொடுத்து விட, அரசும் இவரின் நிலத்துடன் சேர்ந்து அரசு நிலம் என்று அறிவிப்பு கொடுத்து விட்டது. 

இப்பிரச்ச்சினையில் தவறு செய்தவர் சர்வேயர். மேற்படி சொத்தை விற்க முயற்சிக்கும் போது, விஷயம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தெரிய வருகிறது. கோர்ட் படியேறி தீர்ப்பினை வாங்கி விடுகிறார் கோடீஸ்வரர். பட்டா கிடைக்க அப்ளை செய்கிறார். கிடைக்கவில்லை. பட்டா இல்லாமல் யார் தான் இவ்வளவு பெரிய சொத்தினை வாங்குவார்கள்? பிரச்சினை ஆரம்பிக்கிறது.சொத்தின் விலை அடிமாட்டு ரேஞ்சுக்குப் போகிறது. 

ஒரு சொத்து இவருக்குச் சொந்தமானது என்றுச் சொல்லக்கூடிய ஆவணங்களில்(டாக்குமெண்ட்) பட்டா என்பது மிக முக்கியமானது என்றாலும், ஒரு சொத்தினை விற்பதற்கு அது தேவையானதா என்று கேட்டால் தேவை என்றுதான் சொல்லுவார்கள். அதுதான் நியாயமும் கூட.

கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களுக்கு பட்டா என்பது அவ்வளவு முக்கியமான விஷயமாக இருக்காது. பட்டா இல்லை என்பதற்காக குறைவான விலைக்கு கேட்பார்கள். சொத்தினை வாங்கிய பிறகு பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தால் பட்டா வீடு தேடி வந்து விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் அப்பிராணிகளுக்கு பட்டா இல்லையா, சொத்தே வேண்டாம் என்று தோன்றும். 

சொத்து வாங்கி விற்கும் போது பத்திரங்கள் மட்டும் மாறி இருக்கும். ஆனால் பட்டா மாறாது. அதற்காக பழைய பட்டாவை வைத்துக் கொண்டு யாரும் சொத்து எனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடினால் “உள்ளே” போக வேண்டியதுதான். விவரம் தெரியாதவர்களிடம் வேண்டுமானால் சிலர் விளையாடலாம். விவரமானவர்களிடம் விளையாட ஆரம்பித்தால் வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும்.

இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் சொத்து விற்பனைக்கு பட்டா தேவையா இல்லையா என்பதை.

மேற்கண்ட சொத்தின் டாக்குமென்டுகளை எங்களிடம் ஒப்படைத்த பிறகு, ”முடிந்த விலைக்கு விற்றுத்தாருங்கள்,பட்டா பிரச்சினை இருக்கிறது” என்று சோகத்துடன் சொன்னார் அவர். 

அதற்கடுத்த நாட்களில் மேற்படி விஷயத்தைச் சொல்லியதும் அவர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. பிரச்சினையை எப்படி சரி செய்வது என்றுச் சொன்னோம். எங்களுக்கான கட்டணத்தைச் செலுத்தி விட்டு, கம்பீரமாய்ச் சென்றார் எங்களின் வாடிக்கையாளர்.

இது போன்று உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? தயங்க வேண்டாம். அழையுங்கள் எங்களை.

மொபைல் எண் : 096005 77755 


* * *

Thursday, August 18, 2011

சொத்து சம்பந்தமான வழக்குகள் - உயில் பிரச்சினை

சமீபத்தில் எங்களிடம் வந்த கிளையண்ட்டுக்கு ஒரு பிரச்சினை. தனது தங்கை என் மீது சொத்தில் பங்கு இருப்பதாக வழக்குப் போட்டிருக்கிறார் என்றார். வழக்கு விபரங்கள் அனைத்தும் கொண்டு வரும்படி பணித்தோம்.

இவரோடு பிறந்தது மூவர். இருவர் பெண்கள். ஒருவர் ஆண். இவரின் அப்பா இறக்கும் முன்பே இவருக்கும், இவரின் சகோதரருக்கும் உயில் எழுதி வைத்திருக்கிறார். அப்போது இவரின் சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் வேறு இருப்பதையும், அக்குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய தாய் மாமன் சீரை சகோதரர்கள் இருவரும் இணைந்து செய்ய வேண்டியது என்றும், பெண்கள் இருவருக்கும் சொத்தில் பங்கு இல்லை என்றும் உயில் எழுதி வைத்து இறந்து விட்டார். அதன் பிறகு சகோதரர்கள் இருவரும் அந்த உயிலை ரெஜிஸ்டர் செய்து, அதன்படி பாகப்பிரிவினை செய்து கொண்டனர். கிளையண்ட்டின் அண்ணன் தன் பாகத்தை பத்து வருடங்களுக்கு முன்பு விற்பனை செய்து விட்டார். கிளையண்ட் தற்போது விற்க முனையும் போது இளைய சகோதரி சொத்தில் பங்கு இருக்கின்றது என்று கேஸ் போட்டு விட்டார்.

கிளையண்ட்டிடம் 100% சேலஞ்ச் செய்து சொத்தினை விற்குமாறு சொன்னோம். அதன்பிறகு சந்தோஷத்துடன் சென்றார்.

அதே போல பட்டாவினால் மிகப் பெரிய சொத்து ஒன்று இதுகாறும் விற்பனை செய்ய இயலாமல் போனது. அதுமட்டுமல்ல சென்னையின் பிரதான இடம் கிட்டத்தட்ட ஒரு கிராமமே ஒருவருக்குச் சொந்தமானது. ஆனால் அந்தக் கிராமத்தின் இன்றைய நிலையோ எண்ணிப் பார்க்க முடியாத மதிப்பு உள்ளது. எங்கே என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Friday, August 5, 2011

உத்திரமும் பிள்ளைப் பேறும் - அந்தக்காலமும் இந்தக் காலமும்

வீட்டின் கதவுகள் அடிக்கடி காற்றில் வந்து சாத்திக் கொண்டு, பெரும் அவஸ்தையை உண்டு செய்து வந்தது. அதைச் சரி செய்ய நாகராஜ் என்ற ஆசாரி ஒருவரை வரவழைத்தேன்.

வயதானவர். ஆரம்பத்தில் முகம் கொடுத்தே பேச வில்லை. போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தார். ”கதவில் மேக்னெட் பொருத்தி விட்டால் சரியாகி விடும்” என்று சொல்லி, அதைப் பொருத்த ஆரம்பித்தார்.

”அந்தக் காலத்தில் என் அப்பா கூலியே வாங்காமல் வேலை செய்தார். மோதிரம், செயின் செய்யச் சொல்லுபவர்கள் அதற்கு செய்கூலியாக நெற்மணிகளையோ, பருப்பு வகைகளையோ இன்ன பிற தானியங்களையோ தந்து விடுவார்கள். அப்பா கை நீட்டி யாரிடமும் காசு வாங்கி நான் பார்த்ததில்லை” என்றார்.

சீனிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தட்டப்பயறு எல்லாம் அம்மா அவித்துக் கொடுப்பார்கள். நாகர்கோவிலில் (ஏதோ ஒரு பெருமாள் கோவில் என்றுச் சொன்னார்) தரும் சுண்டல் வகைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். ”மலையேறி அதை வாங்கி வருவதற்குள் பெரும் பாடு பட வேண்டியிருக்கும். ஆனால் சுண்டலின் சுவையோ வார்த்தையால் சொல்ல முடியாது” என்று அந்தக் காலத்திற்கே சென்று வந்தார்.

”தம்பி, உங்களிடம் ஒரு விஷயம் சொல்கிறேன் கேளுங்கள்” என்றார். நானும் ஆவலுடன் அவரின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தேன்.

”அந்தக் காலங்களில் வீடுகளில் மூன்று உத்திரங்கள் வைத்து வீடு கட்டுவார்கள். ஏன் அப்படி என்று எனக்கு நீண்ட நாட்களாக தெரியவில்லை தம்பி. நீண்ட நாள் கழித்துதான் எனக்கு காரணம் புரிந்தது. முதல் இரண்டு உத்திரங்களும் வீட்டின் பாதுகாப்பிற்கும், நடு உத்திரம் பிள்ளைப் பேறுக்கும் ” என்றார்.

”பிள்ளைப் பேறா? ”

“ஆமாம் தம்பி, பெண்கள் குழந்தைகள் பெற அந்த உத்திரத்தைத் தான் பயன்படுத்துவார்களாம். கீழே வைக்கோல் போட்டு மெத்தை போல செய்து, உத்திரத்தில் கயிறொன்றினைக் கட்டி தொங்க விடுவார்களாம். பிரசவ வலி வந்ததும் அந்தக் கயிற்றினைப் பிடித்து உந்தச் செய்வார்களாம். எளிதில் குழந்தை பிறந்து விடுமாம்” என்றார்.

ஒரு நிமிடம் இன்றைய காலப் பெண்களின் பிரசவத்தை நினைத்துப் பாருங்கள். கரு உருவானதில் இருந்து, குழந்தையின் வயது ஐந்து ஆகும் வரையிலும் மருத்துவரிடம் சென்று கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலக் குழந்தைகளுக்கு அவ்வளவு எளிதில் காய்ச்சலோ, சளியோ பிடிக்காது. என் மகன் பிறந்த போது என் அம்மா தான் மனைவியைக் கவனித்துக் கொண்டார். ஒரு வருடம் மகனுக்கு காய்ச்சலோ சளியோ பிடிக்கவில்லை.

கருவில் இருக்கும் போது, இரவில் தூங்க விடமாட்டாள். வாந்தி வாந்தி வாந்தி. தட்டில் மண் போட்டு தனியாக வைத்திருப்பேன். சாப்பிடுவாள். வாந்தி எடுப்பாள். சத்து போதாது. தம்பி வண்டியை எடுத்துக் கொண்டு வந்து, மனைவியை ஏற்றி ஆஸ்பிட்டலுக்குச் சென்று குளுக்கோஸ் ஏற்றி வருவான். செல்லும் வழியில் பல இடங்களில் வாந்தி எடுப்பாராம் மனைவி. 

மனைவிக்கு ஆறுமாதம் முடிந்ததும் எங்கோ சென்று “செண்பகக்குருவிகளை” பிடித்துக் கொண்டு வந்து கொடுத்து, குழம்பு வைத்துச் சாப்பிடக் கொடுத்தான் எனது நண்பன் ஒருவன். அதன் கண்கள் சிவப்பாய் இருக்கும். மகன் பிறந்து, எனது நர்ஸ் தோழி பையனைக் கையில் கொண்டு வந்து கொடுத்த போது, பையன் விழித்துக் கொண்டே என்னைப் பார்த்தான். 

அந்தக் காலத்தில் உணவுக்கட்டுப்பாடு கடுமையானதாக இருக்கும். குழந்தை பிறந்த முதல் இரண்டு நாளைக்கு காலையில் அரை இட்லி மட்டுமே.   இந்த அரை இட்லிக்கு அரை வெங்காயமும், அரை தக்காளிப் பழத்தையும், நான்கு வெள்ளை உளுந்தையும் துளி எண்ணெய் விட்டு வதக்கி, அம்மியில் அரைத்து சட்னியாய் கொடுப்பார்கள். இரவும் அதே. 

இடையில் குடிக்க பால் கொடுப்பார்கள். சீரகமும், ஒரே ஒரு பூண்டு பல்லும், தக்காளியும் சேர்த்து ரசம் செய்து குழந்தை பிறந்த பிறகு ஒரு வாரத்திற்கு மதியச் சாப்பாடு கொடுப்பார்கள். துளியூண்டு எண்ணெய் சேர்த்து, கருவேப்பிலை சேர்ப்பார்களாம்.

பால் சுரக்க பால் சுறா வாங்கி வந்து கொடுப்பார்கள். சித்தப்பா பால் சுராவை நாகப்பட்டினம் மார்க்கெட்டில் இருந்து வாங்கி, மஞ்சள் பையில் பிளாஸ்டிக்  கவர் போட்டு கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் பஸ்ஸில் பயணம் செய்து, வந்து கொடுப்பார்.கருவாடு தீர்ந்து விட்டது என்றுச் சொன்னால் தம்பியிடம் கொடுத்து அனுப்புவார் சித்தப்பா. இன்றைக்கு இவரைப் போன்ற சித்தப்பாவைப் பார்க்க முடியுமா? மாமா பச்சைத்தட்டக்காரா வாங்கி வந்து ஸ்டாக் வைத்திருப்பார். யாராவது ஊருக்கு வரும் போது பார்சல் வீடு வந்து சேரும். தங்கை வீட்டிலிருந்து உளுந்து, மல்லி, மிளகாய் வந்து சேரும். பொறுக்கி எடுத்த தேங்காய் காய வைத்து, ஆட்டி கமகமவென எண்ணெய் வரும்.  வயலில் உளுந்து எடுத்து அடிக்கும் போதே, “தங்கத்து நாலு மரக்கா எடுத்து வைத்து விடு” என்று மாமா சொல்ல தனியாய் சாக்கிற்குள் உளுந்து கிடக்கும். ஊருக்கு போய் வரும் போது காரில் இடமில்லாமல் மூட்டையும் முடிச்சுமாய் கிடக்கும்.

ஒரு முறை வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ”மண் சட்டியில் குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும் போல இருக்கே”ன்னு சொன்ன ஒரு வார்த்தைக்கு, காரில் மண் சட்டிகளை புதிதாய் வாங்கி பேப்பர் வைத்து, டிரைவரிடம் ”இதைப் பத்திரமாய் ஊருக்குக் கொண்டு போய் சேர்த்து விடு” என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தார்.

“தம்பி ஊருக்கு கிளம்பிட்டியாமே, இந்தா வீட்டில் சோளமும், கடலையும் போட்டோம். கொஞ்சம் இருக்கு எடுத்துக் கொண்டு போ” என்று அப்பாவின் நண்பர் கொண்டு வந்து கொடுப்பார்.

சொல்லிக் கொண்டு போகலாம் என்று சித்தி வீட்டிற்குச் சென்றால் வரும் போது பல வித முடிச்சுகளில் பல் வேறு பொருட்கள் கொடுத்து அனுப்பி இருப்பார் சித்தி. நண்பர்கள் வீட்டிலிருந்து என்னென்ன பொருட்கள் எல்லாம் வந்து சேரும்.

இன்றைக்கு இவர்கள் எல்லாரிடமிருந்தும் அன்பும், பாசமும் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை என் பிள்ளைகளுக்கு கிடைக்குமா என்பதை நினைக்கையில் நவீன காலத்தின் மீதான வெறுப்பு மனதிற்குள் குமிழ்கிறது.

எங்கோ வந்து விட்டேன் பாருங்கள். பிள்ளைப் பேற்றுக்கு வருவோம்.

அரை வீட்டில் உரித்த பச்சை தட்டக்காரா கருவாட்டினையும், முருங்கைக்காயையும் சேர்த்து மிளகாய் கூட சேர்க்காமல் குழம்பு என்ற பேரில் சாதத்தில் ரசம் போல ஊற்றிக் கொடுப்பார்.

பதினைந்து நாட்கள் கழித்து காய்கறிகள், பருப்பு என்று கால் வயிறு நிரம்பும் படி தான் சாப்பாடு கொடுப்பார்கள். அதற்கடுத்த மாதங்களில் அரை வயிறு நிரம்பும் படி சாப்பாடு கொடுப்பார்கள். எங்கள் கிராமத்து பழக்க வழக்கங்கள் வேறு. நகரப் பழக்க வழக்கங்கள் வேறு என்பதை மகள் பிறந்த பிறகு கண்டு கொண்டேன்.

குழந்தைக்கு மாந்தம் வந்து விடும் என்று வேறு எந்த உணவும் கொடுக்கமாட்டார்கள். காதல் திருமணம் என்பதால் மனைவின் அம்மா வரவில்லை.

மகள் மனைவியின் வயிற்றில் இருக்கும் போதே, மனைவின் அம்மாவின் அரவணைப்பிற்குள் வந்து விட்டார். மகள் பிறந்த உடனே சிக்கன், ஈரல் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்கள். அரண்டு போய் விட்டேன். ஒன்றும் ஆகவில்லை. மகள் நன்றாகத்தான் வளர்ந்தார்.

கிராமப் பழக்கங்களும், வழக்கங்களும் இனி எந்தப் பெண்ணாலும் தொடர்ந்து பயன்படுத்தப்டாது. இப்படியே தமிழர்களின் எண்ணற்ற அற்புதமான பல வழக்கங்கள் ஒழிந்து போய் விட்டன.

1200 சதுர அடி வீட்டிற்குள், உலகத்தையே கொண்டு வந்து, வெறும் சிமெண்டினால் கட்டப்பட்ட அலங்கார சந்தைகளுக்குள், விஷத்தைக் காசு கொடுத்து சாப்பிட்டுக் கொண்டு மனிதர்கள் என்ற போர்வையில் இயந்திரமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்கால மனிதர்களுக்கு நான் மேலே எழுதி இருப்பது ஏதோ ஒரு கதை போல தோன்றும். அதுதான் நாகரீகம் என்பார்கள் இக்காலத்தில். உறவுகளை இழந்து, உறக்கமும் இழந்து அனாதையாய் நின்று கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் இக்காலத்தில்.

சுருக்கமாய்ச் சொன்னால் ”நவீன காலம் என்பது நரகத்தின் காலம்”


* * *


Thursday, August 4, 2011

டிரேடிங் வெப்சைட்கள் - ஏமாற்றும் வித்தைக்காரர்கள்

டிரேடிங் பிசினஸ் ஆரம்பித்த புதிதில் இறக்குமதி, ஏற்றுமதிக்கான சில பிரத்யேக வெப்சைட்டுகளை அறிய நேர்ந்தது. அதில் உறுப்பினராய்ச் சேர்ந்தால் எளிதில் இறக்குமதியாளர்களின் தேவைகளை அறிந்து கொண்டு, கொட்டேஷன் கொடுத்தால் ஆர்டர் கிடைக்கும் என்று அந்த வெப்சைட்டுகளில் சொல்லி இருந்தார்கள். அதன்படி நானும் ஒரு வெப்சைட்டிற்கு பணம் கட்டி மெம்பர் ஆனேன். இறக்குமதியாளர்களின் முகவரியுடன், அவர்களின் தேவைகளும் வரிசையாய் பட்டியலிட, நானும் அசராமல் கொட்டேஷன் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன். எவரும் பதில் தரவே இல்லை. போன் பேசினால் சொத்தை விற்றுத்தான் போன் பில் கட்ட வேண்டி வரும் என்பதால் மெயில் மூலமே அனுப்பி வந்தேன். சரி நம்மைப் போல பலரும் மெம்பராகி இருப்பார்கள் அல்லவா? ஆகவே வேறு யாருக்கும் ஆர்டர் கிடைத்திருக்கும் என்று நினைத்திருந்தேன்.

இந்தச் சூழலில் எனது நண்பர் ஒருவர் அமெரிக்காவில் இருந்தார். எதேச்சையாக அவரின் தொடர்பு கிடைக்க, இருவரும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்போம். அந்த நேரம் பார்த்து நண்பர் வசித்த இடத்திலிருந்து ஒரு இறக்குமதியாளரின் பையிங் லீட்ஸ் வர, நண்பரிடம் அந்த லீடைக் கொடுத்து, இறக்குமதியாளரை நேரில் சந்திக்கும் படியும், அவருக்குத் தேவையான பொருளை தயார் செய்து கொடுக்க நமது கம்பெனியைப் பற்றியும் எடுத்துச் சொல்லி ஆர்டர் கிடைக்க உதவி செய்யும் படி கேட்க, நண்பருக்கு ஆர்வம் பிறந்து சில சாம்பிள்களைப் பெற்றுக் கொண்டு, கம்பெனி புரபைலுடன் நேரில் அப்பாயிண்ட்மெண்ட் பெற்றுச் சென்றிருக்கிறார்.

சந்திப்பின் போது, அந்தக் கம்பெனியின் பையின் லீடை எடுத்துக் காட்டி இருக்கிறார். அது ஒரு வருடத்திற்கு முன்பு அந்தக் குறிப்பிட்ட வெப்சைட்டில் போடப்பட்டதாகவும், போட்ட ஒரு நாளுக்குள் ஏற்றுமதியாளரை அந்தக் கம்பெனியே ஏற்பாடு செய்து விட்டதாகவும்,  தற்போது அவர்களிடமிருந்துதான் இறக்குமதி செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த வெப்சைட்டில் அந்தக் குறிப்பிட்ட கம்பெனி, இப்போதுதான் அவர்களின் தேவையை போஸ்ட்டிங் செய்திருந்தது. அதை அந்தக் கம்பெனி முதலாளியிடம் காட்டி விட்டு வந்திருக்கிறார் நண்பர்.

இது போன்ற டிரேடிங் வெப்சைட்டுகள் முதலிலேயே பிசினஸ்ஸை முடித்து விட்டு, முடிந்து போன ஒரு விஷயத்தை பதிவாக்கி, அதை வைத்து காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்தேன். அதன் பிறகு எங்களூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் அந்தக் கம்பெனியின் தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் காட்டிய போது, அதிர்ந்தனர் மற்ற ஏற்றுமதியாளர்கள். இது ஒரு பக்கா திருட்டு.

அதுமட்டுமல்ல, கடந்த வருடத்தில் நிலக்கரி தேவை என்று ஒரு டிரேடிங் வெப்சைட்டில் போஸ்ட்டிங் போட்ட உடனே, அந்த டிரேடிங் வெப்சைட் கம்பெனியிலிருந்தே போனில் அழைத்து அவர்களே நிலக்கரியைச் சப்ளை செய்கிறோம் என்று கேட்டார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? இது போன்ற டிரேடிங் வெப்சைட்காரர்கள் செய்யும் அயோக்கியத்தனம் !

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கும் டிரேடிங் இணையதளங்கள் அனைத்தும் ஃப்ராடு வேலை செய்து வருகின்றன. அதுமட்டுமல்ல, உங்களுக்கென்று தனி வெப்சைட், கீ வேர்ட் என்று ஆரம்பிப்பார்கள். ஏமாந்தீர்கள் என்றால் அது அவர்களுக்கு லாபம். நமக்கு ஒரு பைசா லாபம் கிடைக்காது. ஏமாற்றும் இது போன்ற இணையதளங்களை நீங்கள் நம்பி காசை கரியாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

* * *

Wednesday, August 3, 2011

பவர் செல்லுமா செல்லாதா?

சொத்து வாங்கும் போது பத்திரம் என்பதைத் தாண்டி பவர் பத்திரம் என்பதைப் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைப் பற்றிய ஒரு பதிவுதான் இது. இப்போது ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

கே என்பவர் தனது 10 ஏக்கர் சொத்தினை ஜே என்பவருக்கு பவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த ஜே என்பவர் பத்து ஏக்கரில் ஒரு ஏக்கரை வேறு ஒருவருக்கு விற்று விட்டார். மீதமுள்ள 9 ஏக்கரில் அரசாங்கம் 5 ஏக்கரை சாலைக்காக எடுத்துக் கொள்கிறது. அரசு எடுத்துக்கொண்ட விபரங்களை பவர் வைத்திருக்கும் ஜே என்பவரிடம் தான் தெரிவிக்கிறது. அதற்குண்டான பலன்களையும் ஜே என்பவர் தான் பெற்றுக் கொள்கிறார். இதற்கிடையில் ‘ஜே' என்பவர் 4 ஏக்கரை விற்கும் பொருட்டு, வேறொருவரிடம் பத்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு, அக்ரீமெண்ட் போட்டு விடுகிறார். இதற்கிடையில் பவர் எழுதிக் கொடுத்த ‘கே' என்பவர் இறந்து விடுகிறார்.

எங்களது கம்பெனி சென்னை ஏஜெண்ட் மேற்படி விபரத்தைச் சொல்லி, மேற்படி எழுதப்பட்ட பவர் இப்போதைக்குச் செல்லுமா இல்லை காலாவதியாகி விட்டதா என்று கேட்டார்.

எங்களிடம் வரும் முன்பே அவர் பலரிடமும் கேட்டிருக்கிறார். அவர்கள் பவர் எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருந்தால் தான் பவர் செல்லுபடியாகும். அவர் இறந்து விட்ட படியால் பவர் செல்லாது என்றும், இனி அந்தச் சொத்து பவர் எழுதிக் கொடுத்தவரின் வாரிசுகளுக்குச் சென்று விடும் என்றும் சொல்லி இருக்கின்றனர். சொத்தினைக் கிரயம் வாங்க வேண்டுமென்றால் வாரிசுகளிடம் என் ஓ சி வாங்க வேண்டுமென்றும் சொல்லி இருக்கின்றார்கள்.

மேற்படிப் பிரச்சினைக்கு மேலே சொல்லப்பட்டிருப்பதுதான் சொல்யூசனா என்றால் கிடையவே கிடையாது. மிக முக்கியமான ஒரு பாயிண்டை விட்டு விட்டார்கள். அது என்ன?

இது போன்ற சொத்து சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் தீர்வு கொடுக்கிறது. இவ்வசதியைப் பெற எங்கள் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட டாக்குமென்ட் காப்பிகளுடன், கட்டணத்தையும் செலுத்தினால் லீகல் ஒப்பீனியன் கொடுக்கப்படும். சொத்து இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் லீகல் ஒப்பினியன் பெற்றுத்தரும்.

சரி மேலே இருக்கும் பிரச்சினையில் மறந்து போன பாயிண்ட் என்னவென்றால், சொத்து விற்கும் பொருட்டு அக்ரீமெண்ட் போடும் போது, பவர் எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருந்திருந்தால் அந்த அக்ரீமெண்ட் செல்லுபடியாகும் என்பதுதான் அது. ஆக இந்தச் சொத்தினை வாங்க அக்ரீமெண்ட் போட்டவருக்கு மேற்படிச் சொத்தினை வாங்க முழு உரிமையும் உண்டு.

* * *

Monday, August 1, 2011

மிகக் குறைந்த விலையில் வீட்டு மனை

கோவை அவிநாசி சாலையில், ஏர்போர்ட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் நல்ல சாலை வசதியுடன், லீ மெரிடியன் ஹோட்டலின் அருகில் இரண்டு வீட்டு மனைகள், டிடிசிபி அப்ரூவலுடன் விற்பனைக்கு எங்கள் நிறுவனத்திடம் வந்திருக்கிறது.

இரண்டு கிரவுண்டுகள் நிலம். சாலை வசதி. அவினாசி சாலை ஆறு வழிச்சாலையான பிறகு இந்த நிலத்தின் விலை மூன்று மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலத்தின் அருகில் கல்லூரி இருப்பதால் பத்து அறைகள் கட்டி விட்டாலே நல்ல வாடகை வரும். டாக்குமெண்டுகள் அனைத்தும் கிளியர்.

இந்த நிலத்தினைப் பார்வையிட விரும்புவோர் தனிமெயிலில், தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும். விபரங்களை அனுப்பி வைக்கிறேன்.

எங்களது இமெயில் முகவரி : info@fortunebricks.net / covaimthangavel@gmail.com

இரும்புத்தாது தொழிலில் அடியேன் - பகுதி 2

சனிக்கிழமை காலையில் போன் வந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஒருவர் அழைத்திருந்தார். நீங்கள் எழுதி வரும் ரியல் எஸ்டேட் சம்பந்தமான பதிவுகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது என்றார். தெரிந்ததை எழுதுவதில் எனக்கொன்றும் சிரமம் இருந்ததில்லை. ஆனால் நேரம் தான் பிரச்சினை. வேறு ஏதேனும் உதவி தேவையென்றாலும் எனக்குத் தெரியப்படுத்தலாம். இயன்றவரை உதவ முயற்சிக்கிறேன்.

இப்படியும் சில மனிதர்கள் பதிவினைப் படித்து விட்டு சம்பந்தப்பட்ட அனாதை இல்லத்திற்கு உதவும் பொருட்டு சிலர் மெயில் அனுப்பி இருந்தனர். எனக்கு மிகுந்த வேலைப் பளு இருந்த காரணத்தால் மேலதிக விபரங்களை அனுப்ப இயலவில்லை. இந்த வாரத்திற்குள் அனாதை இல்லத்தின் முழு விபரத்தையும் பதிவில் போட்டு வைக்கிறேன். செய்யும் உதவி எதற்குச் செய்கின்றோமோ அதற்குச் சென்று சேர்ந்ததா என்பதை அறிய ஆர்வமிருக்கும். ஆகையால் அனாதை இல்லத்தின் சின்னச் சின்னத் தேவைகளைத் தெரிந்து கொண்டு பதிவாய் எழுதி வைக்கிறேன்.அதற்கு உதவினால் அவர்களுக்கு பெரும் உதவிகரமாய் இருக்கும். நண்பர்கள் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

இப்போது இரும்புத்தாது பிசினஸ்ஸுக்கு வருகிறேன். இரும்புத்தாது பிசினஸ்ஸில் எனது நண்பரொருவர் கர்நாடகத்தில் அரசுப் பதவியில் உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவரின் மகனுடன் இணைந்து 67 ஏக்கர் இரும்புத்தாது டெபாசிட் இருந்த இடத்தினை லீசுக்கு எடுத்து நிலத்தின் உரிமையாளருடன் ஒப்பந்தம் ஒன்றினைப் போட்டார். அதற்குண்டான பணம் கொடுக்கப்பட்டது. பின்னர் லாரிகள், டிப்பர்கள், எக்ஸ்புளோர் செய்யும் மெஷின்கள் அனைத்துக்கும் ஒப்பந்தம் போடப்பட்டு அனைத்தும் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று விட்டன. ஆர்டரையும் சைனாவிலிருந்து பெற்று விட்டோம். போர்ட்டில் யார்ட் வாடகைக்கு எடுத்து சரக்கினை கொண்டு போய் டம்ப் செய்து கொண்டிருந்த நேரத்தில் சில விஷமிகள் ஒன்று சேர்ந்து (போட்டிக் கம்பெனிகளின் சப்போர்ட்டில்) லாரிகள் அவர்களின் ஊர் வழியாகச் செல்ல முடியாதவாறு தடுத்தனர். அனைத்து வித பர்மிட்டுகளைக் காட்டினாலும் விடவில்லை. அதுமட்டுமா லாரிகளை எரிக்கவும் முற்பட்டனர். எங்கெங்கோ சென்றார். யாரையெல்லாமோ பார்த்தார். கையில் இருந்த பணமெல்லாம் தண்ணீராய்க் கரைந்தது. எதுவும் நடக்கவில்லை. பெரும் திமிங்கிலங்களை எதிர்த்து சிறு மீன் போராட முடியுமா? முடியவில்லை. கையில் இருந்த மொத்தமும் போக நடு ரோட்டிற்கு வந்தார் அவர். 

எவராவது புதிதாக பீல்டிற்கு வந்தால் விடுவார்களா பண முதலைகள். மொத்தமாய் முடித்துக் கட்டி விட்டார்கள். வேறு யாரும் சம்பாதிக்க விட மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் ஏற்றுமதித் தொழிலில் இன்றைக்கும் கோலோச்சுகின்றார்கள்.

பழைய இரும்புத் தொழிலில் சேலத்தைச் சேர்ந்த ஒருவர் புதிதாய் இறங்கினார். சென்னையில் இருக்கும் மிகப் பெரிய இறக்குமதியாளருக்கு இவர் கண்ணை உறுத்தினார். சேலத்துக்காரர் பழைய இரும்பினை இறக்குமதி செய்தார் மிக அதிக விலை கொடுத்து. சரக்கு கிளியர் ஆகி கோடவுனில் சேரும் வரை மார்க்கெட் விலை உயர்ந்திருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் கிலோவிற்கு 10 ரூபாய் மார்க்கெட்டில் விலை குறைத்து அந்தப் பெரிய இறக்குமதியாளர் விற்பனை செய்தார். அங்கங்கே கடன் வாங்கி இறக்குமதி செய்த சேலத்துக்காரர் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தார். நஷ்டம் நஷ்டம் நஷ்டம். தூக்கில் தொங்கினார். பெரிய இறக்குமதியாளரின் ஆசை நிறைவேறியது. போட்டியாளர்களை வரவே விடாமல் இன்றைக்கும் அந்த இறக்குமதியாளர் சென்னையில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார். யாரால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் பார்ப்போம்? இன்றைக்கு பணம் கொழிக்கும் பல துறைகள் இப்படிப்பட்ட பண முதலைகளிடம் சிக்கிக் கிடக்கின்றன. வேறு யாரும் அந்தத் தொழிலைச் செய்யவே முடியாது. விடமாட்டார்கள். மொத்தமாய் அழித்து விடுவார்கள். சாமானியர்கள் வேறு வழியின்றி வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு இதெல்லாம் தெரியாது என்றா நினைக்கின்றீர்கள். அனைத்தும் தெரியும். ஆனால் ஒன்றும் செய்யமாட்டார்கள்.

இன்றைக்கு இரும்புத்தாது ஏற்றுமதியில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருக்கின்றன என்று பத்திரிக்கைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயமெல்லாம் அன்றைக்கு இவர்களுக்குத் தெரியாதா? ஏன் எழுதவில்லை? இரும்புத்தாது ஏற்றுமதியை சரி செய்ய எவராலும் முடியாது என்கிற ஒரு மாயையை பத்திரிக்கைகள் ஏற்படுத்துகின்றன. ஆனால் அது உண்மை இல்லை.

ஏற்றுமதியான இரும்புத்தாது எத்தனை டன்? அனுமதி கொடுத்தது எத்தனை டன் என்று பார்த்தால் மேட்டர் ஓவர். இதை ஏன் அரசு பார்க்கவில்லை? எல்லாம் பணம்? கோடி கோடியாய் லஞ்சம். யார் எந்தத் தவறு செய்தாலும் எதுவும் செய்ய முடியாதவாறு மிரட்டல்கள். அரசு ஊழியர்கள் என்னதான் செய்வார்கள்? டைம்ஸ் ஆஃப் இந்தியா 12,20,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருக்கிறது என்று பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டிருக்கிறது. 

10,000 டன் சரக்கிற்கு மூன்று பேரிடம் விலை பேசுவார்கள் ஏற்றுமதியாளர்கள்.எவன் அதிகம் தருகின்றானோ அவனுக்குச் சரக்கு. கொஞ்சம் ஏமாந்தவனாக இருந்தால் ப்ளூ மெட்டலைக் கலந்து கேடுகெட்ட குவாலிட்டியை யார்டில் கொட்டி விடுவார்கள். அதுமட்டுமா வாங்கிய காசை திருப்பிக் கொடுக்கவும் மாட்டார்கள். எத்தனை அடியாட்கள். எத்தனை ஆபத்துக்களை உருவாக்குவார்கள் தெரியுமா?  

ஏற்றுமதி முனையத்தில் ஏற்றுமதியாளர்களின் இன்வாய்ஸ்களை வெறும் பத்துரூபாய்க்கு வாட்ச்மேன் விற்றுக் கொண்டிருந்தார். இதை நான் நேரில் பார்த்து அதிர்ந்தேன். அந்த இன்வாய்ஸ்ஸில் இறக்குமதியாளரின் முகவரி, போன், என்னவிலைக்கு பொருள் ஏற்றுமதி செய்யப்படுகிறது போன்ற விபரமெல்லாம் தெளிவாய் இருக்கும். பெரும் முதலைகள் சின்னஞ் சிறு ஏற்றுமதியாளர்களின் வாடிக்கையாளர்களை இப்படித்தான் கவர்கின்றார்கள்.

இது போன்ற இன்னும் எண்ணற்ற பிரச்சினைகளை இரும்புத்தாது தொழிலில் சந்தித்தேன். அதிகாரம், பதவி, பணபலம் இருந்தால் மட்டுமே இது போன்ற பணம் கொழிக்கும் தொழில்களில் ஜெயிக்க முடியும் என்பதை நான் கண்கூடாக கண்டுகொண்டேன்.

* * *