குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, December 9, 2008

பிண்டோற்பத்தி ...

சினிமா, டெக்னாலஜி, தர்மம் என்றெழுதி படித்த உங்களுக்கு சற்று வெறுப்புத் தட்டியிருக்கும். ஆகையால் இன்று வேறு பக்கம் சென்று வரலாமென்றுதான் இப்பதிவு. இப்பதிவும் கூட அறிவியல் கண்டுபிடிப்புத்தான். பிள்ளைகள் உருவாவது எப்படி என்று இன்றைய அறிவியல் கண்டுபிடிக்கும் முன்பே தமிழில் பாடி வைத்திருக்கிறார்கள். ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை பெறுவது எப்படி என்ற விளக்கமுமிப்பாடலிலே சொல்லப்பட்டிருக்கிறது. இப்பாடலில் காரிய சித்திக்கான நேரமும், மூச்சுப் பயிற்ச்சியினைப் பற்றிய விளக்கமும் கூட இருக்கிறது.

கேளப்பா மனமான வாயுகூடி
கெடியான சித்தமா காசம்பொங்கி
வேளப்பா ஆங்கார சிகாரமிஞ்சி
மேவுதற்குப் பெண்மேலே மோகமாகும்
நாளப்பா ஐந்துக்கும் மலமேதென்றால்
நலம் பெறவே சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
தாளப்பா மனதோடே வியானன்கூடும்
தனியான நாதத்தில் பானன் தானே

தானென்ற விந்துவினிற் சமானன்கூடும்
தனியான சித்தத்தில் வியானன் சேரும்
கானென்ற ஆங்காரம் கர்ச்சிப்போடே
கலந்து நிற்கும் உதானனப்பா கண்டுகொள்ளு
வேனென்ற பத்துமொன்றாய் மனதுங்கூடி
மேவியவன்கலந்து வந்து விழுகும்போது
மானென்றமெளனபர வசமேயாவாள்
மருவுகின்ற பெண்ணுக்கும் முறைதான்கேளே

முறையான பெண்ணாணும் மெளனமுற்றால்
மோசமில்லைகருவங்கே தரிக்கும்பாரு
நிறையான வலத்தோடி லாணேயாகும்
நேராகயிடத்தோடிற் பெண்ணேயாகும்
உறையான கருப்பையிற் சுக்கிலமாய்ப்பாய
உத்தமனே சுரோணிதந்தா னுரைந்துகொள்ளும்
கறையாகப்பாய்ந்தவெளி தமருபோலக்
கழற்கொடிக்காய போற்றிண்டு சிரசுமாமே

ஆமப்பாசிரமோடே கையுங்காலும்
அப்பனே தத்துவங்கள் நரம்புமூளை
ஓமப்பாஅத்திமுத லுரோமத்தோடு
உத்தமனேபதினொருவா சலுமேகாணும்
காமப்பால்விழுந்த வழி சிரசினாலே
கைம்முறையாய்த் தாயுண்ட அன்னஞ்செல்லுஞ்
சேமப்பா நடுமையத் தொப்புளாலே
சென்றதெல்லாமலமாகக் கழியுந்தானே

தானென்றபதினொன்றாற் சடந்தான்முன்னே
சாதகமாயெடுத்துவரும் மடலெவ்வாறு
ஊனென்றபெண்ணுக்கு மனதுவேறாய்
உருதமுற்றுமெளனமுன்னாப் பாவத்தாலே
கானென்ற மலடாவாள் புருடனுக்குங்
கைமுறையாயிப்படிதான் கண்டுகொள்ளு
தேனென்றமொழியாட்குப் பரனார் சொன்னார்
செகமெல்லாம் இப்படித்தான் செனித்தவாறே

அது என்ன வலத்தோடி , இடத்தோடி என்று கேட்கின்றீர்களா.... அதன் விளக்கம் இந்தப் பாடலில் வருகிறது. இப்பாடலில் சில ரகஷியங்கள் மறைவாய் கிடக்கிறது. மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

வெள்ளி வெண்டிங்கள் விளங்கும் புதனிடம்
தெள்ளிய ஞாயிறு செவ்வாய் சனி வலம்
வள்ளல் வியாழம் வளர்பிறைக்கோரிடம்
ஒள்ளிய தேய்பிறைக் கேவலமாகுமே
மாறிவளர் பக்கமதிற் குறையும் பக்கம்
மதி நாடி கதிர் நாடி வளர்ப்பொன்னோடிப்
பேறுமிகவுண்டாகும் பிராணனிற்கும்
பின்புரைத்த காரியங்க ளெல்லாமேலாம்
கூறுகின்ற சனி நாளிற் பகலிராவிற்
குலவுசரம் வலமிடத்தே கோணாதோடில்
நாறுமலர்பெந்திருவே சொன்னோமிந்த
ஞாலமெல்லாம் புகழ்பெறவே நடக்குமென்றே


யோகிகள் எப்போதும் சுவாசத்தைச் சூரிய கலையிலேயே நடத்திக் கொண்டிருப்பார்களாம்.. சூரியகலையில் காரிய சித்தி வேறு ஆகுமாம். முயற்சித்துப் பாருங்களேன்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.