குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, April 22, 2008

சட்டங்கள் தர்மத்தை பாதுகாக்கின்றனவா ?

மஹாபாரதத்தில் பாண்டவர்களின் மாளிகைக்கு வந்த துரியோதனன் பொய் தடாகம் என்று எண்ணி நீரில் வழுக்கி விழுந்ததை பார்த்த பாஞ்சாலி சிரித்தாள். அதனால் தான் பாரதப் போரே வந்தது என்று சொல்லுவார்கள்.

ஒருவரின் கேளிக்கையான செய்கை மற்றவருக்கு நகப்பை தரும். அதனால் பாஞ்சாலி சிரித்தாள். இது அவளுக்கு தர்மம். ஒரு பெண் ஒரு அரசனை பார்த்து சிரிப்பது அந்த ஆண் மகனுக்கு இழிவு. அதனால் கோபம் கொண்டான். இது துரியோதனனின் தர்மம் ?

எந்த தர்மத்தின் படி பாரதப் போரில் செத்தார்கள் ?

சோரம் போன மனைவியை கையும் களவுமாக பார்த்த கணவன் அவளை அங்கேயே வெட்டுகிறான். அதானால் அவனுக்கு நீதிமன்றம் தண்டனை அளிக்கிறது. இதில் கணவனுக்கு மனைவி செய்தது துரோகம். அதனால் அவன் வெட்டினான். இது கணவனின் தர்மம். ஆனால் சட்டம் என்ன சொல்லுகிறது. கொலை செய்தால் தண்டனை என் கிறது.

சட்டத்தின் நாதம் தர்மம். இந்தியாவில் தர்ம சக்கரம் தான் தேசிய சின்னம். தர்ம சக்கரம் தாம் தேசிய கொடியில் பட்டொளி வீசி பறக்கிறது.

தர்மம் எது ? அதன் பாதை எது ? சோ அவரின் மஹாபாரதம் பேசுகிறது என்ற புத்தகத்தில் "தர்மத்தின் பாதை சூட்சுமமானது " என்று எழுதியுள்ளார்.

தர்மம் எது ? சட்டங்கள் தர்மத்தை பாதுகாக்கின்றனவா ?