குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label முதலீடு. Show all posts
Showing posts with label முதலீடு. Show all posts

Saturday, May 9, 2020

இந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன?


நண்பர்களே,

தினக்கூலிகள் பற்றி நமக்குத் தெரியும். சாலைகளின் ஓரமாய் மேஸ்திரிக்காகவும், அவர் ஒதுக்கும் வேலைக்காகவும் காத்துக்கிடப்போரை நாமெல்லாம் பார்த்திருக்கிறோம். தினமும் வேலை செய்து கிடைக்கும் கூலியில் டாஸ்மாக் பறித்துக் கொண்டது போக, மீதி உள்ள காசில் சாப்பிடுபவர்கள் 130 கோடியில் 110 கோடிப் பேர் இருக்கிறார்கள் என்ற புள்ளி விபரங்களை நாமெல்லாம் படித்திருக்கிறோம். மீதி இருக்கும் 20 கோடியில் நாமும் ஒருவர் என்று மகிழ்ச்சி கொண்டிருப்போம்.

இந்தியாவின் கடன் தொகை 85 லட்சம் கோடி, தமிழகத்தின் கடன் தொகை 3.5 லட்சம் கோடி. ஒரே மாதம், வரி வருமானம் போதவில்லை என்ற உடனே இந்தியாவின் பிரதமர் டிவியில் உரை ஆத்த வரவில்லை. தமிழ்நாட்டிலோ சம்பளம் கட். இன்னும் ஒரு மாதம் வரி வருவாய் இல்லையென்றால் நாடு மூழ்கிப் போய் விடும். அரசு அதிகாரிகளுக்கு, பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. ராணுவ வீரர்களுக்கும் கொடுக்க முடியாது. என்ன ஆகும் அதன் பின்னால்? நாடு ஸ்தம்பித்துப் போய் விடும். ஆக தினமும் வரி வசூல் என்பது நாட்டின் மூச்சு. அதாவது ஒரு தினக்கூலி கதை.

இப்போது சொல்லுங்கள்.

யார் அன்றாடம் காய்ச்சி?

இதற்கிடையில் ஒரு விஷயம். இந்திய மக்கள் தொகையில் சுமார் பத்து லட்சம் பேரிடம் நமது பணமெல்லாம் முடங்கிக் கிடக்கிறது. கொங்குப்பக்கம் ஒரு சிலரிடம் ஐம்பத்தாயிரம் கோடிக்கும் மேல் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இந்தப் பணத்தைத் தோண்டி எடுத்தால் ஐந்து வருடங்கள் வரி வசூலிக்காமலே இந்தியாவை ஆளலாம். மக்கள் எல்லோரும் மகிழ்வாக இருப்பார்கள். அந்த பத்து லட்சம் பேர் யார் யார் என எல்லோருக்கும் தெரியும். வசூலிப்பதும் எளிதுதான்.

யார் செய்வது? செய்வார்களா? செய்யமாட்டார்கள்.

மக்களுக்கு வருமானமே இல்லை. ஆனால் அரசு விலையேற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்? இது எரியும் வீட்டில், ஆக்சிடெண்டில் பிடுங்கும் திருட்டு புத்தி அல்லவா? மக்கள் நலம் பற்றி நல்ல சிந்தனை உள்ளவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.

இந்த அக்கப்போர் ஒரு பக்கம் இருக்கட்டும். இனி முதலீட்டுக்கு வருவோம்.

உலகம் உள்ளங்கைக்குள் வந்து விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் விரல் நுனியில். கட்டுப்பாடுகளற்ற இணையவெளியில் கிடைக்காத விஷயங்களே இல்லை. ஒவ்வொரு நாட்டின் அத்தனை விபரங்களும் உட்கார்ந்த இடத்திலிருந்து பெற்று அதை ஒப்பீடு செய்து விடலாம்.

இந்தக் காலத்திலும் பொய்யாகப் பேசியே மக்களை ஏமாற்றும் ஏமாளிக்கூட்டம் திரிந்து கொண்டுதான் இருக்கின்றது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். எட்டு நாள் தேவையில்லை. எட்டு நொடி போதும் பொய்யா உண்மையா என தெரிந்து கொள்ள.

உலக நாடுகளில் பெரும்பான்மையாக இருப்பவை முஸ்லிம் நாடுகளும், கிறிஸ்துவ நாடுகளும். மற்றபடி இரண்டே இரண்டு இந்து(??) நாடுகள் மற்றும் மதம் சாரா ஒரு சில நாடுகள்.

இந்தியாவை ஆளும் பாஜக கொண்டு வந்திருக்கும் சமீபத்திய சட்டமான சிட்டிசன் சிப் அமெண்ட்மெண்ட் படி இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பும், இந்தியர்கள் கணக்கெடுப்பும் பல இடங்களில் பல வித சர்ச்சைகளையும், தொடர்ந்து போராட்டங்களையும் உருவாக்கியது. கொரானாவினால் இப்போதைக்கு அந்த இரு விஷயங்களுக்காக போராட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

போராட்டம் என்றாலே பிரிட்டிஷ்காரர்கள் இந்திய சுதந்திரபோராட்டத்தினை வெறி கொண்டு அடக்கியது போல ஜன நாயக அரசும் நடந்து கொண்டதை நாமெல்லாம் பல்வேறு டிவி செய்திகள் மூலம் ஏற்கனவே தெரிந்து இருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை இந்தியர்கள் கணக்கெடுப்பு வெகு முக்கியமானது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியர்கள், வெளிநாட்டினர், அகதிகள், தஞ்சமடைந்தவர்கள் எனும் துல்லிய கணக்கு விபரங்கள் தேவை. இந்த தரவுகள் இனி வரும் காலத்தில் அவசியம் தேவைப்படும், அதே நேரத்தில் அரசு கட்சி சார்பற்ற, அரசின் கட்டுப்பாடுகளற்ற சுதந்திர அமைப்பின் வழியாக இவற்றைப் பாதுகாத்திட சட்ட வரையறைகள் செய்தல் அவசியம். இல்லையெனில் அரசியல் பழிவாங்கல்களும், அரசியல் கொலைகளுக்கும் இத்தரவுகள் இடமளித்து விடும் அபாயம் நிச்சயம் உருவாகும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சுய நலமற்றர்களாக இருப்பார்கள் என்று மனிதகுலம என்றைக்கும் நம்பி விட கூடவே கூடாது.

இத்தரவுகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சி வசம் இருந்தால், அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் எதிர்கட்சி ஆட்களையோ அல்லது விமர்சனங்கள் செய்பவர்களையோ இல்லாமல் மாற்றி விடலாம். நான் இந்தியன் தான் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் தனிமனிதனிடம் வந்தால், அதை ஏற்கவோ நிராகரிக்கவோ அரசுக்கு அதிகாரம் இருந்தால் என்ன ஆகும்? அவன் அழிக்கப்படுவான் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படியான நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கும் என்பது 100 சதவீதம் உண்மை.

ஆனால் அகதிகள் விஷயத்தில் அரசு இன்னும் சில கவனமான ஊள்ளீடுகளை சேர்த்து, மதம், இனம், மொழி இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.

சிறுபான்மையினராக குறிப்பிடப்படும் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் இச்சட்டத்தினை ஆதரரிக்கவில்லை என்பது உண்மை. அதற்கான போராட்டங்களை அவர்கள் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் நடத்தி இருக்கிறார்கள்.

இப்படியான நிலை இருக்கையில் பெரும்பான்மை நாடுகளைக் கொண்ட முஸ்லிம் மதத்தைச் சார்ந்த தொழிலதிபர்களும், கிறிஸ்து மதத்தைச் சார்ந்த தொழிலதிபர்களும் எப்படி இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருவார்கள் என்று நம்ப முடியும்? முதலீட்டாளர்கள் பெருத்த லாபம் கருதி முதலீடுகள் செய்வார்கள். இருப்பினும் முதலீட்டாளர் தங்கள் முதலீடுகளைச் செய்யும் முன்பு பல்வேறு தரவுகளை ஆராய்வார்கள்.

ஒவ்வொரு மனிதனும் பிறப்பின் போது, அவனின் மதம் நிர்ணயிக்கப்பட்டு அதன் வழி வளர்க்கப்படுகிறான். மதச்சார்பு கொண்ட மனிதன், தன் மதத்தினருக்கு இந்தியாவில் வாழ அனுமதிப்பார்களா என்ற சூழல் இருக்கிறது என்று தெரிந்தபடியால், இந்தியாவில் எப்படி முதலீடுகள் செய்ய முன்வருவார்கள் என்று நினைக்க முடியும்? இந்தியாவை ஆளும் அரசுக்கு இனம், மொழி, மதம் முக்கியம் என்பது போல முதலீட்டாளர்களுக்கும் இருக்குமல்லவா?

அதற்கான சாத்தியக்கூறுகளை சிட்டிஷன்சிப் அமெண்ட்மெண்ட் சட்டம் குறைத்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டல்லவா?

பணக்காரனுக்கு அப்படியெல்லாம் மதம் சார்ந்த சிந்தனைகள் இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம். பெரும்பான்மையான நிறுவனங்களின் தலைவர்கள் என்ன இனமோ அந்த இனத்தினருக்கு வேலையில் முன்னுரிமை கொடுத்திருப்பது உலகிற்கே தெரிந்த விஷயம். சப்பைக்கட்டு கட்ட இப்படியெல்லாம் பேசுவார்கள். ஆனால் நிதர்சன உண்மை மதம், மொழி, இனம் சார்ந்த பணியாளர்கள் என்பது.

சைனாவில் முதலீடு செய்ய விரும்பாதவர்கள் இந்தியாவிற்கு எப்படி வருவார்கள் என்று எவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா? இந்தியாவில் முதலீடு செய்தால் தான் கொள்ளை லாபம் அடிக்கலாம் என்று நினைத்து வருவார்கள் என்றும் சொல்வார்கள். அதெல்லாம் சாத்தியமில்லாத வெற்றுக் கூச்சல்.

இரண்டு ரூபாய் பதிவாளர்களின் பதிவுகள்  இனி முதலீட்டாளர்களுக்கு இந்தியாதான் ஒரேஅ வழி என்று சொல்கின்றன?  

இரண்டு ரூபாய் கொடுக்கும் முதலாளி மதிகெட்டவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சிட்டிசன்ஷிப் அமெண்ட்மெண்ட் இப்போதைக்கு தேவையில்லாத ஆணி. இந்த ஆணியைப் பிடுங்கி விட்டு வேறொரு மேட்டரைச் செய்தால் போதும். நினைத்த காரியம் செவ்வனே நடந்திருக்கும்.

உங்களுக்கு என்ன சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக மாறி விடுகிறார்கள் என்பதுதானே பிரச்சினை? அதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது.

ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதி, இரண்டு குழந்தை பெற்றால் குழந்தைக்கு வரி கொடுக்க வேண்டுமென்று உத்தரவு போடுங்களேன். மேட்டர் ஓவர். சிறுபான்மையினர் எப்போதும் சிறுபான்மையினர் தான், பெரும்பான்மையினர் எப்போதும் பெரும்பான்மையினர்தானே?

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துகிறோம் பேர்வழி என சட்டம் ஒன்றினை போட்டால் மேட்டர் ஓவர். (எனக்கு எவ்வளவு கொடூர சிந்தனை என்று பாருங்கள். இதற்கு நான் பொறுப்பல்ல, வெறும் ஐடியாதான்)

கண்ணை மூடிக் கொண்டு நம்பி விட இன்னும் நாமெல்லாம் மூளையைக் கழற்றி வீசி விட்டு திரியவில்லை என்று நம்புகிறேன்.

இந்திய அரசின் இந்தச் சட்டங்கள், வெளிநாடு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்காது என நம்பலாம். ஏனெனில் உலகில் இந்தியா ஒரு சிறுபான்மை நாடு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களுக்கு இரத்தம் ஏற்றப்பட்டிருந்தால், அந்த இரத்தத்தில் முஸ்லிம், கிறிஸ்து, கீழ்சாதி இரத்தம் இல்லையென சொல்ல முடியுமா?

உலகம் ஒரே கொடைக்குள் வந்து விட்டது. இனம், மொழி, மதம் சார்ந்து அரசுகள் இயங்க முடியாது ஆளும் அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாய உத்தரவு.

இல்லை நாங்கள் இப்படித்தான் என்றால் காலுக்குதான் செருப்பே தவிர செருப்புக்கு கால் இல்லை என உலகம் நம்மை உதறி தள்ளிவிடும் அபாயம் உண்டு.

கொரானாவினால் பல நாடுகளிலும் வேலை இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இனி வேலைகள் அந்தந்த நாட்டின் பிரஜைகளுக்கே கிடைக்கும் என நம்பித்தான் ஆக வேண்டும். வெளி நாட்டில் வேலை எனும் கனவு கனவாகவே முடிந்து போகும்.

ஒவ்வொரு இந்தியருக்கும் மாதம் பத்தாயிரம் ரூபாய் சாத்தியமா? என்றால் சாத்தியம்தான். பைசா செலவில்லாமல் எல்லோருக்கும் பணம் கொடுக்கலாம். யாருக்கும் எந்த நட்டமும் வராது. நாட்டின் வருமானத்துக்கும் பிரச்சினை இருக்காது. அது எப்படி என்கின்றீர்களா? அது ரகசியம். எவன் கண்டுபிடிக்கின்றான் என பார்க்கலாம்.

Saturday, April 11, 2020

நிலம் (63) - 70 கோடி முதலீடு 220 கோடி வருமானம்


அன்பு நண்பர்களே,
யாருக்கு என்ன நடக்கும் என்று தெரியாத, கண்ணாமூச்சி ஆடும் விதியுடன் போராடிக் கொண்டிருக்கும் அவலமான நிலையில், மனிதனே நோய் பரப்பும் கொடிந்துயரத்தில் ஆழ்ந்து, வேதனையில் உழன்று கொண்டிருக்கிறோம்.

நம் மனதை வேறு விஷயங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டிய காலம் இது. கொரானாவின் பாதிப்பு இந்தியாவில் குறைவதற்கு சுமார் ஆறு மாதம் ஆகலாம். ஒடிசாவில் ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதை அறிந்த போது, தமிழகத்திலும் அந்த நிலை வரலாம் என நினைக்கிறேன். பிள்ளைகளையும், உறவினர்களையும், நண்பர்களையும், சுற்றாரையும், உற்றாரையும் பாதுகாக்க வேண்டிய தருணம் இதுதான். அதை நாம் ஒரு தவமாகச் செய்வோம்.

இனி எதிர்காலம் என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள். இயற்கை அதற்கும் வழி வைத்திருக்கும். என்னுடன் இணைந்திருங்கள். எனது பிளாக்கைத் தொடர்ந்து படித்து வாருங்கள். வழிகள் பிறக்கும், நம்பிக்கை துளிர்க்கும். வாழ்க்கை வசந்தமாகும். எல்லோரும் சேர்ந்து ஒன்றாய் பொருளாதாரத்திலும், வாழ்க்கையிலும் முன்னேறலாம்.  

இனி மிகக் குறைந்த முதலீட்டில் பெரும் லாபம் அடைந்த எங்களின் வாடிக்கையாளரைப் பற்றிப் படியுங்கள்.

இது உங்களின் மனதுக்கு ஊக்கம் தரும். இன்பம் தரும்.

இந்த முதலீட்டாளர் சரியானவரைத் தேர்ந்தெடுத்தார், அதனால் வெற்றி பெற்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நான் பங்கெடுத்து வேலை செய்த ஒரு அற்புதமான முதலீட்டினையும், அதனால் கிடைக்கப்பெற்ற லாபம் பற்றிப் பார்ப்போமா?

ஒரு பெரிய கார்ப்பொரேட் நிறுவனம், நண்பர் மூலமாக, நகரத்தில் ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டி, இந்த இடத்தில் எங்களுக்கு 50 ஏக்கர் நிலம் வேண்டும் எனவும், பரிவர்த்தனைகள் அனைத்தும் வங்கி மூலம் மட்டுமே செய்வோம் எனவும் கேட்டிருந்தார்கள்.

அதற்கான திட்டமிடலை வெகு தெளிவாக உருவாக்கினோம். அதற்கான காலத்தை இரண்டு வருடமாக நிர்ணயித்தோம். இதில் முக்கியப் பிரச்சினை கைடு லைன் மதிப்பும், மார்க்கெட் மதிப்பும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இல்லையெனில் இந்தப் பணியைச் செய்ய இயலாது.

நிலத்தின் உரிமையாளர்கள் மார்க்கெட் மதிப்புக்கு வங்கி மூலம் பணம் பெற்றுக் கொள்ள சம்மதிக்க வேண்டுமென்பதுதான் பெரும் பிரச்சினையாக இருந்தது.

லீகல், வாரிசுகள், நிலத்தின் மீதான் லோன் போன்றவைகள், சர்வேக்கள், ஆவணங்களை எடுத்தல், பத்திரம் பதிவு என இன்னும் பலப்பல வேலைகள் இருந்தன. அடியேன் ரசீதுக்கள், அக்ரிமெண்டுகள், லீகல், சர்வே, ஆவணங்கள் கலெக்ட்ச் செய்வது, டிராஃப்ட், பத்திரம் பதிவு, பட்டா மாறுதல் ஆகிய வேலைகளுக்கு பொறுப்பேற்றேன்.

இதர வேலைகளை அதாவது நில  உரிமையாளர்களுடன் பேசுவது, விலை நிர்ணயம் ஆகியவைகளை இன்னொரு நண்பர் பார்த்துக் கொண்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக வேலைகள் நடந்தன. ஒரே நேரத்தில் பத்து கிரையங்கள் செய்தேன். பத்து நபர்களுக்கான பணம், வரி பிடித்தம், வங்கி வரைவோலை, பத்திரப்பதிவுக்கான டிமாண்ட் டிராப்டுகள், பத்திரங்கள் என எல்லாவற்றையும் நானும், இன்னொருவரும் சேர்ந்து செய்தோம்.

ஆயிற்று இரண்டு வருடம். 50 ஏக்கர் கிரையம் செய்து முழுமையாக பட்டா மாறுதல் செய்து, நிறுவனத்திடம் ஒப்படைத்தோம். நாங்கள் வாங்கியது ஏக்கர் ஒன்றுக்கு 1 கோடி ரூபாய். இப்போது அந்த நிறுவனம், அந்த நிலத்தை வீட்டுமனைகளாகப் பிரித்து, அனுமதி பெற்று, தற்போது ஒரு செண்ட் 7 லட்சத்திலிருந்து 8 லட்சம் வரை விலை வைத்து விற்று வருகின்றார்கள். லாபம் கிட்டத்தட்ட 220 கோடி ரூபாய். இன்னும் எகிறும் காலம் ஏற ஏற. குறைந்த முதலீடு, ஆனால் வெகு நிச்சயமான வருமானம். எவராலும் வரக்கூடிய வருமானத்தைக் குறைக்க முடியாது. அது ஏறிக் கொண்டேதான் போகும்.

இதுதான் பிசினஸ். இது தான் நல்ல முதலீடு. இது தான் தொழில்.

ஒரு கம்பெனியை உருவாக்கி, முதல் போட்டு, பொருள் தயாரித்து விற்பனை செய்து லாபம் ஈட்டுவதற்குள் படாதபாடு பட வேண்டி இருக்கும். எவ்வளவு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் இதுவும் நல்ல தொழில் தான்.

இவ்வளவு லாபமா? அதுவும் குறைந்த காலத்துக்குள்? என்று இதைப் படிக்கும் போது பலருக்கும் நாமே இதைச் செய்தால் என்ன என்று உடனடியாகத் தோன்றும். அதைத்தான் ஒரு நண்பரின் நண்பர் செய்தார்.

வெளி நாட்டில் பெரிய அளவில் தொழில் செய்து கொண்டிருந்த நண்பரின் நண்பருக்கு கோவையில் நான்கைந்து இடங்களைக் கண்டறிந்து அதற்கான செயல்திட்டத்தை உருவாக்கி, முதலீடு, செலவு, லாபம் பற்றிய விபரங்களைத் தெளிவாக அனுப்பி வைத்திருந்தோம். நண்பரும் அவரின் நண்பரிடம் காட்டி, ஒப்புதல் பெற்றார். அதன் பிறகு இருவரிடம் இருந்தும் எந்தப் பதிலும் இல்லை. சரி என்று விட்டேன்.

அந்த நண்பர் இந்த பிராஜெக்டைப் படித்து விட்டு, தனக்குள் ஒரு கணக்கு போட்டு, புனேவில் சுமார் 200 கோடியை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தார். தொழில் தெரிந்தவர்களிடம், அதில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி அறிந்தவர்களிடம் பேசி இருக்க வேண்டும். அதை அவர் செய்யாமல் ஏதோ ஒரு கார்ப்பொரெட் கம்பெனியின் உதவியுடன் 200 கோடி இன்வெஸ்ட்மெண்ட் செய்தார். இப்போது 800 கோடி கடனில் சிக்கி தவிக்கிறார்.

வங்கியில் லோன் பெற்றும், 200 கோடி முதலீடும் போட்டு நான்கைந்து அபார்ட்மெண்ட் டவர்களைக் கட்டி, அதில் ஒரு வீடு கூட விற்க முடியாமல் ஆள் இப்போது மீளாக்கடனில் சிக்கினார். அந்த நிறுவனம் எல்லா வேலைகளையும் செய்து கொடுத்து விட்டு, அவர்களுக்கான கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு விலகி விட்டனர். அவர் போட்டது தப்புக்கணக்கு.

எவர் வேண்டுமானாலும் திட்டம் போடலாம். ஆனால் அந்தத் திட்டமிடல், நிதர்சனத்துடன் இணைந்திருக்க வேண்டும். சூழல், அமைப்பு, பொருளாதார தரவுகளுடன் ஒத்துப் போக வேண்டும் .

இன்றைக்கு ஒரு ஃபைனான்சியல் அட்வைசரின் பேச்சை கிட்டத்தட்ட 3500 பேர் கேட்டோம். அவர் இன்றைய நிலையில் ஷேர் மார்க்கெட்டில் உள்ள நிலையை எடுத்துச் சொன்னார். ஷேர் மார்க்கெட்டில் அது சரியாக இருக்கும். தினசரி டிரேடிங்க் லாபம் தரலாம். ஆனால் அது கத்தி மீது நடக்கும் செயல். என்றைக்கு வேண்டுமானாலும் வெட்டும்.

குறுகிய கால மூலதனம் மூலம் வருமானம் பெற பல வழிகள் இருந்தாலும், அது மழைக்கு உண்டாகும் ஈசல் போல. நிரந்தரமானது அல்ல. முதலீடு பாதுகாப்பானதாக இருத்தல் அவசியம். அதன் வருமானம் பல மடங்காய் இருந்தால் அதுவே நல்ல முதலீடு ஆகும். அந்த வகையில் ரியல் எஸ்டேட் முதலீடு, அதுவும் அவசியமானவற்றில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகவும், நல்ல லாபம் தருவதாகும் இருக்கும்.

ரியல் எஸ்டேட் தொழில் திட்டமிடல் என்பது வெகு முக்கியம். முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவைகள் ஏராளம் உண்டு. ஒரு இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து, விற்பனை வரை ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமான செயல்திட்டங்கள் வேண்டும். அதை நடத்திக் காட்டும் வல்லமை கொண்டிருக்க வேண்டும். நிதானமும், தெளிவான அறிவும், திட்டமிடலும் இந்தத் தொழிலுக்கு முக்கியமானவை.

இந்தியாவில் பெரும் நிறுவனங்கள் ரியல் எஸ்டேட்டில் தோற்றுப் போன சம்பவங்களை நாமெல்லாம் படித்து இருக்கிறோம். எழுத்து வடிவான செயல் திட்டமும், நடைமுறையும் வேறாக இருக்கும் பட்சத்தில் தோல்விதான் மிஞ்சும். நிறுவனங்கள் அதைத்தான் செய்தன. தோற்றுப் போனார்கள்.

ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் பல்வேறு சிக்கல்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொண்டிருப்பதால், வெற்றி அடைவது பற்றி தெளிவான திட்டமிடலை செய்யும் பல வருட அனுபவத்தினை பெற்றிருக்கிறேன்.

மிக மிக துல்லியமான திட்டமிடல், காலம், செலவுகள் பற்றிய அனுபவ அறிவின் காரணமாக குறைந்த முதலீடு, அதன் உறுதி செய்யப்பட்ட வருமானம், முதலீட்டாளர்களுக்கு இலவச வீட்டு மனையுடன், முதலீடும் திரும்ப கிடைத்தல் ஆகிய அற்புதமான முதலீட்டு திட்டங்களை உருவாக்கி இருக்கிறேன்.

நமது நிறுவனம் முறையாகப் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. விரைவில் அது பற்றிய அறிவிப்பினை பிளாக்கில் வெளியிட உள்ளேன். இணைந்திருங்கள்.

ரியல் எஸ்டேட் பிசினஸில் முதலீடு செய்து, நூறு சதவீத உத்திரவாத லாபம் பெறக்கூடிய அற்புதமான நிலங்கள் உள்ளன. வெகு துல்லியமான வகையில் செயல்திட்டங்களும், வருமானத்தின் விபரங்களும் தரப்படும். லாபத்தில் பங்கு அல்லது அதற்கான கட்டணம் என்ற இரு வகையில் செயல் திட்டங்கள் இருக்கின்றன. விரும்புவர்கள் என்னுடன் உரையாடலாம்.

அதுமட்டுமின்றி விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள், காஃபி எஸ்டேட்டுகள், ஏலக்காய் தோட்டங்கள், தென்னைத் தோட்டங்கள் உள்ளன. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். என்ன தேவை, என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று சொன்னால் அதற்கேற்ற பரிந்துரைகளைச் செய்வேன்.

ஒரு சிலர் நிலம் வேண்டுமென்பார்கள். என்ன திட்டம், என்ன பட்ஜெட் என்றுச் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கு என்னால் ஒன்றும் பரிந்துரைக்க முடியாது

இந்த முதலீட்டில் ஏற்ற இறக்கம் இல்லை. லாபம் மட்டுமே. ஆனால் நீங்கள் சரியானவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது வீட்டில் இருப்பீர்கள். நேரமிருந்தால் எனது தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். பேசலாம்.

பூமியில் போட்ட காசு என்றைக்கும் தங்கம் தான்.

கொஞ்சம் பணம் போதும், நிம்மதியாக சந்தோஷமாக வாழலாம். விரைவில் பேசுவோம் அதுபற்றி…!