குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label லாபம். Show all posts
Showing posts with label லாபம். Show all posts

Saturday, April 11, 2020

நிலம் (63) - 70 கோடி முதலீடு 220 கோடி வருமானம்


அன்பு நண்பர்களே,
யாருக்கு என்ன நடக்கும் என்று தெரியாத, கண்ணாமூச்சி ஆடும் விதியுடன் போராடிக் கொண்டிருக்கும் அவலமான நிலையில், மனிதனே நோய் பரப்பும் கொடிந்துயரத்தில் ஆழ்ந்து, வேதனையில் உழன்று கொண்டிருக்கிறோம்.

நம் மனதை வேறு விஷயங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டிய காலம் இது. கொரானாவின் பாதிப்பு இந்தியாவில் குறைவதற்கு சுமார் ஆறு மாதம் ஆகலாம். ஒடிசாவில் ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதை அறிந்த போது, தமிழகத்திலும் அந்த நிலை வரலாம் என நினைக்கிறேன். பிள்ளைகளையும், உறவினர்களையும், நண்பர்களையும், சுற்றாரையும், உற்றாரையும் பாதுகாக்க வேண்டிய தருணம் இதுதான். அதை நாம் ஒரு தவமாகச் செய்வோம்.

இனி எதிர்காலம் என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள். இயற்கை அதற்கும் வழி வைத்திருக்கும். என்னுடன் இணைந்திருங்கள். எனது பிளாக்கைத் தொடர்ந்து படித்து வாருங்கள். வழிகள் பிறக்கும், நம்பிக்கை துளிர்க்கும். வாழ்க்கை வசந்தமாகும். எல்லோரும் சேர்ந்து ஒன்றாய் பொருளாதாரத்திலும், வாழ்க்கையிலும் முன்னேறலாம்.  

இனி மிகக் குறைந்த முதலீட்டில் பெரும் லாபம் அடைந்த எங்களின் வாடிக்கையாளரைப் பற்றிப் படியுங்கள்.

இது உங்களின் மனதுக்கு ஊக்கம் தரும். இன்பம் தரும்.

இந்த முதலீட்டாளர் சரியானவரைத் தேர்ந்தெடுத்தார், அதனால் வெற்றி பெற்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நான் பங்கெடுத்து வேலை செய்த ஒரு அற்புதமான முதலீட்டினையும், அதனால் கிடைக்கப்பெற்ற லாபம் பற்றிப் பார்ப்போமா?

ஒரு பெரிய கார்ப்பொரேட் நிறுவனம், நண்பர் மூலமாக, நகரத்தில் ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டி, இந்த இடத்தில் எங்களுக்கு 50 ஏக்கர் நிலம் வேண்டும் எனவும், பரிவர்த்தனைகள் அனைத்தும் வங்கி மூலம் மட்டுமே செய்வோம் எனவும் கேட்டிருந்தார்கள்.

அதற்கான திட்டமிடலை வெகு தெளிவாக உருவாக்கினோம். அதற்கான காலத்தை இரண்டு வருடமாக நிர்ணயித்தோம். இதில் முக்கியப் பிரச்சினை கைடு லைன் மதிப்பும், மார்க்கெட் மதிப்பும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இல்லையெனில் இந்தப் பணியைச் செய்ய இயலாது.

நிலத்தின் உரிமையாளர்கள் மார்க்கெட் மதிப்புக்கு வங்கி மூலம் பணம் பெற்றுக் கொள்ள சம்மதிக்க வேண்டுமென்பதுதான் பெரும் பிரச்சினையாக இருந்தது.

லீகல், வாரிசுகள், நிலத்தின் மீதான் லோன் போன்றவைகள், சர்வேக்கள், ஆவணங்களை எடுத்தல், பத்திரம் பதிவு என இன்னும் பலப்பல வேலைகள் இருந்தன. அடியேன் ரசீதுக்கள், அக்ரிமெண்டுகள், லீகல், சர்வே, ஆவணங்கள் கலெக்ட்ச் செய்வது, டிராஃப்ட், பத்திரம் பதிவு, பட்டா மாறுதல் ஆகிய வேலைகளுக்கு பொறுப்பேற்றேன்.

இதர வேலைகளை அதாவது நில  உரிமையாளர்களுடன் பேசுவது, விலை நிர்ணயம் ஆகியவைகளை இன்னொரு நண்பர் பார்த்துக் கொண்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக வேலைகள் நடந்தன. ஒரே நேரத்தில் பத்து கிரையங்கள் செய்தேன். பத்து நபர்களுக்கான பணம், வரி பிடித்தம், வங்கி வரைவோலை, பத்திரப்பதிவுக்கான டிமாண்ட் டிராப்டுகள், பத்திரங்கள் என எல்லாவற்றையும் நானும், இன்னொருவரும் சேர்ந்து செய்தோம்.

ஆயிற்று இரண்டு வருடம். 50 ஏக்கர் கிரையம் செய்து முழுமையாக பட்டா மாறுதல் செய்து, நிறுவனத்திடம் ஒப்படைத்தோம். நாங்கள் வாங்கியது ஏக்கர் ஒன்றுக்கு 1 கோடி ரூபாய். இப்போது அந்த நிறுவனம், அந்த நிலத்தை வீட்டுமனைகளாகப் பிரித்து, அனுமதி பெற்று, தற்போது ஒரு செண்ட் 7 லட்சத்திலிருந்து 8 லட்சம் வரை விலை வைத்து விற்று வருகின்றார்கள். லாபம் கிட்டத்தட்ட 220 கோடி ரூபாய். இன்னும் எகிறும் காலம் ஏற ஏற. குறைந்த முதலீடு, ஆனால் வெகு நிச்சயமான வருமானம். எவராலும் வரக்கூடிய வருமானத்தைக் குறைக்க முடியாது. அது ஏறிக் கொண்டேதான் போகும்.

இதுதான் பிசினஸ். இது தான் நல்ல முதலீடு. இது தான் தொழில்.

ஒரு கம்பெனியை உருவாக்கி, முதல் போட்டு, பொருள் தயாரித்து விற்பனை செய்து லாபம் ஈட்டுவதற்குள் படாதபாடு பட வேண்டி இருக்கும். எவ்வளவு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் இதுவும் நல்ல தொழில் தான்.

இவ்வளவு லாபமா? அதுவும் குறைந்த காலத்துக்குள்? என்று இதைப் படிக்கும் போது பலருக்கும் நாமே இதைச் செய்தால் என்ன என்று உடனடியாகத் தோன்றும். அதைத்தான் ஒரு நண்பரின் நண்பர் செய்தார்.

வெளி நாட்டில் பெரிய அளவில் தொழில் செய்து கொண்டிருந்த நண்பரின் நண்பருக்கு கோவையில் நான்கைந்து இடங்களைக் கண்டறிந்து அதற்கான செயல்திட்டத்தை உருவாக்கி, முதலீடு, செலவு, லாபம் பற்றிய விபரங்களைத் தெளிவாக அனுப்பி வைத்திருந்தோம். நண்பரும் அவரின் நண்பரிடம் காட்டி, ஒப்புதல் பெற்றார். அதன் பிறகு இருவரிடம் இருந்தும் எந்தப் பதிலும் இல்லை. சரி என்று விட்டேன்.

அந்த நண்பர் இந்த பிராஜெக்டைப் படித்து விட்டு, தனக்குள் ஒரு கணக்கு போட்டு, புனேவில் சுமார் 200 கோடியை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தார். தொழில் தெரிந்தவர்களிடம், அதில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி அறிந்தவர்களிடம் பேசி இருக்க வேண்டும். அதை அவர் செய்யாமல் ஏதோ ஒரு கார்ப்பொரெட் கம்பெனியின் உதவியுடன் 200 கோடி இன்வெஸ்ட்மெண்ட் செய்தார். இப்போது 800 கோடி கடனில் சிக்கி தவிக்கிறார்.

வங்கியில் லோன் பெற்றும், 200 கோடி முதலீடும் போட்டு நான்கைந்து அபார்ட்மெண்ட் டவர்களைக் கட்டி, அதில் ஒரு வீடு கூட விற்க முடியாமல் ஆள் இப்போது மீளாக்கடனில் சிக்கினார். அந்த நிறுவனம் எல்லா வேலைகளையும் செய்து கொடுத்து விட்டு, அவர்களுக்கான கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு விலகி விட்டனர். அவர் போட்டது தப்புக்கணக்கு.

எவர் வேண்டுமானாலும் திட்டம் போடலாம். ஆனால் அந்தத் திட்டமிடல், நிதர்சனத்துடன் இணைந்திருக்க வேண்டும். சூழல், அமைப்பு, பொருளாதார தரவுகளுடன் ஒத்துப் போக வேண்டும் .

இன்றைக்கு ஒரு ஃபைனான்சியல் அட்வைசரின் பேச்சை கிட்டத்தட்ட 3500 பேர் கேட்டோம். அவர் இன்றைய நிலையில் ஷேர் மார்க்கெட்டில் உள்ள நிலையை எடுத்துச் சொன்னார். ஷேர் மார்க்கெட்டில் அது சரியாக இருக்கும். தினசரி டிரேடிங்க் லாபம் தரலாம். ஆனால் அது கத்தி மீது நடக்கும் செயல். என்றைக்கு வேண்டுமானாலும் வெட்டும்.

குறுகிய கால மூலதனம் மூலம் வருமானம் பெற பல வழிகள் இருந்தாலும், அது மழைக்கு உண்டாகும் ஈசல் போல. நிரந்தரமானது அல்ல. முதலீடு பாதுகாப்பானதாக இருத்தல் அவசியம். அதன் வருமானம் பல மடங்காய் இருந்தால் அதுவே நல்ல முதலீடு ஆகும். அந்த வகையில் ரியல் எஸ்டேட் முதலீடு, அதுவும் அவசியமானவற்றில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகவும், நல்ல லாபம் தருவதாகும் இருக்கும்.

ரியல் எஸ்டேட் தொழில் திட்டமிடல் என்பது வெகு முக்கியம். முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவைகள் ஏராளம் உண்டு. ஒரு இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து, விற்பனை வரை ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமான செயல்திட்டங்கள் வேண்டும். அதை நடத்திக் காட்டும் வல்லமை கொண்டிருக்க வேண்டும். நிதானமும், தெளிவான அறிவும், திட்டமிடலும் இந்தத் தொழிலுக்கு முக்கியமானவை.

இந்தியாவில் பெரும் நிறுவனங்கள் ரியல் எஸ்டேட்டில் தோற்றுப் போன சம்பவங்களை நாமெல்லாம் படித்து இருக்கிறோம். எழுத்து வடிவான செயல் திட்டமும், நடைமுறையும் வேறாக இருக்கும் பட்சத்தில் தோல்விதான் மிஞ்சும். நிறுவனங்கள் அதைத்தான் செய்தன. தோற்றுப் போனார்கள்.

ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் பல்வேறு சிக்கல்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொண்டிருப்பதால், வெற்றி அடைவது பற்றி தெளிவான திட்டமிடலை செய்யும் பல வருட அனுபவத்தினை பெற்றிருக்கிறேன்.

மிக மிக துல்லியமான திட்டமிடல், காலம், செலவுகள் பற்றிய அனுபவ அறிவின் காரணமாக குறைந்த முதலீடு, அதன் உறுதி செய்யப்பட்ட வருமானம், முதலீட்டாளர்களுக்கு இலவச வீட்டு மனையுடன், முதலீடும் திரும்ப கிடைத்தல் ஆகிய அற்புதமான முதலீட்டு திட்டங்களை உருவாக்கி இருக்கிறேன்.

நமது நிறுவனம் முறையாகப் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. விரைவில் அது பற்றிய அறிவிப்பினை பிளாக்கில் வெளியிட உள்ளேன். இணைந்திருங்கள்.

ரியல் எஸ்டேட் பிசினஸில் முதலீடு செய்து, நூறு சதவீத உத்திரவாத லாபம் பெறக்கூடிய அற்புதமான நிலங்கள் உள்ளன. வெகு துல்லியமான வகையில் செயல்திட்டங்களும், வருமானத்தின் விபரங்களும் தரப்படும். லாபத்தில் பங்கு அல்லது அதற்கான கட்டணம் என்ற இரு வகையில் செயல் திட்டங்கள் இருக்கின்றன. விரும்புவர்கள் என்னுடன் உரையாடலாம்.

அதுமட்டுமின்றி விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள், காஃபி எஸ்டேட்டுகள், ஏலக்காய் தோட்டங்கள், தென்னைத் தோட்டங்கள் உள்ளன. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். என்ன தேவை, என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று சொன்னால் அதற்கேற்ற பரிந்துரைகளைச் செய்வேன்.

ஒரு சிலர் நிலம் வேண்டுமென்பார்கள். என்ன திட்டம், என்ன பட்ஜெட் என்றுச் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கு என்னால் ஒன்றும் பரிந்துரைக்க முடியாது

இந்த முதலீட்டில் ஏற்ற இறக்கம் இல்லை. லாபம் மட்டுமே. ஆனால் நீங்கள் சரியானவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது வீட்டில் இருப்பீர்கள். நேரமிருந்தால் எனது தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். பேசலாம்.

பூமியில் போட்ட காசு என்றைக்கும் தங்கம் தான்.

கொஞ்சம் பணம் போதும், நிம்மதியாக சந்தோஷமாக வாழலாம். விரைவில் பேசுவோம் அதுபற்றி…!