குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, January 21, 2012

சாரு நிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாஷமும் தொடர்ச்சி 3

அண்ணாத்துரை அவர்கள் முதலமைச்சராய் இருந்த காலத்தில் அவருக்கு ஆஃபரேஷன் செய்ய வேண்டி நாள் குறித்தார்கள். அன்று காலையில் டாக்டர் அண்ணாவிடம் ஆஃபரேஷனுக்கு தயாராகும் படிச் சொல்ல, மறு நாள் ஆஃபரேஷனைத் தள்ளி வைக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணா. காரணம் என்ன என்று டாக்டர் வினவியதற்கு, தான் ஒரு நூலைப் படித்துக் கொண்டிருப்பதாகவும், இன்று இரவுக்குள் நூலை படித்து முடித்து விடுவேன் என்றும், ஒரு வேளை ஆஃபரேஷன் முடிவு தவறாகி விட்டால் நூலைப் படிக்காமலே இறந்து போய் விடுவேன் அல்லவா என்றும் சொல்லியும், தன் உடல் நலத்திற்காக நடக்க வேண்டிய ஆஃபரேஷனை நூலைப் படிப்பதற்காக தள்ளி வைத்தார் என்றுச் சொல்லுவார்கள். அண்ணா அவர்கள் நூலுக்குக் கொடுத்த மரியாதையை, மகத்துவத்தை தற்போது வெளியாகும் நூல்களுக்கு கொடுக்க முடியுமா என்பது தான் என் கேள்வி.

’பன்னியூர் படாடோபசர்மா’ நூலின் முன்னுரை, தெளிவுரை எல்லாம் இப்படிப்பட்ட நூலாசிரியரே இனிப் பிறக்கப் போவதில்லை என்று பறைசாற்றின. நூலின் சுருக்கத்தைத்தான் நீங்கள் தொடர்ச்சிப் பதிவில் படித்திருப்பீர்களே? இந்த நூலில் இருக்கும் முன்னுரையும், தெளிவுரையும் வாசகனை தவறான முடிவு எடுக்க தூண்டி இருக்கிறது. நான் இந்த நூலுக்காக திரும்பவும் கிடைக்கவே கிடைக்காத எனது நேரத்தில் இரண்டு மணி நேரம் செலவழித்திருக்கிறேன். இரண்டு மணி நேரம் செலவழித்துப் படிக்க வேண்டிய நூலா இது என்று நீங்களே சொல்லுங்கள்? பாலியல் உணர்வினைத் தூண்டியதைத் தவிர பெரிதாக இந்த நூல் வேறோன்றினையும் தரவில்லை. எனக்குமட்டுமல்ல, படிக்கும் எவருக்கும் இதைத்தான் அந்த நூல் தரும் என்பதற்கு நான் முன்பு எழுதிய சுருக்கமே சாட்சி.

ஒரு வயதானவன் இளம் பெண்ணைப் புணருவதும், தாயைத் தனயன் பெண்டாள்வதும், கூட்டிக் கொடுப்பதை தொழிலாய் வைத்திருப்போரை பெரும் தனக்காரர்கள் அணுகுவதும் தான் இலக்கியமா? அதுதான் நாவலா? இதைத்தான் நாவலுகின் பிதாமகர் எழுதினாரா? இதைப் படித்துதான் தமிழர்கள் புத்தகங்களை விரும்பினார்களா? இக்கதைக்கும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் “சரோஜாதேவி, மருதம், பருவ விருந்து, விருந்து” போன்ற புத்தகங்களுக்கும் என்ன வித்தியாசம் என்றுச் சொல்லுங்கள் பார்ப்போம்.

சமூகப் பிராணியான எழுத்தாளனின் படைப்புகள் சமூகத்தின் பிரதிபலிப்பு என்கின்றார்கள் இலக்கியவாதிகள். மேற்படி நூல் என்ன விதமான இலக்கியம் என்றுச் சொல்வார்களா? இன்றைக்கு புத்தக வாசிப்பு பெரும்பாலானவர்களால் விரும்பப்படுகின்ற வேளையில், இப்படியான தரமுடைய நாவல்கள் சமூகத்தின் பிரதிபலிப்பையா செய்கின்றன? தனி மனிதனின் எண்ண ஓட்டத்தினை நிறைவேற்றுவதாய்த் தானே இவ்வகையான நாவல்கள் வெளிவருகின்றன. இது போன்ற நாவல்களைப் படிக்கும் வாசகனுக்கு என்ன பலன் கிடைக்கும்?

எழுத்தாளர்களுக்கு சமூக பிரக்ஞை இருக்க வேண்டுமா, வேண்டியதில்லையா என்ற கேள்விக்கு பல்வேறு பதில்கள் கிடைக்கும். ஆனால் அவனுக்கு நிச்சயம் சமூகத்தின் மீதான அக்கறை இருந்தே ஆக வேண்டும். மனிதன் ஒவ்வொருவனும் பிறரால் ஏதோ ஒரு வகையில் வாழ்விக்கப்படுகின்றான். மனிதன் என்பவன் ஒரு சமூகப் பிராணி. சமூகத்தைத் தாண்டி அவனால் வாழவே முடியாது. ஆக, அவன் தான் வாழும் சமூகத்திற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும்.

அதை விடுத்து, கண்டதே  கோலம் எழுதுவதே சிறந்த எழுத்து என்றுச் சொல்லும் எழுத்தாளர்களிடமிருந்து “துஷ்டனைக் கண்டால் தூர விலகு” என்பதைப் பயன்படுத்த வேண்டும்.

எனது சகோதரியின் தோழி தற்போது பிரபல்யமாக இருக்கும் ஒரு நாவலாசிரியரை (இவர்களுக்கு ஏன் ஆசிரியர் என்று பெயர் வந்தது?) சந்திக்கச் சென்றிருக்கிறார். சகஜமாகப் பேசிக் கொண்டிருந்த எழுத்தாளர், பின்னர் அஜால் குஜால் பேச்சினை ஆரம்பித்து, முதுகில் தடவ ஆரம்பித்திருக்கிறார். அரண்டு போன தோழி அவர் முகத்தில் காரித் துப்பி விட்டு வெளியேறி இருக்கிறார். ஒரு புகழ் பெற்ற ஃபிக்சன் நாவல்( நாவலா அதுகள்?) எழுத்தாளரின் ஆரம்ப கட்ட நாவல் ஒன்றினைப் படிக்கும் சூழ் நிலை ஏற்பட்டது. அது சுஜாதா என்று நினைக்கிறேன். அக்மார்க் செக்ஸ் கதை. வாலிபன் ஒருவன் பல பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு கிரைம் கதை அது.

இது மட்டுமல்ல இன்னும் பலப்பல பிரபலமான எழுத்தாளர்களின் மறுபக்கத்தை பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்து ஒரு தவம் என்பார்கள். தமிழகத்தில் எழுத்து ஒரு வியாபாரம் என்று ஆகி விட்டது. சிறுபத்திரிக்கை எழுத்தாளர்களின் பல படைப்புகளை படித்திருக்கிறேன். அதெல்லாம் பெரும்பான்மையான வாசக தளங்களில் வெளியாவது இல்லை. ஃபேண்டசி எழுத்தாளர்களின் ‘தண்ணீரில் எழுதப்படும்’ எழுத்துக்களைத் தான் வாசக தளங்களின் பெரும்பான்மையானவை வெளியிடுகின்றன.
 
சமூகத்தின் எண்ண ஓட்டத்தினைக் காசாக்கும் மாயக்கலையை இன்றைய பல பிரபல்ய எழுத்தாளர்கள் புரிந்து வைத்திருக்கின்றார்கள். வெளிச்சம் நோக்கி ஈர்க்கப்படும் விட்டில் பூச்சிகளாய் வாசகர்கள் மாறி தங்களின் உழைப்பையும், நேரத்தையும் வீணாக்கி விடுகின்றார்கள்.

சமூகத்தின் பிரதிபலிப்பை எழுதாத எந்த ஒரு படைப்பும் நிலைத்து நிற்பதில்லை. சினிமா தாக்கத்தில் செய்யப்பட்டும் விசிலடிச்சான் குஞ்சுகளின் விடலைப் பருவ நிகழ்ச்சிகளை உண்மைச் சம்பவம் போல உருவகித்து எழுதப்படும் எழுத்துக்கள் தண்ணீர் மீது எழுதும் எழுத்துக்களே. நாம் சிறிய வயதில் செய்திருக்கும் சில செயல்களை இப்போது எண்ணிப் பார்த்தால், நமக்கே வெட்கமாய் இருக்கும். அதுமாதிரியான செயல்களை இலக்கியமாக்கினால் அது எழுதுபவரின் அசட்டுத்தனம்தானே ஒழிய, மேதாவித்தனம் அல்ல.

வாசகர்கள் அசட்டுத்தனமான, விட்டேற்றியான, பாலியல் ரீதியான, வக்கிரங்கள் நிரம்பிய எழுத்துக்களை முன் ஜாக்கிரதையாக விலக்கி, நல்ல சிந்தனையையும், தெளிவும், அனுபவமும் தரக்கூடிய நல்ல புத்தகங்களை படிக்க முயல வேண்டும். அதை விடுத்து கிடைத்ததை எல்லாம் படிக்க ஆரம்பித்தால் பலன் மீண்டும் கிடைக்கவே கிடைக்காத நேரம் போய் விடும். அப்படியான புத்தகங்கள் கிடைக்காதவர்கள் நமக்காகவே வாழும் நம் குடும்பத்தோடு நேரத்தைச் செலவழிக்கலாம்.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

2 comments:

Anonymous said...

Dear Friend,Your statement is 100% TRUE & that agent(charu) mis guiding more Innocent readers....Pl to write more ...Thanks.

Anonymous said...

ithila chaaruvoda eluththai paththi siru kodu kooda kaatalaye avaroda bhakthargalukku doubt vandthirukkum neenga avaroda naaval ethaiyum padicheengala illayaannu?

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.