குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, May 5, 2008

நண்டு மசாலா - நினைவலைகள்

ஐந்து வருடங்களுக்கு முன்பு எனது நண்பர்களுடன் ஊருக்குச் சென்று இருந்தேன்.

காரின் ஓட்டுனரும் எனது நண்பர் தான். “ மாப்பிள்ளை மாப்பிள்ளை ” என்று தான் அழைப்பார். தண்ணி போட்டு விட்டால் மாப்பிள்ளை மறைந்து போய் “கவுண்டர் மாப்பிளே “ வந்து விடும். நிற்க...

” மாப்பிள்ளை நண்டு சாப்பிடணும் ஏற்பாடு செய் ” என்று டிரைவர் சொல்ல, சித்தப்பாவிடம் விஷயத்தை சொன்னேன்.

தங்கை, மனைவி மற்றும் அம்மாவின் கைப் பக்குவத்தில் நண்டு வறுவலின் வாசனை தூள் கிளப்பியது.

சித்தப்பாவை வந்து ரகசியமாய் அழைத்துக் கொண்டு சென்றார் டிரைவர். என்ன என்று தங்கையிடம் விசாரிக்க, ஓல்ட் மங்க் பாட்டில் ஒன்று கடையில் இருந்து வந்ததாக அறிய நேர்ந்தது.

காருக்குள் இருந்து ( வெளியே அமர்ந்து குடிக்க முடியாத அளவுக்கு எனது சித்தப்பா ஊரில் கலாச்சார சீர்கேடு இருக்கிறது ????? ) ஒரு வழியாக என் நண்பர், சித்தப்பா மற்றும் டிரைவர் மூவரும் வர, இலையினை போட்டு மூவருக்கும் சாப்பாடு பரிமாறினார் என் தங்கை.

நான் பின்னர் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று வெளியில் அமர்ந்து இருந்தேன்.

தங்கை வெளியில் வந்து சிரித்து விட்டு உள்ளே சென்றார். இது அடிக்கடி நடந்து கொண்டு இருந்தது.

எனக்கு விஷயம் புரியவில்லை.

” என்னம்மா ? “ என்றேன்
“ அண்ணே, உள்ளே டிரைவரை பாரு “ என்று சொல்லி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்க,

என்னவென்று பார்த்த பின்பு வந்த புன்னகையை மறைக்க முடியவில்லை.

அப்படி என்னதான் உள்ளே நடந்து கொண்டு இருந்தது என்கின்றீர்க்ளா ?

டிரைவர் நண்டினை அதன் ஓட்டுடன் சேர்த்து கட முட வென மென்று முழுங்கி கொண்டு இருந்தார். இலையில் பத்து நண்டுகளுக்கும் மேல் இருந்தது. கால்கள் வேறு இருக்க அனைத்தையும் சுறு சுறுப்பாக கடித்து மென்று முழுங்கியவாறு இருக்க என்ன சொல்வது என்றே தெரியவில்லை.


இதன் பலன் மறு நாள் தெரிந்தது. என்னவென்றால் கார் கரூரை நெருங்கி கொண்டிருந்த போது,

” மாப்பிள்ளை, ஒரு நிமிஷம் இரு, மூச்சா போயிட்டு வந்து விடுகிறேன் ”என்று சொல்லிவிட்டு கையில் தண்ணீருடன் செல்ல
மனைவிக்கு புரியவில்லை.

” ஏங்க எதுக்கு தண்ணி ? “ ஓல்ட் மங்கில் தண்ணீர் கலந்து அடிக்கப் போகிறார் என்று எண்ணி பயத்துடன் கேட்க,

விஷயத்தைச் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தாள்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.