குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, May 10, 2008

அன்பு மகனுக்கு கடிதம் - 1 நாள் 10.5.2008

இன்று காலையில் கராத்தே கிளாசுக்கு அழைத்துச் சென்றேன் அல்லவா ? மாஸ்டர் ஆறு மணிக்கு வாருங்கள் என்று நேற்றே அழைத்ததுதான் உனக்கு தெரியுமே. நாம் சரியாக ஆறு மணிக்கு சென்று விட்டோம். ஆனால் மாஸ்டர் வரவில்லை. அப்போது நீ என்னிடம் “ அப்பா, எனக்கு பால் வாங்கித் தருகிறாயா ? ” என்று கேட்டாய்.

பேக்கரியில் டீ கொடுத்தவர் நீ டீ குடிக்க முயற்சித்து சூட்டால் முகம் சுளிப்பதைக் கண்டு, அருகில் வந்து ” சூடா இருக்கா, ஆற்றி தரவா ” என்று கேட்க நீ சிரிப்புடன் முறுவலித்ததை பார்த்த அவர் அன்புடன் உன் தலையினை கோதி விட்டு ஆற்றி எடுத்து வந்து கொடுத்தார் அல்லவா ? அதைப் போல அனைவரிடமும் அன்பான பார்வையுடன், லேசான புன்னகையுடன் அணுகி வா. அனைவரும் உன்னை நேசிப்பார்கள். மனிதர்கள் அன்புக்கு ஏங்குபவர்க்ள். அனைவரிடம் அன்புடன் பேசு. ஆதரவாக இரு. எல்லோரும் உன்னை விரும்புவார்கள்.

ஏழு மணிக்கு மாஸ்டர் வந்து விட்டார். அவருக்கு நேரம் கிடைக்காது. அவர் லேட்டாக வருவார். அவருக்கு எண்ணற்ற பணிகள். ஆதலால் அவர் நேரத்துக்கு வர இயலாது.

ஆனால் நீ, சரியான நேரத்திற்கு சரியான இடத்துக்கு சொன்ன இடத்தில் இருக்க வேண்டும். டைம் மேனேஜ்மெண்ட் என்று சொல்லுவார்கள் ஆங்கிலத்தில். நேரத்தை ஒவ்வொரு நொடியும் பயனுள்ளதாய் கழிக்க வேண்டும்.

என்ன செய்வாய் தானே...

உன் அன்பு அப்பா....