குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, September 24, 2008

இந்தியாவில் நடந்த பார்ட்டி ஒன்றின் சில புகைப்படங்கள்

யூ டியூப்பில் பாடல்களை தேடிக்கொண்டிருந்த போது, பெங்களூரில் மிகப் பெரிய கம்பெனி ஒன்றினால் நடத்தப்பட்ட பார்ட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்ற தலைப்பில் வீடியோ ஒன்று கிடைத்தது.

சும்மா பார்த்து வையுங்க...

ஆத்துக்குள்ளே...

பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள். நானும் என் சின்னம்மாவின் பையனும் மாலையில் ஆற்றுக்கு குளிக்கச் சென்றோம்.
அன்று பார்த்து, ஆற்றில் தண்ணீரை நிறுத்தி விட்டிருந்தார்கள்.

சரின்னு குளத்தில குளிக்கலாம்டான்னு சொல்லிகிட்டு ஆற்றின் படியில் உட்கார்ந்தேன். ஆற்றில் அங்கங்கே தண்ணீர் குளம்போல கிடந்தது. தண்ணிக்குள் எதுவோ கிடப்பதுபோல தோன்ற டேய் அங்கே பாருடா தண்ணிக்குள்ளே என்னமோ கிடக்குன்னு தம்பிக்கிட்டே சொல்ல,
அண்ணே பாம்பா இருக்கப்போவுதுன்னு சொன்னான். பாம்பு தண்ணிக்குள்ளே என்னடா பன்னும். வேற என்னமோடான்னு சொல்ல, இருவரும் ஆற்றுக்குள் இறங்கினோம்.

சற்றுத் தொலைவிலேயே நின்று கொண்டு உத்து உத்துப் பாத்துக்கிட்டு இருக்கும்போது மீனு ஒன்னு துள்ளி விழுந்துச்சு. பாலு(தம்பி பெயர்) என்னன்னு பாத்துடனும்டான்னு சொல்லிக்கிட்டே யோசிச்சோம். மெதுவாக அந்தப் பள்ளத்துக்குப் பக்கத்துல இன்னுமொரு பள்ளத்தைத் தோண்டி வாய்க்கால கையால வெட்டி தண்ணிய வடிய விட்டா அங்கே ஒரு மீன் புதையலே இருந்தது.

அள்ளுடா அள்ளுடான்னு குளிச்சிட்டு துவட்ட வச்சிருந்த துண்டில மீனை அள்ளிக் கட்டினோம். இரண்டு துண்டுகளும் நிறைஞ்சிடுச்சி. குளிக்கிறதாவது ஒன்னாவது. நேரா சைக்கிளை விட்டோம் வீட்டுக்கும்.

அம்மாட்டே கொடுத்தோம். எங்கேடா புடிச்சிட்டு வந்தீங்கன்னு அம்மா கேக்க விபரத்தை சொல்லிட்டு மீண்டும் ஆத்துக்குப் பக்கத்தில இருந்த குளத்தில குளிக்க வந்தோம். பார்த்தா ஆத்துக்குள்ளே ஒரே கூட்டம். மக்கள் எல்லாம் மீன் பிடிச்சிக்கிட்டு இருந்தாங்க.

குளத்தில கண்ணு செவக்க செவக்க ஆட்டம் போட்டு விட்டு வீட்டுக்கு வந்தால் சுடுசோறு, மீன் குளம்பும் தயரா இருந்துச்சு.

குடத்தடியில இருந்த மாமரத்து மாங்காயும், மாங்காய் கொட்டையும் குளம்புக்குல மிதக்க, காரமும், புளிப்புமாய் இரண்டு தட்டு சோத்தை வயித்துக்குள்ளே தள்ளினோம்.

அன்று சாப்பிட்ட மீன் குழம்பை நெனச்சு நெனச்சு நெஞ்சு கனக்கிறது.

Thursday, September 18, 2008

செத்துப்போன மனசு !

நானும் என் நண்பனும் மாதம் பத்து தடவை தண்ணி அடிக்க கிளம்பி விடுவோம். ரமனா வோட்காவில் ( அல்சர் பிராப்ளத்துக்கு இப்படி குடித்தால் பிரச்சினை வராது என்று காலையில் இருந்து மாலை வரை தண்ணியில் மிதக்கும் குடிகார பெருமகன் சொன்ன தகவல். ஆனால் அதன் பின்னர் தான் அல்சர் அதிகமானது என்பது தனிக் கதை) லெமன் சேர்த்து குடிப்போம். சைடிஸ்ஸாக முட்டையுடன் பிரானைச் சேர்த்து அதனுடன் மிளகு பொடியும், மிளகாயும் எண்ணெயில் வதக்கி நன்றாக வறுத்து காரில் கொண்டு வந்து தருவார் சர்வர். அடுத்து வஞ்சிரம் மீனுடன் காரம் சேர்த்து நெய்யை அதன் மீது விட்டு தோசைக்கல்லில் தங்கக் கலரில் வறுத்து ஒரு சிப் சிக்னேச்சர் ஒரு வாய் மீன்.. காரில் உட்கார்ந்தபடியே சிக்னேச்சரோ அல்லது ரமனா வோட்காவையோ சிப் சிப்பாக உறிஞ்சினால் தொண்டையில் நெருப்பு எரியும். சிறிது நேரத்தில் நரம்புகள் தளர நினைவில் ஒரு மந்த நிலை வந்து தொக்கி நிற்கும். அந்த நிலையில் பார்க்கும் எந்தப் பெண்ணும் அழகாக தெரிவாள். சுவையில்லாத உணவும் சுவைக்கும். மதுவை ருசித்தால் மனசு மந்தமாகி விடும். அது தான் போதை... போதை... போதை... தண்ணி போதை... இன்னும் என்னென்னவோ போதைகள் இருக்கின்றன. அதெல்லாம் வரும் நாட்களில் எழுதுகிறேன்.

அப்படி ஒரு நாள் வரும்போது (நிதானத்துடன் தான்) கார் விறுக்கென இடதுபுறமும் வலது புறமும் சென்று பின்னர் நிலை பெற்றது. என் கண் முன்னே எமராஜாவும் சித்திரகுப்தனும் வந்து சென்றார்கள். ஆனால் பாருங்கள் அதில் ஒரு நிம்மதி இருந்தது. கார் வெட்டி வெட்டி இழுக்க இடதும் வலதுமாய் சரக் சரக்கென சென்று வர சீட்டில் அமைதியாய் உட்கார்ந்து இருந்தேன். என் மனதில் ஒரு நினைவும் இல்லை. மனம் செத்துப் போய் இருந்தது. கார் ஒரு நிலைக்கு வர, பட படவென வியர்த்துக் கொட்டியது. ஏசியிலும் வியர்வையில் குளித்தேன். மனசுக்குள் நடுக்கம் வர மயக்கம் வரும்போல இருந்தது.

சாவு நெருங்கிய போது எனக்குள் உணரப்பட்ட மனசு செத்துப்போன அதிசயம் மரணத்தின் மீது அபரிமிதமான காதலை உருவாக்கி விட்டது. ரமணாவும் தேவையில்லை. சிக்னேட்சரும் தேவையில்லை. ப்ளூ லேபிலும் தேவையில்லை என்ற நினைப்பு எனக்குள் அழுத்தமாக விழுந்து விட்டது.

மரணம் எப்படி இருக்கும்? அது எப்படி மனிதனை தழுவுகிறது. அழகான ஆழமான கடல் போல இருக்குமா? அந்த நிலையில் மனிதனின் மனசு என்ன நினைக்கும் என்றெல்லாம் எண்ணங்கள் எனக்குள் புயலடிக்கின்றன.

விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலோ மனிதனைத் தழுவுவது மரணம். அதைக் காதலிப்பதில் தவறேதும் இல்லை அல்லவா ?

Tuesday, September 16, 2008

மனதை மயக்கும் பாடலில் இதுவுமொன்று

இளையராஜாவின் குரலிலும் இசையிலும் இந்தப் பாடல் ஜொலிப்பதை கேளுங்கள். எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இந்தப் பாட்டை மிஞ்ச எவர் இருக்கிறார் இசையுலகில்.

சற்று நேரம் .. சற்று நேரம்.. மனதை இலேசாக்குங்கள். கால்களையும் கைகளையும் படர விடுங்கள். மூச்சினை மெதுவாக விடுங்கள். மனது லேசா லேசா இருப்பது போல உணருங்கள். இப்போது இந்தப் பாட்டைக் கேளுங்கள். மனம் மிதக்கும்.... கண்கள் சொக்கும்... குரலில் தேன் சொட்டும். அது உம்மை நனைக்கும்... நீங்கள் நனைவீர்கள்.. நிச்சயம் நனைவீர்கள் இசை மழையில்.... மனம் சட்டென்று ஒருமைப்படும்....

கேட்கும்போதே கிளுகிளுப்பைத் தரும் பாடல்

என் சிறு வயதில் வேலைக்காரர் ஜெயராஜ் என்னை மாரியம்மன் கோவில் முன்புறம் நடந்து கொண்டிருந்த கீழே இறங்காமல் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். அன்று கடைசி நாள். சுற்றி வரக் கயிறு கட்டி இருந்தனர். ஜெயராஜ் துண்டை விரித்து அமரச் சொன்னார்.

ஒரு பெண்ணும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவரும் இந்தப் பாட்டை ஒலிபெருக்கியில் போட்டு விட்டு ஆடினர். ஆட்டம் பட்டையக் கிளப்பியது. அந்த வயதில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் கேட்கவும் பார்க்கவும் படு ஜோராக இருந்தது. பாம்புபோல நெளிந்து வளைந்து ஆடி பார்ப்போரின் மனதினை சிதற வைத்த ஆட்டம் அது. அந்த வயதிலேயே பார்க்கும் போது கிளுகிளுப்பாய் இருந்ததன் விளைவு இதோ இன்று... கொட்டக் கொட்டக் விழித்துக் கொண்டு எழுதுகிறேன்.

இந்தப் பதிவை எழுதும் போது மணி 10.56 இரவு நேரம். அருகில் உள்ள வீட்டார்கள் அனைவரும் உறங்கி இருப்பார்கள். தப்பித் தவறி யாராவது இந்தப் பாட்டைக் கேட்டால், தங்கம் வீட்டில் மஜாவா இருக்கான் பாருன்னு அப்படி இப்படின்னு பேசிக்கிட்டே அவங்க அவங்க வீட்டில ஏதாவது நடக்கும்ல.... நடக்கட்டும்.. நடக்கட்டும்...

பாட்டைக் கேட்க கேட்க கிளுகிளுப்பாய் இருக்க, யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்ற நல்லெண்ணத்தில்.... இதோ சிலுக்கு ஸ்மிதாவும், கமலும்...

அடி தூள்...............


Sunday, September 14, 2008

குன்னக்குடியாரும் ஷாகிர் உசேனும்

வயலின் மாமேதையும், தபேலா சக்ரவர்த்தியும் இணைந்து கேட்போரின் மனதை கொள்ளை அடிக்கும் உத்தமத்திருட்டைப் பாருங்கள்... கேளுங்கள்.... நீங்களும் உங்கள் மனதினை இருவரிடமும் பரிகொடுத்து விட்டுத் தவிப்பீர்கள்... மனதை மயக்கும் கலவை. பெயர் கலர்ஸ். உபயம் : ஏஆர் ரஹ்மான்.

குன்னக்குடியாரின் மருதமலை மாமணியே....

குன்னக்குடி வைத்திய நாதன் - மறக்கமுடியாத பிம்பம்

வயலினில் பேசிய குன்னக்குடி வைத்திய நாதனின் மறைவு இசை உலகிற்கு மாபெரும் இழப்பென்றாலும் அவரின் சுவடுகள் இசை வரலாற்றில் பதிக்கப்பட்டு விட்டது. பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் வரலாற்றில் தன் பெயரை பொறிக்கச் செய்த குன்னக்குடி வைத்திய நாதன் அவர்களின் இசை மனித உலகம் இருக்கும் வரை என்றும் போற்றி பாராட்டப்படும். அவரின் சில மறக்க இயலா வாசிப்புகளை இங்கே பட்டியலிடுகிறேன். கேட்டும் பார்த்தும் ரசிக்கவும். அருணகிரி நாதரின் பாடலை வயலின் பாடுகிறது பாருங்கள்.



டிரம்ஸ் வாசித்துப் பாருங்கள்

எத்தனையோ பேர்களுக்கு டிரம்ஸ் வாசித்துப் பார்க்க வேண்டுமென்று ஆவலாய் இருக்கும். அதெல்லாம் சாத்தியப்படுமா என்றால் வேதனைதான். ஆனால் கணிணி உலகில் அது சாத்தியம் தான். இந்தப் பிளாக்கை படிக்க வரும் நண்பர்கள் சிறிது நேரம் டிரம்ஸ் வாசித்துப் பழகுங்கள்... நன்றாக வாசித்தால் அருகில் இருப்போரின் சிரிப்பை பெறுவீர்கள். கர்ண கடூரமாக வாசித்தால் முறைப்பை பெருவீர் என்பதை நினைவில் கொள்க.

Virtual'>http://www.pog.com/games/Virtual_Drums">Virtual Drums

Click here to play this game

Tuesday, September 9, 2008

வாழ்த்துக்கள்

இங்கிலாந்தில் பணி புரிய சென்றிருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள். இறைவன் எல்லா வளமும் நலமும் ஆரோக்கியமும் அருள இறைவனை பிரார்த்திக்கிறேன்.