குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label உலகப் புகழ் பெற்றவர்கள். Show all posts
Showing posts with label உலகப் புகழ் பெற்றவர்கள். Show all posts

Monday, January 26, 2009

சங்கு வண்டி

காமராஜர் காரில் சென்று கொண்டிருக்கும் போது காரின் முன்பாக போலீஸ் ஜீப் ஒன்று சைரன் ஒலி எழுப்பிய படி சென்று கொண்டிருக்கும். அது என்ன சத்தம் என்று உதவியாளரிடம் கேட்பார். சைரன் சத்தமென்று சொல்ல காரை உடனடியாக நிறுத்தச் சொல்லி இறங்கி நானென்ன செத்தா போய்விட்டேன். காருக்கு முன்னாடி சங்கு ஊதிகிட்டு போறீங்க என்று சொல்லி வீணா செலவு பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க என்ற படியே காரில் ஏறிச் செல்வார். இந்தக் காட்சி காமராஜர் படத்தில் வருகிறது.

இன்றைய அரசியல்வியாதிகளும், அடிப்பொடிகளும், அரசு அலுவலர்களும் செத்த பொணம் வருது செத்த பொணம் வருது விலகுங்க என்று சொல்லும்படியாக சைரன் வைத்த காரில் பயணம் செய்வது இவர்களுக்கு மனசாட்சி செத்துப் போய் வெறும் மனிதப் பிம்பங்களாய் உலா வருவதைக் காட்டுவது போல இருக்கிறது. நல்ல அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பற்றி இங்கு விமரிசிக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்க.

கட்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் பிரமுகரின் கட்டி முடிக்கப்படாத தியேட்டருக்கு லைசென்ஸ் வழங்க மறுக்கும் கலெக்டரிடம் சட்டப்படி தான் நடக்கணும். அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படக்கூடாது என்றும் சொல்வார். ஆனால் இன்று நடப்பதென்ன ?

சாதாரண தொண்டனாக இருக்கும் கறை வேட்டிக்காரரின் அலட்டலும் மிரட்டலையும் வார்த்தைகளில் சொல்ல இயலுமா ? காவல்துறை அலுவலங்களில் பார்த்தால் தெரியும் இவர்கள் செய்யும் சேட்டைகளை.

ரத்தமும் துரோகமும் நிரம்பி வழியும் வரலாற்றுப் பக்கங்களில் காமராஜரைப் போன்றோரின் பக்கங்கள் பாலைவனத்துச் சோலைகளாய் இருப்பது சற்று ஆறுதல் தருகிறது.

Friday, October 31, 2008

அன்னை இந்திராகாந்தி

இந்தியாவின் இரும்புத் தலைவி. ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது இந்திராகாந்தி அவர்கள் இறந்து விட்டார் என்று பள்ளியில் விடுமுறை விட்டார்கள். ஆனால் நாளை காலை அவசியம் அனைவரும் வந்து விட வேண்டுமென்று உத்தரவு.

மறு நாள் காலை ஆஜர். என் மூன்று சக்கர வண்டியில் இந்திராகாந்தி அவர்களின் புகைப்படத்தை முன்புறம் இணைத்து மாலைகள் போட்டு, வண்டி முழுவதும் பூக்களால் தோரணம் அமைத்தார்கள். வண்டிக்குள் நான். வண்டியைத் தள்ள இரு தோழர்கள். என் பின்னால் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் அணி வகுத்தார்கள். கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரம். ஊர்வலம் சென்றது. வழியில் யார் யாரோ சாலையில் விழுந்து கும்பிட்டார்கள். ஊர்வலத்தை எங்கள் ஊர் கடைத்தெருவில் முடித்தோம். நான் வீடு வந்து சேர்ந்து விட்டேன். எனக்குப் பெருமையாக இருந்தது. பள்ளியே என் பின்னால் வந்தது அல்லவா. மாலையில் இந்திராக் காந்தி அவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தி குளத்தில் குளித்து விட்டு வந்தது எங்கள் ஊர்.

வாழ்ந்தால் அவர் மாதிரி வாழனும். மக்கள் இந்திராக்காந்தி அவர்களின் மேல் காட்டிய அன்பினை நினைத்தால். எங்கோ ஒரு பட்டிக்காட்டு மக்கள் அவர் மீது காட்டிய வெறித்தனமான பாசம்.. மனிதர்கள் பாசத்தால் கட்டப்பட்டவர்கள்.
இப்பதிவை எழுத காரணமாயிருந்தவர் : திவ்யா. நன்றி திவ்யா.

Sunday, September 14, 2008

குன்னக்குடியாரும் ஷாகிர் உசேனும்

வயலின் மாமேதையும், தபேலா சக்ரவர்த்தியும் இணைந்து கேட்போரின் மனதை கொள்ளை அடிக்கும் உத்தமத்திருட்டைப் பாருங்கள்... கேளுங்கள்.... நீங்களும் உங்கள் மனதினை இருவரிடமும் பரிகொடுத்து விட்டுத் தவிப்பீர்கள்... மனதை மயக்கும் கலவை. பெயர் கலர்ஸ். உபயம் : ஏஆர் ரஹ்மான்.

குன்னக்குடியாரின் மருதமலை மாமணியே....

குன்னக்குடி வைத்திய நாதன் - மறக்கமுடியாத பிம்பம்

வயலினில் பேசிய குன்னக்குடி வைத்திய நாதனின் மறைவு இசை உலகிற்கு மாபெரும் இழப்பென்றாலும் அவரின் சுவடுகள் இசை வரலாற்றில் பதிக்கப்பட்டு விட்டது. பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் வரலாற்றில் தன் பெயரை பொறிக்கச் செய்த குன்னக்குடி வைத்திய நாதன் அவர்களின் இசை மனித உலகம் இருக்கும் வரை என்றும் போற்றி பாராட்டப்படும். அவரின் சில மறக்க இயலா வாசிப்புகளை இங்கே பட்டியலிடுகிறேன். கேட்டும் பார்த்தும் ரசிக்கவும். அருணகிரி நாதரின் பாடலை வயலின் பாடுகிறது பாருங்கள்.



Wednesday, April 23, 2008

வால்ட் விட்மன்

--------------------------------------------------------------------------------
மண்ணையும், சூரியனையும், பிராணிகளையும் நேசி! பணத்தை லட்சியம் செய்யாதே; கேட்கிறவனுக்கெல்லாம் கொடு!

அறிவில்லாதவர்கள் சார்பாகவும், பித்தர்கள் சார்பாகவும் போராடு!

உன் வருமானத்தையும், உழைக்கும் சக்தியையும் பிறருக்காக செலவிடு. யதேச்சதிகாரிகளை வெறு. கடவுள் குறித்து வாதிடாதே.

மக்களிடம் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்.

படிக்காத மேதைகளிடமும், தாய்மார்களிடமும் பழகு. பள்ளியிலோ, கோவிலிலோ, புத்தகத்திலோ உனக்குச் சொல்லப்பட்டவைகளை எல்லாம் மறுபரீசிலனை பண்ணு.

உன் ஆன்மாவை எதெல்லாம் அகரவுப்படுத்துகிறதோ, அதையெல்லாம் தள்ளிவிடு.

இப்படியெல்லாம் செய்தால் உன் சொற்கள் மட்டுமல்லாமல் உன் உதடு, முகம், கண்கள், உன் உடலின் அசைவு ஒவ்வொன்றிலும் கவிதை வெளிப்படும்.

-வால்ட் விட்மன் அமெரிக்க கவிஞர்
-----------------------------------------------------------------------------------