குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, September 16, 2008

மனதை மயக்கும் பாடலில் இதுவுமொன்று

இளையராஜாவின் குரலிலும் இசையிலும் இந்தப் பாடல் ஜொலிப்பதை கேளுங்கள். எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இந்தப் பாட்டை மிஞ்ச எவர் இருக்கிறார் இசையுலகில்.

சற்று நேரம் .. சற்று நேரம்.. மனதை இலேசாக்குங்கள். கால்களையும் கைகளையும் படர விடுங்கள். மூச்சினை மெதுவாக விடுங்கள். மனது லேசா லேசா இருப்பது போல உணருங்கள். இப்போது இந்தப் பாட்டைக் கேளுங்கள். மனம் மிதக்கும்.... கண்கள் சொக்கும்... குரலில் தேன் சொட்டும். அது உம்மை நனைக்கும்... நீங்கள் நனைவீர்கள்.. நிச்சயம் நனைவீர்கள் இசை மழையில்.... மனம் சட்டென்று ஒருமைப்படும்....