குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ஜகமே தந்திரம். Show all posts
Showing posts with label ஜகமே தந்திரம். Show all posts

Saturday, June 19, 2021

நல்லி எலும்பு கறிக்கொழம்புக்குத்தான் லாயக்கு - ஜகமே தந்திரம் ஒரு பார்வை

 

கதையைப் பார்க்கலாம்.

இரயில் பாதை குறுக்கே ஒரு கார். ஹீரோ உட்கார்ந்திருக்கிறார். சிவப்பு கார்.

ஙொப்புறானே சத்தியமா நம்புங்க.

இரயில் சரியாக காரின் அருகில் பிரேக்கிடுகிறது. இரயிலின் டிரைவர் சீக்கிரம் காரியத்தை முடிங்கன்னு சொல்லுகிறார்.

அங்கு யாரோ ஒரு ஒரு வட நாட்டு சேட்டானின் தம்பியைச் சுட்டுக் கொன்னுட்டு கிளம்புகிறார் #தனுஷ்.

தனுஷின் ஹோட்டலில் தனுஷைக் கொல்ல சேட்டனின் ஆட்கள் முயல, நாட்டு வெடிகுண்டை போட்டு துரத்தி அடிப்பதைப் பார்க்கும் ஒரு ஆங்கிலேயன் (தனுஷ்)சுருளியை அவன் நாட்டில் இருக்கும் ஒரு தாதாவை போட்டுத்தள்ள அழைக்கிறான். ஆங்கிலம் தெரியாத சுருளி பிரிட்டன் கிளம்புகிறான்.

அங்கு பிரிட்டன் ஃபாசிஸ்ட் பீட்டரைப் பார்க்கிறான். அவன் தமிழன் சிவதாசுவைப் போட்டுத்தள்ளச் சொல்கிறான்.

ஐந்தாறு நாட்களில் சிவதாசை ஆராயும் சுருளி அவன் தங்கம் கடத்துகிறான் என்று கண்டுபிடிக்கின்றான். ஒரு லாட்டைப் பிடிக்கிறான். அவ்வளவு திறமை வாய்ந்த தமிழ் எலி (இப்படித்தாங்க தனுஷை சிவதாசு சொல்கிறான்) சுருளியைச் சந்திக்கிறான் சிவதாஸ்.

சுருளியின் ஏற்பாட்டால், சிவதாசும் பீட்டரும் சந்திக்கின்றார்கள். சிவதாசைப் போட்டுத்தள்ளுகிறான் பீட்டர். உதவி சுருளி.

சுருளிக்குப் பரிசாக ஒரு ஏரியா கிடைக்கிறது. லிட்டில் மதுரை எனப் பெயர் வைத்து ஊர் ஆட்களை அழைந்து வந்து வாழ்கிறான். 

சுருளி ஒரு இலங்கைப் பெண்ணைக் காதலிக்கின்றான். அவளுக்கு ஏழு வயதில் பையனுண்டு. (புரட்சிக் கதை இயக்குனரே. மாமிக்கள் மீது தனுஷுக்கு ஆர்வம் போல. ஒது ஒரு ட்ரிக் ஷாட். மாமிகள் முயலலாம் என க்ரீன் சிக்னல். இப்படித்தான் ஒருத்தன் வீணாய்ப் போனான்)

அவளுடன் சுருளி டேட்டிங்க் போகின்றான். அங்கு சுருளி சுடப்படுகின்றான் சிவதாஸ் ஆட்களால். பின்னர் காப்பாற்றப்படுகிறான். சுருளி சுடப்படக் காரணம் காதலி.

காதலி ஏன் சுருளியைக் கொல்ல முயல்கிறாள்? 

சிவதாஸ் உதவியதால் தான் அவள் பிரிட்டனில் இருக்கிறாள். அந்த நன்றிக் கடனுக்காக காதல் போர்வையில் கொலை முயற்சி.

அகதிகளுக்கு உதவிடத்தான் சிவதாஸ் தங்கம் கடத்துகிறான். பீட்டர் தன் நாட்டில் வேறு நாட்டவர் எவரும் இருக்கவே கூடாது என்று நினைக்கும் ஃபாசிஸ்ட் என அறிகிறான் சுருளி.

அகதிகளுக்கு ஆதரவாய் சட்டமியற்றப் போராடும் ஒரு ஆங்கிலேயனைப் போட்டுத்தள்ளு என்கிறான் பீட்டர்.

உண்மையை தெரிந்து கொண்ட சுருளி பீட்டரைக் கொல்லாமல் அகதி போல பாஸ்போர்ட் தயார் செய்து எங்கோ கொண்டு போய் விடுகிறான்.

கதையும் முடிந்தது. படமும் முடிந்தது.

* * *

படத்தினை வாங்கி வெளியிட்டிருக்கிறது சுருளி 2019 பிலிம் லிமிடெட் நிறுவனம், லண்டனில் முகவரி இருக்கிறது. அவர்களிடமிருந்து படத்தை வாங்கி நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது. 

1949ல் பிறந்த மிஸ்டர் பிரைன் பிரேக் 48 கம்பெனிகளுக்கு இயக்குனர் பொறுப்பில் இருக்கிறார். அவரின் நிறுவனம் தமிழ் படத்தை வாங்கி வெளியிடுகிறது. இதன் பிசினஸ் கான்செப்ட் யாருக்கேனும் தெரிந்தால் பின்னூட்டம் எழுதுங்கள்.

மிஸ்டர் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரின் பிசினஸ் வலைப்பின்னல்கள் பற்றிய இந்த சிறு விபரமே தலை சுற்றுகிறது. இந்த நிறுவனம் கடன் வாங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒய் நாட் ஸ்டுடியோ மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து படத்தை தமிழ் நாட்டில் தயாரித்து இருக்கிறது. ஃபாரின் இன்வென்ஸ்ட்மெண்ட் இந்தியா உள்ளே வந்திருக்கிறது. நல்ல வேளை இந்த நிறுவனத்துக்கு முகவரி எல்லாம் இருக்கிறது.

நம்ம அதானி போல ALBULA INVESTMENT FUND, CRESTA FUND AND APMS INVESTMENT FUND - FOREIGN PORTFOLIO INVESTORS போல் இல்லை. ஒரு வெப் சைட் கூட இல்லாத வெளி நாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் அளவுக்கு நம்ம இந்திய ஒன்றியம் அனுமதி கொடுத்திருக்கிறது. நீண்ட நாள் கழித்து அதைச் செபி கண்டுபிடிக்கிறது. அல்புலா அதானி மட்டுமல்ல பல கம்பெனிகளில் இன்வெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறார்கள். அதானி நிறுவனங்களில் மட்டும் கிட்டத்தட்ட 11,000 கோடி. முகவரி இல்லா நிறுவனத்திடமிருந்து முதலீடு.

ஒரு வோட்டர் ஐடி மாற்ற நாமெல்லாம் என்ன பாடுபடுகிறோம் எனக் கவனியுங்கள்.

அக்கவுண்ட் எல்லாம் செக் செய்தார்களே இன்கம்டாக்ஸ்காரர்கள் என்று அவர்கள் தான் கவலைப்படனும். நமக்கேன் வம்பு.

* * *


கார்த்திக் சுப்புராஜ் காலி பெருங்காய டப்பா என பேட்ட படத்தைப் பார்த்த போதே தெரிந்து விட்டது. பப்புகளில் ஊத்தி விட்டு, தடவி, குடித்து கற்பை கற்பூரமாக்கும் அதி உன்னத வேலையைச் செவ்வனே செய்து வரும் தமிழ் உலகின் உன்னத ஒப்பற்ற நடிகரின் விதி வேலை செய்யத் துவங்கியது போலும்.

சுருளி என்ற பெயருக்கு ஒரு சிலிர்ப்பு இருக்கும். 80களில் சுருளிராஜன் லெஜெண்ட். அவரின் நகைச்சுவையை சந்தானம் நிரப்பினார். இப்போது ஹீரோ படுகுழியில் விழுந்து கிடக்கிறார். அட்டைக்கு மெத்தை ஆகாது அல்லவா?

நகைச்சுவைக்குப் பெயர் போன பெயரை ஹீரோவிற்கு வைத்து  இது நகைச்சுவைப் படம் என்றுச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் போல இயக்குனர். அதாவது கிரைம் திரில்லர் ஆக்சன் நகைச்சுவை.

தனுஷை விட பெரிதாக இருக்கும் மெஷின்கன்கள். அதை வைத்து ஆக்சன். துப்பாக்கி சைசுக்கு இருக்கும் ஹீரோ. நான்கு மடங்கு வெயிட்டாக இருக்கும் அடியாட்கள். வேஷ்டியில் வில்லனின் ஆட்களைச் சுடும் ஸ்லோமோஷன் காட்சிகள் என நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர். கொய்யாலே..!

பிரிட்டன் தாதா மதுரை தாதாவை வைத்து தன் கொலைகளை நடத்தினால் எப்படி இருக்கும்? இதுதான் கதையின் வொன் லைன்.

அந்த மதுரை தாதாவே நீங்க தான் சார் என்று தனுஷிடம் சொல்லி இருப்பார் கார்த்திக் சுப்புராஜ்.

இயக்குனர் சுப்புராஜ் அவர்களே, 

கவட்டியைச் சொறிந்து விடும் கறி (ஹீரோயினின் சதைக்கறி) குழம்பு வைக்கத்தான் நல்லி எலும்புக்குச் சரிப்படும். அது மாதிரியான மல்லுப் படங்களை எடுத்துக் கல்லாவை நிரப்புங்கள்.

அதை விடுத்து. உலக அரசியல் பேசும் தகுதி எல்லாம் நல்லி எலும்புக்கு கிடையாது இயக்குனரே. நல்லி எலும்பு நாட்டை ஆளக் கேட்டால் அதற்கு கதை பண்ணிக் கொண்டு செல்லும் உம்மைப் போல ஆட்களை காலம் மன்னிக்காது.

ஒரு விஜயகாந்த் போதும் தமிழ் நாட்டுக்கு. விட்டு விடுங்கள் தமிழர்கள் பிழைத்துப் போகட்டும். இப்படத்தின் மூலமாக என்ன சொல்ல வருகின்றீர்கள் நீங்கள்? சிவதாசுவை வைத்துக் கேலி செய்வது தான் நோக்கமா? அவ்வளவு இழிவானவர்களா இலங்கைத் தமிழர்கள்?

துரோகம் தமிழனின் கூடப் பிறந்தது என்ற வசனம் உங்களுக்கும் பொறுந்தும். 

நீங்கள் ரசிகர்களுக்குத் துரோகம் செய்திருக்கின்றீர்கள்.

எனது ஆகப்பெரும் கெட்ட வார்த்தை “போடா டேய்”. அந்த வார்த்தையால் கூட திட்ட முடியாத அளவுக்கு கேடுகெட்ட படம் ஜெகமே தந்திரம்.

சீனுக்குச் சீன் வைச்சு செய்யலாமா என்று பார்த்தேன். எரிச்சல்தான் மண்டியது. 

திரும்பக் கிடைக்கவே கிடைக்காத பலரின் நேரத்தை அழித்து விடும் உம்மைப் போன்ற ஆட்களை என்னவென்று வைவது?

தனுஷ்... ரசிர்களுக்குச் செய்த மாபெரும் துரோகம் - ஜெகமே தந்திரம்.

அம்புட்டுதான்.