சென்னை கொரட்டூரில் கோவில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, சுமார் 10,000 பேரிடம் ரூ.2,500 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக ‘Urban Rise’ நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. நீதிமன்றம், இது கோயில் நிலம் எனத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, 2,036 வீடுகளை வாங்கிய மக்கள் கையறு நிலையில் காசை இழந்து நிற்கிறார்கள்.
நில மோசடி பல வகைப்படும். அதில் இது ஒரு வகை.
இதில் குற்றவாளிகள் யார்? - மக்கள் என்போம். ஆமாம் ஏமாந்தது மக்கள். ஆகவே மக்களே குற்றவாளிகள்.
இந்திய ஜனநாயகத்தில் இதுவரையிலும் ஏமாந்து நிற்போர் இந்தியர்களே. அவர்களே குற்றவாளிகள். ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் அது எந்தக் காலமானாலும் சரி. ஏமாறுபவர்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். இதையெல்லாம் சரி செய்யவே முடியாது.
ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கான நிலம் வாங்கும் போது, லீகல் ஒப்பீனியன் பார்த்திருப்பார்கள் - அந்த வக்கீல் எங்கே?
சரி நிலம் பதிவு செய்தாகி விட்டது. அடுக்குமாடி குடியிருப்பு கட்ட சி.எம்.டி.ஏவில் அனுமதி வாங்குவார்கள். அப்போது ஒரு அரசு வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் வாங்குவார்கள் - அந்த வக்கீல் எங்கே போனார்?
இந்த லீகல் ஒப்பீனியன் தான் - கட்டிட அனுமதி வழங்க பரிந்துரை செய்யும். அந்த லீகல் ஒப்பீனியன் கொடுத்த வக்கீல் யார்?
சரி, அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் போது - வாங்கிய ஒவ்வொருவரும் லீகல் ஒப்பீனியன் பார்த்திருப்பார்களே - அந்த வக்கீல்கள் எங்கே?
ஒரு நிலத்தின் வரலாற்றை எப்படி ஆராய வேண்டுமென இணையதளங்களில், சோஷியல் மீடியாக்களில் பலரும் பல செய்திகளை சொல்லி இருக்கிறார்கள். இதை ஒருவர் கூடவா பார்க்கவில்லை? பார்க்காமலா? இல்லை லீகல் கருத்துரு பெறாமலா வாங்கி இருப்பார்கள்?
1912ம் ஆண்டின் சர்வே ரெக்கார்டு எடுத்துப் பார்த்திருக்கலாம். ஆவணப் பதிவுகளை கண்டுபிடிக்க வில்லங்கம் போட்டுப் பார்த்திருக்கலாம். அத்தனை பேருக்குமா தெரியாமல் போனது. இதைப் பற்றிய அத்தனை விபரங்களும் ஒவ்வொரு கலெக்டர் அலுவலகத்திலும் கிடைக்குமே? ஏன் பார்க்கவில்லை?
பிரச்சினை என்ன?
சென்னை, கொரட்டூர் கிராமத்தில் க.ச.எண் 590 மற்றும் 591ல் உள்ள சுமார் 95 செண்ட் நிலமானது சுவாமி கரப்பாத்திர சிவபிரகாச சித்தர் ஜீவசமாதிக்கு சொந்தமானது.



