குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, January 29, 2020

சில்லுகருப்பட்டி சொல்லும் தமிழ் சினிமா பிசினஸ்

நெட்பிளிக்ஸில் சூர்யா தயாரித்த சில்லுகருப்பட்டி படத்தை நேற்று மாலையில் பார்த்தேன். நான்கு கதைகள். 


கதை ஒன்று: குப்பை பொறுக்கும் ஒரு சிறுவன் பிங்க் குப்பை பையில் கிடைக்கும் ஒரு போட்டோ அதைத் தொடர்ந்து ஒரு டேப் ரெக்காடர், அதைத் தொடர்ந்து கிடைக்கும் ஒரு வைர மோதிரம். அது ஒரு வளர் பருவ பெண்ணுக்கு சொந்தமானது. பிங்க் குப்பை போடப்படும் இடத்தைக் கண்டுபிடித்து அவளிடம் டேப் ரெக்காடரையும், மோதிரத்தையும் சேர்க்கிறான்.

கதை இரண்டு: பால்ஸ் (அது என்னா பால்ஸுன்னு எனக்குச் சத்தியமாக புரியவில்லை) கேன்சரால் பாதிக்கப்படு பையன். ஓலாவில் இணையும் ஒரு ஃபேஷன் டிசைனர் பொண்ணு. பால்ஸில் கேன்சரால் பேச்சு வார்த்தையோடு போன திருமணம். இருவரும் இணையும் கதை. காக்காவைக் காப்பாத்தினா அது பளபளன்னு மின்னும் பொருளைக் கொண்டு வந்து தினமும் அந்தப் பொண்ணு கிட்டே கொடுக்கிறது. இயக்குனரின் கற்பனை வளம் கண்ணதாசனை மிஞ்சுகிறது.

கதை மூன்று: வயதான இரண்டு பெருசுகள் அன்பு கொள்வது, பின்னர் சேர்வது. 

கதை நான்கு: கிட்டே இருந்து பார்த்தா தெரியாது. எட்டே இருந்து பார்த்தா கோபுரமா தெரியும் என தத்துவம் பேசும் சமுத்துரக்கனி. பொண்டாட்டியைத்தான் சொன்னார். அயல் நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு எல்லாம் அவரவர் சம்சாரங்கள் கோபுரங்களாகத் தெரிகின்றார்கள் என்ற புதிய விஷயத்தை கற்றுக் கொடுத்தது. அப்புறம் இன்ப செக்ஸ் கணவனுக்கும் மனைவிக்கும். 

படமே முடிந்தது. இனி கதாகாலட்சேபத்துக்கு வருவோம்.

குடும்ப வாழ்க்கையில் வேலைக்குப் போகும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சமைத்துப் போடுவது, வீட்டினைப் பராமரிப்பது பெரும் கொடுமையானவை என்கிறார்கள் பெண்கள். பிள்ளைகள் பெற்றெடுக்க இனி ஹாஸ்பிட்டல் போதுமென்கிறார்கள். அந்தளவுக்கு ஆண்களால் பயனில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் பெண்கள். டில்டோக்கள் விற்பனை இந்தியாவில் படு சூடாக நடக்கிறது என்கிறது ஒரு சர்வே.  அந்த அக்கப்போர் ஒரு பக்கம் இருக்கட்டும். 

இந்தக் கதையை ஏன் சூர்யா தேர்ந்தெடுத்து தயாரித்தார்? என்ன ரகசியம்? சூட்சுமத்தின் முடிச்சை கொஞ்சமே கொஞ்சம் அவிழ்க்கிறேன்.(இந்த வார்த்தை ஆபாசமானது அல்ல)

தமிழ் சினிமாவில் ரஜினி குரூப், கமல் குரூப், கவுண்டர் குரூப், மதுரை குரூப், ஐயர் குரூப் என தனித்தனி பிசினஸ் குரூப்புகள் பல உண்டு. 

ரஜினியுடன் தனுஷ், ரஜினியின் நண்பர் நடராஜ் மகளைக் கட்டி, ரத்துச் செய்த விஷ்ணு விஷால் போன்றோர்கள், அனிருத் சமாச்சாரங்கள் (இளையராஜா போல வருவாராம் இவர் என ரஜினி புகழாரம் சூட்டியது) இன்னும் பக்கத்து, தூர சொந்த பந்தங்கள் இவர் படங்களில் நடிப்பார்கள். அவ்வப்போது புரட்சிக்காக சில பல இயக்குனர்கள் படங்களில் நடிப்பது போன்ற அல்லுசில்லு வேலைகளை இவர்கள் செய்வார்கள்.

கமலுடன் ரமேஷ் அரவிந்த் நிச்சயம், ஐயராத்து அம்பிக்களாகவும், மாமிகளாகவும் திரைப்படங்களில் நடிப்பார்கள். இவர் அவ்வப்போது சில பல ஸ்டண்டுகளை அடிப்பார். இனப்பாசம் அதிகம். அத்தனையும் ஒன்றுக்கும் ஆவாது போய் விடும்.

கவுண்டர் குரூப்பில் சூர்யா,கார்த்திக், சத்தியராஜ், சிபிராஜ், சத்யன், ஞானவேல் ராஜா, அவ்வப்போது நண்பர்கள் என தனி ஆவர்த்தனம்.

மதுரை குரூப்பில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிகுமார் இப்படி இன்னும் ஒரு சிலர் என இது கொஞ்சம் வித்தியாசமானது.

ஐயர் குரூப்பில் விசு (கிஸ்மு அவசியம்), சங்கர்( நண்பன் படத்தில் வரும் ஆஸ்துமா ஐயர்), மணிரத்னம் வகையறாக்களின் தனி ஆட்டம். 

சன் டிவி, ஒரு சில தயாரிப்பாளர்கள் எல்லாம் மேற்கண்ட க்ரூப்புகளோடு இணைந்து கொள்வார்கள். இன்றைய தினகரனில் ரஜினியும், பேர் கிரில்ஸும் போட்டோ ஷூட் செய்தியும், ரஜினி மீதான வருமான வரித்துறைச் செய்தியும் தடவிக் கொடுத்தபடியே வெளிவந்திருந்த மர்மங்கள் அது தனி ராஜ்ஜியம்.

விஜய், அஜித் சமாச்சாரங்கள் வேறு. அவர்கள் தங்களை பிராண்டாக மாற்றி வேஷம் கட்டிக் கொண்டார்கள். அஜித் ஐயராத்துக்காரர் என்பது தனிப்பட்ட விஷயம்.

ரெட்டி க்ரூப் விஷால், விஜய்சேதுபதி வகையறாக்கள் வேறு.
பெரும்பாலும் நல்ல சினிமாக்கள், கலெக்‌ஷன் ஆகும் சினிமாக்கள் எல்லாம் இவர்கள் தொடர்பானவர்களிடமிருந்தோ அல்லது இவர்களின் தயாரிப்பிலோ தான் வரும்.  கனவுகளோடு வரும் இயக்குனர்களின் அட்டகாசமான கதைகள் பற்றி இவர்களுக்குத் தெரியாமல் போகாது. இண்டஸ்ட்ரியில் அந்தளவுக்கு போட்டுக் கொடுக்கும் ஆட்கள் தடுக்கி விழுந்தால் லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி ஒரு படம் வெளி வந்து வெற்றி பெறுவது பெரும்பாலும் இல்லை எனலாம். 

விஜய் டிவி அலப்பரை நடிகர்கள். புதுமுக நடிகர்கள், இன்ன பிற அல்லுசில்லுகள் அவ்வப்போது எவராவது ஏமாந்த சோனகிரிகளின் தலையில் மிளகாய் அரைத்து ஹீரோக்களாக வேஷம் கட்டுவார்கள். பெரும்பாலும் ராமராஜன் கதையாக முடிந்து போவார்கள். இம்மாதிரி படங்களால் தான் தமிழ் சினிமா இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை சினிமாக்காரர்கள் சொல்வார்கள். 

இந்த ஐந்தாறு சினிமா குரூப்புகளுடன் இயைந்து செல்பவர்களால் தான் சினிமா தயாரித்து வெளியிட முடியும். தியேட்டர்கள் பெரும்பாலும் இந்த ஐந்தாறு குருப்களின் கண்ட்ரோலில் இருக்கும். இந்த குரூப்புகளுக்குள் தான் சண்டை சச்சரவுகள் நடக்கும். செய்திகளாகும், பரபரப்பாகும். இவர்களின் தொடர்பில் இருக்கும் வெளியீட்டாளர்களால் சினிமா வியாபாரமாகும். 

தனி ஒருவன் சினிமா தயாரிக்கவோ அல்லது ஹீரோவாக நடிக்கவோ விடவே மாட்டார்கள். அப்படி வந்து விட்டால் ஜெயிக்க வைத்து, மொத்தமாக ஜோலியை முடித்து விடுவார்கள். இங்கு ஜோலி என்பது வேலையை என்று அர்த்தம் கொள்ள வேண்டுமென்று சொல்லி விடுகிறேன். நமக்கெல்லாம் வக்கீலும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை. ஜோலி என்கிற வார்த்தைக்கு அவ்வளவு மகிமை.

நல்ல கதை வைத்திருக்கும் இயக்குனர் இந்தக் குரூப்பில் கதை சொல்ல வேண்டும். கதையில் ஒட்டுக்கள், வெட்டுக்கள், ஒரு சில இணைப்புகள் கோர்க்கப்பட்டு வேறு ஒருவரின் இயக்கத்தில் வெளிவரும். இப்போது கோர்ட்டுக்குப் போகின்றார்கள். அப்போதெல்லாம் அய்யோ பாவம் கதைதான். இப்போது ஆரம்பத்தில் இருந்து படியுங்கள் சூர்யா ஏன் இந்தக் கதையை தேர்ந்தெடுத்து தயாரித்தார் என்பதை...

சில்லுகருப்பட்டி திரைப்படம் சுட்டிக்காட்டும் தமிழ் சினிமா பிசினஸ் இதுதான். இதைச் சரி செய்ய இயலுமா? ஏன் முடியாது? ஆனால் ஒருவரும் செய்ய மாட்டார்கள். செய்யவும் விடமாட்டார்கள்.

புரிந்தவர்கள் சிரித்துக் கொள்ளுங்கள். ஆதர்சன ஹீரோக்களின் ரசிகசிகாமணிகள் அடியேனை மன்னித்து அருள்வீர்களாக. அவ்வளவுதான் இந்தப் பதிவு.

* * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.