"வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன் . ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் 
ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
நான் என்ன செய்யட்டும்?" 
என்றான் குருவிடம் சீடன்.
"தம்பி- நீ வாழ்க்கையில் என்னவாக இருக்க விரும்புகிறாய் ? 
எருமையாகவா,கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" 
குரு கேட்டார்.
"புரியல குருவே.." என்றான்.
"எருமை பின்னால் தட்டினால், 
எதையும் கண்டு கொள்ளாது. கழுதை, தட்டியவரை எட்டி உதைக்கும். ஆனால் குதிரை முன்னால் பாய்ந்து 
செல்லும்.
புரிந்ததா...நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் 
வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். இது 
தான் வாழ்வின் ரகசியம் என்றார். 
* * *
1 comments:
அருமை...
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.