குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, August 12, 2008

சாகப்போகும் மனிதர்கள் மற்றவர்களைச் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்

மனிதா... ஓடுகிறாய்... ஓடுகிறாய்... ஓடிக்கொண்டே இருக்கிறாய். எங்கே ஓடுகிறாய் சாவதற்குள் உன் ஓட்டம் நின்று விடுமா மனிதா இல்லை ஓடிக்கொண்டிருப்பாயா ? பேங்கில் பணம் சேர்த்து வைத்து விட்டாயா ? சொத்து நிலம் வாங்கி குவித்து விட்டாயா ?
குவி குவி... நீயா அனுபவிக்க போகிறாய். நீ தேடித் தேடி சேர்த்து வைத்தது எல்லாம் நாளை எவனுக்கோ போகப்
போகிறது. போகட்டும். அதனால் என்ன ? ஆனாலும் நீ ஓடுவதை நிறுத்தி விடாதே.. வேண்டும் வேண்டும் இன்னும் வேண்டும்... மனிதா மனிதனுக்கு உள்ள அகந்தையினால் பார் ஆயிரக் கணக்கில் ஜார்ஜியாவில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். போர் ... போர்.. எதற்கு மனிதா... எதற்கு.... ? யார் வாழ இந்தப் போர் ?? எவன் இருக்கப்போகிறான் சாகாமல்... நடக்கட்டும் நடக்கட்டும்.. போர் நடக்கட்டும். ஆனாலும் நீ ஓடுவதை நிறுத்தி விடாதே. உனக்கு நேரம் இருந்தால் கீழே உள்ள பாடலை படித்துப் பார். படித்து விட்டு திரும்பவும் ஓடு... நிற்காதே. நின்றால் சாவு உன்னைப் பிடித்து விடும்.

படம் : நீங்கள் கேட்டவை
பாடியவர் : ஜேசுதாஸ்

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

பிறக்கின்ற போதே ...............
பிறக்கின்ற போதே இறக்கின்ற சேதி இருக்கின்றதென்பது மெய்தானே
ஆசைகள் என்ன ...............
ஆசைகள் என்ன ஆணவம் என்ன உறவுகள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது ..........
உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே

காலங்கள் மாறும்...........
காலஙக்ள் மாறும் கோலங்கள் மாறும் மானிடம் என்பது பொய்வேஷம்
தூக்கத்தில் பாதி
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது மீதம்
பேதை மனிதனே
பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்.

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்