போன் இன்றி ஒரு அணுவும் அசையாத நிலைக்கு உலகம் வந்து விட்டது. ஆதார் கார்டு இன்றி இனி அஃபீஷியலாக எதுவும் செய்ய முடியாது என்று அரசு சொன்னாலும், கோர்ட்டில் ஆதார் அடையாள அட்டை ஒரு ஆவணமே இல்லை என சொல்கிறது ஒன்றிய அரசு. பீகார் ஓட்டு லிஸ்ட் பிரச்சினை தெரியும் தானே உங்களுக்கு. அதைத்தான் சொன்னேன்.
போலி ஆதார் கார்டு கொடுப்பதும், குற்றம் சொல்வதும் அரசாங்கம். சரி செய்ய வேண்டிய அரசாங்கம் வழங்கும் ஒரு முக்கியமான ஆவணத்தை ஏற்க முடியாது எனக் கோர்ட்டில் சொல்வது, என்ன விதமானது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
போனைத் திறந்தால் பெண் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது. சோஷியல் மீடியாக்களில் பெண்களின் அரை நிர்வாணமும், பச்சை பச்சையாக பேசும் வீடியோக்களும், ஷார்ட்சுகளும் உலா.
விஜய் டிவியில் ஆஃபீஸ் என்றொரு தொடரில் ஒரு பெண் நடிக்கிறார். முகத்தில் கொஞ்சம் சிவப்பு தழும்புகளாய். அந்தம்மாவின் இன்ஸ்டாகிராம் ஷார்ட்ஸ் - ஆபாசம்.
விஜய் டிவி தமிழ் கலாச்சாரத்துக்கு பால் ஊற்றிக் கொண்டிருக்கிறது. தாவணி பாவாடை போடச் சொல்லும், ஆனால் கண்டவனை கட்டிப் பிடிக்கச் சொல்லி கலாரசனை நிகழ்ச்சிகளை நடத்தும். யார் இதையெல்லாம் கேட்பது?
ஒரு நகைக்கடை அதிபரிடம் ஒருவர் எதற்காக விளம்பரங்களுக்கு நடிகைகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனக் கேட்டார். பணமகள் வேண்டுமென்றால் விலை மகளும் வேண்டும் என்றாராம். மாற்றி எழுதி இருக்கிறேன். விலை மகள் என்றால் விபச்சாரம் என எடுத்துக் கொள்ள கூடாது. பணம் கொடுத்தால் நடிக்க வருகிறார்கள் அல்லவா? அப்படி அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சம்பவம். இன்றைய மாணவர்களின் நிலை என்னவாகி இருக்கிறது என அறிந்து கொள்ளுங்கள்.
அது ஒரு வேத பாடசாலை. அங்கு பல ஊர்களிலும் இருந்தும் அப்கோர்ஸ் பார்ப்பனர்களின் பசங்க - வேதம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கு ஒரு மாணவன் - மிக நல்ல குணமும், நல்ல படிப்பும் கொண்டவன். வேதம் படித்துக் கொண்டிருக்கிறான். அந்தப் பாடசாலைக்கு வேறொரு ஊரில் இருந்து, ஒரு பார்ப்பன சிறுவன் புதிதாக சேர்ந்திருக்கிறான். புதிதாக வந்தவனுக்கு வயது கொஞ்சம் அதிகம். அந்த சின்னப் பையன் நன்றாகப் படிக்கிறானே என உள்ளுக்குள் கொஞ்சம் பொறாமை.
அவனை இவன் பாத்ரூமிக்குள் அழைத்துச் சென்று பெண்ணின் யோனி படத்தை சுவற்றில் வரைந்து காட்டி, இதைப் பார்த்திருக்கிறாயா? எனக் கேட்டிருக்கிறான். அது மட்டுமின்றி பல்வேறு காமம் தொடர்பான பல சில்மிஷ வேலைகளையும் செய்திருக்கிறான். அவனின் நோக்கம் அந்தச் சிறுவனின் படிப்பைக் கெடுப்பது.
பையனும் வலையில் வீழ்ந்து அவன் சொன்னவாறு ஏதேதோ செய்திருக்கிறான். நாளடைவில் அந்தப் பையனின் அம்மாவுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. பையன் மன உளைச்சலில் மனநிலை பிறழ்ந்து விட்டான். புதிதாக வந்தவன் இவனின் படிப்பையும், நன்னடைத்தையும் காலி செய்து விட்டான்.
இது போன்று வேத பாடசாலையில் மட்டும் நடக்கவில்லை. பல பள்ளிகளில், கல்விக் கூடங்களில் எல்லாக் காலங்களிலும் நடக்கும் கொடுமை.
எனக்குப் பள்ளியில் எனது பள்ளி வாத்தியாரே செய்தார். அவருக்குப் பிடித்த மாணவனுக்கு அதிக மார்க் போட்டு விடுவார். அந்தக் காலத்தில் இன்றைக்கு இருப்பது போல செல்போன், இணையம் எதுவும் இல்லை.
பி.இ படிக்க எனக்கு கட் ஆஃப் மார்க் இருந்தும், படிக்க முடியாது எனச் சொல்லி விட்டார். அவர் சொன்னது உண்மை என நம்பி பின்னர் பி.எஸ்.ஸி கணிப்பொறி டிகிரி படித்தேன்.
பின்னாளில் தான் தெரிந்தது, என் மீது எரிச்சலில் இருந்திருக்கிறார் என. ஏன் என எனக்குப் புரிந்தது. என் அப்பாவின் சொத்துக்கள்.
அவனின் அம்மா அந்தப் பையனை அழைத்துக் கொண்டு கோவில் கோவிலாக போய் இருக்கிறார். ஒன்றும் நடக்கவில்லை. மருத்துவமனையில் காட்டி மருந்துகள் கொடுத்திருக்கிறார்கள். ம்ஹூம்.
வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதி - ஜோதி சுவாமியைப் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு குடும்பத்துடன் வாசியோகப் பயிற்சியைக் கற்றுக் கொடுத்து, ஒரு சில ஆலோசனைகளையும் கொடுத்திருக்கிறார்.
இந்தப் பையன் வெகு சிரத்தையாகப் பயிற்சியைச் செய்திருக்கிறான். பாடசாலைக்குச் சென்றிருக்கிறான். அந்தப் பையனை எதிர்த்துப் பேசி மூடிட்டு போடானுட்டான்.
பாட சாலையின் குருக்களுக்கு பையனின் நடத்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். பையனின் அம்மாவுக்குப் போன் செய்து என்ன நடந்தது என விசாரித்திருக்கிறார்.
இப்போது பையன் மிகச் சரியான வகையில் வேதம் படித்துக் கொண்டிருக்கிறான். அதைக் கேள்விப்பட்ட எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவன் நன்றாக இருக்க வேண்டும்.
புதிதாக வந்த பையனின் வாழ்க்கையும் சிறக்க வேண்டும். அவனுக்கும் நல்லன நடக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.
இன்றைய மக்களுக்கு உடனுக்குடன் சினிமாவில் ஒரே பாட்டில் பணக்காரன் ஆவது போல எல்லாமும் நடந்து விட வேண்டுமென ஆவல். அத்தனைக்கும் ஆசைப்படுவதால் வரும் வினை. எதுவும் நடக்காது. திட்டமிடல், செயல்படுத்தல், வெற்றி அடைதல் என்பது வார்த்தைகளில் இருக்கும். ஆனால் உண்மையில் எதுவும் நடக்காது. இழப்பு தான் வரும். அனுபவமே கற்றுக் கொடுக்கும்.
ஒரு வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர், தன் ஓய்விற்குப் பிறகு 800 கோடி சம்பாதித்திருக்கிறார். அது எப்படி? சாத்தியமா? எனக் கேட்பீர்கள். ஆம் அவர் சாத்தியப்படுத்தினார். நிறைய வங்கியாளர்கள் ஓய்வு பெறுகிறார்கள். ஆனால் அவர்களால் இந்தளவு சம்பாதிப்பது பற்றி யோசிக்கவே முடியாது.
அனுபவம் என்பது ரொம்பவும் முக்கியமானது வெற்றிக்கு.
உங்கள் குழந்தைகளின் நடத்தைகளை கொஞ்சமாவது கவனியுங்கள். அவர்களின் பாதையில் காமம் பற்றிய சேறு கொட்டிக் கிடக்கிறது. தெரிய கூடாத வயதில் தெரியக் கூடாதவைகளைத் தெரிந்து கொண்டு வழி மாறி விடுகிறார்கள்.
முதலில் சினிமாவை உங்கள் வீட்டில் இருந்து துரத்தி அடியுங்கள். சினிமா ஹீரோக்களும், ஹீரோயின்களும் போலிகள் என்பதை நினைவில் நீங்கள் வையுங்கள். அவர்களின் ஒவ்வொன்றும் போலியானவை - அதாவது நடிப்பு - அது உண்மையில்லை. அவர்கள் உங்களிடமிருந்து பெறுவது உங்கள் வாழ்க்கையை. போலியை நம்பி வாழ்க்கையை இழக்காதீர்கள்.
உங்கள் வாரிசுகளிடம் சொல்லி வளருங்கள்.
சினிமாவில் காட்டப்படுவது போல எவரும் வாழவே முடியாது அஃப்கோர்ஸ் நடிகர்களும் கூட அப்படித்தான் வாழ்கிறார்கள். திரை வாழ்க்கை திரையோடு போய் விடும் என்பதை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். காமத்தின் வழியாக ஒவ்வொருவரின் மனதுக்குள் ஊடுறுவும் போலிகள் - நம்மை ஆட்சி செய்ய - நம்மிடமிருக்கும் செல்வத்தை ஆஹோவென வாழ பயன்படுத்த சினிமா மூலம் தூண்டில் போடுகிறார்கள்.
கவனமாய் இருங்கள்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.