குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, April 22, 2008

திண்ணையில் எனது முதல் சிறுகதை

வளர்ப்பு
” கண்ணு ஒழுங்கா தெரிய மாட்டேங்குது ? ”
“ அது என்ன காரா ? ஏன் இப்படி பேய்த்தனமா வருகிறான் “
” மெதுவாடா ? மெதுவா .. “
” மேலே இடிக்கப்போறானோ ? “
“ புகை மாதிரி தெரியுது. இந்தப் பக்கம் போவோமா ? ”
” அட அதற்குள் , என்ன அது ? ”
” மோட்டார் பைக்கா இது ? ”
” இந்தக் கண்ணு வேற ! ”
” ஒன்னும் சரியா தெரிய மாட்டேங்குது “
” கால் வேற நடுங்குது “
” வேகமா போறதுக்குள்ள இடிச்சிட்டானா என்ன செய்றது ? “
” ஆட்டோவா அது ? “
” நிப்பாட்டி பார்க்கலாமா ? “
” அட ஏன் நிக்காம போறான்...? ”
“என் கையில தான் காசு இருக்கே... ! “
” சரி, இந்தப் பக்கமா மெதுவா போயிடலாம். என்ன அது ? பெருசா? லாரியா அது ? “
” என்னமோ சத்தமா பேச்சு குரல் கேக்குதே ? “
” என்ன சொல்லுறாங்க ? “
* * *
” ஏம்மா, அந்த தாத்தா நடு ரோட்டுல நிக்கிறாரு ? “
“ தெரியலைப்பா... “
“ஏம்மா, அவருக்கு உன்னை மாதிரி அம்மா எல்லாம் கிடையாதா? “
” இருப்பாங்க கன்னு ? “
” அப்புறம் ஏம்மா குளிக்காம அழுக்கா சட்டை போட்டுட்டு இருக்காரு ?
அவரு அம்மா மோசம் இல்லைம்மா ? “
” அப்படி இல்லைப்பா ? ”
” பாவம்மா அந்த தாத்தா, ரோட்டை கடக்க முடியாமல் கஷ்டப்படுறாரு. நான் வேனா கையை பிடித்து இந்தப் பக்கம் அழைச்சுட்டு வரட்டுமாம்மா ? “
“ வேணாம் கன்னு.. உன் மேலே யாராவது காரை ஏத்திருவாங்க. “
* * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.