குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வீட்டு மனைகள். Show all posts
Showing posts with label வீட்டு மனைகள். Show all posts

Friday, April 29, 2016

திருச்சி ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோவில் அருகில் வீட்டு மனைகள் விற்பனைக்கு

தமிழகத்தின் மத்திய பாகத்தில் அமைந்துள்ள திருச்சி மாநகரிலே அமைந்துள்ள ஸ்ரீரங்கம் வழியாகப் பாய்ந்தோடும் காவிரித்தாயின் மடியிலே எருந்தருளி இருக்கும் சுவாமி ஸ்ரீரங்கநாதப்பெருமானின் கோவில் சன்னதியிலிருந்து 7 நிமிடம் பொடி நடையில் அடைந்து விடும் தூரத்தில் (சுமார் 600 மீட்டர்), கொள்ளிடத்துக் கரை அருகில் செல்லும் சாலையின் வலது புறமாய், யாத்ரி நிவாஸ் தங்குமிடத்தின் அருகிலே சாலை வசதியுடன் அமைந்திருக்கிறது எமது வீட்டு மனைகள். கோவிலின் கிழபுறம் சன்னதியிலிருந்து சடுதியில் நடந்து சென்று சேரும் தூரத்தில் அமைந்திருக்கிறது. 

இந்த இடத்தினை கூகுள் மேப்பில் காண விரும்பினால் இந்தப் புகைப்படத்தினை கிளிக் செய்து பார்த்தீர்கள் என்றால், படத்தின் பச்சை வண்ணம் இட்டிருக்கும் பகுதிதான் எமது மனைகள் இருக்கும் பகுதி. சாலைகள் அனைத்தும் அரசுச் சாலைகள்.


கூகுள் மேப்பிற்குச் சென்று  10.865110, 78.696000 இந்த அளவீடுகளை உள்ளீடு செய்து பார்த்தீர்கள் என்றால் இடத்தின் படம் மிகத் தெளிவாய் தெரியும்.

30 அடிச் சாலை வசதியுடன் தனித் தனி மனைகளாக விற்பனைக்கு வைத்திருக்கிறேன். மிகவும் குறைந்த விலை. உடனடிக் கிரையம், வீடுகள் வேண்டுவோருக்கு தரமான வீடுகள் கட்டித்தரப்படும்.

தமிழகத்தின் பூலோக சுவர்க்கமான ஸ்ரீரங்கத்திலே, அதுவும் ஸ் ரங்கன் கோவில் அருகிலும், காவிரியாற்றின் கரையோரமாகவும் வீடுகள் கட்டி அமைதியாக வாழ விரும்புவோருக்கு அற்புதமான இடம் அது.

மிகவும் குறைந்த அளவு மனைகளே இருக்கின்றன. விரைந்து தங்களுக்கான இடத்தினை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

வீட்டு மனைகளின் அளவுகளையும், விலையையும் தெரிந்து கொள்ள அல்லது வீட்டு மனையினைப் பார்வையிட விரும்புவோர் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

அழைக்க : 96005 77755 
மேலும் மேலதிக விபரங்களுக்கு : covaimthangavel@gmail.com

- அன்புத் தோழன் - கோவை எம் தங்கவேல்

Saturday, September 13, 2014

நிலம் (10) - மலைப்பகுதியில் மனை நிலம்

சமீபத்தில் கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தின் அறிக்கையினை செய்தித்தாளில் படித்தேன். வெகு முக்கியமான விஷயம் என்பதால் இப்பதிவு உங்களுக்காக எழுதுகிறேன்.

கோவையில் மலைப்பகுதி கிராமங்களின் பெயர்கள் கீழே.
  1. தேவராயபுரம்
  2. கலிக்க நாயக்கன்பாளையம்
  3. பூலுவப்பட்டி
  4. தென்கரை
  5. மாதம்பட்டி
  6. தீத்திபாளையம்
  7. பேரூர் செட்டிபாளையம்
  8. சுண்டக்காமுத்தூர்
  9.  நாயக்கன்பாளையம்
  10. கூடலூர்
  11. நரசிம்ம நாயக்கன்பாளையம்
  12. எட்டிமடை
  13. தொண்டாமுத்தூர்
  14. நஞ்சுண்டாபுரம்
  15. சின்னதடாகம்
  16. வீரபாண்டி
  17. சோமையாம்பாளையம்
மேற்கண்ட மலைக்கிராமங்களில் விற்கக்கூடிய மனைப்பிரிவுகளுக்கு என்று ஒரு ஸ்பெஷல் அனுமதிகள் பெற வேண்டும். வனத்துறை, வேளான் பொறியிடல் துறை, புவியியல் சுரங்கத்துறை, தாசில்தார், பொதுப்பணித்துறை(ஓடை இருந்தால்) போன்ற அமைப்புகளிடமிருந்து தடையின்மைச் சான்று பெறுதல் மிக முக்கியம். அதனைத் தொடர்ந்து உள்ளூர் திட்டக்குழு அனுமதிககான விண்ணப்பம் மற்றும் இன்ன பிற வேலைகளைச் செய்து மனையிட அனுமதி பெற வேண்டியது மிக அவசியம்.

சமீப காலங்களில் பல மலைக்கிராமங்களில் வீட்டு மனைகள் விற்பனைக்கு என்று விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வீட்டு மனைகளை வாங்க விரும்புவோர் மேற்கண்ட தடையின்மைச் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

விரைவில் கோவையின் ஒரு பகுதி மக்களை பேரின்பத்தில் ஆழ்த்தக்கூடிய அற்புதமான ஒரு கட்டுரை விரைவில் எழுதப்படும்.