குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Tuesday, December 11, 2018

உலகக் கவி தனுஷ்

பாரதியாரின் பிறந்த நாளான இன்று உலகத் தமிழ் மக்களுக்கு, எதிர்கால தமிழகத்தின் சுப்பர் மன்னிக்கவும் சூப்பர் ஸ்டாரும், வரும் காலத்தின் தமிழக முதலமைச்சருமான எனது அன்பு நடிகர் மாண்புமிகு ஸ்ரீலஜி மகாத்மா உயர்திரு தனுஷ் அவர்களின் பாடலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதிலே எனக்கும் பெரும் மகிழ்ச்சி. பாரதியாரின் பிறந்த நாளான இன்று தமிழகக் கவியான எம்மான் தனுஷ் அவர்களின் பாடலை நினைவூட்டுவதில் பெரும் மகிழ்வெய்தி உள்ளம் பூரித்து ப்..ஊ..ளகாங்கிதம் மன்னிக்கவும் புளகாங்கிதமடைகிறேன்.

இந்தப் பாடலைப் பாடியவர் அடியேனின் உள்ளம் கவர் கள்வனான மகா நடிகரும், உலகிற்கே ஒப்பாருமிப்பாரும் இல்லா ஒரே மனிதருமான தனுஷ் அவர்கள் என்பதை தமிழ் உலகிற்குச் சொல்வதில் எனக்கு மிக்க சந்தோஷம்.

இன்றைய நாள், அந்தக் காலத்தில் ஒரே வரியை ஓராயிரம் தடவை கீரல் விழுந்த ரெக்கார்டு போலப் பாடிப் பாடி புகழடைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் நினைவு நாளும் கூட.

எம் மனம் கவர் உலகப் புகழ் பாடகர் தனுஷின் குரலுக்கு முன்னே எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல் காலணா பெறாது என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டியதில்லை. மலை எங்கே மடு எங்கே????

சிட்னியில் பிறந்து சட்னியாக வந்த மன்னிக்கவும் பாடகியாக வந்த தீ எனும் அய்யர் ஆத்து மாமியின் பெண் பிள்ளையான பாடகியின் ஹஸ்கி குரலில் இந்தப் பாடலைக் கேட்டதும் எனக்குள் தியானம் ஒன்று கூடி உள்ளம் மறந்து உலகை மறந்து வெட்டவெளிக்குச் சென்று விட்டேன். பாடகியின் ’ஒரசிக்கலாம்’ என்ற குரலைக் கேட்டவுடன் சிலிர்ப்பு ஏற்பட்டு தியான நிலை ஒன்று கூடி அந்தப் பரப்பிரம்மனையே பார்த்து விட்டேன் என்றால் பாடகியின் திறமைக்கு அளவேது? 

ஒரே ஒரு பாடலில் சாதாரண மனிதனை உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் அற்புதமான திறமையை எண்ணி எண்ணி வியக்கிறேன். அதை உங்களுக்கும் சொல்லி மகிழ்கிறேன். இதை விஜய் டிவி ஜட்ஜூகள் சித்ரா, பாரத கலா ரசிகமணி அவார்டு பெற்ற சரண் மற்றும் தெருப்பாடகர் சங்கர் மகாதேவன் வகையறாக்கள் கவனிக்கவும். இப்பாடகியை அழைத்து வந்து விஜய் டிவி கவுரவப்படுத்தி ‘ஒரசிக்கலாம்’ அவார்டு கொடுக்க வேண்டுமென்ற் இந்த நேரத்தில் நான் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அது மட்டுமல்ல, தமிழக அரசாங்கம் எமது தங்கத் தலைவனின் பாடலைப் பள்ளிகள் தோறும் இறை வணக்கத்திற்கு முன்பாக பாட ஒரு அரசாணையை வெளியிட்டு ஒன்றுக்கும் ஆகாத பாரதியாரை உலகக் கவி என்று சொல்லுவதை விட்டு விட்டு, எம் தலைவர் தனுஷை தமிழகக் கவியாக அங்கீகரித்து அவருக்கு மரியாதை செய்தல் வேண்டுமென்று வேண்டு கோள் விடுக்கிறேன். தமிழ் வளர்ச்சித்துறையின் கவனத்திற்கு இந்தக் கவியைக் கொண்டு சென்று, மத்திய அரசாங்கத்திடம் படுத்துப் பேசி மன்னிக்கவும் பணிந்து பேசி முடிந்தால் யோகா வகுப்பின் போது இப்பாடலினைப் பாடியபடி யோகா செய்ய ஆவண செய்தல் வேண்டுமாய் உத்தரவிடும் படிக் கேட்க வேண்டுமென்று இந்த நேரத்தில் அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

(பாடகி தீ - சிட்னி அய்யாரத்து மாமி பின்னு)

இதோ தமிழகக் கவிஞரும், கண்ணதாசனையும் மிஞ்சிய ஒரே ஒரு எழுத்தாளருமான எம்மான் தனுஷ் அவர்களின் பாடல் கீழே.


பெண் : ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

ஆண் : ஹே என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

பெண் : ஹே மை டியர் மச்சான் நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
ஆண் : மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா

பெண் : ரா நம்ம பீச் பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ஆண் : ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு
ஐ வில் கிவ் யூ பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி

பெண் : போத்தாம்.. வேஸ்த்தாம்.. ரவுடி பேபி
ஆண் : கேர்ள் பிரண்டு.. பூச்செண்டு.. நியூ டிரென்டு பேபி

பெண் : ரவுடி பேபி ரா ரா ரவுடி பேபி

பெண் : உன்னாலே ஏய் மூடாச்சு மை ஹார்மோனு
பேலன்ஸு டேமேஜ்
ஆண் : ஏய் காமாட்சி என் மீனாட்சி இந்த
மாரிக்கும் உன் மேல கண்ணாச்சு

பெண் : ஒன் பிளஸ் ஒன்னு டூ மாமா
யூ பிளஸ் மீ த்ரீ மாமா
ஆண் : வாடி ஜான்சி ராணி என் கிருஷ்ணவேணி
ஐ வில் பை யூ போனி அத ஓட்டின்னு வா நீ

பெண் : என் மந்திரவாதி நீ கேடிக்கு கேடி
நான் உன்னுல பாதி நம்ம செம ஜோடி

பெண் : ரவுடி பேபி ஹே ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி ரவுடி

பெண் : {ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான் }(3)

ஆண் : ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

பெண் : ஹே என் சிலுக்கு சட்ட நீ
வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

பெண் : மை டியர் மச்சான்
ஆண் : ஹாஹான் ஹாஹான்
பெண் : நீ மனசு வெச்சா

ஆண் : ஹாஹான் ஹாஹான்
பெண் : நம்ம ஒரசிக்கலாம்

ஆண் : ஹாஹான் ஹாஹான்
பெண் : நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
ஆண் : ஹே  ஹே  ஹே

ஆண் : மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா

பெண் : ரா நம்ம பீச் பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ஆண் : ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு
ஐ வில் கிவ் யூ பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி

பெண் : ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி……

பெண் : {ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான் }(3)

பெண் : {ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான் }(3)

பெண் : ரவுடி பேபி

============================


பாடலைக் கேட்டு ரசிக்க !

இலக்கிய உலக அன்பர்களே, உலக தமிழக டிவிப் பெருமக்களே, மேலே கண்ட பாடலைப் படிக்கும் போது ஒவ்வொருவருக்கும் உள்ளம் உற்சாகத்தால் துள்ளும். பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் சொல்லும் அர்த்தங்களை விவரிக்க வார்த்தைகள் போதாது. அது மட்டுமின்றி பாடல்களில் தொக்கி நிற்கும் முடிச்சுகளின் மர்மங்களை எம்மான் தனுஷால் மட்டுமே அவிழ்க்க முடியும். அந்தளவுக்கு கருத்துப் பொதிகள் பொதிந்து மறைந்து கிடக்கின்றன.

உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று !

யூ ப்ளஸ் மீ திரீ மாமா - என்ன ஒரு கருத்து? இந்த நான்கு வார்த்தைகளில் கொட்டிக் கிடக்கும் மர்மங்கள் தான் எத்தனை எத்தனை? பிளஸ் என்பது சேர்வதைக் குறிக்கிறது. எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதன் அர்த்தம் தான் அது. மாமா என்பது அன்பினை மட்டும் குறிப்பது அல்ல? உறவைக் குறிப்பது. குறி என்றவுடன் சிறு மதியாளர்களுக்கு சிந்தனை வேறு பக்கம் சென்றிடும். நான் சொல்வது சுட்டுவது என்ற அர்த்தத்தில். ஒன்னும் ஒன்னும் இரண்டு ஆனால் யூவும் மீயும் சேர்ந்தால் மூன்று என்ற அர்த்தம் சொல்லும் அற்புத தத்துவம்தான் மனித வாழ்க்கையின் உயர் தத்துவம். ஒரே ஒரு வரியில் மட்டும் இத்தனை அர்த்தங்களைப் பொதித்து எவராலும் அவ்வளவு எளிதில் உணர்ந்து கொள்ள இயலாத கவியை மன்னிக்கவும் கவிதையை எழுதிய எம்மான் தனுஷ் அவர்களை இலக்கிய உலகம் எவ்வளவு பாராட்டினாலும் தகுமா? இல்லை தகுமானு கேட்கிறேன்?

நீங்கள் எல்லோரும் மூச்சடைத்துப் போய், விழித்துக் கொண்டிருப்பீர்கள் என்று தெரிகிறது. தனுஷ் அவர்களின் பாடலின் அர்த்தங்களும், அதன் ராகங்களும் சாதாரண இலக்கியவியாதிகளான உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்று எனக்குத் தெரியாதது அல்ல. இருப்பினும் ஏன் சொல்கிறேன் என்றால் உங்களைப் போன்ற அரைகுறை கவி ஞானம் உள்ளவர்களால் பரிந்துரைத்தால் தான் சாகித்திய அகாடமி விருது கிடைக்கும் என சொல்லிக் கொள்கின்றார்கள்.

ஆகவே வரும் வரும் எம்மான் தனுஷ் அவர்களுக்கு சாகித்ய அகாடெமி விருதுக்கும், ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைத்து பெரும் புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நினைவூட்டுகிறேன்.

உலகே மெச்சும் அற்புதக் கவியும், பாடகரும், நடிகருமான தனுஷ் அவர்களுக்கும், இசைகலெக்‌ஷனின் ஒரே வாரிசுப் புதல்வனான யுவன் செங்கர் ராஜாவுக்கும் பாரத தேசம் உயரிய விருது கொடுத்து கவுரவிக்க வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக் கொண்டு உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன்.

வாழ்க உகலக் கவி தனுஷ் ! 

Thursday, October 13, 2016

சிவகார்த்திகேயனின் அழுகை

அண்ணா, சிவகார்த்திகேயன் மேடையில் அழுது விட்டார் பார்த்தீர்களா? என்று போனில் ஒரு சினிமா நண்பர் அழைத்து ஆதங்கப்பட்டார். கிட்டத்தட்ட 32 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார் அவர். மிக நல்ல கதை சொல்லி. ஏகப்பட்ட கதைகள் அவரிடம் கொட்டிக் கிடக்கின்றன. அவர் 12 மணி நேரம் கதை சொல்வார். அந்தளவுக்குத் திறமைசாலி. ஆனால் இதுவரை ஒரு படம் கூட அவரால் இயக்கமுடியவில்லை. காரணம் அவருக்கு அந்த வித்தை தெரியவில்லை. போன் போட்டு சிவகார்த்திகேயனுக்காக பேசுகிறார். இதனால் அவருக்கு என்ன பிரயோஜனம் என்று அவர் யோசித்திருந்தால் போன் செய்திருக்கமாட்டார்.

சிவகார்த்திகேயன் ஏன் அழுகிறார்? எங்கே நாம் அடுத்து அடுத்து கோடிகளில் சம்பாதிக்க முடியாதோ என்ற ஆதங்கத்தில் அழுகிறார் விஷயம் அவ்வளவுதான். புரிந்துகொள்ள முயலுங்கள் என்று அவரிடம் சொன்னேன். ஒன்றும் பேசாமல் போனை வைத்து விட்டார். கமல்ஹாசன் கூட கண்ணீர் சிந்தினார். ஏனென்றால் அவரின் பிசினஸுக்குப் பிரச்சினை. அதனால் அழுதார். இதில் நமக்கு என்ன பிரச்சினை என்று எவரும் சிந்திப்பதில்லை.

இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? சிறிய தொழில் செய்பவன் கூட தன் சக தொழில் போட்டியாளரிடம் தோற்றுப் போகின்றானே அவன் என்ன அழுது கொண்டா இருக்கின்றான்? இல்லை பத்திரிக்கையில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றானா? இல்லையே? தொழில் போட்டியில் பல இடைஞ்சல்கள் வரத்தான் செய்யும். அதைச் சமாளித்துதான் வெற்றி பெற வேண்டும். உடனே மீடியாவில் அழுக ஆரம்பித்தால் தினம் தோறும் நொடிக்கு நொடி அழுகாட்சிகளையே மீடியாக்கள் காட்டிக் கொண்டிருக்க நேரிடும். இதெல்லாம் எதற்கு? 

இதெல்லாம் புரியும் அளவுக்கு தமிழகத்தில் பெரும்பான்மை இல்லையென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதே அரசியலைத்தான் எழுத்தாளர்களும் செய்கின்றார்கள். எழுத்தாளர்களில் கூட சினிமாத்தனம் இருக்கிறது. ஜெயமோகன் சாரு நிவேதிதா என்று எழுதுகின்றார்கள். 

இந்த அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இந்த அரசியல் என்று தெளிந்து கொள்ள வேண்டும். தனிமனிதப் பெருமை பேசும் சினிமாக்காரர்களையும் அரசியல்வாதிகளையும், இலக்கியவாதிகளைப் பற்றி யும் தெளிவறப் புரிந்து கொள்ள வேண்டும். 

அவர்களின் அரசியல் நம் இரக்க குணத்தையும் உழைப்பையும் பயன்படுத்தி நம்மிடமிருந்து பணம் பிடுங்க செய்யும் மாயாஜால வித்தை. அரசியல்வாதி அதிகாரத்தை அடைந்து பணம் சம்பாதிக்கத்தான் அரசியலுக்கு வருகின்றான். எந்த அரசியல்வாதியும் தன் சொத்தை விற்று மக்களுக்கு சேவை செய்ய வருவதில்லை. கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக வாழவும், அதிகாரத்தை அனுபவிக்கவும், அதைப் பயன்படுத்தி மேலும் மேலும் சொத்து சேர்க்கவும் தான் அரசியலுக்கு வருகிறான். செலவு செய்கிறான்.

எழுத்தாளர்கள் பணமும் புகழும் சம்பாதிக்கத்தான் எழுதுகின்றார்கள். சமூகப் பிரக்ஞை, வரலாறு என்று பேசி மாய்மாலம் செய்வார்கள். 

சினிமாக்காரர்கள் பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவுக்குள் வருகின்றார்கள். ஹீரோயின் இல்லையென்றால் ஹீரோக்கள் சினிமாவுக்கே வரமாட்டார்கள். 

பத்திரிக்கையும், சினிமாவும், அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அவை மக்களுக்கு எந்த வித நன்மையும் செய்வதில்லை. மக்கள் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டையப் போட உருவாக்கப்பட்ட மாயவலைகள். சினிமா ஒரு பக்கம் நம்மிடமிருந்து உறிஞ்சிக் கொள்கிறது. அரசியல் வரிப்பணமாக உறிஞ்சிக் கொள்கிறது. இவர்கள் இரண்டு பேரையும் இணைத்து பத்திரிக்கைகள் தர்ம நியாயம் பேசியே கண்ணுக்குத் தெரியாமல் உறிஞ்சிக் கொள்கின்றார்கள்.

விஷயம் அவ்வளவுதான். ஒரு புள்ளி மட்டுமே இது. 

ஒரு விஷயத்தை சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கிறது. அரசியலில் தூய சேவை செய்கின்றவர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள். எழுத்தாளர்களில் பலர் உலகமக்களுக்காக உண்மையாக எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். பத்திரிக்கையாளர்களில் பலர் உண்மையின் சொரூபமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எவரையும் நமக்குத் தெரியாது. தெரியவும் விட மாட்டார்கள். ஏனென்றால் இங்கு தான் அரசியல் நடக்கின்றதே?

ஆனால் சினிமா அதுவும் அல்ல இதுவும் அல்ல. சினிமாவில் உறிஞ்சப்படுதல் மட்டுமே நடக்கின்றது. அந்த சினிமா அரசியலையும் உருவாக்குகிறது. அடிமைத்தனத்தில் சினிமா ஒரு விதம். நான் அவரின் ரசிகன் என்றுச் சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை சொல்பவனுக்கு இருக்கிறது என்று எவரும் யோசிப்பதில்லை. இந்தப் பூமிப்பந்தில் சினிமாவைப் பற்றியும், சினிமாக்காரர்களைப் பற்றியும் தெரியாதவர்கள் ஐந்து பர்செண்டேஜ் இருக்கலாம். மீதமுள்ளவர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணம் சினிமாவில் சென்று சேர்கிறது. 

ஒரு சாதாரண போர்ன் நடிகை 100 கோடிக்கு நகை வைத்திருக்கிறார். அவளின் படத்தைப் பார்ப்பவர்களிடம் என்ன இருக்கிறது?

இன்றைக்கு பதினைந்து கோடி சம்பளம் பெறுகிறார் என்று மீடியாவில் பேசப்படும் சிவகார்த்திகேயன் படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகனின் பாக்கெட்டில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு பணம் இருக்காது. ஆனால் சிவகார்த்திகேயன் அழுகிறார். 

யாருக்காக அழுகிறார்?

ரசிகனுக்காக எவரும் அழுவதில்லை. ரசிகன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அழுகின்றார்கள். 

Thursday, May 3, 2012

மோகமுள் திரைப்படமும் நாவலும்




மோகமுள்ளை இன்று தான் வாசித்து முடித்தேன். நிஷ்டையில் இருந்தாட்போல மனது ஒரு முகப்பட்டு இருந்தது. 

ஒரு நாவல் அதுவும் கருப்பு மையிட்ட எழுத்துக்கள் படிக்கும் வாசகனின் மனதை நிஷ்டையில் கொண்டு போய் விடும் என்று உணர முடிந்தது.

படிக்கும் போதே கவட்டிக்குள் குமுற வைக்கும் எழுத்துக்களையும், படங்களையும் பார்த்துப் பார்த்தே மனது இது போன்ற நாவல்களைப் படிக்க முனைய மாட்டேன் என்கிறது.

ஜெயமோகனின் ஏழாம் உலகம் படித்த போது முகத்தில் அறைந்த, நம்மை அடுத்த இன்னொரு உலகத்தினை அறிந்து கொண்ட அதிர்ச்சி என்னை விட்டு நீங்க இரண்டு நாட்களானது. அடுத்து இந்த நாவல் ! 

நாவல் மனதோடு இழைகிறது. காவிரிக்கரை, பாப நாசம், கும்பகோணம், தஞ்சாவூர் கண்ணை விட்டு அகலமாட்டேன் என்கிறது. திரைப்பட படப்பிடிப்பின் போது கும்பகோணம் எல்லையில் ஒரு நாள் ஷூட்டிங் சென்றிருந்த போது காவிரியின் அழகை காண நேர்ந்தது. சுழித்து ஓடும் காவிரியைக் கண்டாலே மனது அவள் மீது லயித்துப் போய் விடும்.

திருவையாறில் சின்னஞ் சிறு வயதில் அப்பாவின் திதிக்குச் சென்றிருந்த போது கரை நிரம்பி தளும்பிச் சென்ற காவிரின் அகண்ட பருவம் இன்றைக்கும் மனதை விட்டு அகலவே இல்லை. விடிகாலைப் பொழுதில் சற்றே குளிர்ந்த தண்ணீரில் முங்கி எழுந்த அனுபவத்தின் சிலிர்ப்பு இந்த எழுத்தை எழுதும் போது கூட உணர முடிகிறது. 

திஜாவின் எழுத்தில் காவிரியின் கரையோர ஊர்கள் கண் முன்னே நர்த்தனமாடுகின்றன. 

ஞானராஜசேகரனின் திரப்பட மோகமுள்ளைப் பார்த்துப் பார்த்து “அர்ச்சனாவை” யமுனாவாக நினைவில் அச்சாய் பதிந்து போய் விட்டது. அர்ச்சனாவின் சாயலை மனதில் இருந்து நீக்க படாத பாடு பட்டேன். ஒரு வழியான அர்ச்சனா மறைந்து போய் யமுனா ஆக்ரமித்து விட்டாள். பாபு கொண்ட காதலைப் போல யமுனாவின் மீதான காதல் இன்னும் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

திரை யமுனாவிற்கும், நாவல் யமுனாவிற்கு ஏணி வைத்தால் கூட எட்டவே எட்டாது.வாழைத்தண்டு பாதம் என்பதெல்லாம் திரை “அர்ச்சனாவிடம்” இல்லவே இல்லை. அர்ச்சனா ஒரு விதமான சோகத்தைப் பிழியும் முகம் கொண்டவர். ஆனால் திஜாவின் யமுனா மனித உருவில் இருக்கும் இறைவி போன்றவள்.

பாபு தன்னை விட 10 வயது அதிகமான யமுனாவைக் காதலிப்பது தானே முக்கியமான கரு என்றார் நண்பர். இது சரியும் அல்ல, தவறும் அல்ல, விதி விலக்கு என்றார். பாபுவின் காதல் பொருந்தாக் காதல் என்றார்.

காதலில் பொருந்தாக்காதல் என்று ஏதாவது இருக்கிறதா என்ன? 

சிக்கலான பல முடிச்சுக்களை போட்டுப் போட்டு மனிதன் தனக்குள்ளே பல சிக்கல்களை உருவாக்கி வாழ்க்கையை அபத்தமாக்கி வைத்திருப்பதன் நோக்கம் எனக்கு இது வரை புலப்படவே இல்லை.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்