குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label காவிரி மேலாண்மை வாரியம். Show all posts
Showing posts with label காவிரி மேலாண்மை வாரியம். Show all posts

Monday, April 9, 2018

காவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் வீட்டுக் கிணற்றில் பதினைந்தாவது அடியில் நீர் கிடக்கும். அக்கம் பக்கத்து வீட்டு ஆட்கள் குடிக்க கிணற்று நீருக்குத்தான் வருவார்கள். பூட்டைக்கயிறு அடிக்கடி அறுந்து போகும். ரப்பரில் வாங்கிப் போட்டோம். அது பூட்டையில் சிக்கிக் கொண்டு இழுக்க முடியாது. கயிறுதான் நீர் இறைக்க வசதியாக இருக்கும். மழைக்காலங்களில் கிணறு நிரம்பி வழியும். கிணற்று வாய்ப்புறமாக புற்கள் சேர்ந்த மண்ணை சேந்தி எடுத்து வரப்பிட்டு வைப்பார்கள்.

கோவை சிறுவாணி தண்ணீரெல்லாம் அந்தச் சுவைக்கு ஈடாகாது. ஒரே ஒரு கொதியில் சி.ஆர். அரிசி வெந்து சோற்று மணம் வீட்டை நிறைக்கும். ஆறுகளில் வற்றாது நீர் சென்று கொண்டிருக்கும். குளங்கள் நிரம்பி வழியும். இரண்டு போக சாகுபடி. குறுவையும், பெரும்போகமும் நடக்கும். எட்டு மாதங்கள் வேலை இருந்து கொண்டே இருக்கும். குருவை நெல் பெரும்போக சாகுபடி செலவுக்கு கை கொடுக்கும். மாடுகளுக்கு குருவை வைக்கோல் பஞ்சுபோல இருப்பதால் சீக்கிரமாக மென்று தின்று கொழுக்கும்.

இப்படியான நாட்களில் ஊரில் தண்ணீருக்காக அரசு ஆழ்துளைக்கிணறு தோண்டினார்கள். கிணறு வற்றிப்போனது. குடி தண்ணீருக்காக பைப்படிக்குச் செல்ல வேண்டிய சூழல். இது காலத்தின் கட்டாயம் என்றாலும் அந்தப் பைப்படி பல்வேறு சிக்கல்களை அக்கம் பக்கத்தாருடன் உருவாக்கியது. குடிக்க, குளிக்க, துவைக்க தண்ணீர் போதாமல் நல்ல உறவுகளாகத் தெரிந்தவர்களுடன் சண்டை சச்சரவுகள் உருவாகின. ஒரு குடம் அதிகம் பிடித்தால் எண்ணிக்கை பிரச்சினை வந்து விட உறவுகள் தண்ணீருக்காக சங்கடப்படத்தொடங்கின.

ஆழ்துளைக்கிணறுகளால் மரம், செடிகள் பட்டுப்போயின. மழை வளம் குறைய ஆரம்பித்தது. குருவைச் சாகுபடி தானாகவே நின்று போனது. ஆனால் பெரும் சாகுபடி ஒழுங்காக நடந்து கொண்டிருந்தது. காவிரியும் கை விரிக்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரு குடம் தண்ணீர் அதிகம் பிடித்தாலே சண்டைக்குச் சென்றோம். பக்கத்து மாநிலத்துக்காரர்கள் டி.எம்.சிக்கணக்கில் தண்ணீர் திறந்து விட மறுத்தார்கள். அவர்கள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா? சாதாரண மனிதர்கள் தானே? வானத்துத்  தேவர்களுக்குள் கூட சண்டையும் சச்சரவுகளும் உண்டு என்கின்றன மதங்கள்.

நாடெங்கும் தண்ணீருக்கான பிரச்சினைகள் துவங்கின. இது வரலாறு. கடந்து வந்த நிகழ்வுகளைச் எந்த வெட்கமும், சங்கடமும், வருத்தமும் இல்லாமல் வரலாறு சொல்லும். ஆனால் வரலாற்றினை உருவாக்கும் காரணகர்த்தாக்கள் வரலாற்றில் தென்படுவதில்லை. அவர்கள் தான் வரலாற்றினை உருவாக்குகின்றார்கள். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று அறியாது அறியாமையில் சிக்கிக் கிடக்கிறோம். இதோ அவர்களின் நயவஞ்சக சூழ்ச்சிகள்.

விவசாயம் பொய்த்தது, தேவைகள் அதிகரித்தன. அப்போது இஞ்சினியர் படிப்புகள் மக்களின் முன்னே வைக்கப்பட்டது. படித்தவர்களுக்கு பல லகரங்கள் சம்பளங்கள் என்று காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. சாதாரண விவசாயி பொய்த்துப் போன நிலத்தை வைத்து என்ன செய்வது? வாரிசுகள் படிக்கவாவது பயன்படட்டுமே என நிலத்தை விற்க ஆரம்பித்தான். படித்த இரண்டாம் தலைமுறை வாரிசுகள் இப்போது வேலையின்றி நிர்கதியாக நிற்கின்றனர். சொத்துக்களை விற்று படித்தவர்கள் வாங்கும் சம்பளத்தில் இரண்டு செண்ட் பூமியை வாங்க முடியவில்லை. ஏக்கர் கணக்கில் வைத்திருந்தவர்களுக்கு வீட்டு மனையாக இரண்டு செண்ட் கிடைக்காமல் மூன்றாவது மாடியிலோ நான்காவது மாடியிலோ தொங்கிக் கொண்டிருக்கும் ஆகாய வீடுகளை தவணை முறையில் வாங்கி புளகாங்கிதமடைகின்றார்கள். அதை நாகரீகம் என்றுச் சொல்லி மனதை ஆற்றுப்படுத்துகின்றார்கள். அதுதான் சிறந்த வாழ்க்கை என்று அறம் பேசும் பத்திரிக்காக்கள் கூவுகின்றன.

இது மட்டுமா? இன்னொன்றும் இருக்கிறது.

ஆங்கிலேயன் நாட்டை பிடித்துக் கொண்ட போது, விவரமாக ஆங்கிலம் கற்றுக் கொண்ட ஜாதியொன்று அட்டையாக அவர்களிடம் ஒட்டிக் கொண்டது. எங்கு பணம் இருக்கோ அங்கு சென்று ஈசிக் கொண்டு உறிஞ்சுவதை வாடிக்கையாகக் கொண்ட கூட்டம் அது. கோவில்களை பிடித்துக் கொண்டது.  இந்தியாவெங்கும் அதிகாரத்தில் நீக்கமற நிறைத்தன அக்கூட்டம். அதில் ஒரு சிலரை வைத்துப் பக்தியை பரப்பியது. கோவிலுக்குள் கூட்டத்தை வர வைத்து வசூலித்துக் கொண்டது. 

குலதெய்வ வழிபாட்டினை விட்டு விட்டு, காசு கொடுக்கும் தெய்வமென்ற கோவிலுக்கு படையெடுத்து இருக்கும் கொஞ்ச நஞ்ச பொருளையும் இழக்க ஆரம்பித்தார்கள். குல தெய்வங்கள் காணாமல் போயின. ஊரெங்கும் கோவில்கள் முளைக்கத்துவங்கின. வசூலிக்க ஆரம்பித்தன. இதற்கிடையில் வேற்று மதங்கள் வேறு நுழைய மக்களுக்கு எதைத்தின்றால் பித்தம் தெளியும் எனப் புரியாது எல்லாவற்றையும் தின்னத் தொடங்கினார்கள்.

இது மட்டும் போதாது என கூத்தாடிகள் வேறு கூத்தாடினார்கள். கூத்தாடிப் பெண்களின் தொடைகளிலும், குண்டிகளிலும், முலைகளிலும் கலைகளை வளர்த்து தலைவர்கள் உருவாகினர். பெண்களின் ஆடை அவிழ்ப்புகளை கலை என்றார்கள். மறை பொருள் வெளிவரும் திகைப்பில் தேணுண்ட நரியாய் மக்கள் மாறிப்போயினர். மக்கள் திரைகளின் முன்னே கை நீட்டி, முறுக்கி, வாய்கோணி, தொண்டை வறண்ட காட்டுக்கத்தல் வசனங்களில் மூழ்கிக் கிடந்தனர். அரசியல் காமத்தோடு இயைந்து மக்களை மனமயக்கி ஆட்சித்தலைமையில் உட்கார்ந்தார்கள் தலைவர்கள்.  தங்கள் கோவணத்தைக் கூட அறியாமல் பிடுங்கிக் கொண்டிருக்கும் தலைவர்களின் வசீகரத்தில் மூழ்கிக் கிடந்தனர்.

காசிருந்தால் போதும், கடைத்தேறி விடலாமென்ற ஆவலில் படித்தார்கள் கிராமத்தார்களின் வாரிசுகள். அங்கேயும் தங்கள் கைவரிசையைக் காட்டி அட்டை போல உட்கார்ந்தார்கள் அந்த உறிஞ்சு கூட்டம். இப்போது ஒரு கூத்தாடி கிறிஸ்துவர்களையும், முஸ்லிம்களையும் எங்கள் ஜாதி என்கிறது. கொஞ்சமே கொஞ்சமாய் விழித்துக் கொண்டார்கள் என்பதால் உடம்பு முழுவதும் அக்னியாய் எரியும் அந்தக் கூட்டத்தாருக்கு பித்தம் அதிகமானதால் பல்வேறு சூழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றார்கள். 

காலத்தின் கோலம் மட்டுமல்ல ஒரு சில மனித குல நாசக்காரர்களின் வஞ்சக எண்ணித்திலே காசு பண்ணும் ஆசையினாலே இந்தியா அழிபடத்தொடங்கியது. இமயம் முதல் குமரி வரை குளிர் நீராலே குளிர்ந்திருந்த இந்தியாவும், அதன் மக்களும் ஒரு சில உயர் ஜாதி நாசக்காரர்களின் பண ஆசையினாலே பிரிபடத் தொடங்கினார்கள். அரசியலில் அவர்கள் போய் உட்கார்ந்தார்கள். பணமிருந்தால் மட்டுமே அதிகாரம் என்ற நிலைக்கு அரசியலைக் கொண்டு வந்தார்கள். ஏழைகள் அதிகாரத்தினருக்குச் செருப்புத் தொடைத்துப் போடும் வேலையைச் செய்ய வைத்தார்கள். அரசாங்கத்தில் ஊழல் பெருத்துப் போக வைத்தார்கள். நீதித்துறையிலும் கூட ஊழலைப் புகுத்தினார்கள். நீதிபதிகளை கேள்வி கேட்கக் கூடாது என்றார்கள். எல்லையற்ற அதிகாரம் அழிவுகளைச் செய்ய ஆரம்பித்து விட்டதை, ‘சட்டப்படி தான் எல்லாமும் நடக்கும்’ என்று வாய்ச்சொல்லில் சட்டம் படித்தார்கள். எதிர்த்தால் ஆண்டி இந்தியன் என்றார்கள். போராட்டங்களை தேசத்துரோகங்கள் என்றார்கள். 

இளைஞர்களை உடல் வலிமை தரும் விளையாட்டுக்களில் இருந்து பிரித்து ஏமாற்றினார்கள். அதுதான் வீரம் என்றார்கள். அதுதான் விளையாட்டு என்றார்கள். உடல் வலி குறைந்து போய் வெம்பிப்போன பிஞ்சுகளாய் மாறினர் இளைஞர்கள். 

கையிலிருக்கும் காசைக்கூட செல்லாது என்றார்கள். வங்கியில் போட்டால்  கைது செய்ய மாட்டோம் என்றார்கள். வங்கியில் பணத்தைப் போட்டால் மொத்தமாக திருடும் கூட்டத்தை வைத்து திருட வைத்து வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். வங்கிகள் மூழ்கிப் போகப்போகின்றன என்கிறார்கள். அதற்கு வரி, இதற்கு பிடித்தம் என்கிறார்கள். இனி என்ன ஆகுமோ தெரியாது எனக் கலங்கி நிற்கிறது பரிதாபகரமான இந்தியமக்கள் கூட்டம். இருக்கும் பணத்தை எல்லாமும், சொத்துக்களையும் பறிமுதல் செய். இந்தியனை ஏழையாக்கு, அதன் பின் அடிமையாக்கு என்கிற மந்திரம் ஜெயிக்க பல்வேறு சித்துக்களை செயல்படுத்துகிறது அந்தக் கூட்டம்.

இது ஒரு பக்கமிருந்தாலும் இன்னொரு கூட்டம் மொத்தமாகப் பறித்துக் கொண்டு விடுகிறது.

எல்லாவற்றுக்கும் ஆசைப்படு, ஆசைப்பட்டதை எல்லாம் என்னிடம் கொடுத்து விட்டு என்னுடன் அமர் என்கிறது ஒரு கூட்டம்.  அது யோகக்கலையினைக் கற்றுக் கொடுத்து உடல் வலிமை பெற வைக்கும் என்று கூறுகிறது. உடல் வலி இழந்து, நிர்கதியாய் நிற்போரை, மனமகிழ் கொள் என மொட்டை அடித்து புண்ணிய மாக்களாக ஆக்குகின்றார்கள். 

இதோ உங்களைக் காப்பாற்ற வந்து விட்டார் மகிமைமிக்கவர்கள் என்றார்கள். வங்கிக் கணக்குகளில் லட்சங்களை போடுவோம் என்றனர். நல்லாட்சி தருவோம் என்றார்கள். இதோ அவர்கள் தரும் நல்லாட்சிக்கு நற்சாட்சி கீழே

*We were taxed for earning money.*
*We are taxed for spending money.*
*We were taxed for hoarding money.*
*We are taxed for withdrawing money.*
*We are taxed for depositing money.*
*We are taxed for service money*
*We are taxed (cess)for education*
*We are taxed for Swatch Bharat*
*We are taxed for purchase*
*We are taxed for sales*
*We are taxed for manufacturing*
*We are taxed for public Utility*

_*Earning is a crime.*_

_*Saving is a crime.*_

_*Spending is a crime.*_

_*Donating to Political Parties is the only good act.*_


இதுதான் நல்லாட்சி. இருக்கும் பணத்தை எல்லாம் நாட்டுக்குக் கொடு என்கிறது அந்த நல்லாட்சி. நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் நீ நாசமாகப் போ என்கிறது அந்த ஆட்சி. நீ இருந்து என்ன புண்ணியம்? நாடு நன்றாக இருக்க வேண்டும் என்கிறது அந்த நல்லாட்சி. மக்கள் நன்றாக இருந்தால் நாடு நலம் பெறும் என்பதை தங்களுக்கு வசதியாக மாற்றிக் கொண்டு மூளைச்சலவை செய்தார்கள். புத்தி தெளிந்தோருக்கு பித்தனென்று பட்டமிட்டார்கள். அவர்களை தேசத்துரோகிகள் என்றார்கள்.

உடல் வலி இழந்து, உணவு விஷமாகிப் போனது. மருத்துவத்திற்குச் சென்றால் பணக்காரர்களுக்கு உடல் உறுப்புகளைத்தானம் கொடுக்க புதிதாக மூளைச்சாவு என்றுச் சொல்லி உறுப்பையும் அறுத்தெடுக்கும் அற்புதமான வைத்தியத்தை தர வைத்தார்கள்.

வடக்கே சாமி சிலைக்கே நாமே அர்ச்சிக்கலாம். தெற்கே என்றால் சம்பிரதாயம் குலைந்து போகும் என்று கூப்பாட்டுக் குரல் கேட்டு நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்குகின்றன. தீண்டாமை குற்றம் என்ற சட்டம் கோவிலுக்குள் செல்வது தீண்டாமை என்கிற போது கை பொத்தி மெய் மூடி நிற்கிற அதிசயத்தைப் பார்க்க வைத்தார்கள். கேள்வி கேட்போருக்கு மூளை இல்லை என்றார்கள். சாமி குத்தம் என்றார்கள். இந்த வரலாற்று சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சிக்கு இரையாகியது மொத்த இந்தியாவும். அதில் முன்னணியில் இருப்போர் தமிழர்.

பொங்கிய புனல்கள் எல்லாம் வற்றிப் போயின. வற்றாத புனல்களை வற்ற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பூமிக்குள் இருக்கும் தண்ணீரையும் உறிஞ்சி எடுத்து பாலைவனமாக்க பல்வேறு வசனங்களைப் பேசுகின்றார்கள். காவிரி ஆற்று நீரை அளவு குறைத்தார்கள். இருக்கும் நிலத்தடி நீருக்கும் நாட்டின் வளர்ச்சி என்கிற பெயரில் வேட்டு வைத்தார்கள். சுடுகாடாக்கி ஒரு சமூகத்தை அழித்துவிடும் அற்புத திட்டம் இதென்று காசுக்கு அடங்கும் கூட்டத்தாரை வைத்து நாட்டை வளமாக்கும் அற்புதங்கள் நிகழப்போகிறது எனக் கூப்பாடு போடுகின்றார்கள். பதவியில் இருப்போரின் பலவீனங்களால் பறிபோகிறது தமிழர் பூமி வளம். 

ஸ்ரீலங்காவில் மண்ணுக்குள் புதைந்து போன தமிழர்களின் கனவுகள் போல இற்றுப் போன பிணங்கள் நடமாடும் இடமாக மாறப்போகின்றன தமிழர்கள் வாழ்க்கை.

தமிழர்களும் தமிழும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு புதைக்கப்பட்ட வரலாறாகப் போகும் நிகழ்வுகள் நடந்து கொண்டேஇருக்கின்றன. தமிழர்கள் நடிகர்கள் தடவும் நடிகைகளின் தொடைகளின் வனப்பில் கனவுகளைக் கண்டுகொண்டு கிடக்கின்றார்கள். இன்று கிடைக்கும் காசில் டாசுமாக்கில் போதையேற்றி நடுச்சாலையில் உரண்டு கொண்டிருக்கிறது தமிழர் சாதி. 

மாடு பிடிக்கப் பொங்கிய கூட்டம் இன்று தண்ணீர் வளம் பொங்க போராடாது சோம்பிக் கிடக்கிறது. இருக்கும் காலம் வரை குடிக்க ரம் உண்டு என்கிறது ஒரு கூட்டம். கை தட்டி மகிழ்ந்து, ஆடும் முலைகளோடு சேர்ந்தாட கிரிக்கெட் எனும் விளையாட்டு இருக்கிறது என்று இளிக்கிறது ஒரு கூட்டம். கூட்டம் கூட்டமாக பிரிந்து கிடக்கும் தமிழர் சாதி சேர்ந்து விடக்கூடாது என்று கொக்கரிக்கிறது மற்றொரு கூட்டம். 

திரிந்த மனம் தெளிந்து நீர் எது கானல் எது என்ற விபரம் தெரிவதற்குள் காணாமல் போய் விடும் தமிழர் சாதி தற்போது காணாமல் போய்க் கொண்டிருக்கும் காவிரி போல.