குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Wednesday, March 24, 2021

கல்வி : திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகம் - குறைந்த கட்டணத்தில் மத்திய அரசின் கல்வி

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/DHPh0kTLirk33raVomRu3K 

மேலே இருக்கும் வாட்சப் இணைப்பில் இணைந்திருங்கள். நல்ல கல்வி, குறைந்த  கட்டணம்,   மத்திய அரசின் வேலை வாய்ப்பில் முன்னுரிமை ஆகிய தகவல்கள் அப்டேட் செய்யப்படும். 

* * * 

திண்டுக்கல்லில் இயங்கி வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் கல்வி பற்றிய விபரம் கீழே. மிகக் குறைந்த கட்டணம், நல்ல கல்வி, தேர்ந்தெடுக்க பல படிப்புகள்.

  • Ph.D.
  • M Phil Programmes (Two Semester)
    • M.Phil. Tamil
    • M.Phil. English
    • M.Phil. Rural Development Studies
    • M.Phil. Research & Development
    • M.Phil. Development Sociology
    • M.Phil. Gandhian studies and Peace Science
    • M.Phil. Economics
    • M.Phil. Development Administration
    • M.Phil. Women's Studies
    • M.Phil. Chemistry
    • M.Phil. Computer Science
    • M.Phil. Education
    • M.Phil. Mathemaics
    • M.Phil. Physics
    • M.Phil. Botany/Zoology/Micro Biology
    • M.Phil. Home Science
    • M.Phil. Geology
    • M.Phil. Futurology
  • Post Graduate Programmes (Four Semesters)
    • M.A. Tamil & Indian Literature
    • M.A. English & Communicative Studies
    • M.A. Hindi
    • M.A. Gandhian studies and Peace Science
    • M.A. Rural Development Studies
    • M.A. Economics
    • M.Com. Cooperative Management
    • M.Sc. Home Science Extension and Communication
    • M.Sc. Mathematics
    • M.Sc. Physics
    • M.Sc. Chemistry
    • M.Sc. Botany
    • M.Sc. Zoology
    • M.Sc. Food Science and Nutrition
    • M.Sc. Textiles and Fashion Design
    • M.Sc. Microbiology
    • M.Sc. Geo-informatics
    • M.Sc. Applied Geology and Geomatics
  • PG Diploma Programmes (Two Semesters)
    • Sanitary Inspector's course
    • Spatial Technologies
    • Applied Gerontology
    • Yoga Education
    • Epigraphy
    • Sustainable Social Development
  • 5 Year Integrated Programme (Ten Semesters)
    • M.A. Development Administration (5 Year Integrated)
    • M.A. Sociology (5 Year Integrated)
  • Under Graduate Programmes (Six Semesters)
    • B.Sc. Mathematics
    • B.Sc. Physics
    • B.Sc. Chemistry
    • B.Sc. Computer Science
    • B.Sc. Home Science
    • B.Sc. Micro Biology
    • B.Sc. Textiles and Fashion Design
    • B.Sc. Geology
    • BBA
    • B.Com. Cooperation
    • B.A. Economics
  • Diploma Programmes (Four Semesters)
    • Agriculture
    • Textile Technology
    • Videography
    • Yoga Education
  • Professional Courses (AICTE/ICAR UGC NCTE Approved)
    • B.Tech. Civil Engineering (8 Semester)
    • B.Tech. Civil Engineering (Lateral Entry)(6 Semester)
    • M.Tech. Renewable Energy
    • B.Sc. Agriculture (Hons.) (8 Semester)
    • MCA (6 Semester)
    • MBA
    • B.Ed. (Two years)
    • B.Sc., B.Ed.
    • M.Ed. (Two years)
  • Skill Based Programmes
    • B.Voc – Farm Equipments Operation and Maintenance
    • B.Voc – Footwear and Accessories Design
    • B.Voc – Food Processing
    • B.Voc – Dairy Production and Technology
    • B.Voc - Organic Agriculture and Enterprises Development
    • B.Voc - Renewable Engery
    • B.Voc - Multimedia Production Technology
    • B.Voc - Food Testing and Quality Evaluation
    • D.Voc – Refrigerator and Air conditioner(2 Semesters)
    • D.Voc – Software Development(2 Semesters)
    • Diploma in Two Wheeler Mechanism and Maintenance
    • Certificate Course in Two Wheeler Technician(2 Semesters)

    இங்கு ஹாஸ்டல் வசதியும் மிகக் குறைந்த கல்வி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஸ்காலர்ஷிப் வசதியும் உண்டு.

    பிஎஸ்ஸி கல்விக்கு கீழே இருக்கும் படத்தில் பாருங்கள். வருடத்திற்கு 12000க்கு மட்டும் கல்வி கட்டணம். மத்திய அரசு வழங்கும் ஸ்காலர்ஷிப் மூலம் எளிதில் இந்தக் கல்வி கட்டணத்தைக் கட்டலாம். பெற்றோருக்கு எந்த வித பொளாதார சிரமம் தராமல் எளிதில் படிக்கலாம். 

    தனியார் கல்வி நிலையங்களில் படிக்க முடியாத பொருளாதார பிரச்சினை இருக்கும் மாணவர்கள் இங்கு படிக்கலாம்.

    பி.டெக் சிவில் இஞ்சினியரிங்க் இங்கு படிக்கலாம்.

    இந்த பல்கலைக் கழகத்தின் இணையதளம் கீழே இணைப்பில் இருக்கிறது.  

    ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். வரும் வருடம் படிப்புக்கு செய்தி வரும். அப்போது அவசியம் பதிவு செய்யுங்கள்.

    https://www.ruraluniv.ac.in/home

    https://www.portal.ruraluniv.ac.in

Monday, March 22, 2021

கல்வி : சென்னை ஐஐடி - ஐந்து வருடம் எம்.ஏ படிப்பு - பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் படிக்கலாம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிலையங்களில் படிக்க நுழைவுத் தேர்வு எழுதி பாஸானால் மிக மிகக் குறைந்த கட்டணத்தில் கல்வி படிக்கலாம். மத்திய அரசின் பணிகளுக்கு படித்து முடித்ததும் வேலை வாய்ப்பும் பெறலாம்.

தமிழக மாணவர்களுக்கு மறை பொருளாய் இருந்த அற்புதமான இந்த தகவல்களை இனி ஒவ்வொன்றாய் எனது பிளாக்கில் வெளியிட உள்ளேன்.

ஏழை மாணவர்களும், படிப்பின் மீது உச்சம் தொட விரும்பும் மாணவர்களும், கல்விக் கட்டணம் கட்ட இயலாமல் இருக்கும் புத்திசாலி மாணவர்களும் இந்த தகவல்களைப் பயன்படுத்திப் படிக்கவும். 

வெற்றி நமதே அது தமிழர்களுக்கே நிரந்தரமாய் இருக்க வேண்டும்.

 * * *

சென்னை ஐஐடியில் இருக்கும் தனிப்பட்ட பிரிவில் வழங்கக் கூடிய எம்.ஏ படிப்பினை பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி வென்று அனுமதி பெற்றுப் படிக்கலாம். கீழே விபரங்கள் உண்டு. படித்துப் பார்க்கவும். நண்பருக்குள் பகிரவும்.

வாழ்க வளமுடன்

தூத்துக்குடி ஸ்டீபன்

கோவை தங்கவேல் 

வாட்சப்பில் அப்டேட்டுகள் பெற கீழே இருக்கும் வாட்சப் குருப்பில் இணையவும்

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/DHPh0kTLirk33raVomRu3K

* * * 



சென்னை - ஐஐடியில் DEPARTMENT OF HUMANITIES AND SOCIAL SCIENCES

Founded in 1959 the Department of Humanities and Social Sciences is one of the oldest in IIT Madras.

The Department’s essentially inter-disciplinary nature is its distinguishing factor. This allows students to develop an appreciation for a very diverse set of fields, including Development Studies, Economics, English Studies, Environmental Studies, History, International Relations, Philosophy, Political Science, and Sociology. The Department offers both Master’s and Doctoral programmes, as well as electives for B.Tech and M.Tech students.

Coupled with its multi-disciplinary background, the Department boasts of a highly diverse and experienced faculty. It has an excellent student-teacher ratio, providing opportunities for academically intense learning.

Equipped with state of the art facilities in a serene campus, the department offers an enriching academic environment.

 * * *

The Humanities and Social Sciences Entrance Examination or HSEE is a national level entrance test conducted every year by Indian Institute of Technology Madras for admission to the master programme offered by the Department of Humanities and Social Sciences (HSS) of the institute. 

* * *

The Department’s unique five year integrated programme, launched in 2006, leads to Master of Arts (M.A.) degree in two major streams – Development Studies and English Studies. With this programme, IITM is poised to cross a milestone in fulfilling its role in higher education in liberal arts and social sciences.

The M.A. programme reflects the multi-disciplinary nature of the fundamental concepts in humanities and social sciences. During the first two years, the students are introduced to a variety of common subjects related to all the two major disciplines. Such a curriculum aims to produce masters in Humanities and Social Sciences to cater to the growing demands of academia, government, public and private sector enterprises, NGOs, and other organisations. The programme also provides an opportunity for our students and faculty to be in close and constant touch with those of the Engineering, Sciences and Management departments.

 * * *
 
Admission Process
 

The students for the integrated Masters program at IIT-M are selected through the Humanities and Social Sciences Entrance Examination (HSEE) conducted by IIT Madras every year in the month of May. The exam is highly competitive and only about 2 percent of the candidates taking the exam are finally selected for the course. The present intake of the MA program is 45 students per year.

  ***
 

 



Wednesday, July 22, 2020

ஏழைக் கல்வித்தந்தையர்களின் துயர் துடைத்த உயர் நீதிமன்றம்


2020 மார்ச் மாதம் 24ம் தேதி முதல் இந்தியா முடங்க ஆரம்பித்தது. இது நாள் வரை என்னவென்றே புரிந்து கொள்ள இயலா நோய்க் கிருமியின் தாக்கத்தால் மனிதர்களின் வாழ்க்கை முடங்கியது. இந்தியாவின் பொருளாதாரமே சரிந்து போனது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், உலகிலேயே பஞ்சைப் பராரிகளாக விளங்கும் சிலருக்கு தமிழகத்தில் இருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அவர்களின் துயரைத் துடைத்து உதவி செய்திருக்கிறது. அதைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

தனியார் கல்வி நிறுவனங்கள் பொதுசேவை செய்கிறோம் என, டிரஸ்ட் பதிவு செய்து, அதன் மூலம் பள்ளி நடத்த அனுமதி பெற்று நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு தனியார் பள்ளிகளும் மக்களுக்குச் சேவை செய்து, ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கின்றன என்பதை நாமெல்லாம் அறிவோம். இதை அரசுகளும் அறியும். நீதிமன்றமும், நீதி தேவதையும், நீதி தேவதையின் சார்பாக மைலார்டுகளும் (என் கடவுளே) அறிவார்கள். மைலார்டுகளுக்கு உண்மையின் வடிவாக உண்மையை மட்டும் எடுத்துச் சொல்லி, பணி செய்து வரும் வக்கீல் புண்ணிய ஆத்மாக்களும் அறிவார்கள்.

தினக்கூலி பெறும் கூலியை விட குறைவாக சம்பளம் பெறும், தனியார் கல்வித் தந்தைகள் கல்விச் சேவை செய்து ஏழைகளாக பி.எம்.டபிள்யூ, ஆடி கார்களில் மட்டுமே வருவதைக் கண்டு நாமெல்லாம் கண்ணீர் உகுத்து வருகிறோம். அவர்களுக்கு ஹெலிகாப்டர், விமானங்கள், கப்பல்கள் வாங்க வக்கில்லையே என பெற்றோர்களும், அரசுகளும், நீதிமன்றங்களும், கல்வியாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், பத்திரிக்கைகளும், டிவிக்களும் வருத்தத்தில் இருந்து வருகின்றதையும், அவர்களின் வேதனைகளைக் கூட எழுத்தால் வடித்து விடக் கூடியதுமானதாகவும் இல்லை என்கிற வேதனை எனக்கும் கூட உண்டு.

அதுமட்டுமல்ல தனியார் கல்வி நிலையங்கள் பல கோடி மதிப்பு வாய்ந்த பாடப்புத்தகத்துக்கும், நோட்டுக்கும் மட்டும் மிகக் குறைந்த பட்சம் 7000 ரூபாய் வாங்குகிறார்கள். கேப்பிடேசன் கட்டணம், அட்மிஷன் கட்டணம், அதற்கு, இதற்கு கட்டணம் என பெற்றோர்களிடம் மிக மிகச் சொற்ப அளவிலான கட்டணத்தினைப் பெற்று, பள்ளி நடத்த வாங்கிய நிலத்தின் கடனையும், பள்ளிக்கட்ட கடனையும் கட்டி வருகின்றார்கள். கடன் பெற்றாவது கல்விச் சேவை செய்ய வேண்டுமென்ற அவர்களின் நோக்கத்திற்கு ஈடு இணை ஏதுமுண்டா இவ்வுலகில்?

பொதுச் சேவை செய்தாலும், அதன் தரம் தாழ்ந்து விடக்கூடாது என்ற உயர் நோக்கத்திற்காக, அவரவர் குடும்ப டிரஸ்டுகளுக்கு கடனில்லா சொத்துக்கள் உருவாக்கி பெரும் துன்பப்படுகின்றார்கள். இன்னும் அனேக பிள்ளைகளுக்கு கல்விச் சேவை ஆற்ற, ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் கல்வித்தந்தைகள், பெற்றோர்கள் கட்டும் அந்தச் சிறிய தொகையில் மிச்சம் பிடித்து, மேலும் மேலும் இடங்களையும், கட்டடங்களையும் கட்டி கடனாளி ஆகின்றதை நினைத்து வேதனை உண்டாகிறது.

கல்வித் தந்தைகள் தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாதம் நான்கைந்து லட்சங்கள் சம்பளமாகவும், குழந்தைகளின் பெற்றோர்களிடம் வசூலிக்கும் பணத்தில் செலவு போக, மீதம் வரும் தொகையை ஒவ்வொரு பெற்றோருக்கும் பங்கு பிரித்துக் கொடுத்து வருவதையும் நாமெல்லாம் அறிவோம்.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற நிலை தெரியாதபோது, வறுமையில் வாடி, கட்டணம் மூலம் வரும் லாபத்தில் பெற்றோருக்கும் பங்கு பிரித்துக் கொடுக்கும் ஒப்பற்ற கல்வித் தந்தையர்களின் துயர் தீர்க்க, ஒவ்வொரு பெற்றோரும் கல்விக் கட்டணத்தைச் செலுத்துக என கடைசி தேதி அறிவிக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பினை நாமெல்லாம் பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும்.

இந்திய மக்கள் பெரும்பான்மையாக ஏழ்மையில் இருந்தாலும், கல்விச் சேவைகளை வழங்கும் தனியார் கல்வித் தந்தைகளை இழந்து விடக்கூடாது என்பதற்காக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஏற்றுக் கொண்டு, நாமெல்லாம் உடனடியாக கட்டணத்தில் 40 சதவீதத்தை கட்டி விட வேண்டும்.

மூடிக் கிடக்கும் பள்ளிதானே, எப்போது திறக்கும், என்னென்ன பாடங்கள் இருக்கும் என்று தெரியாத நிலையில் இருந்தாலும், அதுபற்றி பெற்றோர்கள் கவலைப்பட்டு விடக்கூடாது என்ற கவலையில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சாலச் சிறந்தது.

அரசு கட்டணம் வாங்க கூடாது என்று உத்தரவிட்டாலும், நீதிமன்றம் சொல்லி விட்டால் மேல் அப்பீலே கூடாது என்ற நிலையில் அரசு ஏதும் ஏழைக் கல்வித்தந்தையர்களுக்கு உபத்திரவம் கொடுத்து விடக்கூடாது என பெற்றோர்கள் கவலைப்பட்டு வருகின்றனர். ஆகவே ஆளும் அரசு சுப்ரீம் கோர்ட்டில் டாஸ்மாக்குக்குச் சென்ற போல அப்பீல் போய் விடக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.

வேலையில்லை, சம்பளம் இல்லை, தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன, சம்பளம் வாங்கியவர்களில் பாதிசம்பளம் கூட கிடைப்பதில்லை, விலை வாசி உயர்ந்து விட்டது, இந்தியர்களின் வீட்டில் பணம் இல்லை, அரசிடமும் பணம் இல்லை என்ற போதிலும் நாமெல்லாம் அடிக்கடிச் சொல்லும் மாதா, பிதா, குரு எனும் வரிசையில் மூன்றாவதாக வரும் குருவான ஆசிரியர்கள் உலாவும் பள்ளிக்கூடங்களை நடத்தும் கல்வித் தந்தையர்களுக்கு, தம் உயிரையோ அல்லது பட்டினியாக கிடந்தோ  காசு சேர்த்து, கட்டணத்தைக் கட்டி விட வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவினை சிரமேற்கொண்டு கடைபிடித்து விட வேண்டும்.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். தனியார் கல்வி நிலையங்களில் படித்த மாணாக்கர்களின் சம்பளத்தில் சுமார் 70 சதவீதத்தை, செய்நன்றி மறக்க கூடாது என்பதற்காக கல்வித் தந்தையர்களின் அக்கவுண்டில் கட்டி விட வேண்டுமென அரசோ அல்லது நீதிமன்றமோ உத்தரவிட்டால், அது உலகத்திற்கே முன்னுதாரனமாக இருக்கும். செய்நன்றி மறவாமைக்கு திருவள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் அல்லவா? 30 சதவீதம் போதாதா உயிர் வாழ மனிதர்களுக்கு?

பனிரெண்டாம் வகுப்பு ரிசல்டினை முன் அறிவிப்பு இன்றி அறிவித்த பள்ளி அமைச்சகத்தின் செயற்பாடும், அதைத் தொடர்ந்து, என்று திறக்கப்படும் என்று தெரியாத நிலையில் இருக்கும் கல்லூரிகளுக்கு அட்மிஷன் பெற அனுமதி வழங்கி உத்தரவிட்ட வேகமும் எதனாலும் ஒப்பிட்டு விடக்கூட முடியாத அப்பற்ற அரசின் சாதனை. 

இதையெல்லாம் தவறான கண்ணோட்டத்துடன் கேள்வி கேட்ட எதிர்கட்சி டிவிக்காரர்களுக்கு பதில் சொல்லாமல் சென்ற அமைச்சரின் செயலை நாமெல்லாம் இருகரம் கொண்டு கரவோசை செய்து பாராட்டி மகிழ வேண்டும். ஒரு சரியானச் செயலைச் செய்கிற போது, எதிர்கட்சிகள் அதையும் குற்றம் என சொல்லும் கீழ்த்தர அரசியலைச் செய்யக்கூடாது. அது அறமல்ல அல்லவா நண்பர்களே?

ஒரு சிலர் தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு டிசி வாங்கி, அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்து விடக்கூடும் என்பதனால் அதற்கொரு தடையினை மாநில அரசு வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். 

இன்னும் ஆறேழு மாதங்கள் தானே இருக்கின்றன, அதற்கு எதற்கு தனியார் பள்ளியில் நம் குழந்தை படிக்கணும் என்று எவரும் நினைத்து, கல்வித் தந்தையர்களை இன்னும் துன்பத்தில் ஆழ்த்தி விடக்கூடாது என்பதை அரசும், மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

செல்போன் பார்த்தாலே கண் கெட்டுப் போகும், அதிக நேரம் கணிணி பார்க்காதீர்கள் என்று தினமலர் அடிக்கடி கட்டம் கட்டி செய்தி போடுவார்கள். மருத்துவர்கள் எச்சரிக்கை விடுப்பார்கள். ஆனால் பாருங்கள், ஆன்லைனில் கல்வி கற்கும் போது செல்போனும், கணிணியும் மனித குலத்துக்கு உதவி செய்யும் பொருளாய் மாறிப் போன அதிசயத்தை. மத்திய அரசு ஆன்லைன் கல்வி கற்க, வழிமுறைகளை வெளியிட்டு மக்களை மகிழ்விக்கிறது.

இத்தனை ஆண்டுகாலம் பொய் பிரச்சாரம் செய்து வந்த தினமலர், மற்றும் கண் மருத்துவர்களைக் கைது செய்து, தண்டனை பெற்றுத் தர சமூக செயற்பாட்டாளர்களும், கல்வியாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டுமென அடியேன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நீதிமன்றம் இப்படியான பொய்ச் செய்தியை வெளியிட்ட தினமலரையும், மருத்துவர்களையும் கைது செய்ய, தானாக முன்வந்து வழக்கை  பதிவு செய்து விசாரித்து, தண்டனை அளிக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் அடியேனும் கேட்டுக் கொள்கிறேன்.

செல்போன் பார்த்தாலும், கணிணியில் நீண்ட நேரம் படித்தாலும், பார்த்தாலும் கண்கள் என்றைக்கும் கெட்டுப் போகாது என்று இப்போதைக்கு நாமெல்லாம் அறிந்து கொண்டோம், கொரானா நமக்களித்த சிறப்புக் கொடையென இதைக் கருத வேண்டும். ஆகவே நாமெல்லாம் கொரானாவுக்கு நன்றி சொல்லி விடுவோம். செய்நன்றி மறக்க கூடாது அல்லவா?

இப்படியாக ஏழைகளான தனியார் கல்வித் தந்தைகளைக் காப்பாற்றிய அரசினையும், நீதிமன்றத்தினையும், நீதியையும் நாமெல்லாம் தெய்வமென வணங்கி மகிழ வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, July 4, 2019

தரம் கெட்ட ஆசிரியர்கள்

திருமூலரின் திருமந்திரத்தைப் படித்து அறிந்தவர்கள் கடவுள் மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள். 'நீயே கட உள்' என்று சொல்லி விட்டார். யார், யார், எப்படி, எவ்வாறு திருடுவார்கள், பொய் சொல்வார்கள், அயோக்கியர்களின் இலக்கணம் பற்றி விரிவாக எழுதி வைத்திருக்கிறார். அதையெல்லாம் படித்தீர்கள் என்றால் தப்பித்து விடலாம். 

ஆன்மீகவாதிகள் மட்டும் இல்லையென்றால், அமைதியாக இருக்கும் இந்த உலகம் என்பதினை அறுபது எழுதுபதுகளில் இருக்கும் அனுபவசாலிகள் புரிந்து கொள்வார்கள்.

உடனே, 'நீ மட்டும் உனது பிளாக்கில் எவரோ ஒரு சாமியாரின் போட்டோவை வைத்திருக்கிறாயே அது மட்டும் என்னவாம்?' என்று கேட்கத் தோன்றும். அவ்வாறு கேட்கவில்லை என்றால் தான் அது அதிசயம். எனது குரு ஏழைகளுக்கு உணவிட்டவர். நோய்களுக்கு மருந்து கொடுத்தவர். மலைவாழ் மக்களுக்கு ஏராள உதவி செய்தவர். இன்றைக்கு மதம் சார்ந்து அவர் எவருக்குமான உபதேசங்களை வழங்க வில்லை. தியானம், உணவு இரண்டு மட்டுமே அவருக்கான உபதேசமாக இருக்கிறது இன்றும். 

எளிமை, அமைதி, ஆனந்தம், அருட்பாதுகாப்பு ஆகியவை கிடைக்கிறது. அவரின் ஜீவ சமாதியில் மனது ஆர்பாட்டம் அற்று அமைதியடைகிறது.  மனம் அமைதியானால் எல்லாமும் கிடைத்திடும். அதுவே வெற்றியின் முதல் படி என்று நினைக்கிறேன். ஆகவே அவர் என்னைச் சுற்றிலும் இருக்கிறார் என்பதாக நினைக்கிறேன். எனது குரு அமைதியானவர். அது ஒன்றே அவரிடமிருந்து எனக்கு கிடைக்கும் வரம் என நினைக்கிறேன். ஆகவே அவரின் புகைப்படம் எனது பிளாக்கில் இருக்கிறது. 

நிற்க.

நான் விவேகானந்தர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த போது, முழு ஆண்டுத் தேர்வு நேரங்களில் தலைமை ஆசிரியர் என்னிடம் கணிணி புத்தகங்களைக் கொடுத்து நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து தருமாறு கேட்பார். ஆனால் நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வராது. ஏனென்று விசாரித்தால் எந்தப் புத்தகக் கம்பெனி அதிக டிஸ்கவுண்ட் தருகிறதோ அதற்குத்தான் ஆர்டர் என்றொரு நியதியை பள்ளியில் வைத்திருந்தார்கள். தனியார் பள்ளி நடத்துவது என்பது அவ்வளவு சிறப்பானதல்ல. ஆனால் வெற்றி சூட ஒரு சில வழி முறைகள் உள்ளன. வருடத்தின் ஆரம்பித்திலேயே கல்லா கட்டி விட வேண்டியது. இல்லையென்றால் பள்ளியை இழுத்து மூட வேண்டியதுதான். 

ஒரு கோடி முதலீடு என்றால் பல கோடிகள் வருமானம் வர வேண்டும். இல்லையென்றால் பள்ளி நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அதைத்தான் தனியார் பள்ளிகள் தொடர்ந்து செய்கின்றன. இதில் என்ன ஒரு அயோக்கியத்தனம் என்றால், பள்ளி தொடங்க அனுமதி பெற பொதுச் சேவை நிறுவனம் இருக்க வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி. பொதுச் சேவையை தனியார் தங்களது குடும்பத்துக்கு மட்டும் செய்வார்கள் என்பது எழுதப்படாத விதி. இன்னொரு விதி இருக்கிறது. ஆந்திராவில் எனது நண்பரின் பல்கலைக்கழக நிறுவனர் தன் மகனை அதே காசால் இழந்து இன்றைக்கு அய்யய்யோ, அம்மம்மா என்று திக் பிரமை பிடித்தலைகிறார். எத்தனை பெற்றோர்களின் சாபத்தை வாங்கிக் குவித்தார். பணம் இருக்கிறது ஆள வாரிசு இல்லாமல் போனார். இதன் பெயர் தலைவிதி.

ஒரு முறை அரிசிக்கு வரி விதிக்கப்போகிறேன் என்று பீதியைக் கிளப்பி ஒவ்வொரு அரிசி ஆலை முதலாளிகளிடமிருந்து கோடியைக் குவித்த ஒருவர் இன்றைக்கு கல்லறையாகிக் கிடைக்கிறார். கவனிக்க ஆள் இல்லை. நினைத்துப் பார்க்க கூட எவரும் இன்றி ஆத்மா அரபிக் கடலோரம் அலைந்து கொண்டிருக்கிறது.

சஞ்சிகை என்றொரு இலக்கிய இதழில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. தனியார் பாடப்புத்தகங்கள் நிறுவன வரிசையில் மதுபென் என்றொரு கம்பெனி இருக்கிறது. இந்தியாவெங்கும் கிளைகள் உண்டு. நான்காம் வகுப்புக்கு சிதம்பரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப்பள்ளியைச் சேர்ந்த ஜீவிதா என்பர் அந்தப் புத்தகத்தை எழுதியதாக முன்பக்கத்தில் இருக்கிறது. அவர் என்ன எழுதி இருக்கிறார் என்பதை கீழே இருக்கும் படத்தில் படித்துத் தெரிந்து கொள்க. 






அந்த ஆசிரியை மனதில் உண்மைக்கும் சற்றும் தொடர்பில்லாத விஷயத்தைப் பற்றி எழுதுகிறோமே என்ற சங்கடம் கொஞ்சம் கூட இல்லை. பிரட்டு விஷயத்தைப்  பாடப்புத்தகமாக்கி மாணவர்களிடம் கொண்டு செல்லும் இவரைப் போன்ற ஆசிரியரை என்ன செய்யலாம்? இப்புத்தகத்தைக் கொஞ்சம் கூட ஆராய்ச்சி செய்யாமல் வெளியிட்ட நிறுவனத்தின் தன்மையும், அவர்களின் வியாபாரத்தினையும் என்னவென்று சொல்வது?

ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன், திருமூலரைப் படித்தவர்கள் என.. ஆகவே ஆன்மீகம் என்றொரு போர்வையில் நடக்கும் வியாபார தந்திரங்களில் மாணவர்களையும் மூளைச் சலவை செய்து விட்டால் இன்னும் வசதியாக இருக்குமே, கடைசி வரை சிந்திக்க விடாமல் செய்து, அடிமையாகவே வைத்திருக்கலாமே என்ற நாசகார திட்டத்திற்கு அந்த ஆசிரியை உடன்பட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.


மேலே இருக்கும் வீடியோவில் அந்த ஆசிரியையும், யுடர்ன் சானல்காரரும் பேசிய ஆடியோ இருக்கிறது. எந்த அளவுக்கு அந்த ஆசிரியை விவரம் கெட்டதனமாக இருக்கிறார் என்பதையும், அவர் எழுதிய புத்தகத்தை மாணவர்கள் படிக்க கொடுக்கிறார்கள் என்பதையும் நினைத்துப் பாருங்கள். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் மாணவர்களின் சிந்தையில் என்னவாக இது பதிவாகும்? என நினைத்துப் பாருங்கள்.

ஆன்மீகம் எதுவும் தருவதில்லை மனிதனுக்கு என்பதை எந்தக் காலத்திலும் மனிதன் புரிந்து கொள்ளப் போவதில்லை. அவனின் துன்பத்துக்கும் துயரத்திற்கும் யாரோ ஒருவர் தான் காரணம் என்று நினைக்கும் எண்ணம் எப்போது அவனை விட்டு நீங்குகிறதோ அன்றைக்குத்தான் அவன் மனிதனாக மாற முடியும்.

ஒரு பொறம்போக்கு ஜோசியக்காரனால் ஓட்டல் சரவணபவன் அண்ணாச்சி ஆயுள் தண்டனை பெற்றிருக்கிறார். ஜோசியக்காரனுக்கு காசு கிடைத்து விட்டது. அதுதான் உண்மை. பெரும்பான்மையான ஜோசியக்காரர்கள் பலன் சொல்வார்கள், பலிக்கவில்லையே என்று கேளுங்கள். உடனே அது உனது கர்ம பலன் என்றுச் சொல்லித் தப்பித்து விடுவார்கள்.

பானை செய்யும் குயவன் களிமண்ணை எடுத்து சக்கரத்தில் வைக்கும் போது பானையா, சட்டியா என முடிவு செய்வான். பெரும்பாலான மனிதர்கள் அவன் விட்ட வழி என்று கூறிக் கொண்டு திரிவார்கள். திட்டமிடாமலும், குறிக்கோளும் அற்றவர்களின் கடைசிப் புகலிடம் தான் கடவுள். இந்து மதம் அற்புதமான வழிகாட்டி. அதன் பாதையின் முடிவிடம் வெற்றிடம். அதை உணர்ந்து கொள்வதற்குள் பரலோகப் பிராப்தி அடைந்து விடுகிறார்கள் அனேகர்கள். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது ஏனோ தானோ என பாடம் எழுதும் ஆசிரியர்களைத் ‘தரம் கெட்ட ஆசிரியர்கள்’ என்று தான் சொல்ல வேண்டும்.

நன்றி : சஞ்சிகை இதழ்