2026 ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதியிட்ட மாலை முரசு பத்திரிகையின் இரண்டாம் பக்கத்தில், திருப்பதி தேவஸ்தானம் ஒரு நபர் மீது விசாரணை செய்ய உத்தரவிட்ட செய்தியைப் படித்தேன்.
சேவல் சண்டைகளை நடத்த தடை விதித்து நோட்டீஸ் அனுப்பிய டிஜிபிக்கு - யார் இத்தகைய நோட்டீஸ் அனுப்ப டிஜிபிக்கு அதிகாரமளித்தது என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய செய்தியைப் படித்தேன். கீழே இருக்கும் இணைப்பில் படித்துக் கொள்ளுங்கள்.
திருப்பதி தேவஸ்தானத்திடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றே ஒன்றுதான். "திருப்பதி பெருமாளின் புகைப்படத்தைப் பலருக்கும் பகிர்ந்தால் திருப்பதி பெருமாளின் ஆசி கிடைக்கும்" என்று பல காணொளிகள் (வீடியோக்கள்), குறுங்காணொளிகள் (ஷார்ட்ஸ்கள்), ரீல்ஸ்கள் எல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. அதை ஏற்றுக்கொள்ளும் திருப்பதி தேவஸ்தானம் இதை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?
திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமானத்தைப் பெருக்கும் வழியில், ஒரு பக்தர் திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து பெறப்படும் லட்டு வீடியோவப் பலருக்கும் பகிர்ந்தால், பகிர்பவர்களுக்கு லட்டு வாங்கித் தருவதாகத்தானே சொன்னார்?
இதற்கு ஏன் திருப்பதி தேவஸ்தானம் கவலைப்பட வேண்டும்?
திருப்பதி பெருமாளின் புகைப்படத்தை பகிரக்கூடிய நபர்களுக்கு நன்மை கிடைக்கும் என்கிறபோது, பகவான் பெருமாளின் பிரசாதத்தைப் பலருக்கும் பகிர்ந்தால் லட்டு கிடைப்பது உடனடி பலன்தானே? இதற்குத் திருப்பதி தேவஸ்தானம் மகிழத்தானே வேண்டும்? ஏன் வருத்தப்படுகிறது என்பது புரியவில்லை.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தை திராவிட வேதம் அல்லது தமிழ் வேதம் என்று வைணவம் போற்றுகிறது.
சமஸ்கிருத வேதம் ஓத குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே உரிமை இருந்த காலத்தில், திவ்ய பிரபந்தத்தை சாதி வேறுபாடின்றி அனைவரும் ஓதலாம் என்று இராமானுஜர் வழிவகை செய்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களை திருக்குலத்தார் என்று கூறி, அவர்களுக்குக் கோயிலுக்குள் நுழையும் உரிமையையும், வைணவ முத்திரையையும் அளித்தார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் எழுந்தளியிருக்கும் இராமானுஜர் பகவான் பெருமாளின் பெரும் பக்தரல்லவா?
நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற நூல் பகவான் பெருமாள் குறித்து, பனிரெண்டு ஆழ்வார்களால்
1.பொய்கையாழ்வார், 2.பூதத்தாழ்வார், 3.பேயாழ்வார், 4.திருமழிசையாழ்வார், 5.நம்மாழ்வார், 6.மதுரகவியாழ்வார், 7. குலசேகராழ்வார் (குலசேகரப் பெருமாள்), 8.பெரியாழ்வார் (விட்டுணுசித்தர்), 9.ஆண்டாள், 10.தொண்டரடிப்பொடியாழ்வார், 11.திருப்பாணாழ்வார், 12.திருமங்கையாழ்வார்
பாடப்பட்ட நான்காயிரம் தமிழ் பக்திப் பாடல்களின் தொகுப்பாகும்.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வார் என்கிற தொண்டரடிப் பொடியாழ்வார் அடியாரின் 3195 வரி இப்படி துவங்குகிறது.
குலந்தாங்கு சாதிகள் நாலிலும்
கீழ்இழிந்து எத்தனை
நலந்தான் இலாதசண் டாளசண்
டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல்
மணிவண்ணற்கு ஆள்என்றுஉள்
கலந்தார் அடியார் தம்மடி
யார்எம் அடிகளே. ( திருவாய்மொழி 3:7:9)
இதன் பொருள் என்னவென்றால்,
குலங்களை வரித்திருக்கின்ற நான்கு சாதிகளில் பிறந்தவர்களில், மிகவும் கீழான நிலைக்கு சென்று, சிறு நன்மையும் செய்யாத சண்டாளர்களாக இருந்தாலும், தனது வலது கையில் சக்கரத்தை வைத்திருக்கும் பெருமை மிக்க, நீலமணி வண்ண பெருமாளின் அடிமை நான் என சொல்லக்கூடிய அடியார் கூட எனக்கு கடவுள் போன்றவர் என்பது.
பெருமாளின் தொண்டர் லட்டு பிரசாதத்தை வைத்து தனக்கு வருமானம் வர வைத்தால் என்ன ஆகி விடப்போகிறது? கோடிக்கணக்கில் நஷ்டமாகி விடுமா பகவான் பெருமாளுக்கு? திருப்பதி தேவஸ்தானம் அந்தப் பக்தருக்கு லட்டுவை அல்லவா கொடுத்து விட வேண்டும்?
திருப்பதி தேவஸ்தானம் சாதி பார்க்காமல் அனைவரையும் அர்ச்சராக்குமா? அதை ஏன் இது வரை நிகழ்த்தவில்லை. நாலாயிர பாசுரங்கள் அனைத்தும் பொய்யா?
பெருமாளை வணங்கிப் பாடிய ஆழ்வார்களின் பாடல்களைக் கூட தங்களால் நிறைவேற்றிட முடியாதா?
பகவான் பெருமாளுக்கு இதை எனது வேண்டுகோளாக எழுதுகிறேன்.
”பகவான் பெருமானே, அனைத்து சாதியினரையும் தங்களுக்கு பணி செய்ய அர்ச்சகராக்குக...!”
எனக்கும் ஆசையுண்டு பெருமாளே, உமக்கு நானே பூக்களை என் கைகளால் அர்சித்து, வணங்க வேண்டுமென.
குறிப்பு : திருமலை இணையதளத்தில் ஆழ்வார் பாசுரங்கள் ஆன்லைனில் பாடலாக இருக்கிறது. இதில் திருவோய்மொழி மூன்று பத்தியில் ஏழாவது பாடலாக ஒலிக்கும் பாடலில் 7.34 நிமிடத்தில் மேலே கண்ட பாடல் பாடப்படுகிறது.
https://www.tirumala.org/AlwarPasurams.aspx
திருப்பதி தேவஸ்தான போர்டு தலைவர்களும், உறுப்பினர்களும் இப்பாடலைக் கேட்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.