குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அறிஞர் அண்ணா. Show all posts
Showing posts with label அறிஞர் அண்ணா. Show all posts

Sunday, August 14, 2022

சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளாக மாறாத ஒன்று

இந்தியா 75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடுகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தென்னாஃப்ரிக்கா, பீட்டர்ஸ்பர்க் இரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஒரு பிரயாணத்தினால் இந்தியாவின் தலையெழுத்து மாற்றப்பட்டது. 

ஒரு சில சிறு சம்பவங்கள் தான் ஒட்டு மொத்த உலகின் இயக்கத்தையே மாற்றும். 

அதே போல 2021ம் ஆண்டில் ஒரு கிருமி உலகை முடக்கிப் போட்டது. கிருமியின் முன்னால் கடவுள்கள், ஆட்டிப்படைக்கும் நிறுவனங்கள், அரசியல் ராஜதந்திரிகள் எல்லாம் தோற்றோடினர். கடவுள்களுக்கு பூஜை இல்லை. நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசியல் ராஜதந்திரிகள் முடங்கினர். 

இந்திய தேசத்தின் விடுதலைக்காக சத்யாகிரகம் நடத்தி, ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்திய, மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்தவர்களை தேசபக்தர் என்று கொண்டாடும் மாயை வினோதங்களை இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது.

சும்மா கிடைத்ததா சுதந்திரம்?

மருது சகோதர்களும், பூலித்தேவனும், திருப்பூர் குமரனும் செத்துப் போனார்கள். வ.உ.சிதம்பரனார்,  சிவா சிறையில் கிடந்தனர். இந்தியாவின் சிற்பி நேரு ஒன்பது ஆண்டுகாலம் சிறையில் கிடந்தார். இன்னும் லட்சோப லட்ச மக்கள் தங்கள் உயிரை இழந்து பெற்றது இந்த சுதந்திரம்.

இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் எவராக இருந்தாலும், அவர்களில் ஒருவருக்கும் கூட சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாது. இன்றைக்கும் இந்தியர்கள் பசியாலும், பட்டினியாலும், வீடின்றியும் இருக்கின்றார்கள். எத்தனையோ ஆட்சிகள் நடந்து முடிந்து விட்டன. இன்னும் எதுவும் மாறவில்லை.

140 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாகி உள்ளார்கள். சுமார் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குத் தள்ளப்பட்டார்கள்.

75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

விண்ணை முட்டும் விலைவாசி, காயும் வயிறுகள், பட்டினியில் மக்கள்.

75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

இருக்க வீடில்லை, வீடெங்கும் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென்கிறது அரசு.

75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

அனைவருக்கும் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்.


* * *


சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒன்று தமிழர் பிரதமராவது.

தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது 

இந்தியாவில் மாறாத ஒன்று இந்திய ஆட்சி மொழிப் பிரச்சினை. 

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறது. வீடெங்கும் தேசியக் கொடி ஏற்றி மகிழ வேண்டும் வயிற்றில் பசி இருப்பினும்.

இதோ ஒரு சாட்சி- இந்தியாவில் 75 ஆண்டுகாலமாக மாறாத ஒன்றின் சாட்சி.



நன்றி : காஞ்சி இதழ், தினமணி