குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, April 28, 2022

வாட் வரியைக் குறையுங்கள் - பிரதமர் மோடி - உண்மை என்ன?

இன்றைய செய்தி தாள்களில் மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டுமென்று பிரதமர் சொன்னதாக செய்திகள் வந்திருக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியதால் தான் விலை உயர்வு உண்டாகிறது. விலை உயர்வினைச் செய்வது ஒன்றிய அரசு. ஆனால் பிரதமர் மா நில அரசுகளை வரியைக் குறையுங்கள் என்றுச் சொல்கிறார்.

இது என்ன விதமானது என்பது அவருக்கே வெளிச்சம். நாங்கள் வரியை உயர்த்துவோம், விலையை உயர்த்துவோம், ஆனால் மாநிலங்கள் விலையைக் குறைக்க வேண்டும் என்று சொல்வது சரிதானா என்பதை மக்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

ஒன்றிய அரசின் கலால் வரியையும், பிரதமரின் செய்தியையும் கீழே பாருங்கள். எப்படியெல்லாம் மக்களை முட்டாளாக்குகின்றார்கள் என்று சிந்தியுங்கள். 

ஏற்கனவே தமிழக அரசு ஐந்து ரூபாய் அளவுக்கு பெட்ரோல் விலையை குறைத்து உள்ளது. இன்னும் குறைக்க வேண்டுமாம். 

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையில் இன்னும் 78,000 கோடி பாக்கி இருக்கிறது. வாங்கிய வரியைக் கூட கொடுப்பதில்லை. 

மாநில அரசுகள் எப்படி நிர்வாகம் செய்வார்கள்? நிதிக்கு எங்கே போவார்கள். 

வரி தாக்குதலை இந்திய மக்களின் மீது தொடுக்கும் கொடுமையான செயலை அறமற்றுச் செய்கிறது ஒன்றிய அரசு என்று மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிஜேபி ஆளாத மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பிற கட்சியினரை அழிக்க வேண்டுமென்ற ஆவலில் ஒன்றிய அரசின் செயல்கள் இருக்கின்றன என்பதை மக்கள் மறந்து விட மாட்டார்கள்.

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி வரியைப் பிடுங்கிக் கொள்ளும். மாநில அரசுகள் தான் விலை உயர்வுக்கு காரணம் என்று எப்படியெல்லாம் திசைதிருப்புகிறார்கள் பாருங்கள். 

தினமணியில் முதல் பக்கத்தில் செய்தி. ஏதோ திமுக அரசு தான் விலை குறைக்காமல் இருக்கிறது என்று மக்கள் நினைக்க வேண்டுமாம். தினமணியின் ஆசையைப் பாருங்கள்.

மாநில அரசுகள் வரியை இழந்து மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தா வண்ணம் முடங்க வேண்டுமென்ற மறைமுக எண்ணம் தான் இந்த செய்தியின் பின்னால் இருக்கும் காரணம் என்று தெளிவாகத் தெரிகிறது.

ஒன்றிய அரசு வரியை எவ்வளவு அதிகரித்து இருக்கிறது என்று கீழே இருக்கும் செய்தியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.



பிரதமர் மோடியின் இந்தக் குற்றச்சாட்டு உண்மையா? கூட்டாட்சிக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது ஒன்றிய அரசா இல்லை  மா நில அரசுகளா என்பதற்கு தமிழக ஆளும் திமுக அரசின் நிதியமைச்சரின் பதில் கீழே.




0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.