குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, April 3, 2022

நிலம் (94) - சென்னை சி.எம்.டி.ஏ - சிங்கிள் விண்டோ அனுமதி

வீட்டுமனை அப்ரூவல், கட்டிட அப்ரூவல், மனை அப்ரூவல் செய்ய விரும்பினால் தலையில் இருக்கும் முடிகள் கொட்டி, அலையோ அலையென்று அலைந்து கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து, இளிக்க வேண்டிய இடத்தில் இளித்து, இன்னும் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தும் காலத்தில் கிடைத்து விடாது.

அதிமுக ஆட்சியின் போது பணம் வாங்கிக் கொண்டுதான் ஃபைலை வாங்குவார்கள். பணத்தையும் கொடுத்து விட்டு நாயாய் பேயாய் அலைந்து திரிய வேண்டும். அரசு அதிகாரிகள் ஊழல்வாதி ஜெயின் மரணத்திற்குப் பின் தனி சாம்ராஜ்ஜியம் நடத்தினார்கள். இப்போதும் ரெவின்யூ துறையில் நடக்கும் ஊழல்கள் எழுத்தில் எழுத முடியாது. அவ்வளவு ஊழல் புறையோடிக் கிடக்கிறது. 

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என கருங்காலி எட்டப்பன் ஆட்சி நடத்தி வந்தான். ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளும் கருங்காலி கயவனுடன் இணைந்து கொண்டு அட்டகாசம் செய்தார்கள். இனியும் அவர்கள் ஓய்வார்கள் என்று நம்பமுடியாது. அரசுகள் எத்தனை சிஸ்டம் கொண்டு வந்தாலும் ஊழல் செய்ய முடிவெடுத்தால் தடுக்கவே முடியாது. ஏதேதோ காரணங்களைச் சொல்லி காசு வாங்காமல் எதையும் இங்கு பெற்று விட முடியாது.

எத்தனை அரசுகள் வந்தாலும் ஊழலில் ஊறிப் போய் புழுத்துப் போன அரசு அலுவலர்கள் திருந்தமாட்டார்கள்.

ஊழல் செய்து பிடிபட்டால் மரண தண்டனை என்று சட்டம் இயற்றாதவரைக்கும், ஊழலில் தண்டிக்கப்பட்டால் சொத்துக்கள் நாட்டுடைமை என்று சட்டம் வராத வரைக்கும் திருந்த மாட்டார்கள். அரசியல்வியாதிகள் இருக்கும் வரை, வந்தேறிகள் ஆட்சியில் இருக்கும் வரை எதுவும் நடக்காது. 

நான் ஏன் அடிக்கடி வந்தேறிகள் பற்றி எழுதுகிறேன் என்றால் நக்கீரனில் தொடராக வந்து கொண்டிருக்கும் குற்றப் பரம்பரை சட்டம் எப்படி வந்தது என்று யூடியூப்பி பேசும் புரபசர் ரத்னகுமாரின் பேட்டியைப் பாருங்கள். சுய நலத்தின் ஒட்டு மொத்தம் வந்தேறிகளே. அவர்களால் தமிழர்கள் அடைந்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்தச் சட்டம் இயற்ற பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட ஒருவர் வந்தேறி. கூடவே இருந்து குழிபறிக்கும் செயல். எத்தனை ஆட்கள் ஜெயிலில் கிடந்து செத்தார்கள் தெரியுமா?  எத்தனை தமிழர்கள் நாடு கடத்தப்பட்டார்கள் தெரியுமா?

வீடியோ கீழே இருக்கிறது. அனைத்தையும் பாருங்கள். சகித்துக் கொள்ள முடியாத அக்கிரமச் செயல்களுக்கு துணை போனது மட்டும் அல்லாமல் தங்களை வளர்த்துக் கொள்ள தமிழர்களை பலியிட்டார்கள் வந்தேறிகள்.


இத்தனை சிரமப்பட்டு அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இதில் யாருக்கும் முன்னறிவு இல்லாத காரணத்தால் அவரவருக்குத் தெரிந்த கதையெல்லாம் சொல்லிப் பாடாய்படுத்துவார்கள். 

சென்னையில் நேற்று இப்படி பல்வேறு சிக்கல்களை உருவாக்கி பெரும் ஊழல் நடந்து கொண்டிருந்த பில்டிங்க், லேயவுட், மனை, சப்டிவிஷன் அனுமதிகளை சிங்கிள் விண்டோ சிஸ்டம் மூலம் எளிதில் அதுவும் உடனுக்குடன் பெற புதிய இணையதளம் ஒன்றினை ஆளும் திமுக அரசு கொண்டு வந்திருக்கிறது.

சென்னை கார்ப்பொரேஷனின் அதிரடியாக சென்னை பெரு நகர் வளர்ச்சிக் குழுமம் லேயவுட் அப்ரூவல், சி.எம்.டி.ஏவுக்கு உட்பட்ட நிலத்தின் உட்பிரிவுகள்,  வீட்டு மனை அப்ரூவல், பில்டிங்க் அப்ரூவல் போன்றவற்றை இனி எளிமையாக விண்ணப்பம் செய்து அனுமதி பெறலாம்.

https://onlineppacmda.tn.gov.in

முதலில் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு, அதன் பிறகு கார்ப்பொரேஷன் அனுமதி பெற்ற ஆர்க்கிடெக்டை/சர்வேயர் இன்வைட் செய்து கொள்ளுங்கள். தேவைப்படும் ஆவணங்களை அப்லோட் செய்து விட்டால் அதன் பிறகு அரசு வகுத்துள்ள கட்டணங்களை செலுத்தி விட்டால் போதுமானது. மேலதிக விபரங்களைப் படிக்க மேலே இருக்கும் இணைப்பை சொடுக்கிப் படித்துக் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.