குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, August 4, 2008

மகாராஜாக்களின் பிம்பங்கள்

கடந்த காலத்தின் வரலாற்றை புரட்டினால் ராஜாக்களால் ஆளப்பட்ட ராஜ்ஜியங்களும், நடத்தப்பட்ட போர்களும் விரவிக் கிடக்கும். பொதுவாக ராஜாக்கள் என்றாலே மகுடம், உடல் முழுதும் நகைகள், உயர்ந்த ரகத்தில் துணி, ஒரு விதமான செருப்பு என்று தான் மனக்கண்ணில் வந்து செல்வார்கள்.

யாருக்கு என்ன கோபமோ, வெறியோ தெரியவில்லை. யாரால் இப்படிப் பட்ட வழக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டதோ தெரியவில்லை. இன்றைய நாளில் அந்த மகாராஜாக்களின் பிம்பங்கள் மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டல்களின் வாயில் கதவினை திறந்து விட்டு சல்யூட் அடிக்க நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால், யானை கட்டி போரடித்த, சாலைதோறும் மரங்களை நட்டு வைத்த அந்தக் கால ராஜாக்களை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது. வரலாற்றுக்கும் இன்றைய நிதர்சனத்துக்கும் இடையேயான இடைவெளியில் நடக்கும் மாற்றங்களில் ராஜாக்களின் பிம்பங்களின் நிலை கூட மாற்றம் கண்டு விடுவதை எண்ணினால் வாழ்வின் நிச்சயமற்ற தன்மை உறைக்கிறது அல்லவா.

மிகச் சமீபத்தில் சாரு நிவேதிதா அவர்களின் வாசகர் சந்திப்பு நடந்த ஹோட்டலில் வாயிற் கதவினை திறந்து விடுபவரைக் கண்டபோது மனதில் தோன்றியவை. என்ன ஒரு விசித்திரமான உலகம் பாருங்கள்....