குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label விகடன். Show all posts
Showing posts with label விகடன். Show all posts

Sunday, May 29, 2022

96 வருட பாரம்பரிய விகடனுக்கு முதல்வர் ஸ்டாலினால் தூக்கம் வரவில்லை

உச்சிக் குடுமியை விகடன் நினைத்தாலும் மறைக்க முடிவதில்லை. ஏனென்றால் வித்து அப்படி. தமிழர்களுக்கு விரோதமான செய்திகளை நாசூக்காக வெளியிட்டு வருவதில் விகடனுக்கு நிகர் விகடன் அன்றி வேறு எவருமில்லை. 

இவ்வளவுக்கும் விகடன் டெலிவிஸ்டாஸ் சன் டிவியில் கல்லா கட்டி வருகிறது. வயிறு வளர்ப்பது தமிழர்களின் காசில். செய்வது எல்லாம் தமிழர்களுக்கு துரோகம்.

அப்படி என்ன செய்கிறது விகடன்?

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் நானும் எனது நண்பரும் ஒரு தென்னை தோப்பு விலைக்கு வாங்கச் சென்றிருந்தோம். சுற்றிப் பார்த்து விட்டு திரும்ப வரும் போது கனிமொழியின் சொத்து, ஏற்கனவே வாங்கி விட்டார் என்றார் எங்களை அழைத்துச் சென்றவர். 

தஞ்சைப் பகுதியில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் எனது உறவுக்கார பெண். அப்பெண் இந்தக் கல்லூரியையும் கனிமொழி வாங்கி விட்டாராம் என்றார்.

அந்த தோப்பு எனது மனைவியின் பெரியப்பாவின் உறவினருக்கு சொந்தம். இன்றும் அந்த தோப்பு அந்த உறவினரிடமே உள்ளது. அந்தக் கல்லூரியின் முதல்வரிடம் கேட்ட போது சிரித்தார். யார் கல்லூரிக்கு யாரய்யா ஓனர் என.

இப்படித்தான் திமுக ஆட்சிக்கு வந்த உடனே எல்லாச் சொத்துக்களையும் திமுகவும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மருமகன் கம்பெனிகளுக்கு சொத்து வாங்கிக் கொடுத்து கமிஷன் வாங்குகிறார் என்றும், சென்னையில் ஐந்து கோடிக்கு மேல் சொத்து வாங்கினாலே விற்றாலோ கமிஷன் கொடுத்தே ஆக வேண்டுமென்றும் புரளிகளை கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள் பல புரோக்கர்கள் மூலமாக அரசியல் கட்சிகள்.

எங்காவது கொலையோ, கொள்ளையோ, தவறோ நடந்தால் உடனடியாக வந்தேறிகளின் அடிமைகளும்,  முதுகெலும்பில்லா முட்டாள்களும் திமுக ஆட்சி வந்தால் இப்படித்தான் என்றும் விடியல் ஆட்சி என்றும் சோஷியல் மீடியாக்களில் கமெண்டுகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் சளைக்காமல். அவர்கள் எல்லோரும் ஃபேஸ்புக், டிவிட்டர் போலி ஹேண்டில்கள்.  ஒரே ஒரு ஆள் ஆயிரக் கணக்கில் போலி அக்கவுண்டுகளை உருவாக்கி போஸ்டுகளுக்கு பணம் வாங்கிக் கொண்டு இவ்வகையான போலிச் செய்திகளையும், வரன்முறை அற்ற வசவுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கிறான். 

அதிமுக ஆட்சியில் இருந்த போதும் திமுகவை வசைபாடிக் கொண்டிருந்தார்கள். 

இவர்களுக்கும் விகடன் நிறுவனத்துக்கு வேறுபாடு இல்லை. இணையதளத்தில் வெளியான செய்தியைத்தான் இப்போதெல்லாம் விகடன் கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பிரிண்ட் பத்திரிக்கைகள் பலவற்றை மூடி ஆகி விட்டது. வேறு வழி இன்றி ஆங்கிலேயர்களின் மன்னிப்புக் கேட்டுக் கதறிய டேஞ்சர் குற்றவாளி (D - Dangerous Prisoner - Click the link here https://thewire.in/history/bhagat-singh-and-savarkar-a-tale-of-two-petitions) சாவர்கர் பரம்பரை என்பதால் திமுக ஆட்சிக்கு வந்ததும் வயிறு எரிந்து, செத்துப் போன சோவின் நரித்தந்திரம் போல, எங்கிருந்தோ பெறப்பட்ட கொழுத்த நன்மைக்கு மக்களிடம் விஷ விதையைத் தூவ ஆரம்பித்துள்ளது.

இதோ ஆதாரங்கள்:-

இந்த வார ஜூனியர் விகடனின் அட்டைப்படத்தில் (01.06.2022) - தலை நகரில் தொடர் கொலைகள் - கேள்விகுறியாகும் சட்டம் - ஒழுங்கு என வெளியிட்டு வன்மத்தைக் காட்டி இருக்கிறது. தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டதாம். மக்களிடம் பயத்தை உருவாக்க வேண்டுமாம்.  

பிஜேபியில் முருகன் தலைவராக இருந்த போது ரவுடிகளை கட்சியில் சேர்த்து விட்டதாகவும், அவர்களுக்குள் கொலை செய்து கொள்வதால் நானா பார்க்க முடியும் என்று அடிமை ஆடு புலம்பியதாக இதே பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு இருந்தாலும் அட்டைப்படத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகும் என்று தமிழகமெங்கும் எங்கு நோக்கினும் கொலைகள் நடப்பது போல எழுதி இருப்பது விகடனின் நரித்தந்திரம்.

இந்த வன்மம் போதாது என்று மிஸ்டர் கழுகு பகுதியில் ஒரு தலைப்பு - ’மோடியின் ரோடு ஷோ - காத்திருந்த ஸ்டாலின்’ என்று எழுதி தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறது. அதன் உள்ளே ’முதல்வர் ஸ்டாலினை முந்திக் கொண்டார்கள் பழனிசாமியும், ஆளுநரும்’ என்று ஏதோ வாராது வந்த மாமழை போல மோடி வருவதாகவும், அவரை வரவேற்க போவதில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஏதோ பின்னடைவு ஏற்பட்டதாகவும், மோடியின் ரோடு ஷோவினால் மோடிக்காக முதல்வர் காத்திருந்ததாகவும் செய்தி வெளியிட்டு உள்ளூர சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறது.


நாடெங்கும் ராமர் கோவிலுக்கு செங்கல் வேண்டுமென்று கேட்டு ரதயாத்திரை செய்து பிஜேபியை வளர்த்த ஒரு தலைவர் துரோகத்தால் ஓரங்கட்டப்பட்டது  வரலாறு. காலையில் காலைப் பிடித்த துரோகி மாலையில் முதுகில் குத்தி விட்டு ஆட்சியில் அமர்ந்து தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து விட்டு ஐந்து லட்சம் கோடி கடனை தலையில் கட்டிச் சென்ற இனத் துரோகியின் ஆட்சியும் வரலாறு. துரோகம் துரோகத்தைச் சந்திப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. 

ஊழல், திருட்டு என்று முதலில் செய்தியை வெளியிட்டு மக்களிடம் பதிய வைப்பது. தவறான செய்தி என்றால் வாய் திறக்காமல் வேறு விஷயத்துக்குச் சென்று விடுவது. இந்த நச்சு வேலையை விகடன் தொடர்ந்து செய்து வருகிறது.

ஜி ஸ்கொயர் போல தமிழ் நாட்டில் பல நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றார்கள். வடநாட்டினர் பலர் லட்சக்கணக்கான கோடி ரூபாயில் முதலீடு போட்டு தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் செய்கிறார்கள். அவர்களில் பலர் பல அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள். அவர்களைப் பற்றி எல்லாம் விகடன் செய்தி வெளியிடாது. ஆனால் திமுக என்றால் வாயும் வயிறும் விகடன் குழுமத்துக்கு பற்றி எரியும். 

ஆட்சிக்கு வந்ததும் டாலர் விலை 44 ரூபாய்க்கு மாற்றுவேன் என்று முழங்கியவரைப் பற்றி பேசாது. காணாமல் போய் கொண்டிருக்கும் 2000 ரூபாய் நோட்டைப் பற்றி எழுதாது. ஆர்.பி.ஐ ஒன்றிய அரசுக்கு பணவீக்கத்தைப் பற்றி எச்சரிக்கை செய்துள்ளதைப் பற்றி எழுதாது. உலகே வியந்த எல்.ஐ.சி பங்குகளை விற்கிறேன் பேர்வழி என சாதாரணப்பட்ட பல முதலீட்டாளர்களின் 80000 கோடி ரூபாயை காணாமல் அடித்ததைப் பற்றிப் பேசாது. 

(எல்.ஐ.சி பங்குகள் விற்பன் கிராப். டெய்லி டிரேடிங்க் செய்தவர்கள் பிழைப்பு என்ன ஆகி இருக்கும் என்று பாருங்கள். ஒரு அரசு செய்யும் வேலை இதுதானா என்று நினைத்துப் பாருங்கள்)

ஒன்றிய அரசு பணம் சம்பாதிக்க சாதாரண முதலீட்டாளர்களை  அழிக்கிறது பற்றி எழுதாது. இப்படி மக்களுக்கு கொடுமை நடப்பதைப் பற்றி எல்லாம் எழுதாமல் திமுக மீது சேற்றினை வாரி வீசுவது, பின்னர் பம்முவது போன்ற செயல்களைச் செய்து வரும் விகடன் குழுமத்தின் பத்திரிக்கைகளை  தமிழர்கள் புறக்கணித்து அறமற்ற அவர்களின் செயல்களுக்கு சரியான பாடம் புகட்டிட வேண்டும்.  

அறமற்ற எந்த ஒரு செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு என்பதை 96 வருட பத்திரிக்கைப் பாரம்பரியம் கொண்ட விகடன் குழுமம் உணரும் நாள் வந்தே தீரும்.

தமிழ் பூமி ஆன்மீக பூமி. அறத்தின் வழி நடக்கும் பூமி. அரசியலில் தைரியமிக்கவர் என்று சொல்லப்பட்ட ஜெவின் வாழ்க்கையை முடித்துக் கட்டியது அறம். அதிகாரமும், பணமும் ஒன்றும் செய்ய முடியவில்லை அறத்தின் முன்பு. 

விகடனின் நரித்தந்திரமும் அறத்தின் முன்னாலே தீர்க்கப்படும்.

* * *

நன்றி : விகடன், ஸ்கிரீனர் இணையதளம்