குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label மொபைல் போன். Show all posts
Showing posts with label மொபைல் போன். Show all posts

Monday, July 1, 2024

நரலீலைகள் (16) - இந்தியர்களுக்கு தேர்தல் வெற்றிப் பரிசு

ஜூலை 2015 - ஜூன் 2016 மற்றும் அக்டோபர் 2022 - செப்டம்பர் 2023 ஆகிய ஏழு ஆண்டுகளில்  கார்ப்பரேட் அல்லாத - உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள 18 லட்சம் நிறுவனங்கள் முற்றாக காணாமலே போயிருக்கின்றன. 54 லட்சம் வேலைகள் பறிபோயுள்ளன. 2015 - 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தேசிய புள்ளியியல் துறையின் 73வது சுற்று சர்வே விபரங்களுடன் ஒப்பிடப்பட்டு இந்த புதிய விபரங்கள் வெளி யிடப்பட்டுள்ளன.  2015-2016 காலக்கட்டத்தில் கார்ப்பரேட் அல்லாத உற்பத்தி நிறுவனங்கள்  1.97கோடி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 2022 - 2023 காலத்தில் 1.78கோடியாக குறைந்துள்ளது.  9.3 சதவீத வீழ்ச்சி ஆகும்.  வேலை செய்து வந்த  தொழிலாளர்களின் எண்ணிக்கை 3.60கோடியி லிருந்து 3.06 கோடியாக - கிட்டத்தட்ட 15சதவீதம்  வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

கார்ப்பரேட் அல்லாத சிறு தொழிற்சாலைகள், தனிநபர் உரிமை யாளராக இருந்து நடத்தும் தொழிற்சாலைகள், கூட்டுச்சேர்ந்து நடத்தும் தொழிற்சாலைகள் மற்றும் முறைசாரா துறை சார்ந்த பல்வேறு உற்பத்தி தொழிற்சாலைகள் தான் மிக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி வருபவை. 

ஈவிரக்கமில்லாமல் அமலாக்கிய பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி மற்றும் திட்டமிடப் படாத கோவிட் பொதுமுடக்கம் ஆகியவற்றால் சிறு, குறு, நடுத்தர தொழிற்துறையையும், கார்ப்பரேட் அல்லாத நிறுவனங்களையும் நிலைகுலைந்தன. இன்று வரையிலும் இந்த நிறுவனங்களால் விடுபட முடியவில்லை. இவ்வாறு தீக்கதிர் 30 ஜூன்,2024 தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாமானிய மக்கள் வெலையிழப்பினாலும், உயராத சம்பளத்தினாலும், உயர்ந்த விலை வாசிகளாலும் பாதிக்கப்பட்டு நொந்து வேதனையில் உழல்கின்றனர்.

இந்திய தொலைத்தொடர்புத் துறையில் தனி ஆதிக்கம் செலுத்தி வரும் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி.ஐ ஆகிய தனியார் நிறுவனங்கள் - புதிய அரசு அமைந்தவுடன் முன்பிருந்த தொலைபேசிக் கட்டணத்தை 28 சதவீதம் வரைக்கும் உயர்த்தியுள்ளது. தேர்தல் வரைக்கும் மூச்சே காட்டாமல் இருந்த நிறுவனங்கள், மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறிப்போன தொலைபேசிக் கட்டணத்தை உயர்த்தி - தேர்தல் வெற்றிப் பரிசாக வழங்கி இருக்கின்றன.

யாரும் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் கேட்ட தொகையைக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இந்தியர்கள். தனியாருக்கு நிகராக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அரசு வளர்க்கவில்லை. 

இந்திய மக்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கிய பரிசைக் கீழே பாருங்கள். தேர்தலுக்குப் பிறகான வெற்றிப் பரிசை மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள்.

கேட்கக்கூடாத கேள்வி : தேர்தலுக்கு இந்த நிறுவனங்கள் ஏதும் டொனேசன் கொடுத்து இருக்குமோ என்றெல்லாம் கேள்விகள் மனதுக்குள் எழவே கூடாது. இது தொழில் நிமித்தமான விலை உயர்வு. அடுத்த வருடம் இலவச அழைப்புகள் நீக்கப்படுமோ என்ற கேள்வியும் எழக்கூடாது. 

வாழ்த்துகள்.



இத்துடன் கட்டுரை முடிந்தது.

விரைவில் அசாசிலின் ராதையுடனான காதல் தொடரும்...!