குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label புனைவுகள. Show all posts
Showing posts with label புனைவுகள. Show all posts

Sunday, January 29, 2012

சேலை கட்டினால் கேன்சர் வரலாம்


”நிம்மதியாக வாழ வேண்டுமா, யார் வாயிலும் விழாமல் வாழக் கற்றுக் கொள்” என்பார்கள். பிரச்சினைகள் நம்மைத் தேடி வருவதில்லை, அதை நாம் தேடிக் கொள்கிறோம் என்பார்கள். அதை எனது நண்பர் சொன்ன உண்மைச் சம்பவம் மூலம் அறிய நேர்ந்தது. ஆனானப்பட்ட ஹிட்லருக்கும் விதி ஒரு நாள் குறித்தது. உலகையே வெல்ல முயன்ற அலெக்சாண்டருக்கும் விதி தன் முடிவை எழுதியது. உலகில் நிரந்தரமானது எதுவுமில்லை அது எதுவானாலும் சரி !

பெண் பிள்ளை சரியில்லை என்றால் குடும்பம் மட்டுமல்ல, பரம்பரையே படுகுழிக்குள் சென்று விடும். அப்படி ஒரு அடாவடியான பெண்மணி ஒருவருக்கு விதி அடித்த ஆப்பு இருக்கிறதே அது தான் இந்தக் கதை. இந்தக் கதை நடந்தது திருநெல்வேலிப்பக்கம். அந்தப் பெண்மணி சற்றே வசதியானவள். திமிர், அகங்காரம், ஆணவம், எடுத்தெறிந்து பேசும் குணம் இவற்றின் மொத்த உருவம் அந்தப் பெண். கணவனோ அப்பாவி. வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு வசூல் செய்து கொண்டிருக்கிறாள் அப்பெண். வாடகைக்கு வருவோரை ஆட்டிப் படைப்பது அவளின் பொழுதுபோக்காம். பணம் பற்றிய கவலை இல்லை என்றால் மனிதனுக்கு வேறு குணங்கள் வந்து விடும். இப்படியான பெண்மணிக்கு விதி ஒரு முடிவு கட்ட எண்ணியது.

அவளின் வீட்டுக்கு குடி வந்திருந்த குடும்பத்தில் ஒருவன் ஏதோ குடும்பப் பிரச்சினையில் அவனது நண்பனைக் கொன்று விட்டான். அவனை மூட்டையாகக் கட்டி வெளியில் கொண்டு போய் போட்டு விட வீட்டு ஓனரின் பைக்கை இரவல் கேட்க, அவரும் கொடுத்திருக்கிறார். ஒரு வாரத்தில் கொலையாளியை ட்ரேஸ் செய்த போலீஸார், வீட்டு ஓனரையும் கைது செய்து சிறையில் அடைத்து, கொலைக்கு சாட்சியாய் பைக்கையும் பறித்து விட்டார்கள். ஒருவழியாக ஜாமீனில் வெளிவந்து செத்த பாம்பாய் நடந்து கொண்டிருக்கிறார் அந்த ஆசாமி. இப்போது அந்தப் பெண்மணி அரண்டு போய் திரிகின்றாராம்.

இப்படி ஒரு சம்பவம் தன் வாழ்க்கையில் நடக்கும் என்று அந்தப் பெண்மணி நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார். கோடியாய் பணமிருந்து என்ன பலன்? ஜெயிலில் போட்டு விட்டார்களே? இனி அந்த அவமானத்தை எங்கு போய் துடைக்க? இதற்குத்தான் சொல்வார்கள் “ஓவராக ஆடக்கூடாது” என்று.

அடக்கம் இல்லையென்றால் இறைவன் அடக்கி விடுவான்.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சேலை உடுத்தும் பெண்கள் பயன்படுத்தும் பாவாடை நாடாவை இறுக கட்டுவதால் கேன்சர் வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்று செய்தி வெளியாகி இருக்கிறது. நாடா அகலமானதாக இருக்க வேண்டுமாம். அதுவும் இறுக்கமாய் கட்டக்கூடாதாம்.  இக்கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.


- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்