குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பார்லிமெ. Show all posts
Showing posts with label பார்லிமெ. Show all posts

Wednesday, July 10, 2024

போன் கட்டண விலையேற்றம் - உண்மை என்ன?

ஜூலை 4 முதல் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் போன் ரீஜார்ஜ் மற்றும் கட்டணங்களை சுமார் 27 சதவீதம் அளவுக்கு விலையை உயர்த்தின. பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்காக கட்டணங்கள் உயர்த்தப்பட்டன என சோஷியல் மீடியாக்களில் பேசினார்கள். பிஜேபி தோற்றதற்காக இந்திய மக்களை பழிவாங்குவதற்காக இந்த நிறுவனங்கள் விலையை உயர்த்தின எனவும் பேசினார்கள். 

அரசியல், பழிவாங்கல் என்பதெல்லாம் பொதுமக்களின் பொதுப்பார்வை. இதற்குப் பின்னால் ஒரு மர்ம முடிச்சு உள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் லாபத்திற்காகத்தான் உருவாக்கப்பட்டன. பொதுமக்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு துறையில்  நிறுவனங்கள் முதலீடு செய்து விட்டு, இலவச சேவை செய்யமாட்டாரகள். லாபம் ஒன்றே அவர்களின் நோக்கம்.

இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு சொத்துக்கள் இருக்கும். அதை மூலதனமாக வைத்து தொழிலை ஆரம்பித்து, தங்களின் நிறுவனத்தை உருவாக்கி இருப்பார்கள். இந்த நிறுவனங்களுக்கு வங்கியில் கடன் இருக்கும். இந்தப் பணம் பொதுமக்களின் பணம். வங்கியில் இருக்கும் பணத்தை வட்டிக்குக் கொடுத்து, வங்கிகள் சம்பாதிக்கின்றன.

அடுத்து, பங்கு வர்த்தகத்தில் இவர்களின் நிறுவனம் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் என்பதால் பல முதலீட்டாளர்கள் இந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருப்பார்கள்.

இதற்கிடையில் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான சம்பளங்கள், அவர்களுக்கான சம்பள உயர்வுகள் மற்றும் இதர கட்டணங்கள், உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப நிர்வாகச் செலவுகள், கண்ணுக்குத் தெரியாத தொழில் போட்டியாளர்களைச் சமாளிப்பதற்கான செலவுகள், நடை முறைச் செலவுகள் என பல வகையான செலவுகளும் உண்டு.

இதையெல்லாம் சமாளித்து நிறுவனத்தை லாபத்தில் கொண்டு செல்ல வேண்டும். இதில் ஒரு இணைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பது நிறுவனங்கள் மட்டும் அல்ல. இந்திய மக்களின் வரிப்பணம் மற்றும் அவர்களின் முதலீடுகளும் இழக்கப்படும். இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ, ஷேர்கள் வைத்திருப்பவர்களோ கட்டண உயர்வை சரி என்பார்கள். ஏனெனில் அவர்கள் இந்த நிறுவனத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பொதுமக்களுக்கு கட்டண உயர்வு என்பது நஷ்டம். இவர்களுக்கு பெருத்த லாபமில்லை, ஆனால் நிறுவனம் லாபத்தில் இயங்க வேண்டும். அப்போதுதான் இவர்களால் பிழைக்க முடியும். இது அரசுக்குத் தெரியும். ஆகவே அவர்கள் வாய் மூடிக் கொள்வார்கள்.

போன் கட்டணம் உயர்ந்து லாபம் ஏற்பட்டால், இந்த நிறுவனங்களின் மீது முதலீடு செய்திருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இந்த நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தால் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படும். அதுமட்டுமல்ல வேலை இழப்பு உண்டாகும். பணியாளர்கள் நிறுவன சம்பளத்தை வைத்து வீட்டுக்கடனோ அல்லது கார்கடனோ எதுவோ வாங்கி இருப்பார்கள். வேலை இழந்தால் வங்கி ஜப்தி செய்து விடும். வங்கிக்கு இழப்பு உண்டாகும். இப்படி ஒரு சிக்கலான ஆனால் அவசியமான பொருளாதாரப் பிணைப்புகள் மக்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையில் உண்டு.

இதையெல்லாம் விட்டு வெளியேற முடியாது. இது தான் பொருளாதாரச் சங்கிலி. கட்டண உயர்வை நிறுத்தி வைக்க உத்தரவிட, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் முடியும். ஆனால் சிஸ்டம் அதைச் செய்ய அனுமதிக்காது. ஏனெனில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த நிறுவனங்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் செலவு செய்திருப்பார்கள். அவர்களுக்கு மக்களை விட நிறுவனங்களின் சாமர்த்தியம் தான் முக்கியமானது. மக்கள் எப்போதும் கட்டண உயர்வை எதிர்ப்பவர்கள். எதிராய்ப் பேசுவார்களே தவிர வேறு ஒன்றையும் மக்களால் செய்ய முடியாது என அரசுகளுக்கும், நிறுவனங்களுக்கும் தெரியும்.

இதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளனவா என்று நீங்கள் கேட்பீர்கள் எனத் தெரியும். இதோ கீழே த ரிப்போர்ட்டர்ஸ் கலெக்ட்வ் இணையதளம் வெளியிட்டுள்ள செய்திகள்.



மேலே இருக்கும் படங்களின் செய்திகள் இணைப்பு கீழே இருக்கிறது. இணைப்பைச் சொடுக்கி, படித்துக் கொள்ளுங்கள். ( Thanks : The Reporters Collective)


ஒவ்வொரு அரசுக்கும் மக்கள் நலன்கள் மீது அக்கறை இருக்காது. ஏனெனில் மக்கள் தேசமெனும் சங்கிலியில் கட்டப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் வரி கொடுத்தே ஆக வேண்டும். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நீங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் இருந்து அரசுகள் வரிகளைப் பிடுங்கிக் கொள்ளும். அதை உங்களால் நிறுத்த முடியாது. 

நாட்டின் நலன் முக்கியமாகும் போது, மக்களின் நலன் தியாகமாக்கப்படும். இதுதான் எல்லைகளுக்குள் உட்பட்ட ஒரு நாட்டில் வசிக்கும் மக்களின் எதார்த்த நிலை. நீங்கள் இந்தப் பூமியில் ஓரளவு சுகமாக வாழ வேண்டுமெனில் வரி கட்ட வேண்டும். எனக்கு அதெல்லாம் தேவையில்லை என்றால் பைத்தியமாக சாலைகளில் திரியலாம். அதற்கு மட்டும் அரசு அனுமதி உண்டு. பட்டினியாக கிடக்கலாம். அரசு ஏனென்று கேட்காது. அது தனி மனித சுதந்திரத்துக்குள் வந்து விடும்.  அனாதைகள், நாடோடிகள், பிச்சைககாரர்கள் ஆகியோரைப் பற்றி அரசுகள் எப்போதும் கண்டுகொள்வதில்லை. ஆனாலும் பல திட்டங்கள் இருக்கும். இருந்தாலும் அதையெல்லாம் அரசுகளால் நிர்வகிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் தன்மை அது. 

ஆகவே கட்டண உயர்வுகளை ஏற்றுக் கொண்டு, விதியேன்னு வாழ பழகிக் கொள்ள வேண்டும். யாரும் எதுவும் செய்யவும் மாட்டார்கள், செய்யவும் முடியாது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் உருவான கட்டமைப்பு என்ன தெரியுமா? இனி ஒரு அம்பானி, அதானி உருவாக முடியாது. அம்பானி ஒரு கட்சி என்றால் அதானி இன்னொரு கட்சியினால் வளர்க்கப்பட்டவர்கள். அரசியல் நடத்த இவர்கள் தேவை. இல்லையென்றால் நம்மிடம் எந்தக் கட்சியும் அரசியல் செய்ய முடியாது. நமது டிசைனுக்கு ஏற்றவாறு தான் கட்சிகளும் இருக்கும்.

அரசியல் என்றால் என்ன? மக்களுக்கு நாங்கள் நன்மை செய்வோ, மக்களின் வாழ்க்கையை உயர்த்தி, நல்ல நிலையில் வாழ வைப்போம், நாட்டை உயர்த்துவோம் என்பதுதான்.

ஆனால் இங்கு நடப்பது என்ன? எல்லாமே தலைகீழ் அல்லவா? இதுதான் எதார்த்தம். ஆகவே வாழப்பழகிக் கொள்ளுங்கள். 

நீங்கள் யாரும் உங்கள் வாழ்க்கையை வாழ்வதே இல்லை. நீங்கள் வாழ்வது அதிகார மிக்கவர்களால் உருவாக்கப்பட்ட வாழ்க்கை டிசைனுக்குள். உங்களுக்கு என தனிப்பட்ட வாழ்க்கை இங்கு இல்லவே இல்லை.

வளமுடன் வாழ்க.

10.07.2024